மரியான் (2013) - பாடல் விமர்சனம்

மரியான் 2013 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


படத்துல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு...?

1. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.

2. A.R.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

3. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

4. சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

5. தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் நடித்துள்ளனர்.

6. ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவர் ரஹ்மான் தான்.

7. 'பூ' படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன்.


யார் இந்த பரத்பாலா ...?

காட்சி மொழியின் வழியாக கதை சொல்வதில் வல்லவரான பரத்பாலாவின் வருகை, தமிழ்சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரஹ்மானின் வந்தே மாதரம், ஜன கன மன, உள்ளிட்ட தனித்த இசை ஆல்பங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தற்கு அப்பால் கடந்த 2004 ஆண்டு பரத்பாலா இயக்கிய ‘ஹரிஓம்’ அவரை தனித்த, தரமான சினிமாவின் காதலராக அடையாளம் காட்டியது! இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்கார தேவதைக்கும், அவளுக்கு உண்மையான இந்தியாவின் ஆன்மாவை காட்டும் ஒரு ஆட்டோ டிரைவருக்குமான காதல் உணர்வை சித்தரித்த விதம் தரமான ரசிகர்களை உருகவைத்த ஒன்று!

பரத்பாலா தனது இரண்டாவது முயற்சியாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ், ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் இயக்க இருந்த ‘19த் ஸ்டெப்’ தற்காலிகாமாக நிறுத்தி வைக்க்பட்ட நிலையில்தான் தனுஷ் நடிக்கும் மரியானைத் தொடங்கினார்.

படத்தோட கதை என்னனா ...

மன உறுதி கொண்ட ஒர்எளிய தமிழ்மீனவன், தன் காதலியைப் பிரிந்து, வெளிநாட்டு மீன்பிடிக்கப்பல் ஒன்றில் வேலைக்குச் செல்கிறான். அவனும் அவனோடு வேலைசெய்யும் சில தமிழ் இளைஞர்களும், உள்நாட்டுபோரில் ஆள்கடத்தி பணம் பறிப்பதை ஒரு நிதிஆதாராமாக செய்துவரும் தென் ஆப்ரிக்க குட்டி நாடு ஒன்றின் போராளி(?) குழுவால் கடத்தப்பட்டு பிணையக் கைதிகளாக நிறுத்து வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் மரியான் வேலைசெய்யும் ஷிப்பிங் நிறுவனம் பிணையத் தொகை எதுவும் தராமல் காலம் தாழ்த்துவதால், பிணையக் கைதிகளில் ஒவ்வொருவராக சுட்டிக்கொள்கிறார்கள். மரியானையும் சாவு நெருக்கும் நேரத்தில் ஒரு நண்பனோடு தம்பிக்கிறான். ஆனால் பின் தொடர்ந்து வரும் போராளிக்குழு இளைஞன் மரியானின் நண்பனை சுட்டுக்கொள்ள மரியான் மட்டும் தப்பிச் செல்கிறான்.

மிகப்பரந்த பாலைவனம், திசைவழி தெரியாத சூன்யம். இவற்றுக்கு மத்தியில் தனது காதலி பனிமலரின் நினைவுகள் மட்டுமே மரியானை வழிநடத்த அவன் தம்பி வந்தானா இல்லையா என்ற ‘சர்வைவல்’ கதைதான் மரியான்.
ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்று பொருளாம். சத்‌ரியனுக்கு சாவில்லை என்பது மாதி‌ரி ம‌ரியானுக்கு மரணமில்லை.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா


பாடியவர்கள் : ஜாவிட் அலி, ஹரிசரண் & நகாஷ் அசிஸ்
பாடலை எழுதியவர் : வாலி

ஜாலியான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. 'சோனாபரியா' என்ற வார்த்தை இந்த பாடலில் எத்தனை முறை வருகிறது என்று ஒரு குவிஸ் போட்டியே வைக்கலாம். எனக்குப் படித்த பாடல்.


2. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே!


பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்
பாடலை எழுதியவர் : A.R .ரஹ்மான் & கபிலன்

இது ஒரு மென்மையான காதல் பாடல். பின்னணி இசை மனதை வருடுவது போல இருக்கு. அதுவும் அந்த கடம்....சூப்பர்! கடல் திரைப்படத்தில் வந்த "மூங்கில் தோட்டம்" பாடலை சற்றே நினைவுபடுத்துகிறது.


3. எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு...


பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலை எழுதியவர் : குட்டிரேவதி & A.R.ரஹ்மான்

சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் கடல் திரைப்படத்தில் வந்த "நெஞ்சுக்குள்ள..." பாடல் தான் நினைவுக்கு வருது. இந்த பாடல் அதற்கும் சற்றே குறைவு என்று தான் சொல்லணும். பாடல் வரிகள் மிக அருமை. பெண் பாடலாசிரியர் குட்டிரேவதி-க்கு என் வாழ்த்துக்கள்!!!


4. கடல் ராசா நான் ...
கொம்பன் சுறா வேட்டையாடும் ...


பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடலை எழுதியவர் : தனுஷ்

பெப்பி சாங். யுவன் குரலில் பாடல் ரசிக்கும்படி இருக்கு. நார்மலா யுவன் பாடலில் இருக்கும் ஒரு சோகம் இதில் இல்லை. ரொம்ப ரசித்து பாடியிருக்கார்.


5. நெஞ்சே எழு
நெஞ்சே எழு...


பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : குட்டி ரேவதி

எழுச்சி பாடல். இந்த பாடலை முதலில் கேட்கும் போது செம்மொழிக்காக ரகுமான் இசை அமைத்த பாடலை நினைவுபடுத்துகிறது.


6. நேற்று அவள் இருந்தாள் ...

பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & சின்மயி
பாடலை எழுதியவர் : வாலி

ஒரு மெலடி காதல் பாடல். குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. விஜய்பிரகாஷ் நல்லா பாடியிருக்கார். எனக்குப் படித்த பாடல்.


7. I Love my Africa ...

பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : Brian Kabwe & Blaaze

தமிழுக்கு இது போன்ற இசை புதிது. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆப்பிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. மேற்கு இந்திய தீவுகளில் கிரிகெட் போட்டி நடக்கும் போது இது போன்ற இசையை கேட்டதுண்டு. அந்த பிறகு பாடலில் அத்தகைய இசையை கேட்டது இந்த பாடலில் தான்.



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் மரியான் ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top