மரியான் (2013) - பாடல் விமர்சனம்

மரியான் 2013 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


படத்துல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு...?

1. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.

2. A.R.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

3. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

4. சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

5. தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் நடித்துள்ளனர்.

6. ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவர் ரஹ்மான் தான்.

7. 'பூ' படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன்.


யார் இந்த பரத்பாலா ...?

காட்சி மொழியின் வழியாக கதை சொல்வதில் வல்லவரான பரத்பாலாவின் வருகை, தமிழ்சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரஹ்மானின் வந்தே மாதரம், ஜன கன மன, உள்ளிட்ட தனித்த இசை ஆல்பங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தற்கு அப்பால் கடந்த 2004 ஆண்டு பரத்பாலா இயக்கிய ‘ஹரிஓம்’ அவரை தனித்த, தரமான சினிமாவின் காதலராக அடையாளம் காட்டியது! இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்கார தேவதைக்கும், அவளுக்கு உண்மையான இந்தியாவின் ஆன்மாவை காட்டும் ஒரு ஆட்டோ டிரைவருக்குமான காதல் உணர்வை சித்தரித்த விதம் தரமான ரசிகர்களை உருகவைத்த ஒன்று!

பரத்பாலா தனது இரண்டாவது முயற்சியாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ், ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் இயக்க இருந்த ‘19த் ஸ்டெப்’ தற்காலிகாமாக நிறுத்தி வைக்க்பட்ட நிலையில்தான் தனுஷ் நடிக்கும் மரியானைத் தொடங்கினார்.

படத்தோட கதை என்னனா ...

மன உறுதி கொண்ட ஒர்எளிய தமிழ்மீனவன், தன் காதலியைப் பிரிந்து, வெளிநாட்டு மீன்பிடிக்கப்பல் ஒன்றில் வேலைக்குச் செல்கிறான். அவனும் அவனோடு வேலைசெய்யும் சில தமிழ் இளைஞர்களும், உள்நாட்டுபோரில் ஆள்கடத்தி பணம் பறிப்பதை ஒரு நிதிஆதாராமாக செய்துவரும் தென் ஆப்ரிக்க குட்டி நாடு ஒன்றின் போராளி(?) குழுவால் கடத்தப்பட்டு பிணையக் கைதிகளாக நிறுத்து வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் மரியான் வேலைசெய்யும் ஷிப்பிங் நிறுவனம் பிணையத் தொகை எதுவும் தராமல் காலம் தாழ்த்துவதால், பிணையக் கைதிகளில் ஒவ்வொருவராக சுட்டிக்கொள்கிறார்கள். மரியானையும் சாவு நெருக்கும் நேரத்தில் ஒரு நண்பனோடு தம்பிக்கிறான். ஆனால் பின் தொடர்ந்து வரும் போராளிக்குழு இளைஞன் மரியானின் நண்பனை சுட்டுக்கொள்ள மரியான் மட்டும் தப்பிச் செல்கிறான்.

மிகப்பரந்த பாலைவனம், திசைவழி தெரியாத சூன்யம். இவற்றுக்கு மத்தியில் தனது காதலி பனிமலரின் நினைவுகள் மட்டுமே மரியானை வழிநடத்த அவன் தம்பி வந்தானா இல்லையா என்ற ‘சர்வைவல்’ கதைதான் மரியான்.
ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்று பொருளாம். சத்‌ரியனுக்கு சாவில்லை என்பது மாதி‌ரி ம‌ரியானுக்கு மரணமில்லை.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா


பாடியவர்கள் : ஜாவிட் அலி, ஹரிசரண் & நகாஷ் அசிஸ்
பாடலை எழுதியவர் : வாலி

ஜாலியான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. 'சோனாபரியா' என்ற வார்த்தை இந்த பாடலில் எத்தனை முறை வருகிறது என்று ஒரு குவிஸ் போட்டியே வைக்கலாம். எனக்குப் படித்த பாடல்.


2. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே!


பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்
பாடலை எழுதியவர் : A.R .ரஹ்மான் & கபிலன்

இது ஒரு மென்மையான காதல் பாடல். பின்னணி இசை மனதை வருடுவது போல இருக்கு. அதுவும் அந்த கடம்....சூப்பர்! கடல் திரைப்படத்தில் வந்த "மூங்கில் தோட்டம்" பாடலை சற்றே நினைவுபடுத்துகிறது.


3. எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு...


பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலை எழுதியவர் : குட்டிரேவதி & A.R.ரஹ்மான்

சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் கடல் திரைப்படத்தில் வந்த "நெஞ்சுக்குள்ள..." பாடல் தான் நினைவுக்கு வருது. இந்த பாடல் அதற்கும் சற்றே குறைவு என்று தான் சொல்லணும். பாடல் வரிகள் மிக அருமை. பெண் பாடலாசிரியர் குட்டிரேவதி-க்கு என் வாழ்த்துக்கள்!!!


4. கடல் ராசா நான் ...
கொம்பன் சுறா வேட்டையாடும் ...


பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடலை எழுதியவர் : தனுஷ்

பெப்பி சாங். யுவன் குரலில் பாடல் ரசிக்கும்படி இருக்கு. நார்மலா யுவன் பாடலில் இருக்கும் ஒரு சோகம் இதில் இல்லை. ரொம்ப ரசித்து பாடியிருக்கார்.


5. நெஞ்சே எழு
நெஞ்சே எழு...


பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : குட்டி ரேவதி

எழுச்சி பாடல். இந்த பாடலை முதலில் கேட்கும் போது செம்மொழிக்காக ரகுமான் இசை அமைத்த பாடலை நினைவுபடுத்துகிறது.


6. நேற்று அவள் இருந்தாள் ...

பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & சின்மயி
பாடலை எழுதியவர் : வாலி

ஒரு மெலடி காதல் பாடல். குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. விஜய்பிரகாஷ் நல்லா பாடியிருக்கார். எனக்குப் படித்த பாடல்.


7. I Love my Africa ...

பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : Brian Kabwe & Blaaze

தமிழுக்கு இது போன்ற இசை புதிது. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆப்பிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. மேற்கு இந்திய தீவுகளில் கிரிகெட் போட்டி நடக்கும் போது இது போன்ற இசையை கேட்டதுண்டு. அந்த பிறகு பாடலில் அத்தகைய இசையை கேட்டது இந்த பாடலில் தான்.



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் மரியான் ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சூது கவ்வும் (2013) - விமர்சனம்

"பீட்ஸா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித் தேடித்தர வெளிவந்திருக்கும் ‌மற்றுமொரு படம்தான் "சூதுகவ்வும்".

தமிழ் சினிமா பார்க்காத கதைகளாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதிக்கும், அவரிடம் சொன்ன கதையை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கும் புதிய இயக்குநர் நளன் குமாரசாமிக்கும் முதல் வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்.


படத்தோட கதை என்னனா ...

காதல் பிரச்சினையில் வேலை பார்க்கும் இடத்தில் கைகலப்பாகி வேலை இழந்த ஒருவன், விலையுயர்ந்த சொகுசு காரை ஓட்டவேண்டும் என்ற ஆசையில், பைவ் ஸ்டார் ஓட்டல் வேலையை தொலைத்த மற்றொருவன், நயன்தாராவுக்கு கோயில் கட்டி, பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி சென்னைக்கு வரும் இன்னொருவன் ஆகிய மூவரும் ஒரே அறையில் நண்பர்களாக தங்கியிருக்கிறார்கள்.

மறுமுனையில் சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் விஜய் சேதுபதி, பெரிய இடத்தில் கை வைக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, மாட்டிக்கொண்டால் அடிபணிந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 விதிமுறைகளின்படி கடத்தல் வேலைகளை செய்துவருகிறார். இவருக்கு அவ்வப்போது ஐடியா சொல்பவராக, ‘மாமா மாமா’ என்று ஒரு நிழல் உருவமாக வலம் வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

வேலையை இழந்த மூன்று நண்பர்களும் ஒருநாள் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், இன்னொரு கும்பலுக்கும் தகராறு வருகிறது. இந்த தகராறில் நண்பர்கள் கூட்டமும் தாக்கப்பட, அங்கிருந்து தப்பித்து விஜய் சேதுபதியிடம் சேர்ந்து வெளியேறுகிறார்கள்.

மூவரையும் தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லும் விஜய் சேதுபதி, தன்னுடைய கடத்தல் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்த முடிவெடுக்கிறார். இதற்கு நண்பர்களில் இரண்டு பேர் சம்மதிக்க ஒருவன் மட்டும் பின்வாங்குகிறான். பின்னர் அவனும் வந்து இணைகிறான். மூவரும் இணைந்து சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தி அந்த பழியை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். இந்த கடத்தல் வேலைக்கு விஜய் சேதுபதி கும்பலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். முதலில் மறுக்கும் விஜய் சேதுபதி, பின்பு ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இதன்படி, ஒருநாள் அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக வேறொரு கும்பல் அவனை கடத்திச் சென்றுவிடுகிறது. அவர்கள் செல்லும் இடத்தை அறிந்துகொள்ளும் விஜய் சேதுபதி கும்பல், மறுநாள் போலீஸ் உடை அணிந்து அங்கு சென்று பார்க்கின்றனர்.

அங்கு மயக்க நிலையில் தனியாக இருக்கும் அரசியல்வாதியின் மகனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவனை கடத்தியதும் அரசியல்வாதிக்கு போன் போட்டு மகனை கடத்திவிட்டதாகவும், விடவேண்டுமென்றால் 2 கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். ஆனால், இதற்கு அடிபணியாத அரசியல்வாதி போலீஸ் உதவியை நாடுகிறார்.

இதனால் பயந்துபோன விஜய் சேதுபதி கும்பல், அவனை விட்டுவிட துணிகிறது. ஆனால், அரசியல்வாதியின் மகனோ, தன்னுடைய அப்பா மூலம் பணம் கேட்டால் கிடைக்காது. தன்னுடைய யோசனையின்படி செய்தால் பணம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின்படி பணத்தை வாங்க ஐடியா கூறுகிறான்.

அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக்கொள்கிறார். அரசியல்வாதியின் மகன் ஐடியாப்படி பணத்தையும் வாங்கி விடுகின்றனர். இறுதியில் பங்கு பிரிக்கும்போது பிரச்சினை வர, விஜய் சேதுபதி கும்பலை விபத்தில் சிக்கவைத்து அங்கிருந்து பணத்துடன் தப்பிவிடுகிறான் அரசியல்வாதியின் மகன்.

இதற்கிடையில் தன்னுடைய மகனை கடத்திய கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு சைகோ போலீஸ்காரரை நியமிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இறுதியில், பணத்தோடு ஓடிச்சென்ற அரசியல்வாதியின் மகனிடமிருந்து விஜய் சேதுபதி கும்பல் பணத்தை வாங்கினார்களா? இந்த கடத்தல் கும்பல் போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

விஜய்சேதுபதி
அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர், இதுவரை நடித்த படங்களில் நாயகியை கட்டிப் பிடித்து நடிப்பது போன்ற காட்சி இல்லாத குறையை இந்த படத்தின் மூலம் நிவர்த்தி செய்து கொண்டார் போலும்.

படத்தின் முதல் பாதி முழுவதும் அரைகுறை உடையுடன் நாயகியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுகிறார். படத்தில் கூறும் வசனம்போல், படம் முழுக்க மனுஷன் வாழ்ந்திருக்கிறார் என்ற பொறாமையை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறார். படத்திற்காக கொஞ்சம் குண்டாகியிருக்கிறார்.

கடத்திவிட்டு பணம் பெறுவதற்காக இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது.

யோக் ஜெப்பி
சைகோ போலீஸ் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி படத்தில் பேசாமலேயே மிரட்டுகிறார். எந்த ஒரு செயலுக்கும் முகபாவனையிலேயே தனது முடிவை சொல்லிவிடும் இவரை, கடைசியில் சிரிப்பு போலீசாக மாற்றியதுதான் ஏமாற்றம்.

ராதா & ராதாரவி
முதலமைச்சராக வரும் ராதாரவி, அமைச்சரின் மனைவியாக வரும் ராதா என அனைவரும் தங்கள் நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.

ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி
அழகாக இருக்கிறார். ‘மாமா மாமா’ என்று விஜய் சேதுபதியுடனேயே வலம்வந்து நம்மையும் வசீகரிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர்
நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளைச்சட்டை, தோளில் துண்டு, மிடுக்கான தோற்றம், மிரட்டும் தொணியில் பார்வை என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

கருணாகரன்
எம்.எஸ்.பாஸ்கர் மகனாக நடித்திருக்கும் கருணாகரனின் திருட்டு முழிப் பார்வையும், குரூரத்தனமான இவருடைய செய்கையும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன.



இயக்குனர் நலன் குமாராசாமிஒரு கடத்தல் கதையை சீரியஸாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் சொல்லிய இயக்குனர் நலன் குமாராசாமிக்கு பாராட்டுக்கள்.

இந்த படத்தின் நிஜ ஹீரோவே திரைக்கதைதான். யூகிக்க முடியாத கதை, கதாபாத்திரங்கள் போக்கை எல்லா இடத்திலும் என்ஜாய் செய்யமுடியும் என்பதை திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல், படத்தில் கேரக்டருக்கு தகுந்தாற்போல் அவர்களது பெயரையும் தேர்வு செய்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். விஜய் சேதுபதியின் 5 விதிமுறைகள், கடத்திய பிறகு பெற்றோரிடம் பணத்தை பெறுவதற்காக பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கவைக்க கூடியவை.

மேலும், ‘கடத்தல் வேலைக்கு குருட்டுத்தனமான முட்டாள் தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும்’ என்பது போன்ற அறிவார்த்தமான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

இசை சந்தோஷ் நாராயணன்
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்களும், பிண்ணனி இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை. ‘காசு துட்டு மணி மணி’ கவர்கிறது.

ஒளிப்பதிவாளர் தினேஷும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
சூது கவ்வும் - நிச்சயம் வெல்லும். லாஜிக் பார்க்காமல் சிரித்து விட்டு வரலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top