2012-இல் எனக்குப்பிடித்த 10 படங்கள்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!


2012-இல் வெளிவந்த  தமிழ் திரைப்படங்களில் எனக்குப்பிடித்த 10 படங்கள்.
1. துப்பாக்கி - விஜயின் கலக்கல் நடிப்பில் அசத்திய படம். எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிய படம். பாடல்கள் தான் குறை.


2. நடுவுல கொஞ்சம் கக்கத்த காணோம் - குறித்த கதா பத்திரம் - நிறைவான நடிப்பு. என் குடுபத்தார் அனைவரும் விரும்பி அடிகடி பார்த்த படம் இது. படம் முழுவது சிரிப்பு தான். கூடவே கொஞ்சம் மிரட்டல்.


3. நான் ஈ - அசால்ட்ட மிகபெரிய வெற்றி பெற்ற படம். குழந்தை முதல் பெரியவர் வரை திரைக்கு வந்து பார்க்க வைத்த படம். சுதிப்பின் மிரட்டல் நடிப்பு + ஈ இன் பழிவாங்கல் அனைவரையும் ரசிக்கவைத்தது.


4. சுந்தரபுருஷன் - குடுப்பதுடன் பார்த்த படம். பெண்களை கவரகூடியவகையில் திரைகதை. கலகலப்பா போகும் கதையில் இறுதியில் பல திருப்பங்கள். பாடல்கள் மிரபெரிய பலம்.


5. பீட்சா - இப்படியும் படம் எடுக்கலாம் என்று பெரிய இயக்குனர்களுக்கு சவால் விட்ட படம். படம் முழுவது நம்மையறியாமல் கதையுடனே பயணிப்பது இதன் சிறப்பு. அருமையான சஸ்பென்ஸ்  படம்.

6. கலகலப்பு - சுந்தர் சி சொல்லி அடித்த காமடி படையல். சந்தானம் ஒரு ஹீரோ போல இதில் தொலித்திருப்பார். வயிறு குலுங்க சிரிக்க இந்த படம் 100% கியாரண்டி . 


7. கும்கி - பட குழுவினரின் உழைப்பு தெரிந்துகொள்ள இந்த படம் ஒரு சாம்பிள். இயற்கையின் அழகாய் + அழகான இசையுடன் பார்க்கும்போது வரும் மனமகிழ்ச்சியே தனிதான். வித்தியாசமான கதை காலத்தில் சொல்லி அடித்த வெற்றி படம்.


8. ஒரு கல் ஒரு கண்ணாடி - உதயநிதி கதாநாயனாக அறிமுகமான படம். சந்தானம்  தான் இதில் ஹீரோ. முழு நீள காமெடி படம். பாடல்கள் பெரிய பலம்.


9. நான் - விஜய் அன்டனி கதாநாயனாக அறிமுகமான படம். நல்ல சஸ்பென்ஸ்  படம். வித்தியாசமான திரைகதை.

10. வழக்கு என்ன : 18/9 - பாலாஜி சக்திவேல் தன்னை மீண்டும் ஒரு நல்ல படைப்பாளி என்று நிருபித்த படம். பலருக்கும் இந்த படம் பிடிக்காமல் போனது ஏன்னு தெரியல. ஆனால் எனக்கும் ரொம்ப படித்த படம்.


இந்த படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்தை இங்கே சொல்லிட்டு போங்க. மீண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Ranker.com.



ஆப்பிள் ஃபிர்ணி


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

இனிப்பு என்பது அறுசுவைகளிலுள் ஒன்று. வித விதமான இனிப்பு வகைகளை இங்கே உங்களுக்கு தொகுத்து வழக்குவதில் மிக்க மகிழ்ச்சியே !

இன்று பார்க்க இருக்கும் இனிப்பு - ஆப்பிளை கொண்டு செய்யப்படும் ஒரு வித்தியாசமான சமையல் ஆப்பிள் ஃபிர்ணி....

என்னென்ன தேவை?

  • பாசுமதி அரிசி - 3 டேபிள்ஸ்பூன்,
  • பால் - 3 கப்,
  • ஆப்பிள் - 1,
  • சர்க்கரை - 1 கப்.

எப்படிச் செய்வது?

  • பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, பால் விட்டு மிக நைசாக அரைக்கவும்.
  • ஆப்பிளை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும். மேலே அலங்கரிக்க கொஞ்சம் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை அரைக்கவும். (நைசாக அரைக்க வேண்டாம்).
  • அடி கனமான பாத்திரத்தில் பாசுமதி அரிசி விழுது, பால், அரைத்த ஆப்பிள் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும்.
  • ஆப்பிள் துண்டுகளை மேலாகச் சேர்த்துப் பரிமாறவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Dinakaran news paper.



தொப்பை குறைய எளிய பயிற்சி...

முதலில் விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். கால்களுக்குப் பக்கத்தில் கைகள் இரண்டையும் தரையில் ஒட்டி வைக்கவும். பிறகு சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டே இடுப்பிலிருந்து நெஞ்சுப் பகுதியை தரைலிருந்து தூக்கவும்.

அதே நேரத்தில், கால்களையும் மெதுவாக தரைப்பகுதிலிருந்து தூக்கவும் ஆனால், கால்கள் மடங்கக் கூடாது. புட்டப்பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இந்த நிலையில், தரையில் வைத்திருக்கிருந்த கைகளை மேலே தூக்கி தரைக்குக் கிடைமட்டத்தில் கால்களை ஒட்டி நீட்டவும்.

பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, கால்களையும், முதுகையும் இறக்கி வைத்து விட்டு மறுபடியும் இப்பயிற்சியை செய்யவும். இப்படி புதியவர்கள் பத்து முறையும் பயிற்சிகள் பழகிய பிறகு 25 முறையும் செய்யலாம் வயிறு காலியாக இருக்கவேண்டும் சாப்பிட்டு விட்டு செய்யக்கூடாது.

காலை எழுந்ததும் காலைக் கடனை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் செய்வது சரியான முறை. மலம் சிறுநீரை தேக்கி வைத்துக் கொண்டு இப்பயிற்சியை செய்யக் கூடாது.

இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்......

இப்பயிற்சியினால் வயிற்று உறுப்புகள் நன்கு இறுக்கமடைகின்றன. கால்களும் தொடைகளும் பலம் பெறும். தசை நார்கள் துவண்டு மென்மையாகும். வயிற்றுக்கு இந்த பயிற்சியின் மூலம் நல்ல இரத்த ஓட்டம் ஏற்ப்பட்டு.

அதனால் உண்ட உணவு நான்கு ஜிரணமாகிறது. வயிறு நசுக்கப்படுவதால் வயிற்றுக்குள் இருக்கும் கழிவுப் பொருட்கள் அவ்வப்போது வெளித்தப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் புழு பூச்சிஉருவாகது. இப்பயிற்சி செய்வோருக்கு தொந்தி உருவாகாது. ஏற்கனவே தொந்தி இருந்தாலும் அது கரைந்து விடும்.

பெண்கள் இந்தப் பயிற்சியை செய்தால் வயிற்றிலுள்ள கொழுப்பு குறையும். இடுப்பு சிறுக்கும். முதுகில் தேவையில்லாத சதைகள் குறையும். பெண்கள் உடலை இளமையோடு வைத்திருக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் போதுமானது.

வாயுக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்குவதற்கான சிறந்த பயிற்சி இது. சிறு குடலுக்கு பக்கவாட்டில் நான்கு அழுத்தம் கொடுப்பதால், ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகங்கள் நன்கு செயல்பட உதவுகிறது. தொப்பையை குறைத்து , வயிற்றுப் பகுதி தசைகளை உறுதியாக்குகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : maalaimalar.com



இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வாழ்வினில் துன்பங்கள் அகலும்
நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறக்கிறது 2013.
பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!
Thanks : மகேந்திரன்
விடியல் வரும் என்று காத்திராமல்
விடியலை படைப்போம்..
மகிழ்வோம்!
வரவருக்கும் வருடம் அனைவருக்கும் நிறைந்த சந்தோஷத்தையும், வெற்றியையும், அமைதியையும் தர வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொள்வோம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஜில் ஜில் வெள்ளரி ஷேக்

எளிமையான முறையில் மிகவும் சுவையான வெள்ளரி ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

  • வெள்ளரிக்காய் (துருவியது) - 1 கப்
  • பால் – ஒரு கப்
  • தேன் – 2 டீஸ்பூன்
  • நறுக்கிய பாதாம் - 1 கப்
  • பாதாம் விழுது – ஒரு டீஸ்பூன்
  • குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.


செய்முறை:-

  • வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும்.
  • இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன் கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
  • நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
  • மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
Source : Maalaimalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



இந்திய கிரிகெட் கடவுள் ஓய்வு

கிரிக்கெட்டின் சகாப்தம், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஒருநாள் போட்டியில் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ள தெண்டுல்கரின் இந்த ஓய்வு முடிவு அதிர்ச்சியானதே. இதுகுறித்து முன்னாள் பிரபல வீரர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-


கவாஸ்கர் - முன்னாள் கேப்டன், டெலிவிசன் வர்ணனையாளர் :
தெண்டுல்கரின் ஓய்வு முடிவுக்கு அவர் மீதான விமர்சனமும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். 50 சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்று இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும். என்னை பொறுத்தவரை அவர் இன்னும் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சார்ஜாவில் 1998-ம் ஆண்டு 143 ரன் குவித்ததே அவரது சிறந்த ஆட்டமாக நான் கருதுகிறேன். உலக கோப்பையை வென்றது அவரது வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி இனி கவனமுடன் விளையாட வேண்டும். அவரது ஓய்வு இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

ஸ்ரீகாந்த் - முன்னாள் கேப்டன், முன்னாள் தேர்வு குழு தலைவர் :
தெண்டுல்கரின் இந்த முடிவு வியப்பளிக்கிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த பார்மில் உள்ள போது தான் ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ரமீஷ் ராஜா - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் :
தெண்டுல்கரின் இந்த முடிவு புரிந்து கொள்ளக்கூடியதே. 23 ஆண்டுகளாக விளையாடி ஒருநாள் போட்டியில் தன்னால் முடிந்த சாதனைகள் அனைத்தையும் நிகழ்த்தியுள்ளார். உலக கோப்பையையும் வென்றுள்ளார். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவர். இதனால் டெஸ்டில் அவர் சிறந்த பங்களிப்பை தருவார்.

கங்குலி - இந்திய அணி முன்னாள் கேப்டன் :
இந்த ஓய்வு அவரது சொந்த முடிவு. அவரை யாரும் நீக்க முடியாது. அவரது ஓய்வு முடிவால் கிரிக்கெட் உலகமே வேதனை அடைகிறது. அவரது ஓய்வு இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

கும்பளே - இந்திய அணி முன்னாள் கேப்டன் :
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் இல்லை என்பதை நினைத்து பார்ப்பது என்பது கடினமானதே. இந்த ஓய்வு மூலம் அவர் நிம்மதி அடைந்து இருப்பார். பேட்டிங்கில் சாதனைகள் புரிந்த அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார்.

வார்னே - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் :
தெண்டுல்கரால் எனது இரவு தூக்கம் பலமுறை பாதித்துள்ளது. அவரது ஆட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. டான் பிராட் மேனை தவிர யாருடனும் அவரை ஒப்பிட இயலாது.
பிராட்மேனை போல அனைத்து நுணுக்கத்துடன் விளையாடிய ஒரே வீரர் தெண்டுல்கர் ஆவார்.

ராகுல் டிராவிட்- இந்திய அணி முன்னாள் கேப்டன் :
தெண்டுல்கர் தனி சிறப்புடைய கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது சாதனைகளை பார்த்தால் தெரியும். ரன் குவிப்பில் அவருக்கும், மற்ற வீரர்களும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

ஜவகல் ஸ்ரீநாத் - இந்திய முன்னாள் வேகப்பந்து வீரர் :
ஒருநாள் போட்டியில் அவரது பேட்டிங்கை பார்ப்பது என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடிய மிக சிறந்த வீரர். அவர் அதிரடியாக விளையாடினால் எதிர் அணி பவுலர்களின் நிலை திண்டாட்டம் தான். அவருடன் ஒன்றாக இணைந்து ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்டில் தொடர்ந்து விளையாடுவது என்று அவர் எடுத்த நிலை சரியானதே.

சரத்பவார் - மத்திய மந்திரி, கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் :
கிரிக்கெட்டில் எப்போதும் சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கர் தான். அவர் எனது சிறந்த நண்பர். அவரால் இந்திய அணி மிகுந்த பெருமை அடைந்து உள்ளது. இதற்காக அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Maalaimalar



சுவையாக வெந்தயக்கீரை ரசம் வைப்பது எப்படி ?

வெந்தயக்கீரை ரசம் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில்... நீங்களும் செய்து பாருங்கள்.

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது


தேவையானப் பொருட்கள்:-

  • வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
  • தக்காளி - ஒன்று
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
  • பூண்டு - 4 பல்
  • காய்ந்த மிளகாய் - 3
  • மஞ்சள்தூள், பெருங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

  • ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.
  • வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.
  • மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
  • ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.
  • வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது.
ரசத்தின் பயன்கள் என்ன ? - வைரமுத்து

மிளகு - சுவை அரும்புகள் தூண்டுவது. புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.

சீரகம் - செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரிசெய்வது. மனிதத் தேவைக்கான மெக்னீஷியம் கொண்டது.

பூண்டு - கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது. பக்கவாதம் தடுப்பது. ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம் கொண்டது.

கடுகு - எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது. நல்ல கொழுப்பு உடையது.

மிளகாய் - வைட்டமின் A & C இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது. ஆண் குறியில் புற்றுநோய் தடுப்பது.

புளி - வயிற்றுக் கோளாறு சரி செய்து, இருதயம் வலிமை செய்வது.

மல்லித் தழை - இரும்புச் சத்து மிக்கது. எலும்புத் தேய்மானம் தடுப்பது.

கறிவேப்பிலை - தோல் தொற்று தடுப்பது. சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது. தாதுக்களும் நார்ச்சத்துக்களும் மிக்கது.
Source : Maalaimalar News Paper & Tvrk site.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய...

  • பசு மஞ்சள் கிழங்கு 1, வேப்பம் தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகுமுன் முகத்தைக் கழுவி இந்த விழுதை வடுக்களை மூடுவதுபோல் தடவுங்கள்.

    15 நிமிஷம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும்.


  • வேப்பங்கொழுந்து 2 கொத்து, கருந்துளசி 5 இலைகள் இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அரை டீஸ்பூன் கடலை மாசைக் கலந்து பருக்கள் மீது பூசி விடுங்கள்.
    நன்றாகக் காய்ந்ததும் கலவையோடு சேர்த்து பருக்களும் உதிர்ந்துவிடும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

    முகம் மலர்ந்து விடும். மறுநாள் சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் -5, துளசி இலை 6 இவற்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடித்து பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு ஐஸ் கட்டிகளை பருக்கள் இருந்த இடத்தின் மேல் வைத்து ஒத்தி எடுத்தால் பருக்கள் இருந்த சுவடுகளே தெரியாமல் போய்விடும், தோலும் மிருதுவாகும்.

  • நித்திய மல்லிச் செடியின் இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை நல்ல நீரால் கழுவிக் வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.
ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran



கும்கி - விமர்சனம்


மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கியிருக்கும் படம் 'கும்கி'. மைனா மூலம் நம் மனங்களை ஆக்ரமித்த சாலமன் மீண்டும் ஒரு வித்தியாசமான படைப்பாய் கும்கியை கொடுத்திருக்கிறார்.

வித்தியாசமான பின்னணி, தமிழ் சினிமால இது வரை சொல்லப்படாத கதைன்னு இந்த படத்தை தாராளமா சொல்லலாம். இயக்குனர் பிரபு சாலமன், சொல்ல வந்தற விஷயத்தை தெளிவா சொல்லியிருக்காரு.


கும்கி யானை என்ன இது?

பிற அடங்காத / காட்டு யானைகளை ஆற்றுப்படுத்தும் பயிற்சி பெற்ற யானை / காட்டுக்குள் இருந்து ஊர்ப்பக்கம் வருகிற யானைகளை விரட்டியடிக்கப் பழக்கப்பட்ட யானை க்கு கும்கினு பேரு


சரி சரி படத்தோட கதை என்ன ....

ஆதிகாடு என்றொரு தமிழக-கேரள, எல்லையில் இருக்கும் ஒரு அழகான மலை கிராமம். பாட்டன், முப்பாட்டன் என பாரம்பரியமும்,கட்டுப்பாடும் மிகுந்த அந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். பயிர்கள் அறுவடைக்கு வரும் நேரத்தில் 'கொம்பன்' எனப்படும் அதிபயங்கர காட்டு யானை பயிர்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு வாழ்பவர்களையும் மிதித்து கொல்கிறது.

காட்டு யானையை விரட்டாத அரசாங்கம் ஆதிகாடு வாசிகளை புலம்பெயர சொல்கிறது.அதனை மறுக்கும் ஊர் மக்கள் கொம்பனை விரட்ட எங்களுக்கு தெரியும் உங்கள் வேலையை பாருங்கள்.. என சவால் விடுகிறார்கள்.

கொம்பனை அழிக்க கும்கி யானை ஒன்றை வரவழைக்க ஊர்மக்கள் முடிவு செய்கிறார்கள். யானை வியாபாரிக்கும், கும்கி யானை பாகனுக்கும் இடையே ஏற்பட்ட குளறுபடியால் கோயில் யானை வைத்திருக்கும் நம்ம ஹீரோ பொம்மன், கும்கி யானைபாகனாக இரண்டு நாள் மட்டும் நடிக்க சம்மதிக்கிறார்.

இரண்டு நாள் ஆதிகாட்டு வாசத்தில் ஊர் தலைவர் மகளான அல்லியை பார்த்த மாத்திரத்தில் காதலிக்கிறார் நம்ம ஹீரோ. காதல் மயக்கத்தில் நிஜத்தை மறந்து கும்கி யானை பாகனாகவே தன் நடிப்பை தொடர்கிறார் நாயகன் பொம்மன்.

தேங்காய் உடைத்தாலே மிரண்டு ஓடும் கோயில் யானை மாணிக்கம், நாசகார காட்டுயானை கொம்பனை எப்படி வீழ்த்தப்போகிறது?

மற்ற ஊர்க்காரங்களுக்கு பொண்ணு கொடுக்கவும் மாட்டோம், எடுக்கவும் மாட்டோம்னு பரம்பரை பரம்பரையா கட்டுபாட்டோட வாழ்ந்துவரும் ஆதிகாட்டில்... அதே ஊர் தலைவரின் மகளான அல்லியை நாயகன் பொம்மனால் மணக்க முடிந்ததா என்பதே மீதமுள்ள கதை.

எனக்கு பிடித்த சில....


ஒளிப்பதிவாளர் M.சுகுமார்

படத்தின் நிஜமான ஹீரோ ஒளிப்பதிவாளர் M.சுகுமார். பிரமாதம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் அந்த அருவி காட்சிதான். ஆதிக்காடு கிராமத்தை பார்த்த பிறகு, அந்த மலை கிராமம் எங்கே என்று பலரும் சுகுமாரை கேட்டுத் துளைக்கக் கூடும்.

சுகுமாரின் ஒளிப்பதிவில் அருவிகள் ஒவ்வொன்றும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட அருவிகள் இருக்கிறதா! என்று நமது புருவத்தை உயர்த்தும் அளவுக்கு கேமரா வைக்க முடியாத இடங்களில் எல்லாம் கேமராவை வைத்து படம்பிடித்திருக்கிறார் சுகுமார்.

மலை உச்சியில் எடுத்த காட்சிகளில் எல்லாம் சுகுமாரு எங்கதான் கேமரா வெச்சாரு? அது அவருக்கே தெரிந்த வெளிச்சம்.

இந்த படத்தையெல்லாம் 3-டி யில் காட்ட மாட்டாங்களா என்ற ஏக்கத்தை தருகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. அடர்ந்த காட்டிலும் அருவிகளின் உச்சத்திலும் அசராமல் துள்ளித்திரிய விட்டிருக்கிறார் படம் பார்க்கிற அத்தனை பேரையும்.


லட்சுமி மேனன்

கிராமத்து பேரழகியாக லட்சுமிமேனன். ஓராயிரம் ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியை ஒளித்து வைத்திருக்கிறது அவரது கண்கள். சட் சட்டென சிறகடித்து உணர்ச்சிகளை கொட்டுகிற வித்தையால் டயலாக்குகளுக்கு வேலை இல்லாமல் செய்கிறார்.

வந்திருப்பது நிஜ கும்கி அல்ல. அதை பராமரிப்பவன் தன் மீதுள்ள காதலால் உயிரையே கொடுக்க துணிந்தவன் என்பதெல்லாம் புரிந்தபின் லட்சுமி காட்டும் எக்ஸ்பிரஷன்களை பார்த்து ரசிக்க இன்னொரு முறை கூட தியேட்டருக்கு போகலாம்.

அம்மணியின் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். அந்தத் தடுமாற்றம் கொஞ்சம் தெரிந்தாலும், பல காட்சிகளில் சிவாஜி குடும்ப வாரிசு என்ற அடையாளம் மறைந்து, பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை.

சிவா‌ஜியின் பேரன் நடித்த படம் என்பதால் அந்த‌ப் பெ‌ரிய குடும்பத்துக்கு இது முக்கியமான படம். ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம். படத்தின் கதையில் கோட்டைவிட்டாலும் லொகேஷனும், சுகுமா‌ரின் ஒளிப்பதிவும் படத்தை காப்பாற்றியிருக்கிறது.


தம்பிராமையா

'தேசிய விருது' பெற்ற நடிகர் தம்பி ராமையா 'கொத்தமல்லி' என்னும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். ராமையாவின் காமெடியும், அவருக்கு அடிக்கடி கவுண்ட்டர் கொடுக்கும் 'உண்டியல்' அஸ்வினும் அடிக்கடி சிரிப்பலையை ஏற்படுத்துகின்றனர்.

குணச்சித்திரம், நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்திற்கு இப்போதைக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை.

D.இமான்

டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். படத்தின் பின்னணி இசையையும் பிரமாதமாக அமைத்திருக்கும் இமான், பாடல் காட்சியின் போது ரசிகர்களை எழுந்திருக்க விடாமல் செய்திருக்கிறார். பாடல்களுக்காகவும், அதை படமாக்கிய விதத்துக்காகவும் இப்படத்தை மேலும் ஒரு முறை பார்க்கலாம்.

ஒன்னும் புரியலை..., ஐயய்யய்யோ ஆனந்தமே..., சொல்லிட்டாளே... அருமையான மெலோடிஸ்! சொய் சொய்... பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று ஆடுகிறார்கள்.


பிரபு சாலமன்

பிரபு சாலமனின் 'மைனா' படத்தில் பளிச்சிட்ட அதே அபார உழைப்பு இந்தப் படத்திலும் பளிச்சிடுகிறது. கதையை மட்டுமே நம்பாமல், களத்தையும் நம்பும் பிரபு சாலமன், அதற்காக மெனக்கெட்டு இப்படத்தின் மூலம் பல அழகான காட்சிகளை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.



ஒரு புதிய வெற்றிகரமான முயற்சி இது கண்டிப்பாக holloywood படங்களுக்கு இணயாக இருகும்படி எடுக்க பட்டிருகிறது CG கிராபிக்ஸ் அசத்திஇருந்தால் கண்டிப்பாக ஹாலிவுட் இணையாக வந்திருக்கும் !!!

கிளைமாசில் ஓன்று அந்த யானை இறந்த அதிர்ச்சியால் ஹீரோவும் இறப்பது போல காட்டியிருக்கலாம் அல்லது மலைஜாதி தலைவன் தன் மகளை ஹீரோவின் நிலையை நினைத்து திருமணம் செய்து கொடுத்திருக்கலாம். ரெண்டுமே நடக்கவில்லை. :(

ஒரு அருமையான படம் இது போல் ஒரு படம் இனி வராது. எல்லோரும் கிளைமாக்ஸ் பற்றித்தான் கூறினார்கள். இப்படி அமைத்தது தான் சிறப்பு. இல்லை என்றால் மற்ற படங்கள் போல் இருந்திருக்கும். இவ்வளவு (வித்தியாசமான) சிறப்பாகவும் ஒரு படம் பண்ண முடியாது.

கும்கி - நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி! நிச்சயம் குழந்தைகளுடன் பார்க்க கூடிய குடும்ப படம் !
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Tamilleader.



சுவையான தயிர் சாண்ட்விச்

தயிர் சாண்ட்விச் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

நண்பர் தயிர் சாண்ட்விச் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.

ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

தேவையானப் பொருட்கள்:-

  • பிரெட் ஸ்லைஸ் – 10
  • புளிக்காத தயிர் – ஒரு கப்
  • வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1
  • புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன் சாட் மசாலா,
  • சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:-

  • வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.
  • பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும்.
  • ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும்.
  • பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.
  • இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும்.
  • தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.
Source : Maalaimalar News Paper
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12 = 36!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு 12.12.12 ஒரு சூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது.

அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள். இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12.

சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ இணையதள வாசகர்களுக்கு...


1. ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே..."என்பது தான். நடித்த காட்சிகள் 6.

2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அது அறிமுகமான படம் மூன்று முடிச்சு.

3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.

4. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே "ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்த பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.

5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.

6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.

7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.

8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.

10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர் "மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.



11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன் நடித்த கடைசிப் படம் "படையப்பா".

12. முதல் பேண்டசி படம் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.

13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் "பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம் "மூன்று முகம்".

14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் "மாங்குடி மைனர்".

15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம் "தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

16. முதல் சினிமாஸ்கோப் படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம் "கோச்சடையான்".

17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி". பாடல் பாடிய படம் "மன்னன்".

18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார். இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பது அவரது கருத்து.

19. "பாண்டியன்", "அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.


21. ரஜினியின் 50வது படம் "டைகர்(தெலுங்கு)". 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்". ரங்கா படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.

22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்". அவர் முதல்வரானதால் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.

23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. "நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது. "நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது. "காலம் மாறிப்போச்சு" என்ற டைட்டில் "தர்மதுரை" ஆனது.

24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.

25. ரஜினி எடிட் செய்த படம் "படையப்பா". படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2 இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர் சொன்ன கருத்து "ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது" என்பது.

26. அதிக நாள் ஓடிய படம் "சந்திரமுகி". அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "எந்திரன்". குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "அன்புள்ள ரஜினிகாந்த்".

27. "மூன்று முடிச்சு", "மாப்பிள்ளை", "மன்னன்", "படையப்பா" படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.

28. "முள்ளும் மலரும்", "மூன்று முகம்", "முத்து", "படையப்பா", "சந்திரமுகி", "சிவாஜி" படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள்.

29. மீசையில்லாமல் நடித்த முதல் படம் "தில்லு முல்லு", முதல் முழு நீள காமெடி படமும் அதுதான்.

30. ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்றது பைரவியில் புகழ் பெற்றது அண்ணாமலையில்.


31. இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் "6லிருந்து 60 வரை". ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம்.

32. கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து.

33. நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை. "ஆறு புஷ்பங்கள்" படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

34. ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த படம் "முரட்டுக்காளை", "சந்திரமுகி". எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த படம் "ஸ்ரீராகவேந்திரர்" மற்றும் "பாபா".

35. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். ரஜினின் பல படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாக நடித்த இந்திப் படம் 16.

36. தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்" என்பார். அதுதான் சூப்பர் ஸ்டார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி...!

வாசகர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கலாம்!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

Thanks : Dinamalar



நூறு வயது வரை வாழ ஏழு குறிப்புகள்!!!

நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.

ஆயுளை அதிகரிக் கடினமான சில விடயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்.

ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.

  • இடையைக்குறைத்தல்

  • புகைத்தலைத் தவிர்த்தல்

  • உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்

  • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்

  • நீரிழிவு கட்டுப்பாடு

  • சுறுசுறுப்பான வாழ்க்கை

  • பழங்களை அதிகம் உண்ணுதல்
அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.


Source : Thaalamnews.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



நேச்சுரல் வயகரா - ஜாதிக்காய்

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.


உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் :-

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.


மேலும் சில குறிப்புகள் :-

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

எச்சரிக்கை :-

ஜாதிக்காய் அதிகம் சாப் பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-4.html#ixzz1uqOUASXW
Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கலகலப்பு @ மசாலா கபே விமர்சனம்

சுந்தர்.சி யின் 25வது படம் கலகலப்பு. இவருடைய படங்களில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. படத்தில் கலகலப்பை வைக்கும் இவர் "கலகலப்பு" என்று படத்திற்கு டைட்டில் வைத்தால் படம் எப்படி இருக்கும்? படம் முழுக்க ஒரே காமெடி மயம்தான்.

இந்தப் படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடித்துள்ளனர்.

UTV Motions Pictures மற்றும் குஷ்புவும் சேர்ந்து தயாரித்து உள்ளார்கள். நிச்சயமாக இருவருக்குமே நல்ல வருமானத்தை கொடுக்கும்.

சந்தோஷமான விஷயம் படத்துக்கு வசனஉதவி சகபதிவரும், சிறந்த சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!


சரி சரி படத்தோட கதை என்ன ....

கும்பகோணத்தில் மசாலா கபே என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார் விமல். பேரு தான் மசாலா கபேன்னு இருக்கே தவிர அது தலைமுறை தலைமுறையா நடத்தப்பட்டு வருகிற ஓட்டல். மூன்றாவது தலைமுறையான விமல் நடத்தும் போது மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடுகிறது. என்றாலும் பரம்பரை ஹோட்டலாச்சே என்ற எண்ணத்தில் நடத்தி வருகிறார்.

அங்கேயே சமையல்காரராக இருக்கிறார் தாத்தா ராகவன். அவருடைய பேத்தி ஓவியா. திடீரென ஜெயிலில் இருந்து பரேலில் வந்து சேருகிறார் சிவா. இவருக்கும் ஓவியாவுக்கும் காதல் பத்திக் கொள்கிறது.

அதே நேரத்தில் அந்த ஊருக்கு வந்து விமலின் ஓட்டலையே மூடச் சொல்லுகிற "ஹெல்த் இன்ஸ்பெக்டர்" அஞ்சலிக்கும் விமல் மீது காதல்.

விமல் மசாலா கபேயை நடத்தி வரும் இடத்தின் மீது தொழிலதிபர் ஒருவர் கண் வைத்துவிட, அந்த இடத்தை நைசாக சிவாவிடம் இருந்து எழுதி வாங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் மைக்கேல்.

ஏமாற்றி வாங்கிய மசாலா கபேவை திரும்ப வாங்கினார்களா…? அவர்கள் காதல் என்னவானது என்பது க்ளைமேக்ஸ்.



எனக்கு பிடித்த சில....


சிவா

சிவா வந்தவுடன் காமெடி வேகம் பிடிக்கிறது. அவர் கொடுக்கின்ற ஒவ்வொரு ஐடியாவும் எதிர்மறையாக வேலை செய்ய தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. சிவா சும்மா நின்று கொண்டு அடிக்கும் மொக்கை கமென்ட்டுகளுக்கு பதில்களுக்கு தியேட்டரில் செம அலப்பறை + க்ளாப்ஸ் கொடுக்கிறது. Good job n acting Shiva...!!

விமல்

மசாலா கபேயை நடத்தி வரும் வெள்ளந்தியான கேரக்டரில் விமல். உண்மையை மட்டுமே பேசுகிற இவர் லஞ்சம் கொடுப்பதற்கு போய் அடி வாங்கிவரும் காட்சி செம காமடி.

சந்தானம்

சந்தானத்திற்கு மற்றுமொரு படம் அவ்வளவு தான். அவரின் உதவியாளர்கள் அவரை விட பயந்தாங்கொள்ளியாக இருப்பதும் சரியான காமெடி. ஒரு சண்டைக்கு கிளம்பும் போது பாதியில் சுகர் மாத்திரை போட வேண்டுமென்பதற்காக எஸ்கேப்பாக முயற்சிக்கும் தினேஷின் காமெடியும், கடைசியில் எல்லோரும் படுங்கடா என்றதும் மூவரும் சேர்ந்து சந்தானத்தின் மீது படுத்து நசுக்குவதும், கடைசியில் கோழியிடம் மிதிபட்ட ..ஞ்சாக நசுங்கிப் போவதும் காமெடியும் சூப்பர் தான்.

இடைவேளிக்குபின் சந்தானம் வந்தவுடன், கதை ஜெட் வேகத்தில் பறக்கின்றது. மனிதர் சும்மா சொல்லக்கூடாது, உண்மையிலேயே கலகலப்புதான். இன்னும் சொல்லப் போனால், சந்தானம்தான் இந்த படத்தின் நிஜ ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் முழுக்க சிரிக்க வைக்கின்றார். அஞ்சலியை திருமணம் செய்ய அவர் செய்யும் கூத்துக்களை சொல்லி மாளாது.

மனோபாலா & Co

தனது மகளை சந்தானத்துடன் சேர்க்க வேண்டுமென்பதற்காக அஞ்சலியை கடத்தும் மனோபாலா, அது தெரியாமல் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக தாத்தாவுடன் தப்பிக்கும் விமல் அவரை துரத்தும் சந்தானம் என அந்த ஒரு காமெடி கலாட்டா தான்.

இளவரசு

கடன் கொடுத்த இளவரசுவை சிவா ஒரு தவறான தகவலுடன் இன்ஸ்பெக்டர் ஜானுடன் கோர்த்து விட ஜானுக்கு பயந்து மாறுவேடத்தில் சுற்றும் இளவரசுவை வேணுமென்றே தவறாக அடையாளம் காணும் சிவாவும் அதனை அவரிடமே கேட்கும் இளவரசுவின் நகைச்சுவை பயங்கர கலாட்டா.

விமல் வீட்டில் வைரத்திற்காக வந்து மிரட்டும் சுப்பு பஞ்சு மற்றும் அவரது அடியாட்கள், மாட்டிக் கொண்ட விமல், சிவா மற்றும் இளவரசு, திடீர் பைத்தியமாகும் கான்ஸ்டபிள், வைரத்திற்காக சுப்புவின் பின்பக்கத்தை கொத்தாக கவ்வும் நாய் என் அதுவும் ஒரு காமெடி கலாட்டா தான்.

ஹோட்டலில் வைரத்திற்காக நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை அதன் முடிவு கூட காமெடி கலாட்டா தான்.

அஞ்சலி & ஓவியா

அஞ்சலிக்கும், ஓவியாவிற்கும் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் காமெடியில் அவர்களுக்கும் பங்கு உண்டு. கவர்ச்சி மழையில் இருவரையும் நன்றாக நினைய வைத்திருக்கின்றார் சுந்தர் சி.

அஞ்சலியின் மேனரிஸம் எல்லாமே எங்கேயும் எப்போதும் பட மணிமேகலையை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதே பாடி லாங்க்வேஜ்.

கவர்ச்சியை எதிர்பர்த்து செல்லும் ரசிகர்கள் ஏமாறமாட்டார்கள். வசனக்கள் தான் படத்தில் ஜீவன். பாடல்கள் படு வேஸ்டு. பின்னணி இசை பரவாயில்லை.



கலகலப்பு - ஒரு நல்ல காமெடி படம் பார்த்த திருப்தி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : iamvenkatesh2011.com & Google.com



ஒரு கல் ஒரு கண்ணாடி - OK OK

சிவா மனசில சக்தி (SMS), பாஸ் என்கிற பாஸ்கரன் (BOSS) என்ற காமெடி கலட்டா வெற்றிகளை கொடுத்த எம்.ராஜேஷ் அடுத்த படம் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி (OK OK)

எளிமையான கதையை தனது திறமையான காமெடி கலந்த காட்சியமைப்புகளால் கலகலப்பாக படத்தை கொடுத்துள்ள இயக்குனர் ராஜேஷை மனதார பாராட்டலாம்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி-க்குத் தரலாம்.

கதைக்காக மண்டையைப் பிய்த்துக் கொண்டு பைத்தியமாகித் திரியும் கோடம்பாக்கத்தில், அதற்காக எந்த சிரசாசனமும் செய்யாமல் எளிமையான கதையை ஒரு இந்திய அஞ்சல் அட்டையில் எழுதி அதில் திகட்டத் திகட்ட காமெடி கலந்த காட்சியமைப்புகளால் கலகலப்பாக படத்தை கொடுத்துள்ளர் 'காமெடி ஸ்பெஷலிஸ்ட்' இயக்குநர் எம்.ராஜேஷ்.

எனக்கு திருமணம் ஆனபிறகு பார்த்த படம் என்பதால் இந்த படம் என்றும் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


படத்தோட கதை என்னனா ...

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று ‘பாஸ்ட் பார்வர்டு’ கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.


New Face : உதயநிதி ஸ்டாலின்

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார்.

ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

ரெஸ்டாரென்ட் முன்பு ஒரு குத்து ஆட்டம் போடுவாரு பாருங்க..... தியேடரே அதிருது.... ஒரே கைத்தட்டு தான் போங்க....!

Real Hero : சந்தானம்

பார்த்தசாரதியாக வரும் சந்தானம் இவருடன் இணைந்து நடித்திருக்கும் லூட்டியே இப்படத்தின் பியூட்டி எனலாம். படம் முழுக்க வரும் சந்தானம் இப்படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம். இப்படத்தில் இவரது டயலாக் டெலிவரி மட்டுமின்றி, பாடி லாங்வேஜ் இப்படத்தில் முதன் முதலாக பார்க்க முடிகிறது. அது காமெடி காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த OK OK.



Kushboo : ஹன்சிகா மோத்வானி

மீராவாக நடித்துள்ள நாயகி ஹன்சிகா மோத்வானி, ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் முக பாவனைகள், இளவட்டங்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் எனலாம். இப்படத்தில் 'சின்ன குஷ்பு' என்று பாராட்டும் காட்சிகள் இவருக்கு படு பொருத்தம்.

நாயகனை வெறுக்கும் போதும் பிறகு காதலை ஒப்புக் கொள்ளும் போதும் நடிப்பில் அழுத்தம். முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை.

பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.


Special : ரசித்த இன்னும் பிற நடிகர்கள்

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் OK.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள். ரசிக்க முடிகிறது

ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது. ஒரே கலக்கல் தான்!!!!

Music : ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக

1. அழகே அழகே
2. வேணாம் மச்சான்
3. அகிலா அகிலா

இதுமட்டுமின்றி இவரது பின்னணி இசை படத்தினை மிகச்சிறப்பாக நகர்த்த உதவியிருக்கிறது.



விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறது.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

Director : இயக்குநர் ராஜேஷ்

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். தொடர்க உங்கள் காமெடி படைப்புகள் !!!

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒருமுறை என்ன… ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



நேர்முகத் தேர்வு வியூகங்கள்

நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை.

இன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள முடியும்.

அத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.


முக்கியமாக 3 அம்சங்களை நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள் உங்களிடம் கவனிப்பார்கள்:
  • உங்களின் தோற்றம்

  • உங்களின் பேச்சு

  • உங்களின் நடத்தை
எனவே, இந்த 3 அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது, ஒரு மாணவருக்கு அவசியமானதாகும்.

பொலிவான தோற்றம்

நேருக்கு நேரான இன்டர்வியூ செயல்பாட்டில், உங்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது. அதற்காக, அழகாக இருப்பவர்களுக்குத்தான் பணி கிடைக்கும் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. ஷேவ் செய்து, சரியாக முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, முகத்தைக் கழுவி, ஒரு துடிப்பான தோற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

நல்ல ஆடை

Formal ஆடைகள், பொதுவாக, அனைத்துவகை நேர்முகத் தேர்வுகளுக்கும் பொருத்தமானவை. சில நிறுவனங்கள், ஆடை விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை. எனவே, முடிந்தால், ஒரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்லும் முன்பாக, அந்நிறுவனத்தின் ஆடை விதிமுறைகள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். பொதுவாக, உங்களின் உடலுக்கேற்ற வகையிலும், நிறப் பொருத்தமாகவும் ஆடைகளை தேர்வுசெய்து அணியுங்கள். உங்களின் ஷ¤க்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்கட்டும். நல்ல ஆடை என்றால் விலை உயர்ந்த ஆடைதான் என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.

ஆயத்தமாதல்

நேர்முகத்தேர்வு என்பது பேஷன் ஷோ அல்லது திருமண நிகழ்ச்சி அல்லது அழகுக்கலை போட்டி இல்லை என்றாலும், உங்களை அந்தரீதியில் தயார்படுத்த வேண்டியது அவசியம். வாசனை திரவியத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அதை தவிருங்கள். வாய் நாற்றப் பிரச்சினை இருந்தால், அதற்கேற்ற Mouth freshner பயன்படுத்துங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இன்டர்வியூ செல்வதை, போருக்கு செல்வதாக நினைத்து பயந்து, படபடத்து, உங்களை நீங்களே அழுத்திக் கொள்ளாதீர்கள். ரிலாக்சாக இருங்கள். அது ஒன்றும் மலையைத் தூக்கும் செயல் அல்ல. முதல் தினம் தொடங்கி உங்களின் இயல்பான வேலைகளை செய்து கொண்டிருங்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சாதாரணமாக பேசுங்கள். இன்டர்வியூ தினத்தன்று, உங்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்ளும் உணவினை மிதமாக அருந்திவிட்டு செல்லுங்கள். பழரசம் குடிப்பதும் நல்லது.

கவனமாக பேசுங்கள்

நேர்முகத்தேர்வில் பேசும்போது, எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முந்தையை நிறுவனத்தைப் பற்றி அவர்களிடம் குறைசொல்வதை தவிர்க்கவும். உங்களின் பேச்சை வைத்துதான் உங்களது ஆளுமையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

நம்பிக்கையுடன் பேசுங்கள்

பேசும்போது பதற்றத்தில் தடுமாறாதீர்கள் மற்றும் குளறாதீர்கள். எதிரே இருப்பவர்கள் உங்களை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்கள் வேலைதேடி வந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பேசும்போது, புன்முறுவலுடன் பேசுங்கள்.

நிதானமாக பேசுங்கள்

படபடவென்று பொரிந்து தள்ளிவிடாதீர்கள். அது அவர்களுக்கு புரியாமல் போகும் மற்றும் உங்களின் பலவீனத்தையும் இன்டர்வியூ நடத்துபவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும். வாக்கியங்களுக்கு வாக்கியம் சில விநாடிகள் இடைவெளி இருந்தால் நல்லது.

விவாதம் செய்யாதீர்கள்

ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது விஷயத்திற்காக இன்டர்வியூ நடத்துபவர்களிடம் எக்காரணம் கொண்டும் விவாதம் செய்துவிடாதீர்கள். உங்களின் எதிர்கருத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தாதீர்கள். அது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து, நேர்மறையாக பேசி உங்களின் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

ஆர்வமாக செயல்படுங்கள்

நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் ஆர்வம் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆர்வத்துடன் செவிமடுத்து, உங்களின் முகத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வமானது, அவர்களையும் உற்சாகப்படுத்தும். தகுதிகள் அதிகம் இருந்து, குறைந்த ஆர்வமுள்ளவர்களை விட, தகுதிகள் குறைவாக இருந்தாலும், ஆர்வம் அதிகமுள்ளவர்களுக்கே, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் கண்களையும், புன்முறுவலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு உயிரோட்டமான முறையில் பதிலளிக்கவும்.

சிலர், நேர்முகத்தேர்வின்போது, எதையோ இழந்தவர்கள்போல முகத்தை சோர்வாகவும், உம்மென்றும் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அத்தகைய நபர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு என்பது பரஸ்பரம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பானது. ஆர்வமும், துடிப்பும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

Thanks : Dinamalar.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட்!

சூடான சுவையான இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்:-
  • ஓட்ஸ் - அரை கப்
  • பொட்டுகடலை மாவு - 2 - 3 தேக்கரண்டி
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • பாலக்கீரை - சிறிது
  • இஞ்சி - சிறிது
  • வெங்காயம்- ஒன்று (சின்னது)
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை:-

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஓட்ஸை வெறும் கடாயில் வறுக்கவும். கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

  3. வெங்காயம் வதங்கியதும் கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. கீரை வெந்ததும் தேவைக்கு ஏற்ற உப்பு சேர்த்து மசித்த உருளைக்கிழங்கும் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.

  5. பின் வறுத்த ஓட்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.

  6. கலவை கலந்து வந்ததும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். லேசாக ஆறியதும் கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.

  7. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலவையை சிறு உருண்டைகளாக எடுத்து ஹார்ட் வடிவில் தட்டி போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

  8. விரும்பிய வடிவில் கட்லட்டாக தட்டி போட்டு பொரிக்கலாம். சத்தான எண்ணெய் குறைவான மாலை நேர உணவு.

  9. விரும்பினால் இதில் துருவிய கேரட் கூட சேர்க்கலாம். பொட்டுகடலை மாவு அளவு பார்த்து சேர்க்கவும், கலவை உதிரவும் கூடாது, ஒட்டவும் கூடாது.

இதயத்தின் நலனை காக்க இது போன்ற உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிடுங்க, ஆரோக்கியமான இதயத்தை பெற்று நலமோடு வாழுங்க.

Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்

எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம்.
எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வது பெண்களின் பழக்கம்.

இந்த வழக்கத்துக்கும் பழக்கத்துக்கும் ஒரே காரணம், 'இளமை' மனப்பான்மை. அது சரி... என்றும் இளமையாகவே இருக்க முடியுமா?

"யார் தடுத்தாலும் நில்லாமல் முன்னேறிச் செல்லும் ஜல்லிக்கட்டுக் காளைதான் வயசு. ஆனால், உணவுப் பழக்கம் என்கிற மூக்கணாங்கயிறு கொண்டு ஓரளவு உடலைக் கட்டுக்குலையாமல் வைக்கலாம்" என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

"நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் நியூட்ரிஷன்" அளவீடுகளை மேற்கோள் காட்டி, இளமையை இழுத்துப் பிடிக்க 20 வழிகளைப் பட்டியலிடுகிறார், சென்னை பிங்க் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஊட்டச்சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன்.

  1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவுவேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல், ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர்... இப்படி! குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதை மாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம் மேம்பட இது அவசியம்.

  2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.

  3. கார்போஹைட்ரேட் (50%), புரதம் (30%), கொழுப்பு (15%), வைட்டமின்கள், தாது உப்புகள் (5%)  இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

  4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.

  5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.

  6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.

  7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தண்ணீர் குடிக்கலாம்.

  8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். ‘பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும்’ என்பது தவறான கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.

  9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.

  10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. கொழுப்பு கூடுகிறது இவற்றால்.

  11. தவிர்க்கமுடியாவிட்டால், வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே பெஸ்ட். இரவில் அசைவம் வேண்டாம்.

  12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

  13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.

  14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல் 3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.

  15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.

  16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.

  17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.

  18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ‘ஒமேகா 3 ஃபேட்டி அமிலம்’ மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.

  19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.

  20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.

Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



காசேதான் கடவுளடா (1972)

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. 1972 ஆண்டு வெளிவந்த "காசேதான் கடவுளடா". எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படம்.


AVM நிறுவனம் தயாரித்த ஒரு முழு நீள நகைச்சுவையுடன் ஒரு நல்ல மெசேஜைத் தந்த படம் "காசேதான் கடவுளடா'. பணம் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அதைப் பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தால்,சொந்தக்காரர்களே அதை அபகரிக்க முயலுவார்கள் என்ற கருத்தை சொல்லும் படம். இல்லை இல்லை பாடம்.

இதில் "நவரசத்திலகம்" முத்துராமன், லக்ஷ்மி, "தேங்காய்" சீனிவாசன், சுருளிராஜன், "ஆச்சி" மனோரமா, "வெண்ணிற ஆடை" மூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசு, ஸ்ரீகாந்த், "டைபிஸ்ட்" கோபு, "பக்கோடா" காதர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை வசனத்தை எழுதிய கோபு, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இசையமைப்பு மெல்லிசைமன்னர்" M.S.விஸ்வநாதன் அவர்கள்.

படத்துக்கு கதை வசனம் எழுதி துவக்கம் முதல் இறுதி வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் விதமாக இயக்கி இருந்தார் கோபு. யாரையும் நம்பாத பணக்காரப் பெண்மணியாக மனோரமா, அவரது கணவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா கணவரின் மூத்த தாரத்து மகனாக முத்துராமன், அவரது உறவினராக ஸ்ரீகாந்த், அந்த வீட்டுக்கு வேலை தேடி வரும் பெண்ணாக லட்சுமி, முத்துராமனுக்கு தனது பைத்தியக்காரப் பெண்ணை மணமுடிக்க வந்து வீட்டில் டேரா அடிக்கும் எம்.ஆர்.ஆர்.வாசு, அவரது பைத்தியக்காரப் பெண்ணாக ரமாபிரபா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.


கோடி, கோடியாகப் பணம் இருந்தும் மூக்குப் பொடிக்காக கண்டவர்களிடமும் 25 பைசா கேட்கும் பாத்திரத்தில் மூர்த்தியும், பணம் கிடைக்காத காரணத்தால் பாதாள அறையில் இருக்கும் பணத்தை அபகரிக்க முத்துராமனும், ஸ்ரீகாந்தும் போடும் திட்டங்களும், அதை நிறைவேற்ற டீக்கடைக்காரர் தேங்காய் சீனிவாசனை சாமியார் வேடத்தில் வீட்டுக்கு வரவழைத்து அவர்கள் அடிக்கும் லூட்டியும் சிரித்து, சிரித்து வயிற்றை வலிக்கச் செய்யும் நகைச்சுவையாகும்.

மெட்ராஸ் பாஷை பேசும் தேங்காய் சீனிவாசன், சாமியார் பாஷை பேசத் திணறுவதும், முத்துராமனும், ஸ்ரீகாந்தும் அதை எடுத்துக் கொடுப்பதும் சிறந்த காமெடி. மேலும் டைப்பிஸ்ட் கோபு, எஸ்.ராமாராவ், சுருளிராஜன், சசிகுமார், ஜெய்குமாரி எனப் பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.


நடனமாட வைக்கும் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவற்றுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார்.
"மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது
சொல்லித்தாருங்கள் யாரும் பார்க்கக்கூடாது'

"ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே மகாதேவா பஞ்சலிங்கமே மகாதேவா'

"இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா'

"ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடிபட்டு மிதிபட்டு தெரிஞ்சுக் கிட்டேன்டா காசேதான் கடவுளடா'
- ஆகிய இந்த அருமையான பாடல்களைப் படமாக்கியிருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

பெரிய நடிகர்கள் இல்லாமல் நகைச்சுவையை மட்டும் பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "காசேதான் கடவுளடா' படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிட்டத் தவறவில்லை. இப்போது பார்த்தாலும் தொய்வு இன்றி ரசித்து சிரிக்கவைக்கும் படம் "காசேதான் கடவுளடா'.

படத்தில் லட்சுமி ரொம்பவும் வெள்ளந்தியாகச் சொன்ன ஜோக்.

தே.சீனிவாசன்: "மங்களம்! மங்களம்!"

லட்சுமி: "சுவாமி ஏன் அடிக்கடி 'மங்களம் மங்களம்' என்று சொல்கிறார்?"

வெ.ஆ.மூர்த்தி & முத்துராமன்:"அதாவது மங்களம் உண்டாகட்டும் என்று சுவாமி சொல்கிறார்".

லட்சுமி: "அடுத்தவீட்டு மங்களம் ஏற்கனவே உண்டாகிட்டதாச் சொன்னாங்களே?"


தேங்காய் சீனிவாசனை எடுத்துக்கொண்டால் உடனே ஞாபகம் வருவது காசேதான் கடவுளடா படம்தான். முத்துராமனுடன் இவர் சாமியார் கெட்டப்பில் அடிக்கும் லூட்டிகள் அருமையானவை. 'அதே.. அதே..' என இவர் ஒவ்வொரு காட்சிக்கு சொல்வதும் அதிரடி சிரிப்பு.

தேங்காய் ரோலுக்கு முன் முத்துராமன் ரோலே சிறியதுதான்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும். வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு.

க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க... கலாட்டா அதிகமாகிக்கொண்டே போக, அனைவரும் நகைச்சுவையில் புரட்டி எடுத்தார்கள். வயிறுவலிக்க சிரித்துப்பார்த்த படமான இதுவும் என் ஃபேவரைட்.

கட்டாயம் இந்தத் திரைப்படத்தை முழுமையாக பாருங்கள். சிரிப்புக்கு 100% உத்திரவாதம் உண்டு.!!!

Thanks : பா.காசிவிஸ்வநாதன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top