திரும்பிபார்கிறேன் : மாயா பஜார் - விமர்சனம்

புது படங்களை பார்த்து போரடிச்சு போச்சுன்னு நேற்று இரவு பழைய இதிகாச படவரிசையில் ஏதாவது படம் பார்கலாம் என்று பார்க்க நினைகையில் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது "மாயாபஜார்". மகாபாரத கிளைகதையில் பீமன் மகன் கடோத்கனனின் பெருமையை சொல்லும் காவியம் இந்த படம்.

படத்தோட கதை என்னனா ...

துவாரகை. பலராமன் - ரேவதி தம்பதியரின் மகள் வத்சலாவின் குடும்ப நிகழ்ச்சியில் இவளின் சித்தப்பா ஸ்ரீ கிருஷ்ண பகவான் (என்.டி.ராமாராவ்) - ருக்மணி தேவியார் முன்னிலையில் இவளின் அத்தை சுபத்ரா (அர்ஜுனனின் மனைவி) அவரது மகன் அபிமன்யுடன் கலந்துகொண்டு சிறபிக்கிறார். அபிமன்யுவிக்கு வத்சலாவை திருமணம் செய்து தருவதாக வாக்கும் தருகிறார் பலராமன்.
பம்பரமா ஆடலாம் கும்பலாக பாடலாம்
பாட்டு பாடும் குயிலினமே ...
பாடல் முடியும் முன்பே வளர்ந்து பெரியவள் ஆகிறாள் வத்சலா (சாவித்திரி).

இந்திர சபையில் பாண்டவர்களை சந்தித்துவிட்டு துவாரகை திரும்பும் கிருஷ்ணன், அங்கு அவர் கண்ட காட்சிகளை ஓவியத்தில் விளக்குகிறார் அவரது அண்ணன் பலராமன் தம்பதியிடம். அவர்களுக்கு பரிசாக உண்மையை சொல்லவைக்கும் பீடம் தருகிறார். வட்சலாவிற்கு நினைத்ததை காட்டும் பிரியதர்சினி பெட்டியை தருகிறார். இவள் திறந்து பார்க்க அதில் அபிமன்யுவின் பின்மம் (ஜெமினிகணேசன்) தெரிகிறார். உடனே ஒரு டுயட் பாடல்.
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
தியோதணன், கர்ணன், சகுனி, துர்சாதணன் நால்வரும் திருவ்பதை அவமான படுத்தியதை பேசி பாண்டவர்களை பழிவாங்க சகுனியின் மந்திர பேச்சால் சூதாட அலைகிறார்கள். பாண்டவர்கள் தோற்க - கட்டிய உடையுடன் காடு செல்ல - இத்தனை கிருஷ்ணர் மூலம் தெரிந்து கொண்ட பலராமன், தன் சிஷ்யன் தியோதணனை இது பற்றி விசாரிக்க அஸ்தினாபுரம் வருகிறார்.

பலராம் இவர்களது உபசரிபாலும், பேச்சிலும் மயக்கி, திரியோதனன் மகன் லகுனா குமாரன் (தங்கவேல்) இவரது மகளை திருமணம் செய்துவைக்க வாக்கு தருகிறார்.

இந்நிலையில், அபிமன்யு - வத்சலா காதலில் திளைக்க
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணனே உணகேன் கலவரமே
- சுபத்ரா தன் அண்ணன் பலராமனிடம் அபிமன்யு திருமண பற்றி கேட்க - ரேவதி, இவர்களின் பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி மறுக்க - அவிமன்யு - வத்சலா சந்திப்பு திருடு தனமாக நடக்க.. அப்போ ஒரு பாடல்.
ஆகா இன்ப நிலாவினிலே
ஓகோ ஜெகமே ஆடிடுதே
சகுனி துவாரகை வந்து பலராமனையும் கிருஷனனையும் சந்தித்து லகுனகுமாரன் - வத்சலா திருமண ஏற்பாட்டை தொடங்குகிறார். கிருஷ்ணன் இத்தனை தலைமை ஏற்கிறார். சுபத்ரா இந்தனை காண முடியாமல் அங்கிருந்து மகன் அபிமன்யுடன் கடோத்கஜன் (ரங்காராவ்) ஆசிரமம் செல்கிறார். வழியில் ...
பலே பலே பலே தேவா
பாரோர் அறியா உன் மாயா
அத்து மீறி யாரோ தன் கோட்டைக்குல் புகுந்தவிட்டதை உணர்த்து, தன் படைகளை அனுப்பி அவர்களை கொண்டுவர சொல்ல - அபிமன்யு முறியடிக்க - கடோட்கஜனே (பீமனும் மகன்) நேரில் சண்டைக்கு வர - பிறகு தான் அபிமன்யு இவனுக்கு தம்பி என்று தெரிகிறது.
***
கிருஷ்ணர் சொல்லி - வத்சலாவை திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க - லகுனா குமாரன் திருமண ஏற்பாடு ஆரம்பிகிறது.

இந்நிலையில், கடோத்கஜன் - அபிமன்யுவின் காதல் கதை தெரிந்த்துகொண்டு பழிவாங்க புறப்பட - சுபத்ரா தடுக்க - பிறகு கிருஷன்ரின் உதவியுடன் திரியோதணனை பழிவாக்கும் படலம் ஆரம்பிகிறது.

கடோத்கஜன், வத்சலாவை இவனது ஆசிரமம் கொண்டுவந்து - தன் தாயிடம் அபிமன்யு -வத்சலா திருமண குறிப்பிட நேரத்தில் நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு - தன் சகாவை அழைத்து- திருமண விழாவிற்கு ஒரு மாய மாளிகள் காட்டி தியோதனை குடுபத்தை கவர்கிறான். வத்சலாவாக மாறி மீண்டும் துவாரகை வந்து - திருமணத்தில் கலந்து கொள்கிறான். தோழிகளுடன் ...
டும் டும் டும் கல்யாணம்
டும் டும் டும் கல்யாணம்
லகுனகுமாரனின் வேண்டுகோளுகிணங்க வத்சலா இவனை சந்திக்கிறாள். அங்கே ஒரே கலாட்டா தான். இவளது அழகில் மயக்கியா அவன்
தங்கமே உன்போல தங்க பதுமையைதேடிலும் எங்குமில்லை

- என பாடுகிறான். இவனது சகாக்கள் சாப்பாடு கூடத்தில் பிரச்சனை பண்ண - எங்கு வரும் கடோத்கஜன் சாப்பாட்டை கண்டதும்
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
- சாப்பிடு காலி செய்துவிட - மீண்டும் தன் சிஷ்யர்கள் உருவாக்கி திருமண நிகழ்ச்சி நடக்கிறது.

வத்சலா - லகுனகுமாரன் கலாட்டா திருமண நிகழ்வு எப்படி இருந்தது? வத்சலா - அபிமன்யு திருமணம் எப்படி நடக்கிறது என்பது தான் மீதி கதை.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...

  • படத்துல கிருஷனராக என்.டி.ஆரும், கடோத்கஜனாக ரங்காராவும், சகுனியாக நம்பியாரும் வாழ்த்திருபார்கள். என்ன ஒரு கம்பீரமான நடிப்பு. பட இடங்களில் உடல் சிலிர்க்கும், ரசித்து பார்பவர்களுக்கு இது புரியும். என்.டி.ஆரை இப்போது பார்க்கும் போதும் எனக்குள் ஒருவித தெய்வீக உணர்வே வருகிறது.
  • சாவித்திரி - சாதாரண வத்சலாவாகவும், கடோத்கஜன் வட்சலாவாக மாறிய பின் என இரண்டு விதமான நடிப்பு இந்த படத்தில்.
  • தங்கவேல், கா.கருணாநிதியின் டைமிங் காமெடி மிக அற்புதம். அதுவும் "தசமதியர்..." விளக்கமும், "ஒய் ஒய் தலைவா " என்ற கோசமும் அற்புதம்.
  • முகஸ்துதி பாடி பரிசு பெறும் இருவரிடம் நடக்கும் "கிண்கிணி, கிம்பளம்.." கலாட்ட ரசிக்க கூடியவைகள்.
  • இசை. கண்டசாலா. காலத்தை கடந்தி நிற்கும் பாடல்கள் + பின்னனி இசை என இரண்டிலும் மனுசர் பின்னி எடுத்திருப்பார். பல காதல் இன்று ஒலிக்க கேட்கலாம்.
  • டைரக்டர் ரெட்டி. இவர் மாயஜால படங்கள் எடுப்பதில் சிறந்தவர். இதில் அதிகம் மாயஜால நிகழ்வுகள் இடம் பெறவில்லை என்றாலும் படத்தில் 'கல்யாண சமையல் சாதம் ..' பாடலை மனுசர் மிரட்டியிருப்பார்.
  • இளம் வயது ஜெமினி கணேசன். முகத்தில் விடலை பருவம் தெரியும். நடிக்க வாய்ப்பு அதிகம் இல்லை.

மாயாபஜார் - கலாட்டா கல்யாணம்


நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



4 comments:

வேலன். said...

கடந்தவாரம் பதிவிறக்கிவைத்துள்ளேன்.படம் பார்க்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை...விமர்சனம் அருமை நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Kolipaiyan said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி வேலன்.

chitra said...

Even I liked NTR's & Rangaroa's face expressions... Especially when Vathsala in disguise fold her hands like a guy, he would just pat her shoulder with his flute and a warning look.

Anonymous said...

Good movie.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top