Showing posts with label வேதா. Show all posts
Showing posts with label வேதா. Show all posts

எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் காதல் வரிகள் !!!

எனக்கு ரொம்ப பிடித்த சில பாடல்களின் இந்த 'நான் மலரோடு...' பாடல் மிக அதிகம் பிடிக்கும். இசை + பாடல் வரிகள் + பாடியவர்களின் குரல் என அனைத்தும் மிக அற்புதமாக அமைந்த பாடல்.

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இரு வல்லவர்கள். 1966 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல்.விஜயலக்ஷ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கண்ணதாசனின் காதல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். அவரின் ரசனையோ தனி தான் ...!!!!

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..


அடுத்து இரண்டு வரிகளில் ஒரே கிலுகிலுப்பை தரவல்ல காதல் ரசம் சொட்டும் வரிகள்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்


இது போன்ற காதல் வரிகளை மயக்கும் குரல்களில் பாடியவர்கள் 'சிங்க குரல்'
டி.எம்.சௌந்திரராஜன் & 'குரல் அரசி' பி. சிசீலா.



நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்...


காதிற்கு தேனாய் இனிக்கும் இசை வேதா.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs




Related Posts with Thumbnails
 
back to top