ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழம் 'ஏழைகளின் ஆப்பிள்' Mr.பப்பாளி. பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ.

பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது.

இதன் பயன்கள் மிக மிக அதிகம். மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அவற்றில் ஒரு சில ...


பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
பொதுவாக குழந்தைகளுக்கும் இந்த பப்பாளிப்பழத்தைக் கொடுத்தால், உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல், எலும்பு என்பன வலுவடையவும் உதவும். குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்குமாம்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
பப்பாளி பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.
பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
நரம்புகள் பலப் படவும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
நரம்புகள் பலப் படவும் பித்தத்தைப் போக்கி இதயத்திற்கு வலுசேர்க்கிறது.

தேள் கொட்டினால் அவ்விடத்தில் இதன் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிந்துவிடும்.
பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.
பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும்.

என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



பதிவர் வண்ணத்துபூச்சியார் + தமிழ் + மருத்துவக் குறிப்பு

ஜெயா டிவியில் பதிவர் வண்ணத்துபூச்சியார் பேட்டி

நண்ப பதிவர் வண்ணத்துபூச்சியார் @ சூர்யா சுரேஷ், ஜெயா டிவியில் இன்று காலை மலர் நிகழ்ச்சியில் வந்து சும்மா ஒரு கலக்கு கலக்கினார்.

பேட்டியின் பொது கையைக்கட்டிக்கொண்டு ஒரு பள்ளி மாணவனைப் போல மிகவும் பவ்வியமாக பேட்டிக்கொடுத்தார். நான் மிகவும் ரசித்து பார்த்தேன். உலக சினிமாவை பற்றி அவரது கருத்துக்களை மிகவும் தெளிவாக அதே சமயம் நம் நாட்டு திரை துறையினர் பற்றுயும் விட்டு கொடுக்காமல் பேசியது நன்றாக இருந்தது.

அதிக நேரம் ஈரானிய திரைப்படங்கள் பற்றியும் அதில் உள்ள மிக சிறந்த தொழில்நுட்பப கலைனர்கள் பற்றியும் தனது பார்வையில் மிக அழகாக சொன்ன விதம் அருமை. 120 அவார்ட்s பெற்ற 'மெக்கல்' திரை குடும்பத்தை பற்றி சொன்ன போது வியந்து போன்றேன்.

அவரது உலக பார்வை மிகவும் வித்தியாசமான அதே சமயம் தினமும் ஒரு திரைப் படம் பார்ப்பேன் என்று சொன்ன போது மலைத்து நின்றேன். தினமும் ஒரு படமா ? எவ்வாறு இது சத்தியம்? புரியவில்லை. (சூர்யா சார் நீங்களே இதருக்கு விளக்கம் தாரும்!)

உலக சினிமாவை பற்றி ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், வரும் புத்தக விழாவில் அதனை வெளியிட இருப்பதாக சொன்னார்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

எங்கும் தமிழ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிவாக நடவடிக்கை அனைத்தும் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் தமிழிலேயே மையோப்பம் இட வேண்டும் என்று துணைவேந்தர் திரு. தங்கராசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் நடைபுரைகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற்றன என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

வாழ்க தமிழ்!

மருத்துவக் குறிப்பு - அல்சர்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சு பொருள்களும் அறிப்பதனால் குடல் புண் என்கின்ற அல்சர் வருகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவந்தால் இந்த பாதிப்பில் இருந்து மீளலாம்.

நலமுடன் வாழ் வாழ்த்துக்கள்!

சிந்தனை

மகரிஷி ரமணர் அருளிய ஒரு சிந்தனை
"மனிதன், எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணிக்கொள்கிறான். நம்மை மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் எல்லாப் தொல்லைகளில் இருந்தும் விடுபட்டுவிடுவோம்"

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சுடச்சுட நான்கு தகவல்கள்

சுட சுட இன்றைய செய்திகள் நான்கு.

1. இந்திய நாணயம் இப்போது புதிய வடிவில் வெளிவர இருக்கிறது. அதன் மாதிரி வடிவம் இதோ.


2. மனோதத்துவ புத்தம் ஒன்றில் "மனதை தொட்ட ஆறு மூக்கியமான பாயிண்ட்" இதோ.
  1. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோமீட்டர் ஓடுங்கள்.

  2. பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்.

  3. பகலில் இரண்டுமணி நேரம் தூங்குங்கள்

  4. தினசரி பேபரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.

  5. தினமும் நண்பர்களுடன், காலையில் மூன்று மணி நேரமும் , மாலையும் மூன்று மணி நிறமும் மனம் விட்டு பேசுங்கள்

  6. ஒரு நாள் விட்டு ஒரு நாள், சினிமாவுக்கு போங்கள்.

இந்தனையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால், நீங்கள் வேலை வேட்டியில்லாதவர், உபயோகமான வேலை ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.

3. இன்றைய தத்துவம் - வில்லியம் மார்டின்
மனோவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காக கார்திருக்கின்றனர்.

4. ஒரு நகைச்சுவை - இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமோ ....?!
எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதைவிட ரெண்டு மடங்கா சொல்லன்னும்கிரத்துக்காக தலைவர் இப்படியா உளர்றது ?

அப்படி என்ன சொன்னாரு ?

எதிர்க்கட்சிக்காரங்க 2011-ல் ஆட்சியைப் பிடிப்போம்னு சொன்னதுக்கு, நாங்க ஆட்சியைப் 4022-ல் பிடிப்போம்னு தலைவர் பதிலடி கொடுத்திருக்காரே!?
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



கவிதை வரிகளுக்கு மெட்டமைத்த A.R.ரகுமான்

ரொம்ப நாளா இந்த பாடலை பற்றி எழுத நினைத்து ... எழுதிவிட்டேன். நம்ப வைரமுத்து சார் என்னமா 'யாக்கை திரி' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கார் இந்த படத்தில்.

'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' என்ற கவிதை தொகுப்பை படித்து ரசித்த மணிரத்தினம் சார் நம்ப ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமானிடம் தந்து, அந்த கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து மேலும் மெருகேற்றி ஒரு அற்புதமான பாடலாக வடிவமைத்ததை ஆயுத எழுத்து என்ற படத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்.

அந்த பாடல் mp3 வடிவில்



'யாக்கை' என்றால் 'உடல்' என்று அர்த்தம். உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்து சாரை என்னவென்று சொல்ல... ! ஹி இஸ் தி கிரேட்!

அந்த பாடலின் வரிகள்...
பானாஹ்...

யாக்கை திரி காதல் சுடர்- அன்பே
ஜீவன் நதி காதல் கடல்- நெஞ்சே
பிறவி பிழை காதல் திருதம்- நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம்- அன்பே

யாக்கை திரி காதல் சுடர்
பானாஹ்...

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் இறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் உறவோம் - பானாஹ்...

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
சன்மம் சூன்யம் காதல் பின்யம்
மானுடம் மாயம் காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறி பயனம் போகும்

யாக்கை திரி காதல் சுடர் - அன்பே
ஜீவன் நதி காதல் கடல் - நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் - நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் - அன்பே

யாக்கை திரி காதல் சுடர் - பானாஹ்...

(தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)...

வாக்கியங்களற்ற வார்த்தைகளால் கட்டப்பட்ட ஒரு கவிதை பாடலாகி விட்டது. பாடலின் காணொளி



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



உடல் எடையைக் கூட்டலாம் & குறைக்கலாம்!

உடல் எடையைக் கூட்டலாம், குறைக்கலாம்! எப்படி என்று நீங்களே கீழ் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ?

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில்
  • கறுப்புத் திராட்சை
  • பச்சைத் திராட்சை
  • பன்னீர்த் திராட்சை
  • காஷ்மீர்த் திராட்சை
  • ஆங்கூர் திராட்சை
  • காபூல் திராட்சை
  • விதையில்லா திராட்சை
என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.


உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெற என் வாழ்த்துக்கள்.



கீழே விழுந்த சட்டை - முல்லா கதை

ஒரு நாள், முல்லா தமது வீட்டு மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையல் அறையில் அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார்.

மாடியிருந்த முல்லா, திடீரென கால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.

'தடால்' என்ற சப்தத்துடன் ஏதோ ஓன்று விழுந்த சப்தத்தை கேட்ட மனைவி திடுக்கிட்டு "அது என்ன சப்தம்" என்று கேட்டாள்.

கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தடி விட்டவாறே "ஒன்றுமில்லை. மாடியிலிருந்த என் சட்டை கீழே விழுந்துவிட்டது" என்றார்.

"ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவளவு பெரிய சத்தம் கேட்டது ?" என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"சட்டைக்குள் நான் இருந்தேன்" என்று கூறி முல்லா சமாளித்தார்.

அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பத என்ற தோன்றவில்லை.
------

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!




The Tournament - ஹாலிவுட் பட விமர்சனம்

கடந்த ஒரு வாரமா நான் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தை பற்றி எழுத நினைத்தேன். இன்று தன் அதற்கு நேரம் கிடைத்தது. இந்த படத்தோட பேரு "தி டோர்னமென்ட் (The Tournament - 2009)". உங்களை 90% இந்த படம் திருப்தி படுத்தும்.


படத்தோட கதை என்னனா ...

ஒரு நகரில், யாரும் அவளவு எளிதில் கண்டுபிடிக்கமுடியாத அந்த கிளப்பில் ஏழு வருடத்திற்கு ஒரு முறை, பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் பணக்கார மனிதர்கள் கூடுவார்கள். அவர்கள் முன்பு மிக பெரிய திரை ஓன்று இருக்கும்.

பெரிய மேஜையின் ஓரத்தில் அந்த பணக்கார மனிதர்கள் அமர்ந்திருக்க, அவர்கள் முன்பு பணக் குவியல்கள். இவர்கள் இங்கே கூடி வந்தது ஒரு விளையாட்டை காண தான். அது தான் "சாவு அல்லது சாகடி".(kill-or-be-killed)

இதற்காக கடந்த ஏழு வருடத்தில் மிக திறமையாக, எதிரிகளை கொன்று வெற்றி பெற்றவர்கள் இந்த பந்தயத்தில் / விளையாட்டில் கலந்துகொள்லாம். இதற்காக 30 பேரை அந்த கிளப் தேர்வு செய்து திரையில் காட்டுவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சூது நடக்கும். இவர் தான் வெற்றிபெறுவார் என்று ஒவொரு பணக்காரனும் பணத்தை கட்டுவார்கள்.

இந்த விளையாட்டில் வெற்றி பெறுபவனுக்கு 30 மில்லியன் டாலர் பரிசு தொகை + "பெஸ்ட் Assassion" என்ற பட்டமும் கிடைக்கும்.

30 மணி நேரத்தில், 30 மனிதர்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு அந்த பரிசு தொகை. இவர்களை கண்காணிக்கும் பொறுப்பு இரண்டு பேரிடம் தரபடுகிறது. அவர்கள், ஒரு சிறு 'சிப்' (CHIP) ஒன்றை தயாரித்து அந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் நபரின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் பொருத்து விட்டு அவர்களின் செயல்களை கணிப்பொறி (Computer)மூலம் கண்காணித்து வருகிறார்கள்.


இந்த விளையாட்டில் எப்படியாது இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஒரு சீனப்பெண் லை லை ஹென் (Kelly Hu). அவள் மீது நிறைய பேர் பணம் கட்டுகிறார்கள்.. இந்த விளையாட்டு தொடக்கும் சற்று நேரத்திற்கு முன்பு நம்ம ஹீரோ ஜோஷு ஹார்லோ(Ving Rhames) வந்து சேருகிறார். இவர் கடந்த முறை இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்.

இவர் இந்த வருடம் கலந்துகொள்ள வந்ததே தன் மனைவியை கொன்றவன் இந்த விளையாட்டில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டு அவர்களை பழிவாங்கவும் + இந்த வருடம் வெற்றி பெறவும் வந்துள்ளார்.

இதில் கலந்து கொள்ளும் வீரரிடம் ஒரு செல் (Apple Cell Phone) போன்ற கருவி தருவார்கள். அதில் அந்த இடத்தில் இருக்கும் மற்ற வீரர்களை சிக்னல் மூலம் காட்டும். அதைக் கொண்டு வீர்கள் மற்றவர்கள் வீத்துவார்கள்.

விளையாட்டு ஆரம்பம் ஆகிறது.
....
....
இந்த விளையாட்டில் யார் வெற்றி பெற்றார்கள் ? ஹீரோ தன் மனைவியை கொன்றவனை கண்டுபிடித்தானா ? என்று ஒரு நல்ல DVD வாங்கி பாருங்கள்.


படத்துல என்னை கவர்த்தவைகள்...

  • இப்படத்தின் கேமிரா மேனுக்கும் + இசைக்கும் தான் என் முதல் பாராட்டுகள். Excellent Work!!

  • டைரக்டர் ஸ்காட் மான்(Scott Mann)-க்கு இது தான் முதல் படம். சும்மா பட்டைய கிளப்பியிருக்காரு. படம் ஆரம்பமே, கடந்த ஹீரோ முறை எப்படி வெற்றி பெற்றான் என்று தொடக்கும். அதிலிருந்து ஒவொரு நிமிடமும் நம்மை சீட் நுனிக்கே வந்து அவர செய்யும் சாகசம் + விறு விருப்பு. Superb!

  • இந்த விளையாட்டில் ஒரு 'பாதர்' தெரியாமல் வந்து மாற்றிக்கொள்ள, அவர் படும் பாடு நிச்சயம் ரசிக்க வைக்கும்.

  • அந்த சீனப்பெண் என்னமா சண்டை போடுது. சரியான நடிப்பு. ஹீரோவை விடவும் அதிகம் நம்மை கவர்வது இவள்தான்.

  • சண்டை காட்சிகளும் + கார் துரத்தல்கள் + துப்பாக்கி சத்தம் + ஓட்டம் என படத்தில் பயங்கர விறு விருப்பு. கிளைமேக்ஸ் யாரும் எதிர் பார்காதது. மிக அருமை.

இந்த படத்தோட டிரைலர்



The Tournament (2009)- Powerfull package - சண்டை + சஸ்பென்சு பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : கூழ் வற்றல் குழம்பு

நம் வீட்டில் அரிசியில் வடகம் செய்து வைத்திருப்பர். அதனை கொண்டு கூழ் வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். சும்மா காரசாரமா செய்து சாப்பிடுப் பாருங்கள். அதன் ருசியே தனி தான்.


தேவையான பொருட்கள் :

கூழ் வற்றல் வடகம் - 20
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
சாம்பார்பொடி - இரண்டரை (2 1/2) ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 7 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:
  • கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்).

  • வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் வெங்காயம்+பூண்டு சேர்த்து சற்று வதக்கவும்.

  • பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  • புளியையும் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியுடன் ஊற்றவும்.

  • அது நன்கு கொதித்து காயில் உப்பு சார்ந்ததும், ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும்.

  • கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Thanks : நஸ்ருல்லாஹ்



Happiness Comes From Giving

This story is about a beautiful, expensively dressed lady who complained to her psychiatrist that she felt that her whole life was empty, it had no meaning.

So, the lady went to visit a counselor to seek out happiness. The counselor called over the old lady who cleaned the office floors. The counselor then said to the rich lady"I'm going to ask Mary here to tell you how she found happiness. All I want you to do is listen to her."

So the old lady put down her broom and sat on a chair and told her story: "Well, my husband died of malaria and three months later my only son was killed by a car.
I had nobody... I had nothing left. I couldn't sleep, I couldn't eat, I never smiled at anyone, I even thought of taking my own life.

Then one evening a little kitten followed me home from work. Somehow I felt sorry for that kitten. It was cold outside, so I decided to let the kitten in. I got it some milk, and the kitten licked the plate clean.

Then it purred and rubbed against my leg and for the first time in months, I smiled. Then I stopped to think, if helping a little kitten could make me smile, maybe doing something for people could make me happy. So the next day I baked some biscuits and took them to a neighbor who was sick in bed.

Every day I tried to do something nice for someone.It made me so happy to see them happy. Today, I don't know of anybody who sleeps and eats better than I do. I've found happiness, by giving it to others."

When she heard that the rich lady cried. She had everything that money could buy, but
she had lost the things which money cannot buy.

Source : nidokidos


Minotaur - ஹாலிவுட் பட விமர்சனம்

கிரீஸ் நாட்டில் மினோடார் (Minotaur ) என்ற புராதன கதை உண்டு. அதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் படம் மினோடார் (Minotaur).


படத்தோட கதை என்னனா ...

முன்னொருகாலத்தில், காளை மாட்டு முகமும் மனித உடலும் கூடிய தெய்வத்துக்கு, மினோஸ் அரசன் (Deucalion) மூன்று வருடத்திருக்கு ஒருமுறை எட்டு இளம் கிராமத்து மனிதர்களை பலிகொடுத்து வருகிறான். அவர்களை எதிர்த்து இதுவரை யாரும் முன் வந்ததில்லை.

தேன்ஸ் நகரத்து தலைவன் Cyrnan. அவனது மகன் தியோ (theo) நகரில், செம்மரிஆடுகளை மேய்த்துக்கொண்டு நகரை பாதுகாத்து வருகிறான். அதே நகரில் வசிக்கும் டிரோவுக்கு நம்ப ஹீரோவை பிடிக்காது.

இந்தவருட இளம் பெண்கள் தேடுதல் ஆரம்பிக்க, தேன்ஸ் கிராமத்து மக்கள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ள, அவர்களில் சிலரை வலுகட்டாயமாக மினோஸ் அரசனின் அடியாட்கள் பிடித்துக்கொண்டு செல்ல அவர்களுடன் நம்ப ஹீரோ தியோ செல்கிறான்.

அவனின் காதலியை (பியன்) இதற்கு முன்னர்தான் அந்த அரசனின் ஆட்கள் பலிகொடுக்க கடந்த முறை இழுத்து சென்றுவிட்டனர். எப்படியும் அவனின் காதலி அங்கே தான் இருப்பாள். எப்படியாவது அவளை காப்பாற்றிவிட வேண்டும் என்ற தன்னலத்துடனே செல்கிறான்.

அவர்களில் ஒரு சிலரை அரசனின் சகோதரி (Raphaella) தேர்வு செய்து ஒரு கிணறு போல இருக்கும் 'அந்த'குகையில் விட்டுவிட்டால், மினோடார் தெய்வம் அவர்களை பதம் பார்த்துவிடும்.

அரசனின் சகோதரிக்கு நம்ப ஹீரோ மேல ஒரு காதல். அவனை அடைய தனியே சந்திக்கிறாள். இதனை அறிந்த அரசன் தியோவை மினொடர் கிணறு குகையில் அடைக்கபடுகிறான்.

ஹீரோவுடன் வந்த அனைவரையும் அந்த கிணற்றில் விட்டு விட, அந்த மினோடார் ஒரு காதல் ஜோடியை ஒரு .... பண்ணிவிடுகிறது.

ஹீரோவை காப்பாற்ற நினைக்கும் அரசியும் அந்த குகைக்கு வர, ஹீரோவை சந்தித்து அந்த குகையில் இருந்து வெளிவரும் வழி காட்டுவதாக கூறி அழைத்து செல்ல, அந்த வழியை அரசன் அடைத்துவிட பிரச்னை ஆரம்பிக்கிறது.

அதன் பிறகு, ஹீரோ தன் காதலியை கண்டானா ? எப்படி மினோடரை சந்திக்கிறான் ? எப்படி தப்பிக்கிறான் ? இவனுடன் இருத்த மற்றவர்கள் கதி என்ன ? என்று DVD வாங்கி பாருங்கள்.

படத்துல என்னை கவர்த்தவைகள்...
  • ராணியாக வருபவளின் கண்கள் காமத்தையும் ஏக்கத்தையும் பளிச்சுன்னு வெளிபடுத்தும் நடிப்பு மிக அருமை.

  • ஹீரோ ஓநாயை துரத்திக்கொண்டு செல்லும் காட்சி - சுப்பர்!!!

  • Jonathan English - இயக்கிய இந்த மினோடார் + அதன் திரை வடிவமைப்பும் மிக அருமை. மினோடார்க்காக கொடுக்கப்படும் இசை. மிரட்டல்!!

  • கேமிரா மிகவும் கடுமையாக உழைத்திருக்கு. மினோடார் வரும் இடங்களில் என்னமா ஒளிபதிவு செய்திருக்கிறார். அந்த மினொடர் துரத்தும் இடங்களில் + ஹீரோ தப்பும் காட்சிகளில் ஓடும் போது கேமிரா சும்மா மிரட்டுது.

  • இந்த படத்துல வரும் அனைத்து கதா பாத்திரங்களும் மிகவும் அழகாக + அருமையாக வடிவமைத்திருப்பார் இயக்குனர்.

இந்த படத்தோட டிரைலர்


இப்படத்தில் பணிபுரிந்தவர்கள்
Directed by ... Jonathan English
Starring * Tom Hardy ... Theo
* Tony Todd ... King Deucalion
* Michelle Van Der Water ... Queen Raphaella

Music by ... Martin Todsharow
Cinematography ... Nic Morris
Editing by ... Eddie Hamilton
Distributed by ... Lions Gate
Release date(s)... March 11, 2006

மினோடார் - சஸ்பென்ஸ் மூவி பிரியர்கள் இதனை ஒருமுறை பார்க்கலாம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



எதிர்கால வாழ்க்கை - முல்லாக்கதைகள்

ஒரு நாள், முல்லா தெருவழியாக நடந்து போய்கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடுசைக்குள் எதோ சப்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடுப்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு அனுதாபம் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

"இங்கே என்ன நடக்கிறது ?" என்று முல்லா வினவினார்.

"முல்லா அவர்களே இவனை பாருங்கள். ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான். அறிவுரை கூறிப் பார்த்தேன். அடித்து மிரட்டி பார்த்தேன். ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான்" என்றால் தாய் வேதனையோடு.

"குழந்தை நீ பள்ளிக்கூடம் போக வேண்டிய அவசியமில்லையா ? அது உன் எதிகாலத்துக்கு நல்லதில்லையா ?" என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

"நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை" என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும் முற்றும் பார்த்தார். தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஓன்று அவர் கண்ணில் பட்டது.

அதை எடுத்த முல்லா, துண்டு துண்டாக கிழித்துப் போட்டு விட்டார்.

அதைக்கண்ட தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

"அம்மா, முல்லா விலை உயர்ந்த துணியைக் கிழித்து பாழாக்கிவிட்டரே ?" என்று தகைபோடு கேட்டான் பையன்.

"பள்ளிக்கூடம் போகமேட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையே பாழாக்கி கொள்கிறாயே அதை விட இந்த விலை உயர்ந்த துணி பாழானது பெரிய விஷயமா ?" என்றார் முல்லா.

இந்த சொற்கள் அவன் மனதில் பெரிய மாறுதலை உண்டாகியது. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா, தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டு புறப்பட்டார்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



கட்டாயம் பார்க்கவேண்டிய புகைப்படங்கள்

கட்டாயம் பார்த்து ரசிக்கவேண்டிய மிக துல்லியமாக எடுக்கப்பட்ட அதிவேக புகைப்படங்கள். சிறந்த அதிவேக புகைப்படங்களாக இவைகள் தேர்வு செய்யப்பட்டவைகள்.

நீங்கள் மெல்ல நிதானமாக இந்த படங்களை பாருங்கள். எவளவு கடுமையான உழைப்பு இதன் பின்னணியில் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.










என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சுனிதா கிருஷ்ணன் - இவரல்லவா பெண்!

விஜி அக்காவிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் Dr.சுனிதா கிருஷ்ணன் பற்றி வந்த செய்தியை படித்த போது மனது ரொம்ப வலித்தது. எவளவு கொடுமையடா சாமீ!


ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌ வேண்டாம்.



சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது,
"சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? சுனிதா உங்களை வணங்குகிறேன்.

மேலும் நீங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ள இங்கே தொடுக

உதவ நினைப்பவர்கள் தொடர்புகொள்ள
Prajwala,
20-4-34,III Floor,
Behind Charminar Bus Stand,
Charminar,
Hyderabad.

நன்றி - விஜிஅக்கா



ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்

மணிரத்தினம் இயக்கத்தில் எனக்கு பிடித்த ஒரு காதல் பாடல் பற்றி நீண்ட நாளாக எழுதவேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுகிறது..

பொய் சொல்லிக் காதலிக்கும் உலகத்தில் ஒரு காதலன் மெய்சொல்லிக் காதலித்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் வைரமுத்துவின் வைர வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்.

இந்தப் பாடலைப், பாகிஸ்தான் பாடகர் அட்நான் சாமி உடன் சுஜாதா இணைந்து பாடியிருக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு பார்த்து ரசியுங்கள்.


நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதிகளில் வெள்ளப்பெருக்கு
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் -
மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும் - உன்
காமம் என்னை திருடும் போதும்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அற்யவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சதிதின் மேல் -
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

இந்த பாடல் இடம் பெற்ற படம் ஆய்த எழுத்து.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்கள்!

குறைந்த செலவில் ஒரு மருத்துவ குறிப்பு ஒன்றை இன்று பார்ப்போம்.

வெங்காயம் பற்றி நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இது இருக்கும். இந்த வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், பச்சையாக உட்கொள்ளும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப் படுத்துவதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.

நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணம் செய்வதுடன் தேவையான சத்துப் பொருட்களை உடலுக்கு பிரிந்து கொடுகிறது.

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், நோய் கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகபடுத்திறது.

மாரடைப்பில் இருந்து மனிதர்களை காக்கும் மிகப்பெரிய மருத்துவ குணம் இதற்கு உண்டு என்பது கூடுதல் செய்தி.

இனிமேல் வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கள். பயன் பெறுங்கள்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



வலை விருந்து - ஹைக்கூ + படங்கள்

கீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள்.

You are my best Friend
குளம் வற்றிப் போனது,
வண்டலோடு ஒட்டிக்காய்ந்தது கருவாடுகள்;
மீனுக்கும் நீருக்குமான நட்பு.
- கலை அரசன்


Help Me
வயிற்றுக்குப் பசி!
பாவம் பார்ப்பவர்களிடம்
பிச்சை கேட்கிறது கை!
- இராமலிங்கம்


Nutri Balance: Husband
நீ செய்த துரோகம் உன்
காதலனுக்கல்ல,
புனிதமான காதலுக்கு!
- யாழ்_அகத்தியன்


Orangeman
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு
!- கவிஞர்.இரா.இரவி



Kayaking Jumbo Peanut: Choking
நிலவைக்
கலைத்து விளையாடுகிறது
தேங்கிய நீரில் மழைத்துளி
!- சிவபாரதி
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top