சூப்பர் ஸ்டார் தி கிரேட்!

எஸ்.பி.முத்துராமன் அவர்கள், கனிமுத்துப்பாப்பா படத்தில் டைரக்டர் ஆனார். பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான ரஜினி என்கிற நடிகனை முழுமையாக பயன்படுத்தி வியாபார ரீதியில் ரஜினி படங்களை வெற்றியடையவைத்த இயக்குனர் என்றால் இவர்தான்.அவர் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் உங்களுடன் ...

அந்த காலத்துல சிகரட்டை தூக்கிப் போட்டு வாயில் புடிகிறது, தலைமுடியை கலைசிக்கிட்டு ஸ்டைல் காட்டறதுன்னு ரஜினி வில்லனவே பெர்பார்ம் பண்ணிக்கிட்டு இருந்தப்ப சிவகுமார் சார் தான் பெரிய ஹீரோ. அவர் நடிச்ச படமெல்லாம் அமோகமா போயிகிட்டிருந்தது. அப்போதான் எனக்கு ஒரு வினோதமான யோசனை வந்தது.

ஹீரோவா நடிக்கிற சிவகுமாரை வில்லனாவும் வில்லனா நடிச்சிக்கிட்டு இருக்கிற ரஜினியை ஹீரோவாவும் போட்ட எப்படி இருக்குனு -கிறது தான் அந்த யோசனை.

இது ஒரு அக்னி பரிட்சைதான் என்று தெரிந்தாலும் மனசுல அந்த எண்ணம் ஆணியடிச்ச மாதிரி நிலைத்து போச்சு. இந்த ஐடியாவுக்கு தோதா எழுத்தாளர் மகரிஷி எழுதிய புவனா ஒரு கேள்விக்குறி என்ற நாவல் நம்பிக்கை கொடுக்கவும், அதே தலைப்பில் அந்தக் கதையைப் படமா எடுத்தோம்.

இதே படத்துல ஒரு குருப் டான்ஸ்... இதை ஷூட் பண்ண சித்தூர் பக்கத்துல ஒரு குக்கிராமத்துக்கு போயிருந்தோம். ரஜினி நடிக்கிற சீனை எடுக்கிறப்பத்தான் பாட்டை ப்ளே-பேக் செய்ய மெசின் ரிப்பேராகின விஷயம் தெரிஞ்சது. அதை சரி பண்ணனுனா மறுபடி மெட்ராஸ் தான் போகணும். அதனால் ரஜினிகிடே 'மெட்ராஸ் போயி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த நாள் வாங்கனு சொன்னேன்.

"அதுவரைக்கும் இங்கே நீங்க என்ன செய்ய போறீங்க?"- னு திருப்பி கேட்டார். "நாங்க இங்கேயே எதையாவது சாப்பிட்டுகிட்டு எங்காவாவது படுத்துகிறோம்னு" சொன்னேன். ஆனா, ரஜினி அதுக்கு சம்மதிக்கவில்லை. எங்களோடவே அந்த கிராமத்துல தங்கினதோட, அங்கே இருந்த பெட்டி கடையில் பட்ஜியும் பிஸ்கட்டும் வாங்கிக் சாப்பிட்டுட்டு ஒரு குடிசையிலேயே படுத்துத் தூங்கிட்டாரு.

மறுநாள் எந்த பந்தாவும் பண்ணாம கிராமத்து இருந்த குளத்துல குளிச்சிட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு. இதை இப்போ நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு என்று ரஜினி பற்றி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சொன்னது.

ரஜினின்னா ஸ்பீடா ஸ்டைலா மட்டுமில்ல சூப்பரா நடிக்கவும் முடியும்னு நிருபிச்ச படம் "புவனா ஒரு கேள்விக்குறி". ஆரம்பத்துல, "என்ன சார் டயலாக் எல்லாம் ரொம்ப பெருசா இருக்குனு" ரஜினி பயந்தாரு.... ஆனா, நான் கொடுத்த என்கரேஜ்மென்ட்டுல சும்மா பிச்சி எடுத்துடாரு.

"ராஜா என்பார் மந்திரி என்பார்..." பாட்டுல ரஜினி காமித்த ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பெர்பார்மன்ஸ் அவருக்குள்ளே இருக்கிற அற்புதமான நடிகனை வெளிக்கொண்டு வந்ததைப் பார்த்துட்டு நான் மட்டுமல்ல ... தமிழ் திரையுலகமே அசந்து போச்சு!

ஆரம்பம் முதலே தனக்கென ஒரு கொள்கையுடன் + லட்சியத்துடன் வாழ்ந்த நல்ல மனிதர் நம்ப சூப்பர் ஸ்டார் இன்றைய தலைமுறைக்கு ஒரு எடுத்துகாட்டு. இப்படியும் சில நல்ல உள்ளங்கள்!

சூப்பர் ஸ்டார் தி கிரேட்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



4 comments:

நாமக்கல் சிபி said...

எப்படி இருந்த அவரு இப்ப இப்படி(அரசியல் பிரவேசம் குறித்த குழப்பங்கள்) ஆயிட்டாரே!

Kolipaiyan said...

Its in the game.

deen_uk said...

great and touchable news mr.kolipaiyan.!
rajiniyin elimaikku nalla uthaaranam..
thnx 4 the news boss..

Kolipaiyan said...

@saif

SAIF thanks for your visit and your comments. He is the ONLY super STAR in the Indian Cinima.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top