கவலை - ஒரு பக்கக் நீதிக்கதை

காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே! கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது?" என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.


அப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், "என்னப்பா, உனக்கு என்ன கவலை? உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்?" என்று கேட்டது.

"இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன்" என்றது யானை.

யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.

அன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.

கதையின் நீதி:-

கவலையைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், மற்ற இன்பங்கள் காணாமல் போய்விடும்.


ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்

இன்றைய தேதியில் தயா‌ரிப்பாளர்கள் பயமில்லாமல் அணுகக் கூடிய இயக்குனர் ராஜேஷ் எம். சிம்பிளான பட்ஜெட்டில் அதைவிட சிம்பிளான கதையை ஜாலியாக எடுப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. கதை இருக்கிறதோ இல்லையோ கல்லா நிறைவது கன்ஃபார்ம்.

சிவா மனசுல சக்தியை தொடர்ந்து இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழகமெங்கும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி விஷயத்தில் கை தேர்ந்தவர் என்பதால் தனது திரையுலக பிரவேசத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இவரைத்தான் தேர்வு செய்திருக்கிறார்.

ராஜேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ஒரு கல் ஒரு கண்ணாடி. துணைப் பெயர், ஓகே ஓகே.


ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நா.முத்துகுமார் அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார்.

உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நட்சத்திரம் சந்தானம் நடித்துள்ளார்.

ஆர்யா, ஆண்ட்ரியா, சினேகா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள்.

பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.



01. அடடா ஒரு தேவதை வந்து போகுதே...

வழக்கமான கார்த்திக்கின் மென்மையான குரலில் ஒலிக்கும் பாடல். சில இடங்களில் கவினரின் வரிகள் அருமை.

கோவில் படத்துல வரும் 'சிலு சிலுவென' பாடலை கொஞ்சம் நியாபகம் படுத்தும் பாடல் இது. கிடார் மற்றும் பிற இசை கருவிகள் கொண்டு புதிய இசை கோர்வை தந்து ஒரு வழியாக சமாளித்து இருக்கிறார்.
இவள் யாரிவள் இந்திரன் மகனா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா

02. அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே...

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

03. அழகே அழகே அழகின் அழகே நீயடி...

குட் லவ் பீல் சாங். முகேஷ் மற்றும் ஸ்ரீமதுமிதா குரலில் ஒரு மெல்லிய சோகம் வந்து குடிகொள்ளும் பாடல் இது.

பாடல் வரிகளை கேட்ட கேக்க பட விசுவலை பார்க்க மிக ஆசையா இருக்கு. எல்லாம் ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம் கையில் இருக்கு..... பார்ப்போம் என்ன செய்திருக்கிறார் என்று....
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!


04. காதல் ஒரு பட்டர்ப்ளை போல வரும் ...

Fall in love at first sight.

காதல் மெலடி..... எனக்கு பிடித்த பாடல் இது.

பாடல் வரிகளில் இடை இடையே கிடார் ஜாலம் செய்கிறது..... 'என்னமோ ஏதோ..' பாடிய ஆலாப் ராஜு மீண்டும் ஒரு ஹிட் பாடலை பாடியிருக்கிறார். இவர்களுடன் ஹேமச்சந்திரன் + சுனிதா சாரதி இருவரும் தங்களில் பங்களிப்பை மிக சிறப்பாக செய்திருகிறார்கள். பாடல் மிக அருமையா இருக்கு கேக்க.

05. வஞ்சரம் மீனு வவ்வாலு.. கெடைச்சா கெளுத்தி விராலு...

'Beware of girls'....

மீண்ட நாளுக்கும் பிறகு ஒரு கானா + சரியான குத்து பாடல். எனக்கு பிடித்த பாடல் இது.

காதல் + பெண்களிடம் எப்படி எல்லாம் ஆண்கள் மாட்டி தவிகிரார்கள் என்று சொல்லும் பாடல். வாரணம் ஆயிரம் படத்து வந்த 'அவ என்ன என்ன....' பாடல் நினைவு படுத்தும் பாடல்.

'கானா புகழ்' வேல்முருகன் சும்மா பட்டையை கிளப்பியிருக்கிறார். இவருடன் நரேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து மேலும் பாடலுக்கு அழகு சேர்த்து இருக்கிறார். முத்துகுமாரின் பாடல் வரிகள் மிக அருமை.
கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

Source : Paadalvarigal.com

'காதல் ஒரு பட்டர்பிளை + வஞ்சரம் மீனு வவ்வாலு ' எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். மொத்தத்தில் காதல் + நட்பு + சோகம் என அனைத்து உணர்வுகளையும் வெளிபடுத்தும் படம் தொகுப்பு இந்த பட பாடல்கள்.

பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



84வது ஆஸ்கார் விருது

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலில் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தி ஆர்டிஸ்ற் திரைப்படம் சென்ற ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

கறுப்பு வெள்ளையில் தயாரிக்கப்பட்டு, வசனம் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அனைத்து திரைப்படங்களையும் தோற்கடித்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஏற்கெனவே இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருதையும் வென்று சாதனை படைத்திருந்தது.

தி ஆர்டிஸ்ற் படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த மேக்கப் விருதுகள் கிடைத்தன. பரிசளிப்பில் பேசிய இயக்குனர் திரையுலகில் இப்படம் ஒரு சரித்திர மாற்றம் என்றார்.


ஆஸ்கார் விருதுகளின் விபரம் வருமாறு :

சிறந்த திரைப்படம் : ’The Artist’
சிறந்த டாக்குமெண்டரி பிலிம் : ‘Undefeated’
சிறந்த டாக்குமெண்டரி குறும்படம் : ‘Saving Face’

Video Trailer for 'The Shore'



சிறந்த குறும்படம் : ‘The Shore’
சிறந்த அனிமேஷன் திரைப்படம் : ‘Rango’
சிறந்த அனிமேஷன் குறும்படம் : ‘The Fantastic Flying Books of Mr. Morris Lessmore’
சிறந்த வெளிநாட்டு படம் : ‘A Separation’


சிறந்த நடிகர் ஆண் : Jean Dujardin (‘The Artist’)
சிறந்த பெண் நடிகை : Meryl Streep (‘Jernladyen’)
சிறந்த துணை நடிகர் : Christopher Plummer (‘Beginners’)
சிறந்த துணை நடிகை : Octavia Spencer (‘The Help’)


சிறந்த இயக்குநர் : Hazanavicius (‘The Artist’)
சிறந்த கலை இயக்குநர் : ‘Hugo’
சிறந்த படத்தொகுப்பு : ‘The Girl With The Dragon Tattoo’

சிறந்த திரைக்கதைக்கான நூல் : ‘The Descendants’
சிறந்த திரைக்கதை மூலப்பிரதி : ‘Midnight In Paris’

சிறந்த ஆடை அலங்காரம் : ‘The Artist’
சிறந்த ஒப்பனை : ‘Jernladyen’

சிறந்த பாடல் : ‘Man Or Muppet’ (‘The Muppets’)
சிறந்த இசை : ‘The Artist’
சிறந்த பின்னணி இசை : ‘Hugo’
சிறந்த சவுண்ட் மிக்சிங் : ‘Hugo’
சிறந்த கமேரா : ‘Hugo’
சிறந்த விஷ்யுவல் எபக்ட் : ‘Hugo’

'The Artist' Movie Trailer :



Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கண்ணா தேங்காய் லட்டு தின்ன ஆசையா ?

இனிப்புகளில் லட்டு மிகவும் சுவையானது. அனைவராலும் விரும்பப்படுவது. வீடுகளில் சிறிய அளவில் சுவையான தேங்காய் லட்டு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்:-

  • தேங்காய் - ஒன்றரை மூடி
  • கடலைமாவு - அரை கிலோ
  • சர்க்கரை - 800 கிராம்
  • முந்திரி - 25 கிராம்
  • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
  • தே.எண்ணெய் / நெய் - தேவையான அளவு

செய்முறை:-

  • சர்க்கரையை கெட்டிப்பதத்தில் பாகு காய்ச்சுங்கள்.

  • இரண்டு மூடி தேங்காயை துருவி பால் எடுங்கள்.

  • அந்தப் பாலில் கடலைமாவை கரைத்து தேங்காய் எண்ணெயில் பூந்தியாக போட்டு, பாகின் சூடு ஆறுமுன்னே அதில் கொட்டுங்கள்.

  • அரைமூடித் தேங்காயை சிறுசிறு பற்களாக வெட்டி, அதையும் முந்திரியையும் தனித்தனியாக தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பாகில் சேருங்கள்.

  • ஏலக்காயை உரித்து விதைகளையும் அதில் போட்டு அனைத்தையும் கெட்டியாக பிசைந்து உருண்டை பிடியுங்கள்.

  • தேவைப்பட்டால் வறுத்த லவங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். சுடச்சுட சுவையான தேங்காய் லட்டு ரெடி!
Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top