ஜில்லுனு சில அழகு குறிப்புக்கள்!

நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் 2 தானிய வகைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

1. கடலைப்பருப்பு

கடலைப்பருப்பும் இதிலிருந்து மாவாகும் கடலைமாவும் சமையலறையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடியது. ஆபத்தபாந்தவன் மாதிரி அநேக சந்தர்ப்பங்களில் கை கொடுக்கக் கூடியது இந்த கடலை மாவு தான். இது உணவுப் பொருளாக மட்டுமல்லாது, சிறந்த அழகு சாதானமாகவும் கருதப்படுகிறது.

எளிய, செலவில்லாத முகத்திற்குப் போடக் கூடிய பேக், கடலை மாவுதான். இது தோலை இறுக்கச் செய்யும். இறந்த செல்களை அகற்றக்கூடியது. நல்ல நிறமாக வர வேண்டுமென்பவர்கள் கடலை மாவை உபயோகித்தால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு ஒரு சிலருக்கு அலர்ஜியாவதுண்டு. அவர்கள் கடலை மாவுடன், பன்னீர், தேன், பால் தயிர், இவைகளில் ஏதாவது ஒன்றை சிறிதளவு கலந்து முகத்தில் பேக்காகப் போடலாம்.

2. பச்சைப் பயறு

பொதுவாகவே எல்லோருடைய சருமத்திற்கும் பொருந்தக் கூடிய தானிய வகை பச்சைப் பயறு. இது பித்தத்தைப் போக்கக் கூடியது. புரதச் சத்து அதிகமாக இருக்கும். இதில் ஒட்டும் தன்மை (பசைத் தன்மை) அதிகம்.

நமது சருமம் புரதத்தால் ஆனது. உணவாகச் சாப்பிடும் போதும் புரதம் நமக்குத் தேவையான ஒன்று. அதே சமயம் புரதத்தை வெளிப் புறத்தில் கொடுக்கும் பொழுது, சருமம் மென்மையாக மாறுகிறது. முளை கட்டின பச்சைப் பயறில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.

பயத்தம் மாவுடன் பால், தேன், பன்னீர் கலந்து சருமத்திற்குச் பூச உபயோகப்படுத்தலாம். அல்லது வெள்ளரிச்சாற்றை பயத்தம் மாவுடன் கலந்து பேக்காகப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது சிலருக்கு சிகைக்காய் தேயத்துக் குளிப்பது, அலர்ஜியாக இருக்கும். கண் எரிச்சலைக் கொடுக்கும். அவர்களும் சரி, சிறு குழந்தைகளுக்கு எண்ணெய் குளியலின் போது சரி பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கலாம்.

உலர்ந்த சரும வகைக்கு பால் ஏடுடன் பயத்தம் மாவையும், எண்ணெய் சருமத்திற்கு பயத்தம் மாவுடன் ஆரஞ்சு சாற்றையும் கலந்து உபயோகப்படுத்தலாம்.

இதைத் தவிர வெள்ளரிச்சாறு, பன்னீர், இளநீர் இவைகளில் ஏதாவதொன்றைச் சேர்ப்பது சருமத்திற்கு எந்தவித தீங்கும் செய்யாது.

Thanks : senthilvayal



மன்மதன் அம்பு - சினிமா விமர்சனம்

அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வெளிவந்த புதிய படம் தான் (மன்)னார்-(மதன)கோபால்- (அம்பு)ஜாஸ்ரீ = மன்மதன்அம்பு.
படத்தோட கதை என்னானா ...

நடிகையான த்ரிஷாவை அவரது ரசிகரான மாதவன் காதலிக்கிறார். த்ரிஷா நடிக்கும் படமொன்றின் ஷூட்டிங்கை பார்க்கப்போன இடத்தில் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடியாக நடிக்கிறார் சூர்யா. இருவரும் ஒய்யாலே... பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார்கள்.

சூர்யாவுடன் த்ரிஷாவை சந்தேகம் கொள்ள ஆரம்பித்து... இருவருக்குமான வாய்த்தகராரில் கார் 'ஆக்ஸிடென்ட்' ஆகிறது. பிறகு, போலீஸுக்கு கப்பம் கட்டிவிட்டு தப்பிக்கிறார் மாதவன். மாதவன்-த்ரிஷாவுக்கிடையில் இடைவெளி விழுகிறது.

மூன்றாண்டுகளுக்கு பின் ஜெர்மனிக்கு தன் தோழி சங்கீதாவுடன் பிரமாண்ட கப்பலில் சுற்றுளா செல்கிறார் த்ரிஷா. அப்போதுதான் அசத்தலாக 'என்ட்ரி' கொடுக்கிறார் உலக நாயகன். மேஜரான கமல் தன் நண்பனின் (ரமேஷ் அரவிந்த்) ஆபரேஷனுக்காக, த்ரிஷாவை வேவு பார்க்கும் 'டிடக்டிவ்'வாக மாதவனால் நியமிக்கப்படுகிறார்.

ஒருகட்டத்தில் த்ரிஷாவிற்கு நல்ல பொண்ணு என்று மாதவனிடம் 'சர்ட்டிபிகேட்' கொடுக்கிறார் கமல். இந்நிலையில்… நீங்கதான் எதுவுமே கண்டுபிடிக்கலையே… அப்புறம் எப்படி உங்களுக்கு பணம் கொடுக்க முடியும் என மாதவன் மறுக்க… தன் நண்பனுக்காக மாதவனிடன் பணம் கறப்பதற்காக களத்திலிறருங்குகிறார் கமல். அப்போது வரும் தகிடுத்தத்தோம்.. பாடலில் தூள் கிளப்புகிறார் கமல். தியேட்டரில் விசில் சத்தம்

இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது... கமலும் த்ரிஷாவும் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.

எனக்கு பிடித்த சில நடிகர்கள்:

கமல் - அசத்தலான அறிமுகக் காட்சியில் ஆரம்பித்து, அவர் வரும் அத்தனைக் காட்சிகளிலும் பார்வையாளர்களை வசப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அந்த 'பிளாஷ்பேக்' காட்சியில் பிரமிக்க வைக்கிறார் கமல். தன் வயதிற்கேற்ற கேரக்டரை தேர்ந்தெடுப்பதற்கு கமலுக்கு பாராட்டுகள். எக்ஸ்-ஆர்மி மேனாக கனகச்சிதமாகப் பொருந்துகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் - 'நீலவானம்...' பாடல் பாடல் முழுக்க வாயசைப்பு 'ஃபார்வர்டில்' இருக்க, காட்சிகள் 'ரிவர்ஸில்' வருவது மிகவும் அழகு. superb sir!

த்ரிஷாவுக்கு வெகு அழகாகப் பொருந்துகிறது இந்த வேடம். 'விண்ணைத் தாண்டி வருவாயா'வில் பார்த்ததை விட இன்னும் அழகான த்ரிஷா.
த்ரிஷாவிடன் சங்கீதா பேசிக்கொண்டிருக்கும்போது தன் பையன் தூங்குவதாக பாவ்லா காட்டுவதை அறிந்த சங்கீதா, "பசங்க தூங்கறாங்கலா, இல்லையாங்கிறது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும், பசங்க தூங்கும்போது கால் கட்டவிரலை ஆட்டிக்கிட்டேதான் தூங்குவாங்க" என்று சொன்னவுடன், அந்த சுட்டிப்பயன் கால்விரலை ஆட்டுவது super!
ரமேஷ் அரவிந்த் - அடையாளமே தெரியாம வர்றார். ஆனா நல்லா நடிச்சிருக்கார். ஊர்வசி அவரோட மனைவியா வர்றாங்க.

மாதவன் சற்று வில்லத்தனம் கலந்த ரோல். சில காட்சிகளைத்தவிர படம் முழுக்க 'சரக்கு' பாட்டிலோடவே சுற்றுகிறார். இருந்தாலும் அந்த கேரக்டரை வெளுத்து வாங்குகிறார் மனுஷன். மாதவனோட முறைப்பொண்ணா - 'களவானி' ஓவியா

சங்கீதா - இரண்டு குழந்தைகளுக்கு தாய், ஆனால் விவாகரத்தான இளம் மனைவி... இந்த ரோலை இவரை விட தத்ரூபமாக வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நல்லாருக்கு. பாட்டெல்லாம் படத்தோட திரைக்கதையோட ஒட்டியே வர்றதால எதுவும் தனியா பிரிச்சு பாக்க முடியாதபடி நல்லாருக்கு பாக்கறதுக்கு.

மனுஷ் நந்தனின் கேமரா, சொகுசுக் கப்பலான 'MSC Cruise' ஐ திரையில் அழகாகக் காட்டுகிறது.

மன்மதன் அம்பு - ரொமான்டிக் காமெடிபடம்
.


ஈசன் - பாடல் விமர்சனம்

'சுப்ரமணியபுரம்' வெற்றிக் கூட்டணி சசிகுமார், சமுத்திரக்கனி, ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'ஈசன்’.

சுப்ரமணியபுரத்தில் மதுரை மண்ணின் மனத்தை பரவிட்ட இயக்குனர், இப்போது ஈசனில் நகரத்து வாசனையை உணரும்படி, அதற்கேற்றார் போல ஜேம்ஸ் இசையும் மிக அருமையாக வந்துள்ளது.

நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்.

ஜெரார்ட் தாம்ப்சன், சுக்விந்தர் சிங், மால்குடி சுபா, பென்னி தயால், K.S.சித்ரா, பத்மநாபன், தஞ்சை செல்வி, சுனந்தன் ஆகியோர் குரல்களை ஜேம்ஸ் வசந்தன் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



1. ஜில்லாவிட்டு ஜில்லாவந்த...

'மதுர குலுங்க' என்ற பாடலை போலவே இந்த பாடலும் ஒரு கிராமிய 'குத்து' பாடல். மோகன்ராஜன் எழுதிய பாடலை இந்த FOLK பாடலை கிராமத்து இசை கருவிகளுடன் தஞ்சை செல்வி பாடி பட்டையை கிளப்பியிருக்கிறார். ரொம்ப வித்தியாசமான குரல் வளம். கிராமத்து திருவிழாக்களில் நிச்சயம் இந்த படம் இது.


2. கண்ணில் அன்பை சொல்வாளோ...

புல்லாங்குழலின் மென்மையான குரலும், பத்மநாபனின் 'கணீர்' குரலும் செவிகளுக்கு இனிமை சேர்க்கிறது. நா.முத்துகுமாரின் சிறப்பு வார்த்தைகளும் பாடலுக்கு பலம் சேர்க்கின்றன. இப்பாடலை முதன்முதலில் கேட்க்கும் போதே பிடித்து போகிறது.


3. மெய்யான இன்பம்...

ஒரு நகரத்தின் பிஸியான இரவு நேர வாழ்க்கையை வரிகள் பிரதிபலிக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன் இசையை குறைத்து, வரிகளை பதித்திருக்கிறார். வாழ்த்துக்கள். நா.முத்துக்குமாரின் உணர்ச்சிப்பூர்வமான வரிகளை, சுனந்தன் மென்மையாக பாடலாக்கியுள்ளார்.

4. சுகவாசி சுகவாசி...

பெண்கள் பாடியிருக்கும் பெண்மைக்கான பாடல். அனுபவம் வாய்ந்த மால்குடி சுபாவும், அருமையான குரலை கொண்ட KS சித்ராவும் யுகபாரதியின் வரிகளை, வசந்தனின் இசையோடு சரியாக கலந்து பாடியிருக்கிறார்கள்.

கிட்டார் இசை வசீகரிக்கிறது. இசையமைப்பாளரையும், பாடகர்களையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இப்பாடல் 'ஹிட்' வரிசையில் இடம்பெறும்.

5. Get Ready...

ஓர் வெஸ்டர்ன் பாடல். ஜெரார்ட் தாம்ப்சன் மற்றும் பென்னி தயால் குரல்கள் வெஸ்டர்ன் பாடலுக்கு ஏற்றவாறு கிடார் இசையோடு விரவி வருகிறது. பாடலின் இசையை முணுமுணுத்தாலும், வரிகளை முணுமுணுப்பது கடினமே.

கதையின் தேவையினை உணர்ந்தும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.


இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஈசன் - பாடலை கேட்டு மகிழலாம்.




ரத்த சரித்திரம் - சினிமா விமர்சனம்

பழி தீர்த்தல் மனிதனின் உன்னத உணர்வு - இந்த ரத்த சரித்திரம் படத்தின் தாரக மந்திரம்.

ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்க பட்ட படம் இது. ஹிந்தி, ஆந்திர மாநிலத்தில் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ஒரே பாகமாக வெளியானது. முதல் பாகத்தில் நடத்த காட்சிகளை முதல் அரை மணி நேரத்தில் காட்டிவிடுகிறார்கள்.

இளகிய மனம் + குழந்தைகள் + ரத்தம் பார்த்தா அலர்ஜி போன்றவர்கள் இந்த படத்தை பார்க்காமல் தவிர்ப்பது மிக நன்று.
படத்தோட கதை என்னானா ...
அனந்தபுரத்து பிரதாப்ரவி (விவேக்ஓபராய்)யின் அப்பா ஒரு அரசியல்வாதி. அவரின் கட்சி தலைவர் கிட்டி தனக்கு எதிராக ஜாதி ஓட்டுக்களை சேர்க்கின்றார் என்ற காரணத்தினால் ரவியின் அப்பாவை பக்கத்தில் இருக்கும் நண்பர்களை வைத்தே கொலை செய்து விடுகின்றார்கள்.

தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழி வாங்கும் விதமாக எதிரிகளை கொல்கின்றான். அனந்தபுரத்தில் தேர்தலில் நின்று மந்திரி ஆகின்றான். ஒரு action team அமைத்து தனக்கு எதிரான அத்தனை பேரையும் கொல்ல சொல்கின்றான். இதில் பல அப்பாவிகளும் அடக்கம்.

அவனை எதிர்க்க யாருமே இல்லை என்ற நிலையில், அவன் மீது சூர்யா, ஒரு கொவை முயற்சி நடக்கின்றான். அவன் ஏன் பிரதாப்ரவியை கொலை செய்யதுடிக்கின்றான். அதன் பின்னணி என்ன? ரவியை கொன்றானா ? என்பது தான் கதை.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்:
1. ராதிகா ஆப்தே
என்ன அழகுடா !!!. எல்லோரையும் ரசிக்க வைக்கும் அழகு அப்படி ஒரு அழகி.!! அவளை மிக அழகாக காட்டியிருக்கிறான். ராம் கோபால் வர்மா ரொம்ப ரசனைக்காரர். வாழ்க! விவேக் ஓபராய் மனைவியாக வருகிறாள்.

ஒரு காட்சியில் விவேக் ஓபராய் அவளை கட்டிப்பிடிப்பது போன்று வரும்... என்னை என்னை சுற்றி ஒரே புகை. (ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்ன ?!)

வன்முறையை காட்டிலும் அன்பு பெரியது என்று சொல்வதும், சூர்யாவை என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க அவன் பொண்டாடியை ஒன்னும் செய்யாதீங்க என்பதும், அரசியம் வாதியின் மனைவி எப்படி மற்றவர்களை பற்றி நினைகிறார்கள், அவர்களின் மன போராட்டம் பற்றி மிக அழகாக சொல்லியிருகிறார் ராம்.

2. ராம்கோபால் வர்மா
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார். படம் முழுக்க சண்டை + ரத்தம் தான். பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் ஒரு உண்மை சம்பவம் கொண்டு சொல்ல வருகிறார் இயக்குனர். படத்துல வசனங்கள் சும்மா.. நறுக்.. நறுக்!
நான் ரசித்த 7 வசனங்கள் :

1. ரத்தம் சிந்த ஆரம்பிச்சாச்சு, அது நிக்காது.அது தான் ரத்தத்தோட குணம்.

2. நான் சாவைக்கண்டு பயப்படலை, அவனை சாவடிக்காமலேயே செத்துடுவேனோன்னு பயப்படறேன்.

3. உனக்கு பயமா இல்லையா?
இல்லை. சந்தோஷமா வாழறப்பதான் பயம் வரும். இப்போ என் கிட்டே மிச்சம் மீதி இருக்கறது பழி வாங்கனும்கற வெறி மட்டும்தான்.

4. என்னைக் கொல்ல சூர்யாவுக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனா எந்தக்காரணத்தை முன்னிட்டும் நான் அவனை கொல்ல மாட்டேன். (தியேடரில் செம கை தட்டு )

5. இப்படியே நீ கனவு கண்டுட்டே இரு, என்னை உன்னால கொல்ல முடியாது.
அப்படியா? முடிஞ்சா நீ தூங்கு பார்ப்போம்!

6. வாழ்க்கைல யாராலயும், எதையும் நிச்சயமா சொல்ல முடியாது.

7. நெனச்சத சாதிச்சிட்டே. வாழ்த்துகள்! ஆனா பிரதாப்பும் உன்ன மாதிரிதான் பழிவாங்குறதுல ஆரம்பிச்சான். அப்புறம் அரசியலுக்கு போனான். நீயும் இன்னொரு பிரதாப்பா ஆகிடுவென்னு நெனக்கறேன்.
3. விவேக் ஓபராய்
பிரதாப் ரவி என்ற கதாபாத்திரமாக வாழ்த்திருகிறார். ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. நம் மனதில் பிரம்மாண்டமாய் நிற்கிறார்

வெளியே நடக்கும் அரசியல் போராட்டம், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் நம் கண்முன்னே கொண்டுவருவது அவரது நடிப்புக்கு ஒரு சான்று.

பலவிதமான நடிப்பில் நம்மை கவர்கிறார். முதல் பாதியில் ஒரு வெறிகொண்ட மனிதனாக இரண்டாம் பாதியில் ஒரு அரசியல் தலைவனாக, தன் மனசாட்சிக்கு பயப்படும் மனிதனாக, ஒரு ரௌடியாக, நல்ல கணவனாக, வாழ்க்கையில் ஒரு நல்லவன் காலத்தின் கோலத்தில், எப்படி கெட்டவனாக மாறுகிறான் என்பதை பல வித உணர்வுகளை வெளிகொண்டுவண்டு அவரது பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

4. சூர்யா
நந்தா பட பாதிப்பு தெரிகிறது. கட்டுமஸ்தான உடலுடன், சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். கோபப்படும் போது, வில்லனிடம் தோற்கும் போதும், அவனை வெற்றி கொண்ட பின் ஜெயித்துவிடேன் என்று நினைக்கும் போது அவரது முகத்தில் உணர்வுகளை கண்ணிமை, கன்னம், தாடை - எல்லாம் சும்மா துடிக்கிறது + நடிப்பில் மிரட்டியுள்ளார்.

கோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும் இடம் செம திரில்லிங்க்.

5. போலீஸ் அதிகாரி
மிக ஸ்டைலா அடிகடி சிகரட் பிடிப்பதும் + சூர்யாவை கைது செய்ய போகும் இடத்தில் நடக்கும் சம்பவம் என பல இடங்களில் தன் முத்திரையை பதிக்கிறார்.
6. ஒளிபதிவாளர் அமோல் ராத்தோர்
காமிரா இப்படத்திற்கு பெரிய பலம். பல விதமான கேமரா கோணங்கள் + பல குளோசப் ஷாட்டுகளும் என மனுஷன் புகுந்து விளையாடியிருகார். தலைகீழ் காட்சிகள் + 360 டிகிரியில் சுற்றும் காட்சி - சில இடங்களை கடுப்பை கிளப்பின.

7. பிரியாமணி சாரியில் சூர்யாவின் மனைவியாக வந்து போகின்றார். சொல்லிகொள்ளும்படி நடிக்க இதில் ஒன்றும் இல்லை.

இன்னும் பல நச்சத்திர பட்டாளமே நடித்து இருக்கு இந்த படத்துல. இசை - படு மோசம். பின்னணியில் சும்மா கத்திகிட்டே இருக்கும்.

ரத்த சரித்திரம் - பார்க்கலாம் - ரத்தமும் கொலைகளும் பிடிக்குமானால்....



Related Posts with Thumbnails
 
back to top