Showing posts with label யுவன் சங்கர் ராஜா. Show all posts
Showing posts with label யுவன் சங்கர் ராஜா. Show all posts

‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்!!!

‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி.


கோலிவூடில் இப்பொழுதெல்லாம் புதிய முறையில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அதாவது முதலில் படத்தில் உள்ள ஒரு பாட்டை வெளியிட்டு புகழ் கொடி நாட்டப்படுகிறது. அதன்பின்னர் முழுப்பாடல்கள் வெளியீடும் இடம் பெறுகின்றன.

இந்த வரிசையில், கொல வெறி...." பாடல் வெளியிடப்பட்டு மிகப் பிரபலாமாகியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசைஅமைப்பில் இன்னுமொரு பாடல் வெளியிடப்படுகிறது.

நா.முத்துக்குமார் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கமர்சியல் பாடலுக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் ஒரு பாடல்..... பாடல் வரிகளை சிதைக்காத இசை கோர்வை மிக அருமை. பாடலின் இடை இடையே வரும் அந்த மிர்தங்கம் + கிளாசிக் டச் ..... அட அட.... மிக அருமை!!!

யுவன் ஷங்கர் ராஜா & சூப்பர் சிங்கர் 'ரேணு' இவர்களின் இனிமையான குரல்களில் பாடல் உருவான விதம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் என்பனவும் பாடலின் வீடியோ இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.



பாடலின் வரிகள் உங்களுக்காக....
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி...
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா...

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்


ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..


ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போ போ போடா..
வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



மங்காத்தா - விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் அஜித்குமாரின் 50-வது படமான ‘மங்காத்தா’வில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இது நகைசுவை கலந்த அதிரடி ஆக்ஷன் படம்.


படத்தோட கதை என்னானா...

IPL பைனல் மேட்ச் பிக்ஸ்க்காக மும்பையில் 500 கோடி வருவதை அறிந்த நான்கு பேர் கொள்ளை அடிக்க திட்டம் போட, இடையில் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அஜித்தும் திட்டத்தில் சேர்ந்துக் கொள்கிறார். இந்த சூதாட்டத் தொகை பற்றி கேள்விப்படும் போலீஸ் (அர்ஜுன் ) அதை கைப்பற்ற ஒரு குழுவோடு அலைகிறார். ஐந்து பேரும் கொள்ளை அடித்த பணத்தை பிரித்துக் கொண்டார்களா ? அர்ஜூன் அவர்களை கைது செய்தாரா ? என்பது தான் கதை.

எனக்கு பிடித்த சில...

1. அஜித் :
எத்தனை நாள் ஆகிவிட்டது தலையை இவ்வளவு ஆக்டிவாக திரையில் பார்த்து! மாஸ் ஓபனிங் சாங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.
அஜித் தோன்றும் காட்சிகளில் வழங்கப்படும் பின்னணி இசை ப்ரேம்ஜியுடன் தண்ணீர் அடித்துவிட்டு அஜித் பண்ணும் அலம்பல் தீயேட்டரை அதிரவைகிறது
2. நான்கு நாயகிகள் :
காரசேவ் 'த்ரிஷா'வுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. தண்ணீ அடித்துவிட்டு அவள் செய்யும் சேட்டைகள். செல்லக் குறும்பு.

குலோப்ஜாமுன் 'அஞ்சலி' கொஞ்சம் அழகு + கொஞ்சம் நடிப்பு.

பச்சைமிளகா 'அண்டிரினா' வில்லன்கள் மிரட்ட பயன்பட்டிருக்கிறார்கள்.

ரசகுல்லா 'லஷ்மி ராய்' கொஞ்சம் கவர்ச்சி + ஆட்டம் என ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்.

3. சக்தி சரவணின் ஒளிப்பதிவு :
பாடல் காட்சிகள் அவளவு அழகான ஒளிப்பதிவு + விறுவிறுப்பான சண்டை காட்சிகள் என் புகுந்து புகுந்த ஒளிபதிவு செய்திரிருகிறார். முழு படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவர் ஒளிப்பதிவு.


4. அர்ஜூன் :
தான் எப்போதும் ஒரு 'ஆக்சன் கிங்' என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம்.

5. யுவன் :
படத்தின் பெரிய பலம் பின்னணி இசை. யுவன் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.

'விளையாடு மங்காத்தா, பல்லேலக்கா, மற்றும் இவன் அம்பானி பரம்பரைடா' பாடல்கள் தியாட்டரை கலக்குகிறது.

ஆடாமல் ஜெயிச்சோமடா.. என்று அஜித் ஆடும் போது ரசிகர்களால் அமைதிகாக்க முடியவில்லை. நானும் சீட்டில் இருந்தபடியே ஆடினேன்.

6. வெங்கட்பிரபு :
வெங்கட்பிரபு படங்களில் வழக்கம் போல் இடம்பெறும் அந்த குரூப் இந்த படத்திலும் என்ட்ரி. பிரேம்ஜி, வைபவ், ஆகாஷ் போன்ற நடிகர்கள் இந்த திரைப்படத்திலும் வலம் வருகின்றனர். அனைவரும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.
'The Italian Job' படத்தின் சில காட்சிகள் மனதுக்குள் வருவதை தவிர்க்கமுடியவில்லை.
நினைவுக்கு வந்த சில டயலாக்...
இந்த மே வந்தா 40 வயசு ஆகுது.

எத்தனை நாளுக்குதான் நான் நல்லவனா நடிப்பது.

ஆணோ பெண்ணோ தண்ணி அடிச்சா எப்படி இந்த மாதிரி மொக்க ஜோக்கா சொல்ல முடியுது?

அதென்னவோ தெரியல ... மப்பானலே இளையராஜா பாட்டெல்லாம் நாபகம் வந்துடுது.

நான் சீட்டு கட்டுல ராஜாவா இருக்க ஆசைபடுறேன், ஜோக்கரா இல்ல.

செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம் அனைத்தும்.

வாழ்கையே ஒரு சூதாட்டம், எப்ப ஜெய்போம், எப்ப தோர்ப்போம் என யாருக்கும் தெரியாது.

பசங்க சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க சும்மா இருக்க விட மாட்டாங்களே

கரன்ஸி வந்தால் காதலும் வரும், கருமாதியும் வரும்

பிரேம் : எனக்கு எந்த பிகர் வேணாம்.
அஜீத் : நீயே நினைத்தாலும் அது உனக்கு செட் ஆகாது. நீ அதுக்கு லாயக்கில்லை.

மங்காத்தா - ஒருமுறை பார்க்கலாம்.

தல நீ பாசாயிடே!தல நீ பாசாயிடே!

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



அவன் இவன் - இசை விமர்சனம்

"நந்தா"-வுக்குப் பிறகு பாலாவும் யுவன் சங்கர் ராஜா உடன் பாடலாசிரியர் முத்துக்குமார் இணைந்து பணிபுரிந்திருக்கும் நகைச்சுவை கலந்த படம் "அவன் இவன்". இதில் விஷால் திருநங்கையாகவும் விஷாலின் சகோதராக ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.

ஒரு அண்ணன் தனது தம்பி ஆரவாணி என தெரியும் பட்சத்தில் எப்படி தன் தம்பியுடன் சகோதரத்தன்மையை பேணுவான் என்பதைத்தான் பாலா தனது ஸ்டைலில் காண்பித்திருக்கிறாராம் இந்த "அவன் இவன்" திரைப்படத்தின் மூலமாக.
புதிய பரிமாணம் என்றதும் மேற்கத்தைய இசை இல்லாமல் நம்மவூர் கிராமிய இசை கருவிகளை கொண்டு சும்மா பட்டையை கிளபியிருகிறார் யுவன். இப்படி ஒரு வித்தியாசமான இசையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கிரேட்!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

1. அவனும் சரியில்ல இவனும் சரியில்ல
எவன்தான் நான் இப்போ பாடபோறான்...
என தொடங்கும் இந்த பாடலை

T.L. மகாராஜா & சத்யன் இருவரும் போட்டிப்போட்டு பாடும் பாடல் இது. மெதுவாக ஆரமித்து சும்மா பட்டையை கிளப்பும் நம் கிராமத்து மனம் வீசும் ஒரு கும்மக்குத்து பாடல். இந்த பாடலில் இடம் பெரும் இசைக்கருவிகள் பழம்பெரும் கிராமங்களில் மட்டும் கேட்டகூடியவைகள். பாடல் வரிகள் அனைவரையும் கவரும்.


2. ஹே அடி ஏ
டியா டியா டோலே...
என தொடங்கும் இந்த பாடலை

சுசித்ரா பாடியுள்ளார். பாடல் வரிகள் இல்லாமல் வெறும் ஒரு சில வார்த்தைகளை கொண்டு வடிவமைக்கப் பட்ட பாடல்.

தார, தப்பட்ட, நாதஸ்வரம், சலங்கை, சண்ட மேல இசையும் உடுக்கை ஓசையுடன் கலந்து வரும் இந்த பாடல் சும்மா மிரட்டியுள்ளது. பலரது செல்போன்களில் இந்த பாடல் ரிங்-டன்னாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



3. ஒரு மலை ஓரம் அங்கு கொஞ்ச மேகம்
அந்த அடிவாரம் ஒரு வீடு...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் யேசுதாஸ், பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீனிஷா & பேபி நித்யஸ்ரீ இணைந்து பாடிய ஒரு
சுகமான மெலடி பாடல் இது. கிட்டார் மெல்லிசையுடன் புல்லாங்குழலும் கரைவது கேட்க கேட்க சுகம்.


4. முதல் முறை என் வாழ்வில்
மரணத்தை பார்கிறேன்...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். ஒரு சிறு சோகப்பாடல். இந்த பாடலை காட்சிகளும் காணும் போது இதன் சிறப்பு இன்னும் கூடும் என்பதில் ஐயமில்லை.



5. காட்டு சிரிக்கியே காட்டு சிரிக்கியே
காத்து கெடக்கரன் வாடி...
என தொடங்கும் இந்த பாடலை

ஹரிசரண் பாடியுள்ளார். இது ஒரு ரொமாண்டிக் பாடல். இந்த பாடல் இரண்டு பாடல்களை நம் நினைவுக்கு கொண்டுவரும்.
1. காட்டுசிருக்கி பாடல்
2. கண்ணுக்குள் நூறு நிலவா பாடல்
எங்கள்வூர் திருவிழாவில் வாசிக்கப்படும் சில இசை கருவிகளின் இசையை இந்த பாடல்களில் கேட்டதும் என்னக்குள் ஒரு வித சிலிர்ப்புவந்ததை மறுக்கமுடியாது.

கோவா, பையா, நான் மகான் அல்ல, பாஸ்(எ)பாஸ்கரன் என்றவாறு தொடர்ந்து
வெற்றிப்பயணத்தில் சென்று கொண்டிருக்கும் யுவனின் அடுத்த படைப்பாக அமைய இருப்பது தான் "அவன் இவன்".

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் : அவனும் சரியில்ல இவனும் சரியில்ல

நல்ல இசையை நாம் ரசிப்பதுடன் நில்லாமல் பிறருக்கும் அறிமுகம் செய்வது நன்று.
கிராமியமணத்துடன் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது ஞாபகம் இருக்கலாம். அந்த வரிசையில் மேலும் ஒரு படம் இந்த
"அவன் இவன்" - கிராமத்து இசை திருவிழா!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



கோ‌வா‌ - திரைபட விமர்சனம்

செ‌ன்‌னை‌ 28, சரோ‌ஜா‌ ஆகி‌ய படங்‌களை‌ இயக்‌கி‌ய வெ‌ங்‌கட்‌பி‌ரபு‌, இப்‌போ‌து இயக்‌கி‌ சௌந்தர்யா ர‌ஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயா‌ரிப்பு படம்‌ கோ‌வா‌.


படத்தோட கதை என்னனா ...

பண்ணைப்புரத்தில் உதவாக்கரைகளாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று இளைஞர்கள் (ஜெய், பிரேம்ஜி, வைபவ்) ஊரை விட்டு ஜாலியாக ஒரு வாரத்தினை கழிக்க மதுரைக்கு வந்த இடத்தில் அவர்களது நண்பனுக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணுக்கும் திருமணம் - எப்படி சாத்தியம் என்று கேட்க?, தான் கோவாவில் 'டூரிஸ்ட் கைடாக' இருக்கும் போது அந்த வெள்ளைக்கார பெண்ணுக்கும் தனக்கும் காதல் - கல்யாணம் - முதல் இரவு 5 ஸ்டார் ஓட்டலில் நடக்க போகின்றது - மனைவியுடன் வெளிநாடு செல்லபோவதாகவும்" சொல்ல - நண்பர்கள் மூவரும் அதிர்ச்சி.

சாதாரணமான அவனுக்கே ஒரு 'பாரின்' பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத? என்ற நம்பிக்கையில் - கோவா செல்ல முடிவெடுகிறார்கள். அதன் பின்னர் நடக்கும் கூத்தும் கும்மாளமும் தான் மீதி படத்தின் கதை (?).

முதல்‌ பா‌தி வரை கதையே இல்லை.‌ கா‌மெ‌டி‌யு‌ம்‌ கலகலப்‌பு‌மா‌க செ‌ல்‌லும்‌ படம்‌ இரண்‌டா‌வது பா‌தி‌யி‌ல்‌ என்‌ன சொ‌ல்‌ல வருகி‌றா‌ர்‌கள்‌ என்‌று தெ‌ரி‌வதற்‌குள்‌ படம் முடிந்துவிடுகிறது.



படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

கோ‌வாவி‌ன்‌ அழகை‌‌ அழகா‌க படம்‌ பி‌டி‌த்‌துள்‌ளது சக்‌தி‌ சரவணன்‌ ஒள்‌ப்‌பதி‌வு‌. "ஏலே‌லோ‌.. பண்‌ணை‌பு‌ரம்‌... " என வரும்‌ டை‌ட்‌டி‌ல்‌ பா‌டலி‌ல்‌ மனதி‌ல்‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌ யு‌வன்‌சங்‌கர்‌ரா‌ஜா‌.

பல படங்‌களி‌ல்‌ வி‌ல்‌லனா‌க வந்‌து மி‌ரட்‌டும்‌ சம்‌பத் இதுவரை பார்த்திராத 'கெட்அப்'. ஒரு 'ஹோமோ' -வாக வந்து நம்மை நடி‌த்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. கேரக்டர் படத்தில் அழுத்தமாக பதிந்துள்ளது.

சம்‌பத்‌ - பி‌ரே‌ம்‌ஜி‌ உறவை‌ பா‌ர்‌த்‌து அரவி‌ந்‌த்‌ பொ‌றா‌மை‌படுவதும்‌ கோ‌பப்‌படுவதும்‌ பழிவாங்க முயல்‌வதும்‌ நல்‌ல கா‌மெ‌டி‌. 'சிக்ஸ்பக்' உடலமைப்பு அருமை.

படம்‌ முழுக்‌க பி‌ரே‌ம்‌ஜி‌ நகை‌ச்‌சுவை‌ தோ‌ரணம்‌ கட்‌டுகி‌றா‌ர்‌. வெ‌ள்‌ளை‌க்‌கா‌ர பெ‌ண்‌ணி‌டம்‌ கா‌தலி‌ல்‌ உருகும்‌ போ‌தும்‌, சம்‌பத்‌துடன்‌ சே‌ர்‌ந்‌து கூத்‌தடி‌க்‌கும்‌ போ‌தும்‌ 'நா‌ன்‌ ஸ்‌டா‌ப்'‌ கொ‌ண்‌டா‌ட்‌டம்‌.

பி‌ரே‌ம்‌ஜி‌யை‌ கா‌தலி‌க்‌கும்‌ வெ‌ள்‌ளை‌க்‌கா‌ர பெ‌ண்‌ அழகோ அழகு!- தன்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ நன்‌றா‌க செய்திருக்கிறாள்.

முதல் கணவன் பிரசன்னாவை கழட்டிவிட்டிட்டு ஜாலி + சா‌டி‌ஸ்‌டா‌க வரும்‌ சி‌னே‌கா கலக்‌கல்‌ உடை‌யி‌ல்‌ வந்‌து கவர்‌ச்‌சி‌ வி‌ருந்‌து படை‌க்‌கி‌றா‌ர்‌.

ஜெ‌ய்‌ நகை‌ச்‌சுவை‌யி‌ல்‌ கலக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவர்‌ ஆங்‌கி‌லம்‌ பே‌சும்‌ பெ‌ருமை‌ பீ‌த்‌துவதும்‌ ரசி‌க்‌க முடி‌கி‌றது. அவர்‌ பி‌யா‌வு‌டன்‌ கா‌தல்‌ கொ‌ண்‌டு வே‌தனை‌ப்‌படும்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

பா‌ர்‌வை‌யா‌ல்‌ சொ‌க்‌க வை‌க்‌கும்‌ பியா இந்தப் படத்தில் நடிக்கும் வேலை இல்லை.

வை‌பவ்‌ லொ‌ல்‌லு தா‌ங்‌க முடி‌யவி‌ல்‌லை‌. அவர்‌ பெ‌ண்‌கள்‌ தன்‌ வலை‌யி‌ல்‌ வி‌ழுகி‌றா‌ர்‌கள்‌ என்‌று உதா‌ர்‌வி‌ட்‌டு நம்‌ப வை‌க்‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌, 'தி‌ரனன்‌னா‌ தி‌ரனன்‌னா‌ ..' என்‌ற பழைய பட பி‌ன்‌னணி‌ இசை‌யோ‌டு கா‌ட்‌டும்‌ போ‌து தி‌யே‌ட்‌டரி‌ல்‌ செ‌ம கை‌தட்‌டல்‌. அவர்‌ சி‌னே‌கா‌வி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌கா‌ண்‌டு அடி‌வா‌ங்‌கும்‌ பி‌ளா‌ஷ்‌பே‌க்‌ கா‌ட்‌சி‌கள்‌ நகை‌ச்‌சுவை‌ கலா‌ட்‌டா‌.


ஆரம்‌பத்‌தி‌ல்‌ ஆனந்‌தரா‌ஜ்‌ நக்கலில் பின்னி எடுத்திருக்கிறார். சண்‌முகசுந்‌தரம்‌, வி‌ஜயகுமா‌ர்‌, சந்‌தி‌ரசே‌கர்‌ மூ‌வரும்‌ அவர்‌கள்‌ மகன்‌களை‌ பற்‌றி‌ நி‌னை‌க்‌கும்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌ன்‌றனர்‌. அதுவும் சண்‌முகசுந்‌தரம்‌ நடிப்பு இன்னும் ஒருபடி மேல் சென்று நையாண்டி செய்திருக்கிறார்.

பல அவதார கதாப்பாத்திரம் ஒன்று இருக்கிறது. ஏதாவது ஒரு 'கெடுப்பில்' (வாத்தியார், போலீஸ், பஞ்சாயத்து ஆட்களில் ஒருவர், பைலட்) எந்த காட்சியை பார்த்தாலும் அவர் வருகிறார். யார் அவரு? சும்மா 'பல்கா' இருகாரு.

'ஏழேழு தலைமுறைக்கும்' + 'இது வரை இல்லாத உணர்விது ' பாடல் அருமை. மற்றவைகள் மனதை தொடும்படி இல்லை. யுவன் சங்கர் ராஜா கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்.

கோவா - காமெடி டூர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



கோவா - திரைப்படபாடல் விமர்சனம்

கோவா. பேர கேட்டாவே சட்டுன்னு நம்ப மனசுல வருவது கண்ணுக்கு குளுற்சியா தெரியும் அதன் கடற்கரை அழகும் துள்ளி திரியும் பட்டாம்பூச்சி பெண்களும் அவர்களின் கிளுகிளுப்பும் தான். அந்த இடத்துல நம்ப சென்னை-28 பசங்க போயிசேர்ந்தால் எப்படி இருக்கும்... இரே கூத்தும் கும்மாளமும் தான்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட்பிரபு இயக்கிய "கோவா" திரைப்பட பாடல்களை நேற்று கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பற்றி தான் இந்த பதிவு.



1. பண்ணபுரம். ஒரு அழகான ஊரு. புழுதி மனமும் தெய்வீக மனம் வீசும் வெகுளி தனமான மக்களின் திருவிழா நேரத்தில் சந்தோஷ நிமிடங்களில் நம்ப ஹீரோ குடும்பம் பாடும் பாடல் இது.

இளையராஜா இசை குடுபத்தின் இசை வாரிசுகள் சேர்ந்து பாடி கலக்கியிருக்கும் ஒரு பாடல் தான் பின்னே வருவது. 90-களில் வந்த இளையராஜா பாடலை நினைவு படுத்துவது தவிற்க்க முடியா... பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரிணி, ப்ரேம்கி அமரன், யுவன் ஷங்கர் ராஜா.
ஏழேழு தலை முறைக்கும்
எங்க சாமி பக்கபலம் எடுத்து வந்தோம் ...

2. ராஜா பாடல் : இளையராஜா பாடும் மென்மையான சோககீதம் வாசிக்கும் பாடல் இது
ஒத்துமையா வாழ்ந்தா உறுத்தும் நாலுபேருக்கு
உருக்குளன்சு பார்த்தா அப்ப சந்தோசம் தான் ஊருக்கு

3. திருவிழா பாடல் : திருவிழா நேரத்தில் நண்பர்கள் சேர்ந்தால் திருவிழா கலை கட்டும். S.B.P.சரணும் யுகேந்திரனும் இணைந்து பாடிய கிராமத்து மனம் கமழும் திருவிழா பாடல்.
அடிடா நையாண்டிய தெற்கு திசை அதிர
எக்குதிசை உயர ஊரு ...

4. காதல் பாடல் : தன் காதல் நினைவுகளை விவரிக்கும் பாடல் இது. பாடியவர்கள் : அஜீஸ் & ஆண்ட்ரியா
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது ...

5.கவர்ச்சி பாடல் : பீச் + இளமை + கவர்ச்சி ததும்பும் பாடல் இது. பாடியவர்கள் : கிருஷ், ரஞ்சித், தன்வி, சுசித்ரா, சயனக் ஷோவ்டிமே, பாவ் புண்டி
கோவா அழகை ரசி
ஆகா பூசி ...

6. நட்பு பாடல் : மூன்று நண்பர்கள் பாடும் பாடல் போல இருக்கு. இளையராஜா, SBP, சித்ரா பாடிய அந்த பாடல் வரிகள் இதோ
வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி ....

7. யுவா பாடல் : யுவாவின் தனி முத்திரை பாடல் இது. மெல்லிய சோக பாடல்.
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது...

8. ஊடல் பாடல் : பென்னி + மம்தா இணைந்து பாடிய பாடல்.
இடை வழி ஒருமோதல் செய்
இடை வழி ஒரு ஊடல் செய்...

9. ரீமிக்ஸ் பாடல் :
கோவா கடற்கரையின் அழகிய வனப்பை காட்டும் போது ஒளிக்கும் பாடல் போல இருக்கு.
டூபிஸ் எல்லாம் தம்மடிக்கிற ஊர்தானே கோவா
டூபிஸ் எல்லாம் சுவிம்அடிக்கிற ஊர்தானே கோவா

பாடல் கேட்டும் போது சில பாடல்கள் கிராமத்து சூழலும் கோவாவின் அழகையும் பிரதிபளிபதாகவே அமைந்துள்ளது. முதல் முறை கேட்கும் போதே பாடல்கள் மனசுல நிக்குது.

ஆகா மொத்தம் இளையராஜா குடுபத்தில் கங்கை அமரன் மட்டும் இந்த "கோவா" படத்தில் பாடாதவர். ராஜா குடும்பமே சேர்ந்து பாடி கலக்கியிருக்காங்க.

"கோவா" பாடல் வெற்றி போலவே படமும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

பாடல்களை பதிவிறக்கம் செய்ய : Download

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top