ஆஹா வட போச்சே ..!!

மரத்தில் வடையுடன் வந்து உட்கார்ந்தது காக்கை. சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டது. தூரத்தில் நரி வருவது தெரிந்தது.

"வா...வா... நரியாரே.. உன்னையும், உன் நரித்தனத்தையும் நான் அறிவேன். நான் புத்திசாலி. எங்களில் சிலபேர் உன்னிடம் ஏமாந்ததுபோல் நான் ஏமாற மாட்டேன்'' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.


நரி மரத்தின் கீழே வந்து நின்று...

"காக்கை நண்பரே, உங்கள் பாடலைக் கேட்டு ரொம்ப நாளாகிறது... பாடுகிறீர்களா'' என்றது. காக்கையும் மனதுக்குள் `இந்த முறை என்னை ஏமாற்ற முடியாது' என்று எண்ணிக் கொண்டு வடையை தன் காலின் கீழ் வைத்துப் பிடித்துக்கொண்டு `கா... கா...' என்று பாடியது.

நரியும், "ஆகா... நீயல்லவோ பாடகன்! இன்னும் கொஞ்சம் பாடு" என்று உசுப்பேற்றியது. காகமும் பாடியது. கொஞ்ச நேரமானதும் நரி, "உன் பக்கத்து மரத்துக்காகம்... அதான் உன்னுடன் அடிக்கடி சண்டை போடுவானே! அவன் பாடிக்கொண்டே டான்சும் ஆடுகிறான். உனக்கு டான்ஸ் தெரியுமோ? தெரியாதோ? இருந்தாலும் அவன் ஆடும் டான்ஸ் ரசிக்கும்படியாக இருக்கிறது" என்றது.

அதைக் கேட்டதும் இந்தக் காகத்துக்கு கோபம் தலைக்கேறியது. "அவனைப் பற்றி என்னிடம் பேசாதே! எனக்கு தெரியாத டான்சா? உனக்கு என் டான்சை பற்றித் தெரியாது. நான் நடனமாடுவதைப் பார்!" என்று நடனம் ஆடத் தன் காலைத் தூக்கியது.

அவ்வளவுதான்... காலின் கீழ் இருந்த வடை தவறி கீழே விழுந்தது. நரியும் பாய்ந்து வடையை கவ்வித் தின்றது. "ஆ... வடையும் பிரமாதம்! உன் டான்சும் பிரமாதம்!" என்று சொல்லிக் கொண்டே ஓடி மறைந்தது.

தன் நிலைக்கு வந்த காகத்துக்குத் தான் ஏமாந்தது தெரிய அதிக நேரம் பிடிக்கவில்லை. தான் என்ற கர்வமும், அடுத்தவரிடம் சண்டை போடும் குணமும் நம்மை மேலும் மேலும் அவதிக்கு உள்ளாக்கும், போலிப் பாராட்டுக்கு மதிப்புக் கொடுத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்று புரிந்து கொண்டது காகம்.

வஞ்சனையே உருவான நரி போன்றவர்கள் நம்மை ஏமாற்ற எத்தனையோ வழிகளை உருவாக்கிக் கொள்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி: :மாலை மலர்



5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா வடை கதையில, வடையும் எனக்கா அட்ரா அட்ரா அட்ரா.....

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி மனோ அண்ணா. அந்த வடை உங்களுக்கே !

Unknown said...

moral of the story is very nice.... and I remember one thing ... Because of short tempor we will lose our self control....

Kolipaiyan said...

Yes. you are correct the moral of the story is highlighted here. Thanks for your visit and your comment AKI.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top