சமுத்திரம் அம்பானியில் வைரமுத்துவின் வைரவரிகள்


நிஜ வாழ்க்கையில் நடிகர் கருணாஸ் ஒரு இசையமைப்பாளராகவேண்டும் என்ற கனவில் சினிமாவில் காலடி வைத்தார். ஆனால் காலம் அவரை இசைத் துறைக்கு பதில் நடிப்புத் துறைக்கு தள்ளியது. இருந்தாலும் தனது கனவை இப்போது நனவாக்கியுள்ளார் கருணாஸ். ஆம்! ராஜாதி ராஜா படத்தை தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்திற்கும் இசை நடிகர் கருணாஸ் தான்.


இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் ஒரு பாடலை பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.


ராகுல் நம்பியார் & கென் கருணாஸ் இணைந்து பாடியிருக்கும் ஒரு பாடல் "தண்ட தண்ட பாணி". இந்த பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைனனுக்கு எழுதிய பாடல். இதில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்...
மூளையுள்ள பிள்ளைக்கு
ஒரு மூலதனம் தேவையில்லை
பத்துவிறலே மூலதனம் அல்லவா

வேலை போல தெய்வம் இல்லை
வியர்வை போல தீர்த்தம் இல்லை
உன் தேகம் உனதானால்
அதுபோல நண்பன் இல்லை
உண்மை ஒரு கண்ணு
உழைப்பு ஒரு கண்ணு
ஓடியாடித் தேடு
உனக்கு தாண்டா விண்ணு

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

Thanks : cinema news



1 comments:

Kannan said...

Thanks Talaivan.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top