சேவற்கொடி படத்தில் எனக்கு பிடித்த வைரமுத்துவின் பாடல்வரிகள்

நேற்று முன்தினம் வெளிவந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் வரிகளை உங்களுடன் கேட்டு ரசிப்பதில் மகிழ்ச்சியே.


கவினர் வைரமுத்துவின் இளமை துள்ளும் வரிகளும் அதற்கு ஏற்ப M.L.R.கார்த்திகேயன் குரலும் இந்த பாடலை மேலும் மேருகேட்டுகிறது.

நாயகியின் அழகை + அவளது செயல்களை வர்ணித்து பாடும் ஹீரோ பாடல் போல இருக்கு இது. நம்ம வைரமுத்து சார் சும்மா ஹீரோயின் அழகாய் மிக அழகாய் பாடலில் வர்ணித்து இருக்கிறார். அதனை நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்து கேளுங்கள்.

பாடல் வரிகளை சிதைக்காமல் மிக நேத்தியாய் இசை கோர்வை. பாடலில் அங்கங்கே 'சக்போன்' இசையை தூவி மேலும் அழகு சேர்த்திருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் C.சத்யா.

சத்யாவின் இசை மிகவும் தேர்ந்த இசை அமைப்பாளர் போல இருக்கு. வாழ்த்துக்கள் !!!!


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

அந்த மெலடி பாடலின் வரிகள் இதோ...


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு!
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு!
தூரத்தில் பார்த்த காதல் வராது!
பக்கத்துல பார்த்த காமம் வராது!
மானுமில்ல மயிலுமில்ல!
கூனுமில்ல குயிலுமில்ல!
இருந்தும் மனசு விழுந்து போயிசுது!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும்!
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும்!

அழுக்கு துணிய உடுத்தி அவ தளுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடித்த மனசு அட சொக்குது சொக்குதுடா !
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதுடா!

தூங்கி எழுந்தா பிள்ளை அழகு!
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு!
அவ சொல்லுக்கடங்கா முடியும் -
சுத்தி கசக்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்!
தேத்துபல்லும் கண்டு பித்து பிடிக்கும்!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !

வெளக்கமாறு புடுச்சி அவ வீதி பேருக்கும் போது
வளைவு நெளிவு பார்த்து மனம் வலுக்க பார்க்கதடா!
குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெரிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெரிச்சு போகுதடா!

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு!
அவ பூசும் ஒலிக்கும் வீதி அழகு !
ஒரு விக்கல் எடுக்கிற தோதும்
தும்மி முடிக்கிற தோதும்
அவஸ்தையிலும் அவள் அழகு !
குத்தம்குறையிலும் மெத்த அழகு !

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



1 comments:

Ramaiah said...

Kannan, unga post ellam nalla dhaan iruku but adha publish panradhu munnadi once spell check pannikonga, sila varthaigal thavara irukura madiri theriyudhu paaathukoonga.
hope i told u this already

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top