ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது ஆந்திர ஸ்பெஷல் செட்டிநாட்டுச் சமையல்.

பச்சைப் பயறு/பாசிப்பருப்பினால் தோசை செய்து அதன் மேல் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத் துண்டுகளைத் தூவி எடுப்பது பெசரட்டு ஆகும். தமிழ் நாட்டு தோசையைப் போன்றது. ஆந்திரர்களின் சிறப்பு உணவு.

சரி.. சரி இனி பெசரட்டு செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

பச்சைப் பயறு - 2 கப்
பச்சரிசி - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:-

  • பச்சைப்பயறையும் அரிசியையும் நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவையுங்கள்.

  • இரண்டையும் ஒன்றாக்கி 1 பச்சைமிளகாய், இஞ்சி, ஒரு வெங்காயம், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

  • அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.

  • இன்னொரு வெங்காயத்தையும், மீதமுள்ள பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

  • வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் மாவில் கலந்து கொள்ளுங்கள்.

  • தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி மெலிதாக பரப்பி வேகவையுங்கள்.

  • கமகமக்கும் ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

  • வதக்கிய அயிட்டங்களை மாவில் சேர்க்காமல் தோசைமேல் தூவியும் வேகவைக்கலாம். அலங்காரத்துக்கு அலங்காரமும் ஆயிற்று... கூடுதல் ருசியும் ஆயிற்று!

  • பெசரட்டுடன் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி ஆகியவை தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... இதுவரை செய்ததில்லை...

குறிப்பிற்கு நன்றி...

Unknown said...

பிரமாதம் குருநாதா

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top