தீராத விளையாட்டு பிள்ளை

'கத்தால கண்ணால குத்தாதே ...' பாடல் புகழ் 'திரு திரு' விழிகளுக்கு சொந்தகாரர் நம்ப பாண்டியராஜன் நடித்த "ஜாடிக்கேத்த மூடி" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் வி.கி.ரெட்டி. பிறகு, வளர்ந்து வாலிபத்தை தொட்டவர் visual communication என்ற படிப்பை படித்து, டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இவரின் செயலை பார்த்த டைரக்டர் இவரை திரைக்கு பின்னல் இருப்பதை விட திரைக்கு உன்னால் வந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தவர் தனது புதிய படத்துக்கு ஹீரோவாக அறிமுகபடுத்த... ஒரு புது முகம் என்ற உணர்வே தோன்றாத மாதிரி இவரது நடிப்பு இருக்கும். ரீமாசென், பரத் + நல்ல திரைக்கதையும் சேர்ந்த அந்த படம் சூப்பர் ஹிட். அது தான் "செல்லமே". அந்த குழந்தை தான் நம்ப கருப்பு தங்கம் விஷால்.


படம் ஓடியதை பார்த்த தயாரிப்பாளர்கள் இவரையே மீண்டும் ஒரு படம் செய்ய தூண்ட, இவரது 2-வது "சண்டைகோழி" படம் வெளிவந்தது. வேறு ஒரு மாஸ் ஹீரோவுக்கு எழுதிய இந்த படத்தின் கதையில் இவர் மிக சிறப்பாகவே செய்திருப்பார். அதுவும் நண்பா சேச்சி "மீராஜாஸ்மின்" நடிப்பில் பின்னி பெடலேடுத்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட்.

அதன் பிறகு, இவரது டைரக்டர் கனவு மெல்ல வலுஇழந்து மீண்டும் ஒரு கமர்சியல் ஹீரோவாக வலம் வர, இவரது 3-வது படம் "திமிரு" கைகொடுத்தது. ஒரு சிறப்பான திரைகதையில் அலட்டிக்காமல் நடித்து நம்மை நெகிழ செய்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட். தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை தந்தவர் என்ற பெருமையுடன் வலம்வந்தார் விஷால்.

திமிரு பட தலைப்புக்கு ஏற்ப இவர்க்கு சற்றே மாஸ் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணம் உதிக்க இவரது அடுத்த 4-வது படமான "சிவப்பதிகாரம்"-தில் ஓவரா பேசி நடித்து முதல் பிளாப் படம் ஒன்றை தந்தார். படத்தின் பாடல்களை வீணடித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.


இவரது அடுத்த 5-வது படத்தை பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் "தாமிரபரணி" வெளிவந்தது. நீண்ட நாளைக்கு பிறகு "நதியா" நடித்தார். உறவுகளை மையபடுத்தி வெளிவந்த இந்த படம் ஹிட். இதில் சற்றே அடக்கியே வாசித்திருப்பார்.

அடுத்த 6-வது படமாக வெளிவந்தது "மலைகோட்டை". பிரியாமணியுடன் ஜோடிசேர்ந்த இவருக்கு இந்த படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை தரவில்லை. ஊர்வசி + ஆசிஸ் வித்யாதியின் காமெடி பேசப்பட்ட ஓன்று.

மீண்டும் ஒரு மாஸ் ஹீரோ எண்ணம் தோன்ற ஒரு போலீஸ் அதிகாரியாக 6 பேக் உடலமைப்புடன் வெளிவந்த இவரது 7-வது படம் "சத்யம்". நயன்தாரவுடன் ஜோடி சேர்ந்தவர் மீண்டும் ஒரு பிளாப் தந்தார்.

அதன் பிறகு, மீண்டும் தன்னை ஒரு வெற்றி நாயகனாக வெளிகாட்டவேண்டி அடுத்த படம் செய்ய சிறிது காலம் எடுத்துகொண்டார். அப்போது அவர் கையில் எடுத்த 8-வது படம் "தோரணை". சிரேயாவுடன் நடித்தார். சராசரியாக ஓடினாலும் படம் பிளாப் லிஸ்டில் சேர்ந்தது. காமெடி செய்வதா நினைத்து இவர்கள் இருவரும் ரசிகர்களை பதம் பார்த்திருப்பார்கள்.


இன்று வெளிவந்த 9-வது படம் "தீராத விளையாட்டு பிள்ளை". இதுவரை ஒரு கதாநாயகியுடன் மட்டுமே நடத்தவர் இந்த படத்தில் மூன்று நாயகிகள். நடிகர் ஜீவனை போல இவருக்கும் எங்கோ "அந்த மச்சம்" இருக்கு.

இதை படத்தை பற்றி நான் நாளை சொல்கிறேன். 9-இல் 6 படம் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் இந்த படமும் அமைய என வாழ்த்துக்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



6 comments:

நாமக்கல் சிபி said...

Good Analysis~ Keep it up!

Kolipaiyan said...

வணக்கம் நண்பரே. வருகைக்கு வாழ்த்தமைக்கு கோழியின் நன்றிகள்.

வெற்றி said...

nice 2 read..

Kolipaiyan said...

முதல் முறையா என் வலைதளத்திற்கு வந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் வெற்றி.

Muruganandan M.K. said...

நன்றாக இருக்கிறது பார்வை.

Kolipaiyan said...

Dr Sir, Thanks for your visit and comment.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top