வலையில் விழுந்த கவிதைகள்!!!

21-ம் நூற்றாண்டிலும் கண்ணன்கள்
ராதைகளைத் தான் தேடுகின்றனர்
பிருந்தாவனத்தில் அல்ல
பேஸ்புக்கில்...........!!!


உனக்கு என்னை பிடிக்கும் என
உன்னை நான் உணர்ந்தபோது...
உண்மையில்,
என்னையே எனக்கு பிடித்தது!!!



பரமனுக்கு தெரியாதது
பாமரனுக்கு தெரிந்தது...
பசியின் வலி.



இருட்டின் கழுத்தில்
வைர நெக்லஸ்
மின் மினிப் பூச்சிகள்!!!



ஏதேதோ பேசிக்கொண்டு
கண்ணாடி முன் நின்று சரி செய்யும்
ஆடை எல்லாம்
வெட்கப் படுகிறது ...!



கண்கள் செய்த தவம்
விழிகள் பெற்ற வரம்
என் மீது விழுந்த
அவள் பார்வை!!!!



உயிர் பிரியும் கடைசி நேரத்தில்,
ஒவ்வொரு ஜீவனும் நினைக்கும்
நினைவுகள் யாவும், இரகசியமே...!!.



அழகாய் இருக்கிறாய்
தொட்டு பார்க்க தூண்டுவாய்
தொலை தூர வண்ணமே
நான் இங்கு இருக்கிறேன் தினமுமே......!



செடியில் வீற்றிருக்கும்
ரோஜா மலர் போல்
என்னவள்
என் இதயத்தில்
வீற்றிருக்கிறாள்
அதனால் தானோ என்
இதயத்தில்
இத்தனை வலிகள்!!!



உன்னோடு வாழும்
காலம் யாவும்
என்னோடு வாழும்
காதல்.........



இது ஒரு வித்தியாசமான முள்
பிரித்தால் வலிக்கும்
சேர்த்தால் இனிக்கும் .....
காதல்!



வெள்ளை வானத்தில்
கருப்பு நிலவின்
வெளிச்சம்
உன் பார்வை!!!!



காதலின் வெற்றி என்பது...
இருமனங்களின்
புரிதலில் உறுதிப்படுத்துவதே.........


Thanks : Facebook Friends
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2 comments:

சேக்காளி said...

ஈர்ப்பு கருப்பு நிலாவில் தான் அதிகம்

Kolipaiyan said...

Welcome சேக்காளி !

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top