ராத்திரி ராகம் - அலைபாயதே - வைரமுத்து

இரவு. மொட்டைமாடி. தனிமை. தொலைந்து போன நட்சத்திரங்கள். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

வானம். உடைந்த நிலா. சிறு துண்டு மேகங்கள். தென்னக்கீருகளை வம்புக்கு இழுக்கும் தென்றல். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

ஒவ்வொரு இரவிலும் ஒரு புல்லாங்குழல் காற்றில் கசிந்து கசிந்து அவள் காதில் விழுகிறது. கண்ணுக்கு தெரியாத அவள் புண்ணுக்கு அது களிம்பு தடவுகிறது. சொல்ல தெரியாத சோகத்தை அது அள்ளிக்கொண்டு போகிறது.

அந்த புல்லங்குழல் கேட்டால், இமை பறவை அடங்கிவிட, மனப்பறவை துடிகிறதே? ஏன்?சொல்லாமல் வரும் விருந்தாளியை போல அவள் கண்ணிலிருந்து ஒரு துளி, அவள் கன்னத்தில் குதிகிறதே? ஏன்?

சோகங்கள் முழுக்க இறக்கிவிடும் அளவுக்கு அத்தனை வார்த்தைகளும் அகலமில்லை. அர்த்தகளின் வரையறைக்கு உட்பட்டது வார்த்தை. அர்த்தங்களின் வரையறைக்கு உட்பாடாததே வாழ்க்கை. எனவே தான் வரையறுக்கப்பட்ட வார்த்தைககளைகொண்டு வரையறுக்க படாத வாழ்க்கையை விளக்குவது சாத்தியமில்லை. இதோ, இந்த கவிதையில் வரும் இவளும் வார்த்தைகளில் கைவிடப்பட்டவள் அல்லது வார்த்தைகளால் கைவிடப்பட்டவள்.

கவிப்பேரரசு வைரமுத்து, தன் பழுத்த வார்த்தைகளில் ஒரு பெண்ணின் ஆத்மா பேசுகிறது. உயிரை தடவும் இந்த குரலில் ஒரு பெண்ணின் இதயம் துடிக்கிறது. புல்லாங்குழல்-க்கும் அவளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்புல்லாங்குழல் பல கண்களால் அழுகிறது. இவள் இரு கண்களால் அழுகிறாள்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

கேட்டு கேட்டு கலங்குகிறேன் - நான்
கேட்பதை அவனோ அறியவில்லை!
காட்டு மூக்கிளின் காதுக்குள்ளே - அவன்
ஊதும் ரகசியம் ப்புரியவில்லை!

இதயம் கணக்கும் இரவுகளில் - அந்த
இங்கீத ராகம் டென்வார்க்கும்!
புதிய ராகத்தில் புல்லெடுத்து - அந்த
புல்லான்குலலே பூபூக்கும்!

கானம் கேட்கும் பொழுதுகளில் - என்
கண்கள் அழுவதை அறியவில்லை!
ஏனோ கண்ணீர் கசிகிறது - இது
எந்த ஜாதியோ தெரியவில்லை!

உறக்கம் இல்ல முன்னிரவில் - என்
உள் மதில் ஒரு மாறுதலாய்!
இறக்கம் இல்லா இரவுகளில் - இது
எவனோ அனுப்பும் ஆறுதலாய் !

ஏகாந்தத்தின் இனிமைலே - என்
இமையே மெல்ல இறங்கிவிடு!
மோக குழலில் ஊறிவரும் - இசை
முடியும் போது உறங்கிவிடும்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

'அலைபாயதே' என்ற படத்தில் இந்த கவிதையை பாடலாக பதிவு செய்திருப்பார் டைரக்டர் மணிரத்தினம். இதற்கு மிகசிறப்பான முறையில் இசை சேர்த்து நம்மை ரசிக்க வைத்திருப்பார் A.R.ரகுமான். நேரம் கிடைத்தால் இந்த கவிதைகளோடு அந்த பாடலயும் கேட்டு மகிழுங்கள் என்னைபோலவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



2 comments:

Anonymous said...

Dear

This song is my favourite song and like this line very much and i used to tell everybody when they are asking me that Why are you Anand ( me ) singing everytime?

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!
-----------------------------------

Anand
Bamako,Mali
-------------------

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா

இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே

அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

Unknown said...

mounam pesugiradu

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top