இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ஆக்ரோஷமான கதாநாயகன், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே படத்தில் ஒரு கதாநாயகி என இருந்த தமிழ் சினிமாவின் போக்கு சமீப காலமாக சற்று அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது.

வழக்கமான கதை, கதைக்களம், காட்சிகளை மறுத்து புது ரூட்டில் பயணிக்கும் இளைஞர்களை தமிழ் சினிமாவில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களின் படங்கள் மிக சொற்பம்தான். அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் சூதுகவ்வும், யாருடா மகேஷ் படங்கள் தயாராகியுள்ளன. அதே ப்ளேவரில் தயாராகும் இன்னொரு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். "சூது கவ்வும்" வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் 'ரௌத்திரம்' இயக்குனர் கோகுல் இயக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா".

நம் அன்றாட வாழ்வில் நிகழும் நகைச்சுவையின் பின் பலம் அதைவிட நகைச்சுவையானது. அதை முழு நீள நகைச்சுவையாக முன்னெடுக்கிறது இப்படம் என்றார் கோகுல்.

விஜய் சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார்.

'சுமார் மூஞ்சி குமார்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கும் பசுபதியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதாம்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைக்கிறார். நடனம் ராஜூசுந்தரம். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.



சென்னையின் இதயப்பகுதியான ஜெமினி பாலத்தின் கீழே, குதிரை பந்தயத்தை தமிழகத்தில் ஒழித்ததன் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் குதிரை சிலையில் நாயகன் ஹாயாக படுத்திருப்பது போன்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கே புன்னகையை வரவழைக்கிறது.

பாதி ஊரை கையாலே காலி செய்யும் சூப்பர் ஹீரோக்களுக்கு நடுவில் இப்படிப்பட்ட படங்கள் அமைந்தால் அது ஆரோக்கியமானதாக அமையும் என்பதே எனது(பலரின்) கருத்து.

இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி

இந்தப் படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களில் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது இந்த டிரைலர்.

இரண்டு நாட்களில் இத்தனை ஹிட்ஸ்களை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டிரைலர் அள்ளியிருபபது குறித்த செய்தியைக் கேட்ட விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம். இவரது படங்களில் இரண்டே நாளில் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்ட டிரைலர் இதுதான் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணமாம்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

இப்படத்தின் First Look Poster-களே வித்தியாசமாக இருந்த நேரத்தில், படத்தின் Teaser மற்றும் Pray Song வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது.



Pray Song பாடல் வரிகள்:

ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டுப் போயிட்டா
அந்தப் பொண்ண வெறுப்பு ஏத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் PRAY பண்ணுங்கடா
அவ PARENTSக்காக PRAY பண்ணுங்க
ஏன், அவ புருஷன், புள்ளக்குட்டிங்களுக்கும் சேர்த்தே PRAY பண்ணுங்கடா… PRAY பண்ணுங்க…

ஏய் பொண்ணே உனக்காகத்தான்… தினம் PRAY பண்ணுவேன்…
ஓம் ஸ்வாகா, மாகா, உங்கக்கா மக்கா...
பொண்ணே உனக்காகத்தான் தினம் PRAY பண்ணுவேன்…

உன் செல்போனுல பேலன்ஸ் மறைஞ்சுடும்டி...
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நிறைஞ்சிடும்டி...
உன் ஏடிஎம் கார்ட் இரண்டும் தொலைஞ்சிடும்டி...
அது கிடைச்சாலும் PIN NUMBER மறந்திட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

காலேஜ் பசங்கல்லாம் AUNTYன்னு அழைக்க வேண்டி PRAY பண்ணுவேன்...
DRAINAGE குழில நீ விழுந்து குளிக்க தோண்டி PRAY பண்ணுவேன்...
தூங்கப் போனா தூங்க முடியாமத்தான் கொசு புடுங்கிட PRAY பண்ணுவேன்...
அதையும் மீறி நீயும் தூங்கப் போனா, பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

உன் பெஸ்ட் FRIENDக்கு அழகான புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
வழுக்கைத் தலயோட உனக்கொரு புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துப் போட நான் சத்தியமா PRAY பண்ணுவேன்...
அந்தப் பத்தும் லவ் பண்ணாமலே என்னைப் போல மாப்பிள்ளைய நீயும் தேட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… அங்கு PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

நீ BIKEல போனா போலீஸ் நிறுத்தணும்டி...
நீ ஜாகிங் போனா நாய் துரத்துணும்டி...
உன் GIRL FRIENDS எல்லாம் பேயா மாறணும்டி...
உன் BOY FRIENDS எல்லாம் GAY-ஆ மாறத்தான் PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : Yarlminnal



ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க...

இந்தியாவில் 50 ஆண்டில் 220 மொழிகள் அழிவு - :(

மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர்.


இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் மொழி ஆய்வு மற்றும் பதிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் இந்தியா முழுவதும் உள்ள மொழிகள் குறித்து ஆய்வு நடத்தியது. எழுத்தாளர் கணேஷ் தேவி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் மொழி குறித்த ஆய்வு என்ற பெயரில் இது நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளரும், திட்ட தலைவருமான கணேஷ் தேவி கூறுகையில், இந்தியா முழுவதும் எங்கள் ஆய்வு மூலமாக 780 மொழிகளை கண்டுபிடித்தோம். அவற்றில் 100க்கும் மேற்பட்டவை அழியும் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அழிந்து போன மொழிகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் மொழிகள் குறித்த எங்கள் ஆய்வில் கிட்டத்தட்ட 880 மொழிகள் இந்தியா முழுவதும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அவற்றில் பல மொழிகள் மறைந்துவிட்டன. 1961ம் ஆண்டு 1,652 மொழிகள் இருந்ததாக பதிவாகி உள்ளது. பின்னர் அது 1,100 ஆக குறைந்துள்ளது.

1971 கணக்கெடுப்பின் போது 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் மொழிகள் 108 இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன என்றார்.

தமிழ் மொழி இறக்குமா...?


தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.


உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து) தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம் தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்! வருங்கால சந்ததியினருக்கு உதவி செய்வோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தலைவா-வில் இவ்வளவு விஷயம் இருக்கா...!!!

விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'தலைவா' படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளன திரையரங்குகள்.

விஜய்யையும் அவர் தந்தையையும் முதல்வர் சந்திக்க மறுத்த தகவல் வெளியான பிறகு இந்தக் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வேறு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் 'தலைவா' படம் ரிலீஸ் ஆக உள்ள அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்துல...?


வெயிட்... 20 விஷயங்கள் இருக்கு. வரிசையா ஒவ்வொன்ன சொல்றேன் கேட்டுக்கோ...
  1. சிரிக்க வைக்க சந்தானம் இருக்கும் போது கவலை எதுக்கு பாஸ்.

  2. 'மதராசப்பட்டணம்' ஏ.எல்.விஜயுடன் விஜய் இணையும் முதல் படம்.

  3. தலைவாவை தயா‌ரித்திருக்கும் மிஸ்‌ரி புரொடக்சன் சந்திரப்பிரகாஷ் ஜெயின் பைனான்சியர். இவர் கடைசியாக தயாரித்த படம் சத்தியராஜ்-குஷ்பு நடித்த 'ரிக்சா மாமா'. அதன் பிறகு படமே தயா‌ரிக்காமல் இருந்தவருக்கு விஜய் படம் கனவு புராஜெக்ட்.

  4. 'தெய்வத்திருமகள்' அமலாபாலுடன் விஜய் இணையும் முதல் படம். படத்தின் ஆரம்பத்தில் சமந்தா ரூத் பிரபு, யாமினி கௌதம் போன்றவர்களின் பெயர்களும் கதாநாயகி ரோலுக்கு அடிபட்டது. இந்த ரேஸில் ஜெயித்தது என்னவோ நம்ம அமலாபால் தான்.

  5. அமலாபால் முதல்முறையாக இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.


  6. ஆஸ்திரேலியாவில் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியான டான்ஸராக நடித்துள்ளார் விஜய்.

  7. விஜய் படம் ஒன்றுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது இதுவே முதல்முறை. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ... என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார்.

  8. நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

  9. திருமண வேலைகள் காரணமாக ‌ஜி.வி.பிரகாஷால் பின்னணி இசை சேர்ப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியவர் ரகு நந்தன்.

  10. துப்பாக்கியிலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியது போல் இதிலும் அபிமன்யூ சிங் என்ற நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

  11. இவர்கள் தவிர ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயா, இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

  12. ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

  13. படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

  14. ஆஸ்ட்ரேலியாவில் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் கலக்கும் விஜய், தமிழகம் திரும்பிய பிறகு டைட் அரைக்கை சட்டை, டைட் பேன்ட், டக் இன் என்று யூனிஃபார்ம் கெட்டப்புக்கு மாறுகிறார்.


  15. சத்யராஜுக்கு பெ‌ரியய்யா என்ற பவர்ஃபுல் வேடம். விஜய் கதாபாத்திரத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதே சத்யரா‌ஜின் பெ‌ரியய்யா கேரக்டர்தான் என்கிறார்கள். தாடியுடன் வெள்ளை காஸ்ட்யூமில், தோளில் நீண்ட அங்கியுடன் வருகிறார்.

  16. சற்றே நீண்ட திரைப்படம் அதாவது இரண்டு மணி ஐம்பது (2:50) நிமிடங்கள்.

  17. சென்சா‌ரில் U/A சான்றிதழ்தான் கிடைத்தது. U/A என்றால் 30 சதவீத வ‌ரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி U சான்றிதழ் பெற்றனர். ‌ரிவைஸிங் கமிட்டியில் 4 இடங்களில் படம் கத்த‌ரிக்கப்பட்டது.

  18. இதுவரை வெளியான விஜய் படங்களில் தலைவாவுக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 திரையரங்குகள். தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகள்.

  19. ஆந்திராவில் 'அண்ணா' என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகிறது. கேரளாவில் 'தலைவா' என்ற அதே பெய‌ரில் தமிழிலேயே வெளியாகிறது.

  20. தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பது சன். 15 கோடிகள் என்கிறார்கள். இது உண்மையா ...?!
இது போதுமா இல்லை இன்னும் வேணுமா ...? சரி வாடா மாப்ளே... படம் நாளைக்கு ரிலீசு ... முதல் ஷோ பாத்துட்டு படத்தப்பத்தி விரிவா அலசலாம்.

படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : nilavaithedi



'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?

கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது.

மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக இன்று நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான்.

1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ்.

அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!

2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், "இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும்" என்கிறது 'அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா (anaesthesia and analgesia)' இதழ்.

மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

3. ஜூஸ் நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

4. குடை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.

அட இதுல இவ்வளவு விஷயம் இருக்கா...!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran news paper



கோலி சோடா (2013) படத்தின் டீஸர்!

யார் இந்த விஜய் மில்டன் ?

‘ஆட்டோகிராஃப்’, 'காதல்’, 'வழக்கு எண் 18/9’ படங்களை ரசனை ஓவியமாக மனதில் பதியச்செய்த ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், 'கோலி சோடா’ மூலம் மீண்டும் இயக்குநர் இருக்கையில் அமர்கிறார்!

கோலி சோடா படத்தோட கதை என்னனா ...

ஒரு கோலி சோடாவில் 200 மில்லி தண்ணி இருக்கும். சாதாரணமா பார்த்தா அது வெறும் தண்ணிதான். ஆனா, அதுக்கு அழுத்தம் கொடுத்தா, அதுவரையிலான இயல்பை மீறி ஒரு விஷயம் பீறிட்டு வரும். 'இந்தத் தண்ணியிலா இவ்வளவு ஃபோர்ஸ் இருந்தது?’னு ஆச்சர்யப்படுவோம்.

கோயம்பேடு காய்கறி சந்தையை மையமாகக் கொண்டு, சாதாரணமா இருக்கிற நாலு பசங்களுக்கு பிரஷர் கொடுக்கும்போது, தொடர்ந்து தொந்தரவு பண்ணும்போது, அவங்க எப்படி அடிச்சு, உடைச்சு வெளியே வர்றாங்கனு சொல்ற படம் தான் 'கோலி சோடா’!'



என்ன ஸ்பெஷல் இருக்கு இந்த படத்துல...?

பவர் ஸ்டார், சாம் அன்டர்சன் & டி.ஆர் இணையும் கோலி சோடா பாடல் உருவாகிய விதம் பற்றி அப்பாடலின் ட்ரெயிலர் வடிவில் யூடியூப்பில் வீடியோவொன்று ஹிட்டாகி வருகின்றது அதன் இணைப்பு இங்கே...



வீடியோவின் தொடக்கத்தில் யூடியூப்பில் ஹிட் எண்ணிக்கையை Alt செய்ய முடியுமா? என கேட்பதும் டான்ஸ் என்றால் ஈசியா இருக்கனும் என சாம் அன்டர்சன் சொல்வதற்கும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
`


Related Posts with Thumbnails
 
back to top