Showing posts with label ஏ.ஆர்.ரகுமான். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரகுமான். Show all posts

எந்திரன் - விமர்சனம் அல்ல.

நம்ப சூப்பர் ஸ்டார்ட் எந்திரன் படம் முதல் நாள் ... முதல் ஷோ... பார்க்காம இருந்தா எப்படி....? சுட சுட படத்த பார்த்து இதை எழுதறேனுகோ.

ஒரு வழியா முட்டி மோதி டிக்கெட் வாங்கி படத்த பார்த்த பிறகு கிடைக்கும் திருப்தி இருக்கே... அட அட..... ரஜினி ரஜினி தான். வயசானாலும் அவருடைய ஸ்டைலே தனி தான். இன்னும் எத்தனை வரும் ஆனாலும் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பது நிஜம்.


படத்தின் கதையை சொல்லிவிட்டால் சுவாரிசியம் இருக்காது. படத்த பார்த்துவிட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

'பிரமாண்ட இயக்குனர்' சங்கர் - கனவு படத்தை எடுத்த திருப்தி + வெற்றிகரமாக ஓடவைத்து இருக்கிறார். திரைகதையை கையாண்ட விதம் மிக அருமை. ரஜினி என்ற நடிகரை தனது இயக்கத்தில் முற்றிலும் மறைத்து கதையின் நாயகனாக உலா விட்டிருப்பது சிறப்பு. நல்ல வேலை.... ரஜினிக்கு ஒபெனிங் சாங் வைக்காமல் புண்ணியம் செய்துகொண்டார். கடைசி 30 நிமிஷம் நன்மை கட்டிபோடுகிறார். படம் முழுவதும் கிராபிக்ஸ் மிரட்டல்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி - இரட்டை வேடத்தில் மனுசர் சும்மா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். என்திரனாக அவரது நடிப்பும் இடைவேளை வரும்போது மானும் அவரது முகபாவனைகள்.... நடிப்பில் சும்மா சென்சுரி அடிக்கிறார். ரஜினியின் பஞ்ச் டயலாக், மிரட்டல் சண்டைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ....
'இரட்டை ஆஸ்கார் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் - சங்கரை போலவே படம் முழுவதும் இவரது இசை ஒரு ஹாலிவுட் படம் பார்த்த திருதியை தருவதை நம்பால் நிச்சயம் உணர முடியும். காதல் அணுக்கள் & கிளிமஞ்சாரோ பாடல்கள் முனு முணுக்க வைக்கிறது. மற்றவைகள்...சுமார் தான். இறுதியில் SBP சார் படம் ஒரு குறும் பாடல் அழகு. ரகுமானை தொடர்ந்து விரைவில் சங்கரும் ஹாலிவுட் சென்றுவிடுவார்.

'தயாரிப்பு' சன் பிச்சர் - சங்கரின் கனவை நினைவாகிய பெருமை இவர்களையே சாரும். இந்த படத்தை இவர்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது என்பதே நிஜம். சாதாரண படத்தையே நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைத்துவிடுவார்கள். என்திரனை சொல்லவா வேண்டும்? படமும் சூப்பர் ஹிட். சன் இனி துணித்து பல படங்களை எடுக்க வருவார்கள். நாள் படங்களை எடுத்தால் நன்று. வாழ்த்துக்கள்.

'முன்னால் உலக அழகி' ஐஸ்வர்யா ராய் - ஜீன்ஸில் பார்த்த ஐஸ் இதில் மிஸ்ஸிங்... முடித்த வரை கதையின் ஓட்டத்தில் வருகிறார். ரஜினிக்கு பல முத்தங்களை தந்து அவ்போது நம்மையும் சூடேற்றுகிறார். முகத்தில் வயதான தோற்றம் நன்கு தெரியுது.

சந்தானம், கருணாஸ், மறைந்த ஹனிபா - சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

ரசுல்குட்டியும் இரண்டாம் பாதியில் மிக அதிகமாக வேலை செய்துள்ளார். சபாஸ்.


ரொம்ப ரசித்தது
  • கிளிமஞ்சாரோ பாடல்
  • ரோபோ ஒரு கைக்குழந்தையுடன் விளையாடும் இடமும்

  • ராகவ் வரும் காட்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அந்த ரயில் சண்டை.... யம்மாடி.... சான்சே இல்ல.

  • ஹனிபாவுடன் போட்டிபோட்டு பேசும் இடம்.... ஹைலைட்.

  • எஜமான் படத்துல பட்டம் பூச்சி பிடிப்பது போல இங்கே கொசுவை தேடி போவதும் அதன் பிறகு நடப்பது ரசிக்க கூடியவைகள்.

  • காதல் காட்சியில் 'ஐஸை' முத்தம் திருப்பி தர கேட்டு மடக்கும் காட்சியில் ரஜினி - மாஸ் தான்.

முதல் பாதி - சிரிப்பு வெடி
இரண்டாம் பாதி - கிராபிக்ஸ் மிரட்டல்

எந்திரன் = கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.



கவிதை வரிகளுக்கு மெட்டமைத்த A.R.ரகுமான்

ரொம்ப நாளா இந்த பாடலை பற்றி எழுத நினைத்து ... எழுதிவிட்டேன். நம்ப வைரமுத்து சார் என்னமா 'யாக்கை திரி' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கார் இந்த படத்தில்.

'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' என்ற கவிதை தொகுப்பை படித்து ரசித்த மணிரத்தினம் சார் நம்ப ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமானிடம் தந்து, அந்த கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து மேலும் மெருகேற்றி ஒரு அற்புதமான பாடலாக வடிவமைத்ததை ஆயுத எழுத்து என்ற படத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்.

அந்த பாடல் mp3 வடிவில்



'யாக்கை' என்றால் 'உடல்' என்று அர்த்தம். உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்து சாரை என்னவென்று சொல்ல... ! ஹி இஸ் தி கிரேட்!

அந்த பாடலின் வரிகள்...
பானாஹ்...

யாக்கை திரி காதல் சுடர்- அன்பே
ஜீவன் நதி காதல் கடல்- நெஞ்சே
பிறவி பிழை காதல் திருதம்- நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம்- அன்பே

யாக்கை திரி காதல் சுடர்
பானாஹ்...

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் இறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் உறவோம் - பானாஹ்...

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
சன்மம் சூன்யம் காதல் பின்யம்
மானுடம் மாயம் காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறி பயனம் போகும்

யாக்கை திரி காதல் சுடர் - அன்பே
ஜீவன் நதி காதல் கடல் - நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் - நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் - அன்பே

யாக்கை திரி காதல் சுடர் - பானாஹ்...

(தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)...

வாக்கியங்களற்ற வார்த்தைகளால் கட்டப்பட்ட ஒரு கவிதை பாடலாகி விட்டது. பாடலின் காணொளி



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்

மணிரத்தினம் இயக்கத்தில் எனக்கு பிடித்த ஒரு காதல் பாடல் பற்றி நீண்ட நாளாக எழுதவேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுகிறது..

பொய் சொல்லிக் காதலிக்கும் உலகத்தில் ஒரு காதலன் மெய்சொல்லிக் காதலித்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் வைரமுத்துவின் வைர வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்.

இந்தப் பாடலைப், பாகிஸ்தான் பாடகர் அட்நான் சாமி உடன் சுஜாதா இணைந்து பாடியிருக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு பார்த்து ரசியுங்கள்.


நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதிகளில் வெள்ளப்பெருக்கு
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் -
மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும் - உன்
காமம் என்னை திருடும் போதும்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அற்யவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சதிதின் மேல் -
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

இந்த பாடல் இடம் பெற்ற படம் ஆய்த எழுத்து.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top