Showing posts with label திரைப்பாடல்கள். Show all posts
Showing posts with label திரைப்பாடல்கள். Show all posts

சொன்னா புரியாது (2013) - விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் புதிய படம் "சொன்னா புரியாது". இவர் தமிழ் பட(ம்)த்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தில் 'தமிழ்ப்படம்' சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப்-வும் நடிக்கின்றனர். மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

படத்தோட கதை என்னனா ...

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம். திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.

ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது. அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. கேளு மகனே கேளு
ஒரு கொடும கதைய கேளு - தினம்


பாடியவர்கள் : ஜெகதீஷ்
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

மெலடிக்கு மேலே குத்து பாட்டுக்கு கீழ் வரும் பாடல்.

கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலையை பாடலில் சொன்ன விதம் அற்புதம். பாடலின் இடை இடையே வரும் ரஜினியின் வரிகள் அருமை. பாடல் வரிகள் தெளிவாக கேட்பது கூடுதல் அழகு.
பாடல் ஹை லைட் வரிகள் :

அந்த தண்ணி அடிச்சவன் இந்த தண்ணி அடிச்சான்
அந்த மூனு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
அவன் : காதல் முதல் கண்ணீர் வரை - ஒரு சிறுகதை இந்த பாடல்!


2. காலியான சாலையில் நீயும் நானும்
போகிறோம் காதல் கார்காலம்!


பாடியவர்கள் : SP சரண் & சின்மயி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

இது ஒரு மெலடி ரொமான்ஸ் பாடல். காதுக்கு இனிமையான கவிதை தொகுப்போடு வரும் ஒரு பாடல். காதலன் காதலியின் மனத்திரையை பிரதிபலிக்கும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

மனதின் வாசல்களை
அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்!
இரண்டு பேர். இரண்டு காதல். ஒரே பயணம் இந்த பாடல்!


3. தேவதையோ ராட்சசியா
தேர்ந்தேத்த நிலவோ...


பாடியவர்கள் : ரஞ்சித்
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

பெப்பி சாங். கவுண்டமணியின் டியாலக்கோடு தொடக்கும் பாடல். இவரின் பிரபலமான டயலாக் ஆங்கங்கே பரப்பி, கேற்பது மிக அழகா இருக்கு. மேலும் பாரதிராஜா, கார்த்திக்கின் ஜித்தாத்தா ஜித்தா இசையும் அருமை. ஹீரோ பின்னணி பேசும் பல மொழி தெரிந்தவன் என்பதை சொல்லும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

கடைசிப்பக்கம் கிழிந்தேடுத்த கிரைம் நாவல் இவளோ
ஒரு நொடியில் கண் பறிக்கும் மின்னல் அதன் துகளோ
ஆணின் முதல் பார்வை - காதல் மொழி - சொல்லும் பாடல்!


4. உன் தொழில் சாய்த்து
உன்னோடு பேச ஓடோடி வந்தேன்..


பாடியவர்கள் : MK பாலாஜி
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

சோக பாடல். வயலின் & பியானோ கலந்த கலவை இனிமை.

காதல் - சோகம் - ஆணின் மனநிலை - சொல்லும் பாடல்!


5. ஐயையோ போச்சே...

பாடியவர்கள் : MK பாலாஜி & யதீஷ் மகேஷ்
பாடலை எழுதியவர் : யதீஷ் மகேஷ்

மக்களே காதலில் தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பாடலை பாடிகொண்டிருப்பவர் பா...ப்பா..... என தொடக்கும் பாடல்.

சிவாவின் டயலாக் அங்கங்கே இருப்பது ரசிக்ககூடியது. இசை + பாடல் இரண்டும் ஒரே இரைசல்.



கோழி இடும் முட்டைகள் :
மொத்தத்தில் சொன்னா புரியாது ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!




'கொலைவெறி' பாடல் புதிய சாதனை!

எங்கு பார்த்தாலும் கொலைவெறியாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவிப் போய்க் கிடக்கிறது.

தங்கிலிஷ் என்று சொல்லப்படுகின்ற தமிழ் கலந்த ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கூகுளே சர்ச்-இல் அதிகம் தேடப்பட்ட வீடியோ/பாடல் என்ற பெருமையை அனிருத் ரவிசந்தர் இசையில் தேசிய விருது பற்ற நடிகர் தனுஷ் பாடிய 'why this கொலைவெறி டி' பாடல் தட்டிசென்றுள்ளது. இது அவரது மனைவியும் சூப்பர் ஸ்டார்ட் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹீரோயினாக நடித்திருப்பது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. தனுஷ் மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.


அந்த பாடலை கேட்டு மகிழ ....

Why This Kolaveri Di - Dhanush


குவியும் விருதுகளும் சிறப்புகளும்


YouTube-இல் அதிக பேர் தேடிய பாடலுக்கான முதல் பரிசான 'தங்க மெடலை' தட்டிசென்றுள்ளது இந்த 'கொலைவெறி' பாடல்.



இந்த பாடல் புகழ் பெற என்ன காரணம்...?


  • சோனி நிறுவனத்தில் அதிகபடியான தொழில்முறை மார்க்கெட்டிங் உத்தியுடன் வெளிவந்த படப்பாடல். உலகஅளவில் வாசகர்கள் அதிகம் வந்து செல்லும் குறிப்பாக Facebook, Twitter போன்ற வலைதலகளில் இந்த படப்பாடலை ஒளிபரப்பியது.

  • அதிகாரப் பூர்வ பாடல் அறிவிப்பு தினத்தில் அதிகபேர் தேடிய பாடல் இது.

  • ஒரே வாரத்தில், 6 கோடி பேர் YouTube-இல் தேடிய வீடியோ பாடல் இது.

  • ஒரே வாரத்தில், Facebook-இல் அதிக பேர் பங்கிட்டுக்கொண்ட (10 millian shared) தகவல் இது தான்.

  • நேசனல் மியூசிக் சேனல் MIV India-இல் முதல் முறையாக இடம்பெற்ற தமிழ் பாடல் இது தான். இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள இந்த அசுர வெற்றியைக் கண்டு எம்.டி.வி. இந்தப் பாடலை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.

  • புகழ் பெற்ற கைபேசி நிறுவனம் 'டெக்சோன்(TechZone)' புள்ளிவிவரப்படி அதிகபேர் தரவிறக்கம் (download) செய்த பாடல் என்ற பெருமையும் சேருகிறது.

  • பிரபல இந்திய நடிகர் அமிர்த்தாபட்சன் தனது Twitter வலைதளத்தில் இந்த பாடல் பற்றி தனது கருத்தினை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
    “Just heard #Kolaveri after much talk on it ... it's so original and catchy...congrats Dhanush and Aishwarya (Rajni's daughter) .. love(sic)”

  • தங்கிலீஷ் வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட இந்த பாடலை பல மொழிகளில் பாடி அவரவர் விருப்பதிற்கேற்ப எழுதியும் பாடியும் இணையத்தில் உலாவிடிருப்பதும் இதற்கு கிடைத்த வெற்றியே!.

  • பிற நாட்டுவார்கள் இந்த பாடல் மூலம் தமிழ் பாடல்களை கேட்ட துவங்கியுள்ளதை மறுக்கமுடியாது. மேலும், 'கொலைவெறி' என்றால் என்ன என்று கூகுளே-இல் அதிகள் பேர் தேடியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.


"ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன" என்று தனது பிளாக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் அமிதாப்!.

டிஷும் டிஷும்..

நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு இன்னொரு பெருமையும் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அது ரஜினிகாந்த் இந்தப் பாடலில் தோன்றலாம் என்ற செய்தி.

ஒரு தமிழனின் பாடலுக்கு இவளவு பெயர், புகழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே!. ஆனால் இது தமிழ் பாடலா என்ற கேள்வி தான் என்முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வெறியின் மூலம் இனி தமிழ் மெல்ல விரைவில் சாகும். வளர்க தமிழனின் புகழ் வான்வரை!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தனுஷின் '3' பட பாடல் 'Why this kolaveri...'

நடிகர் தனுஷின் புதிய படத்தின் பெயர் மூணு '3'. அதில் அவர் எழுதி பாடிய ஒரு பாடல் வெளிவந்துள்ளது.


முதல் முறை கேட்டபோதே மனசுக்கு மிக அருகில் வந்து உக்கார்ந்துகொண்டது. தேவையான இசை.... பாடலின் நடு நடுவே பேசிய படி தனுஷின் குரலில் ஒலிக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.



பாடல் வரிகள் கீழே ஆங்கிலத்தில்....
Oh boys...I am singing song
Soup song...
Flop song...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri..... di

Distance la moon-u moon-u
Moon-u color-u white-u
White background night-u nigth-u
Night-u color-u black-u

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

White skin girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes eyes meet-u meet-u
My future dark

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Maama notes eduthuko
Apdiye kaila saxss eduthuko

Super maama ready
Ready 1 2 3 4

Wat a change over maama

Ok maama now tune change

Hmmmmmmmmm
Kaila glass
Only english..

Hand la glass
Glass la scotch
Eyes fulla tear-u

Empty life
Girl come
Life reverse gear-u

Lovu lovu
Oh my love
You show to me pov

Cow cow holy cow
I want u here now
God i m dying now
She is happy how

This song pass to boys
We dont have choice...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Flop song...

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

பாடல் இடம் பெற்ற படம் : 3
பாடலை எழுதியவர் : நடிகர் தனுஷ்
இசை அமைத்தவர் : அனிருத்
பாடலை பாடியவர் : நடிகர் தனுஷ்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



எனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.

தமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் ?! அவ்வாறு சொந்த குரலில் பாடும் (இப்போதைய) பல தமிழ் நடிகர்களில் முதன்மையானவர் கமலஹாசன்.


நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது பரிசோதனை முயற்சிகளை அவர் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறவர். அந்த முயற்சியில் தான் சொந்த குரலில் பாடல்களை பாடுவது என்பது. அதில் மிகபெரிய வெற்றியையும் பெரியவர் இவர்.

பல பாடல்களை தனது சொந்த குரலில் பாடியிருந்தாலும் எனக்கு பிடித்து சிறந்த பத்து பாடல்கள் + காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.



1. சிகப்பு ரோஜாக்கள் (1978)
நெகடிவ் ரோல்
பெரிய மூக்கு கண்ணாடி
பெல்பாட்டம் பேன்ட்
பூனை
ரோஜா செடி
பிடித்த பாடல் : நினைவோ ஒரு பறவை


அழகான காதல் பாடலில் இவரது குரலும் மிக இனிமையாக இருக்கும். கோரஸில் வரும் அந்த குரலும் நம்மை வசிகரிக்கும்.



2. விக்ரம் (1986) -
எழுத்தாளர் சுஜாதா
எலிகுகை
அறிவியல் சார்ந்த கிரைம்
தகடு தகடு
டிம்பிள் கபாடிய

பிடித்த பாடல் : கண்ணே தொட்டுக்கவா


அந்த காலகட்டத்தில் SPB அளவுக்கு பாடிய பாடல் இது. ரொம்ப இளமை ததும்பும் குரலில் இந்த காதல் டுயட் பாடல் ரொம்ப பிடிக்கும்.



3. அபூர்வ சகோதரர்கள் (1989) -
இரட்டை வேடம்
அப்பு கமல்
சார் நீங்க எங்கோயோ போயிடீங்க
பாடலில் கிராபிக்ஸ் முகம்
நாகேஷ் வில்லனாக நடித்து
கெளதமி

பிடித்த பாடல் : ராஜா கைய வச்சா



பாஸ்ட் பீட் சாங். சும்மா பட்டையை கிளப்பும் பாடல் இது. காரையும் பெண்ணையும் ஒப்பிட்டு வரும் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாலி சார்....நீங்க இன்றும் என்றும் வாலிப கவினனே.



4. மைக்கேல் மதன காமராஜன் (1990) -
நான்கு விதமான குரல் + நடிப்பு + உடல் மொழி
காமேஸ்வரா
பீம் பாய் பீம் பாய்
வரதகுட்டி நான் இந்த சமையல்கட்டு
திருபு திருபு

பிடித்த பாடல் : சுந்தரி நீயும்



மெலடி பாடல். கேட்க கேட்க என்ன சுகமா இருக்கும்!



5. தேவர் மகன் (1992) -
சிவாஜி சார்
'பங்க'+ அந்த மீசையும்.
குடும்ப பகை

பிடித்த பாடல் : இஞ்சி இடுப்பழகி



தாளம் போடா வைக்கும் ஜோடி பாடல். வார்த்தை உச்சரிப்புகள் அவ்வளவு தெளிவு.



6. சதிலீலாவதி (1995)
கோவை சரளா
சக்திவேல் கவுண்டர் கமலஹாசன் + காமெடி

பிடித்த பாடல் : மாறுகோ மாறுகோ



மூடு வரவைக்கும் பாடல். என்னமா தலைவரு பாடியிருபாரு! அட அட... கிக் ஏறுதே பாடலை கேட்கும் போதே....



7. ஹேராம் (2000)
முத்த காட்சி
சாருக்கான்
காந்தி தத்தா
சரித்திர கால பின்னணி
நீண்ட தலைமுடியுடன் கூடிய கமலின் போடோ

பிடித்த பாடல் : நீ பார்த்த



பியானோவின் இசையோடு கமலின் இனிய குரல் கரையும் இடமெல்லாம் மிக இனிமை.



8. அன்பே சிவம் (2003) - இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம் "அன்பே சிவம்". தமிழ் திரையுலகில் இந்த படம் தவிர்க்க முடியாதவை. இந்த படத்தை பிடிக்காதவர் யார் இருக்க முடியும்?
யாரும் தொட தயங்கக் கூடிய ஒரு கதை
வித்தியாசமான தையல் முகம்
மாதவனின் காமெடி

பிடித்த பாடல் : யார் யார் சிவம்



இதுவும் ஒரு வகை மெலடி பாடல். பாடலை கேட்ட கேட்ட நம்மையறியாமல் ஒருவித அமைதியான நிலைக்கு வரவைக்கும். இந்த பாடலை பற்றி இன்னும் இறைய சொல்லலாம். எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.



9. விருமாண்டி (2004)
தூக்குத் தண்டனை
சட்ட மீறல்கள்
திரைகதையை இரண்டு விதமாக சொல்ல்வது
சண்டியர்
ஜல்லிக்கட்டு

பிடித்த பாடல் : உன்னை விட



ஸ்ரேயா கோசலுடன் பாடியிரும் ஒரு காதல் மெலடி பாடல். கவிதையாய் படம் பிடித்திருப்பார்கள்.



10. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004) - ஆம் ஆண்டு வெளிவந்த சரண் இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பான காமெடி படம். ஒரு ரவுடி டாக்டரானா என்னவாகும்? படத்த பாருங்க வாய்விட்டு சிரியுங்கள்.
கிரேசி மோகன்
கட்டிபுடி வைத்தியம்
பாப்பு
ரவுடி vs டாக்டர்

பிடித்த பாடல் : கலக்கப் போவது யாரு



குஷியான பாடல். நாம்மையும் ஆடவைபார் இந்த பாடலில். அவ்வளவு புத்துணர்ச்சி இருக்கும் இவரது குரலில்.



இவர் பாடிய பெரும்பாலும் படக்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான்.
எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



நெருப்பு ( பாடல்கள் + கவிதைகள் + படங்கள் )

தீ (அ) நெருப்புக்கும் தமிழ் திரைப்பட பாடலுக்கும் கொஞ்சம் நெருக்கம் அதிகம்தான். நிறைய பாடல்கள் நெருப்பை (அ) தீயைக் கருவாக கொண்டு வெளிவந்துள்ளது. அவற்றில் ஒரு சில...

ஒரு தீக்குச்சி பற்றவைக்கும் போது அது ஏற்ப்படுத்தும் வண்ண ஜாலங்கள் எண்ணிலடங்கா.

உறங்கும் வரை
அமைதி..
உரசிவிட்டால்
அய்யோ - தீ


சற்றென்று நினைவுக்கு வந்தது : தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" பட பாடல்

நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது...


முத்தமிட்ட காரணத்தால்
இதழ் கருகியது
தீக்குச்சி!
- வினுதா


சற்றென்று நினைவுக்கு வந்தது : ஆரியா நடித்த "அறிந்தும் அறியாமலும்" பட பாடல்

தீப் பிடிக்க தீப் பிடிக்க
முத்தம் கொடுடா...


உன்னால் தீபங்கள்
எரியும் என்றால்
நீ
தீக்குச்சியாய் இருப்பதில்
ஆனந்தப்படு!!!
- வாணி நாதன்


சற்றென்று நினைவுக்கு வந்தது : அஜித் நடித்த "வரலாறு" பட பாடல்

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா...


நீ...
எரிந்து
விரியும் சுடரில்
புரியும் உன்
தியாகம்...
-சந்தான சங்கர்


சற்றென்று நினைவுக்கு வந்தது : அஜித் நடித்த "தீனா" பட பாடல்

வத்திகுச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசர வரைக்கும்...



இருட்டை நீக்க
தீப்பந்தம் தேவையென
கேட்கும் உன் மனதிற்கு..
தீக்குச்சி இருப்பதை
சொல்லிக்கொடு.....
-இரா.சம்பத்


சற்றென்று நினைவுக்கு வந்தது : பரத் நடித்த "வெயில்" பட பாடல்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும்...



தலைக்கனம் இருந்தால்
அழிவு நிச்சயம்
அறிவுறுத்தும் ஆசான்
தீக்குச்சி..
- லக்கி ஷாஜஹான்


சற்றென்று நினைவுக்கு வந்தது : அர்ஜுன் நடித்த "ரிதம்" பட பாடல்

ஐயோ பத்திகிச்சி பத்திகிச்சி
நெஞ்சோ சிக்கிகிச்சி சிக்கிகிச்சி...


நண்பரே பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.



Related Posts with Thumbnails
 
back to top