Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Showing posts with label பாடல் வரிகள். Show all posts

வணக்கம் சென்னை (2013) - பாடல் விமர்சனம்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் "எங்கடி பொறந்த..." என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.

1. ஹே... நேரம் மாறலாம் காலம் மாறலாம்
பாடியவர்கள் : பாபோன் & மரியா ரோ வின்சென்ட்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு ஸ்லொ மெலடி பாடல். கிடார், சாக்ஸ், வயலின் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாடல். பாடல் ஈசியா ஹம் பண்ணும்படி இருக்கு. பாடல் வரிகள் ஆங்காங்கே தூவி நிரப்பியிருக்கிறார் நா.முத்துக்குமார்.


2. ஒசாகா ஒசாகா
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு காதல் பீட் பாடல். பாடல் அமைப்பு A.R.ரகுமான் பாடலை நினைவுபடுத்துகிறது. தேங்கா நாராக நெஞ்ச உரிசாலே... உள்ளா என்னான்னு காட்டிப்புட்டா .. நல்ல கவிதை வரிகள். என் பேவரிட் பாடல்.


3. ஓ பெண்ணே பெண்ணே
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு மென்மையான மெலடி பாடல். பாடல் முழுக்க பியானோ இசை...


4. எங்கடி பொறந்த
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடலை எழுதியவர் : விக்னேஷ் சிவன்.

இது ஒரு சிம்பிள் பீட் பாடல். ரஜினி பாஷா ஸ்பீச் மியூசிக், எங்கடி... எங்கடி.... எல்லாம் மிக மிக கலக்கல். மீண்டும் ஒரு பேவரிட் பாடல் இந்த ஆல்பத்தில்...


5. ஐலசா ஐலசா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு பியுட்டிபுள் மெலடி பாடல். இந்த பாடலில் பியானோ, நாதஸ்வரம் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பாடல். சுசித்ரா வாய்ஸ் மிக அழகாக பொருந்தி இருக்கு.


6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
பாடலை எழுதியவர் : அர்ஜுன்
இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். அனிருத்தின் டிரேட்மார்க் பாடல். ஓக்கே ரகம்.


7. சென்னை சிட்டி
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
பாடலை எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழன் ஆதி & ஹர்த் கவுர்

இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். நான் ஒருதடவ .சொன்ன .... இந்த வரிகளை பயன்படுத்தியவிதம் மிக மிக அருமை. இது தாண்டா சென்னை கெத்து ... வரிகள் அருமை!! கோழி சவுண்ட் அங்காங்கே அருமை!!!

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் வணக்கம் சென்னை ரசிக்கும்படி இருக்கு!


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



மரியான் (2013) - பாடல் விமர்சனம்

மரியான் 2013 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


படத்துல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு...?

1. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.

2. A.R.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

3. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

4. சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

5. தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் நடித்துள்ளனர்.

6. ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவர் ரஹ்மான் தான்.

7. 'பூ' படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன்.


யார் இந்த பரத்பாலா ...?

காட்சி மொழியின் வழியாக கதை சொல்வதில் வல்லவரான பரத்பாலாவின் வருகை, தமிழ்சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரஹ்மானின் வந்தே மாதரம், ஜன கன மன, உள்ளிட்ட தனித்த இசை ஆல்பங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தற்கு அப்பால் கடந்த 2004 ஆண்டு பரத்பாலா இயக்கிய ‘ஹரிஓம்’ அவரை தனித்த, தரமான சினிமாவின் காதலராக அடையாளம் காட்டியது! இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்கார தேவதைக்கும், அவளுக்கு உண்மையான இந்தியாவின் ஆன்மாவை காட்டும் ஒரு ஆட்டோ டிரைவருக்குமான காதல் உணர்வை சித்தரித்த விதம் தரமான ரசிகர்களை உருகவைத்த ஒன்று!

பரத்பாலா தனது இரண்டாவது முயற்சியாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ், ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் இயக்க இருந்த ‘19த் ஸ்டெப்’ தற்காலிகாமாக நிறுத்தி வைக்க்பட்ட நிலையில்தான் தனுஷ் நடிக்கும் மரியானைத் தொடங்கினார்.

படத்தோட கதை என்னனா ...

மன உறுதி கொண்ட ஒர்எளிய தமிழ்மீனவன், தன் காதலியைப் பிரிந்து, வெளிநாட்டு மீன்பிடிக்கப்பல் ஒன்றில் வேலைக்குச் செல்கிறான். அவனும் அவனோடு வேலைசெய்யும் சில தமிழ் இளைஞர்களும், உள்நாட்டுபோரில் ஆள்கடத்தி பணம் பறிப்பதை ஒரு நிதிஆதாராமாக செய்துவரும் தென் ஆப்ரிக்க குட்டி நாடு ஒன்றின் போராளி(?) குழுவால் கடத்தப்பட்டு பிணையக் கைதிகளாக நிறுத்து வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் மரியான் வேலைசெய்யும் ஷிப்பிங் நிறுவனம் பிணையத் தொகை எதுவும் தராமல் காலம் தாழ்த்துவதால், பிணையக் கைதிகளில் ஒவ்வொருவராக சுட்டிக்கொள்கிறார்கள். மரியானையும் சாவு நெருக்கும் நேரத்தில் ஒரு நண்பனோடு தம்பிக்கிறான். ஆனால் பின் தொடர்ந்து வரும் போராளிக்குழு இளைஞன் மரியானின் நண்பனை சுட்டுக்கொள்ள மரியான் மட்டும் தப்பிச் செல்கிறான்.

மிகப்பரந்த பாலைவனம், திசைவழி தெரியாத சூன்யம். இவற்றுக்கு மத்தியில் தனது காதலி பனிமலரின் நினைவுகள் மட்டுமே மரியானை வழிநடத்த அவன் தம்பி வந்தானா இல்லையா என்ற ‘சர்வைவல்’ கதைதான் மரியான்.
ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்று பொருளாம். சத்‌ரியனுக்கு சாவில்லை என்பது மாதி‌ரி ம‌ரியானுக்கு மரணமில்லை.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா


பாடியவர்கள் : ஜாவிட் அலி, ஹரிசரண் & நகாஷ் அசிஸ்
பாடலை எழுதியவர் : வாலி

ஜாலியான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. 'சோனாபரியா' என்ற வார்த்தை இந்த பாடலில் எத்தனை முறை வருகிறது என்று ஒரு குவிஸ் போட்டியே வைக்கலாம். எனக்குப் படித்த பாடல்.


2. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே!


பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்
பாடலை எழுதியவர் : A.R .ரஹ்மான் & கபிலன்

இது ஒரு மென்மையான காதல் பாடல். பின்னணி இசை மனதை வருடுவது போல இருக்கு. அதுவும் அந்த கடம்....சூப்பர்! கடல் திரைப்படத்தில் வந்த "மூங்கில் தோட்டம்" பாடலை சற்றே நினைவுபடுத்துகிறது.


3. எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு...


பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலை எழுதியவர் : குட்டிரேவதி & A.R.ரஹ்மான்

சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் கடல் திரைப்படத்தில் வந்த "நெஞ்சுக்குள்ள..." பாடல் தான் நினைவுக்கு வருது. இந்த பாடல் அதற்கும் சற்றே குறைவு என்று தான் சொல்லணும். பாடல் வரிகள் மிக அருமை. பெண் பாடலாசிரியர் குட்டிரேவதி-க்கு என் வாழ்த்துக்கள்!!!


4. கடல் ராசா நான் ...
கொம்பன் சுறா வேட்டையாடும் ...


பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடலை எழுதியவர் : தனுஷ்

பெப்பி சாங். யுவன் குரலில் பாடல் ரசிக்கும்படி இருக்கு. நார்மலா யுவன் பாடலில் இருக்கும் ஒரு சோகம் இதில் இல்லை. ரொம்ப ரசித்து பாடியிருக்கார்.


5. நெஞ்சே எழு
நெஞ்சே எழு...


பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : குட்டி ரேவதி

எழுச்சி பாடல். இந்த பாடலை முதலில் கேட்கும் போது செம்மொழிக்காக ரகுமான் இசை அமைத்த பாடலை நினைவுபடுத்துகிறது.


6. நேற்று அவள் இருந்தாள் ...

பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & சின்மயி
பாடலை எழுதியவர் : வாலி

ஒரு மெலடி காதல் பாடல். குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. விஜய்பிரகாஷ் நல்லா பாடியிருக்கார். எனக்குப் படித்த பாடல்.


7. I Love my Africa ...

பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : Brian Kabwe & Blaaze

தமிழுக்கு இது போன்ற இசை புதிது. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆப்பிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. மேற்கு இந்திய தீவுகளில் கிரிகெட் போட்டி நடக்கும் போது இது போன்ற இசையை கேட்டதுண்டு. அந்த பிறகு பாடலில் அத்தகைய இசையை கேட்டது இந்த பாடலில் தான்.



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் மரியான் ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சொன்னா புரியாது (2013) - விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் புதிய படம் "சொன்னா புரியாது". இவர் தமிழ் பட(ம்)த்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தில் 'தமிழ்ப்படம்' சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப்-வும் நடிக்கின்றனர். மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

படத்தோட கதை என்னனா ...

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம். திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.

ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது. அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. கேளு மகனே கேளு
ஒரு கொடும கதைய கேளு - தினம்


பாடியவர்கள் : ஜெகதீஷ்
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

மெலடிக்கு மேலே குத்து பாட்டுக்கு கீழ் வரும் பாடல்.

கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலையை பாடலில் சொன்ன விதம் அற்புதம். பாடலின் இடை இடையே வரும் ரஜினியின் வரிகள் அருமை. பாடல் வரிகள் தெளிவாக கேட்பது கூடுதல் அழகு.
பாடல் ஹை லைட் வரிகள் :

அந்த தண்ணி அடிச்சவன் இந்த தண்ணி அடிச்சான்
அந்த மூனு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
அவன் : காதல் முதல் கண்ணீர் வரை - ஒரு சிறுகதை இந்த பாடல்!


2. காலியான சாலையில் நீயும் நானும்
போகிறோம் காதல் கார்காலம்!


பாடியவர்கள் : SP சரண் & சின்மயி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

இது ஒரு மெலடி ரொமான்ஸ் பாடல். காதுக்கு இனிமையான கவிதை தொகுப்போடு வரும் ஒரு பாடல். காதலன் காதலியின் மனத்திரையை பிரதிபலிக்கும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

மனதின் வாசல்களை
அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்!
இரண்டு பேர். இரண்டு காதல். ஒரே பயணம் இந்த பாடல்!


3. தேவதையோ ராட்சசியா
தேர்ந்தேத்த நிலவோ...


பாடியவர்கள் : ரஞ்சித்
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

பெப்பி சாங். கவுண்டமணியின் டியாலக்கோடு தொடக்கும் பாடல். இவரின் பிரபலமான டயலாக் ஆங்கங்கே பரப்பி, கேற்பது மிக அழகா இருக்கு. மேலும் பாரதிராஜா, கார்த்திக்கின் ஜித்தாத்தா ஜித்தா இசையும் அருமை. ஹீரோ பின்னணி பேசும் பல மொழி தெரிந்தவன் என்பதை சொல்லும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

கடைசிப்பக்கம் கிழிந்தேடுத்த கிரைம் நாவல் இவளோ
ஒரு நொடியில் கண் பறிக்கும் மின்னல் அதன் துகளோ
ஆணின் முதல் பார்வை - காதல் மொழி - சொல்லும் பாடல்!


4. உன் தொழில் சாய்த்து
உன்னோடு பேச ஓடோடி வந்தேன்..


பாடியவர்கள் : MK பாலாஜி
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

சோக பாடல். வயலின் & பியானோ கலந்த கலவை இனிமை.

காதல் - சோகம் - ஆணின் மனநிலை - சொல்லும் பாடல்!


5. ஐயையோ போச்சே...

பாடியவர்கள் : MK பாலாஜி & யதீஷ் மகேஷ்
பாடலை எழுதியவர் : யதீஷ் மகேஷ்

மக்களே காதலில் தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பாடலை பாடிகொண்டிருப்பவர் பா...ப்பா..... என தொடக்கும் பாடல்.

சிவாவின் டயலாக் அங்கங்கே இருப்பது ரசிக்ககூடியது. இசை + பாடல் இரண்டும் ஒரே இரைசல்.



கோழி இடும் முட்டைகள் :
மொத்தத்தில் சொன்னா புரியாது ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!




மெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்!!!

பசங்க, வம்சம் என இரண்டே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க, நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர் பாண்டிராஜ். இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.


ஆம்… மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்… என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.

படத்தின் நாயகனாக 'விஜய் டி.வி.' புகழ் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கும் ஜோடியாக 'களவாணி' புகழ் ஓவியா நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கிரிஷ்.ஜி இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

படத்தின் கதை என்ன...?

மெரினா கடற்கரையில், குழந்தைகளின் உலகம், காதலர்களின் உலகம், வயதானவர்களின் உலகம், இவற்றை யதார்த்தமாக, காமெடியாக, உணர்வுப்பூர்வமாகப் பேசும் படம் இது.

ப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் காலையிலிருந்து இரவு வரை சென்னை எப்படியிருக்கும் என்று சொல்லும் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 'வணக்கம், வாழவைக்கும் சென்னை...' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

முதல் முறை கேட்டபோதே மிகவும் பிடித்து விட்டது....வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதோ அந்த பாடலின் வீடியோ ...


பாடல் வரிகள் :-
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

வாங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும்
பர பர பரவென பரபரக்கும்
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் Cøncrete காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் Røad இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்
பச்சை மஞ்ச சிவபுலதான் Šignal இருக்கும்
அது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே..

சிங்கார சென்னை என்று சொல்லுவோம்
ஊர் எங்கும் Pøster ஒட்டி கொள்ளுவோம்
சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே
என்றாலும் விட்டு போக நினைகல..

இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா
இது இளைப்பாற இடம் தரும் தின்னையடா
நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா
இந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா
பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்
அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்

எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா
நம்ம ஒட்டு மொத்த தாயாக Chennai இருப்பா
இப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா
அவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

நொறுக்க்ஸ்:-

சில காட்சிகளை மட்டும் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி மெரினாவில் படமெடுத்த பாண்டிராஜ், மற்றி காட்சிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையை மெரினாவைப்போல் மாற்றி படம்பிடிக்கவுள்ளார்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ்.


அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்!!!

‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி.


கோலிவூடில் இப்பொழுதெல்லாம் புதிய முறையில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அதாவது முதலில் படத்தில் உள்ள ஒரு பாட்டை வெளியிட்டு புகழ் கொடி நாட்டப்படுகிறது. அதன்பின்னர் முழுப்பாடல்கள் வெளியீடும் இடம் பெறுகின்றன.

இந்த வரிசையில், கொல வெறி...." பாடல் வெளியிடப்பட்டு மிகப் பிரபலாமாகியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசைஅமைப்பில் இன்னுமொரு பாடல் வெளியிடப்படுகிறது.

நா.முத்துக்குமார் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கமர்சியல் பாடலுக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் ஒரு பாடல்..... பாடல் வரிகளை சிதைக்காத இசை கோர்வை மிக அருமை. பாடலின் இடை இடையே வரும் அந்த மிர்தங்கம் + கிளாசிக் டச் ..... அட அட.... மிக அருமை!!!

யுவன் ஷங்கர் ராஜா & சூப்பர் சிங்கர் 'ரேணு' இவர்களின் இனிமையான குரல்களில் பாடல் உருவான விதம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் என்பனவும் பாடலின் வீடியோ இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.



பாடலின் வரிகள் உங்களுக்காக....
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி...
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா...

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்


ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..


ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போ போ போடா..
வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



'கொலைவெறி' பாடல் புதிய சாதனை!

எங்கு பார்த்தாலும் கொலைவெறியாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவிப் போய்க் கிடக்கிறது.

தங்கிலிஷ் என்று சொல்லப்படுகின்ற தமிழ் கலந்த ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கூகுளே சர்ச்-இல் அதிகம் தேடப்பட்ட வீடியோ/பாடல் என்ற பெருமையை அனிருத் ரவிசந்தர் இசையில் தேசிய விருது பற்ற நடிகர் தனுஷ் பாடிய 'why this கொலைவெறி டி' பாடல் தட்டிசென்றுள்ளது. இது அவரது மனைவியும் சூப்பர் ஸ்டார்ட் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹீரோயினாக நடித்திருப்பது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. தனுஷ் மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.


அந்த பாடலை கேட்டு மகிழ ....

Why This Kolaveri Di - Dhanush


குவியும் விருதுகளும் சிறப்புகளும்


YouTube-இல் அதிக பேர் தேடிய பாடலுக்கான முதல் பரிசான 'தங்க மெடலை' தட்டிசென்றுள்ளது இந்த 'கொலைவெறி' பாடல்.



இந்த பாடல் புகழ் பெற என்ன காரணம்...?


  • சோனி நிறுவனத்தில் அதிகபடியான தொழில்முறை மார்க்கெட்டிங் உத்தியுடன் வெளிவந்த படப்பாடல். உலகஅளவில் வாசகர்கள் அதிகம் வந்து செல்லும் குறிப்பாக Facebook, Twitter போன்ற வலைதலகளில் இந்த படப்பாடலை ஒளிபரப்பியது.

  • அதிகாரப் பூர்வ பாடல் அறிவிப்பு தினத்தில் அதிகபேர் தேடிய பாடல் இது.

  • ஒரே வாரத்தில், 6 கோடி பேர் YouTube-இல் தேடிய வீடியோ பாடல் இது.

  • ஒரே வாரத்தில், Facebook-இல் அதிக பேர் பங்கிட்டுக்கொண்ட (10 millian shared) தகவல் இது தான்.

  • நேசனல் மியூசிக் சேனல் MIV India-இல் முதல் முறையாக இடம்பெற்ற தமிழ் பாடல் இது தான். இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள இந்த அசுர வெற்றியைக் கண்டு எம்.டி.வி. இந்தப் பாடலை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.

  • புகழ் பெற்ற கைபேசி நிறுவனம் 'டெக்சோன்(TechZone)' புள்ளிவிவரப்படி அதிகபேர் தரவிறக்கம் (download) செய்த பாடல் என்ற பெருமையும் சேருகிறது.

  • பிரபல இந்திய நடிகர் அமிர்த்தாபட்சன் தனது Twitter வலைதளத்தில் இந்த பாடல் பற்றி தனது கருத்தினை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
    “Just heard #Kolaveri after much talk on it ... it's so original and catchy...congrats Dhanush and Aishwarya (Rajni's daughter) .. love(sic)”

  • தங்கிலீஷ் வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட இந்த பாடலை பல மொழிகளில் பாடி அவரவர் விருப்பதிற்கேற்ப எழுதியும் பாடியும் இணையத்தில் உலாவிடிருப்பதும் இதற்கு கிடைத்த வெற்றியே!.

  • பிற நாட்டுவார்கள் இந்த பாடல் மூலம் தமிழ் பாடல்களை கேட்ட துவங்கியுள்ளதை மறுக்கமுடியாது. மேலும், 'கொலைவெறி' என்றால் என்ன என்று கூகுளே-இல் அதிகள் பேர் தேடியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.


"ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன" என்று தனது பிளாக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் அமிதாப்!.

டிஷும் டிஷும்..

நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு இன்னொரு பெருமையும் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அது ரஜினிகாந்த் இந்தப் பாடலில் தோன்றலாம் என்ற செய்தி.

ஒரு தமிழனின் பாடலுக்கு இவளவு பெயர், புகழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே!. ஆனால் இது தமிழ் பாடலா என்ற கேள்வி தான் என்முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வெறியின் மூலம் இனி தமிழ் மெல்ல விரைவில் சாகும். வளர்க தமிழனின் புகழ் வான்வரை!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தனுஷின் '3' பட பாடல் 'Why this kolaveri...'

நடிகர் தனுஷின் புதிய படத்தின் பெயர் மூணு '3'. அதில் அவர் எழுதி பாடிய ஒரு பாடல் வெளிவந்துள்ளது.


முதல் முறை கேட்டபோதே மனசுக்கு மிக அருகில் வந்து உக்கார்ந்துகொண்டது. தேவையான இசை.... பாடலின் நடு நடுவே பேசிய படி தனுஷின் குரலில் ஒலிக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.



பாடல் வரிகள் கீழே ஆங்கிலத்தில்....
Oh boys...I am singing song
Soup song...
Flop song...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri..... di

Distance la moon-u moon-u
Moon-u color-u white-u
White background night-u nigth-u
Night-u color-u black-u

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

White skin girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes eyes meet-u meet-u
My future dark

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Maama notes eduthuko
Apdiye kaila saxss eduthuko

Super maama ready
Ready 1 2 3 4

Wat a change over maama

Ok maama now tune change

Hmmmmmmmmm
Kaila glass
Only english..

Hand la glass
Glass la scotch
Eyes fulla tear-u

Empty life
Girl come
Life reverse gear-u

Lovu lovu
Oh my love
You show to me pov

Cow cow holy cow
I want u here now
God i m dying now
She is happy how

This song pass to boys
We dont have choice...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Flop song...

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

பாடல் இடம் பெற்ற படம் : 3
பாடலை எழுதியவர் : நடிகர் தனுஷ்
இசை அமைத்தவர் : அனிருத்
பாடலை பாடியவர் : நடிகர் தனுஷ்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் காதல் வரிகள் !!!

எனக்கு ரொம்ப பிடித்த சில பாடல்களின் இந்த 'நான் மலரோடு...' பாடல் மிக அதிகம் பிடிக்கும். இசை + பாடல் வரிகள் + பாடியவர்களின் குரல் என அனைத்தும் மிக அற்புதமாக அமைந்த பாடல்.

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இரு வல்லவர்கள். 1966 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல்.விஜயலக்ஷ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கண்ணதாசனின் காதல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். அவரின் ரசனையோ தனி தான் ...!!!!

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..


அடுத்து இரண்டு வரிகளில் ஒரே கிலுகிலுப்பை தரவல்ல காதல் ரசம் சொட்டும் வரிகள்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்


இது போன்ற காதல் வரிகளை மயக்கும் குரல்களில் பாடியவர்கள் 'சிங்க குரல்'
டி.எம்.சௌந்திரராஜன் & 'குரல் அரசி' பி. சிசீலா.



நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்...


காதிற்கு தேனாய் இனிக்கும் இசை வேதா.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs




சேவற்கொடி படத்தில் எனக்கு பிடித்த வைரமுத்துவின் பாடல்வரிகள்

நேற்று முன்தினம் வெளிவந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் வரிகளை உங்களுடன் கேட்டு ரசிப்பதில் மகிழ்ச்சியே.


கவினர் வைரமுத்துவின் இளமை துள்ளும் வரிகளும் அதற்கு ஏற்ப M.L.R.கார்த்திகேயன் குரலும் இந்த பாடலை மேலும் மேருகேட்டுகிறது.

நாயகியின் அழகை + அவளது செயல்களை வர்ணித்து பாடும் ஹீரோ பாடல் போல இருக்கு இது. நம்ம வைரமுத்து சார் சும்மா ஹீரோயின் அழகாய் மிக அழகாய் பாடலில் வர்ணித்து இருக்கிறார். அதனை நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்து கேளுங்கள்.

பாடல் வரிகளை சிதைக்காமல் மிக நேத்தியாய் இசை கோர்வை. பாடலில் அங்கங்கே 'சக்போன்' இசையை தூவி மேலும் அழகு சேர்த்திருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் C.சத்யா.

சத்யாவின் இசை மிகவும் தேர்ந்த இசை அமைப்பாளர் போல இருக்கு. வாழ்த்துக்கள் !!!!


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

அந்த மெலடி பாடலின் வரிகள் இதோ...


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு!
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு!
தூரத்தில் பார்த்த காதல் வராது!
பக்கத்துல பார்த்த காமம் வராது!
மானுமில்ல மயிலுமில்ல!
கூனுமில்ல குயிலுமில்ல!
இருந்தும் மனசு விழுந்து போயிசுது!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும்!
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும்!

அழுக்கு துணிய உடுத்தி அவ தளுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடித்த மனசு அட சொக்குது சொக்குதுடா !
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதுடா!

தூங்கி எழுந்தா பிள்ளை அழகு!
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு!
அவ சொல்லுக்கடங்கா முடியும் -
சுத்தி கசக்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்!
தேத்துபல்லும் கண்டு பித்து பிடிக்கும்!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !

வெளக்கமாறு புடுச்சி அவ வீதி பேருக்கும் போது
வளைவு நெளிவு பார்த்து மனம் வலுக்க பார்க்கதடா!
குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெரிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெரிச்சு போகுதடா!

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு!
அவ பூசும் ஒலிக்கும் வீதி அழகு !
ஒரு விக்கல் எடுக்கிற தோதும்
தும்மி முடிக்கிற தோதும்
அவஸ்தையிலும் அவள் அழகு !
குத்தம்குறையிலும் மெத்த அழகு !

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



கவிதை வரிகளுக்கு மெட்டமைத்த A.R.ரகுமான்

ரொம்ப நாளா இந்த பாடலை பற்றி எழுத நினைத்து ... எழுதிவிட்டேன். நம்ப வைரமுத்து சார் என்னமா 'யாக்கை திரி' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கார் இந்த படத்தில்.

'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' என்ற கவிதை தொகுப்பை படித்து ரசித்த மணிரத்தினம் சார் நம்ப ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமானிடம் தந்து, அந்த கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து மேலும் மெருகேற்றி ஒரு அற்புதமான பாடலாக வடிவமைத்ததை ஆயுத எழுத்து என்ற படத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்.

அந்த பாடல் mp3 வடிவில்



'யாக்கை' என்றால் 'உடல்' என்று அர்த்தம். உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்து சாரை என்னவென்று சொல்ல... ! ஹி இஸ் தி கிரேட்!

அந்த பாடலின் வரிகள்...
பானாஹ்...

யாக்கை திரி காதல் சுடர்- அன்பே
ஜீவன் நதி காதல் கடல்- நெஞ்சே
பிறவி பிழை காதல் திருதம்- நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம்- அன்பே

யாக்கை திரி காதல் சுடர்
பானாஹ்...

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் இறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் உறவோம் - பானாஹ்...

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
சன்மம் சூன்யம் காதல் பின்யம்
மானுடம் மாயம் காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறி பயனம் போகும்

யாக்கை திரி காதல் சுடர் - அன்பே
ஜீவன் நதி காதல் கடல் - நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் - நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் - அன்பே

யாக்கை திரி காதல் சுடர் - பானாஹ்...

(தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)...

வாக்கியங்களற்ற வார்த்தைகளால் கட்டப்பட்ட ஒரு கவிதை பாடலாகி விட்டது. பாடலின் காணொளி



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்

மணிரத்தினம் இயக்கத்தில் எனக்கு பிடித்த ஒரு காதல் பாடல் பற்றி நீண்ட நாளாக எழுதவேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுகிறது..

பொய் சொல்லிக் காதலிக்கும் உலகத்தில் ஒரு காதலன் மெய்சொல்லிக் காதலித்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் வைரமுத்துவின் வைர வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்.

இந்தப் பாடலைப், பாகிஸ்தான் பாடகர் அட்நான் சாமி உடன் சுஜாதா இணைந்து பாடியிருக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு பார்த்து ரசியுங்கள்.


நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதிகளில் வெள்ளப்பெருக்கு
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் -
மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும் - உன்
காமம் என்னை திருடும் போதும்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அற்யவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சதிதின் மேல் -
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

இந்த பாடல் இடம் பெற்ற படம் ஆய்த எழுத்து.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



'மல்லிகா...' பாட்டை நீங்கள் கேட்டீரா ?

நேற்று இரவு ஐவர் பட பாடலை கேட்ட நேரம் கிடைத்தது. முதல் முறை கேட்டும் போதே மனதில் பசக்கேற்று ஒட்டிக்கொண்டது. கவி பெரியதம்பி எழுதிய "மல்லிகா..." என்று ஒரு பாடலை திப்பு அவர்கள் மிக அழகாக பாடியிருக்கிறார். இப்படத்திற்கு இசை கவி பெரியதம்பி.

நீங்களும் கேட்டு மகிழுங்கள் கீழ் வரும் பாடல் வரிகளை படித்து ரசித்த படியே.

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

இவள் தான் அந்த மல்லிகா ....?!



மல்லிகா ....
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

தனிமையிலே தொட்டிருக்கேன்
அந்த மச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா - அங்கே
அழகு மிச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா

அந்த நினைப்பு மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா


உன் பேரின் முதல் எழுத்தும்
என் பேரின் ஓர் எழுத்தும்
ரெண்டு பேர சேர்த்துவச்சு மல்லிகா - நெஞ்சில்
பட்சக் குத்தி பார்த்து வச்சேன் மல்லிகா

அந்த பேரு மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

எனக்குள்ளே நீ என்று
உனக்குள்ளே நான் என்று
நீ தானே சொல்லி வச்சே மல்லிகா - நானும்
அதையெல்லாம் நம்பி வச்சேன் மல்லிகா

நான் இன்னும் மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

மல்லிகா ... மல்லிகா... மல்லிகா... ஓ... ஓ... ஓ... மல்லிகா

ஊரு உறங்கும் நேரத்தில்
என்னோட செல் போனில்
மிஸ்டு கால் கொடுத்து வச்சே மல்லிகா - நானும்
பில்லு கட்டி சொத்தை அழித்தேன் மல்லிகா

செல் போன் மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா ...

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஐவர் - படப்பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமுத்திரம் அம்பானியில் வைரமுத்துவின் வைரவரிகள்


நிஜ வாழ்க்கையில் நடிகர் கருணாஸ் ஒரு இசையமைப்பாளராகவேண்டும் என்ற கனவில் சினிமாவில் காலடி வைத்தார். ஆனால் காலம் அவரை இசைத் துறைக்கு பதில் நடிப்புத் துறைக்கு தள்ளியது. இருந்தாலும் தனது கனவை இப்போது நனவாக்கியுள்ளார் கருணாஸ். ஆம்! ராஜாதி ராஜா படத்தை தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்திற்கும் இசை நடிகர் கருணாஸ் தான்.


இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் ஒரு பாடலை பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.


ராகுல் நம்பியார் & கென் கருணாஸ் இணைந்து பாடியிருக்கும் ஒரு பாடல் "தண்ட தண்ட பாணி". இந்த பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைனனுக்கு எழுதிய பாடல். இதில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்...
மூளையுள்ள பிள்ளைக்கு
ஒரு மூலதனம் தேவையில்லை
பத்துவிறலே மூலதனம் அல்லவா

வேலை போல தெய்வம் இல்லை
வியர்வை போல தீர்த்தம் இல்லை
உன் தேகம் உனதானால்
அதுபோல நண்பன் இல்லை
உண்மை ஒரு கண்ணு
உழைப்பு ஒரு கண்ணு
ஓடியாடித் தேடு
உனக்கு தாண்டா விண்ணு

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

Thanks : cinema news



குரு சிஷ்யன் - படப்பாடல் அறிமுகம்

1990 - ஆம் ஆண்டு இளையாராஜா இசையில் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி + இளைய திலகம் பிரபு இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படம் "குரு சிஷ்யன்". அதே பெயரில் இப்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் இணைத்து நடித்துள்ள படம் "குரு சிஷ்யன்".



1. கிராமத்து பொண்ணு ஒன்னு நகரத்து பெண்ணின் நாகரீகத்திற்கு மாறும் போது நம்ப ஹீரோவும் ஹீரோயினும் பாடும் ஒரு கலாட்டா பாடல். பாடல் வரிகளில் கிராமத்து பெண்ணின் நாகரீகம் + நகரத்து பெண்ணின் நாகரீகம் இரண்டையும் சுட்டிக்காட்டி பாடும்ப்படி அமைத்திருப்பது அருமை.

இது ஒரு கலாட்டா பாடல். கேட்ட நல்லா இருக்கும். பழைய பாடல் மெட்டு. V.N.P.வெங்கட், ரீடா & தீனா குரல்களில் அந்த பாடல் ...
அடேக்கப்பா அடேக்கப்பா ஆளே மாறிடியே
தாவணிய கழட்டிப்போட்டு ஜீன்ச மாட்டிடயே
ஹேர் ஸ்டைல மாத்துறா லிப்டிக்க பூசுரா
லோஹிப்ப காட்டுரா ஹை ஹீல்ச மாட்டுரா
பட்டிக்காட்டு பொண்ணு ஒன்னு சிட்டி கேலா மாறிப்புட்டா
ஆட்டையா போடு நீ ஆட்டையா போடு...
2. மேலடிபாடல் இது. பாடல் வரிகள் மிக அருமை. காதல் ரசம் போங்க வரும் இந்த பாடம் நிச்சயம் சுந்தர் சி பாடுவது போலத்தான் இருக்கும். தீனாவின் பெயர் சொல்லும் பாடல் இது. ரீட்டாவின் பின்னணி ரீங்காரம் ரம்மியம். ரீட்டா , பல்லிராஜ் & தீனா குரல்களில் அந்த பாடல் ...
கதற கதற காதலிப்பேன்
சிறுக சிறுக சிறைப் பிடிப்பேன்
யானை காதில் எறுப்பைப் போல்
காதல் மெல்ல நுளைதிடுமே
3. "பத்திரகாளி" படத்தில் இடம் பெற்ற பாடல் இப்போது ரீமிக்ஸ் செய்து தந்திருக்கிறார் இசையமைப்பாளர் தீனா. பாடலில் அதிக இசை கருவிகள் பயன்படுத்தாமல் அமைத்த தீனாவுக்கு புண்ணியம் கிட்டட்டும். கதாநாயகி தனித்து பாடும் பாடல் இது. சுசித்ரா குரலில் இப்பாடல் கேட்டும்படி இருப்பது கூடுதல் சிறப்பு.
வாங்கோனா...
வாங்கோனா...
கேட்டேளே அங்கே அத பாத்தேலே இங்கே
4. ஓபனிங் பாடல் இல்லாமல் தமிழ் படம் இருக்க கூடாது என்ற நீதியை பின்பற்றி வரும் பாடல் இது. இது ஒருவகையில் தத்துவ பாடல் போலத்தான் இருக்கு. திப்புவின் குரலில் கேட்ட அருமையா இருக்கு.

"உயிரை கூட கொடுப்பேன்னு காதலிக்கிடே நடிக்கிறான்
சிலுமிசம் முடிந்தது சிம்கார்டை மாத்துறான் " - பாடல் வரிகள் என்னை கவர்ந்தவைகள்.
பழனி முருகனுக்கு மலை மேல வீடு
சபரிமல ஐயப்பனுக்கு காட்டுக்குள்ள வீடு
மதுர அழகருக்கு ஆத்துமேலவீடு
தம்முக்குள்ள கஞ்சாவ வஞ்சு இழுத்துபுட்டா உலகமே உன்வீடு

ஆண்டவா ஆண்டவா ஆறுபட ஆண்டவா
நாட்டுக்குள்ள எல்லோருமே நடிக்கிறாங்க ஆண்டவா
5. சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் சொந்த குரலில் பாடியிருக்கும் பாடல் இது. இருவரும் பாடி கலாய்ப்பது போல பாடல் வரிகள் இருக்கு. இடையில், "அடி ஆத்தாடி இவ மனசுல .." என்ற பாடலின் சில வரிகள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு. சத்யராஜ், சுந்தர் சி & சின்னபொண்ணு குரல்களில் அந்த பாடல் ...
குருவுக்கும் சிஷ்யனுக்கும் போட்டி ஒன்னு நடக்குதுங்க
கேடிக்கும் கில்லாடிக்கும் வேஷ்டி இப்போ கிளியுதுங்க
லொள்ளா தில்லா பறிச்ச ஒன்னு நடக்குதுங்க
ஜெயிக்க போவது யாருங்கா ?

சுப்பையா சுப்பையா நீ செய்யறது தப்பையா
வட்டி மேல வட்டி வாங்கி வளந்துபோச்சு தொப்பையா
எப்பையா எப்பையா நீ திருந்தறது எப்பையா ?
இப்பயா இப்பயா ஒரு பதிலா சொல்லு இப்பயா..
மொத்தத்தில் 5 பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு + ஆட்டம் போட வைக்கிறது. இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே அணுகவும்
Download Here :

http://www.tamilentertainments.com/.../Guru-Sieshyan


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



நடிகர் விஜயும் தேவியும் இணைந்து ...

பதியுலக முன்னால் ஹீரோ விஜய.T.ராஜேந்திரன் அவர்களையே ரேட்டிங்-ல மிஞ்சிய நம்ப புதிய 'பதியுலக ஹீரோ' விஜய் அவர்களை பத்தி எழுதி ரொம்ப நாளாச்சு.

இளைமையான துள்ளல் இசை மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் விஜய் நடித்து வெளிவந்த மூன்று படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

1. 1995-ஆம் ஆண்டு 'புரட்சி புயல்' பேரரசு இயக்கி + (இளைய)தளபதி விஜய்யும், 'லேடி தளபதி' திரிசாவும் நடித்த சூப்பர் ஹிட் படம் திருப்பாச்சி. மாணிக்க விநாயகம் & சுமங்கலி இணைந்து பாடியிருக்கும் ஒரு கலக்கல் பாடல். இந்த படத்துல எனக்கு புடிச்ச ஒரு பாடல்

கட்டு கட்டு கீரைக்கட்டு
புட்டுப்புட்டு ஆஞ்சுப்புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பப்பையா......

2. 1995-ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கிய ஒரு மெல்லிய காதல் கதையில் வடிவேலு பட்டைய கிளப்பி நடித்திருக்கும் படம் தான் சச்சின். விஜய், 'லூசுபெண்' ஜெநெலியா, 'பாம்' பிபாஷா பாசு நடித்து சுமாரா ஓடின இந்த படத்துல அழகான கேமெரா வேலை + விஜய் டிரஸ் + ஸ்னோ எபெக்ட் + தேவி ஸ்ரீ பிரசாத் குரல் என ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.

கண்மூடி திறக்கும்போது
கடவுள் எதிரே வந்தது போலே
என் கண்முன்னாலே அவளே வந்து நின்னாலே

3. அதே சச்சின் படத்துல ஜெஸ்ஸி கிப்ட் , மாலதி இருவரும் பாடிய ஒரு 'பவர்புல் சாங்' இது. டான்ஸ் சும்மா பட்டைய கெளப்பி இருப்பார் நம்ப விஜய்.
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நெண்டு போலே வந்தாயே


4. 2009-ஆம் ஆண்டு 'செட்டப்பு புகழ்' பிரபுதேவா' இயக்கத்தில் விஜய்யும் 'சின்ன வீடு புகழ்' நயன்தாராவும் இருவரும் முதல் முறையாக இணைந்து கொடுத்த மண்ணை கவ்விய பிளாப் பாடல் தான் 'வில்லு'. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓன்று இருக்கு. அதனை பாடகர் சாகர் உருகி பாடியிருக்கும் இந்த பாடலில் மூன்று விஜய் சேர்ந்து நடித்தது போல கலையிருப்பார். பலவிதமான உடைகளில் தோன்றி விஜய் நடந்தே இந்த பாடலை சிறபித்திருப்பார்.

நீ கோபபட்டால்
நானும் போபபடுவேன்

5. அதே வில்லு படத்துல இன்னொரு பாடலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏன்னா அதில் இலக்கிய வரிகள் அதிகமா அமைந்த பாடல். விஜய் சும்மா ரெண்டு பேருடன் போடும் ஆட்டம் பார்க்கிறவங்க அவனைவரையும் ஆட்டம் போடா வைக்கும். இந்த பாடலை பாபா செஹ்கல் பாடியிருப்பார்.
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாரும் இல்லை

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



முன்தினம் பார்த்தேனே - பாடல் விமர்சனம்

புதுமுக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய "முன்தினம் பார்த்தேனே" படத்துக்கு இசை தமன். ஈரம் படத்தின் மூலம் நம்மை மிரட்டியவரும் இவரே. இந்த படத்திற்கு பாடல்களை ரோகினி, விவேகா & பிரியன் என்ற மூன்று கவினர்கள் எழுதியுள்ளனர். இனி பாடலின் விமர்சம் தொடங்குகிறது ...

1. ரஞ்சித் ரசித்து உருகி பாடியிரும் பாடல் இது. உன்னாலே உன்னாலே பட பாடலை நினைவுபடுத்தியது. பிரியன் எழுதிய இந்த பாடல் சூப்பர் ஹிட். முதல் முறை கேட்டும்போதே மனதில் நிலைக்கிறது.
இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதாய் நீயும்
அடைமழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண் உன்கண்ணில் சிக்கி கொண்டேன்
தப்பிக்க தானே நான் மறந்தேன் ஏன் மறந்தேன்...

2. கிரிஷ் & சுசித்ரா இருவரும் இணைந்து பாடிய பாடல் இது. அமைதியா ஆரமித்து பட்டாசாய் இறுதியில் முடிகிறது பாடல். விவேகா எழுதிய பாடல் இது.
பேசும் பூவே பேசும் பூவே
காதல் பேசும் கன்னி தீவே ...

3. பிரியஷர்ஷினி பாடிய மெல்லிசை பாடல். பிரியன் எழுதிய பாடலில் ஒரே கவிதை மயம் தான். இதன் பாடலும் உன்னாலே உன்னாலே படப்பாடலை நினைவு படுத்துகிறது.
மனதின் அடியில் மலை தூறல் - ஓ
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி மழையில் நுழையும்
மெதுவாய் உயிர் கரையில் நிறையும்...

4. நரேஷ் ஐயர் & ஜனனி இணைந்த பாடியிருக்கும் ஜாலியான காதல் பாடல். ரோகினி எழுதிய பாடல் முழுவது பின்னணியில் பல இடங்களில் ஒலிக்கும் "_யா" என்ற வார்த்தை.... மிக அழகு.
மாயா தேவை தயா
மாயா இல்லை நீயா
உன்னினைவாலே சறுக்குது என்னை தகித்தாயே ....

5. ஹரிசரண் & சுசித்ரா இணைந்து பாடியிருக்கும் ஒரு காதல் மலரும் பாடல். ரோகினி எழுதிய பாடல்.
கனவென கனவென விரல் தொடும் கனவென
ரகசிய உறவென ஆனாயே
உன்னை கண்டேனடி மையல் கொண்டேனடி
வேண்டும் என்றேனடி
விழி ஓரங்கேலே பேசும் மௌனக்களே ....

6. தமன் & சுசித்ரா - காதல் பாடல் இது. தமனின் குரலை கேட்டும் போது ரகுமானின் சாயல் நிறைய தெரிகிறது. கலக்கலா இருக்கு பாடல். அந்த விசில் சப்தம் அருமை. பிரியன் எழுதிய இந்த தீம் மியூசிக் பாடல் ஆகவும் இதனை பயன் படுத்தியிருப்பார் போல தெரிகிறது.
சாரல் புது சாரல்
உன் நெஞ்சிலாமல்காதல் காதல் ...

எல்லா பாடல்களும் கேட்டும் படி அமைத்த தமன்னுக்கு என் நன்றிகள். பாடல் வரிகள் புரியும் படியும் வரிகளை அமுக்கிவிடாமல் இசை கோர்வை சேர்த்த இசை அமைப்பாளருக்கு மீண்டும் என்பாராட்டுக்கள்.

இந்த பட பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக: Megaupload அல்லது Rapidshare

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்


இது சபரி மலை சீசன். சபரிமலை ஐயப்பன் வரலாறு பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே...

ஐயப்பன் வரலாறு :

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். "ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா" என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை 'புலிப்பால்' குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை!?. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.

புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் ஐய்யப்பன் பக்தி பாடல்கள். எனக்கு கி.வீரமணி அவர்கள் பாடிய "பள்ளிக்கட்டு சபரி மலைக்கு" என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
Show <--- இங்கே அந்த பாடல் வரிகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.

Thanks : Thatstamil
நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



வேட்டைக்காரன் - பாடல் விமர்சனம்


விஜய் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி விருந்து படைக்க வருகிறான் வேட்டைக்காரன். இன்று முதன் முதலாக இந்த பட பாடலை கேட்டேன். முதல் முறை கேட்கும்போதே பாடல் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்கும் இந்த பட பாடல்கள்.

மொத்தம் ஐந்து பாடல்கள். பாடலை எழுதியவர்கள்: கபிலன், விவேகா, அண்ணாமலை. இசை 'நாக்க முக்க' புகழ் விஜய் அன்டனி.

இனி பாட்டுக்கு வருவோம் :

1. நமக்கு பிடித்தவர்களை / கவர்தவர்களை காணும்போதெல்லாம் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதுபோலத்தான், இங்கே, நாயகனும் நாயகியும் தமக்குள் ஏற்படும் உணர்வை வெளிக்காட்டும் விதமாக அமைத்த பாடலோ இது ...? பாட்ட கேட்டும் போதே சும்மா கிர்ருனு இருக்கு. படத்துல பார்த்தா ..(உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்). கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர் பாடிய அந்த பாடலின் வரிகள் :
என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டர்ருங்கிது ...

என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டோர்ருங்கிது...

கை தொடும் தூரம் காய்த்தவளே
சர்கரையலே செஞ்சவளே
எம்பசி தீர்க்க வந்தவளே - சுந்தரியே...

தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்ன சாய்த்தவனே
ராத்திரி தூக்கம் கேடுத்தவனே - சந்திரனே...
2.ஒரு காதல். ஒரு கவிதை. ஒரு காதலி. ஒரு காதலன். இவற்றை கொண்டு எழுதப்பட்ட ஒரு காதல் பாடல். கொஞ்சம் - மெலடி ஜோரு சும்மா சுவைத்து பாரு. கிருஷ், சுசித்ரா பாடிய அந்த பாடலின் வரிகள் :

ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
இதை உண்மை என்பதா ? இல்லை பொய் தான் என்பதா ?
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே.

என் ரோமக்கால்களே ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில் ஒரு ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் - உயிரே
3.ஒரு காதல் பாடல். கேள்வி- பதில் போல வித்தியாசமான பாடல் கம்போசிங். பாடலை கேட்டும் போது படத்தின் இறுதி பகுதியில் இடம் பெறுவது போல இருக்கு. ஒரு குலைவு ஒரு நெளிவு இந்த பாடலில். அருமை. சுர்சித்ரா, சங்கீதா ராஜேஷ்வரன் பாடிய அந்த பாடலின் வரிகள் :
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டையப்போல செவந்திருக்குது உதடு
உதடில்லை உதடில்லை மந்திரித்ததகடு

பருத்தி பூபோல பதியுது உன் பார்வை
பாதமில்லை பாதமில்லை பச்சரிசி சாதம்

வலம்புரி சங்கைப்போல வழுக்குது உன் கழுத்து
கழுத்தில்லை கழுத்தில்லை கண்ணதாசன் எழுத்து
4.கொஞ்சம் ஓவரா தான் இருக்கு இந்த பாடலும். இது எவருக்காக எழுதியதுன்னு தெரியல. மத்தபடி சொல்ல ஒன்னும் இல்ல இதில். கொஞ்சம் தெனாவெட்டா பாடியிருக்காரு நம்ப சங்கர்மகாதேவன், பாடிய அந்த பாடலின் வரிகள் :
நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் புடிச்ச உடும்பு புடி நான் சிரிச்சா வானவெடி
நான் பாடும் பாட்டுக்கு தொல்பறை நீ எடு

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
5.வழக்கமான ஒரு ஓபனிங் சாங்கு. கொஞ்சம் ஓவரா தான் இருக்கு பாடல் வரிகள். இது விஜய்க்கு அரசியல் கனவை சுமத்து வருவது போல இருக்கு. ஒரே கர்ஜனை. ஆனந்து, மகேஷ் வினயக்ரம் இணைத்து பாடிய அந்த பாடலின் வரிகள் :
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

கொல நடுக்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நடு நடுக்குது நடு நடுக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

பட்டாகத்தி பளபளக்க
பாட்டி தொட்டி கலகலக்க
பரந்து வரான் - வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுகாரன்.
நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன்.

மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை கேட்களினாலும் 'சன்' உங்களை கேட்கவைப்பான்.

விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு ஒரு பெரும் விருந்து கார்த்திருக்கு. கடந்த மூன்று படங்களும் சரியாக ஓடாத நிலையில் இந்த படம் நன்கு ஓடவேண்டி உங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



காதல் தோற்றதாய் கதைகள் ஏது?

நானும் 'நாடோடிகள்' படத்த 43-நாள் அன்று தான் முதன் முறையாக பார்த்தேன். படத்த பத்தி நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். நான் ஒன்றும் புதுசா சொல்ல ஒன்னும் இல்லைங்கோ. ஆனா, அந்த படத்துல, கதாநாயகியை முதன் முறையாக காட்டும் போது (டைரக்டர் சசி வீட்டில்) பின்னணி இசையாக ஒரு பாடல் ஒலிக்கும். சசியின் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்தபோது ஒரு பாடல் பின்னணி இசையாக ஒலிக்கும்.

இரண்டு சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் விதமாக இசை அமைப்பாளர் சுந்தர் சி பாபு இசைஅமைத்த அந்த பாடல் வரிகள் மனதை கலங்கடிக்கும். பாடல்வரிகளும் படத்தின் நிகழ்வுகளை சொல்லும் விதமாக எழுதிய பாடல் ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. ஹரிஹரன் பாடிய அந்த பாடல் ...
....
....
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம் .

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இருகொல்லி எருபானால்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானால்
யார் காரணம் ..? யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தால் கண்ணீராலே
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாலே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வாசம் விழுந்தானே
நதி வழி போனால் கருவற கூடும் விதி வழி போனானே
விதை ஓன்று போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்...

நட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால், நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

மேலும் இப்படத்தை பற்றிய விமர்சனங்களுக்கு கீழுள்ள இடுக்கையை பார்க்கவும்.

1.சினிமா விமர்சனம்-நாடோடிகள்

2.நாடோடிகள் - தந்தைகளின் காவியம்!

3.நாடோடிகள் - கலக்கல்; மிஸ் பண்ணாதீங்க.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



Related Posts with Thumbnails
 
back to top