பெண்கள் உலக கோப்பை கிரிகெட் : வெளுத்து கட்டிய காமினி !

பெண்கள் உலக கோப்பை கிரிகெட்!

10-வது பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி நேற்று மும்பையில் துவங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.


நேற்று நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நேற்றைய லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தமிழக வீராங்கனை காமினி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்த காமினி (146 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது.

வெளுத்து கட்டிய காமினி !

நேற்று ஒரு நாள் போட்டி அரங்கில், தனது முதல் சதத்தை பதிவு செய்தார் தமிழகத்தின் திருஷ் காமினி முருகேசன்(22).

அரைசதத்தை கடக்க 93 பந்துகளை எடுத்துக் கொண்ட போதிலும், அதன் பிறகு துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு அடி வெளுத்து கட்டினார். அபாரமாக ஆடிய அவர் தனது முதலாவது ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தவுடன் ரன்–அவுட் ஆகி போனார். அவர் 100 ரன்களுடன் (146 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

காமினி வாழ்க்கை

கடந்த 1990ல் சென்னையில் பிறந்தார். ஒன்பது வயதில், தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட துவங்கினார்.

தனது 16ம் வயதில் ஜெய்ப்பூரில் நடந்த, ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 19 ரன்கள் மட்டும் கொடுத்து, 3 விக்கெட் கைப்பற்றினார். இத்தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இதில் பவுலிங்கில் அசத்திய காமினி 8 விக்கெட்டுகள் வீழ்த்த, தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இடது கை ஆட்டக்காரரான காமினி, இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 382 ரன்கள் எடுத்துள்ளார்.

பவுலிங்கில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, ஒரு "டுவென்டி-20 போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

மேலும் பல சதம் அடிக்க வாழ்த்துக்கள் காமினி!

இந்தியாவின் முதல் சதம்

முந்தைய 9 உலக கோப்பை தொடரில் மொத்தம் 34 சதங்கள் அடிக்கப்பட்ட போதிலும், இந்திய வீராங்கனைகள் யாரும் செஞ்சுரி அடிக்கவில்லையே? என்ற நீண்ட கால ஏக்கத்தை இந்திய வீராங்கனை காமினி நேற்று போக்கினார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அவர் 100 ரன்கள் எடுத்து பிரமாதப்படுத்தினார். 22 வயதான காமினி சென்னையில் பிறந்தவர். 40 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற அரிய பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

முதல் விக்கெட்டு அதிகபட்ச ரன்குவிப்பு சாதனை

இந்த ஆட்டத்தில் காமினி–பூனம் ரவுத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. உலக கோப்பை போட்டியில் இந்திய ஜோடி ஒன்றின் அதிகபட்ச ரன்குவிப்பு இதுவாகும்.

இதற்கு முன்பு 2000–ம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அஞ்சும் சோப்ரா–சந்திரகாந்தா கவுல் ஆகியோர் 3–வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா நேற்று எடுத்த 284 ரன்களே உலக கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராவும் பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு 2000–ம் ஆண்டு உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிக ரன்களாக இருந்தது.

உலக கோப்பையை நமது பெண்கள் கிரிகெட் டீம் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Life of PI (2012) - விமர்சனம்

ப்ரோக் பேக் மவுன்டன், குரோச்சிங் டைகர் ஹிடென் டிராகன் உள்பட 5 பிரமாண்டமான ஹாலிவுட் படங்களை இயக்கி, ஆஸ்கார் விருது பெற்றவர், ஆங்லீ. இவர் இப்போது, லைப் ஆப் பை என்ற புதிய ஹாலிவுட் படத்தை டைரக்டு செய்திருக்கிறார்.


யான் மார்ட்டெல்லின் லைப் ஆப் பை என்கிற புலிட்சர் விருது பெற்ற நாவல் தான் ஆங் லீ(Ang Lee)யின் லைப் ஆப் பை திரைப்படமாக விரிந்திருக்கிறது.

குழந்தைகள் படம் போல தோற்றம் தரும் இந்தப் படம் உண்மையில் பெரியவர்களையும் உறைய வைக்கும் படமே.

படத்தோட கதை என்னனா ...

பை (pi) என்கிற பிஸ்ஸைன் படேல் என்கிற பாண்டிச்சேரியைச் சார்ந்த இளைஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே லைப் ஆப் பை. பையினுடைய அப்பா பாண்டிச்சேரியில் ஒரு சர்க்கஸ் கம்பெனியின் முதலாளி. பைக்கு விலங்குகளின் உளவியல் பற்றி அவர் கற்றுக் கொடுக்கிறார்.

அவன் வளர்ந்து பெரியவனாக மாறும் போது அவனது பெற்றோர்கள் சர்க்கஸ் கம்பெனியை விற்றுவிட்டு தங்களது சில மிருகங்களுடன் ஜப்பானைச் சேர்ந்த ஒரு சிறு கப்பலில் கனடாவை நோக்கிப் பயணிக்கிறார்கள்.

வழியில் கடலில் பெரும் புயலில் சிக்கி அந்தச் சிறு கப்பல் கவிழ்ந்து விட அதிலுள்ள எல்லோரும் மாண்டுவிடுகின்றனர்.

ஆனால் பை மட்டும் 227 (கணித எண் 'பை'யின் மதிப்பு 22/7) நாட்கள் கழித்து ஒரு சிறிய படகில் மெக்சிகோ நாட்டின் கடலோரம் கரையொதுங்குகிறான். அந்தக் கப்பல் ஏன் கவிழ்ந்தது என்பது பற்றி ஆராயும் இருவர் அதில் தப்பிப் பிழைத்த ஒரே நபரான பையிடம் வந்து அதுபற்றி விசாரணை செய்கின்றனர்.

அப்போது பை சொல்வது ஒரு கதை. அதில் பையும், ஒரு கொடிய சிறுத்தையும், ஒரு காயமடைந்த வரிக்குதிரையும் மற்றும் ஒரு குரங்கும் கவிழ்ந்த கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்து ஒரு படகில் ஏறிக் கொள்கின்றன. அவற்றிற்கிடையே யார் உயிர் வாழ்வது என்கிற போராட்டம் நடக்கிறது. சிறுத்தை குரங்கையும், வரிக்குதிரையையும் கொன்று தின்று விடுகிறது. அப்போது தான் அங்கே படகின் அடியில் ரிச்சர்ட் பார்க்கர் என்கிற பெயருடைய வங்காளப் புலி ஒன்று கவிழ்ந்த கப்பலில் இருந்து தப்பித்து பதுங்கி இருப்பது தெரியவருகிறது.


ரிச்சர்ட் பார்க்கர் சிறுத்தையைக் கொன்று தின்றுவிடுகிறது. இப்போது படகில் எஞ்சியிருப்பது பையும், ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்தப் புலியும் மட்டுமே. இப்போது பையையும் கொன்று விட்டால் புலி தப்புவதும் கடினம். எனவே இந்த கரையே தெரியாத கடலில் உயிர் தப்பிக் கரையேறும் வரை ஒருவரையொருவர் கொல்லாமல் பையும், புலியும் படகிலேயே வாழப் பழகுகின்றனர்.
இறுதியில் 227 நாட்களுக்குப் பின் படகு மெக்சிகோவில் கரையொதுங்கியதும் புலி குதித்தோடிச் சென்று காட்டுக்குள் மறைந்து விடுகிறது.

பை சொல்லும் இந்தக் கதையை நம்ப அந்த அதிகாரிகள் மறுத்துவிடுகின்றனர். உடனே பை அதே நிகழ்வைக் கதையாக திரும்பவும் மனிதர்களை வைத்துச் சொல்கிறான். அதில் படகில் பை, அவனுடைய அம்மா, ஒரு கால் ஊனமுற்ற மாலுமி மற்றும் கப்பலின் சமையல்காரன் போன்றவர்கள் தப்பிப் பிழைக்க ஏறிக் கொள்கின்றனர்.

மிருகங்களின் கதையில் நடந்த நிகழ்வுகளை விட மிக மோசமான நிகழ்வுகள் மனிதர்கள் கதையில் நடக்கிறது. இறுதியில் பை தப்பிப் பிழைக்கிறான். இரண்டு வித கதைகளையும் சொன்னதும் பை அந்த அதிகாரிகளிடம் எந்தக் கதையை அவர்கள் நம்ப விரும்புகிறார்கள் என்று கேட்கிறான்.

அவர்கள் மிருகங்கள் கதையே இதில் உண்மையிலேயே நடந்தது என்று ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இப்படிப் பட்ட ஒரு மேஜிக்கலான குழந்தைகள் கதையை இயக்குனர் ஆங் லீ அற்புதமாக 3D அனிமேஷனில் எடுத்திருக்கிறார். இவர் தான் 'க்ரௌச்சிங் டைகர் அன்ட் ஹிட்டன் ட்ராகன்' படத்தையும் இயக்கியவர்.

ஜேம்ஸ் கேமரானின் அவதார் படத்துடன் ஒப்பிடத்தக்க அளவு சிறப்பானதாக இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் புகழ்கின்றனர்.

கடல் வழி பயணங்களில் தான் புத்திசாலித்தனம், முட்டாள்தனம், சுய ஒழுக்கம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, கடவுள் நம்பிக்கை, சிறு பொருட்களையும் எப்படி உபயோகப்படுத்துவது என வாழ்க்கையின் பல விசயங்களையும் கற்றுக் கொள்ளலாம் என்று எனக்கு தெரிந்து டைட்டானிக் படத்திற்க்கு பிறகு இந்தப் படம் தான்.

படத்தின் ஆன்மா என்றால் அது விஷுவல்தான். பரந்த கடலும், இரவு நேரத்தில் வழியும் வண்ணக் குழம்புகளும் அற்புதமான அனுபவத்தை தருகின்றன. குறிப்பாக திமிங்கலம் திடீரென்று குதிக்கும் காட்சி. அதேபோல் மாமிசம் உண்ணும் தாவரங்கள் நிறைந்த தனித்தீவு.

பையின் அப்பாவாக அதுல் ஹசன். அம்மா தபு. இருவரின் நடிப்பும் ஓகே தான். பாண்டிச்சேரியில் வளர்ந்த தமிழர் குடும்பமாய் காட்டப்பட்ட இவர்கள் பேசும் தமிழ் ஹிந்தி தமிழாய் இருப்பது இடிக்கிறது.


மூன்றே மூன்று காட்சிகளில் வியர்வை வழியும் முகத்தோடு நடனம் ஆடிக் கொண்டு வெட்கப்பார்வை பார்க்குமிடத்தில் கவர்கிறார் ஷரவந்தி சாய்நாத். படத்தில் பத்து நிமிடம் மட்டுமே வந்திருந்தாலும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார்.

இள வயது பையாக வரும் சூரஜ் சர்மாவின் நடிப்பு கச்சிதம். ஆனால் பெரிய வயது பையாக வரும் இர்பான் கான் நிறைவாக இருக்கிறார். கதை சொல்லும் போதாகட்டும், மாடுலேஷனாகட்டும், க்ளைமாக்சில் கண்களின் ஓரத்தில் லேசாய் துளிர்க்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கியபடி பேசும் போதாகட்டும் க்ளாஸ்.

படத்தின் பலம் இசை + ஒளிப்பதிவும் Graphics-ம். அப்படியே கடலுக்குள் இருக்கும் ஒரு மாய உலகத்துக்கு நம்மள கூட்டிட்டு போறாங்க.

கோல்டன் குளோம் விருது

புதுச்சேரியில் படமாக்கப்பட்ட ஆங்கிலப்படமான 'லைப் ஆப் பை' திரைப்படத்திற்கு 'கோல்டன் குளோம்' விருது கிடைத்துள்ளது.

ஏற்கனவே சிறந்த இயக்குநர், திரைப்படம், இசையமைப்பாளர் உள்ளிட்ட 11 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

70வது கோல்டன் குளோப் விருது போட்டிக்கு சிறந்த திரைப்படம், இயக்குநர் உள்ளிட்ட பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

கோழி இடும் முட்டைகள் :
Life of PI - டோண்ட் மிஸ் திஸ் பை. பையின் வாழ்க்கையைப் பாருங்கள் ஒருமுறை.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். ஒரே ஒரு வோட்டு ப்ளீஸ். நன்றி!!!
Thanks : Cable Ji.



ஹாலிவுட் பட போஸ்டர் காபிகள்

ஹோலிவூடிக்கு சுயமாக சிந்திக்கும் தன்மை குறைந்துவிட்டதா ? Has Hollywood Lost Its Creativity?

சில போஸ்டர் டிசைன் ஒரே மாதிரி வடிவமைத்திருப்பது பார்பதற்கு வேடிக்கையாக இருக்கு.

நம்ப தமிழ் படத்துறையினர் தான் ஹாலிவுட் படங்களின் போஸ்டர், காட்சிகள், கதைகள், இசை, வசனம் & திரைகதை உத்திகள் போன்றவற்றை காப்பி(?) அடிகிறார்கள் அன்றால் அவர்களுக்குள்ளேயே நம்மை போற்று சுட்டு போடும் உத்திகள் இருக்கத்தான் செய்கிறது.

பட விளம்பரத்திற்கு அடிக்கப்படும் போஸ்டர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், போஸ்டரை பார்த்து படம் பார்க்கும் பலபேரு நம்மில் உண்டு. அவ்வாறு வித்தியாசமான பட போஸ்டரை கொண்ட ஒரு படம் ஹிட் என்றால் அதே போல நாமும் போஸ்டரின் டிசைன் செய்து வெளியிடுவது உண்டு.

அவ்வாறு ஹோலிவூடில் வெளிவந்த சில போஸ்டரை பாருங்கள். நீங்களே அதிலிருக்கும் பொதுவான அம்சங்கள் உங்களுக்கு தெரியவரும்.

1. கையில் துப்பாக்கி (அ ) கத்தி (அ ) கேடையம் எதாவது ஒரு பொருள் வைத்திருப்பது
2. அங்காங்கே தீப்பொறி துகள்கள் தெறித்து விழுகிறது போல
3. இடிந்த சிதறிய துகள்கள்
4. மேகமூட்டம்











அவர்களின் காப்பி எப்படி இருக்கு ?

என்னமோ போங்க இவங்கள் எடுக்கிற படம் நல்லா இருந்தா சரி.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் வேறு ஒரு வித்தியாசமான பதிவுடன். பாய்....ஈஈஈ...eee!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Houke de Kwant



விஸ்வரூபம் - வாசகர் கருத்து!

கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படத்தை, தியேட்டர்களில் திரையிட மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவிற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இந்த செய்தி தொடர்பாக வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒரு சில உங்களுக்காக......


போச்சே 40ம் போச்சே. கனவெல்லாம் அம்போன்னு போச்சே. யாரோட கண்ணு பட்டுதோ தெரியல்லே, அத்தனையும் இப்படி ஒரே அடியில் அழிச்சிட்டாங்களே!
- Guru - Chennai, இந்தியா

அய்யா, நானும் கூட கமல் மீதுதான் தப்பு இருக்குமோ என்று நினைத்து இருந்தேன்.ஆனால்,ஜெயா டி வி யில் இந்த செய்தியை பற்றி ஒரு வரி சொல்லாததன் மூலம் ஜெயா அரசுதான் தடையில் தீவிரம் காட்டியுள்ளது என்பதை எங்கள் அப்பன் குதுறுக்கில் இல்ல என்பது போல காட்டி கொடுத்து விட்டது. அம்மாவின் ஆணவம் அவரையே அழித்துக்க்கொள்வார் என்பதை பத்திரிக்கைகள் உணர்த்தி கொண்டு இருப்பது உண்மையாகிவிடுமா என்பது கவலையாக உள்ளது. Best wishes kamal. முஸ்லிம் அன்பர்,எங்களைவிட அரசு தீவிரம் காட்டி வருகின்றது. அரசு வழி எங்கள் வ்ழி என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இதன் மூலம்,அவர்கள் சங்கம் எதுவும் தனியாக முடிவு எடுக்கவில்லை. ஜெயா உங்களுக்கு இது தேவைதானா? ஆனால், வடிவேலுப்ப்போல, முஸ்லிம தீவிரவாதியாகவும்,இந்து கடவுளையும்,அய்யர் பெண் சிக்கன் சாப்பிடுவதாகவும் காட்டுவது சீண்ண்டுவதாக இருப்பதால் கொஞ்சம் எதிர்ப்பை காட்டி, அடுத்த முறை இதுபோல பண்ணாதிங்கோ.
- Venkat Iyer - Nagai, India

எவனென்று நினைத்தாய்? எதைக்கண்டு சிரித்தாய்? விதை ஒன்று முளைக்கையில், வெளிப்படும் சுய ரூபம், யாரென்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன், ஞாபகம் வருகிறதா?
- Rakshith Kp - tiruvannamalai, இந்தியா

பச்சையம்மாவின் சாயம் வெளுத்துப்போச்சு
- IndianTamil - Stamford, யூ.எஸ்.ஏ

ஜெயா அரசாங்கம் இதுபோன்ற தேவையற்ற விசயங்களில் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு தலையாய பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும்..சென்சார் போர்டு அனுமதி வழங்கியபின் மாநில அரசாங்கம் ஏன் தடை விதிக்கவேண்டும்...இது தனி நபரை பழிவாங்குதல் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது...மறவன்.
- Maravan - dublin, அயர்லாந்து

கமல் vs J- winner KAMAL
- MOHAN - Erode, இந்தியா


என்னுடைய இஸ்லாமிய நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட கருத்து. "இஸ்லாம் என்பது ஒரு உயர்ந்த மார்க்கம். ஒரு படத்தை எடுப்பதலோ அல்லது சிலர் அறியாமல் கூறும் கருத்துக்களாலோ இஸ்லாத்தை சிறுமை படுத்திவிடமுடியது". சிலர் அரசியல் காரணங்களுக்காக சிறு சிறு பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களை தூண்டிவிட்டு லாபம் அடைகின்றனர். அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களை ஒரு ஒட்டு வங்கியாக மட்டுமே பாவிகின்றனர். இது உண்மையாகவே தோன்றுகிறது. முஸ்லிம் சகோதரர்களே சிந்தியுங்கள். கண்டிப்பாக யாரோ சிலர் கூறும் கருத்துகளால் உங்களுடைய மதம் சிறுமை அடையாது. அதே சமயம் உங்களுடைய நடவடிக்கையால் மட்டுமே அது எவ்வளவு உயர்ந்த மார்க்கம் என்று நிருபிக்கமுடியும்.
- Ha Ha Ha Siripu Varuthu - Coimbatore, இந்தியா

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். எதை நீ எடுத்தாயோ அது தாத்தா பணத்திலே எடுக்கப்பட்டது ...எதை DTH க்கு கொடுத்தாயோ அதுவும் அவருக்கே கொடுக்கப்பட்டது. எதற்காக கமலஹாசா அழுகிறாய்.
- Panchu Mani - Chennai, இந்தியா

தர்மம் ஜெயிக்கும் .All the best Kamal sir
- Divya Prem - Cambridge, யுனைடெட் கிங்டம்

ஜெயாவின் சிறுபான்மையினரின்...காவலாளி....என்ற வேஷம் களைந்து.... சுயநல...பழிவாங்கும் போக்கு... வெளிபட்டிருக்கிறது.... அதற்க்கு.. அதை வெளிக்காட்ட உதவிய..திரு கமலுக்கு நன்றி.... இனி...திரை அரங்குகளில் திருவிழா கூட்டம்தான்... இதுதான்.. ஜெயா அரசின்... ஆரம்ப சங்கு......... விஸ்வரூபத்தின் எழுச்சி ஜெயாவின் அரசியல் வாழ்வின் வீழ்ச்சியாக இருக்கும்....
-முருகவேல் சண்முகம்.. - சென்னை, இந்தியா

படத்தை மக்கள் பார்க்கவிடாமல் தடுக்க நினைத்த சில தீய சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டி உள்ளது நீதிமன்றம். படத்தை விளம்பரம் செய்ததற்கு நன்றி, படம் கண்டிப்பாக வெற்றிபெரும்.
- RAJA - Chennai, இந்தியா

நேற்று இரவு விஸ்வரூபம் படம் பார்த்தேன். ப்ரில்லியன்ட். ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல இருந்தது. அப்பாவி டான்சர் கமல் கைகளை அவிழ்த்து விட்டவுடன் வில்லன்களை துவம்சம் செய்வார் பாருங்கள், என்னை அறியாமல் கை தட்டி விட்டேன். இந்த ஒரு சண்டை காட்சிக்க்காகவே படம் பார்க்கலாம். குறிப்பா ஆப்கானிஸ்தான் மலை குகைகளில் படம் காட்சி செய்யப்பட்ட விதம் ஹாலிவுட் படத்திற்கு நிகர். நீங்கள் கமலுக்கு உண்மையில் சப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தியேட்டர் போய் இந்த பார்த்து, இந்த படத்தை 2013-ன் blockbuster படம் ஆக்குங்கள் - அதனால் படம் முடியும் போது டைட்டில் போடுவது போல் விஸ்வரூபம்-2 படம் விரைவில் கமல் எடுப்பார்.
- Amalraj Gnanasigamani - Sydney, ஆஸ்திரேலியா


ஜெயா மூக்கு அறுப்பு. lol . உண்மை என்றும் ஜெயிக்கும். ஒரு கலைஞனின் சாபம் உங்களை சும்மா விடாது. தியேட்டர் owner எல்லாம் எத்தனை கமல் படம் காட்டி பணம் சம்பாரிசிருபிங்க. ஒரு புது முறையை அவர் அறிமுக படுத்தினால் பொறுக்கவில்லை. முஸ்லிம்களை துண்டி விட்டு தடை செய்கிறீர்கள். பேசாமல் கமல் hollywood ல மட்டும் நடிச்சிட்டு இருக்கலாம். இவங்களுக்கு பவர் ஸ்டாரும், ஆர்யாவும் தான் சரி.
- Aravind Kumar - Chennai, இந்தியா

கமல் சமீபத்தில் ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற நிகழ்ச்சியில் ப.சி அவர்களை பிரதமராக பார்க்க ஆசைப்படுவதாக பேசி இருந்தார். இது நம்ம அம்மையாருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த பழிவாங்கல். அம்மையாரு வோட்டு வங்கி அல்லது சட்டம் ஒழுங்கு பற்றி பயபடுபவறல்ல.
- Easwara Dhooran - Erode, யூ.எஸ்.ஏ

இந்த விசயத்தில் கமலின் நிலைப்பாட்டைப் பாராட்டியே தீர வேண்டும். மனோதிடத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். கலை மகளின், கலைப் பொக்கிசம் என்று சொல்லி தலையில் தூக்கிக் கொண்டாடும் சினிமா உலகம் கூட இவர் காலைவாரிவிட்டது. ஆனால் அதற்கெல்லாம் சற்றும் கலங்காமல் தனித்து நின்று போராடும் உம்மை ரசித்ததற்கு இப்போது பெருமைப்படுகிறேன் - ரசிகன் என்ற முறையில். கவலைப் படாதீர்கள் கமல், எது நடந்தாலும் நாங்கள், உங்கள் ரசிகர்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.
- Vinoth Kumar - Chennai, இந்தியா

விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் என்றால் சமூக சீர்கேட்டை உருவாக்கும் பாடல்கள் , படங்களை அரசு தடை செய்ய வேண்டும் "கட்டிபிடி ..கட்டிபிடிடா ..கண்ணாளா ..கண்டபடி கட்டிபிடா " , கந்தா ..கார வடை ...இந்த பாடலில் பீர் சோறு மாதிரி எப்ப எப்ப அடிக்க வேண்டும் என்கிறார்கள் அதை தடை செய்யலை . பாலியல் கொடுமைகளை தூண்டும் படங்களை இன்னும் போஸ்டரில் திரை அரங்குகளில் ஓடிகொண்டிருகின்றது . உரிமைக்குரல் படத்தில் "பொண்ணா பொறந்தா ஆம்பளை கிட்ட கழுத்தை நீட்டிகனும் ..இந்த பாடலில் காயா இல்லை பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா " என்ற வரிகள் வரும் இதெல்லாம் தாண்டி வந்தவர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள் , அதில் இந்த படம் வந்தபோது ஸ்கூல் பசங்களை வம்பாக பார்கவைதது காசும் பார்த்த கதையும் உண்டு . தண்ணிக்கு வழியை காணோம் , இதில் மத்திய தணிக்கை குழு அளித்த சான்றிதழ் சரியில்லையாம் , இதில் எதுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் , படம் பார்த்தவன் பிடித்தால் பார்பான் இல்லாவிட்டால் எந்த ஸ்டார் நடித்தாலும் திரும்பி பார்க்கமாட்டான் , 144 தடை எதுக்கு , அப்ப தமிழன் யாருக்கும் கருத்து சுதந்திரம் இல்லை , பேச்சுரிமை இல்லை ...ஜனநாயக நாட்டில் இது வெட்க கேடு , ஆப்கானிஸ் தான் தீவிரவாதிக்கும் இங்குள்ள முஸ்லிம் நண்பர்களுக்கும் தொடர்பா இருக்கு ?, நம்ம ஊரில் இந்த அமைப்புகள் சிந்திக்க வேண்டும் , தீவிர வாதி வைத்தியலிங்க ஐயர் ன்னு ஆப்கானிஸ் தானில் வைக்க முடியுமா ? ..இந்தியர்கள் நாம் நம்மில் ஒருவன் படைப்பு அமெரிக்காவில் பேசபடுகின்றது, 100 கோடி நாங்களும் செலவு பண்ணுவோம் சினிமாவிற்கு தைரியம் வந்திருகின்றது ஒரு கலைகனுக்கு அதை பாராட்டாமல் நாம் எதிர்ப்பது மிக தப்பு
- Navasathishkumar - Madurai, இந்தியா

நீதிபதி அவர்கள் தீர்ப்பை 8 மணியிலிருந்து 10 மணிக்கு மாற்றி இருப்பதன் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது. தீர்ப்பு அரசுக்கு எதிராக வரும். பாதுகப்பு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்கு சென்று சேரும் வரை தீர்ப்பை இழுத்தடிக்கிறார்கள். கமல் சார் கண்டிப்பாக உங்களுக்கு தான் வெற்றி. விஸ்வரூபம் சென்னையில் மிக விரைவில்.
- Veera - Paris, பிரான்ஸ்

கமல் என்ற ஒரு தனி மனிதனை பழி வாங்க அரசாங்க இயந்திரத்தை உபயோகப்படுத்துவது நியாயமாகாது. சில்லறைத்தனமாக நடந்துகொள்ளும் இவரெல்லாம் பிரதமரானால் (பேச்சுக்குத்தான்) இந்தியாவின் கதி அதோ கதிதான்.
- Baskaran Kasimani - singapore, சிங்கப்பூர்

படத்தை ஓசியில் பார்த்த பின்னரும் இன்னும் வாதம் நடக்கிறது. உலக நாயகனுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் சாதாரன சாமான்ய மக்களின் நிலைமை என்ன? மேலிருந்து ஒரு நீதியரசர் பார்த்துகொண்டு இருக்கிறார். அவரது தீர்ப்புக்கு ஒருநாள் இந்த குள்ளநரிகள் பதில் கூறவேண்டும். உலகநாயகனின் பக்கம் கடவுள் உள்ளார்.
-sadaiappan - Abu dhabi, ஐக்கிய அரபு நாடுகள்

தமிழ்நாடு அரசு வக்கீல் சொல்வதை பார்த்தால் ஒரு தாயும் தந்தையும் தங்கள் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அவள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லுவதை போலுள்ளது . அரசு வக்கீல் படித்துதான் இந்த வேலைக்கு வந்தாரா என்பது சந்தேகமாக் உள்ளது . இப்படி அரசியல் முதலீடுக்காக ஒரு கலைஞனை குருதிபடுத்துவது சரியல்ல .அரசியல்வாதிகள் நம் நாட்டையே விற்று விட்டு மீண்டும் அதே நாட்டை ஆள இந்த சட்டம் இல்லையா.
- Mohan - Kochi, இந்தியா


பிரச்னை பெரியதாய் ஆனதற்கு ஜெயா tv தான் காரணமாமே ?? டிவி rights ஜெயா டிவி இருந்து ஸ்டார் விஜய்க்கு மாறியது, மற்றும் கமல் ஒரு விழாவில் சிதபரம் தான் பிரதமர் அக வேண்டும் என்று கூறியது தான் காரணமுன்னு சொல்றாங்க அப்படியா ? மெய்யாலுமா??
- Kathiravan.M - namakkal, இந்தியா

சென்ற தேர்தலுக்கு முந்தைய பொது தேர்தலில் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய 100 கோடி தர முன்வந்தார்கள், அதனை அப்போது கமல் மறுத்தார் என்பதற்காகவே இப்போது அதே 100 கோடி இழப்பை அவருக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வளவு வெளிப்படையாக ஒருவரை பழிவாங்க அம்மாவால் மட்டுமே முடியும். பேசாமல் ஜெயா டிவிக்கு தொலைக்காட்சி உரிமத்தை வழங்கி விட்டால் அடுத்த கணமே படத்தை சிக்கலில்லாமல் வெளியிட்டு விடலாம். பாவம் கமல், பிழைக்கத்தெரியாத மனிதர்.
- Ba Maha - Hougang new town, சிங்கப்பூர்

அட பன்னாடைகளா... மக்கள் வரிபணத்தை திருடுபவர்களை விட்டு விட்டு தன் தொழிலை, தனக்கு தெரிந்த தொழிலை செய்தவனுக்கு தடை. என்னடா நாடு இது. அப்போ அமெரிக்கனை பாத்தால் இந்த பூமிய விட்டே ஒதுகிடுவிரோ என்னடா முட்டாள் தனமா இருக்கு
- Wilsonsam Sp - Bobigny, பிரான்ஸ்

என்னாங்க நடக்குது...ஒண்ணுமே புரியலையே..மொதல்ல புண்படுத்துதுன்னாங்க. அப்புறம் சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னாங்க..அப்புறம் சென்சார் போர்டே சர்டிபிகாடே குடுக்கல அது டுபாக்கூர் சர்டிபிகேட் ன்னாங்க..இப்போ கமல் வித்துபுட்டார்,ஆகவே அவருக்கு வழக்கு போட உரிமையில்லை ங்கிறாங்க.. மத்திய அரசு 31 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா என்பதை உறுதி படுத்தி ஆவன செய்ய வேண்டும்..அப்படி கெட்டு இருந்தால் உடன் கவர்னரை அறிக்கை தர கேட்க வேண்டும்..அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- K.Sugavanam - Salem, Tamilnadu, இந்தியா

படத்தை விற்று விட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை.... வாஸ்தவமான வாதம் தான்... ஆனால் நாட்டையே விற்று விட்ட அரசியல்வாதிகளுக்கு ஒட்டு கேட்க மட்டும் உரிமை இருக்கிறதாக்கும் ? ??
-JAY JAY - Chennai, இந்தியா
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Dinamalar.com





விஸ்வரூபம் வசூல் மழை !

விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் படத்தை வெளியிட தமிழக அரசு 2 வாரத் தடை விதித்துள்ளது. ஆனால் விஸ்வரூபம் கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள்.

நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில் தொடர்ந்து மக்கள் கூடுகின்றனர்.


முதல் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்

முதல் நான்கு நாள் வசூல் 32.24 கோடிகள்.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு.


இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை இல்லாமல் இருந்திருந்தால்கூட, பெரும் நஷ்டத்திலிருந்து கமல் தப்பித்துவிட்டிருப்பார் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது.

தடை நீங்குமா ?

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 11.45க்கு விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் என மாலை 6 மணி வரை விசாரணை நீடித்தது.

பின்னர் நீதிபதி, இன்று இரவு 8.30க்கு தீர்ப்பு அளிப்பதாகக் கூறினார்.

நீதிமன்றம் வழங்கவிருக்கும் இந்தத் தீர்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது, நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & www.muruganandam.in



கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ! (Must read)

"Body Art" என்பது மனித உடலை கொண்டு வரையப்படும் உருவம். நீங்கள் கீழே காணும் வடிவங்கள் மனித உடல்களை கொண்டு வரையபட்டது. உற்று காணும் பொது மனித உடல்கள் மிக தெளிவாக தெரியும்.

உடம்பை வில்லாக வளைத்து இந்த கலைநர்கள் எப்படி இந்த வடிவத்தை கொண்டுவந்துள்ளார்கள் என்று சற்று பொறுமையாக யோசித்துபாருங்கள். அவர்களின் உழைப்பு நன்றாக தெரியும்.

ஹுமன் மோட்டார் சைக்கிள் வடிவம்!

கொஞ்சம் ஹாட்!
கொஞ்சம் வியப்பு!
கொஞ்சம் தொழில்நுட்பம் !
எவ்வளவு அடித்தாலும்
அழுவதில்லை
கிரிக்கட் மட்டை!
நிற்க நேரமின்றி
சுத்தித் திரிகிறது
பந்து
பதினஞ்சு பேரைக்
பாதுகாக்கிறது
பவுன்றி லைன்

ஹுமன் பிளமிங்கோ பறவை வடிவம்

ஒன்றை காலில்
ஓர் உருவம் -
இந்த பிளமிங்கோ!
நேரத்தைவிட வேகமாய்
மாறுது
ஸ்கோர்

ஹுமன் கார் வடிவம்

இவற்றிற்கு நடுவில்
வேலையில்லாமல் இருவர்
கைகளை உயத்திக்கொண்டு...

கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் !

கையளவு தான்
இதயமாம் . .
அறிவியல் சொல்கிறது!

பின் எப்பபடி
சாத்தியம் ?
ஆறடி நீ
அதற்குள் !

- அன்புடன் நிலா
நீதான் அழகி
என்று கர்வம்
கொள்ளாதே!

உன்னை ஜெயிக்க
பிறப்பாள் நம் மகள்!

- கவிப்பித்தன்
பிரிவின்
சொந்தம்...
"கண்ணீர்த்துளிகள்" - மணிகண்டன் மகாலிங்கம்
காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு...
கவிதை!

- மு. மணிமேகலை
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!

- வி.நடராஜன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



600 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் பிரேம் நசீர்


பல தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிரேம் நசீர். மொத்தம் 600 படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்தார். இது அகில உலகிலும் யாரும் செய்யாத சாதனை என்று, "கின்னஸ்" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அறிமுகம்

மலையாளப் பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் நடிகர் பிரேம் நசீர். பிரேம் நசீர் தனது உணர்ச்சி பூர்வ நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். தமிழ்ப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் 30 படங்களிலும், 600-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் பிரேம் நசீர் நடித்தார்.

கின்னஸ் சாதனை

600 படங்களில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் என்ற முறையில் பிரேம் நசீர் "கின்னஸ்" சாதனை படைத்தார்.

பிரேம்நசீர், A.K.வேலன் தயாரித்த "தைப்பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார். S.S.ராஜேந்திரனுடன் பிரேம் நசீர், ராஜசுலோசனா, N.M.ராஜம் நடித்தார்கள். இது 100 நாள் வெற்றிப்படம்.

அந்த படத்தைத் தொடர்ந்து பிரேம்நசீர்- சவுகார் ஜானகி நடித்த "நல்ல இடத்து சம்பந்தம்" பிரேம்நசீர்- பண்டரிபாய் நடித்த "நான் வளர்த்த தங்கை" மற்றும் "பெரிய கோவில்" படங்கள் வெளிவந்தன.

1959, 1960-ம் ஆண்டுகளிலும் பிரேம் நசீர் நான்கு, ஐந்து தமிழ்ப் படங்களில் தோன்றினார். அதில் குறிப்பிடத்தக்கவைகளில் ஒன்று S.S.ராஜேந்திரனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த "கல்யாணிக்கு கல்யாணம்" என்ற படமாகும்.

மேலும் தேவிகா, பாலாஜியுடன் இணைந்து நடித்த "சகோதரி", நடிகை ராகினிக்கு ஜோடியாக நடித்த "இருமனம் கலந்தால் திருமணம்", நடிகவேள் M.R.ராதாவுடன் நடித்த "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" ஆகிய படங்களும் வெளிவந்தன.


பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மற்றொரு சிறந்த படம் "வண்ணக்கிளி" என்று சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் T.R.சுந்தரம் இந்தப் படத்தை தயாரித்தார். T.R.ரகுநாத் டைரக்ட் செய்தார். பிரேம் நசீருடன் T.R.ராமச்சந்திரன், R.S.மனோகர் மற்றும் P.S.சரோஜா, மைனாவதி, முத்துலட்சுமி, M.சரோஜா, C.S.சரசுவதி ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்...

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பிரேம் நசீர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் சேர்ந்து நடித்தார். "பாலும் பழமும்", "முரடன் முத்து" ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள்.

1964-க்குப் பிறகு மலையாள பட உலகில் அதிக வாய்ப்புகள் குவிந்ததால் பிரேம் நசீர் தமிழ்ப்பட நடிப்பை குறைத்துக் கொண்டார். சென்னை நகரில் அவர் அதிகம் தங்கி இருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அரசியல் கட்சி தொடக்கினார்

M.G.R, N.T.ராமராவ் திரை உலகில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். அவர்களை பின்பற்றி மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக விளங்கிய பிரேம் நசீரும் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் கேரளத்து மக்கள் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்களே தவிர அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரேம் நசீரின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறவில்லை.

உடல்நலக் குறைவு - மரணம்

பிரேம் நசீருக்கு 1988-ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சையால் அவரை காப்பாற்ற இயலாமல் போயிற்று. 16-1-1989 அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். பிரேம் நசீர் உடலுக்கு தமிழ்த்திரை உலக நடிகர்- நடிகைகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

சகாப்தம் முடிவு

காங்கிரஸ் தலைவர் A.K.அந்தோணி, மந்திரிகள் பாலகிருஷ்ணன், நீலயோகிதாசன் நாடார், நடிகர் மம்முட்டி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு பிரேம் நசீர் உடல் சொந்த ஊரான சிறையின் கீழு என்ற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மலையாள பட உலகின் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல்

நடிகர் பிரேம் நசீர் மறைவுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்தியில், "பிரேம் நசீர் திரை உலகில் நீண்ட காலமாக புகழ் பெற்று விளங்கிய சிறந்த நடிகர். மனித உணர்ச்சிகளை நடிப்பின் மூலம் நயம்பட வெளிப்படுத்தியவர். அவர் மறைவினால் தேசம் ஒரு சிறந்த நடிகரை இழந்து விட்டது. நாட்டு மக்கள் தங்கள் இதயம் கவர்ந்த ஒருவரை இழந்துவிட்டார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் அனுதாப செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

கேரளா திரையுலகினர் இன்றளவும் இவரது படங்களிலிருந்து எதாவது ஒரு தகவலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



முருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா ?

முருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா ?

தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?


அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலைச் சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.


இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேறற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.


இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

தைப்பூச விரத முறை

தைப்பூசம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

இதேபோல், மாலையிலும் குளிந்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றைய தினம் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சொன்னா புரியாது (2013) - விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் புதிய படம் "சொன்னா புரியாது". இவர் தமிழ் பட(ம்)த்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தில் 'தமிழ்ப்படம்' சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப்-வும் நடிக்கின்றனர். மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

படத்தோட கதை என்னனா ...

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம். திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.

ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது. அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. கேளு மகனே கேளு
ஒரு கொடும கதைய கேளு - தினம்


பாடியவர்கள் : ஜெகதீஷ்
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

மெலடிக்கு மேலே குத்து பாட்டுக்கு கீழ் வரும் பாடல்.

கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலையை பாடலில் சொன்ன விதம் அற்புதம். பாடலின் இடை இடையே வரும் ரஜினியின் வரிகள் அருமை. பாடல் வரிகள் தெளிவாக கேட்பது கூடுதல் அழகு.
பாடல் ஹை லைட் வரிகள் :

அந்த தண்ணி அடிச்சவன் இந்த தண்ணி அடிச்சான்
அந்த மூனு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
அவன் : காதல் முதல் கண்ணீர் வரை - ஒரு சிறுகதை இந்த பாடல்!


2. காலியான சாலையில் நீயும் நானும்
போகிறோம் காதல் கார்காலம்!


பாடியவர்கள் : SP சரண் & சின்மயி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

இது ஒரு மெலடி ரொமான்ஸ் பாடல். காதுக்கு இனிமையான கவிதை தொகுப்போடு வரும் ஒரு பாடல். காதலன் காதலியின் மனத்திரையை பிரதிபலிக்கும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

மனதின் வாசல்களை
அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்!
இரண்டு பேர். இரண்டு காதல். ஒரே பயணம் இந்த பாடல்!


3. தேவதையோ ராட்சசியா
தேர்ந்தேத்த நிலவோ...


பாடியவர்கள் : ரஞ்சித்
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

பெப்பி சாங். கவுண்டமணியின் டியாலக்கோடு தொடக்கும் பாடல். இவரின் பிரபலமான டயலாக் ஆங்கங்கே பரப்பி, கேற்பது மிக அழகா இருக்கு. மேலும் பாரதிராஜா, கார்த்திக்கின் ஜித்தாத்தா ஜித்தா இசையும் அருமை. ஹீரோ பின்னணி பேசும் பல மொழி தெரிந்தவன் என்பதை சொல்லும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

கடைசிப்பக்கம் கிழிந்தேடுத்த கிரைம் நாவல் இவளோ
ஒரு நொடியில் கண் பறிக்கும் மின்னல் அதன் துகளோ
ஆணின் முதல் பார்வை - காதல் மொழி - சொல்லும் பாடல்!


4. உன் தொழில் சாய்த்து
உன்னோடு பேச ஓடோடி வந்தேன்..


பாடியவர்கள் : MK பாலாஜி
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

சோக பாடல். வயலின் & பியானோ கலந்த கலவை இனிமை.

காதல் - சோகம் - ஆணின் மனநிலை - சொல்லும் பாடல்!


5. ஐயையோ போச்சே...

பாடியவர்கள் : MK பாலாஜி & யதீஷ் மகேஷ்
பாடலை எழுதியவர் : யதீஷ் மகேஷ்

மக்களே காதலில் தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பாடலை பாடிகொண்டிருப்பவர் பா...ப்பா..... என தொடக்கும் பாடல்.

சிவாவின் டயலாக் அங்கங்கே இருப்பது ரசிக்ககூடியது. இசை + பாடல் இரண்டும் ஒரே இரைசல்.



கோழி இடும் முட்டைகள் :
மொத்தத்தில் சொன்னா புரியாது ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!




டாப் 20 சமையல் குறிப்புகள்

சி‌ன்ன ‌சி‌ன்ன சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள் உங்களுக்காக இதோ..
  1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

  2. முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.

  3. அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.

  4. மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.

  5. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.

  6. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

  7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.

  8. பச்சை மிளகாய் வாடாமல் இருக்க அதன் காம்பை கிள்ளிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள் வரும்.

  9. ஃப்ரிட்ஜ் இல்லாதவங்க கீரைகளை ஈரத்துணியில் லேசாக சுற்றி வைக்கலாம்.பச்சை மிளகாயையும் ப்ரெஷ்-ஆ மாதிரி வைக்கலாம்.

  10. தேங்காய் துண்டுகளை ஒரு பிளஸ்டிக் டப்பாவில் தண்ணீர் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரும்.

  11. காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.

  12. உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.

  13. பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.

  14. தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.

  15. தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

  16. சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.

  17. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

  18. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

  19. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

  20. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Exam (2009)- விமர்சனம்


ரொம்ப வித்தியாசமான படம் பார்க்கனும்னு ஆசை இருக்கா...? நீங்க ஒரு அறிவு ஜீவியா...? படம் பார்க்கும்போது ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டுமா ? அப்ப வாங்க நாம 'எக்ஸாம்' (Exam) -ன்னு ஒரு ஹாலிவூட் படம் பார்க்கலாம்.

படத்தோட கதை என்னனா ...

மிகவும் திறமை வாய்ந்த எட்டு நபர்களை இறுதி தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

ஜன்னல்கள் இல்லாத ஒரு அறை. அவர்களை அந்த அறையில் தனித்தனி டேபிளில் அமர்த்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேப்பர் கொடுக்கப்படுகிறது. அதில், ஒவ்வொரு நபருக்கும் ஒரு எண் எழுதப்பட்டிருக்கிறது.

எட்டுபேரும் சென்று அமர்ந்தபின், உள்ளே ஒரு செக்யூரிட்டி வந்து காவல் நிற்கிறார். அவருடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது.

அதன் பிறகு தேர்வு கண்காணிப்பாளர் சாலமன், தேர்வு பற்றிய விதிமுறைகளை விளக்குகிறார்.

அவர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 80 நிமிடங்கள்.

விடை அளிக்கவேண்டியது ஒரே ஒரு கேள்விக்கு.

அவர்கள் மூன்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் அல்லது அவர்கள் அந்த தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்

  1. கண்காணிப்பாளரிடமோ அல்லது செக்யூரிட்டியிடமோ பேச முயற்சித்தால் தேர்வெழுதும் தகுதியை இழக்க நேரிடும்.

  2. அந்த அறையை விட்டு வெளியே சென்றாலும் தகுதி போய்விடும்.

  3. எக்ஸாம் பேப்பரை பாழ் செய்பவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள். (ஆனால் பாழ் செய்தல் என்பது என்ன என்று விளக்கப்படுவதில்லை)

கண்காணிப்பாளர் சுவரில் இருக்கும் கடிகாரத்தை ஆன் செய்து விட்டு வெளியே சென்றுவிடுகிறார்.


கொடுக்கப்பட்ட பேப்பரில் ஒரு எண் தவிர வேறு ஏதும் எழுதப்படவில்லை. பேப்பரை திருப்பிப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. கண்முன் இருக்கும் வெள்ளைத்தாளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது யாருக்கும் புரிவதில்லை.

கேள்வி எங்கே?

கேள்வி தெரிந்தால் தானே விடையைப் பற்றி யோசிக்கமுடியும்?

ஆரம்பக்கட்ட குழப்பத்தில் ஒருவர் கொடுக்கப்பட்ட பேப்பரில் 'I believe I deserve...' என்று எழுத அவர் அந்த அறையை விற்று வெளியேற்றப்படுகிறார்.

பாத்திரப்படைப்புகள்

அனைவரதும் பாத்திரப்படைப்புகள் பலவற்றை சொல்வது போல உணர்ந்தேன். நுணுக்கமான உணர்வுகள், குணாம்சங்களை கொண்ட பாத்திரங்கள்.
Luke Mably as White
Adar Beck as Dark
Chris Carey as Guard
Gemma Chan as Chinese Girl
Nathalie Cox as Blonde
John Lloyd Fillingham as Deaf
Chukwudi Iwuji as Black (credited as “Chuk Iwuji”)
Pollyanna McIntosh as Brunette
Jimi Mistry as Brown
Colin Salmon as Invigilator

Director: Stuart Hazeldine
Writers: Stuart Hazeldine, Simon Garrity (story)

கிளைமாக்ஸ் வரை எடுத்துகொண்டு போகும் விறுவிறுப்பு தான் படத்தின் பெரிய பிளஸ்.
நம் யோசிக்கும் சில விசயங்களும் படத்தில் வருவதால் இன்னும் சுவாரஸ்யம்.

செக்யூரிட்டி வைச்சிருக்கற துப்பாக்கியை.. ஒரு கேரக்டர் எடுக்கற சீன் செம.. ஒவ்வொரு சீனும்.. நம்முடைய எதிர்பார்ப்பையும்.. பிரஷரையும் அதிகரிக்குது..

ரொம்ப லோ பட்ஜெட்டில் எடுத்த படம்...ஒரு ஹால் அவ்வளவுதான்...அந்த அறையில் சுவாரஸ்யத்தை நுழைப்பது இயக்குனரிள் அறிவுத்திறைமைக்கு சான்று!

ஒரு அறைதானே... ஒளிப்பதிவாளருக்கு என்ன பெரிய வேலை என்று நினைக்காதீர்கள். படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்!


நான் சில முக்கிய காட்சிகளை மட்டுமே இங்கு உங்களூக்காக சொல்லியுள்ளேன். இன்னும் பல் சுவாரஸ்யங்கள் இப்படத்தில் அடங்கியுள்ளது.

படம் ஓடின ஒன்னரை மணிநேரமும் ஒரே ரூமுக்குள்ள நடக்குது.. செக்யூரிட்டி, டெஸ்ட் நடத்தறவரை சேர்த்து பத்தே கேரக்டர்.. படம் தீயா ஓடுது.. படம் ஆரம்பிச்ச 10வது நிமிசத்துல இருந்து.. அங்கே 9வது ஆளா நாமலும் உட்கார்ந்துட்டு கொஸ்டின் யோசிச்சுட்டு இருக்கறமாதிரி ஃபீலிங்..

அப்பாடா.. ஒரு வழியா என்ன கேள்வி கேட்டானுங்கன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..

நீங்களும் கெஸ் பண்ணுங்களேன்.. அவங்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன?

பின்னூட்டத்துல சொல்லுங்க.. :-)

கோழி இடும் முட்டைகள் :
Exam - வித்யாசமான படம். ரசித்து பார்த்தால் ருசி அதிகம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். ஒரே ஒரு வோட்டு ப்ளீஸ். நன்றி!!!
Thanks : Karundhel & Jackiesekar who inspired me to see this movie.



Related Posts with Thumbnails
 
back to top