மெட்ராஸ் (2014) – இசை விமர்சனம்

வட சென்னை கதைக்களத்தினை தாங்கிவரும் ‘மெட்ராஸ்’ படத்தில் நாயகனாக கார்த்தி, நாயகியாக கத்ரினா தெரேசா நடிக்கின்றனர். இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்க ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்குகிறார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்துவந்த கார்த்திக்கு சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்கள் ஏறுமுகத்தில் அமையவில்லை. எனினும் 'பிரியாணி' ஓரளவுக்கு பரவாயில்லை ரகம். கார்த்தி இப்போது எதிர்பார்ப்பது ஒரு உடனடி வெற்றி அதனால் - ‘மெட்ராஸ்’!

சந்தோஷ் நாராயணன் ‘குக்கூ’ ஆல்பத்தில் பெருமான்மை மக்களை ஈர்த்த இசையமைப்பாளர். அவருடைய அடுத்த ஆல்பமாக, ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே வேகத்தில் சூப்பர் ஹிட் பட்டியலிலும் சேர்ந்துள்ளன.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

1. சென்னை வட சென்னை...

கபிலன் எழுதிய பாடல். ஹரிஹர சுதன், மீனாக்ஷி ஐயர் கூட்டணி எக்ஸ்ட்ரா எனர்ஜி சேர்க்க முதல் முறை கேட்கும் போதே மனதில் ஒட்டிக் கொள்ளும் ஒரிஜினல் ‘சென்னை ஆந்தம்’. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.

சென்னையில் வாழ்வோரும் சரி, அங்கே பிழைக்க வருவோரும் சரி, விரும்பி ரசிக்கக்கூடிய வரிகள். ‘எங்க ஊரு மெட்ராஸ், இதுக்கு நாங்க தான அட்ரஸ்’ துவக்கத்திலேயே சென்னை கெத்தாக தொடங்கும் பாடல் ‘முள்ளுத் தச்சக் கூட்டுக்குள்ள, காக்கா குஞ்சா வாழ்ந்தாக் கூட’ என சென்னை பூர்வ குடிகளின் சோகத்தை கூட ஜாலியாய் சொல்லி செல்கிறது.


2. ஆகாயம் தீப்பிடிச்சா...

கபிலன் எழுதிய பாடல். பிரதீப்குமார் இதனைப் பாடியுள்ளார். இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா’ என குறும்பு கற்பனையாய் தொடங்கும் பாடல் ‘வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும்’ என சீரியஸ் ஆகிறது. கபிலன் வரிகளுக்கு பிரதீப்குமாரின் குரல் மற்றும் கிட்டார் இனிமைக் கூட்ட ஆல்பத்தின் காதல் கீதமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

அழகான மெட்டுடன் நல்ல வரிகள் சேர்ந்துகொள்ள, வித்தியாசமான இசைக் கோப்பினால் தன்னுடைய பாணி தனியானது என்று நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சபாஸ்!!!


3. நான் நீ...

இந்தப் பாடலை உமா தேவி என்பவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த குரலுக்குச் சொந்தக்காரரான சக்திஸ்ரீயுடன் தீஷிதா இணைந்து பாடியுள்ளார்.

‘நான் பறவையின் வானம், பழகிட வா, வா நீயும்’ என்று பெண் மனதின் மென்மையை தூவுகிறது உமா தேவியின் வரிகள்.


4. காகித கப்பல்..

சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றால், கானா பாலா இல்லாமல் எப்படி? அவருடைய தனித்துவமான குரலில் அக்மார்க் சென்னை ஸ்லாங்கில் அமைந்த பாடல்.

எப்போதும் கேட்கும் கானா பாடல் போலத் தோன்றினாலும் ‘காசு கையில் வந்தாலும், கஷ்டத்துல வாழ்ந்தாலும், போக மாட்டோம் மண்ண விட்டு’ என உரிமைக் குரல் ஒலிக்கிறது. சென்னை வாழ்க்கையை விவரிக்கும் வித்தியாசமான வரிகள் மக்களைச் சட்டென்று கவர்ந்துகொள்ளும்வகையில் இந்தப் பாடலில் பதிவாகியுள்ளன.



5. இறந்திடவா நீ பிறந்தாய்...

இதுவும் கானா பாலா பாடல்தான். அவரது வழக்கமான பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு அமைந்துள்ள இந்தப் பாடல் தத்துவார்த்தமான பல விஷயங்களை எளிமையாகச் சொல்லிச் செல்கிறது. இதற்கும் சந்தோஷ் நாராயணனின் இசை இதமான சுகம் தரும்வகையில் அமைந்துள்ளது.

ஒப்பாரி பாடல் தொனியில் ஆரம்பமாகும் பாடல் இல்லாமையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. இடையில் ஒலிக்கும் ‘தப்பு சத்தம்’ எனர்ஜிக் கொடுத்தாலும் தினம் கடந்துப் போகும் பாடல் போல் இருப்பது சோர்வு தருகிறது.


5. தீம் மியூசிக்... - 2

‘காளி லவ்’ & ‘சுவர்’ என வரும் இரண்டு ‘தீம்’களும் ஆல்பத்துக்கு கூடுதல் பலம்.



பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'மெட்ராஸ்' பாடல்கள் ரசிக்கும்படி இருக்கு!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images, Vuin.com & Ottran.in



Brick Mansions (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

பிரஞ்சு மொழியில் 2004-இல் வெளிவந்த திரில்லர் கம் அதிரடி ஆக்சன் திரைப்படம் 'District B13'. அதன் ஆங்கில மொழி ரீமேக்கில் வெர்சன் தான் 'Brick Mansions 2014'(பிரிக்ஸ் மேன்சன்ஸ்).

இந்த புதிய வெர்சனில் பால் வாக்கர், டேவிட் பெல்லி, ரஸா, கத்தாலினா டெனிஸ், ஆயிஷா இஸ்ஸா & கார்லோ ரோடா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் 'Camille Delamarre'. இந்த படம் தான் 'பால் வாக்கர்' நடித்த கடைசிப்படம். இந்த படத்திற்கு பிறகு தான் விபத்தில் பால் வாக்கர் பலியானார்.

'District B13' படத்தோடு ஒப்பிடும்போது 'Brick Mansions' ஒரு நல்ல படமே! இந்த படம் தமிழில் 'செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்' என டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

படத்தோட கதை என்னனா ...

'பிரிக் மேன்சஸ்' பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர் முடிவெடுக்கிறார்.

இந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்லி முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.


அவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர்.

அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா? பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பால்வாக்கர் & டேவிட் பெல்லி
படத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம்.

கத்தாலினா டெனிஸ்
டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

ரஸா
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் 'Brick Mansions' - ஆக்ரோஷம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



Enders Game (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

'எண்டர்ஸ் கேம்' 2014-ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை கோவின்ஹூட் எழுதி இயக்கயுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஆசா பட்டர்பீல்ட், ஹாரிசன் ஃபோர்டு, ஹைலீ ஸ்டெயின்ஃபீல்ட், வயோலா டேவிஸ், அபிகாயில் பிரெஸ்லின் மற்றும் பென் கிங்க்ஸ்லி நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னனா ...

உலகத்தை அழிக்க வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் உலகத்தில் நிறைய உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படுகிறது. ஆனாலும் வேற்று கிரகவாசிகளால் உலகத்தை கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் உலகத்தை கைப்பற்ற திரும்பி வருவார்கள் என மனிதர்கள் நம்புகிறார்கள்.

வேற்று கிரகவாசிகள் இங்கு வருவதற்கு முன்னால் நாம் அங்கு சென்று அவர்களை அழித்து விடலாம் என்று பூமியில் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் சிறுவர்களை தேர்வு செய்து அவர்களை தயார் படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.

இதற்காக ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. தேர்வில் எல்லாத் திறமைகளும் கொண்ட எண்டரும் கலந்து கொள்கிறான். அவனை தேர்வு செய்த தேர்வுக்குழு, அவனை ஒரு அணிக்கு தலைவன் ஆக்குகிறது. இதுபோன்ற பல அணிகளை கொண்டு விண்வெளியில் ஒரு போட்டி நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் அணி வேற்று கிரக வாசிகளை அழிக்க தேர்வு செய்யப்படும் என்று தேர்வுக்குழு முடிவெடுக்கிறது.

இந்த போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் மற்றொரு அணியின் தலைவனை எண்டர் தெரியாமல் கொன்று விடுகிறான். இதனால் மன வேதனை அடைந்து இந்தப்போட்டிக்கு தான் தகுதி அற்றவன் என்று நினைத்த எண்டர், உலகத்திற்கு திரும்புகிறான். பயிற்சித் தலைவனான ஐரும், எண்டரை சமாதானம் செய்கிறார். அந்த சமாதானத்தை ஏற்க மறுக்கிறான் எண்டர்.

இறுதியில் எண்டரை பயிற்சி தலைவர் சமாதானம் செய்தாரா? வேற்று கிரக வாசிகளை அழித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

அசே பட்டபில்டு
எண்டராக நடித்திருக்கும் அசே பட்டபில்டு திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக தேர்வின் போதும், பயிற்சியின் போதும் திறமையாக செயல்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.

ஹாரிசன் போர்ட்டு
படைத்தலைவனாக வரும் ஹாரிசன் போர்ட்டு, ஐரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

இயக்குனர் கோவின் ஹூட்
படத்தில் சிறுவர்களை நடிக்க வைத்து அவர்களிடம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவின் ஹூட். டொனால்ட் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி விளையாட்டு பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தூட்டுகிறது.

ஸ்டீவ் ஜப்லோன்ச்கின் இசையும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'எண்டர்ஸ் கேம்' - அசத்தல் கேம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



கமலின் நான்கு புதிய படங்கள் - குஷியில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு புதிய ரீமேக் படங்களில் நடிக்கிறார்.

1. விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.

சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. தயாரிப்புக்கு பிந்தைய வேலைகளில் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் எந்த நேரமும் படம் வெளியாகலாம்.

உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

2. உத்தம வில்லன்

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தில் முதன்முறையாக கமல் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வருகிறார். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்திருக்கின்றனர். கூடவே இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

3. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்

மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். தமிழில் திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மோகன்லால் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் நடிகை மீனா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிகை கவுதமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளம்வரவுள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தையும் இந்த ஆண்டே வெளியிட்டுவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.

4. 'மனம்' தமிழ் ரீமேக்

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அப்படத்தை பார்த்து ரசித்த கமல், நாகேஸ்வரராவின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த அந்த படத்தை பார்த்து முடித்ததும், தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் கமல்.

நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் கமல் நடிக்க, நாகார்ஜூனா வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம் மற்றும் மன்மதன் அம்பு படங்களில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், நாகசைதன்யா வேடத்துக்கு அப்படம் தொடங்கும் நேரத்தில் இன்னொரு இளவட்ட நடிகரிடமும் கால்சீட் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இரண்டு மாத இடைவெளியில் அடுத்து அடுத்து கமல் படங்கள் வெளிவருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & EniyaTamil



வடகறி (2014) விமர்சனம்

மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் & சுவாதி நடித்த படம் "வடகறி".

ஒரு சாதாரணமானவனுக்கு ஒரு நாளில் ஒரு சோதனை ஏற்பட்டால் அதிலிருந்துவிடுபட அவன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை.

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் வழக்கம் போல எந்த சம்பந்தமும் கிடையாது.

படத்தோட கதை என்னனா ...

சென்னையின் குடிசைப் பகுதியில் தனது அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் ஜெய். இவருக்கு மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை கிடைக்கிறது. சாதாரண செல்போனை வைத்திருக்கும் ஜெய், தனக்கு வேலை கிடைத்துவிட்டதால், முதல் சம்பளத்தில் நல்ல செல்போனாக வாங்கவேண்டும் என்று திட்டம் போடுகிறார்.

முதல் மாத சம்பளத்தை வாங்கி, தனது அண்ணனிடம் கொடுக்கிறார். அவரோ, ஜெய்யிடம் வெறும் ரூ.2000 மட்டுமே கொடுக்கிறார். அதை வைத்து பெரிய போனை வாங்க முடியாது என்பதால் குறைந்த விலையில் ஒரு கொரியன் மொபைலை வாங்கிக் கொள்கிறார்.

அந்த மொபைலுக்கு அழைப்புகள் வரும்போதெல்லாம் அதிக சத்தத்துடன் வருவதால் இவரை சுற்றியுள்ளர்கள் இவர்மீது எரிச்சலடைகின்றனர். அதனால், அந்த போனை எப்படியாவது மாற்றவேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இதற்கிடையில், ஜெய்யின் நண்பன் பாலாஜி குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டுக்கு வரும் சுவாதியை அந்த ஏரியாவில் உள்ள அனைவருமே ஜொள் விடுகின்றனர். ஒருநாள் பாலாஜி வீட்டிற்கு செல்லும் ஜெய்யும், சுவாதியை பார்த்தவுடனேயே காதலில் விழுகிறான்.

ஆனால், அவளுக்கு வேறொரு காதலன் இருக்கிறான், அதனால் அவளது தோழியை காதலிக்குமாறு அறிவுரை கூறுகிறான் பாலாஜி. அதை ஏற்றுக்கொள்ளும் ஜெய், சுவாதியின் தோழியை ரூட் விடுகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கடைக்கு செல்லும் ஜெய், அங்கு விலையுயர்ந்த செல்போன் ஒன்று அனாதையாக இருப்பதை பார்க்கிறார். அதைப் பார்த்ததும் எடுத்து வைத்துக் கொள்கிறார் ஜெய்.


ஒருநாள், சுவாதியின் தோழியிடம் சென்று தனது காதலை சொல்லப்போகும் ஜெய், அவள் மூலமாக சுவாதிக்கு காதலன் இல்லை என்பதை அறிகிறான். உடனே, சுவாதியை காதலிப்பதாக அவளது தோழியிடமே சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். கோபமடைந்த தோழி, சுவாதியிடம் சென்று சண்டை போடுகிறாள். இந்த சண்டையால் வெறுப்படைந்த சுவாதி, தோழியை கடுப்பேத்துவதற்காக ஜெய்யிடம் நெருங்கி பழகுகிறார். நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் வருகிறது.

இந்நிலையில் ஜெய் கண்டெடுத்த போனுக்கு ஒரு நபர் போன் செய்து, கொடுத்த சரக்கை எப்ப வந்து ஒப்படைப்பாய்? சீக்கிரம் வந்து கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டு கட் செய்துவிடுகிறார். யார் அவர்? என்ன சரக்கு? என்று எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் ஜெய்.

இதற்கிடையில் அவரது அண்ணனின் நேர்மையை அறியும் ஜெய், தானும் அதேபோல் இருக்க நினைக்கிறார். அதனால், அந்த மொபைல் போனை உரியவரிடம் ஒப்படைக்க நினைக்கிறார். அப்போது, ஜெய்க்கு ஏற்கெனவே போன் செய்த நபர் மீண்டும் போன் செய்கிறார். அப்போது, அவரிடம் முகவரியைக் கேட்டு, அங்கு சென்று ஒப்படைக்கப்போகும் ஜெய்யை அந்த நபரின் கூட்டாளிகள் அடித்து துவம்சம் செய்கின்றனர்.

அவர்கள் யார்? ஜெய்யை அவர்கள் தாக்க என்ன காரணம்? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ஜெய்
வழக்கம்போல் ஜெய் வழக்கம்போல் இப்படத்திலும் தனது அப்பாவி முகத்தை படம் முழுக்க பதிவு செய்திருக்கிறார். எல்லா காட்சிகளுக்கும் ஒரேமாதிரியான ரியாக்ஷனை காட்டி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பார்க்க சற்று குண்டாகி அழகாக இருந்தாலும், நடிப்பில் தேறவில்லை.

சுவாதி
நாயகி சுவாதி அழகாக இருந்தாலும், இவருக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு மிக குறைவாக வழங்கப்பட்டிருப்பது வருத்தமே. நடிக்க அதிக வாய்ப் பில்லாவிட்டாலும் நுட்பமான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கவர்கிறார்.


ஆர்.ஜே. பாலாஜி
படத்தின் தலைப்போடு வரும் ஆர்.ஜே. பாலாஜி எப்.எம்.இல் இருக்கும் ஞாபகத்தில் இப்படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால், கேட்கத்தான் முடியவில்லை. எப்போது நடிக்க ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில், பாலாஜி அடிக்கும் காமெடிக்கு ஜெய், ஜோக்கடிச்சியா? நாளைக்கு சிரிக்கிறேன் என்று சொல்லும் வசனம், இந்த படத்தில் பாலாஜிக்கு சரியாக பொருந்தும்.

இயக்குனர் சரவணராஜன்
டத்தில் நடித்திருக்கும் யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லை. எந்த கதாபாத்திரமும் ரசிகர்களை கவரவில்லை. மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட நினைத்த இயக்குனர் சரவணராஜனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், அதை கதையோட்டத்தில் அழுத்தமாக பதிவு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார். இடையில் வரும் தொய்வுகளை நீக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டிய படம், திரைக்கதையின் வேகத்தடைகளாலும் தர்க்க ரீதியான ஓட்டைகளாலும் தடுமாறுகிறது. உச்சக்காட்சியில் வரும் திருப்பம் செயற்கையாகவே இருக்கிறது.

விவேக் சிவா- மெர்வின் சாலமோன்
விவேக் சிவா- மெர்வின் சாலமோன் ஆகியோர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. வெங்கடேஷ் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இதமாக இருக்கிறது.

சன்னி லியோன்
சன்னி லியோன் ஆட்டம் போடும் பாடலும், அந்த பாடலை படமாக்கியவிதம் சரியில்லை. படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இதுவும் திரைக்கதையுடன் ஒட்டவில்லை. செல்போனை வைத்து எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ள விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'வடகறி' - சுவையில்லை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



தெனாலிராமன் கதைகள் 2

கதை 1 : பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது.

அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர், "ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?" எனக் கேட்டார்.

"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!" என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது," என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

கதை 2 :கிடைத்ததில் சம பங்குபங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது.

தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Rammalar



The Raid 2 (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

தி ரெய்ட் - தமிழில் பல படங்களில் வந்த கதை தான். ஆனால் எடுத்திருக்கும் விதம் தாம் பிரமாண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


‘இதுவரை இப்படி ஒரு வன்முறை பொங்கும் படத்தை பார்த்ததே இல்லை’ என்று பிரபல ஹாலிவுட் விமர்சகர்ளே கதறுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தோட கதை என்னனா ...

இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை தரப்படுகிறது. அந்த தாதா கும்பலுக்கு காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளும் உதவி செய்கின்றன.

தாதா கும்பலை பிடிப்பது சவாலான விஷயம் என கருதும் ராமா, அக்கும்பல் தலைவனின் மகன் உகாக்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான் என்பதறிந்து அவனைக் கொண்டே அக்கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். அதன்படி, உகாக்கின் நம்பிக்கையை பெற குற்றவாளியை போல் சிறைக்குள் நுழைகிறார் ராமா.

இரண்டு வருட சிறை வாசத்திற்கு பின் ராமா, உகாக்கின் நண்பனாக வெளிவந்து தாதா கும்பலில் இணைகிறார். அதில் இருந்தவாறு கொள்ளை கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும், காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளையும் கண்டுபிடித்து தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

இகோ உவேய்ஸ்
சற்றே வளர்ந்த தலைமுடி, கடுகடு பார்வை என இகோவின் தோற்றம் எந்நேரமும் சீறிப்பாய காத்திருக்கும் ஏ.கே. 47 தோட்டா போல துரு துருவென இருக்கிறது. சிறை வளாகத்தில் நடக்கும் சேற்று சண்டை, கார் சேஸ், ரயில் ரணகளம், கிச்சன் கொடுவா கத்திக்குத்து என ஆக்சன் பிரியர்கள் போதும் என்று சொல்லுமளவிற்கு ரத்தக்குழம்பை பரிமாறி இருக்கிறார்கள்.

இகோவிடம் கும்பல் கும்பலாக மல்லுக்கு நிற்பவர்கள் மொத்தமாய் போய் 'காரியம்' செய்யாமல் தனித்தனியே சென்று உதை வாங்குவது ஹீரோயிசத்திற்கு பயன்பட்டாலும், இயல்பில் இருந்து விலகி நிற்கிறது.


அரிபின் புத்ரா
கொள்ளை கும்பல் தலைவனின் மகனாக வரும் உகாக்கும் (அரிபின் புத்ரா) தன் பங்குக்கு சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
தன்னிடம் சிக்கும் ஐந்து நபர்களின் கழுத்தினை சிறு கத்தியால் சாவகாசமாக நடமாடிக்கொண்டே அரிபின் புத்ரா அறுத்து தள்ளும் காட்சி வன்முறையின் உச்சம் எனலாம்.

இயக்குனர் கேரேத் இவான்ஸ்
படம் முழுவதும் சண்டை காட்சிகள் தான் நிறைந்துள்ளது. இந்த வருடத்தின் வன்முறை நிறைந்த படமாக இப்படம் காட்சியளிக்கிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேரேத் இவான்ஸ் படத்தின் கதையை உருவாக்கியதுடன் தானே இயக்கம் செய்து முத்திரை பதித்திருக்கிறார். படம் முழுவதும் ஆக்சன் காட்சிகளை வைத்து சண்டை பிரியர்கள் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு என சகல துறைகளிலும் ரத்தத்தை சிந்தி உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக இறுதியில் ஜூலி, பேஸ்பால் கொலையாளிடமும், இன்னொரு நபருடன் போடும் கொடுவாக்கத்தி சண்டையும் உச்சக்கட்ட அதிரடி. வெவ்வேறு களத்தில் கடும் சவால்கள் நிறைந்த சண்டைக்காட்சிகளை இருக்கும் வெல்ஷ்மேனுக்கு பலத்த விசில் அடிக்கலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'The Raid 2' - சண்டை களம்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



கத்தி vs காப்பி

ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் தயாராகி வரும் 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான நேற்று ஜூன் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.


கருப்பும், வெள்ளையுமாக ஒரு தினசரி பேப்பரை கட்டிங் செய்தது போல உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கத்தி பட போஸ்டரும் சில போஸ்டர்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என பரபரப்பாய் பேசப்பட்டது. சில ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டது அதில் ஒன்று இதோ...


கத்தி டீசர் வீடியோ அமெரிக்க பேப்பர் விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி! ஆதாரத்துடன் மாட்டிக்கொண்ட அனிமேஷன் பிஸ்தாக்கள்!

சரி இது பேஸ் டைப்போகிராபி என்ப்படும் ஒரு ஸ்டைல் தான்.. இது போல பலவிளம்பரங்கள் வந்துவிட்டன என்ற வகையில் இதை நாம் அந்த அளவுக்கு திட்ட வேண்டாம் கண்டுகொள்ளாமல் போகலாம் என நினைத்த போது தான் இன்னொரு விசயம் நம் கவனத்திற்கு வந்தது.

நேற்று போஸ்டருடன் ஒரு புதுமையான அருமையான டீசர் அனிமேசனும் வெளியானது. சென்னை நகரை அப்படியே நியூஸ்பேப்பரில் செதுக்கும் ஐடியாவில் உருவான டீசர். அட என நாம் ஆச்சர்யப்பட்டு நாமும் அதைப்பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அந்த 'அட' ஒருநாள் ஆவதற்குள் 'அடச்சீ' என்றாகிவிட்டது. காரணம் அது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என் பத்திரிக்கையின் விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி என்பதால் தான்.

யோவ் விஜய் படம்னா எதையாச்சும் நெகடிவ்வா பேச ஆரம்பிச்சுடுவீங்களே என கோபம் கொப்பளிக்கும் முன்பாக இந்த வீடியோவே பாருங்கள்.



இப்போது கத்தி படத்தின் டீசர் வீடியோவை பாருங்கள்



இதில் நடிகர் விஜய்யை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் படத்தில் இப்படி காப்பியடித்திருக்கிறார்கள் என்ற அவமானம்தான் அவருக்கு. ஆனால் இதில் விமர்சிக்கப்படவேண்டியது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்.

இந்திய அளவில் பெரும் டைரக்டராய் உருவாகியிருக்கும் முருகதாஸ் இதுபோன்ற மட்டமான சர்ச்சைகளை தன் படத்திற்கு விரும்பமாட்டார் என் நம்புகிறோம். ஆனால் இதை அவர் தெரிந்தே செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அல்லது இது அவருக்கு தெரியாமல் பல லட்சங்களை வாங்கிக்கொண்டு இதை செய்து கொடுத்த அனிமேசன் பிஸ்தாக்களின் உட்டாலக்கடி வேலையாக இருந்தாலும் இதற்கு கிரியேட்டிவ் ஹெட்டான டைரக்டராய் அவர்தான் பொருப்பு. எனவே இனி இதுபொன்ற சங்கடங்களை தவிர்பாரா?
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : soundcameraaction.com



Related Posts with Thumbnails
 
back to top