படம் பார்த்த அனுபவம்

வெள்ளிகிழமை இரவு, 9 மணிக்கு ஆபீஸ்-இல் இருந்து கிளம்பி படம் பார்க்க சென்றேன் நண்பர்கள் மூவருடன் (விஜய், நிவாஸ், நந்தா). செம கூட்டம். தியேடர், நிரம்பி வழிந்த நின்றது. இந்த தியடரில் இவளவு கூட்டம் பார்த்ததில்லை!!. டிக்கெட் வாங்க எங்களுக்கு வேறு வழியில்லாமல் அருகிலுள்ள டீ கடையில் வேலை செய்யும் ஒருவரிடம் ரூபாய் கொடுத்து 4 டிக்கெட் வாங்கிவர சொன்னோம். டிக்கெட்டுக்காக கார்த்திருந்தோம்.

மணி 10:00. படம் போட்டாச்சு. விசில் சப்தம். வெளியே கேட்குது. போலீஸ் - அங்கும் இங்குமாக நடந்து கூட்டத்தை சமாளித்துகொண்டிருந்தார். மனசு அடிச்சுக்குது... படம் போட்டாச்சு. டிக்கெட் வாங்க போனவேன் என்னாச்சு...? இன்னும் வரலியே...? நிலை கொள்ளாமல் டிக்கெட் தரும் இடம் நோக்கி நடக்க ஆரமித்தோம். ஹவுஸ் புல்!. டிக்கெட் இல்லைன்னு சொல்லி போலீஸ் ஒருவர் எங்களையும் சேர்த்து வெளியே செல்லுமாறு கூறினார்.

என்னடா இது...? இதுநாள் வரை படம் பார்க்க வந்துட்டு, பார்க்காமல் வெளியே வருவது இது தான் முதல் முறை எனக்கு!. இந்த நிகழ்வுகளில், டிக்கெட் வாங்க சென்றவன் எங்கே என்று மீண்டும், டீ கடைக்கு சென்றால்... அங்கே நாங்கள் டிக்கெட் வாங்க சொன்னவன் மும்முரமாக டீ சப்ளை செய்துகொண்டிருந்தான்.

நாங்கள் திடுக்கிட்டு... அவனிடம் கேட்டதற்கு, "எனக்கு வேலையிருக்குன்னு என் அண்ணனை டிக்கெட் வாங்க அனுப்பினேன். அவன் டிக்கெட் தரலையா?" என்று திருப்பி கேட்டான். பிறகு, அவனிடம் போன் செய்து பேசியபோது, அவன் படம் பார்த்துகொண்டிருபதாக சொன்னான். திடுக்கிட்டு... எங்கள் டிக்கெட் எங்க..? என்று கேட்டதற்கு அவன், "வாங்கவில்லை.." என்று கூலா பதில் சொன்னான். நாங்கள் டிக்கெட்டுக்கு தந்த பணத்தை அவன் மறந்துவிட்டதாக சொன்னான்.

"பேசாம நாமலே கீவுல நின்னிருந்தால் கூட டிக்கெட் கிடைத்திருக்கும். நிற்க சங்கடப்பட்டு இப்ப பாரு.. படமே பார்காமல் போறோம் ..." என்றான் ஒரு நண்பன்.

நேரம் 10:47. இப்படி படம் பார்காமல் சொல்ல தான் என்னை தாம்பரத்திலிருந்து காரப்பாக்கம் வரசொன்னியாடா... தியடருக்கு முன்னாடி ஒரு மணி நேரம் நின்று ....", கடுப்பாகி பல்லை கடித்தான்.

எங்களுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல. கடுப்பாகி, அவரவர் ரூமுக்கு போனோம். வழியில்...நண்பர்கள் உதிர்த்து...

"இனிமேல் இந்த மாதிரி பசங்கல நம்பக்கூடாது.."

"நாளைக்கு காலையில் இந்த படத்த பார்க்கிறோம்.."

"நைட் வேற ஏதாவது படம் பார்க்கலாம்.." என்று ஐடியா தந்தான் ஒருவன்.

தாம்பரம் போக இருந்தவனை ரூமுக்கு அழைத்து வந்து, ஹிந்தி படம் பார்த்தோம். படத்துல... 3 வசனம் பேசின உடனே ஒரு பாடு வருது. நாங்களும் தியேடரில் நடந்ததை மறக்க நினைத்து படம் பார்கலாம் நினைத்தால் படம் எங்களை வெகுவாக சோதித்தது. "கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்கு ஆடிச்சாம்!" கிராமத்தில் சொல்லும் பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
படம் ஒருவழியா 02:40 முடிந்தது. நாங்கள் மீண்டும் பேசிவிட்டு படுக்க 4:10 மணி ஆனாது.

மறுநாள் காலை 10:30 கிளப்பி படம் பார்க்க, மீண்டும் தியேடர் சென்று - நாங்களே டிக்கெட் வாங்கி - படம் பார்க்க சென்றோம். நாங்கள் செல்லும் முன்னரே படம் ஓடிகொண்டிருந்தது. என்னடா இது வழக்கமா படம் 11:30 தான் போடுவான். இன்னைக்கு 10:40 கே வந்துட்டோம். படம் போட்டாச்சா...? புரியாமல் உள்ளே சென்றோம். சில இருக்கைகள் காலி. அருகில் இருந்தவரிடம் "படம் போட்டு எவளவு நேரமாச்சு-ன்னு கேட்டோம். 15 நிமிஷம் ஆச்சுன்னு சொன்னார். 15 நிமிஷம் "

ஒருவழியா படம் மதியம் 2:30 முடிந்தது. வெளியே வந்தோம். நண்பன் நிவாஸ், மெடிகல்ஸ் நோக்கி வேகமா நடந்தான். நண்பர்கள் முகத்தில் ஒருவித கோபமும் பிரமிப்பும் இருந்தது. அடுத்து சாப்பிடபோலாம்-ன்னு சொல்லி நண்பர்களை அழைத்து ஹோட்டல் இன்சுவை சென்றேன். நாங்கள் பார்த்த அந்த படம் எது? ஹோட்டல்-இல் நடந்தது என்ன..? அடுத்த பதிவில்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



2 comments:

Nivas Dharuman said...

kovam parama pinna, padama pa athu, yerkanavey antha padam paathachi. gentleman, anniya and ramana.

Tamilselvan said...

Dai! Nee partha padam "Kandasami" correcta....
Ithuku yenda evalavu buildup.....:)

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top