மன்மதன் அம்பு - பாடல் அறிமுகம்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கமலஹாசன் + திரிசா நடிப்பில் K.S.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. பாடல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமா + இளமையோடு இருக்கு. முதல் முறை கேட்டும் போதே அனைத்து பாடல்களும் பிடித்துவிடுவது கூடுதல் சிறப்பு.

கமலின் சேஷ்டைகளை காண ஆவலுடன் கார்திருக்கிறேன். கூட திரிஷா குட்டி வேற இருக்கும் போது கமலுக்கு சொல்லவா வேண்டும்!....

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

1. ஒய்யால...

இரு இளம் காதலர்கள் தங்களின் காதலை கொஞ்சம் காமம் கலந்து பாடும் ஒரு பாடல். காதல் வரிகளை விவேகா எழுத மகேஷ், சுசித்ரா & கார்த்திக்குமார் பாடியிருக்கும் அந்த பாடல். இதில் எனக்கு பிடித்த வரிகள்
சூடப் பூவத்தருவே
சூட ஆச தருவ
பாரு மொகப் பருவ
இத்தனைக்கும் காரணம் - நீதானே!

2. கண்ணோடு கண்ணை ...

கமலின் தன்னிகரில்லாத கவிதை வரிகள். கமலும் திரிசாவும் பாடியிருக்கும் அந்த கவிதை வரிகளில் இலக்கியம் + காதல் + குறும்பு + கிண்டல் + பகுத்தறிவு + சமய சாடல் என்று ஒரு கதம்மாய் குலைத்து தந்துள்ளார்.

ஆளவந்தாளின் எழுதிய 'கடவும் பாதி மிருகம் பாதி' போல இதுவும் தனித்துவம் மிக்கதாக இருக்கு. மெல்லிய இசை கோர்வை + இருவரும் பேசியபடியே கவிதையை வாசிப்பது என்று கேட்க கேட்க ரசிக்கும்படி இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
பொடி நாடிய போட்டே இடை மெலியவேனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திருவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்.

3. நீல வானம் நீயும் நானும் ...

அழகான மெலடி. கமல் எழுதி பாட பின்னணியில் பிரியா ஹிமேஷ் ராகமாய் காற்றில் ஒலிகிறது.

தெளிவான வார்த்தை உச்சரிப்பு + மிருதங்கள் + ஜல் ஜல் என்று அந்த சப்தம் பாடலுக்கு மேலும் அழகு செய்கிறது. இந்த பாடம் மாதவனும் அமைந்தது போல இருக்கு. புதுமணத் தம்பதிகள் மனம் விட்டு பாடும் பாடல் போல இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி


4. போனா போவுதூன்னு விட்டீன்னா ...

முதலாளித்துவம் வேலைகேற்ற ஊதியம் பற்றி நண்பர்களும் கிடல் செய்து பேசி பாடும் ஒரு பாடல். அன்பே சிவம் படத்தில் பற்றி ஒரு பாடல் இருக்கும். அது போலவே இங்கேயும் ஒரு பாடல். எழுதியது பாடியது நம்ப கமல் தான். இதில் எனக்கு பிடித்த வரிகள்
காம தான பேத தண்டம்
நாலும் தோத்து போகும் போது
தகுடு தத்தோம் - செய்
தகுடு தத்தோம்

5. Who's The Hero ...

இரண்டு நாயகிகள் பாடும் பாடல் போல இருக்கு. ஒருவர் ஆங்கிலத்தில் மற்றொருவர் தமிழில் பாடும் படி இருக்கு. ஆண்ட்ரியாவின் குரலில் இன்னும் பெருகேருகிறது. பாடலை எழுதியவர் கமலஹாசன்.


6. மன்மதன் அம்பு...

அறிமுக பாடல் போல இருக்கு. அதற்கலம் பண்ணும் பாடல். பஞ்சாபி பாடல்களை வருவது போல டோலக்கு + ட்ரம்ஸ் பட்டை கிளப்பும் பாடல்

கமலஹாசன் எழுதிய வரிகளை DSP பாடியிருக்கிறார். இந்த பாடலை கேட்கும் போது சிங்கம் படத்துல வந்து "சிங்கம் சிங்கம் " என்ற பாடல் தான நினைவுக்கு வருது.

கவிதை வரிகளை சிதைக்காமல் நல்ல உச்சரிப்புடன் பாடியிருப்பது இந்த பாடல்கள் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும். மொத்தத்தில் மன்மதன் அம்பு பாடல்கள் - காதல் திருவிழா

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



வல்லக்கோட்டை - படவிமர்சனம்

மசாலா இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன் + ஹரிப்ரியா இணைத்து நடித்து வெளிவந்த திரைப்படம் வல்லக்கோட்டை.

நேற்று இரவு தானுங்க இந்த வல்லக்கோட்டை படத்த பார்த்தேன். 90-கலீல் வெளிவந்திருந்தால் இந்த படம் மிக பெரிய வெற்றியை கண்டிருக்கும். ஆனால் இப்போ தியாடரை விட்டு ....
கதை என்னனா ...

சிறையில் இருக்கும் முத்‌து(அர்ஜூன்), அங்கு சந்திக்கும் ஒரு கைதியின் (பிரேம்) தம்பிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் புரட்டித்தர ஒப்புக் கொள்கிறார். அதன்படி அதிர்ஷ்டவசமாக சிறையில் இருந்து வெளியே வருகிறார்.

வல்‌லக்‌கோ‌ட்‌டை‌ ஜமீ‌ன்‌ ஈஸ்‌வர பா‌ண்‌டி‌யனை‌(சுரே‌ஷ்), போ‌ட்‌டு தள்‌ளி‌ தனக்‌கு தொ‌ழி‌ல்‌ போ‌ட்‌டி‌க்‌கு ஆள்‌ இருக்‌க கூடா‌து என்‌று நி‌னை‌க்‌கி‌றா‌ர்‌ நா‌ச்‌சி‌யா‌ர்(ஆசி‌ஷ்‌ வி‌த்‌யா‌ர்‌த்‌தி‌).

பணத்திற்காக அர்ஜுன் செய்யாத கொலையை, செய்ததாக ஒப்புக்கொண்டால் அதிகமான பணம் தறுவதாக ஆஷிஷ் வித்யார்த்தி கூற, இதனை ஒப்புக்கொள்ளும் அர்ஜுன் கொலை பழியை ஏற்பதற்காக வல்லக்கோட்டைக்கு செல்கிறார்.

வந்‌த இடத்‌தி‌ல அவரை‌யு‌ம்‌, ஜமீ‌னி‌ன்‌ கணக்‌குப்‌பி‌ள்‌ளை‌ மகள்‌ அஞ்‌சலி‌யை‌யு‌ம்‌ (ஹரி‌ப்‌பி‌ரி‌யா‌) இணை‌த்‌து கதை‌ கட்‌டி‌‌ வி‌டுகி‌ன்‌றனர்‌. அதே‌ போ‌ல அஞ்‌சலி‌யி‌ன்‌ தங்‌கை‌யை‌ கவரி‌ங்‌ நகை‌ அடகு வை‌க்‌க வந்‌தா‌ர்‌ என்‌று போ‌லீ‌சி‌ல்‌ மா‌ட்‌டி‌வி‌டுகி‌றா‌ர்‌ வில்லன் வி‌ன்‌செ‌ன்‌ட்‌ அசோ‌கன்‌.

இப்‌படி‌ அப்‌பா‌வி‌களை‌ அசி‌ங்‌கப்‌படுத்‌துவதை‌ பொ‌றுக்‌க முடி‌யா‌த முத்‌து, வாயுபுத்ரன் என்‌கி‌ற பெ‌யரி‌ல் எதிரிகளை தும்சம் செய்கிறார். வல்லக்கோட்டை மக்களிடையே வாயுபுத்ரன் பரபரப்பாக பேசப்பட ஊரே அவரை சூப்பர் மேனாக கருதப்படுகிறது.

யாருமே பார்க்காத வாயுபுத்ரனை பார்க்க அனைவருமே ஆவலோடு இருக்க, போலி வாயுபுத்ரனாக அந்த ஊருக்கு வருகிறார் அர்ஜுனின் சிறை நண்பரான பிரேம். வில்லன்களோடு சேர்ந்து சுரேஷை கொலை பிரேம் போடும் சதி திட்டங்களை முறியடித்து எப்படி நாயகியுடன் இணைகிறார் என்பதுதான் படத்தின் முடிவு.

நான் ரசித்த சின்ன சின்ன காட்சிகள் :
  • தளபதி தினேஷின் சண்டை பயிற்சியும் அனல் தெறிக்கிறது. நிறைய காட்சிகள் ரிஸ்க் எடுத்து செய்துள்ளார்.
  • தினா இசையில் எஸ்‌.பி‌.பி‌. – ஜா‌னகி‌ இணை‌ந்‌து பா‌டி‌ய 'செம்மொழியே' பாடல் இதமாய் இருக்கிறது.
  • ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு அருமை. ஆற்றகரை அதன் சுற்றுபுறங்களை அள்ளிவந்து தந்திருக்கிறார்.
  • கஞ்சா கருப்புவின் காமெடி சில இடங்களில் சிரிக்கலாம்.
  • ஹரிபிரியா வழக்கமான மசாலா ஹுரோயினாகவே வலம் வருகிறார். சாரியில் அழகாக இருக்கிறார்.
  • 'Action King' என்ற பட்டபெயருக்கு ஏற்ப படத்தின் ஒரே ஆக்ஷன் தான். அதை குறையில்லாமல் அர்ஜூன் செய்திருக்கிறார்.
கடுப்பை கிளப்பின சில இடங்கள்
  • அர்ஜுன் போடும் கெட்டப்புகள் நாயகன், கிரிஸ், பைரட்ஸ் ஆப் தி கரிபியன் உட்பல நமக்கு அ‌டையாளம் தெரிவதும், வில்லன்களுக்கு தெரியாமல் போவது
  • படம் முழுக்க அர்ஜூனை 'வாயுபுத்ரன்' என்று கூறி நம்மையும் சேர்த்து முட்டாளாக்க பார்கிறார் இயக்குனர்.
  • அர்ஜூனுக்கு வயசாகி போனது பல காட்சிகளை பார்க்க முடியல.
  • வழக்கமான டம்மி வில்லன்கள் பட்டாளம். ஒரே இரைசல் தான்.
வல்லக்கோட்டை - சுமார்...immm முடித்தால் பாருங்க.



மைனா - நான் ரசித்த சில விஷயங்கள்

அழகா‌ன கதை‌க்‌களம், இயல்‌பா‌ன & ஆழமா‌ன அழகா‌ன கதை‌, கதை‌க்‌குள்‌ நகை‌ச்‌சுவை‌ என மி‌க யதா‌ர்‌த்‌தமா‌ன ஒரு காதல் கதை‌யை‌ "மை‌னா" என்ற பெயரில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க சென்றேன்.

கதை என்னனா ...

ஆதரவு‌க்‌கு யா‌ரும்‌ இல்‌லா‌மல்‌ சி‌றுமி‌ மை‌னா‌வு‌ம்‌(அமலா) அவளது அம்‌மா‌வு‌ம்‌ கடன்‌கா‌ரனா‌ல்‌ வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு வி‌ரட்‌டப்‌படுகி‌ன்‌றனர்‌. சி‌றுவன்‌ சுருளி (விதார்த்)‌ மை‌னா‌வை‌யு‌ம்‌ அவளது அம்‌மா‌வை‌யு‌ம்‌ தனது ஊருக்‌கு கூட்‌டி‌ச்‌செ‌ன்‌று தனக்‌கு தெ‌ரி‌ந்‌த பா‌ட்‌டி‌ வீ‌ட்‌டி‌ல்‌ தங்‌க வை‌க்‌கி‌றா‌ன்‌.

குழி பணியாரம் கடை‌ போ‌ட்‌டு பி‌ழை‌ப்‌பு‌ நடத்‌துகி‌றா‌ள்‌ மை‌னா‌வி‌ன்‌ தா‌யா‌ர்‌. மை‌னா‌வை‌ பள்‌ளி‌க்‌கூடத்‌தி‌ல்‌ வி‌டுவது, கூட்‌டி‌ வருவது என அவளுக்காக தன்னையே அற்பணிகிறான். இவனுக்கோ படி‌ப்‌பு‌ ஏறா‌ததா‌ல்‌ கி‌டை‌த்‌த வே‌லை‌யை‌ செ‌ய்‌கி‌றா‌ன்‌.
மை‌னா‌ 'வயசு'க்‌கு வருகி‌றா‌ள்‌. கூடவே‌ இருந்‌து தன்‌ கா‌சி‌ல்‌ எல்‌லா‌வற்‌றை‌யு‌ம்‌ செ‌ய்‌கி‌றா‌ன்‌ சுருளி‌. இருவருக்குள்ளும் காதல் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு கட்டத்தில் மைனா அம்மாவுக்கு அது தெரிய வந்து அவள் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்க அதன் பின்னர் கதை ஓட்டம் எடுக்கிறது.

மைனாவின் அம்மாவை சுருளி அடித்து துவைக்க அவனை போலீஸ் கைது செய்து 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படும் சுருளி ஒரு நாள் முன்னதாகவே ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான். அவனை பிடிக்க சிறை துறை & துணை அதிகாரிகள் இருவர் கிளம்பி சென்று சுருளியை கைது செய்து கொண்டு வரும்போது வழியில் நடக்கும் கதை தான் மீதி.
நான் ரசித்த சின்ன சின்ன காட்சிகள் :
  • மைனா படி‌ப்‌பதற்‌கா‌க மி‌ன்‌மி‌னி‌ப்‌ பூ‌ச்‌சி‌களை‌ பா‌ட்‌டி‌லி‌ல்‌ அடை‌த்‌து கொ‌ண்‌டு வரும்‌ கா‌தலன்.

  • அந்‌தப்‌ மி‌ன்‌மி‌னி‌ப்‌ பூ‌ச்‌சி உடை‌ந்‌து மி‌ன்‌மி‌னி‌ப்‌பூ‌ச்‌சி‌கள்‌ பறக்‌கும் வெ‌ளி‌ச்‌சத்‌தி‌ல்‌ கா‌தலர்‌கள்‌ பி‌ணை‌ந்‌தி‌ருக்‌கும்‌ கா‌ட்‌சி. சுட சுட ‌மைனா தரும் அந்த முதல் முத்தம். அட அட.... என்னத்த சொல்ல ...

  • சைக்கிள் டைனமோ ஒளியில் மைனா தேர்வுக்கு படிக்கும் காட்சியில் தியேடரே அதற்கலம் தான்.

  • தொட்டாசிணுங்கி இலையை மைனா தன் கண்விழியால் தொடும் இடம் - கவிதை.

  • தம்‌பி‌ ரா‌மை‌யா‌ மனைவியிடம் இருத்து வரும் கால் அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனைகள் அற்புதம். "மாமா நீங்க எங்க இருந்கிறீங்க " என்ற ரின்க் டோன் அழகு.

  • செவ்வாளை ராஜூவின் காது திருகல் அதற்கு வாத்தியாராக வருபரின் நடிப்பும் செம!

  • மலையிலிருந்து பேருந்து தவறி விழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. பஸ் விபத்து - நம் மனதை ஏதோ செய்கிறது. அந்த காட்சியை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அதுதான் அந்த டைரக்டர் கிடைத்த வெற்றி என நினைகிறேன்.
ரசித்த கதாபாத்திரங்கள் :-

'மைனா' கதாபாத்திரத்திற்கு அமலா கச்சிதமாக மிக பொருந்தியிருக்கிறார். கண்களாலே பட இடங்களில் பேசுகிறாள். ஒளிபதிவாளர் இவளை கண்களாலே காதலிதாரோ ? க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடுமைகள் பார்பவரை அழவைக்கும்.

அழுக்கு லுங்கி, பட்டன் போடாத சட்டை என இயல்பான கிராமத்து மனிதனாக சுருளி பாத்திரத்தில் விதார்த் வாழ்த்திருகிறார்.

தம்‌பி‌ ரா‌மை‌யா குணச்‌சி‌த்‌தி‌ர நடி‌கரா‌க, நகை‌ச்‌சுவை‌ நடி‌கரா‌க தன் பங்கிற்கு பலம் செய்துள்ளார். இயல்பான நடிப்பு.

போலீஸ் கேரக்டர்களில் வரும் சேது - சோகம், கோபம், ஆற்றாமை, பாசம் என் பன்முக நடிப்பு. அனைத்தும் நிறைவு. அவரது மனைவியா நடித்திருக்கும் அந்த பெண் நிச்சயம் பல பேரின் சாபத்தினை வாங்கிகொண்டிருப்பார். அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு. இப்படி ஒரு மனைவி கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவளவு தான் டா சாமீ !

உயரமான மலைகள்,பயமுறுத்தும் குன்றுகள், செங்குத்தான பாறைகள், குறுகிய ஓடைகள், நீர்நிலைகள், பசுமையான பிரதேசங்கள் அவற்றை ஊடுருவி செல்லும் சாலைகள் என அனைத்தையும் சுகுமார் அழகுற படமாக்கியிருக்கிறார்.

இமானின் இசையில் "ஜிங்கி ஜிங்கி, கைய புடி & நீ‌யு‌ம்‌ நா‌னும்‌" பா‌டல்‌கள்‌ நம்‌மை‌யு‌ம்‌ மீ‌றி‌ முணுமுணுக்‌க வை‌க்‌கி‌ன்‌றன.

மேலே சொன்ன அனைத்து விசயங்களை ஒருகிரனைத்து யாருமே யோசிக்காத கோணத்தில் ஒரு காதல் காவியத்தை படைதிருக்கும் டைரக்டர் பிரபு சாலமன்வை பாராட்டவேண்டியவர்.

மைனா - வித்தியாசமான் ஒரு காதல் கதை.

தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.



Related Posts with Thumbnails
 
back to top