ரஜினியுடன் இணையும் நாகராஜன்

ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல், உடை, நடை... எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ரஜினி படத்தில் தவறாமல் இடம் பெறும் காட்சி - பாம்பு. பாம்புக்கும் ரஜினிக்கும் பல தொடர்பு உண்டு... சினிமாவுல!. அதில் சில ...


1. அவர் முழுக்கதாநாயகனாக நடித்த முதல் படம் "பைரவி". அந்த படத்துல படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போது ஒருவித ஈர்ப்பு அனைத்து ரசிகனுக்கும் வரத்தான் செய்யும். என்னா ஸ்டைலு ... என்னா ஸ்டைலு ... அட அட ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.
'நண்டூறுது, நரியுருது' என்ற பாடல். தங்கையை இழந்து தவிக்கும் ஒரு அண்ணனின் சோக கானமான இது கேட்போர் நெஞ்சை இப்பொழுது கூட உருக்கிவிடும். அந்தளவிற்கு ஒரு அருமையான பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.

"டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று ரஜினி அவர்கள் அந்த படத்தின் இயக்குனரிடம் சொன்னதை எப்போதோ படித்தது நினைவுக்கு வருது. GREAT!

2. அன்று ஏற்படுத்திக்கொண்ட பாம்பு நட்பு அதன் பிறகு "தம்பிக்கு எந்த ஊரு". இந்த படத்துல நம்ப தலைவரு ஒரு "கில்மா" புக்கை கட்டிலில் அமர்ந்த படி படிக்கும் போது ஒரு நல்லபாம்பு இவர் அருகே வந்து படமெடுத்தபடி வரும் நகைச்சுவைக் காட்சியை எவராலும் மறக்க முடியாது.
'தம்பிக்கு எந்த ஊரு' படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு கூடவே இலவச இணைப்பாக நினைவுக்கு வருவது கீழ்வரும் பாடலும் தான்.

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க...

3. தலைவரின் பாம்பு சென்டிமெண்ட் செமத்தியாக ஓர்க் அவுட் படங்களின் அண்ணாமலையும் ஒன்று.
சின்னஞ்சிறுசுகள் விழுந்து விழுந்து சிரித்த இடம் அது.

பாம்பு காமெடி சிறுசுகளுக்குன்னா... கடவுளே கடவுளே காமெடி இளசுகளுக்கு. அந்த அளவு தலைவரின் நகைசுவை மிளிரும் காட்சி பாம்புடன் இணைந்து சும்மபின்னியிருப்பார்.


4. படையப்பா படத்துல இவர் தோன்றும் காட்சியே மிக அற்புதமா அமைந்திருக்கும். பாம்பு புத்துல கையை விட்டு நல்லப்பாம்புவை எடுத்து ஒரு சின்ன முத்தம் கொடுத்து விட்டுவிடுவார். அந்த காட்சியில், தலைவரின் முகம் காட்டும்போது தியேடரில் விசில் பறக்கும் பாருங்க... அட அட .... தலைவரு தலைவரு தான். கூடவே நம்ப A.R.ரகுமான் சார் இசையில் சும்மா பின்னியிருப்பார்.
இந்த படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது இரண்டு நினைவுகள். ஓன்று சிவாஜி + சௌந்தர்யா இருவரும் சினிமா உலகைவிட்டு மறைந்தது. மற்றொண்டு, நீலாம்பரி கதா பாத்திரம்.

5. சந்திரமுகியில் வழக்கமா ரஜினி படங்களில் வரும் பாம்பு காட்சிகள் இதில் இல்லை. ஆனால், பாம்புகளுடன் இவர் நடித்திருப்பார். பாம்பும், சந்திரமுகியின் படமும், வேட்டைய ராஜாவின் படமும் காண்பிக்கும் பொழுது, 'அமானுஷ்ய' உணர்வு நம்முள் ஏற்படும்.
இந்த படம் நினைவில் வரும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது ரஜினி + வடிவேலு காமெடி நம் வயிறை பதம் பார்த்ததுதான். அதுவும் வடிவேலு சொல்லும் வசனம் வெகு பிரபலம். "மாப்பு ... மாப்பு.... வட்சுடாண்டா பெரியா ஆப்பா.." ன்னு சொல்லிகேட்டே அந்த பெரிய பங்களாவில் இருந்து வெளியே வருவார். மறக்க முடியாத ஓன்று.

"என்ன கொடும சரவணன் இது... "-ன்னு நம்ப இளைய திலகம் பிரபு தலையில அடிச்சிகிற காட்சி + ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு.

அடுத்த படமான ரோபோவில் இதேபோல ஏதாவது பாம்பு காட்சியை எதிர்பாக்கலாமா...!? இதனை படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளலாமே...!

இவ்வளவு நேரம் படித்த நீங்கள் எனக்காக ஒரு ஓட்டு போடுங்களேன்... நன்றி மீண்டும் வருக.



6 comments:

தர்ஷன் said...

முத்துவில் அந்த வண்டி சேசிங் காட்சியில் சாட்டை என்று நினைத்து பாம்பை எடுப்பார்

தர்ஷன் said...

அருணாச்சலத்தில் அந்த குட்டை மனிதரை பயமுறுத்த பாம்பை எடுத்து போடுவார்

S Maharajan said...

எந்திரன் இல் பாம்பு சான்ஸ் இல்லை கோழி

Kolipaiyan said...

தர்சன் - கலக்கிடீங்க போங்க. தலைவரின் அந்த இரண்டு படங்களும் என்னக்கு மறந்தே போச்சு. தகவலுக்கு நன்றிகள்.

Kolipaiyan said...

உங்கள் வருகைக்கு மீண்டும் ஒரு நன்றி மகராஜன்.

Unknown said...

thalaivar thalaivarthan

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top