கவிதை வரிகளுக்கு மெட்டமைத்த A.R.ரகுமான்

ரொம்ப நாளா இந்த பாடலை பற்றி எழுத நினைத்து ... எழுதிவிட்டேன். நம்ப வைரமுத்து சார் என்னமா 'யாக்கை திரி' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கார் இந்த படத்தில்.

'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' என்ற கவிதை தொகுப்பை படித்து ரசித்த மணிரத்தினம் சார் நம்ப ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமானிடம் தந்து, அந்த கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து மேலும் மெருகேற்றி ஒரு அற்புதமான பாடலாக வடிவமைத்ததை ஆயுத எழுத்து என்ற படத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்.

அந்த பாடல் mp3 வடிவில்



'யாக்கை' என்றால் 'உடல்' என்று அர்த்தம். உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்து சாரை என்னவென்று சொல்ல... ! ஹி இஸ் தி கிரேட்!

அந்த பாடலின் வரிகள்...
பானாஹ்...

யாக்கை திரி காதல் சுடர்- அன்பே
ஜீவன் நதி காதல் கடல்- நெஞ்சே
பிறவி பிழை காதல் திருதம்- நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம்- அன்பே

யாக்கை திரி காதல் சுடர்
பானாஹ்...

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் இறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் உறவோம் - பானாஹ்...

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
சன்மம் சூன்யம் காதல் பின்யம்
மானுடம் மாயம் காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறி பயனம் போகும்

யாக்கை திரி காதல் சுடர் - அன்பே
ஜீவன் நதி காதல் கடல் - நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் - நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் - அன்பே

யாக்கை திரி காதல் சுடர் - பானாஹ்...

(தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)...

வாக்கியங்களற்ற வார்த்தைகளால் கட்டப்பட்ட ஒரு கவிதை பாடலாகி விட்டது. பாடலின் காணொளி



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



2 comments:

Riyas said...

மிக அருமையான பாடல்.. அந்த கவிதை தொகுப்பை நானும் வாசித்திருக்கிறேன் எல்லா கவிதையும் அருமை.. நன்றி பகிர்விற்கு

Kolipaiyan said...

வருகைக்கும் கருத்துகள் சொன்னதற்கும் நன்றி நண்பரே.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top