சுறா படத்தின் ரிங் டோன் + பாடல் விமர்சனம்

இந்திய தொலைகாட்சிகளில் வலைபதிவில் முதல் முறையாக மணிசர்மா இசையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன் வடிவில் உங்களுக்காக இங்கே... இது விஜய்-ன் 50 ஆவது படம் என்பது கூடுதல் சிறப்பு .

சுறா படத்தின் பாடல்கள் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களே... சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன்


1. சிறகடிக்கும் நிலவு (பாடியவர் : கார்த்திக் & ரீட்டா, பாடல் வரிகள் : சிநேஹன் )

மணிஷர்மாவின் இந்த பாடல் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும்.
சில நேரம் யாரைகேட்டு
என் நெஞ்சில் நீ நுழைந்தாய்
Download : சிறகடிக்கும் நிலவு ரிங் டோன்

2. வெற்றி கொடி ஏத்து (பாடியவர் : ரஞ்சித் & முகேஷ், பாடல் வரிகள் : வாசில், S.F & ராஜ்குமார்)

ஓப்பனிங் பாட்டு போலதான் தெரிகிறது...
வெற்றி என்ற சொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே எங்கள் உதயம்
Download : வெற்றி கொடி ஏத்து ரிங் டோன்

3. வங்க கடல் எல்லை (பாடியவர் : நவீன் & மாலதி, பாடல் வரிகள் : கபிலன்)

செம குத்து... குத்து... குத்து பாட்டு. மாலதியின் குரல் பளிச்
ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்
Download : வங்க கடல் எல்லை ரிங் டோன்

4. தஞ்சாவூர் ஜில்லாக்காரி (பாடியவர் : ஹேராசந்திரா & சைந்தவி, பாடல் வரிகள் : ந.முத்துக்குமார்)

சும்மா கலக்கலா இருக்கு பாடல். ரொம்ப குத்தும் இல்லை.... ரொம்ப மெலடியும் இல்லை.
சூ மந்திரகாளி...
பொம்மாயி பொம்மாயி

வார்த்தைகள் மனதில் ஈஸியா ஒட்டிக்கொள்ளும்படி இருக்கு.

Download : தஞ்சாவூர் ஜில்லாக்காரி ரிங் டோன்

5. தமிழன் வீரத் தமிழன் (பாடியவர் : ராகுல் நம்பியார், பாடல் வரிகள் : கபிலன்)

தீம் சாங். விஜயை கொஞ்சம் ஓவரா கட்டவேண்டி எழுதபட்டபாடல் போல இருக்கு.
தன் நிழலைகூட மிதித்தால்
நெற்றிக் கண் திறப்பான்
Download : தமிழன் வீரத் தமிழன் ரிங் டோன்

6. நான் நடந்தால் அதிரடி (பாடியவர் : நவீன் & ஷோபா, பாடல் வரிகள் : கபிலன்)

இது மணிஷர்மா ஸ்பெஷல் டூயட் பாடல். "வா செல்லம் வாவா செல்லம்" தோரணை பட பாடல் போல தோணியது முதலில் கேட்டும்போது ...
என் பேர கேட்ட வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டதே எனக்கு டாட்டா
Download : நான் நடந்தால் அதிரடி ரிங் டோன்



சுறா படத்தின் பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக

சுறா மொத்தத்தில் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும் பாடல்கள் கொண்ட இசையாக இருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Source : uyirvani & isai.in



சரக்கு + பஸ் = எங்கே போகிறோம் ?

பதிவர்கள்/ வாசர்கர்களே, கீழ்வரும் நான்கு சம்பவங்களை பாருங்கள். அது போல நீங்கள்/உங்களால் மற்றவர் செய்யாமல் இருக்க வேண்டுகிறேன்.

சம்பவம் 1 :

ஞாயிறுகிழமை, ஒரு ஸ்கூல் படிக்கும் பையன், காக்கி டவுசரும் வெளிர் மஞ்சள் டிசைன் ஷர்ட் என் பார்க்க நன்றாக இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் நைசாக அரசாங்க மதுபான கடைக்கு வந்து, எதோ ஒரு சரக்கு ( பிராண்ட் ) பெயரை சொல்லி வாங்கியவன் திடீரென தன் கால்சட்டையில் ... அட போங்க சொல்லவே வெட்கமா இருக்கு...!



ஏன்பா தம்பி சரக்கு வைக்கிற இடமா அது...? சரக்கு உனக்கா? இல்லை உன்னை அனுப்பிய ஐந்தறிவு ஜீவனுக்கா? இது தான் பிஞ்சிலேயே பழுத்ததுன்னு சொல்றதோ?



சம்பவம் 2

ஒரு உயிரை படைத்து கண்ணும் கருத்துமாய் வளர்த்து பெரிய ஆளாக்கி பார்க்க நினைத்துகொண்டிருக்கும் இதயங்கள் இந்த நாட்டில் எத்தனை எத்தனை...! அவர்களின் நினைவுகளை சில நொடிகளில் தவிடு பொடியாக்க நினைக்கும் பள்ளி மாணவர்களை என்ன சொல்லவது ? அவர்களுக்கு தெரிந்தே அந்த விபரீத முயற்சிகளில் இறங்குவது ஏனோ? ஒரு சிலர் புகழ்ந்து பேசுவார்கள் என்ற நினைப்பில் இப்படி பஸ்ஸில் பயணிப்பது ஏனோ? நீங்களே படத்தை பாருங்க....


உங்க கூட பிறந்தவர்கள் தெரிந்தவர்கள் எவரேனும் இப்படி பயணித்தால் கண்டுயுங்கள். மனித உயிர் விலை பதிக்க முடியாதவைகள். இங்கே பாருங்கள், ஒரு சிறுவன், நம்பர் பிளாட் இருக்கும் இடத்தில் காலைவைத்து பயணிக்கிறான். என்ன நேரத்திலும் அது கீழே விழலாம். அப்படி சென்று அவன் சாதிப்பது சாதித்தது தான் என்ன? இப்படி ஒரு பயணம் தேவைதானா? சிந்தியுங்கள்.



சம்பவம் 3

தெரிந்தே மரணத்தை நோக்கி ஒரு பயணம். சின்னவர்கள் தான் அப்படி என்றால் இங்கே ஒரு வளர்ந்த சிறுவனின் செயலை பாருங்கள்.



ரயில் ட்ராக்கில் சைக்கிள் தள்ளிக்கிட்டு போறதற்கு... நடந்தே போலாமே? திடீரெண்டு அந்த ட்ராக்கில் ரயில் வந்தால் என்னசெய்ய முடியும்? யோசிக்க மாட்டார்களா இவர்கள்?



சம்பவம் 4

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சுன்னு சொல்வார்கள். இங்கே ஒரு ஆட்டோகாரர் படும் பாட்டை பாருங்கள்.



உதவிக்கு ஆள் இருக்கவும் ஏதோ அந்த ஆடோக்கார் சமாளித்தார். இல்லை எனில் அவரது நிலைமை என்னவாகியிருக்கும் ?

ஏதோ என் மனசுக்கு பட்டதை எழுதிவிட்டேன். யார் மனதையும் புண்படுத்த அல்ல. அவரவர் திருந்தினால் தான் உண்டு. No Advice.

நம் பதிவர்களும் வாககர்களும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இது போல எந்த ஒரு தவறையும் செய்ய மாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் உங்களிடம் இருந்து விடைவெறுகிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

இந்த புகைப்படங்களை தந்த தினமலருக்கு நன்றி.



திரை விமர்சனம் - Free Willy: Escape From Pirates Cove

நேற்று இரவு என் மனசு சரியில்லாமல்... எதாவது ஒரு வழியில் ரிலாக்ஸ் கிடைக்காதா என்ற மனநிலையில்... நேற்று வெளியான ஹாலிவுட் படம் "Free Willy: Escape From Pirates Cove" படத்தை பார்க்க ஆரமித்தேன். படம் முடிந்த போது மனசு மிகவும் அமைதியாக இருப்பதை உணர்ந்தேன்.


படத்தோட கதை என்னனா ...

படத்தின் கதை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. விடோவேத் ஜூ ஒரு கால்நடை மருத்துவர். அவரது 11 வயது மகள் கிர்ரா (Bindi Irwin). விலங்குகள் மீது மிகுந்த பாசம் உடையவள்.

ஒரு நாள், தன் தந்தை விபத்தில் சிக்க, மருத்துவர்கள் ஆறு வாரம் ஓய்வு எடுக்கும்படி சொல்கிறார்கள். அவருக்கு தன் மகளை எப்படி ஆறு வாரம் கவனித்துகொள்ளவது என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தன் தந்தை (Beau Bridges) கஸ்-யின் நினைவு வர, இவளை அங்கு கிர்ராவை அனுப்புகிறார். தன் தந்தையை பார்த்துக்கொள்ள முடியாமல் போனதை நினைத்து வருந்துகிறாள் கிர்ரா. அரை மனதுடன் இவளும் அங்கு செல்கிறாள்.

தாத்தா வந்து விமான நிலையத்தில் அழைத்துக்கொண்டு போக வரவில்லை என்ற வருத்தம் + நீண்ட வருடமாக இவளை வந்து பார்க்காத கோபம் இரண்டும் கலந்த நிலையில் தன் தாத்தா வீடு செல்கிறாள். அது... கடற்கரை ஓரம் அமைந்த குடியிருப்புகள். ஜன்னலை திறந்து பார்த்தால் கடல் தெரியும் வகையில் அமைந்த இடம்.

தன் தாத்தாவிடம் சரியாக பேசாமல் இருக்கிறாள் கிர்ரா. கஸ்-இன் உதவியாளர் ஒருவரின் மகனுடன் அந்த கடற்க்கரை அருகில் இருக்கும் வனவியல் பூங்கா சென்று வருகிறாள்.

அங்கே, பொழுதுபோக்கு நிறைத்த தீம் பார்க் ஒன்றையும் கஸ் நடத்தி வருகிறார். இவரது தீம் பார்க்குக்கு போட்டியாக ரோல்ப்-ன் தீம் பார்க் செயல்படுகிறது. கஸ் எவ்வளவோ முயசித்தும் தீம் பார்க்கை மேம்படுத்த முடியவில்லை.

ஒருநாள் பயங்கர மழை வந்து கஸ்-இன் தீம் பார்க்கை தும்சம் செய்துவிடுகிறது. மிகவும் சோர்ந்துபோகி விடுகிறார். அப்போது அவரது தீம் பார்க் ஏரியாவில் இருக்கும் நீர் நிலையில் ஒரு குட்டி டால்ப்பின் இருப்பதை கிர்ரா பார்த்துவிடுகிறாள். அதனை தன் தாத்தாவிடம் + நண்பனிடம் சொல்லி சந்தோசப்படுகிறாள். அதனிடம் மெல்ல மெல்ல பாசம் வைக்கிறாள்.

பார்வையாளர்கள் நிறையப்பேர் வர வர... அதனைக்கொண்டு அந்த தீம் பார்க்கை வில்லி(Willy) என்று பெயர் மாற்றி மேம்படுத்திகிறார் கஸ். இதனை காணும் ரோல்ப் அந்த டால்பின்னை விலைக்கு கேட்கிறார். கஸ் ஒருவழியாச சம்மதித்து பணத்தையும் பெற்றுவிடுகிறார். இதனை அறிந்த கிர்ரா + தன் நம்பனுடன் சேர்ந்து டால்பினை அதன் கூட்டத்துடன் சேர்த்துவிட முடிவு செய்கிறார். ரோல்ப் கோபமடைய... தாத்தாவும் செய்வது அறியாமல் திகைக்க... கிர்ரா டால்பின்னை எப்படி காப்பாற்றுகிறாள் எப்பது தான் மீதி கதை.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

  • படம் மெல்ல மெல்ல கதைக்குள் நம்பி எழுத்துசெல்வது படத்தின் சிறப்பு. படம் முடியும் போது நாமும் ஒரு கிர்ராவாக மாறியிருப்பது அழகு. இதிலேயே டைரக்டர் வெற்றியும் பெறுகிறார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும்படி இருப்பது இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதிசெய்யும்.

  • ஒளிபதிவும் குறிப்பிடப்படவேண்டிய ஓன்று. மிக தெளிவு. சபாஸ்!

  • கிர்ராவாக Bindi Irwin ( மறைந்த முதலை மனிதர் ஸ்டீவ் இர்வின்-இன் மகள் ). என்னமா நடித்திருக்கு. முதல் படம் என்பது போலவே இருக்காது. அதுவும் டால்பினுடன் பழகும் காட்சிகள் + பயம் அறியாமல் டால்பின் முதுகில் சவரிசெய்வது மிக அழகு + தாத்தாவுடன் கோபப்படும் காட்சிகள் + நண்பனுடன் ஆடிபாடி திரியும் காட்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

  • தாத்தாவாக Beau Bridges. மனுசர் முகத்தில் அத்தனை நடிப்பை வெளிபடுத்துகிறார். சரியான பாத்திர தேர்வு. தன் மகளை பற்றி பேத்தியிடம் சொல்லும் போதும் + உணவு தயாரித்துவிட்டு பேத்தியை எழுப்பும் போதும் மனிதர் மனதில் நிற்கிறார்.

  • கோடை விடுமுறையை குடுப்பத்துடன் சென்று பார்க்கும்படி இருக்கிறது.

Free Willy: Escape From Pirates Cove - குடுப்பத்துடன் பார்க்க வேண்டிய படம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஒற்றை வரியில் இரட்டை அர்த்தம்

கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்கள் பல மறக்க முடியாதவைகள். இப்பவும் சில நமக்குள் அவ்வபோது வந்து செல்லும். வகுப்பறையில் அதுவும் தமிழ் வகுப்பில் நடக்கும் கூத்துகள் மிக அதிகம். பல நாட்கள், ஆங்கில வகுப்பில் ஒன்றும் புரியாமல் ஆமர்ந்தது உண்டு... சில நேரம் அதே வகுப்பில் சுவையாக இருததுவும் உண்டு.

இங்கே, அது இருபாலரும் படிக்கும் கல்லூரி. அந்த ஆங்கில கல்லூரி பேராசிரியர், ஒரு ஆங்கில வாக்கியம் ஒன்றை எழுதுகிறார்.

அதனை சில ஒன்றை எழுத்துக்களைக் கொண்டு மாற்றியமைக்க சொல்லுகிறார்.

A woman without her man is nothing



அந்த வகுப்பில் இருந்த பெண்களின் பலர் எழுதிய (அல்லது) மாற்றி எழுதிய வாக்கியம் இது தான்...

A woman: without her, man is nothing


அதே வகுப்பில் இருந்த ஆண்கள் எழுதிய (அல்லது) மாற்றி எழுதிய எந்த வாக்கியம் இது தான்...

A woman, without her man, is nothing


வரிகள் என்னவோ ஓன்று.... அது அவரவர் பார்வைக்கு ஏற்றபடிஅதனை உருவகபடுத்தி / மாற்றி எழுதிக்கொள்ளும் போது அதன் பொருளே மாற்றும் படி அவர்கள் எழுதியது உண்மையிலேயே பாராட்டபடிவேண்டியது.

இது போல உங்கள் கல்லூரி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே ....!

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Clean your KIDNEYS in less than rs 1


Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?




It is very easy... first we need to prepare the special tonic for that.
  • First take a bunch of parsley (MALLI Leaves) KOTHIMBIR (DHANIYA) and wash it clean.

  • Then cut it in small pieces and put it in a pot

  • Pour clean water and boil it for ten minutes

  • And, let it cool down and then filter it

  • And, pour in a clean bottle and keep it inside refrigerator to cool.

Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.

Parsley is known as best cleaning treatment for kidneys and it is natural!


Have a healthy life!!!

Please vote it. It will reach many peoples likes you.

Thanks : Rasitha & http://kitchengenie.blogspot.com



சமையல் குறிப்பு : ஆரஞ்சு பாயசம்

இனி குழந்தைகளுக்கு விடுமுறை காலம் தான். அவர்களுக்கு பிடித்த ஆரஞ்சு பாயசம் செய்துவது பற்றி தான் இன்று சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம். கலர்ப்புல்லான இந்த பாயசம் குழந்தைகளை நன்கு கவரும். அவர்கள் மிகவும் விரும்பி அருந்துவார்கள்.


தேவையான பொருட்கள் :
பால் - 4 கப்
ஆரஞ்சு பழம் - 4 நன்கு சுவையானது
சர்க்கரை - 3\4 (முக்கால்) கப்

ஆரஞ்சு எசன்சு - சில துளிகள்
புட் கலர் ஆரஞ்சு பவுடர் - ஒரு சிட்டிகை
கண் டென்ச்டுமில்க் - 1\2 (அரை) கப்

செய்முறை :
  • பாலில் சர்க்கரையைத் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள்.

  • பிறகு, ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் சேர்க்கவும்.

  • அதன் பிறகு, கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள்.

  • இது ஆறியதும் ஆரஞ்சு எசன்சு சேர்த்துக் குளிரவைக்கவும்.

  • ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி சிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனையும் சேர்த்து மேலும் குளிரவைக்கவும். இதோஆரஞ்சு பாயசம் ரெடி.
நன்றி : ராஜேஸ்வரி.

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



ரஜினியுடன் இணையும் நாகராஜன்

ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல், உடை, நடை... எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ரஜினி படத்தில் தவறாமல் இடம் பெறும் காட்சி - பாம்பு. பாம்புக்கும் ரஜினிக்கும் பல தொடர்பு உண்டு... சினிமாவுல!. அதில் சில ...


1. அவர் முழுக்கதாநாயகனாக நடித்த முதல் படம் "பைரவி". அந்த படத்துல படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போது ஒருவித ஈர்ப்பு அனைத்து ரசிகனுக்கும் வரத்தான் செய்யும். என்னா ஸ்டைலு ... என்னா ஸ்டைலு ... அட அட ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.
'நண்டூறுது, நரியுருது' என்ற பாடல். தங்கையை இழந்து தவிக்கும் ஒரு அண்ணனின் சோக கானமான இது கேட்போர் நெஞ்சை இப்பொழுது கூட உருக்கிவிடும். அந்தளவிற்கு ஒரு அருமையான பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.

"டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று ரஜினி அவர்கள் அந்த படத்தின் இயக்குனரிடம் சொன்னதை எப்போதோ படித்தது நினைவுக்கு வருது. GREAT!

2. அன்று ஏற்படுத்திக்கொண்ட பாம்பு நட்பு அதன் பிறகு "தம்பிக்கு எந்த ஊரு". இந்த படத்துல நம்ப தலைவரு ஒரு "கில்மா" புக்கை கட்டிலில் அமர்ந்த படி படிக்கும் போது ஒரு நல்லபாம்பு இவர் அருகே வந்து படமெடுத்தபடி வரும் நகைச்சுவைக் காட்சியை எவராலும் மறக்க முடியாது.
'தம்பிக்கு எந்த ஊரு' படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு கூடவே இலவச இணைப்பாக நினைவுக்கு வருவது கீழ்வரும் பாடலும் தான்.

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க...

3. தலைவரின் பாம்பு சென்டிமெண்ட் செமத்தியாக ஓர்க் அவுட் படங்களின் அண்ணாமலையும் ஒன்று.
சின்னஞ்சிறுசுகள் விழுந்து விழுந்து சிரித்த இடம் அது.

பாம்பு காமெடி சிறுசுகளுக்குன்னா... கடவுளே கடவுளே காமெடி இளசுகளுக்கு. அந்த அளவு தலைவரின் நகைசுவை மிளிரும் காட்சி பாம்புடன் இணைந்து சும்மபின்னியிருப்பார்.


4. படையப்பா படத்துல இவர் தோன்றும் காட்சியே மிக அற்புதமா அமைந்திருக்கும். பாம்பு புத்துல கையை விட்டு நல்லப்பாம்புவை எடுத்து ஒரு சின்ன முத்தம் கொடுத்து விட்டுவிடுவார். அந்த காட்சியில், தலைவரின் முகம் காட்டும்போது தியேடரில் விசில் பறக்கும் பாருங்க... அட அட .... தலைவரு தலைவரு தான். கூடவே நம்ப A.R.ரகுமான் சார் இசையில் சும்மா பின்னியிருப்பார்.
இந்த படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது இரண்டு நினைவுகள். ஓன்று சிவாஜி + சௌந்தர்யா இருவரும் சினிமா உலகைவிட்டு மறைந்தது. மற்றொண்டு, நீலாம்பரி கதா பாத்திரம்.

5. சந்திரமுகியில் வழக்கமா ரஜினி படங்களில் வரும் பாம்பு காட்சிகள் இதில் இல்லை. ஆனால், பாம்புகளுடன் இவர் நடித்திருப்பார். பாம்பும், சந்திரமுகியின் படமும், வேட்டைய ராஜாவின் படமும் காண்பிக்கும் பொழுது, 'அமானுஷ்ய' உணர்வு நம்முள் ஏற்படும்.
இந்த படம் நினைவில் வரும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது ரஜினி + வடிவேலு காமெடி நம் வயிறை பதம் பார்த்ததுதான். அதுவும் வடிவேலு சொல்லும் வசனம் வெகு பிரபலம். "மாப்பு ... மாப்பு.... வட்சுடாண்டா பெரியா ஆப்பா.." ன்னு சொல்லிகேட்டே அந்த பெரிய பங்களாவில் இருந்து வெளியே வருவார். மறக்க முடியாத ஓன்று.

"என்ன கொடும சரவணன் இது... "-ன்னு நம்ப இளைய திலகம் பிரபு தலையில அடிச்சிகிற காட்சி + ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு.

அடுத்த படமான ரோபோவில் இதேபோல ஏதாவது பாம்பு காட்சியை எதிர்பாக்கலாமா...!? இதனை படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளலாமே...!

இவ்வளவு நேரம் படித்த நீங்கள் எனக்காக ஒரு ஓட்டு போடுங்களேன்... நன்றி மீண்டும் வருக.



'கடவுள்... என் மதிப்புக்குரிய எதிரி!'

கே.எஸ்.நரசிங்க சாமின்னு ஒரு கன்னடக் கவினர் கடவுள்கிட்டே கவிதை மூலமா பேசுவார்.

"ஆகாயம் உன்னுடையது, பூமி உன்னுடையது என்கிறார்கள். நீ மிகப் பெரியவன் என்கிறார்கள். அப்படியே இருந்தாலும், நீ என்னுடைய மதிப்பிற்குரிய எதிரி. உன் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைக்காதே!. என் கிரீடம் எனக்கு வேண்டவே வேண்டாம்.

என் அப்பாவும் அம்மாவும் தோளோடு தோள் உரசிக்கொண்ட தருணத்தில் வெளியான காம வெப்பத்துக்குப் பிறந்த குழந்தை நான்.

ஒரு பெண் வயிற்றில் இருந்து இந்த உலகத்துக்குப் பிறந்து வந்தேன். இறக்கும் போது பூமி என்கிற இன்னொரு பெண்ணின் வயிறுக்குள் போகிறேன். இடையில் நீ, நட்சத்திரமாக இருக்கலாம். நட்சத்திரங்களால் ஆன மாலை என்றாலும், அந்தப் பாரத்தை என்னால் துக்கித் சுமக்க முடியாது.

கடவுளின் மகிமையைப் பற்றி என் பிள்ளைகளுக்குப் போதிப்பதை விட, சக மனிதனை எப்படி நேசிப்பதுனு அவங்களுக்கு கத்துக் கொடுத்தா போதுங்கிற கட்சி நான்".

நம்பிக்கை இல்லாத ஒரு விசயத்துல வேஷம் போடுறதைவிட, உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்.... ஒருவேளை அப்படின்னு ஒருவர் இருந்தா.!


இந்த தகவலை நம்ப 'செல்லம் புகழ்' பிரகாஷ்ராஜ் தனது "சொல்லாததும் உண்மை" என்ற தொடரில் எழுதியது.

என்ன நண்பரே உங்களுக்கு இந்த தகவல் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு என்னக்காக போடுங்கள். நன்றி மீண்டும் சிந்திப்போம்.



சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை

செட்டிநாட்டு சமையல் குறிப்பு ஒன்றைத்தான் இன்று நாம் சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம். அந்த பலகாரத்தின் பெயர்தான் "மரக்கறிக்காய் தோசை". இது செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஓன்று. பலகாரத்தின் பேறே சும்மா அசத்துல்ல... வாங்க அதனை செய்வது எப்படி என்பதனை கீழே காண்போம் வாருங்கள்.


தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை கப்

காய்ந்த மிளகாய் - 8
சோம்பு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தேங்காய் துருவல் - கால் மூடி
சின்ன வெங்காயம் - அரை கப்
எண்ணெய் - ஒன்றரை கப்

செய்முறை :
  • அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை முதல் நாள் இரவு கழுவி ஊறவைக்கவும்.

  • மறுநாள் காலை, சற்றே கரகரப்பாக அரைக்கவும். இப்போது மாவு தயார்.

  • மிளகாய், சீரகம், சோம்பு, உப்பு எடுத்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.

  • சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  • அரைத்த மாவுடன், துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், அரைத்த மிளகாய் விழுதை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக்கொள்ளவும்.

  • பின்னர் அதனை சூடேறிய தோசைக்கல்லில் சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றி, வேகும் முன்னை திருப்பி போட்டு அதனையும் அரை வேக்காடாக எடுக்கவும்.

  • பின்னர், வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணையை விட்டு சூடேரினதும் இந்த ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக போட்டு நன்றாக சிவந்து மொருமொருவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி.
நன்றி : வள்ளியம்மை பழனியப்பன்.

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



சகோதரிகளுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

இன்று மார்ச் 8ம் நாள் சர்வதேச 100வது பெண்கள் தினம்.

என் உடன்விறவா சகோதரிகளுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம் - பெண்!
விலையற்ற செல்வம் - பெண்! ....
கருப்பு வைரம் நம்ப வைரமுத்து அவர்கள் தன் அன்னையை பற்றி எழுதிய ஒரு கவிதை + கண்ணொளி உங்களுக்காக...





குரு சிஷ்யன் - படப்பாடல் அறிமுகம்

1990 - ஆம் ஆண்டு இளையாராஜா இசையில் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி + இளைய திலகம் பிரபு இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படம் "குரு சிஷ்யன்". அதே பெயரில் இப்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் இணைத்து நடித்துள்ள படம் "குரு சிஷ்யன்".



1. கிராமத்து பொண்ணு ஒன்னு நகரத்து பெண்ணின் நாகரீகத்திற்கு மாறும் போது நம்ப ஹீரோவும் ஹீரோயினும் பாடும் ஒரு கலாட்டா பாடல். பாடல் வரிகளில் கிராமத்து பெண்ணின் நாகரீகம் + நகரத்து பெண்ணின் நாகரீகம் இரண்டையும் சுட்டிக்காட்டி பாடும்ப்படி அமைத்திருப்பது அருமை.

இது ஒரு கலாட்டா பாடல். கேட்ட நல்லா இருக்கும். பழைய பாடல் மெட்டு. V.N.P.வெங்கட், ரீடா & தீனா குரல்களில் அந்த பாடல் ...
அடேக்கப்பா அடேக்கப்பா ஆளே மாறிடியே
தாவணிய கழட்டிப்போட்டு ஜீன்ச மாட்டிடயே
ஹேர் ஸ்டைல மாத்துறா லிப்டிக்க பூசுரா
லோஹிப்ப காட்டுரா ஹை ஹீல்ச மாட்டுரா
பட்டிக்காட்டு பொண்ணு ஒன்னு சிட்டி கேலா மாறிப்புட்டா
ஆட்டையா போடு நீ ஆட்டையா போடு...
2. மேலடிபாடல் இது. பாடல் வரிகள் மிக அருமை. காதல் ரசம் போங்க வரும் இந்த பாடம் நிச்சயம் சுந்தர் சி பாடுவது போலத்தான் இருக்கும். தீனாவின் பெயர் சொல்லும் பாடல் இது. ரீட்டாவின் பின்னணி ரீங்காரம் ரம்மியம். ரீட்டா , பல்லிராஜ் & தீனா குரல்களில் அந்த பாடல் ...
கதற கதற காதலிப்பேன்
சிறுக சிறுக சிறைப் பிடிப்பேன்
யானை காதில் எறுப்பைப் போல்
காதல் மெல்ல நுளைதிடுமே
3. "பத்திரகாளி" படத்தில் இடம் பெற்ற பாடல் இப்போது ரீமிக்ஸ் செய்து தந்திருக்கிறார் இசையமைப்பாளர் தீனா. பாடலில் அதிக இசை கருவிகள் பயன்படுத்தாமல் அமைத்த தீனாவுக்கு புண்ணியம் கிட்டட்டும். கதாநாயகி தனித்து பாடும் பாடல் இது. சுசித்ரா குரலில் இப்பாடல் கேட்டும்படி இருப்பது கூடுதல் சிறப்பு.
வாங்கோனா...
வாங்கோனா...
கேட்டேளே அங்கே அத பாத்தேலே இங்கே
4. ஓபனிங் பாடல் இல்லாமல் தமிழ் படம் இருக்க கூடாது என்ற நீதியை பின்பற்றி வரும் பாடல் இது. இது ஒருவகையில் தத்துவ பாடல் போலத்தான் இருக்கு. திப்புவின் குரலில் கேட்ட அருமையா இருக்கு.

"உயிரை கூட கொடுப்பேன்னு காதலிக்கிடே நடிக்கிறான்
சிலுமிசம் முடிந்தது சிம்கார்டை மாத்துறான் " - பாடல் வரிகள் என்னை கவர்ந்தவைகள்.
பழனி முருகனுக்கு மலை மேல வீடு
சபரிமல ஐயப்பனுக்கு காட்டுக்குள்ள வீடு
மதுர அழகருக்கு ஆத்துமேலவீடு
தம்முக்குள்ள கஞ்சாவ வஞ்சு இழுத்துபுட்டா உலகமே உன்வீடு

ஆண்டவா ஆண்டவா ஆறுபட ஆண்டவா
நாட்டுக்குள்ள எல்லோருமே நடிக்கிறாங்க ஆண்டவா
5. சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் சொந்த குரலில் பாடியிருக்கும் பாடல் இது. இருவரும் பாடி கலாய்ப்பது போல பாடல் வரிகள் இருக்கு. இடையில், "அடி ஆத்தாடி இவ மனசுல .." என்ற பாடலின் சில வரிகள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு. சத்யராஜ், சுந்தர் சி & சின்னபொண்ணு குரல்களில் அந்த பாடல் ...
குருவுக்கும் சிஷ்யனுக்கும் போட்டி ஒன்னு நடக்குதுங்க
கேடிக்கும் கில்லாடிக்கும் வேஷ்டி இப்போ கிளியுதுங்க
லொள்ளா தில்லா பறிச்ச ஒன்னு நடக்குதுங்க
ஜெயிக்க போவது யாருங்கா ?

சுப்பையா சுப்பையா நீ செய்யறது தப்பையா
வட்டி மேல வட்டி வாங்கி வளந்துபோச்சு தொப்பையா
எப்பையா எப்பையா நீ திருந்தறது எப்பையா ?
இப்பயா இப்பயா ஒரு பதிலா சொல்லு இப்பயா..
மொத்தத்தில் 5 பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு + ஆட்டம் போட வைக்கிறது. இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே அணுகவும்
Download Here :

http://www.tamilentertainments.com/.../Guru-Sieshyan


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்

முட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :
முட்டை - 5
சர்க்கரை - அரை கப்
தேங்காய்ப்பால் - அரை கப்
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - கால் கப்

செய்முறை :
  1. முதலில் முந்திரியை சிறிய துண்டுகளாக ஒடித்துகொள்ளுங்கள்.

  2. இந்த ஒடித்த முந்திரி துண்டுகளை சிறிது நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  3. முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேங்காய்ப்பால் + சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி/அடித்துக் எடுத்துக்கொள்ளுங்கள்.

  4. இப்போது வருத்த முந்திரியை சேர்த்து நன்கு கலக்குங்கள்.

  5. பெரிய தட்டு அல்லது ஏந்தலான பாத்திரம் ஒன்றில் ஊற்றி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேகவிடுங்கள். இப்போது சுவையான 'முட்டை வட்டில் அப்பம்' ரெடி.

  6. கத்தியால் வெட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாரவேண்டியது தான் பாக்கி. சும்மா பஞ்சு போல அருமையான மென்மையான ருசியான அப்பம் இருக்கும்.
ஒரு வேண்டுகோள்
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top