ஒரு தாயின் முதல் கவிதை - 'வேதனை'

இன்று காலை எனக்கு ஒரு கடிதம் ஒற்றை கொடுத்தாள், என் தோழி ஒருவள். அதில், 'வேதனை' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதபட்டிருந்தது. அது அவளது தாயார், வீட்டு வேலைகள் முடித்த பின்னை கிடைக்கும் சில நேரங்களில் மனதிற்கு தோன்றும் சில எண்ணக்களை கவிதையாக எழுதும் வழக்கம் உள்ளதாகவும், எழுதப்படும் கவிதைகளை முறைப்படி சேகரிக்கவில்லை எனவும், கடந்த வாரம் எழுதிய கவிதை ஒற்றை எடுத்துவந்துவிட்டதாக சொன்னாள்.

மேலும், படித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ப்ளொக்கில்(blog) பதிவிடுங்கள் என்று கேட்டுகொள்ள - நானும் ஒரு தாயின் கவிதை, சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை பட்டு இங்கே பிரசவிக்கிறேன்.

நீங்களும் படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் இங்கே தெரிவிக்கவும். அவைகள் இந்த கவிதை எழுதிய தாயிடம் சென்று சேரும் இந்த பதிவின் வழியாக...

வேதனை

நிழல்படமாய் என் வீட்டு சுவற்றில்
நினைத்து பார்க்க முடியவில்லை - உன் பிரிவை
நிற்கதியானேன் ! நினைவிழந்து போனேன்
நீயே என் நிதி! இனி யார் என் கத்தி ?...

கணவன் அமைவது கடவுள்
கொடுத்த வரமெனில் - அன்பே
நீ எனக்கு வரம்
கொடுத்தவனுக்கு இரக்கமே இல்லையா ?
என்னில் உன்னை எடுத்து சென்றான்...

வாழ்ந்தது சில மாதங்களே
வருடமும் ஆகவில்லை
வாழ்விழந்து போனதேன்!
வஞ்சி நான் செய்த வினைதானென்ன?...

என்னுயிரை எடுத்து சென்றாய்
நடை பிணமானேன்...
பின்னும் வாழ்கிறேன் - ஏன்
உன்னுயிர் என் கருவுக்குள் ...

இனியவனே அன்று உன் அணைப்பில்
என்னை மறந்தேன் - மன்னவா!
மீண்டும் வா என் மகனாய்
என் அணைப்பில் உன்னை இறுக்கிக் கொள்ள...
நன்றி : கடிதம் கொண்டு வந்து சேர்த்த சிவதர்ஷினி அவர்களுக்கு என் நன்றிகள். உங்கள் அன்னையின் கவிதை பயணம் தொடர என் வாழ்த்துகள்!

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி! மீண்டும் வருக!!!



10 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

correct the spellings before publishing.

Kolipaiyan said...

Corrected. Thanks for you error notification 'நாளும் நலமே விளையட்டும்'. Keep it up!

Anonymous said...

very nice kavithai.............

Kannan said...

Thanks brother/sister. who is this anonymous..?

Sankaradoss S said...

hi kanna.. its excellent kavidhai.. but please double check the spelling before you publish in your blog.. its heart touching kavidhai..

Kolipaiyan said...

Thanks for your comments Mr.Sankaradoss.

Nivas Dharuman said...

That was indeed a distressing poem.

Karthik said...

Maaple

Nice da

அடலேறு said...

படித்தவுடன் மனதை ஏதோ செய்கின்றது.
நன்றீங்க கோழிபையன்,சிவதர்ஷினி

Anonymous said...

very touching kavithai. geetha.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top