Showing posts with label பாடல் விமர்சனம். Show all posts
Showing posts with label பாடல் விமர்சனம். Show all posts

மெட்ராஸ் (2014) – இசை விமர்சனம்

வட சென்னை கதைக்களத்தினை தாங்கிவரும் ‘மெட்ராஸ்’ படத்தில் நாயகனாக கார்த்தி, நாயகியாக கத்ரினா தெரேசா நடிக்கின்றனர். இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்க ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்குகிறார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்துவந்த கார்த்திக்கு சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்கள் ஏறுமுகத்தில் அமையவில்லை. எனினும் 'பிரியாணி' ஓரளவுக்கு பரவாயில்லை ரகம். கார்த்தி இப்போது எதிர்பார்ப்பது ஒரு உடனடி வெற்றி அதனால் - ‘மெட்ராஸ்’!

சந்தோஷ் நாராயணன் ‘குக்கூ’ ஆல்பத்தில் பெருமான்மை மக்களை ஈர்த்த இசையமைப்பாளர். அவருடைய அடுத்த ஆல்பமாக, ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே வேகத்தில் சூப்பர் ஹிட் பட்டியலிலும் சேர்ந்துள்ளன.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

1. சென்னை வட சென்னை...

கபிலன் எழுதிய பாடல். ஹரிஹர சுதன், மீனாக்ஷி ஐயர் கூட்டணி எக்ஸ்ட்ரா எனர்ஜி சேர்க்க முதல் முறை கேட்கும் போதே மனதில் ஒட்டிக் கொள்ளும் ஒரிஜினல் ‘சென்னை ஆந்தம்’. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.

சென்னையில் வாழ்வோரும் சரி, அங்கே பிழைக்க வருவோரும் சரி, விரும்பி ரசிக்கக்கூடிய வரிகள். ‘எங்க ஊரு மெட்ராஸ், இதுக்கு நாங்க தான அட்ரஸ்’ துவக்கத்திலேயே சென்னை கெத்தாக தொடங்கும் பாடல் ‘முள்ளுத் தச்சக் கூட்டுக்குள்ள, காக்கா குஞ்சா வாழ்ந்தாக் கூட’ என சென்னை பூர்வ குடிகளின் சோகத்தை கூட ஜாலியாய் சொல்லி செல்கிறது.


2. ஆகாயம் தீப்பிடிச்சா...

கபிலன் எழுதிய பாடல். பிரதீப்குமார் இதனைப் பாடியுள்ளார். இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா’ என குறும்பு கற்பனையாய் தொடங்கும் பாடல் ‘வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும்’ என சீரியஸ் ஆகிறது. கபிலன் வரிகளுக்கு பிரதீப்குமாரின் குரல் மற்றும் கிட்டார் இனிமைக் கூட்ட ஆல்பத்தின் காதல் கீதமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

அழகான மெட்டுடன் நல்ல வரிகள் சேர்ந்துகொள்ள, வித்தியாசமான இசைக் கோப்பினால் தன்னுடைய பாணி தனியானது என்று நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சபாஸ்!!!


3. நான் நீ...

இந்தப் பாடலை உமா தேவி என்பவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த குரலுக்குச் சொந்தக்காரரான சக்திஸ்ரீயுடன் தீஷிதா இணைந்து பாடியுள்ளார்.

‘நான் பறவையின் வானம், பழகிட வா, வா நீயும்’ என்று பெண் மனதின் மென்மையை தூவுகிறது உமா தேவியின் வரிகள்.


4. காகித கப்பல்..

சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றால், கானா பாலா இல்லாமல் எப்படி? அவருடைய தனித்துவமான குரலில் அக்மார்க் சென்னை ஸ்லாங்கில் அமைந்த பாடல்.

எப்போதும் கேட்கும் கானா பாடல் போலத் தோன்றினாலும் ‘காசு கையில் வந்தாலும், கஷ்டத்துல வாழ்ந்தாலும், போக மாட்டோம் மண்ண விட்டு’ என உரிமைக் குரல் ஒலிக்கிறது. சென்னை வாழ்க்கையை விவரிக்கும் வித்தியாசமான வரிகள் மக்களைச் சட்டென்று கவர்ந்துகொள்ளும்வகையில் இந்தப் பாடலில் பதிவாகியுள்ளன.



5. இறந்திடவா நீ பிறந்தாய்...

இதுவும் கானா பாலா பாடல்தான். அவரது வழக்கமான பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு அமைந்துள்ள இந்தப் பாடல் தத்துவார்த்தமான பல விஷயங்களை எளிமையாகச் சொல்லிச் செல்கிறது. இதற்கும் சந்தோஷ் நாராயணனின் இசை இதமான சுகம் தரும்வகையில் அமைந்துள்ளது.

ஒப்பாரி பாடல் தொனியில் ஆரம்பமாகும் பாடல் இல்லாமையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. இடையில் ஒலிக்கும் ‘தப்பு சத்தம்’ எனர்ஜிக் கொடுத்தாலும் தினம் கடந்துப் போகும் பாடல் போல் இருப்பது சோர்வு தருகிறது.


5. தீம் மியூசிக்... - 2

‘காளி லவ்’ & ‘சுவர்’ என வரும் இரண்டு ‘தீம்’களும் ஆல்பத்துக்கு கூடுதல் பலம்.



பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'மெட்ராஸ்' பாடல்கள் ரசிக்கும்படி இருக்கு!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images, Vuin.com & Ottran.in



என்னமோ ஏதோ (2014) – பாடல் விமர்சனம்

கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரபலமான சினிமா பாடல்களைத் தந்து வரும் டீ.இமானின் அடுத்த படம் ‘என்னமோ ஏதோ’. கோ படத்தில் வரும் பாடலின் முதல்வரியே படத்தின் தலைப்பாகி விட்டது. கெளதம் கார்த்திக்கின் இரண்டாவது படம்.


சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் தெலுங்கில் ஹிட்டான "அலா மொதலயிந்தி" என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறது. கௌதம் கார்த்திக் ஹீரோ, அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இருவருமே தமிழுக்கு புதுசு என்றாலும் தெலுங்கு தேசத்தில் பாப்புலர் ஆனவர்கள்.

பிரபு, ரேணுகா முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்குகிறார். இசை: இமான், ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன் பாடல்: மதன் கார்க்கி.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 5 பாடல்கள், 2 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக்.பார்க்கலாம் எப்படி பாடல்கள் வந்திருக்கிறதென!

1. மொசலே.. மொசலே.. : தீபக், ஏ.வி.பூஜா.

டி.இமான் கிடார் பயன் படுத்துவது மிகவும் குறைவு. இப்பாடலில் கிடாரும், நாதஸ்வரமும் சேர்ந்து கலக்கியிருக்கிறார் மனுஷன். நல்லதொரு பெப்பி நம்பர். தீபக் குரலும், பூஜாவின் குரலும் வெஸ்ட்டேர்ன் பாடலுக்கு நச் செலெக்‌ஷன்! அக்மார்க் டி.இமான் பாடல்! பாடல் போகப் போகப் பிடிக்கலாம்.

2. முட்டாளாய்.. முட்டாளாய்.. : டி.இமான், மரியா ரா வின்செண்ட்.

ஹிட் ஆகக் கூடிய அதிரடி மெட்டும் மென்இசையும் கலந்த பாடல்.


‘மாற்றங்கள் எனக்குள் ஆராய்கிறேன்.. சத்தியமாய் இது பூமி இல்லை.. ’ என காதல் படுத்தும் பாட்டைபாடலாக்கியிருக்கிறார்கள். பாடலில் டி.இமான் குரல் அவ்வளவு பொருத்தம். மரியா ராப் நச் நச் நச்!! கடவுளே.. கடவுளே.. பாடலை ஞாபகப்படுத்துகிறதே இமான் சார்??

3. நீயென்ன அப்பாட்டக்கரா.. : அனிருத், ஹர்ஷிதா க்ரிஷான்.

சந்தானத்தின் பிரபல வசனமான ‘அப்பாடக்கரை’ வைத்தே ஒரு பாட்டை எழுதிவிட்டார்கள்.

‘ நீ அப்பிடி பண்ணுற.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?’ என காதலன் காதலி இருவரும் மாத்தி மாத்தி கேட்டுக்கிட்டா அது இப்பாடல்! அனிருத்தின் குரல் செம… கேஷுவலாக பாடுவதே இவரின் பெரிய ப்ளஸ். ஹர்ஷிதா குரலும் பாஸ் மார்க். ‘உன்னோட பேரை பாஸ்வேர்ட்டாக வைத்திருந்தேன்.. நீ போனால் வேறு பேரா இல்லை..?’ என வரிகளும் ரசிக்க வைக்கிறது.

அந்தப் பாடலில் அசத்தலாக ஸ்கோர் செய்திருப்பவர் பாடகி ஹர்ஷிதா தான்.


4. புதிய உலகை.. : வைக்கோம் விஜயலட்சுமி.

கும்கி படத்தில் வரும் ‘ஒண்ணும் புரியல..’ பாடலையும் கொஞ்சம் ’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..’ பாடலையும் மிக்ஸ் செய்தால் இப்பாடல் ரெடி! ஜஸ்ட் பாஸ்!

மயக்கும் குரலைக்கொண்ட வைக்கம் விஜயலட்சுமியை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார் இமான். விஜயலட்சுமியின் காந்தக் குரலுக்காகவே அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

5. ஷட் அப் யுவர் மெளத் : ஷ்ருதி ஹாசன், தீபக்.

பாடலின் முதல் வரியை பார்த்ததுமே தெரிந்திருக்கும் எப்படிப்பட்ட பாடல் என்று. ஷ்ருதியின் குரல் வாவ்வ்வ்வ்……!!!!!! தீபக்கின் குரலும் பாடலுக்கு அத்தனை பொருத்தம்! சூப்பர் ஹிட் அடிக்கும் இப்பாடல்!

இதை விட ஒரு இன்ஸ்ட்ரூமெண்டலும், ’புதிய உலகை’ பாடலுக்கும், ’ நீயென்ன பெரிய..’ பாடலுக்கும் கரோக்கிகள் இருக்கின்றன ஆல்பத்தில்!


கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் என்னமோ ஏதோ சுமாரா தான் இருக்கு !

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com



ரம்மி (2014) - பாடல் விமர்சனம்

தொடர் வெற்றிப் படங்களின் கலக்கல் நாயகன் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மியமான படத்தின் பாடல்களுக்கு D.இமான் இசையமைத்திருந்தார். காயத்ரி, ஐசுவர்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை க.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் 'பீட்சா' படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ரம்மி படத்தின் இசைப் பற்றி, இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கும் யுகபாரதி பெருமிதத்துடன் கருத்து சொல்லியிருக்கிறார். "வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ரம்மி திரைப்படத்தின் பாடல்களும் மண்மணம் கமழும் விதத்தில் அமைந்திருப்பதற்கு இயக்குநர் பாலகிருஷ்ணனின் ரசனையே காரணம். அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைவது ஒருகாலத்தில் வரம்போல இருந்தது. இப்போது அதனை வெகு இயல்பாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரிகள் புரிகின்றன. இசை தமிழ் அடையாளத்தோடு இருக்கிறது. அசல் தமிழ் இசையின் திசை நோக்கி நானும் இமானும் பயணிக்க நீங்கள் காட்டிவரும் ஆதரவும் அன்பும் நெகிழ்வடையச் செய்கிறது.ஏனைய படங்களிலும் இம்மாதிரியான இசை வரவை எதிர்பார்ப்போமாக." என்று உற்சாகப்படுகிறார் யுகபாரதி.
காதலும், சீட்டாட்டமும் ஒன்றுதான். மூன்று இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஒன்றாக பழகுகின்றனர். அவர்களின் காதல், நட்பு, குடும்ப செண்டிமென்ட், போராட்டங்களே படத்தின் கதை. இப்படம் தனியார் கல்லூரிகள் உருவாகாத 80-ம் ஆண்டு நடக்கிற கதை.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 4 பாடல்கள், 3 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக். எக்ஸ்குளூஸிவ் பாடல்கள் ரிவ்யூ இதோ…

1. அடியே என்ன ராகம் நீ பாடுற.. (அபே ஜோ பர்துகர், பூர்னிமா சதீஷ்)

யுக பாரதி எழுதிய இப்பாடல்.. காதல் கொண்ட ஒரு ஆணின் தவிப்பு பற்றி பேசுகிறது.. ‘இதுவரை இப்படி இல்ல.. கொடுக்கற தொல்ல.. எதுக்கு நீ பொறந்த தெரியல… எதுக்கு வளர்ந்த தெரியல… ‘என வரிகள் ஓகே ரகம். ஆனால் கவனயீர்ப்பு மிஸ்ஸிங்! இசையும் ஜஸ்ட் பாஸ்…

2. கூடமேல கூடவெச்சி.. கூடனூரு போறவளே..(வி.வி.பிரசன்னா, வந்தனா ஸ்ரீநிவாசன்)

டூயட் பாடல். ‘ஒரு பாதி கதவு நீயடி..’ பாடல் பாடிய வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியதாலோ என்னவோ..அந்த பாடலை கேக்கறது போலவே ஒரு ஃபீல்.. தேறாதா இசை.. சுமாரான வரிகள்.. ஹ்ம்ம்… ஜஸ்ட் ஓகே…

3. ஒரு நொடி பிரியவும்… (டி.இமான், திவ்யா ரமணி)

மற்றுமொரு டூயட். திவ்யா ரமணி.. வார்ம் வெல்கம். அழகான குரல்.(ஸ்ரேயா கோஷலை இமிட்டேட் பண்ணாமல் பாடுங்க.. சூப்பரா இருக்கும் திவ்யா.) இந்த பாடல் மெட்டில் ஒரு தொகை பாடல்கள் மனசுக்கு வந்து போகிறது. எங்கயோ கேட்டமாதிரி இருக்கே… எங்கற மாதிரி இல்லாம.. அட.. இந்த பாட்டுதான்யா அது.. என வகை தொகையாக பல பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

4. எதுக்காக என்னை நீயும் பாத்த.. ( பூஜா எ.வி, சந்தோஷ் ஹரிஹரன்)

டூயட் பாடல். கும்கி படத்தில் ’வயலின்’ பாடல் போல்.. இந்த பாடலிலும் வயலின் அட்டகாசப்படுத்துகிறது. வரிகளும், இசையும் சுமார் ரகம் தான்.

மேலும், மேல இருக்கற 4 பாடல்களின் கரோக்கிகளும் சீ.டியில் அடக்கம்.!

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ரம்மி ரசிக்கும்படி இருக்கு!


பொதுவாகவே விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com



இது கதிர்வேலன் காதல் (2014) - பாடல் விமர்சனம்

"குருவி","மன்மதன் அம்பு", "ஆதவன்", "7ஆம் அறிவு" ஆகிய படங்களைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். முன்னனி தயாரிப்பளராக இருந்த இவர் 2012ஆம் ஆண்டில் இயக்குநர் "ராஜேஷ்" இயக்கத்தில் வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.


முதல் படத்திலேயே முன்னனி ஹீரோவாக முத்திரைப்பதித்த இவர் தற்போது நயன்தாரா உடன் "இது கதிர்வேலன் காதல்" என்ற படத்தில் நடித்து வருகிறார். முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை "சுந்தரபாண்டியன்" படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.

ஒரு கல் ஒர் கண்ணாடி படத்தின் வெற்றியும், நயன் தாராவின் நம்பர் 1 அந்தஸ்தும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது. மேலும் சுந்தரபாண்டியன் என்ற சக்சஸ் படத்தை கொடுத்த இயக்குனர் பிரபாகரனின் இரண்டாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடுகிறது.

வழக்கம்போல சந்தானம் காமெடியில் கலக்கியிருக்கிறார் என்றும், நீண்ட இடைவேளைக்கு பின்னர் கிளாமர் இல்லாத சந்திரமுகி படத்தில் வந்ததை போல ஒரு ஹோம்லி லுக் நயன் தாராவை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் இயக்குனர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.

1. முதல் பாடல் 'மெள்ள மெள்ள..." என்று தொடங்கும் பாடலை கார்த்தி பாடியுள்ளார். பெப்பி சாங். பாடலுடன் பயணித்து வரும் விசில் அருமை. நம்மவர் படத்தில் வரும் "சொர்க்கம் என்பது நமக்கு " பாடல் கொஞ்சம் + கடல் படத்தில் வரும் "ஏலே கீச்சா " பாடல் கொஞ்சம் கலவை.

2. இரண்டாவது பாடல் டூயட் பாடல். இதை ஹரினி, ஹரீஷ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர். "அன்பே அன்பே..." என்று தொடங்கும் மெலடி பாடல் இது. தனது ஆஸ்தான பாடகர்கள் பாடிய மெலடி பாடல் இது. கேட்ட உடனே பிடித்துவிடும் பாடல்.

3. மூன்றாவதாக "சர சர சரவெடி..." என்னும் குத்துபாடலை கேகே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, பாலாஜி ஆகியோர் பாடியுள்ளனர். மெலடி போக் வகையை சார்த்த பாடல் இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

4. நான்காவது பாடல் "விழியே விழியே..." என்று தொடங்கும் ராஜு பாடிய பாடல். யுகபாரதி எழுதிய மெலடி பாடல். கேட்பதற்கு உன்னிமேனன் பாடியது போல இருக்கு.

5. கடைசியாக "பல்லக்கு தேவதையே..." என்று தொடங்கும் பாடல். இந்த பாடலை ஜெஸ்ஸி, வேல்முருகன், ஜெயமூர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். மீண்டும் ஒரு குத்து பாடல். நாதஸ்வரம் முழங்க ஒரு கிராமிய காதல் பாடல். வேண்டாம் மச்சான் வேண்டாம் பாடல் போல இந்த பாடல் விரைவில்....



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் ரசிக்கும்படி இருக்கு!

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Goolge Images & TamilTunes



மரியான் (2013) - பாடல் விமர்சனம்

மரியான் 2013 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


படத்துல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு...?

1. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.

2. A.R.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

3. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

4. சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

5. தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் நடித்துள்ளனர்.

6. ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவர் ரஹ்மான் தான்.

7. 'பூ' படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன்.


யார் இந்த பரத்பாலா ...?

காட்சி மொழியின் வழியாக கதை சொல்வதில் வல்லவரான பரத்பாலாவின் வருகை, தமிழ்சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரஹ்மானின் வந்தே மாதரம், ஜன கன மன, உள்ளிட்ட தனித்த இசை ஆல்பங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தற்கு அப்பால் கடந்த 2004 ஆண்டு பரத்பாலா இயக்கிய ‘ஹரிஓம்’ அவரை தனித்த, தரமான சினிமாவின் காதலராக அடையாளம் காட்டியது! இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்கார தேவதைக்கும், அவளுக்கு உண்மையான இந்தியாவின் ஆன்மாவை காட்டும் ஒரு ஆட்டோ டிரைவருக்குமான காதல் உணர்வை சித்தரித்த விதம் தரமான ரசிகர்களை உருகவைத்த ஒன்று!

பரத்பாலா தனது இரண்டாவது முயற்சியாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ், ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் இயக்க இருந்த ‘19த் ஸ்டெப்’ தற்காலிகாமாக நிறுத்தி வைக்க்பட்ட நிலையில்தான் தனுஷ் நடிக்கும் மரியானைத் தொடங்கினார்.

படத்தோட கதை என்னனா ...

மன உறுதி கொண்ட ஒர்எளிய தமிழ்மீனவன், தன் காதலியைப் பிரிந்து, வெளிநாட்டு மீன்பிடிக்கப்பல் ஒன்றில் வேலைக்குச் செல்கிறான். அவனும் அவனோடு வேலைசெய்யும் சில தமிழ் இளைஞர்களும், உள்நாட்டுபோரில் ஆள்கடத்தி பணம் பறிப்பதை ஒரு நிதிஆதாராமாக செய்துவரும் தென் ஆப்ரிக்க குட்டி நாடு ஒன்றின் போராளி(?) குழுவால் கடத்தப்பட்டு பிணையக் கைதிகளாக நிறுத்து வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் மரியான் வேலைசெய்யும் ஷிப்பிங் நிறுவனம் பிணையத் தொகை எதுவும் தராமல் காலம் தாழ்த்துவதால், பிணையக் கைதிகளில் ஒவ்வொருவராக சுட்டிக்கொள்கிறார்கள். மரியானையும் சாவு நெருக்கும் நேரத்தில் ஒரு நண்பனோடு தம்பிக்கிறான். ஆனால் பின் தொடர்ந்து வரும் போராளிக்குழு இளைஞன் மரியானின் நண்பனை சுட்டுக்கொள்ள மரியான் மட்டும் தப்பிச் செல்கிறான்.

மிகப்பரந்த பாலைவனம், திசைவழி தெரியாத சூன்யம். இவற்றுக்கு மத்தியில் தனது காதலி பனிமலரின் நினைவுகள் மட்டுமே மரியானை வழிநடத்த அவன் தம்பி வந்தானா இல்லையா என்ற ‘சர்வைவல்’ கதைதான் மரியான்.
ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்று பொருளாம். சத்‌ரியனுக்கு சாவில்லை என்பது மாதி‌ரி ம‌ரியானுக்கு மரணமில்லை.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா


பாடியவர்கள் : ஜாவிட் அலி, ஹரிசரண் & நகாஷ் அசிஸ்
பாடலை எழுதியவர் : வாலி

ஜாலியான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. 'சோனாபரியா' என்ற வார்த்தை இந்த பாடலில் எத்தனை முறை வருகிறது என்று ஒரு குவிஸ் போட்டியே வைக்கலாம். எனக்குப் படித்த பாடல்.


2. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே!


பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்
பாடலை எழுதியவர் : A.R .ரஹ்மான் & கபிலன்

இது ஒரு மென்மையான காதல் பாடல். பின்னணி இசை மனதை வருடுவது போல இருக்கு. அதுவும் அந்த கடம்....சூப்பர்! கடல் திரைப்படத்தில் வந்த "மூங்கில் தோட்டம்" பாடலை சற்றே நினைவுபடுத்துகிறது.


3. எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு...


பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலை எழுதியவர் : குட்டிரேவதி & A.R.ரஹ்மான்

சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் கடல் திரைப்படத்தில் வந்த "நெஞ்சுக்குள்ள..." பாடல் தான் நினைவுக்கு வருது. இந்த பாடல் அதற்கும் சற்றே குறைவு என்று தான் சொல்லணும். பாடல் வரிகள் மிக அருமை. பெண் பாடலாசிரியர் குட்டிரேவதி-க்கு என் வாழ்த்துக்கள்!!!


4. கடல் ராசா நான் ...
கொம்பன் சுறா வேட்டையாடும் ...


பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடலை எழுதியவர் : தனுஷ்

பெப்பி சாங். யுவன் குரலில் பாடல் ரசிக்கும்படி இருக்கு. நார்மலா யுவன் பாடலில் இருக்கும் ஒரு சோகம் இதில் இல்லை. ரொம்ப ரசித்து பாடியிருக்கார்.


5. நெஞ்சே எழு
நெஞ்சே எழு...


பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : குட்டி ரேவதி

எழுச்சி பாடல். இந்த பாடலை முதலில் கேட்கும் போது செம்மொழிக்காக ரகுமான் இசை அமைத்த பாடலை நினைவுபடுத்துகிறது.


6. நேற்று அவள் இருந்தாள் ...

பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & சின்மயி
பாடலை எழுதியவர் : வாலி

ஒரு மெலடி காதல் பாடல். குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. விஜய்பிரகாஷ் நல்லா பாடியிருக்கார். எனக்குப் படித்த பாடல்.


7. I Love my Africa ...

பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : Brian Kabwe & Blaaze

தமிழுக்கு இது போன்ற இசை புதிது. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆப்பிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. மேற்கு இந்திய தீவுகளில் கிரிகெட் போட்டி நடக்கும் போது இது போன்ற இசையை கேட்டதுண்டு. அந்த பிறகு பாடலில் அத்தகைய இசையை கேட்டது இந்த பாடலில் தான்.



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் மரியான் ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சூது கவ்வும் (2013) - பாடல் விமர்சனம்

திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட்ஸ்நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'சூது கவ்வும்'.

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களின் மூலம் வெற்றியை குவித்த விஜய் சேதுபதியின் அடுத்த படம் சூது கவ்வும். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா செட்டி நடிக்க படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தினை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை நலன் குமாரசுவாமி இயக்க, ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். வெளியாகியிருக்கும் டீசர், படத்தை பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. வித்தியாசமான நடிப்பு இல்லா விட்டாலும் தனக்கேற்ற திரைக்கதையை தேர்வு செய்து வெற்றி காண்பது விஜய் சேதுபதி தாரக மந்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



படத்தில் நாற்பது வயது நாயகனாக விஜய் சேதுபதி, இளமை நாயகி சஞ்சிதா ஷெட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். விறுவிறுப்பான கதையோட்டத்தில் சிம்ஹா, அசோக், ரமேஷ், நெல்லை சிவா, தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ராதாரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணின் ஆர்ப்பாட்டமான இசையில் "மாமா டவுசுறு...", "காசு பணம் துட்டு மணி..." போன்ற கருத்தாழமிக்க பாடல்களை கணேஷ், முத்தமிழ், கானா பாலா ஆகியோர் எழுதியுள்ளார்கள்.

ஒவ்வொரு பாடலும் பல காலங்களைக்கடந்து நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச்செல்கிறது. போலித்தனமான சமாளிப்புகள் ஏதுமின்றி அந்த அந்தக்காலங்களில் உபயோகித்த இசைக்கருவிகளை வைத்து செவிக்குணவு கொடுத்திருக்கிறார்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம் வாருங்கள்...

01. கம் நா கம் கம்னாட்டி கோ...

சின்னா கணேஷ் குமார் குரல்களில் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு ராப் இசை. விஜயகாந்தின் 'ம்ம்ம்... ஆத்த வரட்டா..' டயலாக் சொருகிய இடம் அருமை. அதிரவைக்கும் இசையில்லாது மைல்டாக அடுக்கடுக்காக ராப் பாடலுக்கேயுரித்தான அளவில் வார்த்தைகளை இடையிடையே அடுக்கி வைத்து ரஹ்மானின் பழைய "பேட்டை ராப்" பை ஞாபகப்படுத்துகிறது.

02. மாமா டவுஸர் கழண்டுச்சு...

ஆண்ட்ரியா பின்னி பெடலேடுத்த பாடல். "மன்மதன் அம்பு"வில் அமைந்த ஒரு பாடல் 'Whos the Hero?' பாடல் வகையை சேர்ந்தது. பாட்ட கேட்கும்போதே ஆடனும் போல இருக்கு.

03. எல்லாம் கடந்து போகுமடா...

கோவை ஜலீல்-ன் குரல் Period Film Music ன் Feel கொண்டு வருவதில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. எம்ஜியார் மன்னாதி மன்னனில் "அச்சம் என்பது மடமையடா..." என்று குதிரையில் சென்றுகொண்டே பாடிக்கொண்டு செல்வது போல அமைந்திருக்கிறது. தனியாக ஒரு தபேலாவும் , கொஞ்சம் வயலினுமாக நம்மை அந்த 50-60 காலங்களுக்கு வெகு எளிதாகக் கூட்டிச்செல்கிறது.

04. தீம் மியூசிக்(Sudden Delight)...

இந்த தீம் மியூசிக், ஜேம்ஸ் பாண்ட்-ன் வழக்கமான நம் காதுகளுக்கு புளித்துப்போன பின்னணி இசையின் பாங்கில் அமைத்திருப்பது ரசிக்கும்படியில்லை. புதிதாக ஏதாவது செய்திருக்கலாம்.

05. நான் இமை ஆகிறேன்...

அருமையான வயலின் இழைத்து இழைத்து ஆரம்பிக்கிறது. தாளமேயில்லாது வெறும் வயலினும் பின்னால் கூடவே வந்து கட்டிப்போடுகிறது கேட்பவரை. ஒரு Christmas Carol கேட்ட பீலிங் வருவது இயற்கை. பல இழைகளாக வெவ்வேறு தளங்களில் ஒலிக்கும் வயலின் இழைகள் மனதை உறிஞ்சிக்கொண்டு செல்கிறது. "திவ்யா ரமணி" உணர்ந்து பாடியிருக்கிறார்.

06. காசு பணம் துட்டு Money Money...

கானா பாலா & அந்தோனி தாசன் குரல்களில் Mild Rap ஆக ஒலிக்கிறது இந்த காசு பணம் துட்டு Money Money. நன்கு வெறும் கையால் தாளம் போட்டுக் கொண்டே ரசிக்கலாம் இந்தப்பாடலை. பின்னால் ஒலிக்கும் போலீஸ் சைரன் அவ்வப்போது வந்து போய் அல்ர்ட் செய்துவிட்டுப்போகிறது. மிகவும் எளிமையாக Bathroom Singers-க்காகவே இசைத்திருக்கிறார் சந்தோஷ்.


சூது கவ்வும் பாடல்கள் ரொம்ப ஃப்ரெஸ்ஸாகவும் உற்சாகம் கொடுப்பதாகவும் இருக்கிறது. நேத்து நைட் தான் டவுன்லோட் செஞ்சிக்கேட்டேன் "கம் நா கம் கம்னாட்டி கோ" தான் ரொம்ப பிடிச்சிருக்கு "காசு பணம் ..." பாட்டும் காலையிலிருந்து ரிப்பிட்டில் ஓடிக்கிட்டு இருக்கு. "ஓ மாமா டவுசர் கழண்டுச்சு..." நல்லாயிருக்கு. ஏற்கனவே ட்ரைலர் பார்த்ததும் படம் பார்க்கனும் என்று முடிவு செஞ்சாச்சு...இந்த பாடல்கள் வேற இன்னும் எதிர்பார்ப்பை ஏத்தி விடுது...

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் சூது கவ்வும் பாடல்கள் மிக அருமை. புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Chinnappayal blog.



சொன்னா புரியாது (2013) - விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் புதிய படம் "சொன்னா புரியாது". இவர் தமிழ் பட(ம்)த்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தில் 'தமிழ்ப்படம்' சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப்-வும் நடிக்கின்றனர். மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

படத்தோட கதை என்னனா ...

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம். திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.

ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது. அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. கேளு மகனே கேளு
ஒரு கொடும கதைய கேளு - தினம்


பாடியவர்கள் : ஜெகதீஷ்
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

மெலடிக்கு மேலே குத்து பாட்டுக்கு கீழ் வரும் பாடல்.

கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலையை பாடலில் சொன்ன விதம் அற்புதம். பாடலின் இடை இடையே வரும் ரஜினியின் வரிகள் அருமை. பாடல் வரிகள் தெளிவாக கேட்பது கூடுதல் அழகு.
பாடல் ஹை லைட் வரிகள் :

அந்த தண்ணி அடிச்சவன் இந்த தண்ணி அடிச்சான்
அந்த மூனு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
அவன் : காதல் முதல் கண்ணீர் வரை - ஒரு சிறுகதை இந்த பாடல்!


2. காலியான சாலையில் நீயும் நானும்
போகிறோம் காதல் கார்காலம்!


பாடியவர்கள் : SP சரண் & சின்மயி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

இது ஒரு மெலடி ரொமான்ஸ் பாடல். காதுக்கு இனிமையான கவிதை தொகுப்போடு வரும் ஒரு பாடல். காதலன் காதலியின் மனத்திரையை பிரதிபலிக்கும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

மனதின் வாசல்களை
அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்!
இரண்டு பேர். இரண்டு காதல். ஒரே பயணம் இந்த பாடல்!


3. தேவதையோ ராட்சசியா
தேர்ந்தேத்த நிலவோ...


பாடியவர்கள் : ரஞ்சித்
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

பெப்பி சாங். கவுண்டமணியின் டியாலக்கோடு தொடக்கும் பாடல். இவரின் பிரபலமான டயலாக் ஆங்கங்கே பரப்பி, கேற்பது மிக அழகா இருக்கு. மேலும் பாரதிராஜா, கார்த்திக்கின் ஜித்தாத்தா ஜித்தா இசையும் அருமை. ஹீரோ பின்னணி பேசும் பல மொழி தெரிந்தவன் என்பதை சொல்லும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

கடைசிப்பக்கம் கிழிந்தேடுத்த கிரைம் நாவல் இவளோ
ஒரு நொடியில் கண் பறிக்கும் மின்னல் அதன் துகளோ
ஆணின் முதல் பார்வை - காதல் மொழி - சொல்லும் பாடல்!


4. உன் தொழில் சாய்த்து
உன்னோடு பேச ஓடோடி வந்தேன்..


பாடியவர்கள் : MK பாலாஜி
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

சோக பாடல். வயலின் & பியானோ கலந்த கலவை இனிமை.

காதல் - சோகம் - ஆணின் மனநிலை - சொல்லும் பாடல்!


5. ஐயையோ போச்சே...

பாடியவர்கள் : MK பாலாஜி & யதீஷ் மகேஷ்
பாடலை எழுதியவர் : யதீஷ் மகேஷ்

மக்களே காதலில் தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பாடலை பாடிகொண்டிருப்பவர் பா...ப்பா..... என தொடக்கும் பாடல்.

சிவாவின் டயலாக் அங்கங்கே இருப்பது ரசிக்ககூடியது. இசை + பாடல் இரண்டும் ஒரே இரைசல்.



கோழி இடும் முட்டைகள் :
மொத்தத்தில் சொன்னா புரியாது ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!




ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்

இன்றைய தேதியில் தயா‌ரிப்பாளர்கள் பயமில்லாமல் அணுகக் கூடிய இயக்குனர் ராஜேஷ் எம். சிம்பிளான பட்ஜெட்டில் அதைவிட சிம்பிளான கதையை ஜாலியாக எடுப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. கதை இருக்கிறதோ இல்லையோ கல்லா நிறைவது கன்ஃபார்ம்.

சிவா மனசுல சக்தியை தொடர்ந்து இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழகமெங்கும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி விஷயத்தில் கை தேர்ந்தவர் என்பதால் தனது திரையுலக பிரவேசத்துக்கு உதயநிதி ஸ்டாலின் இவரைத்தான் தேர்வு செய்திருக்கிறார்.

ராஜேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ஒரு கல் ஒரு கண்ணாடி. துணைப் பெயர், ஓகே ஓகே.


ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நா.முத்துகுமார் அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார்.

உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நட்சத்திரம் சந்தானம் நடித்துள்ளார்.

ஆர்யா, ஆண்ட்ரியா, சினேகா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள்.

பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.



01. அடடா ஒரு தேவதை வந்து போகுதே...

வழக்கமான கார்த்திக்கின் மென்மையான குரலில் ஒலிக்கும் பாடல். சில இடங்களில் கவினரின் வரிகள் அருமை.

கோவில் படத்துல வரும் 'சிலு சிலுவென' பாடலை கொஞ்சம் நியாபகம் படுத்தும் பாடல் இது. கிடார் மற்றும் பிற இசை கருவிகள் கொண்டு புதிய இசை கோர்வை தந்து ஒரு வழியாக சமாளித்து இருக்கிறார்.
இவள் யாரிவள் இந்திரன் மகனா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா

02. அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே...

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

03. அழகே அழகே அழகின் அழகே நீயடி...

குட் லவ் பீல் சாங். முகேஷ் மற்றும் ஸ்ரீமதுமிதா குரலில் ஒரு மெல்லிய சோகம் வந்து குடிகொள்ளும் பாடல் இது.

பாடல் வரிகளை கேட்ட கேக்க பட விசுவலை பார்க்க மிக ஆசையா இருக்கு. எல்லாம் ஒளிப்பதிவு பாலசுப்ரமணியம் கையில் இருக்கு..... பார்ப்போம் என்ன செய்திருக்கிறார் என்று....
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!


04. காதல் ஒரு பட்டர்ப்ளை போல வரும் ...

Fall in love at first sight.

காதல் மெலடி..... எனக்கு பிடித்த பாடல் இது.

பாடல் வரிகளில் இடை இடையே கிடார் ஜாலம் செய்கிறது..... 'என்னமோ ஏதோ..' பாடிய ஆலாப் ராஜு மீண்டும் ஒரு ஹிட் பாடலை பாடியிருக்கிறார். இவர்களுடன் ஹேமச்சந்திரன் + சுனிதா சாரதி இருவரும் தங்களில் பங்களிப்பை மிக சிறப்பாக செய்திருகிறார்கள். பாடல் மிக அருமையா இருக்கு கேக்க.

05. வஞ்சரம் மீனு வவ்வாலு.. கெடைச்சா கெளுத்தி விராலு...

'Beware of girls'....

மீண்ட நாளுக்கும் பிறகு ஒரு கானா + சரியான குத்து பாடல். எனக்கு பிடித்த பாடல் இது.

காதல் + பெண்களிடம் எப்படி எல்லாம் ஆண்கள் மாட்டி தவிகிரார்கள் என்று சொல்லும் பாடல். வாரணம் ஆயிரம் படத்து வந்த 'அவ என்ன என்ன....' பாடல் நினைவு படுத்தும் பாடல்.

'கானா புகழ்' வேல்முருகன் சும்மா பட்டையை கிளப்பியிருக்கிறார். இவருடன் நரேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து மேலும் பாடலுக்கு அழகு சேர்த்து இருக்கிறார். முத்துகுமாரின் பாடல் வரிகள் மிக அருமை.
கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

Source : Paadalvarigal.com

'காதல் ஒரு பட்டர்பிளை + வஞ்சரம் மீனு வவ்வாலு ' எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். மொத்தத்தில் காதல் + நட்பு + சோகம் என அனைத்து உணர்வுகளையும் வெளிபடுத்தும் படம் தொகுப்பு இந்த பட பாடல்கள்.

பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஆனந்த தொல்லை - பாடல் விமர்சனம்

யார் யாருக்கோ பதிவு போடும் பொது ஏன் நம்ப பவர் ஸ்டாருக்கு ஒரு பதிவு போடா கூடாதுன்னு போட்டது தான் இந்த பதிவு.



அணைத்து தரப்பு மக்களுக்கும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம் ‘ஆனந்த தொல்லை’. இது ஒரு காம(நெ)டி + த்திர்லர் வகை படம்.

விஜய், தல அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு இவர்கள் வரிசையில் நம்ம ஆளு 'பவர் ஸ்டார்' டாக்டர் ஸ்ரீனிவாசன் உடன் பூந்தோட்ட காவல்காரன் பட புகழ் வாணி விஸ்வநாத் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் செந்தில், ஸ்ரீமன், அனுமோகன், வையாபுரி, சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தை டைரக்டர் பாலு ஆனந்த் இயக்கியுள்ளார். அலி மிர்சா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா ,கலைக்குமார், சாரதி, திரவியம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

படத்தோட பாட்டை கேட்டேனுங்க... கொஞ்சம் நல்ல தான் இருக்கு. சரி இதையே ஒரு பதிவா எழுதலாம்ன்னு தான் எழுதிபுட்டேன். படியுங்கள். படத்தோட பாடலை கேட்டு ரசியுங்கள்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சாம் ஆண்டர்சனுக்கு செம போட்டியாக அண்ணன் சீனிவாசனோட அடுத்த டெர்ரர் ரிலீஸ் என்ன தெரியுமா ...?

மன்னவன், தேசிய நெடுஞ்சாலை என இரு படங்கள் இவரது தயா‌ரிப்பு, இயக்கம், நடிப்பில் வரவிருக்கின்றன.



1. செல்லபேயே வெள்ளை தீயே
கொள்ளைக்காரன் இங்கே நானே ...

- ஜெயதேவ் & பத்மலதா இணைத்து பாடியிருக்கும் ஒரு மெலடி காதல் பாடல். கிடார் + புலான்குழலின் இசை கோர்வை மிக நேர்த்தி. இதனை கேட்பதற்கு மிக நன்றாக இருக்கு. இந்த பாடலை எப்படி படம்பிடித்து இருப்பார்கள் என்று நினைக்கும்போதே ஒரு வித பயம் வருது.



2. வா வா முழு நிலவு காண்போம்
மூன்றாம் பிறை நாளிலே ...

- தீபா & மிரியம் பாடியிருக்கும் பாடல் ஒரு டுயட் இது. நன்றாக ரசித்து பாடியிருக்கிறார்கள். இதனை கேட்கும் போது வேறு ஒரு பாடல் நினைவுக்கு வருது. எந்த படம்னு தான் நினைவுக்கு சட்டுன்னு வரமாட்டேன்குது.



3. நீ என்பதே அழகு!
உன் பார்வையே நிலவு!

- வினிதா பாடிய இந்த பாடல் நம்ப ஹீரோவை பார்த்து ஹீரோயினி பாடும் பாடல் போல இருக்கு. 'டோலு டோலு தான்...' பாடல் இசையை சற்றே மாற்றி போடு இருகிறார்கள். பின்னணி இசை நன்றாகவே இருக்கு. பாடகி குரல் அழகாக இருக்கு. அய்ட்டம் பாடல்களுக்கு மிக அருகில் இந்த குரல்.



4. செய் செய் யாரோ
நெஞ்சில் தோன்றும் மின்னல் யாரோ

- பத்மலதா & கௌசிக் பாடியிருக்கும் ஒரு குத்து பாடல். ஒரு சராசரி பாடல்.



5. கண்ணாமூச்சி வாழ்க்கை
கண்ணில் தூவும் கனவை...

- பெல்லி ராஜ் & தீபா மிரியம் பாடியிர்க்கும் பாடல். ஹீரோயினுக்கு பாடலுக்கு இல்லை என்றால் விடுவார்களா என்ன ... போடுற ஒரு பாட்டை என்று சேர்த்துவிட்டார்கள். சும்மா சொல்ல கூடாது. பாடல் நன்றாக இருக்கு. வாழ்கையின் நிகழ்வுகளை அங்கங்கே சிறு கவிதை + தத்துவமாக சொல்லியிருகிறார்கள் இந்த பாடலில்.



6. வாடா மச்சி வாடா வாடா வாடா மச்சி
புட்ரா புடிடா அந்த கோவில் மாட்டை புடிடா ....

விஜய் , சைதவி & பானுமதி இணைந்து பாடியிருக்கும்ஒரு மசாலா பாடல்.



பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

Note: ஹீரோவை பார்த்து நீங்க பயந்தால் நாங்கள் பொறுப்பல்ல. மீண்டும் இவரை பற்றிய ஒரு பதிவுடன் சந்திக்கிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



பதினாறு 2011 - பாடல் விமர்சனம்

'சுந்தர புருஷன்', 'விஐபி', 'புன்னைகை பூவே' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் சபாபதி இயக்கியிருக்கும் இப்படத்தின் 'சென்னை 28' சிவா தான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மது ஷாலினி.

இந்த படத்திற்கு மற்றொரு ஹீரோவும் இருக்கிறார். அவர்தான் நம்ம யுவன். படத்தின் இசை வெளியீட்டிற்காகவும், படத்தின் விளம்பரத்திலும் யுவனின் புகைப்படத்தை மட்டும் அச்சிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் யுவனின் இசைக்கொடிதான் உயரப் பறந்தாலும், இப்படத்தின் மூலம் இன்னும் கொஞ்சம் அதிகமாவே பறக்கும் அளவிற்கு உள்ள இப்படத்தின் பாடல்கள்.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

1. அடடா என் மீது - பைலா சிண்டே, ஹரிஹரன்

ஆரம்பத்தில் பைலா சிண்டே குரல் மெதுவாக பயணிக்க தொடக்கி பின்னர் நம் மனதோடு ஒன்றிவிடுகிறது.

கார்த்திக் நேதா வரிகளை ஹரிஹரன் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு இவரை தவிர வேறு ஒருவரை நினைத்து பார்க்க முடியாது. வசீகிற குரல் + தெளிவான உச்சரிப்பு.


2. காட்டு செடிக்கு - கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா குரலில் மிக மென்மையான சினேகன் பாடல். வழக்கமான குரல் தொனியில் இல்லாமல் சற்றே வேறுவிதமாக இருக்கு கார்த்திக் ராஜா குரல். மிக அருமையான ஆர்கெஸ்ட்ரா. பாடல் முடியும் போது ஒரு வித இதமான இசை கேட்ட திருப்தி மனதில் எழும்.


3. யார் சொல்லி காதல் - யுவன் ஷங்கர் ராஜா

சினேகன் பாடல் வரிகள். யுவனுக்கே உரிய ஒரு ஜீவனுள்ள பாடல். அதகேற்றார் போல இசை கோர்வை. யுவனின் முந்தைய பாடலில் இருக்கும் ஒரு வித ஈர்ப்பு இந்த பாடலிலும் உண்டு.


4. வானம் நமதே - ஷங்கர் மஹாதேவன்

மீண்டும் யுவன் இசையில் சங்கர் மகாதேவனின் கண்ணீர் குரலில் ஒரு பாடல். அனைவரயும் கவர்திழுக்கும் சினேகன் பாடல் வரிகளில் எனக்கு பிடித்த வரிகள்
யாரோ நடை போட்ட திசையில் - நாம் போகாமல்
நாம் போகும் திசை - நாளை வழியாகலாம்

5. Theme Music - யுவன் ஷங்கர் ராஜா

பெரிதாக சொல்லிகொள்ளும் படி இல்லை. ஆனால், படத்துடன் காணும்போது இந்த இசையின் வீரியம் இன்னும் வெளிவரும் என்பது என் கருத்து.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



பதினாறு - மொத்ததில் இயைய தலைமுறையை கவரக்கூடிய ரொமாண்டிக் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும் படி இருக்கு.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஈசன் - பாடல் விமர்சனம்

'சுப்ரமணியபுரம்' வெற்றிக் கூட்டணி சசிகுமார், சமுத்திரக்கனி, ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'ஈசன்’.

சுப்ரமணியபுரத்தில் மதுரை மண்ணின் மனத்தை பரவிட்ட இயக்குனர், இப்போது ஈசனில் நகரத்து வாசனையை உணரும்படி, அதற்கேற்றார் போல ஜேம்ஸ் இசையும் மிக அருமையாக வந்துள்ளது.

நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்.

ஜெரார்ட் தாம்ப்சன், சுக்விந்தர் சிங், மால்குடி சுபா, பென்னி தயால், K.S.சித்ரா, பத்மநாபன், தஞ்சை செல்வி, சுனந்தன் ஆகியோர் குரல்களை ஜேம்ஸ் வசந்தன் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



1. ஜில்லாவிட்டு ஜில்லாவந்த...

'மதுர குலுங்க' என்ற பாடலை போலவே இந்த பாடலும் ஒரு கிராமிய 'குத்து' பாடல். மோகன்ராஜன் எழுதிய பாடலை இந்த FOLK பாடலை கிராமத்து இசை கருவிகளுடன் தஞ்சை செல்வி பாடி பட்டையை கிளப்பியிருக்கிறார். ரொம்ப வித்தியாசமான குரல் வளம். கிராமத்து திருவிழாக்களில் நிச்சயம் இந்த படம் இது.


2. கண்ணில் அன்பை சொல்வாளோ...

புல்லாங்குழலின் மென்மையான குரலும், பத்மநாபனின் 'கணீர்' குரலும் செவிகளுக்கு இனிமை சேர்க்கிறது. நா.முத்துகுமாரின் சிறப்பு வார்த்தைகளும் பாடலுக்கு பலம் சேர்க்கின்றன. இப்பாடலை முதன்முதலில் கேட்க்கும் போதே பிடித்து போகிறது.


3. மெய்யான இன்பம்...

ஒரு நகரத்தின் பிஸியான இரவு நேர வாழ்க்கையை வரிகள் பிரதிபலிக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன் இசையை குறைத்து, வரிகளை பதித்திருக்கிறார். வாழ்த்துக்கள். நா.முத்துக்குமாரின் உணர்ச்சிப்பூர்வமான வரிகளை, சுனந்தன் மென்மையாக பாடலாக்கியுள்ளார்.

4. சுகவாசி சுகவாசி...

பெண்கள் பாடியிருக்கும் பெண்மைக்கான பாடல். அனுபவம் வாய்ந்த மால்குடி சுபாவும், அருமையான குரலை கொண்ட KS சித்ராவும் யுகபாரதியின் வரிகளை, வசந்தனின் இசையோடு சரியாக கலந்து பாடியிருக்கிறார்கள்.

கிட்டார் இசை வசீகரிக்கிறது. இசையமைப்பாளரையும், பாடகர்களையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இப்பாடல் 'ஹிட்' வரிசையில் இடம்பெறும்.

5. Get Ready...

ஓர் வெஸ்டர்ன் பாடல். ஜெரார்ட் தாம்ப்சன் மற்றும் பென்னி தயால் குரல்கள் வெஸ்டர்ன் பாடலுக்கு ஏற்றவாறு கிடார் இசையோடு விரவி வருகிறது. பாடலின் இசையை முணுமுணுத்தாலும், வரிகளை முணுமுணுப்பது கடினமே.

கதையின் தேவையினை உணர்ந்தும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.


இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஈசன் - பாடலை கேட்டு மகிழலாம்.




ஆயிரம் விளக்கு - விமர்சனம்

மதுரையை பின்னணியாக கொண்டு சத்யராஜ், சாந்தனு, சனா கான், சுமன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'ஆயிரம் விளக்கு'.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இனி...

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download


1. கே.பீ.சுந்தராம்பாள் பாடிய ஒரு பக்தி பாடலின் வழிகளில் தொடங்கி பிறகு ஒரு குத்து பாடலா மாணிக் விநாயகம் குரலில் இந்த பாடல் மலர்கிறது.
நான் மதுர மதுர
நீ மதுர மதுர
நான் நீ மதுரையில கண்ணுமுழிட்சோம்
மதுரையின் சிறப்புகளை அங்கங்கே தூவிவிட்டு பாடலுக்கு மெருகேற்றி மதுரையை சிறப்பித்திருக்கிறார் கவினர்.

மதுர மதுர என்று என்தனை மதுர இந்த பாடலில் வருகிறது என்று ஒரு போட்டி வைத்து பரிசளிக்கலாம்.

2. மதுரை மண்ணின் மனம் வீசும் வரிகளுடன் கிராமத்தின் சிறப்பை பற்றியும் பறைசாற்றும் வரிகளுடன் ஒரு பாடல். கேட்டவுடனே எனக்கு பிடித்துப்போன பாடல்.
பாப்பாவுக்கு ஒரு ஜிஹார்தண்டா கொடுப்பா
பாப்பாவுக்கு அதை எச்சம் வச்சு கொடுப்பா
இவள் தளுக்கு கொஞ்சம் மினுக்கு
என்று தொடங்கும் ஒரு கேலியும் கிண்டலும் நிறைந்த பாடல். கார்த்திக்கும் ரீட்டாவும் இணைந்து பாடியிருக்கும் பாடல்.


3.யேசுதாஸ் குரலில் ஒரு பாடல்.
உத்தம புத்திரனே
உயிர் தந்த சித்திரனே
தேன்மதுர பாடியனே
எனத்தொடங்கும் ஒரு சிறு சோகப்பாடல். தந்தையும் தனயனும் பிரிந்து சென்ற நேரத்தில் பாடும் பாடல் போல இருக்கு.

4. அடுத்து ஒரு காதல் மெலடி பாடல். ஹரிஷ் ராகவேந்திரா + சின்மயி குரல்களில் இதமாக ஒளிகிறது.
ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி
சகியே என் சகியே உன் சகலம் நானடி
வரிகளை சிதைக்காத இசை கோர்வை. கேட்ட கேட்ட சுகமா இருக்கு. ஒரு வித புது குரலில் சின்மயி பாடியிருப்பது அழகு.

5. கார்த்திக் குரலில் தன்னம்பிக்கை + சுய முயற்சி பற்றி சொல்லும் ஒரு அதிரடி பாடல்.
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
அசந்துபுட்ட கொட்டப்போற தேளுடா
என்று அதிரடியாய் தொடங்கும் ஒரு பாடல்.

சண்டைக்கு துணிந்துவிட்டால் - எனக்கு
சாப்பாடே அடிதடிதான்

என்று கவினர் தன் வீரத்தையும் மண்ணின் வாசத்தையும் கலந்து கொடுத்துள்ளார்.



6. மீண்டும் ஒரு யேசுதாஸ் பாடிய மெலடி பாடல்.
என்ன தவம் செய்தேன் என்னைபெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம் காண செய்த மகனே
சந்தோஷ நிமிடங்களில் ஒரு தந்தை தன் மகனின் பெருமை பற்றி குடும்பத்தில் ஆடி பாடி பாடும் ஒரு பாடல்.

என்விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன்விரல் கோர்த்து உறவாடத்தான்
வலிகளெல்லாம் மறந்து விளையாடதான்

சத்தியராஜ் பாடும் பாடல் போல இருக்கு. சற்றேண்டு கேட்டல் இது எஸ்.எ.ராஜ்குமார் பாடல் போல தோண்டும்.

7. காதல் ஏக்கப் பாடல்
போறாளே நெஞ்ச கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே
வாராளே நெஞ்ச அள்ளிக்கிட்டு அள்ளிக்கிட்டு வாராளே
எனத்தொடங்கும் ஒரு காதல் பாடல். கார்த்திக் குரலில் அழகால் ஒலிகிறது.

உன்னைப்போல என்னக்கொல்
அரளி விதை தேவையில்லை

என்று கவினர் காதலின் தவிப்பை மிக அழகாக கவி வரைந்திருக்கிறார்.


ஆயிரம் விளக்கு - பிரகாசமாய் ஒலிகிறது! நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!

சக்கரகட்டிக்கு இந்த ஆயிரம் விளக்குல ஒரு விளக்காவது ஒளி ஏத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



பச்சை என்கிற காத்து - விமர்சனம்

புதுமுக இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி எழுதிய பாடல்களை அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.

கதை என்னானா ..

ஒரு மரணத்தின் வாசலில் துவங்குகிறது பச்சையின் வாழ்க்கை . மரண வீட்டில் குழுமியிருக்கும் மனித்ர்களின் முகங்களில் வருத்தமோ, துயரமோ ஏதும் இல்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கிற 27ம் வயதில் பச்சை இறந்திருக்கிறான் என்கிற சிறு ஆதங்கம் கூட அவர்களிடம் இல்லை. மரண வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கட்டிய மனைவியே மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

அப்படியென்ன கொடுமையானவனா பச்சை? அவனது முகம் தான் என்ன.? அவன் யார்..? யாருக்கும் பிடிபடாத ஒருவனின் அசாத்திய வாழ்க்கையை அவன் எரிகிற சிதையை பார்த்தபடியே அவன் உடன் சுற்றிய மனிதர்கள் விளக்குவதே "அ" திரை வழங்கும் "பச்சை என்கிற காத்து " படத்தி்ன் கரு, கதை, களம் எல்லாம்.
ஊரு திரண்டுருச்சு ஒத்துமையா ஆயிடுச்சு
நாடு திரண்டுருச்சு கட்டா கட்டழகி - அங்கே
வேல்முருகன், ரோஷினி, இந்துமதி மூவரும் இணைந்து பாடியிருக்கும் ஒரு ஆட்டம் போட வைக்கும் கும்மக்குத்து பாடல். மெல்ல ஆரமித்து பின்னர் செம ஸ்பீடில் முடியும் பாடல் இது.

கருவாபயலே ....
மீசை இல்லை சூரப்புலி மாட்டிகிச்சு மாட்டிகிச்சு
ஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டிகிச்சு பூட்டிகிச்சு
இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த முதல் பாடல். மகேஷ், மதுமிதா, அரவிந்த் பாடியிருக்கும் இந்த பாடலில் அருமையான இசை கோர்வையை நீங்கள் ரசிக்கலாம். அழகான போக் சாங் + குத்து பாடல்.

நான் உன்னைப்பார்தேன்
நீ என்னைப் பார்த்தே
எனக்கு பிடித்த அடுத்த பாடல். மகேஷ், பானுமதி, ஹரிபாபு இணைந்து பாடிய இந்த பாடலின் மெட்டமைப்பு வேறு எங்கேயோ கேட்டது போல இருக்கு. ஆனா சட்டுன்னு ஞாபகம் வரல. உங்களுக்கு வந்தா சொல்லுங்கள்.

தீயே தீயே என்னை தீண்டிவிட்டு போனாய்
வலியே வலியே என்னை கொன்றுவிட்டு போனாய்

என்ற மதுமிதா பாடிய இந்த பாடலை காதலில் விழுந்து அடிபட்ட கதாநாயகி பாடுவது போல இருக்கு. அருமையான சோக மெலடி பாடல்.

சிரிக்கிறாளே சிரிக்கிறாளே - என்னை
கிறுக்கனாக்கி சிரிக்கிறாளே
என்ற காதல் தோல்வி பாடலை நிகில், மதுமிதா இருவரும் பாடியிருகிறார்கள். காதல் தோல்வி ஆனவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் இந்த பாடல்.

நான் வளர்த்த பச்சை ... ஆ
இன்னிக்கு பாசமாறு ......
எனத் தொடங்கும் பறவை சிலம்பாயி பாடும் ஒப்பாரி பாடலை இனி எங்கும் நாம் கேட்கலாம். (மரணம் நிகழ்ந்த இடங்களில் இந்த பாடல் இனிமேல் நிச்சயம் இடம்பெறும்).

பச்சை என்கிற காத்து - ரசிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

இயக்குநர் கீரா பேசுகையில் 'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் வெற்றி பெறவில்லையென்றால் நான் சினிமாவை விட்டே போய்விடுவேன்' என்றார்.

இவளவு நம்பிக்கையுடன் சொல்லும் இந்த இயக்குனரின் படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து .....

Thanks : cinema.dinamalar
என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



நந்தி - படப்பாடல் விமர்சனம்


சில படப்பாடல்கள் முதல் முறை கேட்டும்போதே பிடிக்கும். ஒரு சில கேட்க கேட்க பிடிக்கும். ஒரு சில எத்தனை முறை கேட்டாலும் பிடிக்காது.

முத்துவிஜயன் பாடல் வரிகளில் பரத்வாஜ் இசையில் தமிழ்வாணன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதியபடம் "நந்தி".

நந்தி படப் பாடல்கள் முதல் ரகத்தை சார்ந்தவை. முதல் முறை கேட்டவுடனே பிடித்து போனது.


1. காதல் வயப்படும் போது பாடப்படும் பாடல் போல இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.
இது தான் காதல் என்பதா
இதயம் மாறிச் செல்வதா
சுகமான மெலடி. அதனை பிரசன்னா குரலில் குரலில் கேட்கும் போது ரொம்பவே இதமா, இனிமையா இருக்கு.

இதே பாடலை ஹரிஹரன் குரலிலும் கேட்டும் போது இன்னமும் சுவையாக இருக்கு.

பாடல் வரிகளை தெளிவாக கேட்குபடியான இசை கோர்வை. புல்லாங்குழலும் மிருதங்கமும் இசை ஜாலம் நடத்தியுள்ளன இந்த பாடலில்.

2. அடுத்து ஒரு குத்து பாடல்.
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்
பிடித்திருந்த ஆசை பேய்
லொங்கு லொங்குன்னு ஓடிச்சாம்
சின்னபொண்ணு & ராஜாமணி இணைந்து பாடி பிரட்டியிருக்கும் ஆட்டம்போட வைக்கும் ஒரு நாட்டுப்புற குத்துப் பாடல்.

3. அடுத்து கொஞ்சம் இரட்டை அர்த்தம் பொதிந்த ஒரு டூயட் பாடல்.
தண்ணிக்குள்ள தீப் படித்தது என்னவோ
இந்த தாமரைக்கு வேறு குளம் வெட்டவோ
கார்த்திக் & ஜனனி இணைந்து பாடியிருக்கும் பாடல். உருமியை சப்தம் கொஞ்சம் இதமாதான் இருக்கு.

சில இடங்களில் போக்கிரியில் கேட்ட "டோலு டோலுதான் " பாடலை நினைவு படுத்தும் இசை. பாடலை கேட்டும் போது கொஞ்சம் கிக் ஏறத்தான் செய்கிறது.

4. ஒரு தெய்வீக ராகத்தில் ஆரமித்து ஒரு குத்து பாடலாக பட்டையை கிளப்பும் பாடல்.
வேத கோசம் முழங்கவே
தேவ தேவர் மகிழவே
எனத் தொடங்கும் கர்நாடி பாடல் மெல்ல சூடு பிடித்து தெம்மாக்கு பாடலாக உரு மாறுகிறது.
இந்த பாடலை பாடியிருப்பவர்கள் : ஆனந்து, கார்த்திகேயன் , முகேஷ் , பரத்வாஜ் , கற்பகம் & சுர்முகி

5. மீண்டும் ஒரு சுகமான காதல் டூயட் பாடல். எனக்கு ரொம்ப பிடித்த அடுத்த பாடல்.
மயங்கினேன் மயங்கினேன்- உன்
மடியில் விழுந்து நொறுங்கினேன்
முகேஷ் & பிரியதர்ஷினி இருவரும் ரசித்து பாடியிருக்கும் பாடல்.

பிரியதர்ஷினி குரல் சில இடங்களில் சித்ரா அம்மாவின் குரலோடு ஒன்றுகிறது. கேட்ட கேட்ட மிகவும் பிடிக்கும் ரகம்.

ஆனந்தம் படத்தில் வந்த 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' பாடலை நினைவு படுத்துகிறது,


நந்தி - படப்பாடல்கள் அனைத்தும் முதல் முறையில் கேட்ட போது எனக்கு ரொம்பவே பிடித்துபோகிறது. உங்களுக்கும் பிடிக்கும். மறக்காமல் கேட்டு பாருங்கள்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

Thanks : 365 for Picture.

என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



'மல்லிகா...' பாட்டை நீங்கள் கேட்டீரா ?

நேற்று இரவு ஐவர் பட பாடலை கேட்ட நேரம் கிடைத்தது. முதல் முறை கேட்டும் போதே மனதில் பசக்கேற்று ஒட்டிக்கொண்டது. கவி பெரியதம்பி எழுதிய "மல்லிகா..." என்று ஒரு பாடலை திப்பு அவர்கள் மிக அழகாக பாடியிருக்கிறார். இப்படத்திற்கு இசை கவி பெரியதம்பி.

நீங்களும் கேட்டு மகிழுங்கள் கீழ் வரும் பாடல் வரிகளை படித்து ரசித்த படியே.

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

இவள் தான் அந்த மல்லிகா ....?!



மல்லிகா ....
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

தனிமையிலே தொட்டிருக்கேன்
அந்த மச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா - அங்கே
அழகு மிச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா

அந்த நினைப்பு மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா


உன் பேரின் முதல் எழுத்தும்
என் பேரின் ஓர் எழுத்தும்
ரெண்டு பேர சேர்த்துவச்சு மல்லிகா - நெஞ்சில்
பட்சக் குத்தி பார்த்து வச்சேன் மல்லிகா

அந்த பேரு மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

எனக்குள்ளே நீ என்று
உனக்குள்ளே நான் என்று
நீ தானே சொல்லி வச்சே மல்லிகா - நானும்
அதையெல்லாம் நம்பி வச்சேன் மல்லிகா

நான் இன்னும் மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

மல்லிகா ... மல்லிகா... மல்லிகா... ஓ... ஓ... ஓ... மல்லிகா

ஊரு உறங்கும் நேரத்தில்
என்னோட செல் போனில்
மிஸ்டு கால் கொடுத்து வச்சே மல்லிகா - நானும்
பில்லு கட்டி சொத்தை அழித்தேன் மல்லிகா

செல் போன் மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா ...

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஐவர் - படப்பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமுத்திரம் அம்பானியில் வைரமுத்துவின் வைரவரிகள்


நிஜ வாழ்க்கையில் நடிகர் கருணாஸ் ஒரு இசையமைப்பாளராகவேண்டும் என்ற கனவில் சினிமாவில் காலடி வைத்தார். ஆனால் காலம் அவரை இசைத் துறைக்கு பதில் நடிப்புத் துறைக்கு தள்ளியது. இருந்தாலும் தனது கனவை இப்போது நனவாக்கியுள்ளார் கருணாஸ். ஆம்! ராஜாதி ராஜா படத்தை தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்திற்கும் இசை நடிகர் கருணாஸ் தான்.


இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் ஒரு பாடலை பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.


ராகுல் நம்பியார் & கென் கருணாஸ் இணைந்து பாடியிருக்கும் ஒரு பாடல் "தண்ட தண்ட பாணி". இந்த பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைனனுக்கு எழுதிய பாடல். இதில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்...
மூளையுள்ள பிள்ளைக்கு
ஒரு மூலதனம் தேவையில்லை
பத்துவிறலே மூலதனம் அல்லவா

வேலை போல தெய்வம் இல்லை
வியர்வை போல தீர்த்தம் இல்லை
உன் தேகம் உனதானால்
அதுபோல நண்பன் இல்லை
உண்மை ஒரு கண்ணு
உழைப்பு ஒரு கண்ணு
ஓடியாடித் தேடு
உனக்கு தாண்டா விண்ணு

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

Thanks : cinema news



சுறா படத்தின் ரிங் டோன் + பாடல் விமர்சனம்

இந்திய தொலைகாட்சிகளில் வலைபதிவில் முதல் முறையாக மணிசர்மா இசையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன் வடிவில் உங்களுக்காக இங்கே... இது விஜய்-ன் 50 ஆவது படம் என்பது கூடுதல் சிறப்பு .

சுறா படத்தின் பாடல்கள் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களே... சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன்


1. சிறகடிக்கும் நிலவு (பாடியவர் : கார்த்திக் & ரீட்டா, பாடல் வரிகள் : சிநேஹன் )

மணிஷர்மாவின் இந்த பாடல் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும்.
சில நேரம் யாரைகேட்டு
என் நெஞ்சில் நீ நுழைந்தாய்
Download : சிறகடிக்கும் நிலவு ரிங் டோன்

2. வெற்றி கொடி ஏத்து (பாடியவர் : ரஞ்சித் & முகேஷ், பாடல் வரிகள் : வாசில், S.F & ராஜ்குமார்)

ஓப்பனிங் பாட்டு போலதான் தெரிகிறது...
வெற்றி என்ற சொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே எங்கள் உதயம்
Download : வெற்றி கொடி ஏத்து ரிங் டோன்

3. வங்க கடல் எல்லை (பாடியவர் : நவீன் & மாலதி, பாடல் வரிகள் : கபிலன்)

செம குத்து... குத்து... குத்து பாட்டு. மாலதியின் குரல் பளிச்
ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்
Download : வங்க கடல் எல்லை ரிங் டோன்

4. தஞ்சாவூர் ஜில்லாக்காரி (பாடியவர் : ஹேராசந்திரா & சைந்தவி, பாடல் வரிகள் : ந.முத்துக்குமார்)

சும்மா கலக்கலா இருக்கு பாடல். ரொம்ப குத்தும் இல்லை.... ரொம்ப மெலடியும் இல்லை.
சூ மந்திரகாளி...
பொம்மாயி பொம்மாயி

வார்த்தைகள் மனதில் ஈஸியா ஒட்டிக்கொள்ளும்படி இருக்கு.

Download : தஞ்சாவூர் ஜில்லாக்காரி ரிங் டோன்

5. தமிழன் வீரத் தமிழன் (பாடியவர் : ராகுல் நம்பியார், பாடல் வரிகள் : கபிலன்)

தீம் சாங். விஜயை கொஞ்சம் ஓவரா கட்டவேண்டி எழுதபட்டபாடல் போல இருக்கு.
தன் நிழலைகூட மிதித்தால்
நெற்றிக் கண் திறப்பான்
Download : தமிழன் வீரத் தமிழன் ரிங் டோன்

6. நான் நடந்தால் அதிரடி (பாடியவர் : நவீன் & ஷோபா, பாடல் வரிகள் : கபிலன்)

இது மணிஷர்மா ஸ்பெஷல் டூயட் பாடல். "வா செல்லம் வாவா செல்லம்" தோரணை பட பாடல் போல தோணியது முதலில் கேட்டும்போது ...
என் பேர கேட்ட வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டதே எனக்கு டாட்டா
Download : நான் நடந்தால் அதிரடி ரிங் டோன்



சுறா படத்தின் பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக

சுறா மொத்தத்தில் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும் பாடல்கள் கொண்ட இசையாக இருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Source : uyirvani & isai.in



குரு சிஷ்யன் - படப்பாடல் அறிமுகம்

1990 - ஆம் ஆண்டு இளையாராஜா இசையில் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி + இளைய திலகம் பிரபு இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படம் "குரு சிஷ்யன்". அதே பெயரில் இப்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் இணைத்து நடித்துள்ள படம் "குரு சிஷ்யன்".



1. கிராமத்து பொண்ணு ஒன்னு நகரத்து பெண்ணின் நாகரீகத்திற்கு மாறும் போது நம்ப ஹீரோவும் ஹீரோயினும் பாடும் ஒரு கலாட்டா பாடல். பாடல் வரிகளில் கிராமத்து பெண்ணின் நாகரீகம் + நகரத்து பெண்ணின் நாகரீகம் இரண்டையும் சுட்டிக்காட்டி பாடும்ப்படி அமைத்திருப்பது அருமை.

இது ஒரு கலாட்டா பாடல். கேட்ட நல்லா இருக்கும். பழைய பாடல் மெட்டு. V.N.P.வெங்கட், ரீடா & தீனா குரல்களில் அந்த பாடல் ...
அடேக்கப்பா அடேக்கப்பா ஆளே மாறிடியே
தாவணிய கழட்டிப்போட்டு ஜீன்ச மாட்டிடயே
ஹேர் ஸ்டைல மாத்துறா லிப்டிக்க பூசுரா
லோஹிப்ப காட்டுரா ஹை ஹீல்ச மாட்டுரா
பட்டிக்காட்டு பொண்ணு ஒன்னு சிட்டி கேலா மாறிப்புட்டா
ஆட்டையா போடு நீ ஆட்டையா போடு...
2. மேலடிபாடல் இது. பாடல் வரிகள் மிக அருமை. காதல் ரசம் போங்க வரும் இந்த பாடம் நிச்சயம் சுந்தர் சி பாடுவது போலத்தான் இருக்கும். தீனாவின் பெயர் சொல்லும் பாடல் இது. ரீட்டாவின் பின்னணி ரீங்காரம் ரம்மியம். ரீட்டா , பல்லிராஜ் & தீனா குரல்களில் அந்த பாடல் ...
கதற கதற காதலிப்பேன்
சிறுக சிறுக சிறைப் பிடிப்பேன்
யானை காதில் எறுப்பைப் போல்
காதல் மெல்ல நுளைதிடுமே
3. "பத்திரகாளி" படத்தில் இடம் பெற்ற பாடல் இப்போது ரீமிக்ஸ் செய்து தந்திருக்கிறார் இசையமைப்பாளர் தீனா. பாடலில் அதிக இசை கருவிகள் பயன்படுத்தாமல் அமைத்த தீனாவுக்கு புண்ணியம் கிட்டட்டும். கதாநாயகி தனித்து பாடும் பாடல் இது. சுசித்ரா குரலில் இப்பாடல் கேட்டும்படி இருப்பது கூடுதல் சிறப்பு.
வாங்கோனா...
வாங்கோனா...
கேட்டேளே அங்கே அத பாத்தேலே இங்கே
4. ஓபனிங் பாடல் இல்லாமல் தமிழ் படம் இருக்க கூடாது என்ற நீதியை பின்பற்றி வரும் பாடல் இது. இது ஒருவகையில் தத்துவ பாடல் போலத்தான் இருக்கு. திப்புவின் குரலில் கேட்ட அருமையா இருக்கு.

"உயிரை கூட கொடுப்பேன்னு காதலிக்கிடே நடிக்கிறான்
சிலுமிசம் முடிந்தது சிம்கார்டை மாத்துறான் " - பாடல் வரிகள் என்னை கவர்ந்தவைகள்.
பழனி முருகனுக்கு மலை மேல வீடு
சபரிமல ஐயப்பனுக்கு காட்டுக்குள்ள வீடு
மதுர அழகருக்கு ஆத்துமேலவீடு
தம்முக்குள்ள கஞ்சாவ வஞ்சு இழுத்துபுட்டா உலகமே உன்வீடு

ஆண்டவா ஆண்டவா ஆறுபட ஆண்டவா
நாட்டுக்குள்ள எல்லோருமே நடிக்கிறாங்க ஆண்டவா
5. சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் சொந்த குரலில் பாடியிருக்கும் பாடல் இது. இருவரும் பாடி கலாய்ப்பது போல பாடல் வரிகள் இருக்கு. இடையில், "அடி ஆத்தாடி இவ மனசுல .." என்ற பாடலின் சில வரிகள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு. சத்யராஜ், சுந்தர் சி & சின்னபொண்ணு குரல்களில் அந்த பாடல் ...
குருவுக்கும் சிஷ்யனுக்கும் போட்டி ஒன்னு நடக்குதுங்க
கேடிக்கும் கில்லாடிக்கும் வேஷ்டி இப்போ கிளியுதுங்க
லொள்ளா தில்லா பறிச்ச ஒன்னு நடக்குதுங்க
ஜெயிக்க போவது யாருங்கா ?

சுப்பையா சுப்பையா நீ செய்யறது தப்பையா
வட்டி மேல வட்டி வாங்கி வளந்துபோச்சு தொப்பையா
எப்பையா எப்பையா நீ திருந்தறது எப்பையா ?
இப்பயா இப்பயா ஒரு பதிலா சொல்லு இப்பயா..
மொத்தத்தில் 5 பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு + ஆட்டம் போட வைக்கிறது. இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே அணுகவும்
Download Here :

http://www.tamilentertainments.com/.../Guru-Sieshyan


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



முன்தினம் பார்த்தேனே - பாடல் விமர்சனம்

புதுமுக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய "முன்தினம் பார்த்தேனே" படத்துக்கு இசை தமன். ஈரம் படத்தின் மூலம் நம்மை மிரட்டியவரும் இவரே. இந்த படத்திற்கு பாடல்களை ரோகினி, விவேகா & பிரியன் என்ற மூன்று கவினர்கள் எழுதியுள்ளனர். இனி பாடலின் விமர்சம் தொடங்குகிறது ...

1. ரஞ்சித் ரசித்து உருகி பாடியிரும் பாடல் இது. உன்னாலே உன்னாலே பட பாடலை நினைவுபடுத்தியது. பிரியன் எழுதிய இந்த பாடல் சூப்பர் ஹிட். முதல் முறை கேட்டும்போதே மனதில் நிலைக்கிறது.
இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதாய் நீயும்
அடைமழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண் உன்கண்ணில் சிக்கி கொண்டேன்
தப்பிக்க தானே நான் மறந்தேன் ஏன் மறந்தேன்...

2. கிரிஷ் & சுசித்ரா இருவரும் இணைந்து பாடிய பாடல் இது. அமைதியா ஆரமித்து பட்டாசாய் இறுதியில் முடிகிறது பாடல். விவேகா எழுதிய பாடல் இது.
பேசும் பூவே பேசும் பூவே
காதல் பேசும் கன்னி தீவே ...

3. பிரியஷர்ஷினி பாடிய மெல்லிசை பாடல். பிரியன் எழுதிய பாடலில் ஒரே கவிதை மயம் தான். இதன் பாடலும் உன்னாலே உன்னாலே படப்பாடலை நினைவு படுத்துகிறது.
மனதின் அடியில் மலை தூறல் - ஓ
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி மழையில் நுழையும்
மெதுவாய் உயிர் கரையில் நிறையும்...

4. நரேஷ் ஐயர் & ஜனனி இணைந்த பாடியிருக்கும் ஜாலியான காதல் பாடல். ரோகினி எழுதிய பாடல் முழுவது பின்னணியில் பல இடங்களில் ஒலிக்கும் "_யா" என்ற வார்த்தை.... மிக அழகு.
மாயா தேவை தயா
மாயா இல்லை நீயா
உன்னினைவாலே சறுக்குது என்னை தகித்தாயே ....

5. ஹரிசரண் & சுசித்ரா இணைந்து பாடியிருக்கும் ஒரு காதல் மலரும் பாடல். ரோகினி எழுதிய பாடல்.
கனவென கனவென விரல் தொடும் கனவென
ரகசிய உறவென ஆனாயே
உன்னை கண்டேனடி மையல் கொண்டேனடி
வேண்டும் என்றேனடி
விழி ஓரங்கேலே பேசும் மௌனக்களே ....

6. தமன் & சுசித்ரா - காதல் பாடல் இது. தமனின் குரலை கேட்டும் போது ரகுமானின் சாயல் நிறைய தெரிகிறது. கலக்கலா இருக்கு பாடல். அந்த விசில் சப்தம் அருமை. பிரியன் எழுதிய இந்த தீம் மியூசிக் பாடல் ஆகவும் இதனை பயன் படுத்தியிருப்பார் போல தெரிகிறது.
சாரல் புது சாரல்
உன் நெஞ்சிலாமல்காதல் காதல் ...

எல்லா பாடல்களும் கேட்டும் படி அமைத்த தமன்னுக்கு என் நன்றிகள். பாடல் வரிகள் புரியும் படியும் வரிகளை அமுக்கிவிடாமல் இசை கோர்வை சேர்த்த இசை அமைப்பாளருக்கு மீண்டும் என்பாராட்டுக்கள்.

இந்த பட பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக: Megaupload அல்லது Rapidshare

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top