CASH - ஹாலிவுட் பட விமர்சனம்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருள் "பணம்". நம்மில் பலரும் பணம் அதிக பணம் சேர்க்க/சம்பாதிக்க வேண்டும் அன்ற ஆசை உண்டு. நமக்கு கொஞ்சம் பணம் வழியில் கிடைத்தால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பையில் போட்டுகொண்டு சென்று விடுவோம் அல்லது அதனை உரியவரிடம் தர முயற்சி செய்வோம். அதுவே கொஞ்சம் அதிகமான பணம் என்றால்... நம் மனது உடனே அதனை உரியவரிடம் தர ஒரு நிமிடம் யோசிக்கும். இதே போன்ற மைய கருத்தை சொல்லும் ஒரு ஹாலிவுட் படம் 'CASH'.


படத்தோட கதை என்னனா ...

அதே போலதான் இங்கே ஒரு நடுத்தர குடும்ப ஹீரோ காரில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு கார் அவனை முந்தி செல்கிறது. ஒரு பாலத்தின் மீது ஏறும்போது ஒரு பொருள் இவனது காரின் முன்பகுதியில் வந்து விழுகிறது.

காரை நிறுத்தி பார்த்தால் அது ஒரு 'சூட்கேஷ்'. போட்டவனை திட்டிவிடு, அதனை தூக்கி எறிதவனுக்கு - ஒரு சின்ன எதிர்பார்ப்பு. அதனை திறந்து பார்த்தால்... ஒரே பணமயம். இடைவெளி இல்லாத அளவு பணம் நிரம்பிவழிந்து இருக்கிறது. அதனை எடுத்துக்கொண்டு தன் இல்லம் வருகிறான்.

தன் மனைவியிடம் காட்ட, இருவரும் சேர்ந்து வீட்டுக்கு தேவையான பொருள்கள், டிவி, சோபா, கார், சேவிங் என்று தங்கள் விரும்பிய வழியில் அந்த பணத்தை செலவு செய்ய ஆரம்பிகிறார்கள்.

இந்நிலையில், பணத்தை தொலைத்த வில்லன் (Sean Bean) அந்த பணத்தை எடுத்த ஹீரோவை கண்டுபிடித்து வந்துவிட பிரச்னை ஆரமிகிறது. ஹீரோவை தொலைத்த பணத்தை முழுமையாக வேண்டும் என்று கேட்டு மிரட்டி ஹீரோவிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பெறுகிறான்.

மீதி பணத்திற்கு ஹீரோகாரை விற்று- பாங்கில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து - மீதி பணத்திற்கு ஹீரோ + அவன் மனைவி + வில்லன் சேர்த்து சிறு சிறு இடங்களில் கொள்ளை அடித்து - கடைசியில் ஒரு வங்கியில் முடிகிறது.



இவர்களை சிகாகோ போலீஸ் தேடும் நிலையில் அவர்கள் அங்கிருந்து வேறு நகருக்கு காரில் பயணிக்கும் போது நம்ப ஹீரோ வில்லனுக்கு தரவண்டிய பணம் போக மீதி இருக்கும் பணத்தை ஹீரோ நாடு ரோட்டில் வீசி எறிகிறான்.

இந்நிலையில் ஹீரோ வில்லன் இடையே சிறு மோதல் காரிலேயே. துப்பாக்கியை எடுக்கும் வில்லன் ஹீரோவால் சுட்டு இறக்க - வில்லனின் சகோதரன் ஜெயிலில் இருந்து வெளிவர படம் முடிகிறது.

இந்த படத்தின் ட்ரைலர்



'Black Death, Lord of the Rings' போன்ற படங்களில் நடித்தவர் Sean Bean. கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான் 'அவர்ட்' பெற்றவர் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டியிருப்பார். நம்ம ரகுவரன் போல சும்மா மனசர் அலட்டிக்காமல் நடித்திருப்பார் .

Chris Hemsworth - வில்லனிடம் மாட்டிகொண்டு படும் அவஸ்தை + திருடும் போது கிடைக்கும் சுகம் + வெற்றி என் பன்முக நடிப்பு. சபாஸ்.

Stephen Millburn Anderson- திரைக்கதையும் வசனமும் அழகு. கதாநாயகி ஒரு 'ரெஸ்டாரென்ட்'-ல் திருடிவிட்டு ஹீரோவிடம் "உன்னைவிட நான் அதிகம் திருடிவிட்டு வந்திருக்கேன் பாருன்னு" பெருமையா சொல்லும் இடம் அழகு .

பின்னணி இசையும் கேமிராவும் குறிப்பிடும் படி இதில் விளையாடி இருக்கும்.

CASH - டைம் பாஸ் மூவி

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



கோ‌வா‌ - திரைபட விமர்சனம்

செ‌ன்‌னை‌ 28, சரோ‌ஜா‌ ஆகி‌ய படங்‌களை‌ இயக்‌கி‌ய வெ‌ங்‌கட்‌பி‌ரபு‌, இப்‌போ‌து இயக்‌கி‌ சௌந்தர்யா ர‌ஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயா‌ரிப்பு படம்‌ கோ‌வா‌.


படத்தோட கதை என்னனா ...

பண்ணைப்புரத்தில் உதவாக்கரைகளாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று இளைஞர்கள் (ஜெய், பிரேம்ஜி, வைபவ்) ஊரை விட்டு ஜாலியாக ஒரு வாரத்தினை கழிக்க மதுரைக்கு வந்த இடத்தில் அவர்களது நண்பனுக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணுக்கும் திருமணம் - எப்படி சாத்தியம் என்று கேட்க?, தான் கோவாவில் 'டூரிஸ்ட் கைடாக' இருக்கும் போது அந்த வெள்ளைக்கார பெண்ணுக்கும் தனக்கும் காதல் - கல்யாணம் - முதல் இரவு 5 ஸ்டார் ஓட்டலில் நடக்க போகின்றது - மனைவியுடன் வெளிநாடு செல்லபோவதாகவும்" சொல்ல - நண்பர்கள் மூவரும் அதிர்ச்சி.

சாதாரணமான அவனுக்கே ஒரு 'பாரின்' பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத? என்ற நம்பிக்கையில் - கோவா செல்ல முடிவெடுகிறார்கள். அதன் பின்னர் நடக்கும் கூத்தும் கும்மாளமும் தான் மீதி படத்தின் கதை (?).

முதல்‌ பா‌தி வரை கதையே இல்லை.‌ கா‌மெ‌டி‌யு‌ம்‌ கலகலப்‌பு‌மா‌க செ‌ல்‌லும்‌ படம்‌ இரண்‌டா‌வது பா‌தி‌யி‌ல்‌ என்‌ன சொ‌ல்‌ல வருகி‌றா‌ர்‌கள்‌ என்‌று தெ‌ரி‌வதற்‌குள்‌ படம் முடிந்துவிடுகிறது.



படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

கோ‌வாவி‌ன்‌ அழகை‌‌ அழகா‌க படம்‌ பி‌டி‌த்‌துள்‌ளது சக்‌தி‌ சரவணன்‌ ஒள்‌ப்‌பதி‌வு‌. "ஏலே‌லோ‌.. பண்‌ணை‌பு‌ரம்‌... " என வரும்‌ டை‌ட்‌டி‌ல்‌ பா‌டலி‌ல்‌ மனதி‌ல்‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌ யு‌வன்‌சங்‌கர்‌ரா‌ஜா‌.

பல படங்‌களி‌ல்‌ வி‌ல்‌லனா‌க வந்‌து மி‌ரட்‌டும்‌ சம்‌பத் இதுவரை பார்த்திராத 'கெட்அப்'. ஒரு 'ஹோமோ' -வாக வந்து நம்மை நடி‌த்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. கேரக்டர் படத்தில் அழுத்தமாக பதிந்துள்ளது.

சம்‌பத்‌ - பி‌ரே‌ம்‌ஜி‌ உறவை‌ பா‌ர்‌த்‌து அரவி‌ந்‌த்‌ பொ‌றா‌மை‌படுவதும்‌ கோ‌பப்‌படுவதும்‌ பழிவாங்க முயல்‌வதும்‌ நல்‌ல கா‌மெ‌டி‌. 'சிக்ஸ்பக்' உடலமைப்பு அருமை.

படம்‌ முழுக்‌க பி‌ரே‌ம்‌ஜி‌ நகை‌ச்‌சுவை‌ தோ‌ரணம்‌ கட்‌டுகி‌றா‌ர்‌. வெ‌ள்‌ளை‌க்‌கா‌ர பெ‌ண்‌ணி‌டம்‌ கா‌தலி‌ல்‌ உருகும்‌ போ‌தும்‌, சம்‌பத்‌துடன்‌ சே‌ர்‌ந்‌து கூத்‌தடி‌க்‌கும்‌ போ‌தும்‌ 'நா‌ன்‌ ஸ்‌டா‌ப்'‌ கொ‌ண்‌டா‌ட்‌டம்‌.

பி‌ரே‌ம்‌ஜி‌யை‌ கா‌தலி‌க்‌கும்‌ வெ‌ள்‌ளை‌க்‌கா‌ர பெ‌ண்‌ அழகோ அழகு!- தன்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ நன்‌றா‌க செய்திருக்கிறாள்.

முதல் கணவன் பிரசன்னாவை கழட்டிவிட்டிட்டு ஜாலி + சா‌டி‌ஸ்‌டா‌க வரும்‌ சி‌னே‌கா கலக்‌கல்‌ உடை‌யி‌ல்‌ வந்‌து கவர்‌ச்‌சி‌ வி‌ருந்‌து படை‌க்‌கி‌றா‌ர்‌.

ஜெ‌ய்‌ நகை‌ச்‌சுவை‌யி‌ல்‌ கலக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவர்‌ ஆங்‌கி‌லம்‌ பே‌சும்‌ பெ‌ருமை‌ பீ‌த்‌துவதும்‌ ரசி‌க்‌க முடி‌கி‌றது. அவர்‌ பி‌யா‌வு‌டன்‌ கா‌தல்‌ கொ‌ண்‌டு வே‌தனை‌ப்‌படும்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

பா‌ர்‌வை‌யா‌ல்‌ சொ‌க்‌க வை‌க்‌கும்‌ பியா இந்தப் படத்தில் நடிக்கும் வேலை இல்லை.

வை‌பவ்‌ லொ‌ல்‌லு தா‌ங்‌க முடி‌யவி‌ல்‌லை‌. அவர்‌ பெ‌ண்‌கள்‌ தன்‌ வலை‌யி‌ல்‌ வி‌ழுகி‌றா‌ர்‌கள்‌ என்‌று உதா‌ர்‌வி‌ட்‌டு நம்‌ப வை‌க்‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌, 'தி‌ரனன்‌னா‌ தி‌ரனன்‌னா‌ ..' என்‌ற பழைய பட பி‌ன்‌னணி‌ இசை‌யோ‌டு கா‌ட்‌டும்‌ போ‌து தி‌யே‌ட்‌டரி‌ல்‌ செ‌ம கை‌தட்‌டல்‌. அவர்‌ சி‌னே‌கா‌வி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌கா‌ண்‌டு அடி‌வா‌ங்‌கும்‌ பி‌ளா‌ஷ்‌பே‌க்‌ கா‌ட்‌சி‌கள்‌ நகை‌ச்‌சுவை‌ கலா‌ட்‌டா‌.


ஆரம்‌பத்‌தி‌ல்‌ ஆனந்‌தரா‌ஜ்‌ நக்கலில் பின்னி எடுத்திருக்கிறார். சண்‌முகசுந்‌தரம்‌, வி‌ஜயகுமா‌ர்‌, சந்‌தி‌ரசே‌கர்‌ மூ‌வரும்‌ அவர்‌கள்‌ மகன்‌களை‌ பற்‌றி‌ நி‌னை‌க்‌கும்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌ன்‌றனர்‌. அதுவும் சண்‌முகசுந்‌தரம்‌ நடிப்பு இன்னும் ஒருபடி மேல் சென்று நையாண்டி செய்திருக்கிறார்.

பல அவதார கதாப்பாத்திரம் ஒன்று இருக்கிறது. ஏதாவது ஒரு 'கெடுப்பில்' (வாத்தியார், போலீஸ், பஞ்சாயத்து ஆட்களில் ஒருவர், பைலட்) எந்த காட்சியை பார்த்தாலும் அவர் வருகிறார். யார் அவரு? சும்மா 'பல்கா' இருகாரு.

'ஏழேழு தலைமுறைக்கும்' + 'இது வரை இல்லாத உணர்விது ' பாடல் அருமை. மற்றவைகள் மனதை தொடும்படி இல்லை. யுவன் சங்கர் ராஜா கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்.

கோவா - காமெடி டூர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



3 Ninjas - ஹாலிவுட் பட விமர்சனம்

1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் "3 நின்ஜாஸ்" (3 Ninjas). குழந்தைகளை குறிவைத்து எடுத்த காமெடி கலந்த சண்டை படம் இது.


படத்தோட கதை என்னனா ...

மோரி - 'நிஞ்சா' என்ற ஜப்பானிய கலையை நன்கு திறமையாக பயின்றவர். இவளது மகளை எப்.பீ.ஐ (FBI) என்கின்ற உளவு அமைப்பில் இருக்கும் ஒரு அதிகரிக்கும் திருமணம் செய்துவைக்கிறார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் (ராக்கி, கோல்ட் & டும்-டும்).

ஒவொரு வருடமும் பள்ளி விடுமுறை/கோடைகாலத்தில் இந்த குழந்தைகள் தன் தாத்தா மோரியை பார்க்க வருவார்கள். அவர்களுக்கு அந்த கலையை மிகவும் கண்டிப்புடன் சொல்லி தருகிறார்- அவர்களது தத்தா.

இந்நிலையில், எப்.பீ.ஐ(FBI) அதிகாரி, தன் சாமர்த்தியத்தால், ஒரு ஆய்த பரிமாற்றத்தை கண்டுபிடிக்கிறார். வில்லன் சாமர்த்தியமாக தப்புகிறான். கதைக்கு இப்போ ஒரு வில்லன் ரெடி.

கோடை முடிந்து வீட்டிற்கு வரும் அந்த மூன்று குழந்தைகளும் பள்ளிக்கு செல்கின்றார். அவர்களை கடத்தி அதிகாரியை பழிவாங்க துடிகிறான் அந்த வில்லன். அதற்காக மூன்று அடி ஆட்களை அனுப்ப ... அவர்களை அந்த மூன்று குழந்தைகளும் சும்மா புரட்டி புரட்டி சும்மா புரட்டி புரட்டி (repeat) எடுக்க... வில்லனின் வீரம் பொங்க ... ஒருவழியாக அந்த குழந்தைகளை கடத்திவிடுகிறான் அந்த வில்லன்.

இதனை அறிந்த FBI அதிகாரி, அவர்களை மீட்ட முயற்சி செய்யும் வேளையில், அந்த தாத்தா வருகிறார். குழந்தைகளை தான் மீடுவருவதாக சொல்கிறார். ஆனால், முதலில் FBI அதிகாரி மறுக்கிறார். பின்னர் ஒப்புகொள்ள...

வில்லன்களை எதிர்த்து மோத தாத்தா ரெடி. வில்லன்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறார். தாத்தா அந்த மூன்று குழந்தைகளையும் காப்பாற்றினாரா ? FBI அதிகாரி என்ன செய்தார் அன்பதனை பிறகு நடந்ததை நல்ல டிவிடி(DVD) மூலம் பார்த்து தெரிந்து கொள்க.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

கேமிராமேனை சும்மா சொல்ல கூடாது... சும்மா சந்து போந்து என்று விளையாடி இருக்கு. நல்ல தரமான பதிவு.

அடிப்படை பயிற்சி செய்ய அந்த மூன்று குழந்தைகளும் படும் பாடு, தன் குருவான தாத்தாவிடம் காரை மறித்து சண்டைஇடும் போதும் அசத்தியிருப்பார்கள்.

தாத்தாவாக நடித்தவரின் நடிப்பும் ஒரு கலையை சொல்லித்தரும் பாங்கும் அழகு. இறுதியில் வீரம் பொங்க அவர் கிளம்பும் போது - நல்ல நடிப்பு.

குழந்தைகளை குறிவைத்து எடுத்த படம் இது. குழந்தைகளை விவேகத்துடனும் வீரத்துடனும் வளர்க்க வேண்டும் அன்ற செய்தியும் ஒன்றினை சொல்லி செல்கிறது இந்த படம்.

3 நிஞ்சா - பெரியவர் முதல் குழந்தைகள் வரை பார்க்க கூடிய காமெடி கலந்த சண்டை படம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



யோகா - கேள்வியும் பதிலும்

யோகா பற்றி பலருக்கும் சில பல சந்தேகங்கள் வருவது இயல்பு. உங்களுக்கும் தோன்றின கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே அணிவகுத்து வருகின்றன. மறக்காமல் கொசுறு செய்தியை வாசித்து செல்லுங்கள்.

1) எந்த வயது முதல் யோகா பழகலாம் ?

ஐந்து வயது முதல் எண்பது வயது வரை யோகா பழகலாம். எந்த வயதிலும் பழக ஆரம்பிக்கலாம். அவரவர் வயதிற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

2) உடற்பயிற்சி தேவையா?

உடற்பயிற்சி தேவைதான். மனிதனுக்கு உணவும் உறக்கமும் தினமும் தேவை. அதுபோல், ஆரோக்கியமாய் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

3) உடற்பயிற்சிகளைவிட யோகா எந்தவிதத்தில் நல்லது?

யோகாவிற்கு நோய்களைக் கட்டுபடுத்தும், தீர்க்கும் சிறப்பு உண்டு. பிற உடற்பயிற்சிகளைத் செய்யப் பலவித உபகரணங்கள் தேவையாக உள்ளன. ஆனால், யோகா செய்வதற்கு, ஒரே ஒரு தரைவிரிப்பு இருந்தால் போதும்; வேறு எதுவும் தேவையில்லை. அதனால் யோகாவை எந்த இடத்திலும் செய்ய முடியும்.

4) யோகா மூலம் எந்தவித வியாதிகளைக் குணப்படுத்த முடியும்?

யோகாவினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும். முறைப்படி செய்யப்படும் யோகாவினால் டாக்டர்கள் கைவிட்ட ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம், யானைக்கால் வியாதி போன்ற பலவித வியாதிகளையும் நமது யோகா ஆசிரியர்கள் குணப்படுத்துவது உலகம் அறிந்த செய்தியாகும்.

5) நீரிழிவு உள்ளவர்கள் எந்தவிதமான பயிற்சியைச் செய்யலாம் ?

தனுராஸனம், யோகமுத்திரை, மத்யேந்த்ராஸனம், சப்த வஜ்ராஸனம், திரிகோணாசனம் செய்துவந்தால் நாளடைவில் வியாதி குணமாகும்.

6) யோகா பயிற்சி செய்யும்போது உணவுக் கட்டுப்பாடு அவசியமா?

உணவில் கட்டுப்பாடு இல்லையென்றால் நோய்கள் அதிகமாகும். உணவு, உயிர் வாழ்வதற்குத்தானே தவிர, உடலைப் பெருக்குவதற்கும், கெடுத்துக் கொள்வதற்கும் அல்ல. இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம், காபி, டீ, குடிப்பழக்கம், சிகரெட் பிடித்தல் முதலியவற்றை முதலில் குறைத்துப் பிறகு அறவே நிறுத்திவிடல் வேண்டும். உணவில் கீரைகள், காய் வகைகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நம்முள் பலர் இப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் உடலைப் பெருக்கவிட்டுவிட்டுப் பிறகு செயல்பட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

7) யோகா செய்வதற்கு ஏற்ற உடை எது?

இறுக்கமான உடைகள் யோகாவிற்கு ஏற்றன அல்ல. யோகாவிற்குப் பெண்கள் சுடிதார், பைஜாமா போன்ற தளர்வான உடைகள் அணிவது நல்லது. காற்று உடலில் படுமாறு அணிய வேண்டும். ஆண்களானால் ‘ஷார்ட்ஸ்’ அணியலாம்.

8)பிரசவ காலத்திற்கு முன்பாக எந்த மாதம்வரை யோகாசனம் செய்யலாம்?

பிரசவம் ஆவதற்கு முன்பாக மூன்று மாதங்கள் இருக்கும்போது யோகாசனத்தை நிறுத்திவிட வேண்டும். பிரசவம் ஆன பிறகு மூன்று மாதம் கழித்து யோகாசனம் செய்யலாம். நேரிடையாகப் பயிற்சி பெறுவது நல்லது.

9) எந்த நேரம் வேண்டுமானலும் யோகா செய்யலாமா?

அதிகாலையில் வெறும் வயிற்றுடன் செய்வது நல்லது. மாலையிலும் செய்யலாம். நடுப்பகல் நேரத்தில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

10) யோகாவைத் தொடர முடியாமல் நடுவில் நிறுத்திவிட்டால் உடல் எடை கூடிவிடுமா?

இதற்கு வாய்ப்பு இருக்கிறது. கூடிய வரை நடுவில் நிறுத்தாமல் இருக்க வேண்டும். அதிக நேரம் செய்ய முடியாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நிமிடமாவது செய்வது நல்லது.

11) புத்தகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றைப் பார்த்து யோகா செய்யலாமா?

முதன் முதலில் நீங்கள் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுவிட்டுப் பிறகு படித்தோ, பார்த்தோ பழகலாம். பழகும்போது மனநிலை ஆசனத்திலேயே இருக்க வேண்டும்.

12) மிகப் பருமனாய் இருப்பவர்கள் உடலை வளைத்துச் செய்ய முடியுமா?

மிகப் பருமனாய் இருப்பவர்களுக்கு எனச் சில குறிப்பிட்ட ஆசனங்கள் இருக்கின்றன. அவர்கள் அவற்றைத் தொடர்ந்து பழகினால் உடல் எடை குறைந்து எளிதாகச் செய்ய முடியும்.

கொசுறு செய்தி :-

நம்ப இலியானா சும்மா வளைந்து நெளிந்து யோகா பண்றத பார்க்கும் போது நானும் யோகா கத்துக்க ஆரமிச்சேன். தொடர்ந்து பல நாட்கள். எனக்கே ஆச்சரியம்..! எப்படி என்னால் இதெல்லாம் முடியுதுன்னு.!!!


இலியானா, இன்றும் என்னை செல்லமாக அடித்தாள். ரசித்தேன். ஒழுங்கா யோகாவை கத்துக்க சொன்னாள். ஏனோ அவள் அடித்த அடி இன்று எனக்கு ரொம்பவே வலித்தது. யோகா கத்துகிறவள் அடித்தாள் இப்படியும் வலிக்குமோனு நினைத்தேன்.

ஏதோ கராத்தே கத்துகிடவள் போல மீண்டும் ஒரு அடி விழுந்தது. என்மீது கோபம் ஏனோ ? என்று கேட்ட நினைத்து திருப்பிய போது விழுந்தேன், படுக்கையில் இருந்து... அருகில் வீடு கூட்டும் 'துடப்பை கட்டை'யுடன் நம்பன் என்னை முறைத்த படி நின்ருந்தான். விழுந்த அடிகள் எல்லாம் இலியானா தந்தது என்று இருந்தேன். But...!?

சிலருக்கு கனவுல தான் யோகா பண்ற மாதிரி இருக்கும் போல. சரிங்க நீங்களும் என்னை மாதிரி கனவுல யோகா செய்யாம நிஜத்துல யோகா பண்ணுங்க. வாழ்க்கைய செழுமையா வச்சுகுங்க.

நன்றி: திரு.இராமநாதன்



எதுவும் நடக்கும் - திரைபட விமர்சனம்

நண்பர் ஒருவர் ஒரு படத்தை எனக்கு தந்து அதை பார்த்துவிட்டு பதிவும் போடா சொன்னார் சில வாரங்களுக்கும் முன்னர். நேற்று இரவு வெகு நேரம் எனக்கு தூக்கம் வரவில்லை. சரி தூக்கம் வரும்வரை எதாவது படம் பார்க்கலாம் என்று நினைத்த போது நண்பர் தந்த எதுவும் நடக்கும் படம் நினைவுக்கு வந்தது. இந்த படம் எப்போ ரிலீஸ் ஆனதுனே தெரியல. அதை தான் இந்த பதிவில் எழுதுகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நிறைவேறாத கனவை கருவாக வைத்து, சமுதாயத்தில் நிராகரிக்கப்படும் ஒரு மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் போது என்ன நடக்கும் என்பதுதான் கதை.


படத்தோட கதை என்னனா ...

சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவு நம்ப ஹீரோ நாகாவுக்கு (கார்த்திக்குமாரு). ஆனால் நிஜத்தில் ஒரு பணக்காரரின் (ராமலிங்கம்) வீட்டு வேலையாள். அவருக்கு வாய்த்த சொர்ணா என்ற மனைவியோ அடிக்கடி சண்டைபோடும் ரகம். இதனால் அவரது கலையுலக கனவு கலைந்து போகிறது. அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் லோக்கல் டிராமா, கூத்து கச்சேரி தான்.

ஒவொரு பௌர்ணமி அன்றும் இவர் வேதகிரி மலையில் இருக்கும் கிருபாஜி சுவாமிகளை சந்தித்து அருள்பெருவது வழக்கம். அதன் போல அன்று வரும் வேளையில் சுவாமிஜிகள் உன்வீட்டில் மரணம் நிகழ இருக்கிறது. என் இங்கு வந்தாய் என்று கேட்கிறார். அங்கிருந்து காரில், தன வீட்டிற்கு விரைந்து வரும்போது ஒரு செல் போன் அழைப்பு...

அமெரிக்காவில் இருந்து நம்ப ஹீரோயினி பூஜா (அபர்ணா நாயர்) வருகிறார் தன் தாத்தா வீட்டிற்கு. வந்ததும் - தாத்தாவை அலைகிறார் - பிறகுதான் அவருக்கு புரிகிறது சுவாமிஜிகள் சொன்னது. ஒருவேளை தன் பேத்தியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் காரில் விரைந்து...

இந்நிலையில், நம்ப ஹீரோ நாகாவை சந்திக்கும் பூஜா அவனது நடிப்பு திறமையை கேலி செய்ய - பிறகு அவளது வருகை குறித்து நாகா கேட்ட - தன் காதலை தாத்தா மூலம் நிறைவேற்ற வேண்டியே இங்கு வந்ததாக சொல்கிறாள்.

அன்று இரவே, இவளுக்கு தனிமை வெறுக்க, நாகவிடம் ஏதேனும் நடிக்க சொல்லி கேட்க - அவனும் நாம் இருவரும் கணவன் - மனைவியாக நடித்து பார்க்கலாம் எனக் கூற, அப்படியே செய்யும் ஹீரோ, ஒரு கட்டத்ததில் பூஜாவை தன் நிஜ மனைவியாக கருதி, அடி - உதையில் இறங்கி, ஏளனம் செய்ததையெல்லாம் சுட்டிக் காட்டி போட்டுத் தள்ள பார்க்கிறார். அப்போது தான் பூஜாவுக்கு ஒரு உண்மை புரிகிறது... இந்த ஹீரோவிடம் மாட்டி ஏற்கெனவே அவன் உண்மையான மனைவி கொலையுண்டு இறந்து கிடக்கும் சமாச்சரம். இந்த ஆபத்தை உணரும் பூஜா, அதில் இருந்து தப்பித்தாரா, இல்லையா? என்பது தான் மீதி கதை.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

வித்தியாசமான கதை களத்தில் திகிலாக காட்சி + ஒரே ஒரு லொகேஷனில் பெரும்பாலான கதையையும், காட்சிகளையும் படம் பிடித்து பயமுறுத்தி இருக்கும் டைரக்டர்கள் கே.மகேஷ்வரன் + ரொஸாரியோ.

சில இடங்களில் டிவி சீரியல் மாதிரியான காட்சிகள். மொத்தமே 6 நபர்களே நடித்து இப்படியோரு படத்தை தருது மிக கடினமே. இருந்தாலும் டைரக்டர்கள் இருவரையும் பாராட்ட வேண்டும். கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும் திகில் படங்களில் இருக்கும் ஒரு வித திகில்தனம் இதில் மிஸ்ஸிங்.

பெர்னார்டு டேவிட்டின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலம்.

இசை சுமார் என்றாலும் அறிமுக படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றா பயன் படுத்திய ராஜ் -அய் பாராட்டலாம்.

யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும், வானம் வசப்படும், பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களில் நடித்த நம்ப ஹீரோ கார்த்திக்குமார் - அப்பாவியாக பழகி சைக்கோவாக மாறுவது எதிர்பாராத திடுக். நல்ல நடிப்பு. சில இடங்களில் நமக்கே சந்தேகம் வரவழைக்கும் நடிப்பு.

நம்ப ஹீரோயினி அபர்ணா, தனுசுடன் "புதுகோட்டையில் இருந்து சரவணன்" படத்தில் நடித்த அபர்ணாவை சில இடங்களில் - முகபாவனையில் நினைவு படுத்தினாலும் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அபர்ணாவின் இயலாமை, தவிப்பு, உயிருக்குப் போராடும் அவலம் எல்லாமே இயல்பாக, தத்ரூபமாக இருக்கு.


எதுவும் நடக்கும்- திகில் பட விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



யோகா - பத்மாசனம்

பெரும்பான்மையோருக்கு அலுவலகங்களில் நாற்காலி மேஜையில் அமர்ந்து செய்யும் வேலையின் காரணமாக கால் முட்டிகளை மடக்கி அமர வாய்ப்பே இல்லை. கால்களுக்கு வலிமை தர கூடிய ஒரு ஆசனம் நமக்கு தேவைபடுகிறது. அதற்காகவே இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது பத்மாசனம் பற்றி தான்.


2. பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை என்று பொருள். ஆசனம் என்றால் இருக்கை என்று அர்த்தம் அதாவது ஒருநிலையில் அசையாமல் இருப்பது. ஆசனத்தை சுகமான இருக்கை என்கிறார் பதஞ்சலி முனிவர்.

இந்த பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

செய்முறை விளக்கம் :-

தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும்.

வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து இடது காலின் தொடை மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு வைக்கவும்.

இதேபோல, இடது காலையும் மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து வலது காலின் தொடையின் மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.

இரண்டு முழங்கால்களும் தரையில் படுமாறும், கால் பாதங்கள் மேற்புறமாக இருக்கும் வண்ணம் அமர வேண்டும். அப்பொழுது முதுகுத் தண்டு நேராக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு அமர்வது சிரம்மாக இருந்தால், சிறிது நேரத்திற்குப் பின்பு, கால்களை மாற்றி மீண்டும் அதே நிலையில் அமரலாம்.

முதுகுத் தண்டு நேராகவும், கைகள் இரண்டும் வணங்கிடும் நிலையிலோ அல்லது முழங்கால்களின் மீது ஒன்றன் மீது ஒன்றாக - உள்ளங்கை மேற்புறமாக இருக்கும் வண்ணம், இரண்டு கைகளும் கால்களின் மீது அமையும் வண்ணமும், காலின் மீது கைகளை வைத்து கட்டை விரலோடு ஆட்காட்டி விரலை தொட்டுக் கொண்டும், மற்ற விரல்களை மேல் நோக்கிய வண்ணமுமாக அமரலாம்.

எச்சரிக்கை :-

சிலர் இந்த ஆசனத்தை செய்யும் போது குனிவார்கள். இது தவறு.

செயல்முறை கண்ணொளி இங்கே (Watch this video) :-



பயன்கள் :-
  • மூளையை அமைதிப்படுத்தும்

  • நன்றாக பசி எடுக்கும்.

  • உடல் முழுவதும் தளர்ந்த நிலைக்கு வரும்

  • முழங்கால்களையும், முட்டிகளையும் நன்கு விரிக்கும்

  • அடி வயிறு, முதுகுத் தண்டு, சிறுநீரகப் பை ஆகியவற்றிற்கு புத்துணர்வு கொடுக்கும்.

  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

கொசுறு செய்தி :-
நம்ப ஷிரேயா அக்கா கூட யோகா செய்யறாங்க. ஆனா சரியா செய்யறாங்களா இல்லையானு நீங்களே சொல்லுங்க. மற்றபடி இந்த படத்துக்கும் யோகாவுக்கும் இருக்கும் 'லிங்கை' நீங்களே பின்னூட்டத்தில் தெளிவா சொல்லுங்க.
இப்படியெல்லாம் யோகா செய்ய வந்தா ... யோகாவையா கத்துக்க முடியும் ...?! அதையும் மீறி அக்காவுக்கு பின்னாடி இருக்கும் அந்த அங்கிள் என்ன செய்யறாரு ?

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி : யோகாலயம்



நடிகர் விஜயும் தேவியும் இணைந்து ...

பதியுலக முன்னால் ஹீரோ விஜய.T.ராஜேந்திரன் அவர்களையே ரேட்டிங்-ல மிஞ்சிய நம்ப புதிய 'பதியுலக ஹீரோ' விஜய் அவர்களை பத்தி எழுதி ரொம்ப நாளாச்சு.

இளைமையான துள்ளல் இசை மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் விஜய் நடித்து வெளிவந்த மூன்று படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

1. 1995-ஆம் ஆண்டு 'புரட்சி புயல்' பேரரசு இயக்கி + (இளைய)தளபதி விஜய்யும், 'லேடி தளபதி' திரிசாவும் நடித்த சூப்பர் ஹிட் படம் திருப்பாச்சி. மாணிக்க விநாயகம் & சுமங்கலி இணைந்து பாடியிருக்கும் ஒரு கலக்கல் பாடல். இந்த படத்துல எனக்கு புடிச்ச ஒரு பாடல்

கட்டு கட்டு கீரைக்கட்டு
புட்டுப்புட்டு ஆஞ்சுப்புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பப்பையா......

2. 1995-ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கிய ஒரு மெல்லிய காதல் கதையில் வடிவேலு பட்டைய கிளப்பி நடித்திருக்கும் படம் தான் சச்சின். விஜய், 'லூசுபெண்' ஜெநெலியா, 'பாம்' பிபாஷா பாசு நடித்து சுமாரா ஓடின இந்த படத்துல அழகான கேமெரா வேலை + விஜய் டிரஸ் + ஸ்னோ எபெக்ட் + தேவி ஸ்ரீ பிரசாத் குரல் என ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.

கண்மூடி திறக்கும்போது
கடவுள் எதிரே வந்தது போலே
என் கண்முன்னாலே அவளே வந்து நின்னாலே

3. அதே சச்சின் படத்துல ஜெஸ்ஸி கிப்ட் , மாலதி இருவரும் பாடிய ஒரு 'பவர்புல் சாங்' இது. டான்ஸ் சும்மா பட்டைய கெளப்பி இருப்பார் நம்ப விஜய்.
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நெண்டு போலே வந்தாயே


4. 2009-ஆம் ஆண்டு 'செட்டப்பு புகழ்' பிரபுதேவா' இயக்கத்தில் விஜய்யும் 'சின்ன வீடு புகழ்' நயன்தாராவும் இருவரும் முதல் முறையாக இணைந்து கொடுத்த மண்ணை கவ்விய பிளாப் பாடல் தான் 'வில்லு'. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓன்று இருக்கு. அதனை பாடகர் சாகர் உருகி பாடியிருக்கும் இந்த பாடலில் மூன்று விஜய் சேர்ந்து நடித்தது போல கலையிருப்பார். பலவிதமான உடைகளில் தோன்றி விஜய் நடந்தே இந்த பாடலை சிறபித்திருப்பார்.

நீ கோபபட்டால்
நானும் போபபடுவேன்

5. அதே வில்லு படத்துல இன்னொரு பாடலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏன்னா அதில் இலக்கிய வரிகள் அதிகமா அமைந்த பாடல். விஜய் சும்மா ரெண்டு பேருடன் போடும் ஆட்டம் பார்க்கிறவங்க அவனைவரையும் ஆட்டம் போடா வைக்கும். இந்த பாடலை பாபா செஹ்கல் பாடியிருப்பார்.
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாரும் இல்லை

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



முன்தினம் பார்த்தேனே - பாடல் விமர்சனம்

புதுமுக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய "முன்தினம் பார்த்தேனே" படத்துக்கு இசை தமன். ஈரம் படத்தின் மூலம் நம்மை மிரட்டியவரும் இவரே. இந்த படத்திற்கு பாடல்களை ரோகினி, விவேகா & பிரியன் என்ற மூன்று கவினர்கள் எழுதியுள்ளனர். இனி பாடலின் விமர்சம் தொடங்குகிறது ...

1. ரஞ்சித் ரசித்து உருகி பாடியிரும் பாடல் இது. உன்னாலே உன்னாலே பட பாடலை நினைவுபடுத்தியது. பிரியன் எழுதிய இந்த பாடல் சூப்பர் ஹிட். முதல் முறை கேட்டும்போதே மனதில் நிலைக்கிறது.
இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதாய் நீயும்
அடைமழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண் உன்கண்ணில் சிக்கி கொண்டேன்
தப்பிக்க தானே நான் மறந்தேன் ஏன் மறந்தேன்...

2. கிரிஷ் & சுசித்ரா இருவரும் இணைந்து பாடிய பாடல் இது. அமைதியா ஆரமித்து பட்டாசாய் இறுதியில் முடிகிறது பாடல். விவேகா எழுதிய பாடல் இது.
பேசும் பூவே பேசும் பூவே
காதல் பேசும் கன்னி தீவே ...

3. பிரியஷர்ஷினி பாடிய மெல்லிசை பாடல். பிரியன் எழுதிய பாடலில் ஒரே கவிதை மயம் தான். இதன் பாடலும் உன்னாலே உன்னாலே படப்பாடலை நினைவு படுத்துகிறது.
மனதின் அடியில் மலை தூறல் - ஓ
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி மழையில் நுழையும்
மெதுவாய் உயிர் கரையில் நிறையும்...

4. நரேஷ் ஐயர் & ஜனனி இணைந்த பாடியிருக்கும் ஜாலியான காதல் பாடல். ரோகினி எழுதிய பாடல் முழுவது பின்னணியில் பல இடங்களில் ஒலிக்கும் "_யா" என்ற வார்த்தை.... மிக அழகு.
மாயா தேவை தயா
மாயா இல்லை நீயா
உன்னினைவாலே சறுக்குது என்னை தகித்தாயே ....

5. ஹரிசரண் & சுசித்ரா இணைந்து பாடியிருக்கும் ஒரு காதல் மலரும் பாடல். ரோகினி எழுதிய பாடல்.
கனவென கனவென விரல் தொடும் கனவென
ரகசிய உறவென ஆனாயே
உன்னை கண்டேனடி மையல் கொண்டேனடி
வேண்டும் என்றேனடி
விழி ஓரங்கேலே பேசும் மௌனக்களே ....

6. தமன் & சுசித்ரா - காதல் பாடல் இது. தமனின் குரலை கேட்டும் போது ரகுமானின் சாயல் நிறைய தெரிகிறது. கலக்கலா இருக்கு பாடல். அந்த விசில் சப்தம் அருமை. பிரியன் எழுதிய இந்த தீம் மியூசிக் பாடல் ஆகவும் இதனை பயன் படுத்தியிருப்பார் போல தெரிகிறது.
சாரல் புது சாரல்
உன் நெஞ்சிலாமல்காதல் காதல் ...

எல்லா பாடல்களும் கேட்டும் படி அமைத்த தமன்னுக்கு என் நன்றிகள். பாடல் வரிகள் புரியும் படியும் வரிகளை அமுக்கிவிடாமல் இசை கோர்வை சேர்த்த இசை அமைப்பாளருக்கு மீண்டும் என்பாராட்டுக்கள்.

இந்த பட பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக: Megaupload அல்லது Rapidshare

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



குட்டி - திரைவிமர்சனம்

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் ஆரியா. அதன் தமிழாக்கம் தான் இந்த குட்டி. உண்மையான காதல் வெற்றிபெறும் என்ற ஒரு வரி கதை தான் படத்தின் கரு. அதன் திரைவிமர்சனம் பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருகிறோம்.



படத்தோட கதை என்னனா ...

ஸ்ரேயா ஒரு கல்லுரி மாணவி. அவளின் அழகில் மயங்கிய பலரும் காதலை சொல்லி தோற்றுவிட, அதே கல்லுரி மாணவன் சமீர். தான் காணும் அழகான பெண்களை விருப்பும் பணக்கார + அரசியல்வாதி ராதாரவியின் மகன். அவனும் அதே கல்லூரியில் படிக்கிறான். ஸ்ரேயாவை கண்டதும் பிடித்துவிடுகிறது. தன் காதலை சொல்ல - அவள் மறுக்க - கல்லுரிமீது ஏறி கீலேவிழுந்துவிடுவேன் என மிரட்டி ஒருவழியாக அவள் சம்மதம் சொல்லு நேரத்தில் -



நம்ப ஹீரோ தனுஷ் என்ட்ரி. தனுஷுக்கும் இவளை பார்த்ததும் பிடித்துவிடுகிறது. இவள் சமீர்-இன் காதலி என்று தெரிந்தும் விடாமல் அவளிடம் தன் காதலை வித்தியாசமான முறையில் தினமும் சொல்லிவர - ஒரு கட்டத்தில், இவனின் செயலை பார்த்து சமீர் கோபம் வந்து தன் தந்தையின் உதவியை நாட - வின்சென்ட் செல்வா மூலம் தனுசை அடித்து போட்டுவிட்டு செல்கிறான்.

பிழைத்து வந்து மீண்டும் தன் காதலை வெளிபடுத்த, சமீரிடம் "இருவரும் அவளை காதலிக்கிறோம். அவளுக்கு யார்மீதான காதல் உண்மையானதா இருக்கோ அவர்களுக்கு அவள் கிடைப்பாள்" என்று சொல்லிவிட்டு செல்கிறான். இருந்தும் பல நேரங்களின் சமீர் தோற்கிறான். அதனால் ஆவேசப்படும் அவன், ஒரு புகைபடம்மூலம் ஷிரேயா மனதில் தனுஷ் பற்றிய எண்ணம் மாறுகிறது.

ஒருநாள், அமீர் தன் தந்தையிடம் சிரேயாவை அறிமுகம் செய்துவைத்து தன் காதல் பற்றியும் அவரிடம் சொல்ல, அவர் மறுக்க - வீட்டு காவலில் சமீர். தனுஷ் சமீரை அங்கிருந்து வெளிக்கொண்டுவந்து - அவர்களை வின்சென்ட் ஆட்கள் தொரத்த - ஷிரேயாவுடன் மூவரும் ரயில் மூலம் தப்பித்து வந்து தனுஷின் சொந்த ஊருக்கு வர -

அடுத்தநாள், சமீர் இவளிடம் சொல்லாமல் சென்றுவிட - தனுஷின் நிலைமையை - அவனின் உதவியை - காதலை உணர ஆரம்பிக்கிறாள். அதனை சொல்லு நேரத்தில், சமீர் தன் தந்தை சம்மதத்துடன் அவளை திருமணம்செய்ய அழைக்க - குழம்பிய நிலையில் சிரேயா அவர்களுடன் செல்கிறாள். பிறகு ஷிரேயா சமீர் திருமணம் எப்படி நடக்குது ? தனுசின் நிலை என்ன ?மீதியை வெண்திரையில் காண்க.



படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

கேமெரா மிக அழகா படம் பிடித்திருக்கு. சபாஸ். பாலு சார்.

ஜவகர் - தன் முந்தைய 'யாரடி நீ மோகினி' படத்தில் வைத்த அதே போர்முலாவை தான் பயன்படுத்தி இயக்கிருக்கார். முதல் பாதி ஓகே ராகம் + டைமிங் காமெடி படத்துக்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதி இழுவை.

தனுசின் நடிப்பு அருமை. சில இடங்களின் தன்னையே தாழ்த்தி பேசி நடித்திருக்கிறார். வழக்கமான அறிமுக பாடலை தவிர்த்திருக்கலாம். படத்தில் ஒட்டவில்லை. இறுதி காட்சிகளால் இவரின் நடிப்பு அருமை.

சிரேயாவின் தோழியாக வரும் மேக்னா நாயுடு சும்மா கும்முன்னு இருங்காங்க. பேசாமல் இவளை ஹீரோயினா போட்டிருக்கலாம்.

இசை : தேவி ஸ்ரீ பிரசாத் - சச்சின் படத்தில் இடம்பெற்ற அதே பின்னணி இசை பட இடங்களில் ...+ ஏற்கனவே கேட்ட மேட்டில் பாடல் என்பதால் அவை சுமார் ராகம். "கண்ணு ரெண்டும் ரங்கா... " & "யாரோ என நெஞ்சை ..." என்ற இரு பாடல் முனுமுனுக்கும் ரகம்.



சிரேயா - டயலாக் கொஞ்சம் கம்மி தான். அவளின் முகபாவனை அருமை. கொஞ்சம் அழகாக தன் தெரியறாங்க. இவளின் டிரஸ் + மேகப் ஒரு பிளஸ் பாயிண்ட்.

மயில்சாமி + ஆர்த்தி பங்கு அருமை.

குட்டி - கல்லூரி காதல். ஒருமுறை பார்க்கலாம் முடிந்தால்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



பொங்கல் நன்னாளில் ...

நகரத்து இயந்திரங்களோடு ஒன்றிநாமும் இயந்திரமாகி விட்டாலும்
மஞ்சள் சரடு சுற்றிய மண்பாநையும்
சாணம் தெளித்து கோலமிட்ட
மண்தரையும் மங்கலம் நிறைந்த
மஞ்சள் குலையும் வீடும்
வீதியுமாய் அலங்கரித்த தோரணமும்
குமரிகளும் கிழவிகளும் போடும்
கும்மாளமும் வாசலில் வைத்த காய்
கனியும் "பொங்கலோ பொங்கல்"
என்ற மகிழ்ச்சிக்குரலும்
கேட்காமல் இருந்தாலும்
கேஸ் அடுப்பிலாவது
பொங்கல் வைத்து வாழும்
தமிழனாகி விட்டோம் என்றாலும்
இன்னும் கிராமங்களிலாவது பொங்கல்
பொங்கும் ஓசை கேட்கிறதே
அது வரையில் சந்தோஷம் தான்

நீ சூரியனுக்கு பொங்கல் வைத்தாய்
நிலவு ஏங்கிக் கொண்டிருக்கிறது!
கரும்பும்
சக்கரை பொங்கலும்
எதற்கு ?
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டு
போதும்!
உன் பார்வைகாகத்தான்
வழுக்கு மரத்தில் ஏறினேன்.
நீ பார்த்த பார்வையில்
வழுக்கி விழுந்தேன்!
கோல போட்டியில்
உனக்குத்தான் முதல் பரிசா?
உன்னை வரைத்த
உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்?

கோலங்கள் இல்லாத தமிழர் இல்லமா?. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளில் விதவிதமான கோலமிட்டு,அறுவடைத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.
உங்களுக்காக என் அலுவலகத்தில் வரையப்பட்ட கோலம் ....


என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

படம், கவிதை தேடி தந்த நண்பர்களுக்கு நன்றிகள் !!!



How to Keep Teeth White Naturally

How to Keep Teeth White Naturally

There are many effective methods of teeth whitening available, but some come with heavy price tags. Here are some steps you can take at home to whiten teeth naturally without breaking the bank.
Things You’ll Need:
  • Straw
  • Toothbrush
  • Lemon Juice
  • Salt
  • Baking soda
  • Hydrogen peroxide
  • Strawberries


Step 1:
Limit your consumption of drinks that stain tooth enamel. A few of these include coffee, tea and red wine. If you simply can't cut back on these beverages, consider drinking them though a straw to limit the amount of liquid that actually comes in contact with teeth.

Step 2:
Brush your teeth immediately after eating, especially if eating foods that stain easily, such as berries.

Step 3:
Rub raw strawberries on your teeth, preferably pureed. There is an enzyme in strawberries that acts as a whitening agent. You'll want to brush and rinse after applying the strawberries to remove the natural sugars and acids they may leave behind.

Step 4:
Eat crunchy foods that require a lot of chewing such as carrots, celery, broccoli and apples. These foods are abrasive and will remove built up plaque, which dulls the appearance of teeth.

Step 5:
Dip your toothbrush directly into baking soda and brush. The results are worth the lousy taste.

Step 6:
Combine lemon juice and one teaspoon of salt to make a paste-like substance. Brush your teeth and rinse. Again, not so pleasant on the palate, but your teeth will thank you.

Step 7:
Use hydrogen peroxide to brush your teeth. Dip your toothbrush into a small capful of the peroxide and brush as you would with regular toothpaste, being careful not to swallow. Rinse with water.


Tips :
  • Consider using one of the several whitening toothpastes on the market that have all-natural ingredients.

  • Brushing after every meal and flossing regularly are the first steps in maintaining a healthy smile.

Hope it would be useful. 'A thanks' would be nice.

Thanks : funonthenet



கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன்

செல் போன் புரட்சி செய்துகொண்டிருக்கும் இந்நாளில் தினமும் புதிய புதிய செல் போன் மடல்கள் + அதன் வசதிகள் என நாளொரு மடல் வெளிவந்துகொண்டிருகிறது. அந்த வகையில் இன்று கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன் பற்றி ஒரு அறிமுகம்.
ஏ தோழா
அடி கோக்க கோலா ....
இது விஜய் நடித்து வெளிவந்த கோக்க கோலா விளம்பரம்.

நம்ப ஊரு பயலுங்க ஸ்டைலா அத வங்கி குடித்துகொண்டிருகோம். ஆனா, சீனாவில் அதனை கொண்டு செல் போன் இயக்கம் வகையில் ஒரு செல் போன் கண்டுபிடுத்திருபது வியப்பான செய்தி தான்.

லித்தியம் பேட்டரிகள் மூலம் இயங்கும் செல் போன் னுக்கு பதிலாக இந்த கோக்க கோலாவை கொண்டு இயங்கும் படி வடிவமைத்தது இப்போதிய புதிய கண்டுபிடிப்பு. லித்தியம் பேட்டரிகள் அதிக விலை என்பதால் இந்த கோக் வகை மாடல் அதிக வரவேற்ப்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன் பற்றிய செய்திகளை அறிய இங்கே தொடுக்க.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



யோகா - வஜ்ராசனம்

உட்கார்ந்து எழுந்து, கையை காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா. யோகாவில் பல நிலைகள் இருகின்றன. அவைகள் ...
  • யாமா (விதிகள் / வரையறைகள்)
  • நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
  • ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
  • ப்ராணாயமா (மூச்சுப்பயிற்ச்சி)
  • ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
  • தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
  • தியானா (தியானம்)
  • சாமாதி (தீர்வு)

இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது வஜ்ராசனம் பற்றி தான்.

1. வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள். பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து, பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும். இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம். அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும். நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது.

செய்முறை விளக்கம் :
  1. முதலில் இடது முழங்கை முட்டியையும், பிறகு வலது முழங்கை முட்டியையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக பின் பக்கத் தரையில் வைக்கவும்.

  2. மெதுவாக உடலை பின் பக்கமாகச் சாய்த்து - முதுகையும், பிறகு தலையையும் தரையில் வைக்கவும். கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நேராக வைக்கவும்.

  3. தோள்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையிலும், முழங்கால் முட்டிகள் இரண்டும் அருகருகே சேர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். புதிதாகத் துவக்குபவர்கள் கைகள் இரண்டையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளலாம்.

  4. இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்றதும், இரண்டு கைகளையும் மேல் நோக்கி மடக்கி - கத்தரிக்கோல் போன்ற நிலையில் தோளுக்குக் கீழ் - வைத்துக்கொள்ளவும்.

  5. வலது கை இடது தோளுக்குக் கீழும், இடது கை வலது தோளுக்குக் கீழும், மடங்கிய கைகளுக்கு இடையில் தலை இருக்குமாறும் நிலைகொள்ள வேண்டும்.

  6. பழைய நிலைக்குத் திரும்ப முதலில் கைகள் இரண்டையும் ஒவ்வொன்றாக எடுத்து, உடலின் பக்கவாட்டிற்கு கொண்டு வந்தப் பிறகு, ஆரம்பத்தில் செய்த்தைப் போல முழங்கைகளால் ஊன்றிக் கொண்டு வஜ்ராசன நிலைக்கு வரவும்.

எச்சரிக்கை :

உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

செயல்முறை கண்ணொளி இங்கே(Watch this video)



பயன்கள்:

இந்த ஆசனத்தில் மலச்சிக்கல் எத்தனை வருட பிரச்சனைகளாக இருந்தாலும் குட்பை சொல்லி சென்று விடும். தொந்தி. தொப்பை. பெருவயிறு போய்விடும். பேதி மாத்திரை சாப்பிட்டு மலம் போகவில்லை என்றால் கூட இந்த வஜ்ராசனத்தை செய்து பாருங்கள் பிறகு நீகளே மற்றவர்களுக்கு இதன் தன்மை பற்றி சொல்வீர்கள்.


இஸ்லாமியர்கள் இரவு 12 மணிக்கு பிரியாணி சாப்பிட்டால் கூட காலை ஜீரணமாகி விடுகிறது. இஸ்லாமியர்கள் அவர்களை அறியாமலேயே ஐந்து வேளை தொழுகை செய்யும் போது இயற்கையாகவே ஜீரண உறுப்புகள் வலிமை அடைந்து விடுகின்றன. எவ்வளவு ஹெவியாக கடினமான சாப்பாட்டை சாப்பிட்டாலும் ஜீரணிக்கப்பட்டுவிடுகிறது.

சிலர் சைவ சாப்பாடு வெறும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விட்டு வயிறு சரியில்லை(?!). வயிறு மந்தம். வயிறு உப்புசமாக இருக்கிறது என்பார்கள். ஏன்னா இவர்கள் இந்த யோகாசன நிலையை செய்வதில்லை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



ஹனி (HONEY) - ஹாலிவுட் படவிமர்சனம்

'பெண்டச்டிக் போர்', 'குட் லக் சக்' போன்ற பல படங்களிலும் நடித்தவர் ஜெஸ்ஸிகா அல்பா (Jessica Alba). அமெரிக்கா டிவி சீரியலில் நடித்த இவர் ஹாலிவுட்திரைப்படத்தில் முதல் முறையாக நடித்த படம் ஹனி(HONEY) (HONEY). நான்கு 'டீன் சாய்ஸ் அவார்ட்ஸ்' விருதுகளை 2003ல் அள்ளிய இந்த படத்தை பற்றிதான் இன்றைய விமர்சனம் அல்லது அறிமுகம்.

படத்தோட கதை என்னனா ...

தன் தாயார் நடத்து டான்ஸ் கிளப்பில் இளைனர்களுக்கு டான்ஸ் சொல்லித்தரும் டீச்சர் நாயகி ஹனி டேனியல்ஸ் (Jessica Alba). தனக்கு டான்சில் பல திறமைகள் இருந்தும் ஜெயிக்கமுடியாமல் பகுதி நேர வேலையாக ஷாப், பார்-ளையும் வேலைசெய்கிறார்.

ஒரு நாள், பார்லில் வேலை முடித்துவிடு திரும்பும் போது, இவளுக்கு பிடித்த ஹிப்பாப் (hip pop)டான்ஸ் ஆட, அதனை ஒருவன் படம் பிடிக்க, அந்த பாரில் அன்று ஆடவேண்டியவள் இவளிடம் சண்டை இட ஒருவழியாக பாரைவிட்டு வெளியே வருகிறாள். பென்னி & ரெமென்ட் இருவரும் சகோதர்கள். இவர்களின் டான்ஸ் பார்த்து வியந்துபோகிறாள் ஹனி. தனது டான்ஸ் கிளப் வந்து டான்ஸ் கற்றுக்கொள்ள அலைகிறாள். இவளை தங்கள் சகோதரி போல பாவிகிறார்கள் இருவரும்.

மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பிரபல டைரக்டர், ஹனி ஆடிய டான்சை பார்த்து இவளுக்கு வாய்ப்பு தருகிறார். வித்தியாசமான டான்சை எதிர்பார்க்கும் டைரக்டர் மைகேல் எல்லிஸ் (David Moscow) இவளிடம் வேறு சில புதிய டான்சை எதிர்பார்க்க, சட்டென்று இவளுக்கு தன் நண்பன் 'சாஸ்'(Mekhi Phifer) நினைவு வர, அவனது கூடைபந்து விளையாட்டில் அவனின் அணுகு முறையை வைத்து டான்ஸ் அமைகிறாள். வீடியோ ஆல்பம் சூப்பர் ஹிட்.

ரேமன்ட் அவனது சகோதரனின் நடன அசைவுகள் சிலவற்றை இவளது நடத்தில் பயன்படுத்தி அல்பங்களை செய்கிறாள். தனது டான்ஸ் கிளப்பில் இருக்கும் சிறுவர்களை அடுத்த அல்பத்தில் பயன் படுத்த முயற்சி எடுக்கிறாள்.

டைரக்டர் ஓகே சொல்ல சந்தோசத்தில் தன் பெற்றோரிடம் தன் டான்ஸ் கிளப்பை பெரிய அவளவு பிரபலபடுத்த நினைப்பதை தெரிவிக்கிறாள். அதற்காக ஒரு இடமும் பார்த்து வைதிருபதாக சொல்ல, அதனை வாங்க இவளிடம் போதிய பணம் இல்லை. ஆல்பம் மூலம் வரும் பணத்தைகொன்டு அந்த இடத்தை வாங்க பிளான் பண்ணுகிறாள்.

ஒரு நாள், டைரக்டர் இவளை அழைத்து கொண்டு ஒரு பாட்டிக்கு போகிறார். அங்கே இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்க - மோதல் - சமாதானம். அதன் பின்னர் இவளின் நடன அசைவுகள் இவனுக்கு பிக்காமல் போகிறது. இவளை தனது அல்பத்திலிருந்து வெளியேற்ற, தன் மாணவர்களுடன் ஏமாற்றத்துடன் திருப்புகிறாள்.

இவளின் புதிய கட்டிட ஆசை நிறைவேற்ற, புதிதாக ஒரு டான்ஸ் ஷோ ஒன்றை தயாரிக்கிறாள். அதனை அவளது நண்பனுடன் தனக்கு தெரிந்த படி விளம்பரபடுத்தி வருகிறாள். இந்நிலையில், அவளின் ஷோ நடந்துதா..? அந்த இடத்தை அவள் வாங்கினாளா ? டைரக்டர் என்ன ஆனார்? என்பது தான் மீதி கதை.

ஒரு கட்டத்தில், ஹனி தன் கண்ணில் காண்பதை டான்சாக வடிவமைக்கும் இடம் சபாஸ். இவளின் டான்ஸ் + அசைவுகள் அட அட...நம்மையும் டான்ஸ் ஆட வைக்கிறாள். ரப்பர் போல வளைந்து ஆடும் போது நானும் சேந்து ஆடுகிறோம்.

ரேமன்ட் பற்றி சொல்லியே ஆக(ட) வேண்டும். குட்டி பயல் சும்மா பின்னிஎடுத்திருப்பான் நடிப்பிலும் டான்சிலும்.

ஹனி இருந்த இடத்தில் புதிதாக வந்தவளிடம் அந்த டைரக்டர் ரும் தயாரிப்பாளரும் சந்திக்கும் இடம் சிரிப்பலை.

பின்னணி இசையும் கேமிராவும் டான்சர் உடனே பயணிக்கும் அற்புதம் இங்கே நீங்கள் பார்க்கலாம். இசை ஆல்பம் தயாரிக்கும்போது நடக்கும் சில விசயங்களையும் நீங்கள்அறியலாம்.

ஹனி படத்தின் ட்ரைலர் / கண்ணொளி இங்கே.

HONEY - டான்ஸ் பிரியர்கள் பார்க்கவேண்டிய படம் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



கோவா - திரைப்படபாடல் விமர்சனம்

கோவா. பேர கேட்டாவே சட்டுன்னு நம்ப மனசுல வருவது கண்ணுக்கு குளுற்சியா தெரியும் அதன் கடற்கரை அழகும் துள்ளி திரியும் பட்டாம்பூச்சி பெண்களும் அவர்களின் கிளுகிளுப்பும் தான். அந்த இடத்துல நம்ப சென்னை-28 பசங்க போயிசேர்ந்தால் எப்படி இருக்கும்... இரே கூத்தும் கும்மாளமும் தான்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட்பிரபு இயக்கிய "கோவா" திரைப்பட பாடல்களை நேற்று கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பற்றி தான் இந்த பதிவு.



1. பண்ணபுரம். ஒரு அழகான ஊரு. புழுதி மனமும் தெய்வீக மனம் வீசும் வெகுளி தனமான மக்களின் திருவிழா நேரத்தில் சந்தோஷ நிமிடங்களில் நம்ப ஹீரோ குடும்பம் பாடும் பாடல் இது.

இளையராஜா இசை குடுபத்தின் இசை வாரிசுகள் சேர்ந்து பாடி கலக்கியிருக்கும் ஒரு பாடல் தான் பின்னே வருவது. 90-களில் வந்த இளையராஜா பாடலை நினைவு படுத்துவது தவிற்க்க முடியா... பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரிணி, ப்ரேம்கி அமரன், யுவன் ஷங்கர் ராஜா.
ஏழேழு தலை முறைக்கும்
எங்க சாமி பக்கபலம் எடுத்து வந்தோம் ...

2. ராஜா பாடல் : இளையராஜா பாடும் மென்மையான சோககீதம் வாசிக்கும் பாடல் இது
ஒத்துமையா வாழ்ந்தா உறுத்தும் நாலுபேருக்கு
உருக்குளன்சு பார்த்தா அப்ப சந்தோசம் தான் ஊருக்கு

3. திருவிழா பாடல் : திருவிழா நேரத்தில் நண்பர்கள் சேர்ந்தால் திருவிழா கலை கட்டும். S.B.P.சரணும் யுகேந்திரனும் இணைந்து பாடிய கிராமத்து மனம் கமழும் திருவிழா பாடல்.
அடிடா நையாண்டிய தெற்கு திசை அதிர
எக்குதிசை உயர ஊரு ...

4. காதல் பாடல் : தன் காதல் நினைவுகளை விவரிக்கும் பாடல் இது. பாடியவர்கள் : அஜீஸ் & ஆண்ட்ரியா
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது ...

5.கவர்ச்சி பாடல் : பீச் + இளமை + கவர்ச்சி ததும்பும் பாடல் இது. பாடியவர்கள் : கிருஷ், ரஞ்சித், தன்வி, சுசித்ரா, சயனக் ஷோவ்டிமே, பாவ் புண்டி
கோவா அழகை ரசி
ஆகா பூசி ...

6. நட்பு பாடல் : மூன்று நண்பர்கள் பாடும் பாடல் போல இருக்கு. இளையராஜா, SBP, சித்ரா பாடிய அந்த பாடல் வரிகள் இதோ
வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி ....

7. யுவா பாடல் : யுவாவின் தனி முத்திரை பாடல் இது. மெல்லிய சோக பாடல்.
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது...

8. ஊடல் பாடல் : பென்னி + மம்தா இணைந்து பாடிய பாடல்.
இடை வழி ஒருமோதல் செய்
இடை வழி ஒரு ஊடல் செய்...

9. ரீமிக்ஸ் பாடல் :
கோவா கடற்கரையின் அழகிய வனப்பை காட்டும் போது ஒளிக்கும் பாடல் போல இருக்கு.
டூபிஸ் எல்லாம் தம்மடிக்கிற ஊர்தானே கோவா
டூபிஸ் எல்லாம் சுவிம்அடிக்கிற ஊர்தானே கோவா

பாடல் கேட்டும் போது சில பாடல்கள் கிராமத்து சூழலும் கோவாவின் அழகையும் பிரதிபளிபதாகவே அமைந்துள்ளது. முதல் முறை கேட்கும் போதே பாடல்கள் மனசுல நிக்குது.

ஆகா மொத்தம் இளையராஜா குடுபத்தில் கங்கை அமரன் மட்டும் இந்த "கோவா" படத்தில் பாடாதவர். ராஜா குடும்பமே சேர்ந்து பாடி கலக்கியிருக்காங்க.

"கோவா" பாடல் வெற்றி போலவே படமும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

பாடல்களை பதிவிறக்கம் செய்ய : Download

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



After enter the car ... - a shock report

Open the windows after you enter your car.


In brief, the above article says: According to research done by a U.C., the car dashboard, sofa, air freshener will emit Benzene, a cancer causing toxin (carcinogen). In addition to causing cancer, it poisons your bones, causes anemia, and reduces white blood cells. Prolonged exposure will cause Leukemia, increasing the risk of cancer. May also cause miscarriage.

Acceptable Benezene level indoors is 50 mg per sq. ft. A car parked indoors with the windows closed will contain 400-800 mg of Benezene. If parked outdoors under the sun at a temperature above 60 degrees F, the Benezene level goes up to 2000-4000 mg, 40 times the acceptable level. The people inside the car will inevitably inhale an excess amount of the toxin.


It is recommended that you open the windows and door to give time for the interior to air out before you enter. Benzene is a toxin that affects your kidney and liver, and is difficult for your body to expel.

No wonder more folks are dying from cancer than ever before. We wonder where this stuff comes from but here is an example that explains a lot of the cancer causing incidents. Hmmm. Many people are in their cars first thing in the morning and the last thing at night, 7 days a week. As I read this, it makes me feel guilty and ill.

Please pass this on to as many people as possible. Guess its not too late to make some changes

For more information, touch here."

Thought:
"When someone shares something of value with you and you benefit from it, you have a moral obligation to share it with others." - Chinese Proverb.

Note : No relaship between Nayarathara and this topic.

Special Thanks : Kavi, ML who shared this via mail.

If you like this post, 'A thanks' would be nice!



யோகா என்றால் என்ன?

இன்றைய நவீன கணினி (Computer) யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் 8-லிருந்து 10-மணி வரை ஆபீசில் பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக 10 - 14 மணிநேரம் செலவு செய்கிறோம். இந்த நேரத்தில் மூளைக்கு அதிக வேலை கொடுக்கவேண்டியுள்ளது.

ஒரு வழியாக ஆபீஸ் வேலைகளை முடித்து வீடு திருப்பும் போது வீட்டு பிரச்சனைகள் தொடர்கிறது. ஆபீஸ் + வீட்டு பிரச்சனைகள் எல்லாம் சேரும்போது மனது படும் பாடு இருக்கே அது சொல்லி தீராது.



இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு 10 - 15 நிமிடங்கள் ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது. எனக்கு அடிக்கடி முதுகு வலி வருவது உண்டு. மாத்திரை மருந்துகளுக்கு கட்டுபடாத இந்த வலி, சிறிய யோகா மூலம் நிவர்த்தியானது, உண்மை.

இதன் மீது ஈர்ப்பு வந்து தொடர்ந்து யோகா பற்றி - புத்தகம், செய்திதாள்களில் படித்தும், அறிந்து வருகிறேன். 'நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்ற கூற்றுப்படி யோகா பற்றி அதன் பயிற்சி பற்றி வார வாரம் இனி பார்ப்போம்.

யோகா எ‌ன்றா‌ல் ஏதோ நம‌க்கெ‌ல்லா‌ம் வராது, அத‌‌ற்கெ‌ல்லா‌ம் நேரம் என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும் தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் ஒரு செயல் அல்ல. நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.


யோகா என்றால் என்ன?

"யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது. யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள்.

யோகா (Yoga) என்பது உடலின் அனைத்து பாகங்களையும் ஓவர் ஆயிலிங் (over oil) செய்வதுதான். ஜீரணமண்டலம், ரத்த ஓட்ட மண்டலாம், சுவாச மண்டலம், தசை மண்டலம், கழிவு மண்டலம், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இன்னும் பல.., மண்டலங்களையும் + சுரப்பிகளையும் + 72000 நாடி நரம்புகளையும் உடலின் அனைத்து உறுப்புகளையும் இயங்க செய்வது தான் யோகா.

அழகான உடலும் அமைதியான உள்ளமும் அளித்திடும் யோகாசனம்

யோகாசனப் பயிற்சிகளும், 'மெடிட்டேஷன்' (Meditation) எனப்படும் ஆழ்நிலை தியானமும் மனத்தை மட்டும் அமைதிப்படுத்துவதோடல்லாமல் உடலழகையும் பாதுகாக்கின்றன. அவை உடலின் உள்ளுறுப்புகளையும் பலப்படுத்திச் சரிவர இயக்குகின்றன. உடலும் மனமும் என்றும் இளமையோடும் இருக்கவும் முடிகிறது.

கொசுறு செய்தி:
சில வருஷங்களுக்கு முன்னால், தெலுகு நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் வயதான, சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். அவரது அழகில் மயக்கிய நடிகர், அவர் நடித்த 'சூப்பர்'(Super) படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நம்ப அழகிய வேட்டைகாரி 'அனுஷ்கா'.


இனி அடுத்த வாரம்...

யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா ?

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top