வாழ்த்துக்கள் கமல் சார்!!!

இதே நாள் ஆகத்து 12, 1959, AVM என்னும் மிக பெரிய தமிழ் திரைப்பட தயாரிப்பு ஸ்தாபனத்தில் இருந்து ஐந்து வயது குழந்தை ontru தமிழ் திரையுலகில் தடம்பதித்த நாள். காதல் மன்னன் ஜெமினியும் சாவித்திரியும் இணைத்து நடித்த படத்தை பிரபல டைரக்டர் பீம்சிங் இயக்கி கொண்டிருக்க, அந்த படத்தில், ஐந்து வயது பிஞ்சு குழந்தை சும்மா நடிப்பில் மிரட்ட, அன்றைய பல பிரபலக்கள் சற்றே பிரண்டு தான் போயிருந்தார்கள். இவர் நடிப்புக்கு கிடைத்த முதல் பரிசு அந்த வருட "நேஷனல் அவார்ட்." இன்றும் நீங்கள் அந்த பாடத்தை பார்த்தால் அந்த குழந்தையின் நடிப்பில் கரைந்தே போவீர்கள். அட படத்தோட பெற சொல்ல மறந்துடேன், "களத்தூர் கண்ணம்மா". அந்த குழந்தை வேற யார் நம்ப உலக நாயகன் "கமலஹாசன்" தான்.

"ருசி கண்ட பூனை சும்மா இருகிறது" என்பார்கள். அதுபோல, 5 வயதில் வாங்கிய பரிசை மீண்டும் இவர், மூன்றாம் பிறை (1982), நாயகன் (1987), இந்தியன் (1996) படத்தில் மிக சிறப்பாக நடித்ததற்கு வாங்கினார். இந்த பட்டியல் இன்னும் நீளும்

இன்றோடு, கமல் தமிழ் திரை உலகிற்கு வந்து 50 வருடங்கள் ஓடிவிடாது. அவரது ரசிகர்கள் அவர் நடித்த "என்னை போல் ஒருவன்" படத்தினை வெளியிடவேண்டி கேட்டுகொண்டார்கள். சில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அவரது ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் நானும் அவரை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியே. நீங்களும் என்னுடம் சேர்ந்து உங்கள் வாழ்த்துக்களை சொல்லாமே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



1 comments:

Kannan said...

Congrats Mr.Kamal

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top