ரஜினி சொன்ன குட்டி கதை - 05


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செல்லும் பொது மேடைகளில் குட்டி கதைகளை சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன குட்டிகதைகளின் தொகுப்பே இந்த பதிவு.

ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

ஒரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.

அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, “நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்” என்றார்.

அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்திச்சாங்க. “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று குரு கேட்டார். ஒருத்தன் சொன்னான், ‘எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும்’னு. ‘எடுத்துக்கொள்” என்று குரு சொன்னார்.

இன்னொருத்தன், ‘எனக்கு நிம்மதி மட்டும் போதும்’ என்றான். ‘எடுத்துக்கொள்’ என்றார் குரு.

5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனைச் சந்திச்சார். ‘எனக்கு பணம் வந்தது. ஆனால் நிம்மதி இல்லை’ன்னு சொன்னான்.

நிம்மதி வேணும்னு கேட்டவன்கிட்ட போனார் குரு. அவனோ, ‘எனக்கு நிம்மதி இருக்கு. சந்தோஷம் இல்லை’ன்னு சொன்னான்.

பணம் கேட்டவனைப் பார்த்து, ‘நீ சம்பாதிச்ச பணத்தை நீயே வச்சிக்கிட்டே. அதனால்தான் நிம்மதி இல்லை”ன்னு குரு சொன்னார்.

அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, “நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவிகள் செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்களே”ன்னான்.

“ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு” ன்னு குரு சொன்னார்.

“பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதைச் செய்…”, என்று குரு அறிவுரை சொன்னார்.



கஷ்டப்படாம சம்பாதிக்க ஆசைப்பட்டா!

மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.

ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார்.

ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.., என்று.

அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார்.

இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, இலவச உதவிகளை ஏமாத்தி வாங்கினா… உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!



Elysium (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

'District 9' என்ற படத்தை இயக்கிய 'Neill Blomkamp' என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் படம் 'Elysium'. இதில் மேட் டேமனும், ஜுடி பாஸ்டரும் நடித்துள்ளார்கள். ஒரு வழிய நேற்று தான் இந்த படம் பார்க்க முடிந்தது.

படத்தோட கதை என்னனா ...

2154 ஆம் வருடம் உலகில் உள்ள வசதி படைத்த மக்கள் எல்லோரும் பூமியை விட்டு சற்று தள்ளி மனிதர்களால் உருவாக்கப்பட்ட "எலிசியம்" என்னும் விண்வெளி தளத்தில் குடியிருக்கிறார்கள். பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடும் இடமாக இருக்கிறது. ஆனால், எலிசியத்திலோ ஆடல், பாடல் கேளிக்கைகள், நீச்சல் குளம் வசதியான வாழ்க்கை, எல்லாவற்றையும் விட எல்லா வகையான நோய், உடல் குறைகள் நீக்கும் உபகரணங்கள் இருப்பதால் இங்குள்ள மக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.

பூமியில் இருந்து "எலிசியம்" வரும் மனிதர்களை கொன்றும் சிறை பிடித்தும் அராஜக ஆட்சி செய்கின்றனர். அரசாங்கத்தின் அடிமையாக இருக்கும் நாயகன் மேக்ஸ் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் அலட்சிய போக்கால் உயிரை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப் படுகிறான். அவர் உயிர் வாழ 5 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எலிசியத்துக்கு செல்ல வேண்டும். இதனால் திருட்டுத்தனமாக எலிசியதிற்கு விண்கலம் அனுப்பும் ஆட்களின் உதவியுடன் எலிசியம் செல்ல முயல்கிறான். அவனை தடுக்க எலிசியத்தின் செக்ரட்டரி அனுப்பிய அடியாள் ஒருவன் அவனைத் துரத்துகிறான். அவர்களிடம் தப்பித்து எலிசியம் சென்றானா, தன்னையும் பூமியையும் அவனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மேட் டேமன்
ஆரம்ப காட்சிகளில் ரோபோக்களிடம் கலாய்ப்பதாகட்டும், பின்னர் உடல்நிலை மோசமாகி தளர்ந்த நடையுடன் போராடுவதாகட்டும் செம்ம ஆக்டிங்

ஜூடி பாஸ்டர்
மேட் டேமன்-க்கு ஈடு கொடுக்கும் வண்ணம் செம்ம ஆக்டிங். ஆட்சியை தன்வயப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதும் பின் தன் தவறுக்கு உணரும் போதும் அசத்தல் பெர்பார்மென்ஸ்

வேக்னர்
வில்லன் ஸ்பைடராக வேக்னர் நம்மை மிரட்டுகிறார். அதுவும் வெடிகுண்டு வெடித்து முகத்தை இழந்த இவருக்கு எலிசியத்தில் முகம் மீண்டும் வளரும் காட்சியில் மிரண்டு தான் போகிறோம். அவன் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் வாவ்.


நீல் ப்ளோம்கம்
படத்தில் எந்தெந்த காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது எது கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் பிரமாதமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பிரம்மாண்டமான எலிசியத்தை கண்ணில் காட்டி பிரமிக்க வைத்த காட்சி. மனித மூளையையே ஹார்ட் டிஸ்காக பயன்படுத்திக் கொள்ளும் கிரியேட்டிவிட்டியும் ரசிக்க வைத்தன.

இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள்.மேக்சுக்கும் ஸ்பைடருக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. லுக்கேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுமி கதை சொல்லும் காட்சியும் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் 'Elysium' - ஒரு நல்ல சயன்ஸ் பிச்சன் மூவி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Kovaiaavee.



Related Posts with Thumbnails
 
back to top