சொன்னா புரியாது (2013) - விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் புதிய படம் "சொன்னா புரியாது". இவர் தமிழ் பட(ம்)த்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தில் 'தமிழ்ப்படம்' சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப்-வும் நடிக்கின்றனர். மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

படத்தோட கதை என்னனா ...

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம். திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.

ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது. அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. கேளு மகனே கேளு
ஒரு கொடும கதைய கேளு - தினம்


பாடியவர்கள் : ஜெகதீஷ்
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

மெலடிக்கு மேலே குத்து பாட்டுக்கு கீழ் வரும் பாடல்.

கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலையை பாடலில் சொன்ன விதம் அற்புதம். பாடலின் இடை இடையே வரும் ரஜினியின் வரிகள் அருமை. பாடல் வரிகள் தெளிவாக கேட்பது கூடுதல் அழகு.
பாடல் ஹை லைட் வரிகள் :

அந்த தண்ணி அடிச்சவன் இந்த தண்ணி அடிச்சான்
அந்த மூனு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
அவன் : காதல் முதல் கண்ணீர் வரை - ஒரு சிறுகதை இந்த பாடல்!


2. காலியான சாலையில் நீயும் நானும்
போகிறோம் காதல் கார்காலம்!


பாடியவர்கள் : SP சரண் & சின்மயி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

இது ஒரு மெலடி ரொமான்ஸ் பாடல். காதுக்கு இனிமையான கவிதை தொகுப்போடு வரும் ஒரு பாடல். காதலன் காதலியின் மனத்திரையை பிரதிபலிக்கும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

மனதின் வாசல்களை
அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்!
இரண்டு பேர். இரண்டு காதல். ஒரே பயணம் இந்த பாடல்!


3. தேவதையோ ராட்சசியா
தேர்ந்தேத்த நிலவோ...


பாடியவர்கள் : ரஞ்சித்
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

பெப்பி சாங். கவுண்டமணியின் டியாலக்கோடு தொடக்கும் பாடல். இவரின் பிரபலமான டயலாக் ஆங்கங்கே பரப்பி, கேற்பது மிக அழகா இருக்கு. மேலும் பாரதிராஜா, கார்த்திக்கின் ஜித்தாத்தா ஜித்தா இசையும் அருமை. ஹீரோ பின்னணி பேசும் பல மொழி தெரிந்தவன் என்பதை சொல்லும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

கடைசிப்பக்கம் கிழிந்தேடுத்த கிரைம் நாவல் இவளோ
ஒரு நொடியில் கண் பறிக்கும் மின்னல் அதன் துகளோ
ஆணின் முதல் பார்வை - காதல் மொழி - சொல்லும் பாடல்!


4. உன் தொழில் சாய்த்து
உன்னோடு பேச ஓடோடி வந்தேன்..


பாடியவர்கள் : MK பாலாஜி
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

சோக பாடல். வயலின் & பியானோ கலந்த கலவை இனிமை.

காதல் - சோகம் - ஆணின் மனநிலை - சொல்லும் பாடல்!


5. ஐயையோ போச்சே...

பாடியவர்கள் : MK பாலாஜி & யதீஷ் மகேஷ்
பாடலை எழுதியவர் : யதீஷ் மகேஷ்

மக்களே காதலில் தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பாடலை பாடிகொண்டிருப்பவர் பா...ப்பா..... என தொடக்கும் பாடல்.

சிவாவின் டயலாக் அங்கங்கே இருப்பது ரசிக்ககூடியது. இசை + பாடல் இரண்டும் ஒரே இரைசல்.



கோழி இடும் முட்டைகள் :
மொத்தத்தில் சொன்னா புரியாது ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!




0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top