காதல் - பன்னிகுட்டி - பிரகாஷ் ராஜ்

நடந்த சம்பவம் - பன்னிகுட்டி சாட்சியாக..

என்னோட நெருங்கின நண்பர்கள் ரெண்டுபேரு காதலிச்சாங்க. பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணமும் பண்ணினாங்க.

அவ, அவனை 'டேய் பன்னி'நின்னு தான் செல்லமா கூப்பிடுவா. அவங்க கல்யாணத்துக்கு நண்பர்கள் நாங்க அழகான ஒரு பன்னிக் குட்டியைத்தான் 'கிப்டா' கொடுத்தோம். ஆசையா அவங்களும் வளர்த்தாங்க.

எங்க 'கேங்'ல ஒரு ரோல் மாடல் ஜோடி அவங்கதான்னு எல்லோரும் நினைச்சுகிட்டு இருந்தபோது, ஒரே வருசத்துல ரெண்டு பெரும் 'டைவர்ஸ் அப்பளை' பண்ணினாங்க.

ரெண்டு பேருகிட்டேயும் தனி தனியா பேசி பார்த்தோம். பேசின பிறகு, அவங்க சேர்ந்து வாழவே முடியாதுன்னு மட்டும் தோணலை. சேர்ந்து வாழவே கூடாதுன்னு தோணுச்சு.

என்னா, காதலிக்கும் வரை அவன் பார்த்த அவள் வேறு. அவள் பார்த்த அவன் வேற. ரெண்டு பெரும் தங்களோட மைனஸ் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளவே இல்லை.

அவன் மாறிட்டான், அவன் காதலிக்கும்போது இருந்தவனே இல்லை. வாழ்நாளெல்லாம் காதலனாவே இருப்பான்னு நம்பி கல்யாணம் பண்ணினேன். கல்யாணத்திற்கு அப்புறம் 'புருசனாகிவிட்டான்'னு அவன் மேல இவ பெரிய புகார் பட்டியல வாசிக்கிறா.

அவ நான் நினைத்த பொண்ணே இல்லைடா. ஏமாந்துடேண்டா...னு உடைஞ்சு அழறான். அவளோட வியர்வை வாசனை இவனுக்கு பிடிக்கவில்லை.

இவனோட குறட்டை சத்தம் அவளை டிஸ்டர்ப் பண்ணியிருக்கு. காபி டம்ளரை உர்ர் உர்ர்-னு அவ உறிஞ்சி குடிக்கிறது இவனுக்கு பிடிக்கவே இல்லை.

இவன் அழுக்காவே திரியறது இவளுக்கு சுத்தமா பிடிக்கலை. இப்படி ஒவொரு விசயத்துக்கும் ஒருவரை ஒருவர் சகிச்சுக்கிட்டு இருக்க தயாராவே இல்லை.

"ஏய், என்னை 'பன்னி'-ன்னு இனிமே குப்பிடாதே"-ன்னு இவன் எரிச்சலா சொல்லிகிட் இருக்கிறான்.

'இவங்க காதலுக்கு சாட்சியாகிட்டோமே'ன்னு அந்தக் பன்னிக்குட்டி இன்னனும் 'திரு திரு'வென முழிச்சிக்கிட்டு இருந்தது.

இந்த உன்னை சம்பவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டது நம்ப 'செல்லம்' பிரகாஷ் ராஜ்.

காதல் திருமணம் வரை இருந்திட கூடாது. அது திருமணத்திருக்கு பிறகு இருக்க வேண்டும். அது தான் உண்மையான காதல்.
காதல்
நட்பு என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்வு பரிமாற்றம்.

காதல் என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்ச்சி பரிமாற்றம்

நன்றி : திவ்யகிஷோர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



3 comments:

Anonymous said...

உணர்ந்து வாழ்ந்தால் தான் உண்மை காதல் புரியும் குறட்டை காபி குடிக்கும் சத்தம் குளிக்காமல் இருப்பது இதெல்லாம் ஒன்னும் உலகமகா குத்தமில்லை தான் ஆனால் இப்படி சின்ன சின்ன காரணங்களை மனதில் கொண்டு பிரிபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

Kolipaiyan said...

நன்றி தமிழரசி.

இரண்டு இதயங்களும் சரியான புரிந்தது கொள்ளவில்லை என்றால் அதற்கு பெயர் உண்மையான "காதல்" இல்லை.

'நாடோடிகள்' பட கதையின் கருவை போல பல இடங்களில் பல முகங்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

Divya said...

urangum pothu ovvoru nalum un peyarai than ucharikerayin.
yan thariumaa?
maranam enni thaluvenalum kadaisiyil ucharethathu,
unnathu payaraga erukattum enbathal!



This true love Just feel your love

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top