காதலித்து பார் - வைரமுத்து கவிதை

எனக்கு பிடித்த கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை நினைக்கிறேன்.

இந்த கவிதையை பிரசாந்த் + சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் கவினரே இந்த கவிதையை சொல்வது போல அமைத்தார் பட இயக்குனர்.

காதலித்து பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்

தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்

பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?

அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்

சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்

சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



கொண்டைக்கடலை சுண்டல்

நமது கோவில்களில் அல்லது வீடுகளில் பூஜை நாட்களில் செய்யப்படும் ஒரு 'சாட்' வகை இந்த 'கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதம்'. அதனை மிக அதிக சுவையுடன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


தேவையானப் பொருள்கள்:
வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 8
காய்ந்த மிளகாய் - 1

இஞ்சி – சிறுதுண்டு
தேங்காய் – 1

கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

  • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.

  • குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.

  • கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

  • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.

  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.
நல்ல கார சாரமா உப்பு மிளகாய் சேர்த்து சாப்பிடு பாருங்க ...அட அட.. என்ன ருசி !

குறிப்பு :-
இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஆஹா வட போச்சே ..!!

மரத்தில் வடையுடன் வந்து உட்கார்ந்தது காக்கை. சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டது. தூரத்தில் நரி வருவது தெரிந்தது.

"வா...வா... நரியாரே.. உன்னையும், உன் நரித்தனத்தையும் நான் அறிவேன். நான் புத்திசாலி. எங்களில் சிலபேர் உன்னிடம் ஏமாந்ததுபோல் நான் ஏமாற மாட்டேன்'' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.


நரி மரத்தின் கீழே வந்து நின்று...

"காக்கை நண்பரே, உங்கள் பாடலைக் கேட்டு ரொம்ப நாளாகிறது... பாடுகிறீர்களா'' என்றது. காக்கையும் மனதுக்குள் `இந்த முறை என்னை ஏமாற்ற முடியாது' என்று எண்ணிக் கொண்டு வடையை தன் காலின் கீழ் வைத்துப் பிடித்துக்கொண்டு `கா... கா...' என்று பாடியது.

நரியும், "ஆகா... நீயல்லவோ பாடகன்! இன்னும் கொஞ்சம் பாடு" என்று உசுப்பேற்றியது. காகமும் பாடியது. கொஞ்ச நேரமானதும் நரி, "உன் பக்கத்து மரத்துக்காகம்... அதான் உன்னுடன் அடிக்கடி சண்டை போடுவானே! அவன் பாடிக்கொண்டே டான்சும் ஆடுகிறான். உனக்கு டான்ஸ் தெரியுமோ? தெரியாதோ? இருந்தாலும் அவன் ஆடும் டான்ஸ் ரசிக்கும்படியாக இருக்கிறது" என்றது.

அதைக் கேட்டதும் இந்தக் காகத்துக்கு கோபம் தலைக்கேறியது. "அவனைப் பற்றி என்னிடம் பேசாதே! எனக்கு தெரியாத டான்சா? உனக்கு என் டான்சை பற்றித் தெரியாது. நான் நடனமாடுவதைப் பார்!" என்று நடனம் ஆடத் தன் காலைத் தூக்கியது.

அவ்வளவுதான்... காலின் கீழ் இருந்த வடை தவறி கீழே விழுந்தது. நரியும் பாய்ந்து வடையை கவ்வித் தின்றது. "ஆ... வடையும் பிரமாதம்! உன் டான்சும் பிரமாதம்!" என்று சொல்லிக் கொண்டே ஓடி மறைந்தது.

தன் நிலைக்கு வந்த காகத்துக்குத் தான் ஏமாந்தது தெரிய அதிக நேரம் பிடிக்கவில்லை. தான் என்ற கர்வமும், அடுத்தவரிடம் சண்டை போடும் குணமும் நம்மை மேலும் மேலும் அவதிக்கு உள்ளாக்கும், போலிப் பாராட்டுக்கு மதிப்புக் கொடுத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்று புரிந்து கொண்டது காகம்.

வஞ்சனையே உருவான நரி போன்றவர்கள் நம்மை ஏமாற்ற எத்தனையோ வழிகளை உருவாக்கிக் கொள்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி: :மாலை மலர்



Related Posts with Thumbnails
 
back to top