மெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்!!!

பசங்க, வம்சம் என இரண்டே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க, நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர் பாண்டிராஜ். இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.


ஆம்… மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்… என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.

படத்தின் நாயகனாக 'விஜய் டி.வி.' புகழ் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கும் ஜோடியாக 'களவாணி' புகழ் ஓவியா நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கிரிஷ்.ஜி இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

படத்தின் கதை என்ன...?

மெரினா கடற்கரையில், குழந்தைகளின் உலகம், காதலர்களின் உலகம், வயதானவர்களின் உலகம், இவற்றை யதார்த்தமாக, காமெடியாக, உணர்வுப்பூர்வமாகப் பேசும் படம் இது.

ப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் காலையிலிருந்து இரவு வரை சென்னை எப்படியிருக்கும் என்று சொல்லும் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 'வணக்கம், வாழவைக்கும் சென்னை...' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

முதல் முறை கேட்டபோதே மிகவும் பிடித்து விட்டது....வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதோ அந்த பாடலின் வீடியோ ...


பாடல் வரிகள் :-
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

வாங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும்
பர பர பரவென பரபரக்கும்
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் Cøncrete காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் Røad இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்
பச்சை மஞ்ச சிவபுலதான் Šignal இருக்கும்
அது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே..

சிங்கார சென்னை என்று சொல்லுவோம்
ஊர் எங்கும் Pøster ஒட்டி கொள்ளுவோம்
சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே
என்றாலும் விட்டு போக நினைகல..

இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா
இது இளைப்பாற இடம் தரும் தின்னையடா
நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா
இந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா
பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்
அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்

எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா
நம்ம ஒட்டு மொத்த தாயாக Chennai இருப்பா
இப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா
அவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

நொறுக்க்ஸ்:-

சில காட்சிகளை மட்டும் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி மெரினாவில் படமெடுத்த பாண்டிராஜ், மற்றி காட்சிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையை மெரினாவைப்போல் மாற்றி படம்பிடிக்கவுள்ளார்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ்.


அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top