சார் ஒச்சாரு (2013) தெலுங்கு பட விமர்சனம்

தெலுங்கில் சென்ற வருடம் இறுதியில் ரிலீசாகி ஹிட்டான படம் ‘சார் ஒச்சாரு’. ரவிதேஜா ஹீரோ, காஜல் அகர்வால், ரிச்சா கங்கோபாத்யாய இருவரும் அவருக்கு ஜோடி. பரசுராம் என்பர் டைரக்ட் செய்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக். ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த முக்கோண காதல் கதை.

இப்படம் ‘சார் வந்தாரா’ என்று பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது.

படத்தோட கதை என்னனா ...

வழக்கமான சினிமா பாணியில், காதல் ஜோடியை துரத்திக்கொண்டு ஒரு கும்பல் வருகிறது. ஆனால் சற்று வித்தியாசமாக இதில், நாயகனுக்குப் பதில், நாயகனின் நண்பனும் அவனது காதலியும் அந்த கும்பலிடம் சிக்குகிறார்கள். பெண்ணின் மாமா சில ரவுடிகள் மூலம் விரட்டி தாக்கும்போது, உள்ளே புகுந்து நாயகன் ரவிதேஜா பின்னி எடுக்கிறார். பின்னர் நண்பனின் காதலை சேர்த்து வைக்கும் ரவிதேஜா, அவர்களுக்கு திருமணமும் செய்து வைக்கிறார்.

பிறகு வெளிநாடு செல்லும் அவர் அங்குள்ள இன்னொரு நண்பனின் காதலையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். அப்போது நண்பன் காதலிக்கும் பெண்ணின் தோழியான காஜல் அகர்வால் அவரை பார்க்கிறார். கண்டதும் காதல் என்ற இலக்கணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காஜலுக்கு, ரவிதேஜாவை பார்த்ததும் ஏனோ மனதிற்குள் பட்டாம் பூச்சி பறக்கிறது. காதல் வயப்பட்ட காஜல், ரவிதேஜாவை தன் வசம் ஈர்க்க முயற்சிக்கிறார். ஆனால் ரவிதேஜாவோ அவரை கேலி, கிண்டல் செய்து அவருக்கு நோஸ் கட் செய்கிறார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ரவிதேஜாவும், காஜல் அகர்வாலும் இந்தியாவுக்கு வர நேரிடுகிறது. இருவரும் ஒன்றாகவே விமானத்தில் வருகிறார்கள். இந்தியாவுக்கு சென்றடைவதற்கு முன்னதாகவே ரவிதேஜாவை தன்னை காதலிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காஜல் பயணிக்கிறார்.

பல வழிகளில் காஜல் முயற்சி எடுத்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ரவிதேஜா அதை மறுத்து விடுகிறார். ஏன் என்று காஜல் கேட்கும் பொழுது ‘நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். என் மனைவி ரிச்சாவை விவாகரத்து செய்யத்தான் நான் இந்தியாவுக்கு வருகிறேன்’ என்று கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் காஜல், மிகவும் வருத்தமடைகிறார். இருப்பினும் அவரிடம் பேசிக் கொண்டு அவருடைய திருமணத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

இறுதியில் காஜலின் காதல் ஜெயித்ததா? ரிச்சாவை ரவிதேஜா விவாகரத்து செய்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ரவிதேஜா vs காஜல் அகர்வால்

நாயகன் ரவிதேஜா, ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என கலக்குகிறார். நாயகி காஜல் அகர்வால் அழகு பதுமை. நடிப்பதற்கு அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக ரவிதேஜாவிடம் தன் காதலை சொல்ல முயற்சிக்கும் போதும் நான் ரொம்ப அழகு என்று சீன் போடும் காட்சிகளிலும் காஜல் அருமையாக நடித்திருக்கிறார்.

ரிச்சா

வெகுளித்தனமாகவும் படு சுட்டியாகவும் காஜலின் கதாபாத்திரம் அமைந்து காட்சிகளுக்கு மெருகேற்ற... மற்றொரு கதாநாயகி ரிச்சாவோ கவர்ச்சியிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார். மீண்டும் இவரை தமிழ் படங்களில் பார்க்கலாம் என நம்புவோம்.


தேவிஸ்ரீ பிரசாத்

படத்தில் பாடல் வரிகளை விட தேவிஸ்ரீ பிரசாத்தின் இசைதான் மேலோங்கி இருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். படத்தின் பாடல் காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒளிப்பதிவு செய்த விதம் அருமை.

இயக்குனர் பரசுராம்

கல்யாணத்திற்கு முன் உள்ள காதலையும், கல்யாணத்திற்கு பின் உள்ள காதலையும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரசுராம். முன்பாதியில் தேவையற்ற சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். காதல் பெரியதா? கல்யாணம் பெரியதா? என்ற திரைக்கதையை ரசிக்கும்படியாக எடுத்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் "சார் ஒச்சாரு" - சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2013–ல் கலக்கிய ஹீரோக்கள்!

2013ல் ஹீரோக்களின் ரேஸ் பலமாகத்தான் இருந்தது. சிலர் ஓடி ஜெயித்தார்கள், சிலர் தடுக்கி விழுந்தார்கள். சிலர் விழுந்து எழுந்து ஓடினார்கள். இந்த சுவாரஸ்மான ரேஸ் பற்றி பார்ப்போம்.

ரஜினி:

இந்த ஆண்டும் ரஜினி படம் வெளிவரவில்லை. நவம்பர் 12ல் அவரது கோச்சடையான் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கடைசியில் ஆடியோ கூட வெளிவராதது ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றம். கோச்சடையானை மெருகேற்றுகிறோம், மெருகேற்றுகிறோம் என்று சொல்லியே 2 வருடத்தை ஓட்டிவிட்டார்கள். 2014ம் ஆண்டிலாவது கோச்சடையான் வெளிவரும் என்று நம்புவோம்.

கமல்:

சில அமைப்புகளின் அச்சுறுத்தல்கள், அரசின் தடைகள், வெளிநாட்டுக்கு ஓடுவேன், டிடிஎச்சில் வெளியிடுவேன் என்ற கமலின் அறிவுப்பு என பல தடதடக்களை தாண்டி ரிலீசானது விஸ்வரூபம். இந்த பரபரப்புகள் தந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியே விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்கிறது. அதே வேகத்தில் விஸ்வரூபத்தில் மீதமிருக்கம் காட்சிகளோடு இன்னும் சில காட்சிகளை சேர்த்து விஸ்வரூபம் 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.

விஜய்:

தலைவா என்ற தலைப்பே விஜய்யின் அரசியல் அச்சாரம் என்று பரபரப்பை கிளப்பியது. அதே பரபரப்பில் படம் வெளியாக இருந்த நேரத்தில் விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகளை தலைவாவும் சந்தித்தது. அரசு தடை, விஜய் உண்ணாவிரத அறிவிப்பு, தயாரிப்பாளரின் கண்ணீர் பேட்டி என அடுத்தடுத்த திருப்பங்களுடன் பத்து நாட்களுக்கு பிறகு தலைவா ரிலீஸ் ஆனது. விஸ்வரூபத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி உதவியதைப்போல தலைவாவுக்கு உதவவில்லை.

அஜீத்:

பெயர் குழப்பத்தில் ஆரம்பித்த ஆரம்பம். தடதடவென ரிலீசாகி. அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தலயின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், நயன்தாராவின் அக்மார்க் கிளாமர். ஆர்யா டாப்ஸியின் ரொமான்ஸ் என பக்குவம் சரியாக சேர ஆரம்பம் ரசிகனுக்கு நல்ல விருந்தாக அமைந்து விட்டது.


சூர்யா:

சிங்கிள் படம் தந்தாலும் சூர்யாவின் சிங்கம் 2 பாய்ச்சல் முதல் பாய்ச்சலைவிட அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் "ஓங்கி அடிச்சா ஒண்ணறை டன் வெயிட்" என்றவர் இரண்டாம் பாகத்தில் "பாய்ந்தடிச்சா பத்தரை டன் வெயிட்"னு புரூப் பண்ணினார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் தயாரிப்பாளரின் கேஸ் பாக்சை நிரப்பிய விதத்திலும் சிங்கத்தின் கர்ஜனை பலமாக இருந்தது.

விக்ரம்:

விக்ரம் நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் டேவிட். சதா தண்ணியடித்து அலையும் அந்த கோவா டேவிட் வேடம் விக்ரமின் இமேஜை கோவா கடலுக்குள் தூக்கி போட்டது. ஐ வந்து கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆர்யா:

சேட்டையும், இரண்டாம் உலகமும் ஆர்யாவை அமுக்கியபோதும் ராஜாராணி கை தூக்கிவிட்டது. இரண்டாம் உலகத்தின் இரண்டு வருட உழைப்பு வீணாகி ஆர்யாவுக்கு அது இன்னொரு நான் கடவுள் ஆகிப்போனது. சேட்டையில் சந்தானத்துடன் நடித்த பாத்ரூம் காமெடிகள் கண்டு ரசிகர்கள் முகம் சுழித்தார்கள்.

தனுஷ்:

மரியானும், நய்யாண்டியும் தமிழ் நாட்டில் மழையில் நனைந்பட்டாசாய் நமத்துப்போக இந்தி ராஞ்சனா ராக்கெட் வானத்தில் வண்ணம் கூட்டியது. பாலிவுட்டில் சுள்ளானின் கணக்கை 2013 துவக்கி வைத்தது.

கார்த்தி:

அலெக்ஸ் பாண்டியனும், அழகுராஜாவும் கார்த்தியை கைவிட பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் தெம்பானார். கதை தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை 2013ல் கற்றுக் கொண்டார்.

ஜீவா:

டேவிட் அவுட் கொடுக்க என்றென்றும் புன்னகையில் மெல்ல சிரித்தார். தொடர் தோல்விகளுக்கு அரைப்புள்ளி வைத்தார்.

சசிகுமார்:

குட்டிப்புலி மீடியாக்களுக்கு பிடிக்கவில்லை. ஏ செண்டர் மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பி அண்ட் சியில் அள்ளியது கலெக்ஷனை. சசிகுமார் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சித்தார்த்:

தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் இவர் ஆந்திரத்து சிம்பு. இப்போதுதான் தமிழ்நாட்டு பக்கம் வெற்றிகளை பார்க்கிறார். உதயம் என்.எச் 4 ஆக்ஷன், தீயா வேலை செய்யணும் குமாரு காமெடியென சித்தார்த்துக்கு 2013 சிரிப்பு ஆண்டுதான்.

ஜெயம்ரவி:

இவருக்கு இது சோகமான ஆண்டு இரண்டு வருடங்கள் அமீருடன் இணைந்து, கடுமையா உழைத்த ஆதிபகவன் மட்டும் ரிலீசானது. அவர் மிகவும் எதிர்பார்த்த ஆதிபகவன் அவரை கைவிட்டது.

விஷால்:

சமர் தராத வெற்றியை பட்டத்து யானை தரும் என்று நம்பினார். அது கீழே தள்ளியது. விழந்தவரை காப்பாற்றியது பாண்டிய நாடு. சொந்தப் படம் என்பதால் பாண்டியநாட்டு கலெக்ஷனை வைத்து பட்ட கடன்களை அடைத்து விட்டு உற்சாகமாகிவிட்டார்.

சிவா:

தில்லுமுல்லு வெற்றியுடன் 2013 ருசிக்க ஆரம்பித்தவருக்கு அடுத்து வந்த சொன்னா புரியாது, வணக்கம் சென்னை இரண்டும் தில்லுமுல்லு செய்து திக்குமுக்காட வைத்து விட்டது.
(அடுத்து வருகிற மூன்று பேரும்தான் 2014 ரேஸில் முன்னால் ஓடக்கூடியவர்கள். போட்டியும் இவர்களுக்குள்தான்)

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதியின் தொடர் விஜயத்தின் வரிசையில் இந்த ஆண்டு கணக்கில் சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும். இரண்டுமே துட்டு, ஹிட்டு இரண்டையும் சந்தித்து சாரின் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டது.

சிவகார்த்திகேயன்:

இந்த வருடம் ஹாட்ரிக் ஹிட் அடித்த ஒரே ஹீரோ. கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் தொட்டதெல்லாம் பொன்னானது சாரி... நடிச்சதெல்லாம் ஹிட்டானது. முதல் படத்துக்கு 5 லட்சமும், அடுத்து படத்துக்கு 50 லட்சமும் சம்பளம் வாங்கியவர் இப்போது வாங்குவது 5 கோடி.

விமல்:

நிகழ்கால ஜெமினி கணேசன் இவர். இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் இவர்தான். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, ஜன்னல் ஓரம், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல் என மொத்தம் 5 படங்கள். கே.பி.கி.ர, தேசிங்கு ராஜா ஹிட் படங்கள். ஜன்னலோரம், மூன்று பேர் மூன்று காதல் ஆவரேஜ். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு பிளாப் என வெரைட்டி ரைஸ் பரிமாறினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google & Dinamalar



எம்.ஜி.ஆர் பற்றி சுவையான 25 குறிப்புகள்!

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !

  1. எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

  2. பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

  3. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

  4. எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

  5. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

  6. சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

  7. முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !


  8. ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

  9. நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

  10. எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

  11. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

  12. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

  13. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

  14. சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

  15. எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

  16. தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

  17. ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

  18. அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !


  19. ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

  20. ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

  21. அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

  22. எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

  23. முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

  24. அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !

  25. ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : ஆ.வி



கிறிஸ்துமஸ் தாத்தா பிறந்த கதை

அன்பான உலகில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ள கிறிஸ்துமஸ் திருநாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்துபவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப் பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண் தாடி தாத்தா தான்.


குழந்தைகளால் அன்புடன் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சாந்தா கிளாஸ். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சாந்தா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார். தற்போது உலகம் முழுவதும் எல்லோரின் உள்ளங்களில் அன்பாக உலா வருகிறார் அந்த அன்பு தாத்தா.

அந்த காலத்து ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார்.


ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.


மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. பாரியில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேராலயத்தில் இப்போதும் அவரது நினைவுச் சின்னங்கள் உள்ளன. காலம் உருண்டோடிவிட்டாலும் அவரது நினைவுகள் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை.

ரஷ்யாவும் கிரீஸும் அவரைத் தங்களது நாட்டு பாதுகாவலராக ஏற்றுக் கொண்டன. சமூக சேவை அமைப்புகள், குழந்தைகள், இளம் பெண்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அவரை தங்களது பாதுகாவலராக ஏற்றுக் கொண்டனர். இது வழி வழியாக பின்பற்றப்பட்டது. அவரது பெயரில் ஐரோப்பா முழுவதும் ஆலயங்கள் உருவாகின.

டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். காலப் போக்கில், சமுதாயத்தில் தீமை செய்யும் குழந்தைகளுக்கு தண்டனையும் நன்மை செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளும் அளிக்கும் தாத்தாவாக அவர் உருவகப்படுத்தப்பட்டார்.


1822ல் கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார். அது பத்திரிகைகளில் வெளியாக மிகவும் பிரபலமடைந்தது.

புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார். அவரின் பிரவேசம் அப்பகுதியில் அன்பு, மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் பாருங்களேன். நாமும் கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவேற்று அன்பையும் மகிழ்ச்சியையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வோம்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



‘டைட்டானிக்' தினம் + காணாமல் போன பிரதமர்

‘டைட்டானிக்' தினம்

மிகப்பெரிய ஆடம்பரக் கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்தின்போதே மூழ்கி பல உயிர்களை பலிவாங்கியதை தத்ரூபமாக காட்டியிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் படம்தான் ‘டைட்டானிக்’


படம் முழுக்க கப்பலை மட்டுமே காட்டியிருந்தால் அதில் விறுவிறுப்பாக இருக்காது என்பதால், அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகள் இருந்தன. குறிப்பாக அழகான காதல் ஜோடியின் ஆழ்ந்த காதலை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக மிகவும் சிரத்தை எடுத்து காட்சிகளை அமைத்த இயக்குனர் கேமரூன், படத்தை 1997-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி திரையிட திட்டமிட்டிருந்தார். ஆனால் தயாரிப்புக்கு பின்னர் தொழில்நுட்ப பணி காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் டைட்டானிக் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றே எதிர்பார்த்தனர்.

இதுபோன்ற சர்ச்சைகளையெல்லாம் கடந்து, 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி டைட்டானிக் வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட வசூலை அள்ளிக் குவித்ததுடன் 11 விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.

லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள டைட்டானிக் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.

காணாமல் போன ஆஸ்திரேலியா பிரதமர்

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் இதேநாளில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனார். அவர் இறந்ததாக ஆஸ்திரேலியா அரசு டிசம்பர் 19-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய பதவிக்காலத்தில் வியட்நாம் போர் முக்கிய வெளிநாட்டு கொள்கை பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபட வைத்தார்.

இவருடைய மரணம் இதுவரையில் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2005-ம் ஆண்டு மரண விசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கண்ணதாசனை அடையாளம் காட்டியது கோவை தான்

வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் இன்னும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன். ஆனால், இவரை முதன் முதலில் அடையாளம் காட்டியது கோவை சினிமா உலகம் தான் என்பது பலர் அறிந்திராத செய்தி.


இயல்பாகவே கதை எழுதுவதில் ஆர்வமுள்ள கண்ணதாசன், சினிமாவுக்கு கதை வசனம் எழுதும் நோக்கத்துடன் தான் கோவை வந்தார். அப்போது சென்னையை காட்டிலும் கோவையில் தான் சினிமா தயாரிப்பு அதிகம் நடந்தது.

சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு 1949ல் வந்த கண்ணதாசன், தயாரிப்பாளர் 'ஜூபிடர் சோமு'-வை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார். அப்போது மர்மயோகி படம் தயாராகி கொண்டிருந்த நேரம். பாட்டு எழுத தெரியுமா என ஜூபீடர் சோமு கேட்க, தைரியமாக எழுத தெரியும் என கூறியுள்ளார். ஒரு பாட்டு எழுதி தரும்படி கூறியுள்ளார்.

அப்போது முதல் பாடலாக கலங்காதிரு மனமே, கலங்காதிரு....உன் கனவெல்லாம் நனவாகும் என்ற பாடலை எழுதி கொடுத்துள்ளார். அவரது முதல் படத்திலேயே இந்த பாட்டு ஹிட் ஆகி அதற்கு நூறு ரூபாய் சம்பளமும் பெற்றார். அதன் பின்னர் தான் அவர் கவிஞராக அடையாளம் காணப்பட்டார்.

கடைசியில் அவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும், வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் என ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். கண்ணதாசனை கவிஞராக அடையாளம் காட்டியது கோவை தான் என்பது பலரும் அறிந்திராத செய்தி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran



இது ஒரு மருத்துவ அதிசயம்!!!

சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் 'ஷாங்டே' என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.

கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக
ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர். மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந்திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கையை காப்பாற்றுவது கடினம் என்று கைவிரித்து விட்டனர். அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு மண்டல மருத்துவமனையில் ஜியாவோ வெய்யை சேர்த்தனர். வாலிபரின் நிலையை கண்ட டாக்டர்கள், இது மிகவும் கடினமான சிகிச்சை.

எனவே நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது. வேறு மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறினர். அதன்பின் துண்டான அவரது கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே ஒட்டுசெடியை ஒட்ட வைப்பது போல் வைத்து, அதை உயிர் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை அவரது வலது கரத்தையும் மருந்துகள் மூலம் பாதுகாத்தனர்.

சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன. இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர். தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கை திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகையில், இது ஒரு மருத்துவ அதிசயம். மிகவும் அரிதான முறையில் கையை பிழைக்க வைத்து சீன டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran




அவகோடா சப்பாத்தி

அவகோடா பழம் சத்தானதும் சுவையானதுமாகும். இதில் நார்ச்சத்தும், இரத்தத்தில் LDL கொலஸ்ட்ரோல் அளவைக் குறைக்க உதவும். இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல காலை நேர உணவாக கூட இதனை எடுத்துக்கொள்ளலாம். எல்லா பழக்கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் இது கிடைக்கிறது.


சரி.. சரி இதனை கொண்டு அவகோடா சப்பாத்தி செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

அவகோடா பழம் - 6,

கோதுமை மாவு - 1 கப்,
சீரகத்தூள் - அரை ஸ்பூன்,

பச்சை மிளகாய் - சிறிதளவு,
கொத்துமல்லித்தழை - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:-

  • ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக கட் செய்து அதன் தோல்,கொட்டையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

  • பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  • ஒரு பாத்திரத்தில் அவகோடா பழத்தின் சதை, கோதுமை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  • பின்னர் இந்த மாவை சப்பாத்திகளா உருட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

  • சுவையான, சத்தான அவகோடா சப்பாத்தி ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Maalaimalar



2013 - ஹாரர் படங்கள்

பேய் இருக்கிறதோ இல்லையோ ஆனால், பேய்ப் படம் எடுப்பதற்குள் பித்து பிடித்து விடும். அந்தளவுக்கு இடியாப்ப சிக்கல் நிறைந்த ஜானர் இது.

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கென்று என்ன டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதற்குள் தான் விளையாட முடியும். திரைக்கதை அமைப்பும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான். பயமுறுத்தும் கேமரா கோணங்களும், காட்சி அமைப்புகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஸோ, இதற்குள் இருந்தபடிதான் கபடியோ, கிரிக்கெட்டோ ஆட முடியும்.

The Conjuring

அப்படி இந்த வருடமும் பலர் விளையாடியிருக்கிறார்கள். அதில் முதன்மையானது ‘The Conjuring’. லோ பட்ஜெட். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ஒட்டுமொத்தமான எதிர்பார்ப்பையும் நிறைவேற்றிய படம். இதற்கு ஒரே உதாரணம், தமிழகம் தான்.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில்தான் இந்தப் படம் ரிலீசானது. அதுவும் சில திரையரங்குகளில் தான். ஆனால், கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு மடமடவென்று தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். இதே நிலைதான் உலகெங்கும் என்பதுதான் இந்தப் படத்தின் பலம்.

Dark Skies

புறநகர் பகுதியில் ஒரு குடும்பம் வசிக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை. யார் கண் பட்டதோ எல்லாமே தலைகீழாகிறது. ஆவி ஒன்று அவர்களை பழிவாங்க முற்படுகிறது. இதிலிருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள் என்பதுதான் ‘Dark Skies’.

Dark Circles

நரகமயமாகிவிட்ட நகரத்தில் தங்கள் குழந்தையை வளர்க்க விரும்பாத இளம் தம்பதி, ஒதுக்குப்புறமான இடத்துக்கு வாழ வருகிறது. வந்த இடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் ‘Dark Circles’.

Insidious: Chapter 2

தங்கள் பால்யகாலம் எப்படி ஆன்மிகத்துடனும், ஆவிகளுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதிலிருந்து மீள முயலும் இளைஞர்களின் போராட்டம்தான் ‘Insidious: Chapter 2’.

கதையாக பார்க்கும்போது எல்லாமே ஒன்று போல் தெரியும். ஹாரர் ஜானர் அப்படி. ஆனால், இந்த ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பார்க்கும்போதுதான் திரைக்கதைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள், காட்சிகளை எப்படி விவரித்திருக்கிறார்கள், அதன் வழியாக ரசிகனின் நாடி நரம்புகளில் எப்படி அச்சத்தை ஊட்டியிருக்கிறார்கள் என்பது புரியும்.

பாருங்கள்... பயப்படுங்கள்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Dinakaran



2013–ல் கலக்கிய நடிகைகள்

2013–ல் புதுமுக நடிகைகள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் அவர்கள் காணாமல் போயினர். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.

நயன்தாரா

நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் கதாநாயகியாகவே இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் ரசிகர்கள் அவரை ஒதுக்கவில்லை.

ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.


காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான ‘துப்பாக்கி’ படம் முன்னணி நடிகையாக்கியது. ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.


அனுஷ்கா

அனுஷ்கா நடித்து இந்த வருடம் ‘அலெக்ஸ் பாண்டியன்‘, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ படங்கள் வந்தன. இதில் ‘சிங்கம் 2’ அதிக வசூல் குவித்தது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.

ஹன்சிகா

ஹன்சிகாவுக்கு இந்த வருடம் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘சிங்கம் 2’ படங்கள் கைகொடுத்தன.
கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படமும் இந்த மாதத்திலேயே ரிலீசாக உள்ளது. வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான் கராத்தே, உயிரே உயிரே என நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அமலாபால்

அமலாபாலுக்கு தலைவாவில் விஜய் ஜோடியாகும் வாய்ப்பு கிட்டியது. ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கிறார்.

திரிஷா

திரிஷாவுக்கு ‘சமர்’ படமும் டாப்சிக்கு ஆரம்பம் படமும் இவ்வருடம் வந்தன. ஜீவாவுடன் திரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படம் இந்த மாதத்திலேயே வருகிறது. ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்திலும் நடித்து வருகிறார்.

தமன்னா, பிரியாமணி, சமந்தா போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



இவன் வேற மாதிரி (2013) - விமர்சனம்

"எங்கேயும் எப்போதும்" முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் M.சரவணனின் இரண்டாவது படம். பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம். என ஏகப்பட்ட "இரண்டாவது..." எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

அருமையான கதைகளம் .... பிரமாண்டம் இல்லாமல் நமக்கு அருகாமையில் நடந்தது பொல இருந்தது!

படத்தோட கதை என்னனா ...

சட்டத்துறை அமைச்சர் சட்டக்கல்லூரியில் தனக்கு 30 சீட்டுகள் ஒதுக்கித் தரவேண்டும் என அக்கல்லூரி முதல்வரிடம் முறையிடுகிறார். ஆனால், கல்லூரி முதல்வரோ அவருக்கு சீட் ஒதுக்கித் தரமுடியாது. ஏற்கெனவே தங்களுக்கு ஒதுக்கித் தந்த சீட்டுகளில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ரவுடிகளாக இருக்கின்றனர். இதனால், அவ்வப்போது கல்லூரியில் கலவரம் வருகிறது. அதனால் இந்த முறை தங்களுக்கு சீட் ஒதுக்கித்தர முடியாது என கூறுகிறார்.

தனக்கு சீட் தராத முதல்வருக்கு பாடம் புகட்டும்விதமாக, தனது சிபாரிசில் அக்கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவன் மூலமாக அக்கல்லூரியில் கலவரம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார். அந்த கலவரத்தில் அப்பாவி மாணவர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் விக்ரம் பிரபு இதற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறான்.

இந்நிலையில், ஜெயிலில் இருக்கும் தனது தம்பி வம்சி கிருஷ்ணாவை சட்டத்துறை மந்திரி தனது பரிந்துரையின் பேரில் பரோலில் வெளிக்கொண்டு வருகிறார். வெளியில் வரும் வம்சி கிருஷ்ணாவை விக்ரம் பிரபு கடத்தி விடுகிறார். இதையடுத்து தன் தம்பியை கடத்தியவர்கள் யார் என்று மந்திரி தேடிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் பரோலில் வெளியே வந்த வம்சி கிருஷ்ணாவின் பரோல் முடிந்துவிட, அவரைத் தேடி போலீஸ் சட்டத்துறை மந்திரியிடம் செல்கிறது. வம்சி கிருஷ்ணா அங்கு இல்லாததால் மந்திரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர். இதனால் மந்திரியின் பதவியும் போய்விடுகிறது. மந்திரியை பழிவாங்கும் தன்னுடைய எண்ணம் நிறைவேறிவிட, கடத்திய மந்திரியின் தம்பியை விடுவித்துவிடுகிறார் விக்ரம் பிரபு.

இதற்கிடையில், பஸ்ஸில் நாயகி சுரபியிடம் விக்ரம் பிரபு செய்யும் சிறுசிறு குறும்புகள் சுரபியை அவர் மீது காதல்கொள்ள வைக்கிறது. ஆனாலும் தன் காதலை நாயகனிடம் வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்.

இந்நிலையில் தன்னை யார் கடத்தியது என்பது தெரியாத வம்சி கிருஷ்ணா, கடத்தியவனை எப்படியாவது கண்டுபிடித்து கொன்றுவிட வேண்டும் என முடிவெடுக்கிறான். இதனால், விக்ரம் பிரபுவை தேடி அலைகிறான்.

இறுதியில், வில்லன் நாயகனை கண்டுபிடித்து அவனை பழிவாங்கினானா? நாயகி தன் காதலை விக்ரம் பிரபுவிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

விக்ரம் பிரபு
இயக்குநர் M.சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா (அ)குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. கும்கியில் ஒரு மாதிரி விக்ரம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி" விக்ரம் பிரபு. ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார்.

புதுமுகம் சுரபி
புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.
நாயகனிடம் வம்பு இழுக்கும் காட்சியில் அழகாக நடித்து இருக்கிறார். மற்றபடி நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும்.

நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார்.

கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா
அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன். கம்பீரமா இருக்கிறாரு, ஆனால் நடிக்கத்தான் அதிக வாய்ப்பில்லை. சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன்(ரஜினிகாந்த் தயாரிச்ச ‘வள்ளி’ படத்தோட ஹீரோ ஹரிராஜ்), அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, சண்டை
C.சத்யாவின் இசையில் "லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன்... இது தான்..." உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்!

சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

சக்தியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எடுத்த விதம் அருமை. விபத்து காட்சிகளை படமாக்கிய விதம் அழகு. சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது.
இயக்குநர் M.சரவணன்
நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

கதைக்கு தேவையில்லாத காட்சிகளை ஆங்காங்கே நுழைத்து சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகியைத் தேடி நாயகன் அலையும் போது ஏற்படும் விபத்து காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
இவன் வேற மாதிரி - ஒரு நல்ல படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



உஸ்ஸ்ஸ்.. ஷப்பா! (must watch)

குழந்தை விளையாட்டு...

என்ன ஒரு விளையாட்டு தந்திரம் இந்த வயதில்...!!!!


பைக் ரேஸ்...

திறமையான பைக்ரேஸ் மனிதன்...!!!


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பெண்கள் கபடி- இந்திய அணி உலக சாம்பியன்!!!

இந்திய பெண்கள் "சர்கிள்' கபடி அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது.


பஞ்சாப்பில் உலக கோப்பை "சர்கிள்' கபடி போட்டி நடக்கிறது. இதன் பெண்கள் பிரிவு பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்தித்தது. இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 49-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் "ஹாட்ரிக்' சாம்பியன் பட்டம் வென்றது.

உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, ரூ. 1 கோடி பரிசாக கிடைத்தது. நியூசிலாந்துக்கு ரூ.51 லட்சம் கிடைத்தது.


சிறந்த வீராங்கனைகள் விருது பெற்ற ராம் பட்டேரி, அனு ராணிக்கு கார்கள் பரிசளிக்கப்பட்டது.

3–வது இடத்திற்கான ஆட்டத்தில் டென்மார்க் 34–33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த 3–வது இடத்திற்கான மோதலில் அமெரிக்கா 62–27 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆண்களில் யாருக்கு பட்டம் என்பதை நிர்ணயிக்கும் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ரஜினி பிறந்தாள் ஸ்பெஷல்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று (12.12.13) பிறந்த நாள். சினிமாவின் சிகரத்தை தொட்டிருக்கும் அவர் அதை எளிதில் அடைந்துவிடவில்லை. ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறித்தான் இந்த உயரத்தை அவர் அடைந்திருக்கிறார். படையப்பா ரஜினியின் வாழ்க்கை பாதையில் படிக்கட்டுகளாக அமைந்து அவரை உயர்த்தி பிடித்த சில படங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாமா...

அபூர்வராகங்கள்:

திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்த சிவாஜிராவை அடையாளம் கண்டு, இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய படம். காதலியை கைவிட்ட பாண்டியன் என்ற காதலன் கேரக்டரில் நடித்திருந்தார்.

மூன்று முடிச்சு:

கே.பாலச்சந்தர் ரஜினியிடம் இருந்த சிகரெட் ஸ்டைலை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயக்கிய படம். நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் ஆன்டி ஹீரோ கேரக்டர். நண்பன் கமல்.

அவர்கள்:

ரஜினியை முழு நடிகனாக காட்டிய படம். மனைவியை கொடுமைப்படுத்தும் சைக்கோ கேரக்டர். மனைவியாக சுஜாதாவும், மனைவியின் காதலனாக கமலும் நடித்திருந்தனர்.

புவனா ஒரு கேள்விக்குறி:

ரஜினியை அதிகமாக இயக்கிய எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முதல் படம். ஜென்டில்மேன் நடிகரான சிவகுமார் வுமனைசராக நடிக்க ரஜினி நல்லவராக நடித்த படம்.

16 வயதினிலே:

ரஜினி நடித்த முதல் வண்ணப்படம். கிராமத்து சப்பாணி கமலஹாசனை டார்ச்சர் செய்யும் சண்டியர் பரட்டை கேரக்டர். "இது எப்படி இருக்கு?" என்று முதல் பன்ஞ் டயலாக் பேசினார். படத்துக்கு வாங்கிய சம்பளம் 2500 ரூபாய்.

ஆடுபுலி ஆட்டம்:

கொடூரமான வில்லனாக நடித்த படம். "இது ரஜினி ஸ்டைல்" என்ற பன்ஞ் டயலாக் பேசிய படம்.

ஆயிரம் ஜென்மங்கள்:

விஜயகுமார் ஹீரோ. ரஜினி, ஹீரோயின் லதாவின் அண்ணன். ரஜினிக்கு ஜோடியும் கிடையாது டூயட்டும் கிடையாது.

பைரவி:

ஸ்டைல் மன்னனாக இருந்த ரஜினி. சூப்பர் ஸ்டாரான படம். பட்டத்தை கொடுத்தவர் கலைப்புலி எஸ்.தாணு. இந்தப் படத்துக்காக ரஜினியின் 30 அடி கட்அவுட் வைத்தது அன்றைக்கு ஹாட் டாபிக்!

இளமை ஊஞ்சலாடுகிறது:

ரஜினியை வைத்து ஸ்ரீதர் இயக்கிய முதல்படம். ஜாலியான பணக்கார வீட்டு பிள்ளையாக நடித்திருந்தார்.

முள்ளும் மலரும்:

தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்த படம் என்று ரஜினி சொல்லும் படம். தங்கை மீது வெறித்தனமான பாசம் கொண்ட அண்ணன் கேரக்டர். ரஜினிக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் இயக்கிய படம்.

ப்ரியா:

ரஜினி நடிப்பில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். எழுத்தாளர் சுஜாதாவின் கதை. எஸ்.பி.எம்.டைரக்ட் செய்திருந்தார். ஹீரோயின் ஸ்ரீதேவியின் வழக்கறிஞராக நடித்திருந்தார். பாடல்களுக்காகவே ஹிட்டான படம்.

நினைத்தாலே இனிக்கும்:

கமல் நடத்தும் இசை குழுவில் கிதாரிஸ்டாக நடித்திருந்தார். சின்ன சின்ன திருட்டு செய்கிற மேனரிசம் கொண்ட கேரக்டர். பாட்டுக்காக ஓடிய படம். ரஜினி காமெடியனாக நடித்த முதல் படம்.

ஆறிலிருந்து 60 வரை:

ரஜினியின் ஆக்டிங் திறமையை வெளிக்கொண்டு வந்த படம். அச்சகத்தில் வாழ்க்கையை துவங்கி பெரிய எழுத்தாளனாக வாழ்ந்து மறைந்த ஒருவனின் முழுநீள வாழ்க்கை கதை. இந்த படத்துக்காக பல விருதுகளை பெற்றார்.

பில்லா:

ரஜினியின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம். பில்லா என்ற தாதாவாகவும், தெருப்பாடகன் ராஜப்பாகவும் நடித்து கலக்கிய படம். பாலாஜி தயாரித்தார். கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். இதன் ரிமேக்கும், இரண்டாம் பாகமும் பின்னாளில் வந்தது.

ஜானி:

மகேந்திரனின் இயக்கத்தில் 2வது படம். இதில் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான மீசையுடன் சலூன் கடை நடத்தும் வித்யாசாகராக ரஜினி நடித்தது எல்லோரையும் கவர்ந்தது.

முரட்டுக்காளை:

அடிக்கடி தலைமுடியை கோதிக்கொண்டு ஸ்டைல் பண்ணும் ரஜினி முதன் முறையாக வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் நான்கு சகோதர்களுக்கு அண்ணனாக நடித்தார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகள் மிகவும் பிரபலம்.

தில்லு முல்லு:

ரஜினி நடித்த முழு நீள காமெடி படம். முதன் முறையாக தனது அழகான மீசையை எடுத்துவிட்டு நடித்திருந்தார். இந்தி கோல்மால் படத்தின் ரீமேக். பாலச்சந்தர் டைரக்டர்.

நெற்றிக்கண்:

அப்பா மகன் என்ற இரண்டு கேரக்டர். இதில் பெண் பித்தனாக, தொழில் அதிபர் சக்ரவர்த்தி என்ற அப்பா கேரக்டரில் நடிப்பு பின்னியிருப்பார். நடிகை லட்சுமியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார்.

எங்கேயோ கேட்ட குரல்:

அப்போது உச்சத்தில் இருந்த அம்பிகா, ராதாவுடன் நடித்த படம். ஒழுக்கமும், நேர்மையும் மிக்க கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். ஒழுக்கம் தவறிய முதல் மனைவிக்கு இறுதி சடங்கு செய்து விட்டு இரண்டாவது மனைவியுடன் ஊரைவிட்டே செல்லும் அற்புதமான கதை. ஒரு முழுமையான நடிகனாக ரஜினி பரிமாணம் பெற்ற படம்.

மூன்று முகம்:

முதன் முறையாக 3 கேரக்டர்களில் நடித்த படம். போலீஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் ரஜினியை தூக்கி நிறுத்தியது. அவரது நடையும், ஸ்டைலும் பல போலீஸ் அதிகாரிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.

அன்புள்ள ரஜினிகாந்த்:

ரஜினி ரஜினியாகவே நடித்த படம். ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வாழும் ஒரு குழந்தை மீது அன்பு செலுத்தும் நடிகராக நடித்திருந்தார். குழந்தையாக நடித்திருந்தவர் மீனா.

ஸ்ரீராகவேந்திரர்:

சூப்பர் ஸ்டாரின் 100வது படம். அவர் தனது ஆன்மீக குருவாக ஏற்றிருந்த ஸ்ரீராகவேந்திரராக நடித்திருந்தார். ரஜினி நடித்த முதல் பக்தி படம்.

படிக்காதவன்:

நடிகர் திலத்துடன் நடித்த முக்கியமான படம். அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட படம்.

மாவீரன்:

ரஜினி தயாரித்த முதல் படம். இந்திய குத்துச்சண்டை வீரர் தாராசிங் ரஜினியுடன் நடித்திருந்தார்.

மாப்பிள்ளை:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தயாரிக்க, ரஜினி நடித்த படம். மாமியார் மருமகனுக்கு இடையில் நடக்கும் பனிப்போர் கதை. மாமியாராக நடித்தவர் ஸ்ரீவித்யா.

தளபதி:

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்த படம். தாதா மம்முட்டிக்கு விசுவாசம் மிக்க தளபதியாக ரஜினி நடித்திருந்தார். மணிரத்னம் டைரக்ட் செய்திருந்தார்.

மன்னன்:

சிவாஜி பிலிம்சுக்காக ரஜினி நடித்த படம். திமிர் பிடித்த பணக்கார மனைவியை அடக்கும் ஏழை இளைஞனின் கதை. மனைவியாக விஜயசாந்தி நடித்திருந்தார். இயக்கியவர் பி.வாசு.

அண்ணாமலை:

பணக்கார நண்பனின் பணத்திமிரை தன் உழைப்பால் அடக்கிய ஒரு பால்காரனின் கதை. குஷ்பு முதன் முறையாக ஜோடியாக நடித்திருந்தார். நண்பனாக சரத்பாபு நடித்திருந்தார்.

பாண்டியன்:

தன்னை வைத்து பல படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் டீமிற்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம். இந்த படத்தின் வருமானத்தை கொண்டு எஸ்.பி.முத்துராமன் டீமில் இருந்தவர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டார்கள்.

எஜமான்:

நேர்மையும் நீதியும் கொண்ட கிராமத்து பெரிய மனுஷனாக நடித்த படம். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மீனா இதில் ரஜினிக்கு ஜோடி. இதில் ரஜினியின் துண்டு ஸ்டைல் மிகவும் பிரபலம்.

வீரா:

சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டு பெண்களை மணந்து கொண்டு தவிக்கும் காமெடி கேரக்டரில் நடித்த படம். ரோஜா, மீனா இரண்டு மனைவிகளாக நடித்திருந்தனர்.

அருணாச்சலம்:

தன் வாழ்க்கைக்கு பல்வேறு கட்டங்களில் உதவிய நண்பர்களுக்காக நடித்துக் கொடுத்த படம்.

பாட்ஷா:

ஒரு ஆக்ஷன் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்போதும் உதாரணமாக சொல்லப்படுகிற படம். சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்திருந்தார். மும்பை டானாகவும், ஆட்டோ டிரைவராகவும் ரஜினி அதகளம் பண்ணிய படம்.

படையப்பா:

திமிர் பிடித்த ஒரு பெண்ணை அவளை எந்த விதத்திலும் துன்புறுத்தாமல் திருத்த முயற்சிக்கும் ஆணின் கேரக்டர். அந்த பெண்ணாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். வித்தியாசமான கதை கொண்ட படம். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம்.

பாபா:

ஆன்மீகத்தில் ஈடுபாடில்லாத இளைஞனை தாய், ஆன்மீகத்தை நோக்கி திரும்ப வைக்கும் படம். ரஜினி மிகவும் எதிர்பார்த்த படம். பெரிய அளிவில் ஹிட்டாகவில்லை.

சந்திரமுகி:

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமை பெற்ற படம். சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படம். சிவாஜி பிலிம் தயாரித்தது. பி.வாசு இயக்கியது. இதில் இடம் பெற்ற வேட்டைய மகராஜா கேரக்டரும், லகலகலகலக சிரிப்பும் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.

சிவாஜி:

உயர்ந்த லட்சியத்துக்காக கோடிகளை இழந்தாலும் ஒரு ரூபாய் மூலதனத்தில் இழந்ததை மீட்கும் இளைஞனின் கதை. ஷங்கர் இயக்கம். ஏவிஎம் தயாரிப்பு.

எந்திரன்:

ரஜினி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோ விஞ்ஞானி, வில்லன் ரோபோ என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார்.

அடுத்து...

கோச்சடையான்:

வெயிட் அண்ட் சீ...!

சூப்பர் ஸ்டாருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாசகர்களாகிய நீங்களும் உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : dinamalar



இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ஆக்ரோஷமான கதாநாயகன், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே படத்தில் ஒரு கதாநாயகி என இருந்த தமிழ் சினிமாவின் போக்கு சமீப காலமாக சற்று அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது.

வழக்கமான கதை, கதைக்களம், காட்சிகளை மறுத்து புது ரூட்டில் பயணிக்கும் இளைஞர்களை தமிழ் சினிமாவில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களின் படங்கள் மிக சொற்பம்தான். அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் சூதுகவ்வும், யாருடா மகேஷ் படங்கள் தயாராகியுள்ளன. அதே ப்ளேவரில் தயாராகும் இன்னொரு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். "சூது கவ்வும்" வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் 'ரௌத்திரம்' இயக்குனர் கோகுல் இயக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா".

நம் அன்றாட வாழ்வில் நிகழும் நகைச்சுவையின் பின் பலம் அதைவிட நகைச்சுவையானது. அதை முழு நீள நகைச்சுவையாக முன்னெடுக்கிறது இப்படம் என்றார் கோகுல்.

விஜய் சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார்.

'சுமார் மூஞ்சி குமார்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கும் பசுபதியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதாம்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைக்கிறார். நடனம் ராஜூசுந்தரம். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.



சென்னையின் இதயப்பகுதியான ஜெமினி பாலத்தின் கீழே, குதிரை பந்தயத்தை தமிழகத்தில் ஒழித்ததன் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் குதிரை சிலையில் நாயகன் ஹாயாக படுத்திருப்பது போன்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கே புன்னகையை வரவழைக்கிறது.

பாதி ஊரை கையாலே காலி செய்யும் சூப்பர் ஹீரோக்களுக்கு நடுவில் இப்படிப்பட்ட படங்கள் அமைந்தால் அது ஆரோக்கியமானதாக அமையும் என்பதே எனது(பலரின்) கருத்து.

இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி

இந்தப் படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களில் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது இந்த டிரைலர்.

இரண்டு நாட்களில் இத்தனை ஹிட்ஸ்களை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டிரைலர் அள்ளியிருபபது குறித்த செய்தியைக் கேட்ட விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம். இவரது படங்களில் இரண்டே நாளில் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்ட டிரைலர் இதுதான் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணமாம்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

இப்படத்தின் First Look Poster-களே வித்தியாசமாக இருந்த நேரத்தில், படத்தின் Teaser மற்றும் Pray Song வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது.



Pray Song பாடல் வரிகள்:

ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டுப் போயிட்டா
அந்தப் பொண்ண வெறுப்பு ஏத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் PRAY பண்ணுங்கடா
அவ PARENTSக்காக PRAY பண்ணுங்க
ஏன், அவ புருஷன், புள்ளக்குட்டிங்களுக்கும் சேர்த்தே PRAY பண்ணுங்கடா… PRAY பண்ணுங்க…

ஏய் பொண்ணே உனக்காகத்தான்… தினம் PRAY பண்ணுவேன்…
ஓம் ஸ்வாகா, மாகா, உங்கக்கா மக்கா...
பொண்ணே உனக்காகத்தான் தினம் PRAY பண்ணுவேன்…

உன் செல்போனுல பேலன்ஸ் மறைஞ்சுடும்டி...
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நிறைஞ்சிடும்டி...
உன் ஏடிஎம் கார்ட் இரண்டும் தொலைஞ்சிடும்டி...
அது கிடைச்சாலும் PIN NUMBER மறந்திட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

காலேஜ் பசங்கல்லாம் AUNTYன்னு அழைக்க வேண்டி PRAY பண்ணுவேன்...
DRAINAGE குழில நீ விழுந்து குளிக்க தோண்டி PRAY பண்ணுவேன்...
தூங்கப் போனா தூங்க முடியாமத்தான் கொசு புடுங்கிட PRAY பண்ணுவேன்...
அதையும் மீறி நீயும் தூங்கப் போனா, பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

உன் பெஸ்ட் FRIENDக்கு அழகான புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
வழுக்கைத் தலயோட உனக்கொரு புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துப் போட நான் சத்தியமா PRAY பண்ணுவேன்...
அந்தப் பத்தும் லவ் பண்ணாமலே என்னைப் போல மாப்பிள்ளைய நீயும் தேட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… அங்கு PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

நீ BIKEல போனா போலீஸ் நிறுத்தணும்டி...
நீ ஜாகிங் போனா நாய் துரத்துணும்டி...
உன் GIRL FRIENDS எல்லாம் பேயா மாறணும்டி...
உன் BOY FRIENDS எல்லாம் GAY-ஆ மாறத்தான் PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : Yarlminnal



ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க...

இந்தியாவில் 50 ஆண்டில் 220 மொழிகள் அழிவு - :(

மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர்.


இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் மொழி ஆய்வு மற்றும் பதிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் இந்தியா முழுவதும் உள்ள மொழிகள் குறித்து ஆய்வு நடத்தியது. எழுத்தாளர் கணேஷ் தேவி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் மொழி குறித்த ஆய்வு என்ற பெயரில் இது நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளரும், திட்ட தலைவருமான கணேஷ் தேவி கூறுகையில், இந்தியா முழுவதும் எங்கள் ஆய்வு மூலமாக 780 மொழிகளை கண்டுபிடித்தோம். அவற்றில் 100க்கும் மேற்பட்டவை அழியும் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அழிந்து போன மொழிகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் மொழிகள் குறித்த எங்கள் ஆய்வில் கிட்டத்தட்ட 880 மொழிகள் இந்தியா முழுவதும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அவற்றில் பல மொழிகள் மறைந்துவிட்டன. 1961ம் ஆண்டு 1,652 மொழிகள் இருந்ததாக பதிவாகி உள்ளது. பின்னர் அது 1,100 ஆக குறைந்துள்ளது.

1971 கணக்கெடுப்பின் போது 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் மொழிகள் 108 இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன என்றார்.

தமிழ் மொழி இறக்குமா...?


தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.


உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து) தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம் தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்! வருங்கால சந்ததியினருக்கு உதவி செய்வோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தலைவா-வில் இவ்வளவு விஷயம் இருக்கா...!!!

விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'தலைவா' படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளன திரையரங்குகள்.

விஜய்யையும் அவர் தந்தையையும் முதல்வர் சந்திக்க மறுத்த தகவல் வெளியான பிறகு இந்தக் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வேறு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் 'தலைவா' படம் ரிலீஸ் ஆக உள்ள அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்துல...?


வெயிட்... 20 விஷயங்கள் இருக்கு. வரிசையா ஒவ்வொன்ன சொல்றேன் கேட்டுக்கோ...
  1. சிரிக்க வைக்க சந்தானம் இருக்கும் போது கவலை எதுக்கு பாஸ்.

  2. 'மதராசப்பட்டணம்' ஏ.எல்.விஜயுடன் விஜய் இணையும் முதல் படம்.

  3. தலைவாவை தயா‌ரித்திருக்கும் மிஸ்‌ரி புரொடக்சன் சந்திரப்பிரகாஷ் ஜெயின் பைனான்சியர். இவர் கடைசியாக தயாரித்த படம் சத்தியராஜ்-குஷ்பு நடித்த 'ரிக்சா மாமா'. அதன் பிறகு படமே தயா‌ரிக்காமல் இருந்தவருக்கு விஜய் படம் கனவு புராஜெக்ட்.

  4. 'தெய்வத்திருமகள்' அமலாபாலுடன் விஜய் இணையும் முதல் படம். படத்தின் ஆரம்பத்தில் சமந்தா ரூத் பிரபு, யாமினி கௌதம் போன்றவர்களின் பெயர்களும் கதாநாயகி ரோலுக்கு அடிபட்டது. இந்த ரேஸில் ஜெயித்தது என்னவோ நம்ம அமலாபால் தான்.

  5. அமலாபால் முதல்முறையாக இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.


  6. ஆஸ்திரேலியாவில் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியான டான்ஸராக நடித்துள்ளார் விஜய்.

  7. விஜய் படம் ஒன்றுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது இதுவே முதல்முறை. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ... என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார்.

  8. நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

  9. திருமண வேலைகள் காரணமாக ‌ஜி.வி.பிரகாஷால் பின்னணி இசை சேர்ப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியவர் ரகு நந்தன்.

  10. துப்பாக்கியிலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியது போல் இதிலும் அபிமன்யூ சிங் என்ற நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

  11. இவர்கள் தவிர ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயா, இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

  12. ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

  13. படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

  14. ஆஸ்ட்ரேலியாவில் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் கலக்கும் விஜய், தமிழகம் திரும்பிய பிறகு டைட் அரைக்கை சட்டை, டைட் பேன்ட், டக் இன் என்று யூனிஃபார்ம் கெட்டப்புக்கு மாறுகிறார்.


  15. சத்யராஜுக்கு பெ‌ரியய்யா என்ற பவர்ஃபுல் வேடம். விஜய் கதாபாத்திரத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதே சத்யரா‌ஜின் பெ‌ரியய்யா கேரக்டர்தான் என்கிறார்கள். தாடியுடன் வெள்ளை காஸ்ட்யூமில், தோளில் நீண்ட அங்கியுடன் வருகிறார்.

  16. சற்றே நீண்ட திரைப்படம் அதாவது இரண்டு மணி ஐம்பது (2:50) நிமிடங்கள்.

  17. சென்சா‌ரில் U/A சான்றிதழ்தான் கிடைத்தது. U/A என்றால் 30 சதவீத வ‌ரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி U சான்றிதழ் பெற்றனர். ‌ரிவைஸிங் கமிட்டியில் 4 இடங்களில் படம் கத்த‌ரிக்கப்பட்டது.

  18. இதுவரை வெளியான விஜய் படங்களில் தலைவாவுக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 திரையரங்குகள். தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகள்.

  19. ஆந்திராவில் 'அண்ணா' என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகிறது. கேரளாவில் 'தலைவா' என்ற அதே பெய‌ரில் தமிழிலேயே வெளியாகிறது.

  20. தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பது சன். 15 கோடிகள் என்கிறார்கள். இது உண்மையா ...?!
இது போதுமா இல்லை இன்னும் வேணுமா ...? சரி வாடா மாப்ளே... படம் நாளைக்கு ரிலீசு ... முதல் ஷோ பாத்துட்டு படத்தப்பத்தி விரிவா அலசலாம்.

படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : nilavaithedi



'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?

கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது.

மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக இன்று நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான்.

1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ்.

அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!

2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், "இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும்" என்கிறது 'அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா (anaesthesia and analgesia)' இதழ்.

மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

3. ஜூஸ் நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

4. குடை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.

அட இதுல இவ்வளவு விஷயம் இருக்கா...!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran news paper



கோலி சோடா (2013) படத்தின் டீஸர்!

யார் இந்த விஜய் மில்டன் ?

‘ஆட்டோகிராஃப்’, 'காதல்’, 'வழக்கு எண் 18/9’ படங்களை ரசனை ஓவியமாக மனதில் பதியச்செய்த ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், 'கோலி சோடா’ மூலம் மீண்டும் இயக்குநர் இருக்கையில் அமர்கிறார்!

கோலி சோடா படத்தோட கதை என்னனா ...

ஒரு கோலி சோடாவில் 200 மில்லி தண்ணி இருக்கும். சாதாரணமா பார்த்தா அது வெறும் தண்ணிதான். ஆனா, அதுக்கு அழுத்தம் கொடுத்தா, அதுவரையிலான இயல்பை மீறி ஒரு விஷயம் பீறிட்டு வரும். 'இந்தத் தண்ணியிலா இவ்வளவு ஃபோர்ஸ் இருந்தது?’னு ஆச்சர்யப்படுவோம்.

கோயம்பேடு காய்கறி சந்தையை மையமாகக் கொண்டு, சாதாரணமா இருக்கிற நாலு பசங்களுக்கு பிரஷர் கொடுக்கும்போது, தொடர்ந்து தொந்தரவு பண்ணும்போது, அவங்க எப்படி அடிச்சு, உடைச்சு வெளியே வர்றாங்கனு சொல்ற படம் தான் 'கோலி சோடா’!'



என்ன ஸ்பெஷல் இருக்கு இந்த படத்துல...?

பவர் ஸ்டார், சாம் அன்டர்சன் & டி.ஆர் இணையும் கோலி சோடா பாடல் உருவாகிய விதம் பற்றி அப்பாடலின் ட்ரெயிலர் வடிவில் யூடியூப்பில் வீடியோவொன்று ஹிட்டாகி வருகின்றது அதன் இணைப்பு இங்கே...



வீடியோவின் தொடக்கத்தில் யூடியூப்பில் ஹிட் எண்ணிக்கையை Alt செய்ய முடியுமா? என கேட்பதும் டான்ஸ் என்றால் ஈசியா இருக்கனும் என சாம் அன்டர்சன் சொல்வதற்கும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
`


காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ?

காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு சான்விட் தான் மிகவும் சிறந்தது. அதனால் இன்று நாம் பார்க்க இருப்பது காளான் பிரட் சான்விட்ச்.

அதற்கு முன், பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.


சரி.. சரி இனி காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

காளான் - 200 கிராம்,
கோதுமை பிரட் - 4,

வெங்காயம் - 2,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிதளவு,

மசாலாத் தூள் - கால் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - சிறிதளவு,

கொத்துமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணைய் - 100 கிராம்.

செய்முறை:-

  • காளான்களைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.

  • வாணலியில் வெண்ணைய் போட்டு, லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய்,மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

  • கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும்.


  • இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும்.

  • சுவையான, சத்தான காளான் சான்விட்ச் ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



வணக்கம் சென்னை (2013) - பாடல் விமர்சனம்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் "எங்கடி பொறந்த..." என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.

1. ஹே... நேரம் மாறலாம் காலம் மாறலாம்
பாடியவர்கள் : பாபோன் & மரியா ரோ வின்சென்ட்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு ஸ்லொ மெலடி பாடல். கிடார், சாக்ஸ், வயலின் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாடல். பாடல் ஈசியா ஹம் பண்ணும்படி இருக்கு. பாடல் வரிகள் ஆங்காங்கே தூவி நிரப்பியிருக்கிறார் நா.முத்துக்குமார்.


2. ஒசாகா ஒசாகா
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு காதல் பீட் பாடல். பாடல் அமைப்பு A.R.ரகுமான் பாடலை நினைவுபடுத்துகிறது. தேங்கா நாராக நெஞ்ச உரிசாலே... உள்ளா என்னான்னு காட்டிப்புட்டா .. நல்ல கவிதை வரிகள். என் பேவரிட் பாடல்.


3. ஓ பெண்ணே பெண்ணே
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு மென்மையான மெலடி பாடல். பாடல் முழுக்க பியானோ இசை...


4. எங்கடி பொறந்த
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடலை எழுதியவர் : விக்னேஷ் சிவன்.

இது ஒரு சிம்பிள் பீட் பாடல். ரஜினி பாஷா ஸ்பீச் மியூசிக், எங்கடி... எங்கடி.... எல்லாம் மிக மிக கலக்கல். மீண்டும் ஒரு பேவரிட் பாடல் இந்த ஆல்பத்தில்...


5. ஐலசா ஐலசா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு பியுட்டிபுள் மெலடி பாடல். இந்த பாடலில் பியானோ, நாதஸ்வரம் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பாடல். சுசித்ரா வாய்ஸ் மிக அழகாக பொருந்தி இருக்கு.


6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
பாடலை எழுதியவர் : அர்ஜுன்
இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். அனிருத்தின் டிரேட்மார்க் பாடல். ஓக்கே ரகம்.


7. சென்னை சிட்டி
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
பாடலை எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழன் ஆதி & ஹர்த் கவுர்

இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். நான் ஒருதடவ .சொன்ன .... இந்த வரிகளை பயன்படுத்தியவிதம் மிக மிக அருமை. இது தாண்டா சென்னை கெத்து ... வரிகள் அருமை!! கோழி சவுண்ட் அங்காங்கே அருமை!!!

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் வணக்கம் சென்னை ரசிக்கும்படி இருக்கு!


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top