வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு கார வகை. மாலை நேர டீ டைம் ஸ்நாக்காக கொரிக்க ஏற்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி வேளைகளில் தயாரிப்பதற்கு ஏற்ற சுண்டல் இது.

சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் வேர்க்கடலை கார சுண்டல் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

வேர்க்கடலை – 3 கப்
வெங்காயம் – பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 தேவையான அளவு

கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • கடலையை நன்றாக அலசிக் கொள்ளவும். கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரும்வரை வேக விடவும்.

  • மிருதுவாக வெந்த வேர்க்கடலையை தண்ணீர் இன்றி வடிகட்டவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியபின் அதனுடன் வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு,தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டவும். சுவையான வேர்க்கடலை கார சுண்டல் தயார்.

  • தேவைட்டால் மல்லித்தழை தூவி அலங்கரித்து கொள்ளலாம். பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாயையும் பயன்படுத்தலாம்.

  • ருசியான வேர்க்கடலை கார சுண்டல் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேங்காய்த் துருவல் கொஞ்சம் அதிகமோ...?

Kannan said...

seems....

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top