என்னமோ ஏதோ (2014) – பாடல் விமர்சனம்

கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரபலமான சினிமா பாடல்களைத் தந்து வரும் டீ.இமானின் அடுத்த படம் ‘என்னமோ ஏதோ’. கோ படத்தில் வரும் பாடலின் முதல்வரியே படத்தின் தலைப்பாகி விட்டது. கெளதம் கார்த்திக்கின் இரண்டாவது படம்.


சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் தெலுங்கில் ஹிட்டான "அலா மொதலயிந்தி" என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறது. கௌதம் கார்த்திக் ஹீரோ, அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இருவருமே தமிழுக்கு புதுசு என்றாலும் தெலுங்கு தேசத்தில் பாப்புலர் ஆனவர்கள்.

பிரபு, ரேணுகா முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்குகிறார். இசை: இமான், ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன் பாடல்: மதன் கார்க்கி.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 5 பாடல்கள், 2 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக்.பார்க்கலாம் எப்படி பாடல்கள் வந்திருக்கிறதென!

1. மொசலே.. மொசலே.. : தீபக், ஏ.வி.பூஜா.

டி.இமான் கிடார் பயன் படுத்துவது மிகவும் குறைவு. இப்பாடலில் கிடாரும், நாதஸ்வரமும் சேர்ந்து கலக்கியிருக்கிறார் மனுஷன். நல்லதொரு பெப்பி நம்பர். தீபக் குரலும், பூஜாவின் குரலும் வெஸ்ட்டேர்ன் பாடலுக்கு நச் செலெக்‌ஷன்! அக்மார்க் டி.இமான் பாடல்! பாடல் போகப் போகப் பிடிக்கலாம்.

2. முட்டாளாய்.. முட்டாளாய்.. : டி.இமான், மரியா ரா வின்செண்ட்.

ஹிட் ஆகக் கூடிய அதிரடி மெட்டும் மென்இசையும் கலந்த பாடல்.


‘மாற்றங்கள் எனக்குள் ஆராய்கிறேன்.. சத்தியமாய் இது பூமி இல்லை.. ’ என காதல் படுத்தும் பாட்டைபாடலாக்கியிருக்கிறார்கள். பாடலில் டி.இமான் குரல் அவ்வளவு பொருத்தம். மரியா ராப் நச் நச் நச்!! கடவுளே.. கடவுளே.. பாடலை ஞாபகப்படுத்துகிறதே இமான் சார்??

3. நீயென்ன அப்பாட்டக்கரா.. : அனிருத், ஹர்ஷிதா க்ரிஷான்.

சந்தானத்தின் பிரபல வசனமான ‘அப்பாடக்கரை’ வைத்தே ஒரு பாட்டை எழுதிவிட்டார்கள்.

‘ நீ அப்பிடி பண்ணுற.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?’ என காதலன் காதலி இருவரும் மாத்தி மாத்தி கேட்டுக்கிட்டா அது இப்பாடல்! அனிருத்தின் குரல் செம… கேஷுவலாக பாடுவதே இவரின் பெரிய ப்ளஸ். ஹர்ஷிதா குரலும் பாஸ் மார்க். ‘உன்னோட பேரை பாஸ்வேர்ட்டாக வைத்திருந்தேன்.. நீ போனால் வேறு பேரா இல்லை..?’ என வரிகளும் ரசிக்க வைக்கிறது.

அந்தப் பாடலில் அசத்தலாக ஸ்கோர் செய்திருப்பவர் பாடகி ஹர்ஷிதா தான்.


4. புதிய உலகை.. : வைக்கோம் விஜயலட்சுமி.

கும்கி படத்தில் வரும் ‘ஒண்ணும் புரியல..’ பாடலையும் கொஞ்சம் ’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..’ பாடலையும் மிக்ஸ் செய்தால் இப்பாடல் ரெடி! ஜஸ்ட் பாஸ்!

மயக்கும் குரலைக்கொண்ட வைக்கம் விஜயலட்சுமியை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார் இமான். விஜயலட்சுமியின் காந்தக் குரலுக்காகவே அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

5. ஷட் அப் யுவர் மெளத் : ஷ்ருதி ஹாசன், தீபக்.

பாடலின் முதல் வரியை பார்த்ததுமே தெரிந்திருக்கும் எப்படிப்பட்ட பாடல் என்று. ஷ்ருதியின் குரல் வாவ்வ்வ்வ்……!!!!!! தீபக்கின் குரலும் பாடலுக்கு அத்தனை பொருத்தம்! சூப்பர் ஹிட் அடிக்கும் இப்பாடல்!

இதை விட ஒரு இன்ஸ்ட்ரூமெண்டலும், ’புதிய உலகை’ பாடலுக்கும், ’ நீயென்ன பெரிய..’ பாடலுக்கும் கரோக்கிகள் இருக்கின்றன ஆல்பத்தில்!


கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் என்னமோ ஏதோ சுமாரா தான் இருக்கு !

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com



இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்..

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?


அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.

ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்

செர்ரி பழங்கள்:

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள். அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்:

இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.

அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்:

நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.

மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட் மீல்:

ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.

அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்”

கதகதப்பான பால்:

உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.

ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?

ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

வாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & TamilThoguppu



ரம்மி (2014) - பாடல் விமர்சனம்

தொடர் வெற்றிப் படங்களின் கலக்கல் நாயகன் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மியமான படத்தின் பாடல்களுக்கு D.இமான் இசையமைத்திருந்தார். காயத்ரி, ஐசுவர்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை க.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் 'பீட்சா' படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ரம்மி படத்தின் இசைப் பற்றி, இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கும் யுகபாரதி பெருமிதத்துடன் கருத்து சொல்லியிருக்கிறார். "வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ரம்மி திரைப்படத்தின் பாடல்களும் மண்மணம் கமழும் விதத்தில் அமைந்திருப்பதற்கு இயக்குநர் பாலகிருஷ்ணனின் ரசனையே காரணம். அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைவது ஒருகாலத்தில் வரம்போல இருந்தது. இப்போது அதனை வெகு இயல்பாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரிகள் புரிகின்றன. இசை தமிழ் அடையாளத்தோடு இருக்கிறது. அசல் தமிழ் இசையின் திசை நோக்கி நானும் இமானும் பயணிக்க நீங்கள் காட்டிவரும் ஆதரவும் அன்பும் நெகிழ்வடையச் செய்கிறது.ஏனைய படங்களிலும் இம்மாதிரியான இசை வரவை எதிர்பார்ப்போமாக." என்று உற்சாகப்படுகிறார் யுகபாரதி.
காதலும், சீட்டாட்டமும் ஒன்றுதான். மூன்று இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஒன்றாக பழகுகின்றனர். அவர்களின் காதல், நட்பு, குடும்ப செண்டிமென்ட், போராட்டங்களே படத்தின் கதை. இப்படம் தனியார் கல்லூரிகள் உருவாகாத 80-ம் ஆண்டு நடக்கிற கதை.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 4 பாடல்கள், 3 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக். எக்ஸ்குளூஸிவ் பாடல்கள் ரிவ்யூ இதோ…

1. அடியே என்ன ராகம் நீ பாடுற.. (அபே ஜோ பர்துகர், பூர்னிமா சதீஷ்)

யுக பாரதி எழுதிய இப்பாடல்.. காதல் கொண்ட ஒரு ஆணின் தவிப்பு பற்றி பேசுகிறது.. ‘இதுவரை இப்படி இல்ல.. கொடுக்கற தொல்ல.. எதுக்கு நீ பொறந்த தெரியல… எதுக்கு வளர்ந்த தெரியல… ‘என வரிகள் ஓகே ரகம். ஆனால் கவனயீர்ப்பு மிஸ்ஸிங்! இசையும் ஜஸ்ட் பாஸ்…

2. கூடமேல கூடவெச்சி.. கூடனூரு போறவளே..(வி.வி.பிரசன்னா, வந்தனா ஸ்ரீநிவாசன்)

டூயட் பாடல். ‘ஒரு பாதி கதவு நீயடி..’ பாடல் பாடிய வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியதாலோ என்னவோ..அந்த பாடலை கேக்கறது போலவே ஒரு ஃபீல்.. தேறாதா இசை.. சுமாரான வரிகள்.. ஹ்ம்ம்… ஜஸ்ட் ஓகே…

3. ஒரு நொடி பிரியவும்… (டி.இமான், திவ்யா ரமணி)

மற்றுமொரு டூயட். திவ்யா ரமணி.. வார்ம் வெல்கம். அழகான குரல்.(ஸ்ரேயா கோஷலை இமிட்டேட் பண்ணாமல் பாடுங்க.. சூப்பரா இருக்கும் திவ்யா.) இந்த பாடல் மெட்டில் ஒரு தொகை பாடல்கள் மனசுக்கு வந்து போகிறது. எங்கயோ கேட்டமாதிரி இருக்கே… எங்கற மாதிரி இல்லாம.. அட.. இந்த பாட்டுதான்யா அது.. என வகை தொகையாக பல பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

4. எதுக்காக என்னை நீயும் பாத்த.. ( பூஜா எ.வி, சந்தோஷ் ஹரிஹரன்)

டூயட் பாடல். கும்கி படத்தில் ’வயலின்’ பாடல் போல்.. இந்த பாடலிலும் வயலின் அட்டகாசப்படுத்துகிறது. வரிகளும், இசையும் சுமார் ரகம் தான்.

மேலும், மேல இருக்கற 4 பாடல்களின் கரோக்கிகளும் சீ.டியில் அடக்கம்.!

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ரம்மி ரசிக்கும்படி இருக்கு!


பொதுவாகவே விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com



நண்பேன்டா (2014)

'இது கதிர்வேலன் காதல்' கூட்டணியான உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா மீண்டும் 'நண்பேன்டா' படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது.

வெற்றி கூட்டணி

'ராஜா ராணி' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் பிரவேசித்துள்ள நயன்தாரா, உதயநிதி ஸ்டாலினுடன் 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பிப்ரவரி-14ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் யூ-டியூப் இணையத்தில் ஹிட்டடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

'இது கதிர்வேலன் காதல்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின். இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கும் 'நண்பேன்டா' படத்தில் நடித்து, தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். ஹிட் கூட்டணியான உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ், பாலசுப்ரமணியெம் ஆகியோர் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

நண்பேன்டா

'நண்பேன்டா' படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தார்கள். 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜெகதீஷ். இதனால் அவருக்கு நயன்தாராவுடன் ஏற்கனவே பழக்கம், 'இது கதிர்வேலன் காதல்' படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு நயன்தாராவுடன் ஏற்பட்ட நட்பு இருவரும் மீண்டும் 'நண்பேன்டா' ஆகலாமே என்று நயனிடம் பேசியிருக்கிறார்கள்.

படத்தின் கதையை கேட்ட நயன் உடனே ஒ.கே சொல்லியிருக்கிறார். பிப்ரவரி 17ம் தேதி முதல் திருச்சியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. திருச்சியை பின்னணியாக கொண்ட கதை என்பதால் முழுப்படத்தையும் அங்கேயே படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

காமெடி கூட்டணி

இப்படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களின் காமெடி சாயல் இப்படத்தில் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி முந்தைய படங்கள் போல் அல்லாமல் படத் தொடங்கத்தில் இருந்து முடியும் வரை சந்தானம் வருவது போன்று அவரது பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறாராம் ஜெகதீஷ்.

தமிழ் திரையுலகில் தற்போது பாண்டிராஜ் - சிம்பு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'கஹானி' ரீமேக்கான 'அனாமிகா' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா - சந்தானம் - ஹாரிஸ் ஜெயராஜ் என ஒரு மெகா கூட்டணி இணைந்து மீண்டும் காமெடியில் கலக்க இருக்கிறார்கள்.

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Goolge Images & The Hindu



இது கதிர்வேலன் காதல் (2014) - பாடல் விமர்சனம்

"குருவி","மன்மதன் அம்பு", "ஆதவன்", "7ஆம் அறிவு" ஆகிய படங்களைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். முன்னனி தயாரிப்பளராக இருந்த இவர் 2012ஆம் ஆண்டில் இயக்குநர் "ராஜேஷ்" இயக்கத்தில் வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.


முதல் படத்திலேயே முன்னனி ஹீரோவாக முத்திரைப்பதித்த இவர் தற்போது நயன்தாரா உடன் "இது கதிர்வேலன் காதல்" என்ற படத்தில் நடித்து வருகிறார். முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை "சுந்தரபாண்டியன்" படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.

ஒரு கல் ஒர் கண்ணாடி படத்தின் வெற்றியும், நயன் தாராவின் நம்பர் 1 அந்தஸ்தும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது. மேலும் சுந்தரபாண்டியன் என்ற சக்சஸ் படத்தை கொடுத்த இயக்குனர் பிரபாகரனின் இரண்டாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடுகிறது.

வழக்கம்போல சந்தானம் காமெடியில் கலக்கியிருக்கிறார் என்றும், நீண்ட இடைவேளைக்கு பின்னர் கிளாமர் இல்லாத சந்திரமுகி படத்தில் வந்ததை போல ஒரு ஹோம்லி லுக் நயன் தாராவை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் இயக்குனர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.

1. முதல் பாடல் 'மெள்ள மெள்ள..." என்று தொடங்கும் பாடலை கார்த்தி பாடியுள்ளார். பெப்பி சாங். பாடலுடன் பயணித்து வரும் விசில் அருமை. நம்மவர் படத்தில் வரும் "சொர்க்கம் என்பது நமக்கு " பாடல் கொஞ்சம் + கடல் படத்தில் வரும் "ஏலே கீச்சா " பாடல் கொஞ்சம் கலவை.

2. இரண்டாவது பாடல் டூயட் பாடல். இதை ஹரினி, ஹரீஷ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர். "அன்பே அன்பே..." என்று தொடங்கும் மெலடி பாடல் இது. தனது ஆஸ்தான பாடகர்கள் பாடிய மெலடி பாடல் இது. கேட்ட உடனே பிடித்துவிடும் பாடல்.

3. மூன்றாவதாக "சர சர சரவெடி..." என்னும் குத்துபாடலை கேகே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, பாலாஜி ஆகியோர் பாடியுள்ளனர். மெலடி போக் வகையை சார்த்த பாடல் இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

4. நான்காவது பாடல் "விழியே விழியே..." என்று தொடங்கும் ராஜு பாடிய பாடல். யுகபாரதி எழுதிய மெலடி பாடல். கேட்பதற்கு உன்னிமேனன் பாடியது போல இருக்கு.

5. கடைசியாக "பல்லக்கு தேவதையே..." என்று தொடங்கும் பாடல். இந்த பாடலை ஜெஸ்ஸி, வேல்முருகன், ஜெயமூர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். மீண்டும் ஒரு குத்து பாடல். நாதஸ்வரம் முழங்க ஒரு கிராமிய காதல் பாடல். வேண்டாம் மச்சான் வேண்டாம் பாடல் போல இந்த பாடல் விரைவில்....



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் ரசிக்கும்படி இருக்கு!

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Goolge Images & TamilTunes



The Conjuring (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் படம் "தி கான்ஜுரிங்". நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் பயங்கரமான திகில் படம்.

இதில் பேட்ரிக் வில்சன்,விரபர்மிகா,லிலீ டெய்லர், ஜோய் கிங்,ரோன் லிவிங்ஸ்டன்,ஷேன்லி கேஷ்வெல் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான்.

உங்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட பேய் படம்.

படத்தோட கதை என்னனா ...

ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக காட்டுக்குள் அமைந்து இருக்கிறது, ஒரு பழைய பங்களா. அதை விலைக்கு வாங்குபவர் தனது மனைவி, மகள்களுடன் அந்த வீட்டுக்கு குடி வருகிறார். அவருடைய நாய் மட்டும் அந்த பங்களாவுக்குள் வர மறுக்கிறது.

பங்களாவுக்குள் ஒரு பாதாள அறை இருக்கிறது. உள்ளே ஒரு பழைய பியானோ உள்பட பல பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மறுநாள் காலை பங்களாவை வாங்கியவரின் மனைவியின் கால்களில் கறுப்பாக ஒரு தழும்பு காணப்படுகிறது. சுவர் கடிகாரங்கள் மூன்று மணி எட்டு நிமிடங்களை காட்டியபடி நின்று இருக்கிறது. வெளியில், அவர்களின் நாய் இறந்து கிடக்கிறது.

அடுத்தநாள் நள்ளிரவில், குழந்தைகளின் படுக்கை அறை கதவை யாரோ பலமாக தட்டுகிறார்கள். ஒரு குழந்தையின் கால்களை யாரோ பிடித்து இழுக்கிறார்கள். இன்னொரு குழந்தை தூக்கத்தில் நடக்கிறது. பயன்படுத்தப்படாத அறை கதவு தானாக திறக்கிறது. வீட்டை வாங்கியவரும், அவருடைய மனைவி–மகள்களும் பீதியாக உணர்கிறார்கள்.

பேய்–பிசாசுகள் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஒரு தம்பதியை அணுகி, உதவி கேட்கிறார்கள். அந்த தம்பதிகள் இருவரும் காட்டு பங்களாவுக்கு வருகிறார்கள். பங்களாவை சுற்றிப்பார்த்துவிட்டு, "இந்த வீட்டில் ஒரு தீய சக்தி இருக்கிறது..." என்று கூறுகிறார்கள். அதை விரட்டுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இருவரும் சேர்ந்து பேயை விரட்டினார்களா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பயமுறுத்தல்கள்
அந்த குடும்பம் காட்டு பங்களா முன்பு வந்து இறங்கியதுமே திகில் ஆரம்பத்து விடுகிறது. குழந்தையின் கையில் இருக்கும் பொம்மைக்குள் ஏதோ ஆபத்து இருப்பதை உணர முடிகிறது. குழந்தையின் கால்களை பிடித்து இழுப்பது, பயன்படுத்தப்படாத அறை கதவு மெதுவாக திறப்பது என இடைவேளை வரை, சின்ன சின்ன பயமுறுத்தல்கள்.

குடும்ப தலைவிக்குள் பேய்
இடைவேளைக்குப்பின், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் அந்த தம்பதிகள் காட்டு பங்களாவுக்குள் வந்ததும், எதிர்பார்ப்பு அதிகமாகி இன்னும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்த வீட்டு குடும்ப தலைவிக்குள் பேய் புகுந்து செய்யும் ரகளைகள் இதய துடிப்பை எகிற வைக்கிறது. பெற்ற தாயே பிள்ளைகளை கொல்ல துடிக்கும் காட்சி, மிரட்டலின் உச்சம்.

ஜேம்ஸ் வான்
திரைக்கதையை ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’. இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம்..வேகம்..வேகம். இரண்டு மணி நேரம் எப்படி போனது? என்று தெரியாத அளவுக்கு விறுவிறுப்பு.

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் ‘தி கான்ஜுரிங்’ - வெகு நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பேய் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றது..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Dailythanthi.



சிவகார்த்திகேயனை டம்மியாக்கிய விஜய் !

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர், சினிமாவில் ஹீரோவான பிறகு அவரை அந்த தொலைக்காட்சி புரமோட் பண்ணுவதும்…

தனக்கு முதலில் மேடை அமைத்துக் கொடுத்த அந்தத் தொலைக்காட்சிக்கு, ஹீரோவான பிறகும் அவர் நன்றியோடு இருப்பதும்… ஆரோக்கியமான விஷயம்…!

இந்த ஒரு விஷயத்துக்காக அந்த தொலைக்காட்சியையும், அந்த ஹீரோவையும் முதலில் பாராட்டிவிடுகிறோம்.

அந்த ஹீரோ சிவகார்த்திகேயன்!

அந்த தொலைக்காட்சி விஜய் டி.வி.!



அதற்காக, அந்த ஹீரோவின் இமேஜை பில்ட்அப் செய்வதற்காக, தமிழ்ப்பெண்களைப் பற்றி மற்றவர்கள் தரக்குறைவாக எண்ணும் அளவுக்கு, அருவறுப்பான, அசிங்கமான நிகழ்ச்சியை ஒளிபரப்பியதை வன்மையாக கண்டித்தே ஆக வேண்டும்.

இது நம் கருத்து மட்டுமல்ல, பொங்கல் அன்று விஜய் டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சியைப் பார்த்த பலரது மனக்குமுறலும் கூட…

சிவகார்த்திகேயனை வானத்திலிருந்து குதித்து வந்த தேவதூதனைப்போல் சித்தரிக்கும் முயற்சியாக, அவரது நட்பு வட்டத்தை வைத்து அவர் நல்லவர்..வல்லவர் என்று ‘வாசிக்க’ வைத்ததில் தப்பில்லை. அது வழக்கமாக எல்லா நிகழ்ச்சியிலும் நடக்கும் சடங்குதான்.

சிவகார்த்திகேயனின் ரசிகைகள் என்ற பெயரில் சில சிங்காரிகளை அழைத்து வந்து, அவர்களின் மூலம் நடத்தப்பட்ட அபத்தக்காட்சிகள் ஆபாசத்தின் உச்சம்.

சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெண் பொங்கல் ஊட்டிவிட்டுவிட்டு தனக்கும் ஊட்டிவிடச் சொல்லி அடம்பிடிக்கிறாள்
இன்னொரு பெண்ணோ, சிவகார்த்திகேயனுக்கு முறுக்கு மீசை வைத்துப் பார்க்கிறாள்.

மற்றொரு பெண்ணோ, சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று கிள்ளுகிறாள். என் கன்னத்தை நீங்கக் கிள்ளுங்க என்கிறாள். சிவகார்த்திகேயனும் அப்பாவிப் பையனாக அப்பெண்ணின் கன்னத்தைக் கிள்ளுகிறார்.



ஒரு பெண் சிவகார்த்திகேயனிடம் கேவலமான ஒரு கேள்வியைக் கேட்கிறாள். அதற்கு சிவகார்த்திகேயன் சரியான பதிலைச் சொல்லவில்லை என்பதால், அதற்கு தண்டனையாக தன்னைத் தூக்கிக் கொண்டு சுற்றி வர வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். அதற்கு சிவகார்த்திகேயன் மறுக்க, ஒரு பனியனில் லிப்ஸ்டிக் உதடை பதிய வைத்து அதை அணிந்து கொள்ளச் சொல்கிறார்.

இப்படியாக பொங்கல் அன்று அபத்தமாக, ஆபாசமாக அரங்கேறியது – ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சி!

ஒருவேளை சிவகார்த்திகேயனுக்கே உடன்பாடில்லாமல், தன்னை வளர்த்த சேனல் என்ற நன்றி காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஒப்புக்கொண்டிருந்திருக்கலாம். ஆனாலும் ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சி குடும்பப்பெண்கள் மத்தியில் சிவகார்த்திகேயனை ச்சீய்கார்த்திகேயன் என வசைபொழிய வழிவகுத்துவிட்டது.

அதுமட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட, ஆபாசத்தை அரங்கேற்றிய அந்த சிங்காரிகள் உண்மையிலேயே காலேஜில் படிக்கும் பெண்கள்தானா?

அல்லது சினிமாவில் சின்னச்சின்ன காட்சிகளில் தலைகாட்டும் ரிச்கேர்ள்ஸ் என்கிற இளமையான துணை நடிகைகளா என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது.

வட இந்தியர்களின் ஆதிக்கத்தில் உள்ள விஜய் டி.வி. திட்டமிட்டே தமிழ்ப்பெண்களை தலைகுனிய வைக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வந்த கமலுக்கு முத்தமிட ஆசைப்பட்ட ஒரு தொகுப்பாளினியை கமலுக்குக் கூ…. இல்லை..இல்லை.. காட்டிக் கொடுத்து, அவரிடம் முத்தம் வாங்கிக் கொடுத்ததையும் மக்களுக்கு நினைவூட்டுகிறோம்.

விஜய் டி.வி. ஒரு அழகான வீடு. ஆனால், குப்பைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது... சீக்கிரம் சுத்தம் செய்யுங்கள்!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & TamilScreen.com



எவர்கிரீன் எம்.ஜி.ஆர்

'வாழ்ந்தவர் கோடி - மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நிற்பவர் யார்..?' என்ற அர்த்தமுள்ள, அற்புத பாடல் வரிகளுக்கு ஒப்புவமை இல்லாத புத்தகராதியாக வாழ்ந்து காட்டியவர், பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன்.


தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் தலைசிறந்த முதல்வராகவும் திகழ்ந்து, எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கோடானு கோடி தமிழர்களின் இதய தெய்வமாக போற்றப்படும் அவரது பிறந்த நாளை படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைத்து தரப்பினரும் போற்றி, கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதேபோல், மறைவு தினத்தையும் எம்.ஜி.ஆரின் நினைவுகளோடு லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

'புரட்சித் தலைவர்' என்ற சிறப்பு பட்டத்திற்கேற்ப, சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, மகத்தான திட்டமாக அவர் செயல்படுத்தியதால்தான், இன்று 50 வயதுக்குட்பட்ட தமிழக மக்களில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகளாகவும், கை நிறைய பணம் சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினராகவும் உயர்ந்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவான உண்மையாக நிரூபணமாகியுள்ளது.


'அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்' என்ற குறிக்கோளில் அபார நம்பிக்கை கொண்ட தொலைநோக்கு பார்வையாளரான எம்.ஜி.ஆர்., தனது மனித நேயத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு மக்கள் திலகமாகவும், பொன்மனச் செம்மலாகவும் விளங்கினார்.

ஏழ்மை, பசி, வறுமை ஆகிய சொற்களை வெறும் தமிழ் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திராமல், அவற்றை நெடுங்காலம் அனுபவித்துணர்ந்து, தனக்கு ஏற்பட்ட அந்த கொடிய நிலைமை வேறு யாருக்கும் இனி நேரக்கூடாது என இளம் வயதிலேயே அவர் சபதமேற்றார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து-உழைப்பால் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்ட அசுர ஜாதகத்துக்கு சொந்தக்காரர், எம்.ஜி.ஆர். மட்டுமே என்றால்... அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடாக இருக்க முடியாது.

இதன் அடிப்படையில் தான், 'நான் ஆணையிட்டால் - அது நடந்து விட்டால் - இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்' என்ற பாடலுக்கேற்ப அவரது ஆட்சிக் காலத்தில் ஏழைகளை பாதிக்கும் எந்த சட்டத்தையோ, திட்டத்தையோ எம்.ஜி.ஆர். நினைத்துக் கூட பார்த்ததில்லை.


அதனால் தான், எம்.ஜி.ஆரின் பிறந்த மற்றும் மறைந்த தினங்களில் தமிழகமெங்கும் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை - எளிய மக்கள், தங்கள் வீட்டின் வாசலில் அவரது புகைப்படத்தை வைத்து குத்து விளக்கேற்றி, பூ மாலை சூட்டி அலங்கரித்து புளகாங்கிதம் அடைகின்றனர்.

அவரது புகைப்படத்தின் கீழே உடைத்து வைக்கப்படும் தேங்காய் மூடியின் வெள்ளை வெளேர் 'பளிச்' சிரிப்பையும் முறியடிக்கும் வகையில் புகைப்படத்தில் இருந்தவாறு புன்னகைக்கும் அந்த ரோஜா மேனி தலைவரின் எழில் முகம் தமிழர்களின் மனக் கண்களில் சுவர் ஓவியமாக நிலைத்துப் போய் விட்டது.

தோல்வியை தோற்கடித்து... வெற்றி ஒன்றையே தனது வாழ்க்கை வரலாறாக்கிக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தனிப்பெரும் தலைவர், எம்.ஜி.ஆர். ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



பஞ்ச் வசனங்கள் (2014)

பொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் "வீரம்", விஜய்யின் "ஜில்லா" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.


பஞ்ச் வசனம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியேரது படங்களில் பஞ்ச் கண்டிப்பாக இடம்பெறும். அதுபோலவே சமீப காலங்களாக அஜீத், விஜய் ஆகியோரது படங்களிலும் பஞ்ச் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும வீரம், ஜில்லா படங்களில் இந்த பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சில உங்களுக்காக...

"வீரம்" பஞ்ச் வசனங்கள்

  • சந்தோஷம் வந்தா நாலுப்பேரோட பகிர்ந்துக்கணும். கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கணும். அவன்தான் மனுஷன்.

  • சுடுக்காட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டாங்க. வழியைச் சொன்னேன். இந்நேரம் போய் சேர்ந்திருப்பாங்க.

  • நம்மக்கூட இருக்கிறவங்களை நாமப் பார்த்துகிட்டா, நமக்கு மேல இருக்குறவன் நம்மைப் பார்த்துப்பான்.

  • எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

  • நீ என்ன ஜாதின்னு நினைக்கிறீயோ நான் அந்த ஜாதி. நீ தேவன்னு நினைச்சா நான் தேவன், நீ நாடார்னு நினைச்சா நான் நாடார், நீ தலித்னு நினைச்சா நான் தலித், நீ வன்னியர்னு நினைச்சா நான் வன்னியர். நான் உலகத்துல இருக்கிற ஒரே ஜாதி. உழைக்கிற ஜாதி’

"ஜில்லா" பஞ்ச் வசனங்கள்

  • எதிரிய எதிர்ல வச்சுக்கலாம்- ஆனா துரோகிய தூரத்துலக்கூட வச்சுக்கக்கூடாது.

  • ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒண்ணு குணமாகிப் போகனும், இல்ல பொணமாகிப் போகனும்.

  • தீயிலயும், பகையிலயும் மிச்சம் வைக்கக்கூடாது.

  • சிவனையும் பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போயிட்டே இருப்பேன்.

  • நாட்டுல வண்டி ஓட்டத் தெரியாதவன் கூட உண்டு. பிகரை ஓட்டத் தெரியாதவன் யாரும் இல்ல.

  • போலீஸ் அடிச்சுப்பார்திதிருப்பே. போலீசையயே அடிச்சு பார்த்திருக்கியா?.

  • சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன். ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ணமாட்டேன்.

  • மத்தவங்ககிட்டே தோத்தாத்தான் தோல்வி, சொந்தப்பையன்கிட்டே தோத்தாலும் அது வெற்றிதான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Dinamani



ஜில்லா (2014) விமர்சனம்

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தில் மோகன்லால் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

சுரேஷ் சவுத்ரி, ஜீவன் ரமேஷ், ஜீவா. மகத், சூரி, தம்பிராமய்யா, சம்பத், சரண், ரவிமரியா, பிரதீப்ராவத், ஜோமல்லூரி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையில் கவிஞர் வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.டி.நேசன் டைரக்டு செய்கிறார். ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதை.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது.

தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் மோகன்லால் கட்டளையிடும் வேலைகளை செய்து முடிப்பவராக விளங்குகிறார் விஜய். மோகன்லாலுக்கு மஹத், நிவேதா தாமஸ் என இரண்டு பிள்ளைகள்.

மதுரை வீதியில் ஒருநாள் காஜல் அகர்வாலை பார்க்கும் விஜய் அவள்மீது காதல் கொள்கிறார். மஹத், நிவேதா தாமஸிடம் சென்று காஜலின் அழகை வர்ணிக்கிறார். இதனால் அவர்களுக்கு காஜலைப் பார்க்கும் ஆசை துளிர்விடவே, காஜலின் வீட்டுக்கு விஜய்யை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, அவளை போலீஸ் உடையில் பார்த்ததும், அவள் மீது வெறுப்பு கொள்கிறார் விஜய்.

மறுமுனையில் மதுரைக்கு போலீஸ் கமிஷனராக வரும் பிரதீப் ராவத், விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் வந்து மோகன்லாலை கைது செய்து அழைத்துப் போகிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகாமல் போலீஸ் வண்டியிலேயே 5 மணி நேரம் மதுரையை வலம் வருகிறார். அப்போது மோகன்லாலிடம் ரவுடித்தனத்தை விட்டுவிடுமாறு பிரதீப் ராவத் கூறுகிறார். ஆனால், மோகன்லால் ரவுடிசத்தை விடமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். இறுதியில், மோகன்லாலை எச்சரித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விடுகிறார்.


இதை அறியும் விஜய், தன் அப்பாவை கைது செய்த பிரதீப் ராவத்தின் கையை வெட்டி விடுகிறார். இருந்தும், தான் கைதான அவமானம் தாங்கமுடியாத மோகன்லால் தன்னுடைய ஆள் ஒருவர் போலீஸ் பணியில் இருந்தால் இதுபோன்று நடக்காது என முடிவெடுத்து, விஜய்யை போலீஸ் பணியில் அமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், போலீஸ் என்ற வார்த்தையே பிடிக்காத விஜய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

மோகன்லாலின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக போலீஸ் செலக்ஷனில் கலந்து கொள்கிறார். இருந்தாலும் மோகன்லால், மந்திரியான சம்பத்தின் உதவியால் விஜய்யை கமிஷனராக ஆக்குகிறார். கமிஷனராகும் விஜய், போலீஸ் உடை உடுத்தாமல், சாதாரண உடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவதாக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் மஹத் தனது அடியாட்களுடன் சென்று ஒரு இடத்தை வாங்குவதற்காக அடி-தடி நடத்தி அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார். இந்த கலவரத்தில் அந்த இடத்தில் இருக்கும் சிலிண்டர்களில் உள்ள வாயு கசிந்து சிலிண்டர்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம், பேருந்து, சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இந்த தீயிற்கு இரையாகின்றனர். அதில், பல குழந்தைகளும் பலியாகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் விஜய் இதற்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர்மீது கோபப்படுகிறார்.

எனவே, அதுவரை போலீஸ் உடையை போடாத விஜய், அந்த உடையை அணிந்துகொண்டு மோகன்லாலிடம் சென்று இனிமேல் இதுபோன்ற காரியங்களில் இறங்கவேண்டாம் என்று சொல்கிறார். தன்னால் வளர்ந்தவன் இன்று இப்படி தன்னை மிரட்டுகிறானே என்று விஜய் மீது கோபம் கொள்கிறார் மோகன்லால். இறுதியில், உன்னால் முடிந்ததை நீ செய்துகொள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று சவால் விட்டு இருவரும் பிரிகிறார்கள்.

இறுதியில், தன் அப்பாவை மாற்றினாரா? அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா? என்ற மீதிக்கதையை விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

விஜய் vs மோகன்லால்
விஜய் காமெடி, டான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் வெளுத்து வாங்குகிறார். போலீஸ் கெட்டப்பில் இவரை ஏற்கெனவே ரசித்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து படைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக மோகன்லாலும் நடிப்பில் களைகட்டுகிறார். இருவரும் சவால் விடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். மோகன்லால் வில்லனாக மிரட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் தனது அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். பாடல் காட்சிகளிலும், போலீஸ் உடையிலும் அழகோ அழகு.

இதர நட்சத்திரங்கள்
சூரி, வித்யூத் ஜம்வால் ஆகியோர் ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கிறார்கள். சம்பத் கதைக்கு ஒரு திருப்புமுனையாக வருகிறார். மந்திரி கெட்டப்பில் வில்லத்தனம் காட்டும் இவருடைய நடிப்பு அபாரம்.

பூர்ணிமா பாக்யராஜ் அம்மா கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். விஜய் தம்பி, தங்கையாக வரும் மஹத், நிவேதா தாமஸ் இருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் நேசன்
புதுமுக இயக்குனரான நேசன் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த மசாலாவாக படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.

இசை டி.இமான்
டி.இமான் இசையில் விஜய்-மோகன்லால் அறிமுகமாகும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அந்த பாடல் படமாக்கிய விதம் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ‘ஜில்லா’ களைகட்டுகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



கலவரம் (2014) விமர்சனம்

ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதியே “கலவரம்” ஒரு உண்மை கலவரத்தின் சம்பவத்தை மையமாக கொண்டும், அரசியல் நெரிகளின் உண்மை ரூபங்களையும் கருவாக கொண்டு அதை சினிமாவாக மாற்று முயற்சியே 'கலவரம்' திரைப்படம்.

S.D.ரமேஷ்செல்வன் இயக்கிய இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோட்றத்தில் சத்யராஜ் ஒரு விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். மற்றும் அஜய் ராகவ், குட்டி, யாசர், தணிகல பரணி, நந்தா, சரவணன், சுஜிபாலா,ராஜ்கபூர், மயில்சாமி, இன்பநிலா, லாவண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கென்று தனிராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் தணிகலாபரணி. இவர் அரசியலில் இல்லாதபோதும் அங்கு செல்வாக்குள்ளவராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நடக்க, இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏவை எதிர்த்து போட்டியிட்ட வேட்வாளர் வெற்றி பெறுகிறார். இதனால், மிகவும் கோபம் அடையும் தணிகலாபரணி வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏவை வெட்டி சாய்த்து விடுவதால் இவரை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்கிறது.

தணிகாலபரணி, தன் ஆதரவு ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோரை அழைத்து, என்னை கைது செய்த பிறகு மதுரையில் கலவரம் உருவாக வேண்டும். மதுரையே ஸ்தம்பிக்க வேண்டும், பல உயிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்.

அதன்படி அவர் கைது செய்யப்பட, மதுரையில் கலவரம் நடக்கிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக 4 கல்லூரி மாணவிகள் கொல்லப்படுகின்றனர். இதன் பிறகு தணிகாலபரணி ஜாமீனில் வெளிவருகிறார்.

கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை போலீஸ் கைது செய்துவிடுகிறது. லஞ்சம் கொடுத்து ரவுடிகளை தணிகாலபரணி ஜெயில் இருந்து மீட்கிறார். ரவுடிகளை மீண்டும் கைது செய்ய கோரி கொல்லப்பட்ட 4 கல்லூரி மாணவிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.


இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்த, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரியான சத்யராஜை பணி நியமனம் செய்கின்றார். இச்சம்பவங்களை பற்றி விசாரணை செய்யவும் அவர் உத்தரவிடுகிறார். தீவிர விசாரணையில் ஈடுபடும் சத்யராஜ் கலவரத்திற்கு காரணம் 3 ரவுடிகள் மற்றும் இவர்களுக்கு பின்னணியில் தணிகாலபரணி என்று தெரிந்து கொள்கிறார். இவர்களை பற்றிய விசாரணை அறிக்கையை அமைச்சரான ராஜ்கபூரிடம் கொண்டு செல்கிறார். இதை அமைச்சர் தட்டி கழிக்கிறார். நீ ஊருக்கு செல் விசாரணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் சட்டத்தின் முன் இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று நினைத்து அந்த அறிக்கையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்.

இந்நிலையில் கலவரத்தில் 4 தோழிகளை பறிகொடுத்த 3 கல்லூரி மாணவர்கள் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர். அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றவொருவரும் இவர்களுடன் சேர்கிறார். சட்டத்தின் முன் ரவுடிகளை தண்டிக்க முடியாத சத்யராஜ், சட்டத்திற்கு எதிரான முறையில் அவர்களை தண்டிக்க முயற்சிக்கும் அந்த நால்வருடன் இணைகிறார்.

இறுதியில் இவர்களை பழிவாங்கினார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

சத்யராஜ்
போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் இளமை மாறாத சத்யராஜ் போல் கண்முன் தோன்றுகிறார்.

இதர நட்சத்திரங்கள்
வில்லனான தணிகாலபரணி, ஆதிமூலம் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். ரவுடிகளை பழிவாங்கும் நினைக்கும் அஜய்ராகவ், அஜய், யாசர், ராகவேந்தர் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டை சுரேஷ், கட்டத்துரை எனும் கதாபாத்திரத்தில் மிரளவைக்கிறார்.

இசை பைசல்
படத்தை சந்திரன் ஒளிப்பதிவு செய்தவிதம் அருமை. 2 பாடல்கள்தான் என்றாலும் பின்னணி இசையில் கலக்குகிறார் இசையமைப்பாளர் பைசல்.

இயக்குனர் ரமேஷ் செல்வன்
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களை திறம்பட வேலையை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் ‘கலவரம்’ கொலைக்களம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.



வீரம் (2014) - விமர்சனம்

குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்படி ஒரு கதை பண்ணுங்க என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் சொன்னதையடுத்து, அவர் உருவாக்கிய கதைதான் வீரம்.

காதல், செண்டிமென்ட், காமெடி என ஒரு ஜனரஞ்சகமான கதையை தயார் செய்த டைரக்டர் சிவா, சிறுத்தையைத் தொடர்ந்து தமிழில் இரண்டாவது ஹிட் கொடுத்துள்ளார்.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜீத். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜீத்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ராவத் மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகளை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார். அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான டெண்டர்களை அஜீத்தே வளைத்துப் போகிறார். இதனால், அஜீத் மீது வில்லனுக்கு பகை உண்டாகிறது. அவரை பலி வாங்க வில்லன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

அஜீத்துக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவருடைய குடும்ப வக்கீலான சந்தானமும் இவருக்காக தன் காதலையும் துறக்கிறார். இந்நிலையில், அஜீத்தின் தம்பிகள் தன்னுடைய அண்ணனுக்கு தெரியாமலேயே காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சந்தானத்திடம் கூறும்போது, அவர்களுடைய காதலை சேர்த்து வைப்பதாக சந்தானம் உறுதி கூறுகிறார்.

தனது அண்ணன் அஜீத்தை காதலிக்க வைத்துவிட்டால் நம்முடைய காதலுக்கு அஜீத் பச்சைக்கொடி காட்டி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை எப்படி காதல் செய்ய வைக்கலாம் என யோசிக்கிறார்கள். அதற்கு அஜீத்தின் பால்ய நண்பரான ரமேஷ் கண்ணாவிடம் சென்று யோசனை கேட்கிறார்கள். ரமேஷ் கண்ணா அதே ஊரில் கலெக்டராக இருக்கிறார். அவர், அஜீத் சிறு வயதில் காதல் செய்ததாகவும், அஜீத் தன்னுடைய குடும்ப ஒற்றுமைக்காக அந்த காதலை உதறி தள்ளிவிட்டதாகவும் கூறுகிறார்.


அந்த பெண் இப்பொழுது வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார். என்றாலும், அஜீத்துக்கு அந்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி ரொம்பவே பிடிக்கும். அந்த பெயருடைய பெண்ணை அஜீத்துக்கு அறிமுகம் செய்து வைத்தால் காதல் வர வாய்ப்புள்ளது என யோசனை கூறுகிறார். இதற்காக ஒரு தொல்பொருள் துறையில் வேலை செய்யும் தமன்னாவை ஒரு கோயிலில் சந்தானம் மற்றும் அவனது தம்பிகள் பார்க்கிறார்கள். அவளது பெயர் கோப்பெருந்தேவி என்பதை அறியும் அவர்கள், அவளை எப்படியாவது தங்களது வீட்டுக்கு அருகில் தங்க வைத்தால் அஜீத்தை காதல் செய்ய வைத்துவிட்டலாம் என எண்ணுகின்றனர்.

இதனால் ரமேஷ் கண்ணாவின் உதவியுடன் அவளை இவர்களுடைய ஊருக்கு மாற்றம் செய்கின்றனர். அவளும் அஜீத்தின் வீட்டுக்கு அருகிலேயே தங்குகிறார். அடிக்கடி சந்திக்கும் அஜீத்-தமன்னா இருவருக்குள்ளும் நாளடைவில் காதல் வர ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி அஜீத்தை திருமணம் செய்துகொள்வதற்காக தமன்னா, அஜீத் மற்றும் அவரது தம்பிகளை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு ரெயிலில் பயணமாகிறார். அப்போது, அங்கு வரும் ஒரு ரவுடிக்கும்பல் அஜீத்தை மற்றும் அவரது தம்பிகளை தாக்குகிறது. அந்த ரவுடிக்கும்பலை அஜீத் தனியொரு ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்கிறார். அதுவரை சாதுவாக இருந்த அஜீத், திடீரென விஸ்வரூபம் எடுத்தது அவரது தம்பிகள், தமன்னா உள்ளிட்ட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

இறுதியில் அஜீத்தை தாக்க வரும் அடியாள் தவறுதலாக தமன்னாவை தாக்கிவிட, தமன்னா மயக்கமடைகிறார். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கிறார் அஜீத். ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பும் தமன்னா அஜீத்திடம் சொல்லிக்கொள்ளாமல் தனது ஊருக்கு பயணமாகிறாள். இறுதியில் அஜீத் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் யார் என்பதை கண்டறிந்தாரா? பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

அஜீத்
அஜீத் நரைத்த தலைமுடி, சற்றே வளர்ந்த தாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒரு கிராமத்து ஆளாக அப்படியே இருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடிக்கும் அஜீத்தின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி நடிப்பில் மிளிர்கிறார் அஜீத். இவர் கெட்டப்புக்கு கிடைக்கும் வரவேற்பைவிட, இவருடைய வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது.

குறிப்பாக 'என்ன நான் சொல்றது', 'சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டவே வச்சிக்கணும்' என்று இவர் பேசும் வசனங்கள் நான் ஸ்டாப் கைதட்டல்களை வாங்கிச் செல்கிறது. படத்தில் அஜீத் நடந்து வரும் ஸ்டைல், டெண்டர் எடுக்க வரும்போது குடைக்குள் இருந்து வெளியே வரும்போது இவர் மேல் விழும் மழைத்துளி காட்சி என பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை துள்ளி குதித்து ஆட்டம் போட வைக்கிறது.

தமன்னா
சண்டைக் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார். தமன்னாவுக்கும் அஜீத்துக்கு நிகரான கதாபாத்திரம்தான். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது என்பதால் வலுவான கதாபாத்திரம் இவருடையது. நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தானம் vs தம்பி ராமையா
சந்தானம் முதல் பாதிவரை காமெடியுடன் கதையை நகர்த்திச் செல்ல துணை புரிந்திருக்கிறார். பிற்பாதியில், இவருடன் தம்பி ராமையா இணைந்துவிடுகிறார். இவர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

இதர நட்சத்திரங்கள்
விதார்த், பாலா, சுகைல், முனீஷ் ஆகியோர் அஜீத்தின் தம்பிகளாக வருகிறார்கள். அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகளாக எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். அமைதியை விரும்பும் அப்பாவாக வரும் நாசரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் அதுல் குல்கர்னியும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

இயக்குனர் சிவா
படம் முழுவதும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிவா. யாருக்கும் சாதாரண கதாபாத்திரம் என்று இல்லாமல், படத்தில் நடித்த அனைவருக்குமே வலுவான கதாபாத்திரம் அமைத்து கதையை நகர்த்திய இயக்குனருக்கு மீண்டும் ஒரு சபாஷ் போடலாம்.

இசை தேவி ஸ்ரீபிரசாத்
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. அஜீத்தின் அறிமுகப் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் என்பது மட்டும் நிச்சயம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் ‘வீரம்’ - மாவீரம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



யார் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ?

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இடம் பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும்.

வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெக வீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.


ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள்- திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47-வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

கும்பினியார் கி.பி. 1793-ல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797-ல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797- 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார்.

இறுதியில் செப்டம்பர் 10, 1798-ல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.

செப்டம்பர் 5, 1799-ல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.


செப்டம்பர் 9 1799-ல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799-ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்துவிடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801-ல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக்கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது.

ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801-ல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801-ல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Maalaimalar



2013-ல் ரசிகர்களை பதம் பார்த்த படங்கள்!

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, விமர்சகர்களாலும் மக்களாலும் 10 படங்கள் நிராகரிப்பட்டது. மணிரத்னம், அமீர், பாரதிராஜா, செல்வராகவன், ராஜேஷ் போன்ற முக்கியமான இயக்குநர்களே 2013ல் சறுக்கியது தான் அதிர்ச்சி.

'கடல்', 'ஆதிபகவன்', 'அன்னக்கொடி', 'நாகராஜ சோழன்', 'அலெக்ஸ் பாண்டியன்', 'மரியான்', 'தலைவா', 'நய்யாண்டி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'இரண்டாம் உலகம்' ஆகிய படங்கள் 2013ல் படுதோல்வியை சந்தித்தன.

மக்களை மூழ்கடித்த 'கடல்'

'நெஞ்சுக்குள்ளே' பாடல் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டினார் மணிரத்னம். படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்டோரின் லுக்கை போஸ்டராக வைத்து INTRODUCING GAUTAM KARTHIK, INTRODUCING THULASI என ஒவ்வொன்றாக வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

மணிரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கார்த்திக்கின் மகன் ஹீரோ, ராதாவின் மகள் ஹீரோயின், மீண்டும் அரவிந்த்சாமி, வில்லனாக அர்ஜுன் என படத்தின் முதல் காட்சிக்கு ஞாயிற்று கிழமை மாலை மெரினாவில் இருக்கும் கூட்டம் போல அலை மோதியது. தியேட்டருக்குள் வந்த அனைவரையும் மூழ்கடித்து, 'இனிமேல் என்னை நம்பி வருவியா' என்று திணறடித்தார். முத்து கிடைக்கும் என நம்பி வந்தவர்களுக்கு கிளிஞ்சல்கள் அளித்து அனுப்பினார்கள்.

சுனாமி வந்த அடுத்த நாள் மெரினா பீச் எப்படி இருந்ததோ அப்படி தான் படத்திற்கு இரண்டாம் நாள் கூட்டம் இருந்தது. அந்தளவிற்கு மக்களால் முற்றிலும் நிராகரிப்பட்டது. இப்படத்தினை வாங்கி பாதிப்படைந்தது ஜெமினி நிறுவனம். அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.

'பருத்தி வீரன்' இயக்குநரா 'ஆதிபகவனை இயக்கினார்?

இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் யுவன் என அனைத்து முன்னணி கலைஞர்களும் இணைந்து ரசிர்களை ஏமாற்றிய படம் 'ஆதிபகவன்'. நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டினார்கள். பத்தாக்குறைக்கு பவளக்கொடியாய் நீதுசந்திரா வேறு அவ்வப்போது பேட்டிகளில் ‘ஆதிபகவன்’ படம் குறித்து சிலாகித்தார்.

படத்தின் போஸ்டர்களில் கூட ’வில்லன் ’ஜெயம் ரவியின் படத்தை வெளியிடவில்லை. 2007ல் 'பருத்தி வீரன்' இயக்கிய அமீர் இயக்கத்தில் 6 ஆண்டுகள் கழித்து வெளிவந்தது 'ஆதிபகவன்'. படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே கேட்ட கேள்வி 'நிஜமாவே அமீர் இயக்கிய படமா இது?' என்பது தான்.

இமயத்தை கொடியில் தொங்க வைத்த 'அன்னக்கொடி'

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'அன்னக்கொடி'. தேனியில் படப்பூஜை போடப்பட்ட போது அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு பிறகு நடைபெற்ற பிரச்சினையால் கார்த்திகா, மனோஜ் நடிப்பில் வெளியானது.

மாமனாரின் காமவெறி, ஆண்மையற்ற கணவன் என சொதப்பலான கதையை 'அன்னக்கொடி'யாக எடுத்திருந்தார். நாம எதை படமாக எடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பாரதிராஜா நினைத்து விட்டார் போல.

'அன்னக்கொடி' வெளியான முதல் நாள் மாலையே கொடியில் ஒரு துணி கூட இல்லை. தப்பாக

அல்வா கிண்டிய மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணி

மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற 'அமைதிப்படை' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது 'நாகராஜ சோழன்'. 'அமைதிப்படை' படத்தில் இருந்த சுவாரசியமான காட்சிகள் எதுவுமே 'நாகராஜ சோழன்' படத்தில் இல்லாதது பெரிய குறை. ‘அமைதிப்படை’யில் கிண்டிய அல்வாவை மறுபடி கிளறி மக்களுக்கு கொடுத்தார்கள்.. பழைய அல்வா அல்லவா.. புளித்துவிட்டது.

விளம்பரத்தை நம்பி களமிறங்கிய அலெக்ஸ் பாண்டியன்

பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது.

கார்த்தி, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். அரிவாளால் சுமோ டயரை வெட்டுவது, சுமோ வானுயர்விற்கு பறப்பது, டிரெய்னின் மீது வில்லன் ஆட்கள் துரத்துவது, சந்தானத்தின் டபுள் மீனிங் வசனங்கள் என படம் பார்க்கும் அனைவரையும் ரத்தக்களரியாக்கி ஒட வைத்தது.

பாட்டெல்லாம் ஹிட்டு.. படம்..? கடலோடு கூட்டு சேர்ந்த 'மரியான்'

ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை அமைப்பால் தோல்வியடைந்தது மரியான்.

2013ல் ஆப்பிள், ஐ-டியூன்ஸ் தளத்தில் சிறந்த தமிழ் இசை ஆல்பமாக தேர்வானது 'மரியான்'

நமக்கும் எதிரிகள் இருக்கிறார்கள் என்று விஜய் உணர்ந்த 'தலைவா'

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம். 'நாயகன்' கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து, 'தலைவா' என்று படமாக்கினார்கள். விஜய்யின் போஸ்டர்கள் வெளியான போது, அரசியல் சார்ந்த படம் என்று பேச்சு நிலவியது.

'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் கிளம்பியது. படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க போதிய போலீசார் இல்லை என்று தமிழக அரசு கூறியது. இறுதியாக தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுதது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்று விஜய் வீடியோ மூலம் பேசியது உள்ளிட்ட பலதரப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு தான் ‘தலைவா’ வெளியானது.

படம் போதிய வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை. தயாரிப்பாளருக்கு மட்டுமன்றி, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தியது 'தலைவா'

தனுஷை பதற வைத்த 'நய்யாண்டி'

'வாகை சூட வா' இயக்குநர் சற்குணம் - தனுஷ் - நஸ்ரியா இணைப்பில் வெளியான படம் 'நய்யாண்டி'. நஸ்ரியாவின் சர்ச்சையால் படம் பரபரப்பானது. தேசிய விருது இயக்குநர் + தேசிய விருது நடிகர் கூட்டணி என்று நம்பி படத்திற்கு சென்றவர்களை நையாண்டி செய்தது நய்யாண்டி’

“சற்குணம் - தனுஷிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை” என்று ரசிகர்கள் நொந்தார்கள்.

இப்படத்தின் உச்சப்பட்ச காமெடியாக, ஓடாததால், படத்தை திரையரங்குகளிலிருந்து எடுத்த பிறகு, மலையாளத் தயாரிப்பாளர் ஒருவர் எனது கதையை திருடி படமாக எடுத்து விட்டார்கள் என்று போலீசில் புகார் அளித்தார்!

கோவம் வர்ற மாதிரி காமெடி செய்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'

ராஜேஷ் - கார்த்தி - சந்தானம் இணைப்பில் வெளியான படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. தனது காமெடி படங்கள் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் ராஜேஷ். அவரே அந்த வட்டத்தை சுருக்கிக் கொண்ட படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'.

காமெடி என்கிற பெயரில் சந்தானத்தின் பேச்சு, 3 மணி நேர படம் என பல வகையில் பார்ப்பவர்களை இடைவேளையின் போதே கடுப்பேற்றியது படம்.

இருண்ட 'இரண்டாம் உலகம்'

செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். படம் தயாரிப்பிலேயே பல நாட்கள் இருந்ததால், ஹாரிஸ் ஜெயராஜ் மற்ற படங்களில் பிஸியாக, இறுதியில் அனிருத் பின்னணி இசையில் வெளியானது ‘இரண்டாம் உலகம்’.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, சொதப்பலான திரைக்கதையால் ஏமாற்றிய படம். கிராபிக்ஸ் காட்சிகளில் காட்டிய அக்கறையை திரைக்கதை அமைப்பில் காட்டியிருக்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றொரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், "ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு பின்னணி இசையமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், பிரம்மாண்ட படம் எனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் தான் இந்த படத்திற்கு இசையமைத்தேன்" என்று பொறி வைத்து பேசி வியக்க வைத்தார்.

படம் பார்க்க வந்தவர்களை எல்லாம் இரண்டாம் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் பேர்வழி என்று முட்டுச் சந்துக்குள் தான் கூட்டிச் சென்றார் செல்வராகவன். மூன்றாம் உலகம் விரைவில் என படத்தை முடித்து, "அய்யோ... மறுபடியும் முதல்ல இருந்தா..." என்று கேட்க வைத்தார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google & The hindu



Related Posts with Thumbnails
 
back to top