ஆயிரம் விளக்கு - விமர்சனம்

மதுரையை பின்னணியாக கொண்டு சத்யராஜ், சாந்தனு, சனா கான், சுமன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'ஆயிரம் விளக்கு'.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இனி...

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download


1. கே.பீ.சுந்தராம்பாள் பாடிய ஒரு பக்தி பாடலின் வழிகளில் தொடங்கி பிறகு ஒரு குத்து பாடலா மாணிக் விநாயகம் குரலில் இந்த பாடல் மலர்கிறது.
நான் மதுர மதுர
நீ மதுர மதுர
நான் நீ மதுரையில கண்ணுமுழிட்சோம்
மதுரையின் சிறப்புகளை அங்கங்கே தூவிவிட்டு பாடலுக்கு மெருகேற்றி மதுரையை சிறப்பித்திருக்கிறார் கவினர்.

மதுர மதுர என்று என்தனை மதுர இந்த பாடலில் வருகிறது என்று ஒரு போட்டி வைத்து பரிசளிக்கலாம்.

2. மதுரை மண்ணின் மனம் வீசும் வரிகளுடன் கிராமத்தின் சிறப்பை பற்றியும் பறைசாற்றும் வரிகளுடன் ஒரு பாடல். கேட்டவுடனே எனக்கு பிடித்துப்போன பாடல்.
பாப்பாவுக்கு ஒரு ஜிஹார்தண்டா கொடுப்பா
பாப்பாவுக்கு அதை எச்சம் வச்சு கொடுப்பா
இவள் தளுக்கு கொஞ்சம் மினுக்கு
என்று தொடங்கும் ஒரு கேலியும் கிண்டலும் நிறைந்த பாடல். கார்த்திக்கும் ரீட்டாவும் இணைந்து பாடியிருக்கும் பாடல்.


3.யேசுதாஸ் குரலில் ஒரு பாடல்.
உத்தம புத்திரனே
உயிர் தந்த சித்திரனே
தேன்மதுர பாடியனே
எனத்தொடங்கும் ஒரு சிறு சோகப்பாடல். தந்தையும் தனயனும் பிரிந்து சென்ற நேரத்தில் பாடும் பாடல் போல இருக்கு.

4. அடுத்து ஒரு காதல் மெலடி பாடல். ஹரிஷ் ராகவேந்திரா + சின்மயி குரல்களில் இதமாக ஒளிகிறது.
ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி
சகியே என் சகியே உன் சகலம் நானடி
வரிகளை சிதைக்காத இசை கோர்வை. கேட்ட கேட்ட சுகமா இருக்கு. ஒரு வித புது குரலில் சின்மயி பாடியிருப்பது அழகு.

5. கார்த்திக் குரலில் தன்னம்பிக்கை + சுய முயற்சி பற்றி சொல்லும் ஒரு அதிரடி பாடல்.
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
அசந்துபுட்ட கொட்டப்போற தேளுடா
என்று அதிரடியாய் தொடங்கும் ஒரு பாடல்.

சண்டைக்கு துணிந்துவிட்டால் - எனக்கு
சாப்பாடே அடிதடிதான்

என்று கவினர் தன் வீரத்தையும் மண்ணின் வாசத்தையும் கலந்து கொடுத்துள்ளார்.



6. மீண்டும் ஒரு யேசுதாஸ் பாடிய மெலடி பாடல்.
என்ன தவம் செய்தேன் என்னைபெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம் காண செய்த மகனே
சந்தோஷ நிமிடங்களில் ஒரு தந்தை தன் மகனின் பெருமை பற்றி குடும்பத்தில் ஆடி பாடி பாடும் ஒரு பாடல்.

என்விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன்விரல் கோர்த்து உறவாடத்தான்
வலிகளெல்லாம் மறந்து விளையாடதான்

சத்தியராஜ் பாடும் பாடல் போல இருக்கு. சற்றேண்டு கேட்டல் இது எஸ்.எ.ராஜ்குமார் பாடல் போல தோண்டும்.

7. காதல் ஏக்கப் பாடல்
போறாளே நெஞ்ச கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே
வாராளே நெஞ்ச அள்ளிக்கிட்டு அள்ளிக்கிட்டு வாராளே
எனத்தொடங்கும் ஒரு காதல் பாடல். கார்த்திக் குரலில் அழகால் ஒலிகிறது.

உன்னைப்போல என்னக்கொல்
அரளி விதை தேவையில்லை

என்று கவினர் காதலின் தவிப்பை மிக அழகாக கவி வரைந்திருக்கிறார்.


ஆயிரம் விளக்கு - பிரகாசமாய் ஒலிகிறது! நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!

சக்கரகட்டிக்கு இந்த ஆயிரம் விளக்குல ஒரு விளக்காவது ஒளி ஏத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சென்னை நகர்வலம் - ஒரு ஜாலி டூர்

பிஞ்சுகளின் மனதில் - இன்றே
நஞ்சை வளர்க்கும் - என்
இந்திய சினிமா !

அவன் வீட்டு உலை
கொதிக்கவில்லை -
மாறாக
அவன் வீட்டு - அவள்
உயிர் கொதிக்கின்றது....
அரசை மட்டும்
வாழவைக்கும்
மதுக்கடை வாழ்க.

மறந்து போன
என் கிராமத்து
பள்ளி விளையாட்டு

ஜோராக தெரிந்தது
என் வீட்டு டிவி
சிம்னி விளக்கில் !

டிவி தந்தாச்சு
வீட்டில் கரண்டு இல்லை.
வாழ்க!
இலவசம்!
இவவசம்!!
இலவசம் !!!

உணவு
உடை
உறக்கம்
வேறென்ன வேண்டும் எனக்கு
ஏன்னா - நான்
தனிக்காட்டு ராஜா.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-
  1. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

  3. கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

  4. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

  5. சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

  6. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

  7. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

  8. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

  9. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

  10. பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

  11. வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

  12. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

  13. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

  14. "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

  15. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : இனிக்க இனிக்க அதிரசம்

காலம் காலமாக பண்டிகைகளில் (தீபாவளி போன்ற) செய்யப்படும் பலகாரங்களில் மிக முக்கியமானது இந்த அதிரசம். நீண்ட நாட்கள் வைத்திருந்து சாப்பிடக் கூடிய ஒரு பலகாரம் இது. விரைவில் கெட்டு போகாது.

சீனி, வெல்லம் இரண்டைக் கொண்டும் அதிரசம் செய்யலாம். வெல்லத்தைக் கொண்டு இனிக்க இனிக்க அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த்தூள் - 5 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நெய் - 20 மி.லி
செய்முறை:
  • பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும்.

  • உலர்த்திய அரிசியை அரைத்து மாவை சலித்து வைக்கவும்.

  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு போல் காய்ச்சவும்.

  • வெல்லப்பாகு கம்பிப் பாகு போல் வரும் போது மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

  • கையில் நெய் தடவி மாவைத் தொட்டால் மாவில் கையில் ஒட்டாமலிருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

  • மாவின் மீது நெய் தடவி ஆறியபின்பு மூடி வைத்து விடவும்.

  • இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.

  • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தட்டிய அதிரசங்களைப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சில குறிப்புகள் :-
  1. கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும், தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

  2. அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

  3. மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

  4. அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும். ஆறியதும் மெத் மெத்தென்று இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



பச்சை என்கிற காத்து - விமர்சனம்

புதுமுக இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி எழுதிய பாடல்களை அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.

கதை என்னானா ..

ஒரு மரணத்தின் வாசலில் துவங்குகிறது பச்சையின் வாழ்க்கை . மரண வீட்டில் குழுமியிருக்கும் மனித்ர்களின் முகங்களில் வருத்தமோ, துயரமோ ஏதும் இல்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கிற 27ம் வயதில் பச்சை இறந்திருக்கிறான் என்கிற சிறு ஆதங்கம் கூட அவர்களிடம் இல்லை. மரண வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கட்டிய மனைவியே மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

அப்படியென்ன கொடுமையானவனா பச்சை? அவனது முகம் தான் என்ன.? அவன் யார்..? யாருக்கும் பிடிபடாத ஒருவனின் அசாத்திய வாழ்க்கையை அவன் எரிகிற சிதையை பார்த்தபடியே அவன் உடன் சுற்றிய மனிதர்கள் விளக்குவதே "அ" திரை வழங்கும் "பச்சை என்கிற காத்து " படத்தி்ன் கரு, கதை, களம் எல்லாம்.
ஊரு திரண்டுருச்சு ஒத்துமையா ஆயிடுச்சு
நாடு திரண்டுருச்சு கட்டா கட்டழகி - அங்கே
வேல்முருகன், ரோஷினி, இந்துமதி மூவரும் இணைந்து பாடியிருக்கும் ஒரு ஆட்டம் போட வைக்கும் கும்மக்குத்து பாடல். மெல்ல ஆரமித்து பின்னர் செம ஸ்பீடில் முடியும் பாடல் இது.

கருவாபயலே ....
மீசை இல்லை சூரப்புலி மாட்டிகிச்சு மாட்டிகிச்சு
ஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டிகிச்சு பூட்டிகிச்சு
இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த முதல் பாடல். மகேஷ், மதுமிதா, அரவிந்த் பாடியிருக்கும் இந்த பாடலில் அருமையான இசை கோர்வையை நீங்கள் ரசிக்கலாம். அழகான போக் சாங் + குத்து பாடல்.

நான் உன்னைப்பார்தேன்
நீ என்னைப் பார்த்தே
எனக்கு பிடித்த அடுத்த பாடல். மகேஷ், பானுமதி, ஹரிபாபு இணைந்து பாடிய இந்த பாடலின் மெட்டமைப்பு வேறு எங்கேயோ கேட்டது போல இருக்கு. ஆனா சட்டுன்னு ஞாபகம் வரல. உங்களுக்கு வந்தா சொல்லுங்கள்.

தீயே தீயே என்னை தீண்டிவிட்டு போனாய்
வலியே வலியே என்னை கொன்றுவிட்டு போனாய்

என்ற மதுமிதா பாடிய இந்த பாடலை காதலில் விழுந்து அடிபட்ட கதாநாயகி பாடுவது போல இருக்கு. அருமையான சோக மெலடி பாடல்.

சிரிக்கிறாளே சிரிக்கிறாளே - என்னை
கிறுக்கனாக்கி சிரிக்கிறாளே
என்ற காதல் தோல்வி பாடலை நிகில், மதுமிதா இருவரும் பாடியிருகிறார்கள். காதல் தோல்வி ஆனவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் இந்த பாடல்.

நான் வளர்த்த பச்சை ... ஆ
இன்னிக்கு பாசமாறு ......
எனத் தொடங்கும் பறவை சிலம்பாயி பாடும் ஒப்பாரி பாடலை இனி எங்கும் நாம் கேட்கலாம். (மரணம் நிகழ்ந்த இடங்களில் இந்த பாடல் இனிமேல் நிச்சயம் இடம்பெறும்).

பச்சை என்கிற காத்து - ரசிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

இயக்குநர் கீரா பேசுகையில் 'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் வெற்றி பெறவில்லையென்றால் நான் சினிமாவை விட்டே போய்விடுவேன்' என்றார்.

இவளவு நம்பிக்கையுடன் சொல்லும் இந்த இயக்குனரின் படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து .....

Thanks : cinema.dinamalar
என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



நந்தி - படப்பாடல் விமர்சனம்


சில படப்பாடல்கள் முதல் முறை கேட்டும்போதே பிடிக்கும். ஒரு சில கேட்க கேட்க பிடிக்கும். ஒரு சில எத்தனை முறை கேட்டாலும் பிடிக்காது.

முத்துவிஜயன் பாடல் வரிகளில் பரத்வாஜ் இசையில் தமிழ்வாணன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதியபடம் "நந்தி".

நந்தி படப் பாடல்கள் முதல் ரகத்தை சார்ந்தவை. முதல் முறை கேட்டவுடனே பிடித்து போனது.


1. காதல் வயப்படும் போது பாடப்படும் பாடல் போல இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.
இது தான் காதல் என்பதா
இதயம் மாறிச் செல்வதா
சுகமான மெலடி. அதனை பிரசன்னா குரலில் குரலில் கேட்கும் போது ரொம்பவே இதமா, இனிமையா இருக்கு.

இதே பாடலை ஹரிஹரன் குரலிலும் கேட்டும் போது இன்னமும் சுவையாக இருக்கு.

பாடல் வரிகளை தெளிவாக கேட்குபடியான இசை கோர்வை. புல்லாங்குழலும் மிருதங்கமும் இசை ஜாலம் நடத்தியுள்ளன இந்த பாடலில்.

2. அடுத்து ஒரு குத்து பாடல்.
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்
பிடித்திருந்த ஆசை பேய்
லொங்கு லொங்குன்னு ஓடிச்சாம்
சின்னபொண்ணு & ராஜாமணி இணைந்து பாடி பிரட்டியிருக்கும் ஆட்டம்போட வைக்கும் ஒரு நாட்டுப்புற குத்துப் பாடல்.

3. அடுத்து கொஞ்சம் இரட்டை அர்த்தம் பொதிந்த ஒரு டூயட் பாடல்.
தண்ணிக்குள்ள தீப் படித்தது என்னவோ
இந்த தாமரைக்கு வேறு குளம் வெட்டவோ
கார்த்திக் & ஜனனி இணைந்து பாடியிருக்கும் பாடல். உருமியை சப்தம் கொஞ்சம் இதமாதான் இருக்கு.

சில இடங்களில் போக்கிரியில் கேட்ட "டோலு டோலுதான் " பாடலை நினைவு படுத்தும் இசை. பாடலை கேட்டும் போது கொஞ்சம் கிக் ஏறத்தான் செய்கிறது.

4. ஒரு தெய்வீக ராகத்தில் ஆரமித்து ஒரு குத்து பாடலாக பட்டையை கிளப்பும் பாடல்.
வேத கோசம் முழங்கவே
தேவ தேவர் மகிழவே
எனத் தொடங்கும் கர்நாடி பாடல் மெல்ல சூடு பிடித்து தெம்மாக்கு பாடலாக உரு மாறுகிறது.
இந்த பாடலை பாடியிருப்பவர்கள் : ஆனந்து, கார்த்திகேயன் , முகேஷ் , பரத்வாஜ் , கற்பகம் & சுர்முகி

5. மீண்டும் ஒரு சுகமான காதல் டூயட் பாடல். எனக்கு ரொம்ப பிடித்த அடுத்த பாடல்.
மயங்கினேன் மயங்கினேன்- உன்
மடியில் விழுந்து நொறுங்கினேன்
முகேஷ் & பிரியதர்ஷினி இருவரும் ரசித்து பாடியிருக்கும் பாடல்.

பிரியதர்ஷினி குரல் சில இடங்களில் சித்ரா அம்மாவின் குரலோடு ஒன்றுகிறது. கேட்ட கேட்ட மிகவும் பிடிக்கும் ரகம்.

ஆனந்தம் படத்தில் வந்த 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' பாடலை நினைவு படுத்துகிறது,


நந்தி - படப்பாடல்கள் அனைத்தும் முதல் முறையில் கேட்ட போது எனக்கு ரொம்பவே பிடித்துபோகிறது. உங்களுக்கும் பிடிக்கும். மறக்காமல் கேட்டு பாருங்கள்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

Thanks : 365 for Picture.

என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஏழாம் அறிவு - 01 அப்படியா!?

ரொம்ப சந்தோகம். நன்றி மக்கா!!!

இந்த கோழி பிறந்து ஒரு வருஷம் முடிந்தது. போதும்னு நினைத்து என்னை சூப்பு வைத்துவிடாதீர்கள்! ஆதரவு தாருங்கள். இன்னும் சிறப்பாக நல்ல விசயங்களை எழுத்து முற்படுகிறேன்.

என் எழுத்தையும் ரசிக்கும் நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நல்லதை படியுங்கள். ஆதரவு தாருங்கள். உங்கள் ஆசியுடன் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்.

இன்று ஏழு டைம் பாஸ் செய்திகள் பற்றி பார்ப்போம்.

1. படம் சொல்லும் பாடம்

வாத்தியார் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கேள்வி ஒன்றை கேட்டா அதற்கு உரிய பதிலை தெரியாத மாணவன் இப்படி சாமர்த்தியமா பதில் எழுத அதற்கு அந்த வாத்தியாரும் சாமர்த்தியமா எப்படி மார்க் போட்டதை நீங்களும் நன்கு போட்டோவை பெரிது படுத்தி பாருங்கள்.


2. தீப்புண் விரைவில் குணமாக...

தீப்பட்ட இடத்தில் பீட்ருட் சாற்றைத் தடவ தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும்.

தேங்காய் எண்ணையுடன் பீட்ருட் சாரை கலந்து தடவி வர விரைவில் தீப்புண் குணமாகும்.

3. சர்க்கரை நோயைக் குணப்படுத்த...

தினமும் காலையில் வெருவயிருடன் தண்ணீரை குடித்துவந்தால் சர்க்கரை நோயைக் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

4. முதல் நாணயம்

தற்போதுள்ள துருக்கி நாட்டை 600-610 ஆம் ஆண்டு ஆண்டுவந்த Alyattes என்ற அரசனால் முதல் முறையாக நாணயம் முறை உருவாக்கப்படாது. 13x10x4 மி.மீ உருவம் & 4.71 கிராம் எடை கொண்டது. தங்கம் + வெள்ளியால் வேலைபாடு செய்யப்பட்டது இந்த நாணயம்.

5. முகம் அழகாக...

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப்பருக்கள் நீங்கி, முகம் பளப்பளப்பாக தொளிக்கும்.


6.இன்றைய கண்டுபிடிப்பு

உலகின் முதல் நிலத்திலும் நீரிலும் நீந்தும் கார் (sQuba, world's first swimming CAR).




7. காதல் தத்துவம்

காதல் என்பது கார் மாதிரி
சிலருக்கு கிஃப்டா கிடைக்கும்
சிலருக்கு லிஃப்டா கிடைக்கும்!


என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top