Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

பரதேசி படம் பற்றிய சில தகவல்கள்!

"அவன்-இவன்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் ஆறாவது படம் 'பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா, தன்ஷிகா, வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



இப்படம் குறித்து சுவையான பத்து தகவல்கள் உங்கள் பார்வைக்கு இதோ :-

01. ‘பரதேசி' படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்'. இரண்டாவதாக 'கல்லறைத்தோட்டம்' என வைத்தார்கள். இறுதியாகத்தான் ‘பரதேசி’ தலைப்பு உறுதியானது.

02. பாலா தன்னுடைய படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுணுக்கமாக சித்தரிப்பது வழக்கம். படத்தில் கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பு நன்றாக இருக்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார். இதற்காக ரொம்பவும் மெனக்கெடுவார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தவில்லையென்றால் நடிகர்களிடம் லேசாக கடிந்து கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தில் அதர்வாவை ஒரு வார்த்தைகூட திட்டவில்லையாம். பலமுறை ரீடேக் வாங்கியபோதும் அமைதியோடு அதர்வாவுக்கு சொல்லிக் கொடுத்தாராம் பாலா.

03. படம் முழுக்க கோணியையே உடையாக அணிந்து வாழ்ந்திருக்கும் அதர்வா, பாலாவின் நினைவாக அந்த உடையை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம்.

04. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் உடன் முதன்முதலாக இணைந்திருக்கும் பாலா, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவின் ஆசிக்குப் பிறகே பிறரிடம் காட்டும் முடிவில் இருக்கிறாராம்.

05. இந்த படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து பாலாவிடம் "அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு வழங்குங்கள். வெட்கத்தை விட்டு கேட்கிறேன்" என்று கேட்டிருக்கிறார். ஆகவே, அடுத்த படத்திலும் வைரமுத்துக்கே வாய்ப்பு வழங்க உள்ளாராம் பாலா.



06. இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், என்ன காரணமா தெரியவில்லை. கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்.

07. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்தபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டாராம் பாலா. படப்பிடிப்பு நடந்த சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் தன்னையும் மறந்து இரண்டு நாட்கள் படுத்து உறங்கி இருக்கிறார்.

08. இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாலா படங்களிலேயே மிகக்குறுகிய காலத்தில் (90 நாட்களில்) எடுத்த ஒரே படம் பரதேசிதான். எனவே, தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இதே வேகத்தில் செய்ய முடிவெடுத்திருக்கிறார் பாலா!

09. பாலா-வின் படம் என்றாலே, பெரும்பாலும் நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் விறுவிறுப்பாக செல்லும். இறுதியில் வலிமையான கருத்து இருக்கும். அந்த வரிசையில் 'பரதேசி'-யும் இடம்பெறும் என்பதை 100 சதவீதம் நம்பலாம்.

10. ரெட் டீ (‘எரியும் தணல்’) என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்பட்டப் படம். 1940களில் ஆங்கிலே‌‌யர் நம் மண்னை ஆண்டபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இப்படத்தின் கதைக்களமாக்கியுள்ளார்.

பாலாவின் பரதேசி படத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிய ஆரம்பித்துள்ளன. இப்படம் வருகிற 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது.


தெரியாத சில தகவல்கள்...


பாலாவின் பரதேசி ஒரு புறம் இப்படி இருக்க நம்மில் பலருக்கும் தெரியாத இன்னொரு பரதேசி படத்தை பற்றி பாப்போம்.

நடிகர் சிவாஜியின் முதல் படம் என்ன என்று கேட்டால் அனைவரும் யோசிக்காமல் சொல்வோம் பராசக்தி என்று.

உண்மை என்னவென்றால் நாடக துறையில் இருந்து நடிகர் சிவாஜி முதன்முதலில் டப்பிங் பேசுபவராக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் முதன்முதலில் நடித்த படம் "பரதேசி". இது ஒரு தெலுங்கு படமாகும்.

அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த படம் தான் பராசக்தி. திரைக்கு முதலில் பராசக்தி வந்த காரணத்தால் அதுவே அவர் நடித்த முதல் படமாக மாறிவிட்டது.

பரதேசி படத்தின் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் இது நடிகை அஞ்சலிதேவி அவர்கள் தயாரித்த படம் மற்றும் இந்த படத்தில்தான் பழம்பெரும் நடிகர் S.V. ரங்கா ராவ் அறிமுகமானார். இப்படி இரு பெரும் நடிகர்களை அறிமுகபடுத்திய ஒரு படம் தான் பரதேசி.



தன்னுடைய முதல் படமான 'பரதேசி' சரியாக கவனிக்கபடாமல் போனதால் நடிகர் சிவாஜி அதனை மீண்டும் "அந்தமான் காதலி" என்ற பெயரில் அதே கதையை வைத்து 25 வருடங்களுக்கு பிறகு 1977-ல் நடித்தார். அந்த படம் அப்பொழுது மிகபெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடந்த ஒரு சிறிய தவறு இன்று வரை பேசப்படுகிறது. அந்தமான் காதலி படத்தில் திரு. யேசுதாஸ் அவர்கள் பாடிய "திருகோவிலே ஓடிவா..." என்ற பாடல் ஒரு சூப்பர் ஹிட் பாடலாகும் அனால் அதனை 'திரு. யேசுதாஸ்' "தெருகோவிலே..." என்று பாடியிருப்பார்.

பரதேசி படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



வைரமுத்து - கவிதை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கவிபேரரசு வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றவர்.


நேற்று இரவு இவரது கவிதை தொகுப்பினை படிக்க நேரம் கிடைத்தது. அதில் எனக்கு பிடித்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு...

வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்!

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்!

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்!

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்!

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்!

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்!

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்!

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்!

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்!

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்!

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்!

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்!

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி!

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி!

நன்றி : கவிபேரரசு வைரமுத்து

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



வைரமுத்து - ரஜினி - கவிதை - பாடல்

வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய பாடல் “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்.

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி, R.M.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து, மெகா ஹிட் ஆன படம் "பாட்சா" என்பதை உலகறியும்.

ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் "பாட்சா" படத்திற்கு உண்டு.

இந்த “ரா ரா ரா ராமய்யா..." பாடலுக்கு தேவையான கருத்துகளை தனது கவிதையிலேயே எடுத்து புதுப்பித்த அல்லது அதன் ஆதி மூலமாய் அமைந்த வைரமுத்துவின் கவிதை இதோ...


அந்தந்த வயதுகளில்..!

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்...
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!



இந்த கவிதையை ரஜினிக்கு தகுந்தார் போல மாற்றி ஒரு தத்துவ பாடலாக உருவாக்கிய வைரமுத்து என்னவென்று சொல்ல....!!!
ரா ரா ரா ராமய்யா....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா...
இக்கட ரா ரா ரா ராமய்யா....
அதை புட்டு புட்டு வைக்கபோறேன் பாரய்யா ....

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா

என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சேவற்கொடி படத்தில் எனக்கு பிடித்த வைரமுத்துவின் பாடல்வரிகள்

நேற்று முன்தினம் வெளிவந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் வரிகளை உங்களுடன் கேட்டு ரசிப்பதில் மகிழ்ச்சியே.


கவினர் வைரமுத்துவின் இளமை துள்ளும் வரிகளும் அதற்கு ஏற்ப M.L.R.கார்த்திகேயன் குரலும் இந்த பாடலை மேலும் மேருகேட்டுகிறது.

நாயகியின் அழகை + அவளது செயல்களை வர்ணித்து பாடும் ஹீரோ பாடல் போல இருக்கு இது. நம்ம வைரமுத்து சார் சும்மா ஹீரோயின் அழகாய் மிக அழகாய் பாடலில் வர்ணித்து இருக்கிறார். அதனை நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்து கேளுங்கள்.

பாடல் வரிகளை சிதைக்காமல் மிக நேத்தியாய் இசை கோர்வை. பாடலில் அங்கங்கே 'சக்போன்' இசையை தூவி மேலும் அழகு சேர்த்திருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் C.சத்யா.

சத்யாவின் இசை மிகவும் தேர்ந்த இசை அமைப்பாளர் போல இருக்கு. வாழ்த்துக்கள் !!!!


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

அந்த மெலடி பாடலின் வரிகள் இதோ...


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு!
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு!
தூரத்தில் பார்த்த காதல் வராது!
பக்கத்துல பார்த்த காமம் வராது!
மானுமில்ல மயிலுமில்ல!
கூனுமில்ல குயிலுமில்ல!
இருந்தும் மனசு விழுந்து போயிசுது!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும்!
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும்!

அழுக்கு துணிய உடுத்தி அவ தளுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடித்த மனசு அட சொக்குது சொக்குதுடா !
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதுடா!

தூங்கி எழுந்தா பிள்ளை அழகு!
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு!
அவ சொல்லுக்கடங்கா முடியும் -
சுத்தி கசக்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்!
தேத்துபல்லும் கண்டு பித்து பிடிக்கும்!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !

வெளக்கமாறு புடுச்சி அவ வீதி பேருக்கும் போது
வளைவு நெளிவு பார்த்து மனம் வலுக்க பார்க்கதடா!
குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெரிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெரிச்சு போகுதடா!

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு!
அவ பூசும் ஒலிக்கும் வீதி அழகு !
ஒரு விக்கல் எடுக்கிற தோதும்
தும்மி முடிக்கிற தோதும்
அவஸ்தையிலும் அவள் அழகு !
குத்தம்குறையிலும் மெத்த அழகு !

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



காதலித்து பார் - வைரமுத்து கவிதை

எனக்கு பிடித்த கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை நினைக்கிறேன்.

இந்த கவிதையை பிரசாந்த் + சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் கவினரே இந்த கவிதையை சொல்வது போல அமைத்தார் பட இயக்குனர்.

காதலித்து பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்

தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்

பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?

அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்

சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்

சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஆயிரம் விளக்கு - விமர்சனம்

மதுரையை பின்னணியாக கொண்டு சத்யராஜ், சாந்தனு, சனா கான், சுமன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'ஆயிரம் விளக்கு'.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இனி...

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download


1. கே.பீ.சுந்தராம்பாள் பாடிய ஒரு பக்தி பாடலின் வழிகளில் தொடங்கி பிறகு ஒரு குத்து பாடலா மாணிக் விநாயகம் குரலில் இந்த பாடல் மலர்கிறது.
நான் மதுர மதுர
நீ மதுர மதுர
நான் நீ மதுரையில கண்ணுமுழிட்சோம்
மதுரையின் சிறப்புகளை அங்கங்கே தூவிவிட்டு பாடலுக்கு மெருகேற்றி மதுரையை சிறப்பித்திருக்கிறார் கவினர்.

மதுர மதுர என்று என்தனை மதுர இந்த பாடலில் வருகிறது என்று ஒரு போட்டி வைத்து பரிசளிக்கலாம்.

2. மதுரை மண்ணின் மனம் வீசும் வரிகளுடன் கிராமத்தின் சிறப்பை பற்றியும் பறைசாற்றும் வரிகளுடன் ஒரு பாடல். கேட்டவுடனே எனக்கு பிடித்துப்போன பாடல்.
பாப்பாவுக்கு ஒரு ஜிஹார்தண்டா கொடுப்பா
பாப்பாவுக்கு அதை எச்சம் வச்சு கொடுப்பா
இவள் தளுக்கு கொஞ்சம் மினுக்கு
என்று தொடங்கும் ஒரு கேலியும் கிண்டலும் நிறைந்த பாடல். கார்த்திக்கும் ரீட்டாவும் இணைந்து பாடியிருக்கும் பாடல்.


3.யேசுதாஸ் குரலில் ஒரு பாடல்.
உத்தம புத்திரனே
உயிர் தந்த சித்திரனே
தேன்மதுர பாடியனே
எனத்தொடங்கும் ஒரு சிறு சோகப்பாடல். தந்தையும் தனயனும் பிரிந்து சென்ற நேரத்தில் பாடும் பாடல் போல இருக்கு.

4. அடுத்து ஒரு காதல் மெலடி பாடல். ஹரிஷ் ராகவேந்திரா + சின்மயி குரல்களில் இதமாக ஒளிகிறது.
ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி
சகியே என் சகியே உன் சகலம் நானடி
வரிகளை சிதைக்காத இசை கோர்வை. கேட்ட கேட்ட சுகமா இருக்கு. ஒரு வித புது குரலில் சின்மயி பாடியிருப்பது அழகு.

5. கார்த்திக் குரலில் தன்னம்பிக்கை + சுய முயற்சி பற்றி சொல்லும் ஒரு அதிரடி பாடல்.
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
அசந்துபுட்ட கொட்டப்போற தேளுடா
என்று அதிரடியாய் தொடங்கும் ஒரு பாடல்.

சண்டைக்கு துணிந்துவிட்டால் - எனக்கு
சாப்பாடே அடிதடிதான்

என்று கவினர் தன் வீரத்தையும் மண்ணின் வாசத்தையும் கலந்து கொடுத்துள்ளார்.



6. மீண்டும் ஒரு யேசுதாஸ் பாடிய மெலடி பாடல்.
என்ன தவம் செய்தேன் என்னைபெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம் காண செய்த மகனே
சந்தோஷ நிமிடங்களில் ஒரு தந்தை தன் மகனின் பெருமை பற்றி குடும்பத்தில் ஆடி பாடி பாடும் ஒரு பாடல்.

என்விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன்விரல் கோர்த்து உறவாடத்தான்
வலிகளெல்லாம் மறந்து விளையாடதான்

சத்தியராஜ் பாடும் பாடல் போல இருக்கு. சற்றேண்டு கேட்டல் இது எஸ்.எ.ராஜ்குமார் பாடல் போல தோண்டும்.

7. காதல் ஏக்கப் பாடல்
போறாளே நெஞ்ச கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே
வாராளே நெஞ்ச அள்ளிக்கிட்டு அள்ளிக்கிட்டு வாராளே
எனத்தொடங்கும் ஒரு காதல் பாடல். கார்த்திக் குரலில் அழகால் ஒலிகிறது.

உன்னைப்போல என்னக்கொல்
அரளி விதை தேவையில்லை

என்று கவினர் காதலின் தவிப்பை மிக அழகாக கவி வரைந்திருக்கிறார்.


ஆயிரம் விளக்கு - பிரகாசமாய் ஒலிகிறது! நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!

சக்கரகட்டிக்கு இந்த ஆயிரம் விளக்குல ஒரு விளக்காவது ஒளி ஏத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



கவிதை வரிகளுக்கு மெட்டமைத்த A.R.ரகுமான்

ரொம்ப நாளா இந்த பாடலை பற்றி எழுத நினைத்து ... எழுதிவிட்டேன். நம்ப வைரமுத்து சார் என்னமா 'யாக்கை திரி' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கார் இந்த படத்தில்.

'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' என்ற கவிதை தொகுப்பை படித்து ரசித்த மணிரத்தினம் சார் நம்ப ஆஸ்கார் நாயகன் A.R.ரகுமானிடம் தந்து, அந்த கவிதை வரிகளுக்கு மெட்டமைத்து மேலும் மெருகேற்றி ஒரு அற்புதமான பாடலாக வடிவமைத்ததை ஆயுத எழுத்து என்ற படத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்.

அந்த பாடல் mp3 வடிவில்



'யாக்கை' என்றால் 'உடல்' என்று அர்த்தம். உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்து சாரை என்னவென்று சொல்ல... ! ஹி இஸ் தி கிரேட்!

அந்த பாடலின் வரிகள்...
பானாஹ்...

யாக்கை திரி காதல் சுடர்- அன்பே
ஜீவன் நதி காதல் கடல்- நெஞ்சே
பிறவி பிழை காதல் திருதம்- நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம்- அன்பே

யாக்கை திரி காதல் சுடர்
பானாஹ்...

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் இறவோம் - பானாஹ்...
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் உறவோம் - பானாஹ்...

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
சன்மம் சூன்யம் காதல் பின்யம்
மானுடம் மாயம் காதல் அமரம்

உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறி பயனம் போகும்

யாக்கை திரி காதல் சுடர் - அன்பே
ஜீவன் நதி காதல் கடல் - நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் - நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் - அன்பே

யாக்கை திரி காதல் சுடர் - பானாஹ்...

(தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)... (தொடுவோம் தொடர்வோம்)...

வாக்கியங்களற்ற வார்த்தைகளால் கட்டப்பட்ட ஒரு கவிதை பாடலாகி விட்டது. பாடலின் காணொளி



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்

மணிரத்தினம் இயக்கத்தில் எனக்கு பிடித்த ஒரு காதல் பாடல் பற்றி நீண்ட நாளாக எழுதவேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுகிறது..

பொய் சொல்லிக் காதலிக்கும் உலகத்தில் ஒரு காதலன் மெய்சொல்லிக் காதலித்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் வைரமுத்துவின் வைர வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு காதல் பாடல்.

இந்தப் பாடலைப், பாகிஸ்தான் பாடகர் அட்நான் சாமி உடன் சுஜாதா இணைந்து பாடியிருக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு பார்த்து ரசியுங்கள்.


நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதிகளில் வெள்ளப்பெருக்கு
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் -
மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும் - உன்
காமம் என்னை திருடும் போதும்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அற்யவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சதிதின் மேல் -
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

இந்த பாடல் இடம் பெற்ற படம் ஆய்த எழுத்து.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமுத்திரம் அம்பானியில் வைரமுத்துவின் வைரவரிகள்


நிஜ வாழ்க்கையில் நடிகர் கருணாஸ் ஒரு இசையமைப்பாளராகவேண்டும் என்ற கனவில் சினிமாவில் காலடி வைத்தார். ஆனால் காலம் அவரை இசைத் துறைக்கு பதில் நடிப்புத் துறைக்கு தள்ளியது. இருந்தாலும் தனது கனவை இப்போது நனவாக்கியுள்ளார் கருணாஸ். ஆம்! ராஜாதி ராஜா படத்தை தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்திற்கும் இசை நடிகர் கருணாஸ் தான்.


இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் ஒரு பாடலை பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.


ராகுல் நம்பியார் & கென் கருணாஸ் இணைந்து பாடியிருக்கும் ஒரு பாடல் "தண்ட தண்ட பாணி". இந்த பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைனனுக்கு எழுதிய பாடல். இதில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்...
மூளையுள்ள பிள்ளைக்கு
ஒரு மூலதனம் தேவையில்லை
பத்துவிறலே மூலதனம் அல்லவா

வேலை போல தெய்வம் இல்லை
வியர்வை போல தீர்த்தம் இல்லை
உன் தேகம் உனதானால்
அதுபோல நண்பன் இல்லை
உண்மை ஒரு கண்ணு
உழைப்பு ஒரு கண்ணு
ஓடியாடித் தேடு
உனக்கு தாண்டா விண்ணு

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

Thanks : cinema news



நவீன தாலாட்டு - கவியரசு வைரமுத்து


இந்தியாவுக்கு ஒரு ஆகத்து 15 வந்து விட்டது. இந்திய பெண்களுக்கு ஆகத்து 15 எப்போது?. பொருளாதார உதவி கிடைத்துவிட்டதால் பூட்டியிருந்த விலங்கு நொறுங்கி விடும் என்று கருதினர், போன நுற்றாண்டு பெண்.

ஆனால், பொருளாதார விடுதலை கூட கூட சில புதிய விலங்குகளை பூட்டியிருந்தது என்று இனம் கண்டு கொண்டவள் இந்த நுற்றாண்டு பெண். சிறகு இருந்தும் பறக்க முடியவில்லை என்று விமியவன் வீட்டுக்குள் இருந்த பெண்.

பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லை என்று விசுபுகிறவள் வேலைக்கு போகிற பெண்.

வேலைக்கு போகும் பெண்ண தன் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை கொஞ்சம் நஞ்சமில்லை. போன ௧0 ஆண்டில் ஒரு காலும் இந்த நுற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை திரிசங்கு சொர்கத்தில் திவிகிறாள்.

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.

இந்த அவசர நுற்றாண்டில் இருதயம் துடிக்கும் இயந்திரங்களாய் மாறிவிட்டது. மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு வயலின் வாசிக்கிறான். அடுப்பில் உட்கார்ந்துகொண்டு காதலிக்கிறான். கணவனும் மனைவியும் இண்டர்போளில்தாம்பத்தியம் நடுத்துகிறார்கள்.
குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது. காதலிக்கு வாங்கிய மல்லிகை பூ டீசல் புகையில் கருபாகிவிடுகிறது. இப்படி நிறம் மாறும் ஒரு வாழ்க்கையில் தாய் பாடும் ஒரு தாலாட்டு மட்டும் தடம் மாறிபோகாமல் இருக்குமா என்ன? எனவே தான் ஒரு குழந்தைக்கு முன்னிரவில் பாட பட வேண்டிய தாலாட்டு முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது.

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிட்டு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



ராத்திரி ராகம் - அலைபாயதே - வைரமுத்து

இரவு. மொட்டைமாடி. தனிமை. தொலைந்து போன நட்சத்திரங்கள். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

வானம். உடைந்த நிலா. சிறு துண்டு மேகங்கள். தென்னக்கீருகளை வம்புக்கு இழுக்கும் தென்றல். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

ஒவ்வொரு இரவிலும் ஒரு புல்லாங்குழல் காற்றில் கசிந்து கசிந்து அவள் காதில் விழுகிறது. கண்ணுக்கு தெரியாத அவள் புண்ணுக்கு அது களிம்பு தடவுகிறது. சொல்ல தெரியாத சோகத்தை அது அள்ளிக்கொண்டு போகிறது.

அந்த புல்லங்குழல் கேட்டால், இமை பறவை அடங்கிவிட, மனப்பறவை துடிகிறதே? ஏன்?சொல்லாமல் வரும் விருந்தாளியை போல அவள் கண்ணிலிருந்து ஒரு துளி, அவள் கன்னத்தில் குதிகிறதே? ஏன்?

சோகங்கள் முழுக்க இறக்கிவிடும் அளவுக்கு அத்தனை வார்த்தைகளும் அகலமில்லை. அர்த்தகளின் வரையறைக்கு உட்பட்டது வார்த்தை. அர்த்தங்களின் வரையறைக்கு உட்பாடாததே வாழ்க்கை. எனவே தான் வரையறுக்கப்பட்ட வார்த்தைககளைகொண்டு வரையறுக்க படாத வாழ்க்கையை விளக்குவது சாத்தியமில்லை. இதோ, இந்த கவிதையில் வரும் இவளும் வார்த்தைகளில் கைவிடப்பட்டவள் அல்லது வார்த்தைகளால் கைவிடப்பட்டவள்.

கவிப்பேரரசு வைரமுத்து, தன் பழுத்த வார்த்தைகளில் ஒரு பெண்ணின் ஆத்மா பேசுகிறது. உயிரை தடவும் இந்த குரலில் ஒரு பெண்ணின் இதயம் துடிக்கிறது. புல்லாங்குழல்-க்கும் அவளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்புல்லாங்குழல் பல கண்களால் அழுகிறது. இவள் இரு கண்களால் அழுகிறாள்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

கேட்டு கேட்டு கலங்குகிறேன் - நான்
கேட்பதை அவனோ அறியவில்லை!
காட்டு மூக்கிளின் காதுக்குள்ளே - அவன்
ஊதும் ரகசியம் ப்புரியவில்லை!

இதயம் கணக்கும் இரவுகளில் - அந்த
இங்கீத ராகம் டென்வார்க்கும்!
புதிய ராகத்தில் புல்லெடுத்து - அந்த
புல்லான்குலலே பூபூக்கும்!

கானம் கேட்கும் பொழுதுகளில் - என்
கண்கள் அழுவதை அறியவில்லை!
ஏனோ கண்ணீர் கசிகிறது - இது
எந்த ஜாதியோ தெரியவில்லை!

உறக்கம் இல்ல முன்னிரவில் - என்
உள் மதில் ஒரு மாறுதலாய்!
இறக்கம் இல்லா இரவுகளில் - இது
எவனோ அனுப்பும் ஆறுதலாய் !

ஏகாந்தத்தின் இனிமைலே - என்
இமையே மெல்ல இறங்கிவிடு!
மோக குழலில் ஊறிவரும் - இசை
முடியும் போது உறங்கிவிடும்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

'அலைபாயதே' என்ற படத்தில் இந்த கவிதையை பாடலாக பதிவு செய்திருப்பார் டைரக்டர் மணிரத்தினம். இதற்கு மிகசிறப்பான முறையில் இசை சேர்த்து நம்மை ரசிக்க வைத்திருப்பார் A.R.ரகுமான். நேரம் கிடைத்தால் இந்த கவிதைகளோடு அந்த பாடலயும் கேட்டு மகிழுங்கள் என்னைபோலவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



நடைப்பயிற்சி பற்றி - வைரமுத்து

நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும்.

அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி. பூமிக்கு வலிக்குமென்று பொடிநடை போவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும்; காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.

63 தசைகள் இயங்கினால் தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம்.நடைப்பயிற்சியின் போதே லாகவமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம். நடைப்பயிற்சியில் பேசாதீர்கள். உங்கள் ஆக்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும்.

ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள். சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்; இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீர்கள். உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள். இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்கு மேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.

இப்படி... சொன்னது வேற யாருங்க..? நம்ப கவிப்பேரரசு வைரமுத்து தான். அவர் எழுதிய ஒரு கவிதை "உடல் எழுத்து". அதில் மேல் சொன்னது போல மிக அழகாக தனக்கே உரிய கவிதை நடையில் அ முதல் ஃ வரை அவர் எழுதியதை உங்களுடன் ....

உடல் எழுத்து
(அ முதல் ஆஹா வரை..!! )

திகாலை எழு.
காயம் தொழு.
ருதயம் துடிக்க விடு.
ரழுந்த பல் தேய்.
டல் வேர்வை கழி.
ளைச்சதை ஒழி.
ருதுபோல் உழை.
ழைபோல் உண்.
ம்புலன் பேணு.
ழித்துவிடு புகை & மதுவை.
ட்டம் போல் நட.
ஒளதடம் பசி.
தாற்றின் எஃகாவாய்.

நன்றி : முத்தால் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



என் தாய்க்கு ஒரு கவிதை


தாயை இழந்த (என்னை போல) வாடும் இதயக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதைகளின் ஒரு தொகுப்பு "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்". இவர் செதுக்கிய இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை நினைக்கிறேன்.


பெற்ற தாயின் அருமை, அருகில் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை. சுயநலமற்ற தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும் பெறமுடியாது.

அன்னையை பற்றி ஒரு கவிதை "முதன் முதலாய் அம்மாவுக்கு... " என்ற கவிதையை படிக்கும்போது என் இதயம் கனத்தது. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்த்திவலைகள். இதோ

முதன்முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரந்தான் கவி சொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே!
குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல ...
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கண்ணு காது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்த ஒன்ன
நெனச்சா அழுக வரும் ...

கதகதன்னு களி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா...

கொத்தமல்லி வறுத்து வச்சுக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழ கொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்...

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும் ...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்..
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போன பின்னே
அஞ்சாறு வருசம் உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
....(மௌனம்)
....
வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- வைரமுத்து

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



Related Posts with Thumbnails
 
back to top