Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

சைவம் (2014) - விமர்சனம்

தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் 'சைவம்'. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய் தெவத்திருமகள் போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருக்கிறார்.

"சைவம்" முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம். எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெளிவந்திருக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வேலை நிமித்தமாக வெளியூரிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்தங்கள், திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதால், சந்தோஷமும் கொண்டாட்டமுமாக கலகலப்பாக இருக்கிறது வீடு.

ஒருநாள் கோயிலுக்குச் சென்றிருக்கும் சமயத்தில், குழந்தை சாராவின் பாவாடையில் தீப்பற்றிக் கொள்ள, பதைபதைக்கும் தாத்தா நாசர் தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டைத் தவறவிடுகிறார். அதைப் பார்த்த அர்ச்சகர், "பாவாடையில் தீப்பற்றுவதும், அர்ச்சனைத் தட்டு தவறுவதும் நல்லதல்ல' என்று சொல்லி, "கடவுளுக்கு ஏதோ வேண்டுதல் மிச்சமிருக்கிறது. அதை உடனடியாக நிறைவேற்றுங்கள்' என்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, விபத்தில் இருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். விபத்தில் இருந்து காத்ததற்காக எல்லைச்சாமிக்கு சேவலொன்றை நேர்ந்து விடுகிறார்கள். ஆனால், அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் மறந்துவிடுகிறார்கள். அதை சாராவின் பாட்டி நினைவு படுத்த, அந்த வருட திருவிழாவில் சேவலைப் பலி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்கிறார்கள்.

மறுநாள் காலையில் பார்த்தால் சேவலைக் காணவில்லை. சேவலைத் தேடி வீடு வீடாக, தெருத் தெருவாக அனைவரும் சுற்றுகின்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க, திருவிழா நாளும் வருகிறது. சேவல் கிடைத்ததா? அதைப் பலிகொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்களா? என்பது சுவாரஸ்யமான நகைச்சுவைக் கதை

படத்துல எனக்கு பிடித்த சில ....

குழந்தை நட்சத்திரம் சாரா
படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சாராதான். சேவலிடம் அன்பு காட்டுவது, அதைப் பலிகொடுக்க விடாமல் காப்பாற்றப் போராடுவது, தன் அத்தை மகன் செய்த தவறுக்குத் தான் தண்டனை அனுபவிப்பது, நிதர்சனத்தைப் பெரியவர்களுக்கு உணர்த்துவது என "லவ் யூ சாரா!'

நாசர்
சாராவின் தாத்தாவாக நாசர் வழக்கம்போல ஜெயித்திருக்கிறார். சொந்தங்கள் சேர்ந்த மகிழ்ச்சியில் கிராமத்து தாத்தாக்களைக் கண்முன் நிறுத்துகிறார். நாசரின் மகன் லுத்புதீன் பாஷா இந்தப் படத்தில் நாசருக்குப் பேரனாக அறிமுகமாகியிருக்கிறார்.


சாராவின் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா, அத்தை, அவர்களுடைய குழந்தைகள் என எல்லோருமே தங்களுக்குத் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சிறுவன் ரே பாலின் அட்டகாசங்கள் அதிர வைக்கின்றன. வேலைக்காரராக வரும் ஜார்ஜ், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மாலதி இருவரின் நடிப்பும் அட்டகாசம்.

சண்முகராஜனின் வெற்றிலைக் காமெடி, கோழியைத் தேடிச் செல்லும்போது நிகழும் கலாட்டாக்கள் என சிரிப்புச் சரவெடிக்குப் பஞ்சமே இல்லை.

இயக்குநர் விஜய்
அருமையான திரைக்கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். செண்டிமெண்டான கதையை கலகல காமெடி கலந்து படமாக்கியுள்ளார். ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள். ஆபாச வசனங்கள், குத்துப்பாட்டு, பஞ்ச், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார். சேவலைக் காக்க சாரா படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது, நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

இசை ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகாக இருக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில், உத்ரா உன்னிகிருஷ்ணனின் குரலில் "அழகே... அழகே...' பாடல் மனதுக்கு இதமாக அமைவதோடு, வாழ்வின் ரசனையையும் உணர்த்திச் செல்கிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்ட வீடும், கிராமமும் ஓவியங்களாகத் தெரிகின்றன.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'சைவம்' - குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



கத்தி vs காப்பி

ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் தயாராகி வரும் 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான நேற்று ஜூன் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.


கருப்பும், வெள்ளையுமாக ஒரு தினசரி பேப்பரை கட்டிங் செய்தது போல உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கத்தி பட போஸ்டரும் சில போஸ்டர்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என பரபரப்பாய் பேசப்பட்டது. சில ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டது அதில் ஒன்று இதோ...


கத்தி டீசர் வீடியோ அமெரிக்க பேப்பர் விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி! ஆதாரத்துடன் மாட்டிக்கொண்ட அனிமேஷன் பிஸ்தாக்கள்!

சரி இது பேஸ் டைப்போகிராபி என்ப்படும் ஒரு ஸ்டைல் தான்.. இது போல பலவிளம்பரங்கள் வந்துவிட்டன என்ற வகையில் இதை நாம் அந்த அளவுக்கு திட்ட வேண்டாம் கண்டுகொள்ளாமல் போகலாம் என நினைத்த போது தான் இன்னொரு விசயம் நம் கவனத்திற்கு வந்தது.

நேற்று போஸ்டருடன் ஒரு புதுமையான அருமையான டீசர் அனிமேசனும் வெளியானது. சென்னை நகரை அப்படியே நியூஸ்பேப்பரில் செதுக்கும் ஐடியாவில் உருவான டீசர். அட என நாம் ஆச்சர்யப்பட்டு நாமும் அதைப்பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அந்த 'அட' ஒருநாள் ஆவதற்குள் 'அடச்சீ' என்றாகிவிட்டது. காரணம் அது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என் பத்திரிக்கையின் விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி என்பதால் தான்.

யோவ் விஜய் படம்னா எதையாச்சும் நெகடிவ்வா பேச ஆரம்பிச்சுடுவீங்களே என கோபம் கொப்பளிக்கும் முன்பாக இந்த வீடியோவே பாருங்கள்.



இப்போது கத்தி படத்தின் டீசர் வீடியோவை பாருங்கள்



இதில் நடிகர் விஜய்யை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் படத்தில் இப்படி காப்பியடித்திருக்கிறார்கள் என்ற அவமானம்தான் அவருக்கு. ஆனால் இதில் விமர்சிக்கப்படவேண்டியது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்.

இந்திய அளவில் பெரும் டைரக்டராய் உருவாகியிருக்கும் முருகதாஸ் இதுபோன்ற மட்டமான சர்ச்சைகளை தன் படத்திற்கு விரும்பமாட்டார் என் நம்புகிறோம். ஆனால் இதை அவர் தெரிந்தே செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அல்லது இது அவருக்கு தெரியாமல் பல லட்சங்களை வாங்கிக்கொண்டு இதை செய்து கொடுத்த அனிமேசன் பிஸ்தாக்களின் உட்டாலக்கடி வேலையாக இருந்தாலும் இதற்கு கிரியேட்டிவ் ஹெட்டான டைரக்டராய் அவர்தான் பொருப்பு. எனவே இனி இதுபொன்ற சங்கடங்களை தவிர்பாரா?
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : soundcameraaction.com



பஞ்ச் வசனங்கள் (2014)

பொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் "வீரம்", விஜய்யின் "ஜில்லா" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.


பஞ்ச் வசனம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியேரது படங்களில் பஞ்ச் கண்டிப்பாக இடம்பெறும். அதுபோலவே சமீப காலங்களாக அஜீத், விஜய் ஆகியோரது படங்களிலும் பஞ்ச் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும வீரம், ஜில்லா படங்களில் இந்த பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சில உங்களுக்காக...

"வீரம்" பஞ்ச் வசனங்கள்

  • சந்தோஷம் வந்தா நாலுப்பேரோட பகிர்ந்துக்கணும். கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கணும். அவன்தான் மனுஷன்.

  • சுடுக்காட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டாங்க. வழியைச் சொன்னேன். இந்நேரம் போய் சேர்ந்திருப்பாங்க.

  • நம்மக்கூட இருக்கிறவங்களை நாமப் பார்த்துகிட்டா, நமக்கு மேல இருக்குறவன் நம்மைப் பார்த்துப்பான்.

  • எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

  • நீ என்ன ஜாதின்னு நினைக்கிறீயோ நான் அந்த ஜாதி. நீ தேவன்னு நினைச்சா நான் தேவன், நீ நாடார்னு நினைச்சா நான் நாடார், நீ தலித்னு நினைச்சா நான் தலித், நீ வன்னியர்னு நினைச்சா நான் வன்னியர். நான் உலகத்துல இருக்கிற ஒரே ஜாதி. உழைக்கிற ஜாதி’

"ஜில்லா" பஞ்ச் வசனங்கள்

  • எதிரிய எதிர்ல வச்சுக்கலாம்- ஆனா துரோகிய தூரத்துலக்கூட வச்சுக்கக்கூடாது.

  • ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒண்ணு குணமாகிப் போகனும், இல்ல பொணமாகிப் போகனும்.

  • தீயிலயும், பகையிலயும் மிச்சம் வைக்கக்கூடாது.

  • சிவனையும் பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போயிட்டே இருப்பேன்.

  • நாட்டுல வண்டி ஓட்டத் தெரியாதவன் கூட உண்டு. பிகரை ஓட்டத் தெரியாதவன் யாரும் இல்ல.

  • போலீஸ் அடிச்சுப்பார்திதிருப்பே. போலீசையயே அடிச்சு பார்த்திருக்கியா?.

  • சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன். ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ணமாட்டேன்.

  • மத்தவங்ககிட்டே தோத்தாத்தான் தோல்வி, சொந்தப்பையன்கிட்டே தோத்தாலும் அது வெற்றிதான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Dinamani



ஜில்லா (2014) விமர்சனம்

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தில் மோகன்லால் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

சுரேஷ் சவுத்ரி, ஜீவன் ரமேஷ், ஜீவா. மகத், சூரி, தம்பிராமய்யா, சம்பத், சரண், ரவிமரியா, பிரதீப்ராவத், ஜோமல்லூரி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையில் கவிஞர் வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.டி.நேசன் டைரக்டு செய்கிறார். ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதை.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது.

தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் மோகன்லால் கட்டளையிடும் வேலைகளை செய்து முடிப்பவராக விளங்குகிறார் விஜய். மோகன்லாலுக்கு மஹத், நிவேதா தாமஸ் என இரண்டு பிள்ளைகள்.

மதுரை வீதியில் ஒருநாள் காஜல் அகர்வாலை பார்க்கும் விஜய் அவள்மீது காதல் கொள்கிறார். மஹத், நிவேதா தாமஸிடம் சென்று காஜலின் அழகை வர்ணிக்கிறார். இதனால் அவர்களுக்கு காஜலைப் பார்க்கும் ஆசை துளிர்விடவே, காஜலின் வீட்டுக்கு விஜய்யை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, அவளை போலீஸ் உடையில் பார்த்ததும், அவள் மீது வெறுப்பு கொள்கிறார் விஜய்.

மறுமுனையில் மதுரைக்கு போலீஸ் கமிஷனராக வரும் பிரதீப் ராவத், விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் வந்து மோகன்லாலை கைது செய்து அழைத்துப் போகிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகாமல் போலீஸ் வண்டியிலேயே 5 மணி நேரம் மதுரையை வலம் வருகிறார். அப்போது மோகன்லாலிடம் ரவுடித்தனத்தை விட்டுவிடுமாறு பிரதீப் ராவத் கூறுகிறார். ஆனால், மோகன்லால் ரவுடிசத்தை விடமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். இறுதியில், மோகன்லாலை எச்சரித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விடுகிறார்.


இதை அறியும் விஜய், தன் அப்பாவை கைது செய்த பிரதீப் ராவத்தின் கையை வெட்டி விடுகிறார். இருந்தும், தான் கைதான அவமானம் தாங்கமுடியாத மோகன்லால் தன்னுடைய ஆள் ஒருவர் போலீஸ் பணியில் இருந்தால் இதுபோன்று நடக்காது என முடிவெடுத்து, விஜய்யை போலீஸ் பணியில் அமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், போலீஸ் என்ற வார்த்தையே பிடிக்காத விஜய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

மோகன்லாலின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக போலீஸ் செலக்ஷனில் கலந்து கொள்கிறார். இருந்தாலும் மோகன்லால், மந்திரியான சம்பத்தின் உதவியால் விஜய்யை கமிஷனராக ஆக்குகிறார். கமிஷனராகும் விஜய், போலீஸ் உடை உடுத்தாமல், சாதாரண உடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவதாக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் மஹத் தனது அடியாட்களுடன் சென்று ஒரு இடத்தை வாங்குவதற்காக அடி-தடி நடத்தி அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார். இந்த கலவரத்தில் அந்த இடத்தில் இருக்கும் சிலிண்டர்களில் உள்ள வாயு கசிந்து சிலிண்டர்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம், பேருந்து, சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இந்த தீயிற்கு இரையாகின்றனர். அதில், பல குழந்தைகளும் பலியாகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் விஜய் இதற்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர்மீது கோபப்படுகிறார்.

எனவே, அதுவரை போலீஸ் உடையை போடாத விஜய், அந்த உடையை அணிந்துகொண்டு மோகன்லாலிடம் சென்று இனிமேல் இதுபோன்ற காரியங்களில் இறங்கவேண்டாம் என்று சொல்கிறார். தன்னால் வளர்ந்தவன் இன்று இப்படி தன்னை மிரட்டுகிறானே என்று விஜய் மீது கோபம் கொள்கிறார் மோகன்லால். இறுதியில், உன்னால் முடிந்ததை நீ செய்துகொள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று சவால் விட்டு இருவரும் பிரிகிறார்கள்.

இறுதியில், தன் அப்பாவை மாற்றினாரா? அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா? என்ற மீதிக்கதையை விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

விஜய் vs மோகன்லால்
விஜய் காமெடி, டான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் வெளுத்து வாங்குகிறார். போலீஸ் கெட்டப்பில் இவரை ஏற்கெனவே ரசித்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து படைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக மோகன்லாலும் நடிப்பில் களைகட்டுகிறார். இருவரும் சவால் விடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். மோகன்லால் வில்லனாக மிரட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் தனது அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். பாடல் காட்சிகளிலும், போலீஸ் உடையிலும் அழகோ அழகு.

இதர நட்சத்திரங்கள்
சூரி, வித்யூத் ஜம்வால் ஆகியோர் ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கிறார்கள். சம்பத் கதைக்கு ஒரு திருப்புமுனையாக வருகிறார். மந்திரி கெட்டப்பில் வில்லத்தனம் காட்டும் இவருடைய நடிப்பு அபாரம்.

பூர்ணிமா பாக்யராஜ் அம்மா கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். விஜய் தம்பி, தங்கையாக வரும் மஹத், நிவேதா தாமஸ் இருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் நேசன்
புதுமுக இயக்குனரான நேசன் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த மசாலாவாக படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.

இசை டி.இமான்
டி.இமான் இசையில் விஜய்-மோகன்லால் அறிமுகமாகும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அந்த பாடல் படமாக்கிய விதம் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ‘ஜில்லா’ களைகட்டுகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



2013–ல் கலக்கிய ஹீரோக்கள்!

2013ல் ஹீரோக்களின் ரேஸ் பலமாகத்தான் இருந்தது. சிலர் ஓடி ஜெயித்தார்கள், சிலர் தடுக்கி விழுந்தார்கள். சிலர் விழுந்து எழுந்து ஓடினார்கள். இந்த சுவாரஸ்மான ரேஸ் பற்றி பார்ப்போம்.

ரஜினி:

இந்த ஆண்டும் ரஜினி படம் வெளிவரவில்லை. நவம்பர் 12ல் அவரது கோச்சடையான் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கடைசியில் ஆடியோ கூட வெளிவராதது ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றம். கோச்சடையானை மெருகேற்றுகிறோம், மெருகேற்றுகிறோம் என்று சொல்லியே 2 வருடத்தை ஓட்டிவிட்டார்கள். 2014ம் ஆண்டிலாவது கோச்சடையான் வெளிவரும் என்று நம்புவோம்.

கமல்:

சில அமைப்புகளின் அச்சுறுத்தல்கள், அரசின் தடைகள், வெளிநாட்டுக்கு ஓடுவேன், டிடிஎச்சில் வெளியிடுவேன் என்ற கமலின் அறிவுப்பு என பல தடதடக்களை தாண்டி ரிலீசானது விஸ்வரூபம். இந்த பரபரப்புகள் தந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியே விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்கிறது. அதே வேகத்தில் விஸ்வரூபத்தில் மீதமிருக்கம் காட்சிகளோடு இன்னும் சில காட்சிகளை சேர்த்து விஸ்வரூபம் 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.

விஜய்:

தலைவா என்ற தலைப்பே விஜய்யின் அரசியல் அச்சாரம் என்று பரபரப்பை கிளப்பியது. அதே பரபரப்பில் படம் வெளியாக இருந்த நேரத்தில் விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகளை தலைவாவும் சந்தித்தது. அரசு தடை, விஜய் உண்ணாவிரத அறிவிப்பு, தயாரிப்பாளரின் கண்ணீர் பேட்டி என அடுத்தடுத்த திருப்பங்களுடன் பத்து நாட்களுக்கு பிறகு தலைவா ரிலீஸ் ஆனது. விஸ்வரூபத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி உதவியதைப்போல தலைவாவுக்கு உதவவில்லை.

அஜீத்:

பெயர் குழப்பத்தில் ஆரம்பித்த ஆரம்பம். தடதடவென ரிலீசாகி. அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தலயின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், நயன்தாராவின் அக்மார்க் கிளாமர். ஆர்யா டாப்ஸியின் ரொமான்ஸ் என பக்குவம் சரியாக சேர ஆரம்பம் ரசிகனுக்கு நல்ல விருந்தாக அமைந்து விட்டது.


சூர்யா:

சிங்கிள் படம் தந்தாலும் சூர்யாவின் சிங்கம் 2 பாய்ச்சல் முதல் பாய்ச்சலைவிட அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் "ஓங்கி அடிச்சா ஒண்ணறை டன் வெயிட்" என்றவர் இரண்டாம் பாகத்தில் "பாய்ந்தடிச்சா பத்தரை டன் வெயிட்"னு புரூப் பண்ணினார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் தயாரிப்பாளரின் கேஸ் பாக்சை நிரப்பிய விதத்திலும் சிங்கத்தின் கர்ஜனை பலமாக இருந்தது.

விக்ரம்:

விக்ரம் நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் டேவிட். சதா தண்ணியடித்து அலையும் அந்த கோவா டேவிட் வேடம் விக்ரமின் இமேஜை கோவா கடலுக்குள் தூக்கி போட்டது. ஐ வந்து கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆர்யா:

சேட்டையும், இரண்டாம் உலகமும் ஆர்யாவை அமுக்கியபோதும் ராஜாராணி கை தூக்கிவிட்டது. இரண்டாம் உலகத்தின் இரண்டு வருட உழைப்பு வீணாகி ஆர்யாவுக்கு அது இன்னொரு நான் கடவுள் ஆகிப்போனது. சேட்டையில் சந்தானத்துடன் நடித்த பாத்ரூம் காமெடிகள் கண்டு ரசிகர்கள் முகம் சுழித்தார்கள்.

தனுஷ்:

மரியானும், நய்யாண்டியும் தமிழ் நாட்டில் மழையில் நனைந்பட்டாசாய் நமத்துப்போக இந்தி ராஞ்சனா ராக்கெட் வானத்தில் வண்ணம் கூட்டியது. பாலிவுட்டில் சுள்ளானின் கணக்கை 2013 துவக்கி வைத்தது.

கார்த்தி:

அலெக்ஸ் பாண்டியனும், அழகுராஜாவும் கார்த்தியை கைவிட பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் தெம்பானார். கதை தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை 2013ல் கற்றுக் கொண்டார்.

ஜீவா:

டேவிட் அவுட் கொடுக்க என்றென்றும் புன்னகையில் மெல்ல சிரித்தார். தொடர் தோல்விகளுக்கு அரைப்புள்ளி வைத்தார்.

சசிகுமார்:

குட்டிப்புலி மீடியாக்களுக்கு பிடிக்கவில்லை. ஏ செண்டர் மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பி அண்ட் சியில் அள்ளியது கலெக்ஷனை. சசிகுமார் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சித்தார்த்:

தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் இவர் ஆந்திரத்து சிம்பு. இப்போதுதான் தமிழ்நாட்டு பக்கம் வெற்றிகளை பார்க்கிறார். உதயம் என்.எச் 4 ஆக்ஷன், தீயா வேலை செய்யணும் குமாரு காமெடியென சித்தார்த்துக்கு 2013 சிரிப்பு ஆண்டுதான்.

ஜெயம்ரவி:

இவருக்கு இது சோகமான ஆண்டு இரண்டு வருடங்கள் அமீருடன் இணைந்து, கடுமையா உழைத்த ஆதிபகவன் மட்டும் ரிலீசானது. அவர் மிகவும் எதிர்பார்த்த ஆதிபகவன் அவரை கைவிட்டது.

விஷால்:

சமர் தராத வெற்றியை பட்டத்து யானை தரும் என்று நம்பினார். அது கீழே தள்ளியது. விழந்தவரை காப்பாற்றியது பாண்டிய நாடு. சொந்தப் படம் என்பதால் பாண்டியநாட்டு கலெக்ஷனை வைத்து பட்ட கடன்களை அடைத்து விட்டு உற்சாகமாகிவிட்டார்.

சிவா:

தில்லுமுல்லு வெற்றியுடன் 2013 ருசிக்க ஆரம்பித்தவருக்கு அடுத்து வந்த சொன்னா புரியாது, வணக்கம் சென்னை இரண்டும் தில்லுமுல்லு செய்து திக்குமுக்காட வைத்து விட்டது.
(அடுத்து வருகிற மூன்று பேரும்தான் 2014 ரேஸில் முன்னால் ஓடக்கூடியவர்கள். போட்டியும் இவர்களுக்குள்தான்)

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதியின் தொடர் விஜயத்தின் வரிசையில் இந்த ஆண்டு கணக்கில் சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும். இரண்டுமே துட்டு, ஹிட்டு இரண்டையும் சந்தித்து சாரின் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டது.

சிவகார்த்திகேயன்:

இந்த வருடம் ஹாட்ரிக் ஹிட் அடித்த ஒரே ஹீரோ. கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் தொட்டதெல்லாம் பொன்னானது சாரி... நடிச்சதெல்லாம் ஹிட்டானது. முதல் படத்துக்கு 5 லட்சமும், அடுத்து படத்துக்கு 50 லட்சமும் சம்பளம் வாங்கியவர் இப்போது வாங்குவது 5 கோடி.

விமல்:

நிகழ்கால ஜெமினி கணேசன் இவர். இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் இவர்தான். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, ஜன்னல் ஓரம், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல் என மொத்தம் 5 படங்கள். கே.பி.கி.ர, தேசிங்கு ராஜா ஹிட் படங்கள். ஜன்னலோரம், மூன்று பேர் மூன்று காதல் ஆவரேஜ். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு பிளாப் என வெரைட்டி ரைஸ் பரிமாறினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google & Dinamalar



தலைவா-வில் இவ்வளவு விஷயம் இருக்கா...!!!

விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'தலைவா' படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளன திரையரங்குகள்.

விஜய்யையும் அவர் தந்தையையும் முதல்வர் சந்திக்க மறுத்த தகவல் வெளியான பிறகு இந்தக் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வேறு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் 'தலைவா' படம் ரிலீஸ் ஆக உள்ள அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்துல...?


வெயிட்... 20 விஷயங்கள் இருக்கு. வரிசையா ஒவ்வொன்ன சொல்றேன் கேட்டுக்கோ...
  1. சிரிக்க வைக்க சந்தானம் இருக்கும் போது கவலை எதுக்கு பாஸ்.

  2. 'மதராசப்பட்டணம்' ஏ.எல்.விஜயுடன் விஜய் இணையும் முதல் படம்.

  3. தலைவாவை தயா‌ரித்திருக்கும் மிஸ்‌ரி புரொடக்சன் சந்திரப்பிரகாஷ் ஜெயின் பைனான்சியர். இவர் கடைசியாக தயாரித்த படம் சத்தியராஜ்-குஷ்பு நடித்த 'ரிக்சா மாமா'. அதன் பிறகு படமே தயா‌ரிக்காமல் இருந்தவருக்கு விஜய் படம் கனவு புராஜெக்ட்.

  4. 'தெய்வத்திருமகள்' அமலாபாலுடன் விஜய் இணையும் முதல் படம். படத்தின் ஆரம்பத்தில் சமந்தா ரூத் பிரபு, யாமினி கௌதம் போன்றவர்களின் பெயர்களும் கதாநாயகி ரோலுக்கு அடிபட்டது. இந்த ரேஸில் ஜெயித்தது என்னவோ நம்ம அமலாபால் தான்.

  5. அமலாபால் முதல்முறையாக இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.


  6. ஆஸ்திரேலியாவில் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியான டான்ஸராக நடித்துள்ளார் விஜய்.

  7. விஜய் படம் ஒன்றுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது இதுவே முதல்முறை. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ... என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார்.

  8. நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

  9. திருமண வேலைகள் காரணமாக ‌ஜி.வி.பிரகாஷால் பின்னணி இசை சேர்ப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியவர் ரகு நந்தன்.

  10. துப்பாக்கியிலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியது போல் இதிலும் அபிமன்யூ சிங் என்ற நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

  11. இவர்கள் தவிர ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயா, இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

  12. ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

  13. படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

  14. ஆஸ்ட்ரேலியாவில் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் கலக்கும் விஜய், தமிழகம் திரும்பிய பிறகு டைட் அரைக்கை சட்டை, டைட் பேன்ட், டக் இன் என்று யூனிஃபார்ம் கெட்டப்புக்கு மாறுகிறார்.


  15. சத்யராஜுக்கு பெ‌ரியய்யா என்ற பவர்ஃபுல் வேடம். விஜய் கதாபாத்திரத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதே சத்யரா‌ஜின் பெ‌ரியய்யா கேரக்டர்தான் என்கிறார்கள். தாடியுடன் வெள்ளை காஸ்ட்யூமில், தோளில் நீண்ட அங்கியுடன் வருகிறார்.

  16. சற்றே நீண்ட திரைப்படம் அதாவது இரண்டு மணி ஐம்பது (2:50) நிமிடங்கள்.

  17. சென்சா‌ரில் U/A சான்றிதழ்தான் கிடைத்தது. U/A என்றால் 30 சதவீத வ‌ரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி U சான்றிதழ் பெற்றனர். ‌ரிவைஸிங் கமிட்டியில் 4 இடங்களில் படம் கத்த‌ரிக்கப்பட்டது.

  18. இதுவரை வெளியான விஜய் படங்களில் தலைவாவுக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 திரையரங்குகள். தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகள்.

  19. ஆந்திராவில் 'அண்ணா' என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகிறது. கேரளாவில் 'தலைவா' என்ற அதே பெய‌ரில் தமிழிலேயே வெளியாகிறது.

  20. தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பது சன். 15 கோடிகள் என்கிறார்கள். இது உண்மையா ...?!
இது போதுமா இல்லை இன்னும் வேணுமா ...? சரி வாடா மாப்ளே... படம் நாளைக்கு ரிலீசு ... முதல் ஷோ பாத்துட்டு படத்தப்பத்தி விரிவா அலசலாம்.

படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : nilavaithedi



விஜய் புதிய படத்தோட பேரு பில்லா ஸாரி… ‘ஜில்லா’!


விஜய் நடிக்கும் புதிய படம் 'ஜில்லா'. இதென்ன அஜித்தின் பில்லாவுக்கு போட்டி படமா என்று கேட்டால் அதைப்பத்தியெல்லாம் எதுவும் சொல்லல. ஆனா ஏதோ ஒரு தெலுங்கு படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணினா எப்படி டைட்டில் வைப்பாங்களோ? அப்படி ஒரு டைட்டிலை ஜில்லான்னு வெச்சிருக்காங்க விஜய் நடிக்கப்போற புதுப்படத்துக்கு.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். ஆர்.பி.சௌத்ரி பேசும்போது சூப்பர் குட் பிலிம்சின் 25-வது படமாக ‘ஜில்லா’ தயாராகிறது. ‘திருப்பாச்சி’ படத்துக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளோம் என்றார்.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்துல துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்- காஜல் அகர்வால் மறுபடியும் ஜோடி சேர்றார்.



கூடுதல் ஸ்பெஷலா இந்தப்படத்துல மலையாள நடிகர் மோகன்லால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.

பூர்ணிமா பாக்யராஜ், தம்பி ராமையா, பரோட்டா சூரி, மகத், ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை நேசன் இயக்குகிறார். ரீமேக் படங்களை டைரக்ட் பண்ணி பாப்புலரான ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல்.

இமான் இசையமைக்கிறார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருது.

ஜில்லா பட பூஜை இன்று காலை தியாகராயநகரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜய் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘லவ்டுடே’, ‘திருப்பாச்சி’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் ஹிட்டாயின. அந்த படங்களின் சாதனையை ‘ஜில்லா’ படம் முறியடிக்கும். காஜல் அகர்வால் நாயகியாக வருகிறார்.

இவ்வாறு விஜய் கூறினார்.

விஜய் - அதிரடி ஆட்டம்

நடிகர் விஜய் மிக வேகமாகத்தான் இயங்குகிறார், அடுத்து வெளிவரப்போகும் தலைவா இன்னும் திரைக்கு வராத நிலையில், அதற்கு அடுத்த படமான ‘ஜில்லா’ வரும் 11-ம் தேதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.

வழமையாக ஒரு படத்திற்கும் அடுத்தப் படத்திற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது இடைவெளிவிடும் விஜய், இப்போது அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதுவும், அடுத்த படம் வெளியாவதற்குமுன், அதற்கு அடுத்த படம்!

தமிழ் சினிமா மார்க்கெட் வேல்யூவில் கிட்டத்தட்ட இவரது இடத்துக்கு அருகில் உள்ள மற்றைய ஹீரோக்கள், தமது அடுத்த படமே எது என்று அறிவிக்காத நிலையில், விஜய்யின் இந்த வேக நடவடிக்கை, அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பது நிஜம்தான்.

துப்பாக்கி வெற்றியைப் பற்றி திரையுலகம் பேசிக்கொண்டிருந்த போதே, அந்த சூடு ஆறுவதற்குள் அதிரடியாக தனது 'தலைவா' பட அறிவிப்பை வெளியிட்டு, மீண்டும் செய்திகளில் பரபரப்பாக அடிப்பட்ட விஜய், 'ஜில்லா' அறிவிப்பின் மூலம், மீடியாக்களில் அடுத்த ரவுண்ட் வருகிறார்.

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'தலைவா' படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுகின்றன. அது ஏன் தெரியுமா?



தலைவா படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுவதற்கு இரண்டு காரணங்கள்.

1. புதுமுக இயக்குநர் நேசன்.

நடிகர் விஜய், ஜில்லா படத்தின் கதையைப் பற்றி ஆஹா... ஒஹோ என்றும், இயக்குநர் நேசன் இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார் என்றும் புகழ்ந்தார். அதையடுத்து அவர்மீது பலரது கவனமும் சென்றது.

தவிர, தற்போது மார்க்கெட்டின் உச்சியில் உள்ள விஜய், நடிக்க சம்மதித்தால் உடனே கதை பண்ண தயாராக பிரபல இயக்குனர்கள் காத்திருக்க, புதுமுக இயக்குநர் ஒருவர்மீது நம்பிக்கை வைத்து தமது அடுத்த படத்தை கொடுத்திருக்கிறார்.



2. மோகன்லால்

'ஜில்லா' படத்தின் கதையும், தமது கதாபாத்திரமும் மோகன்லாலுக்கு மிகவும் பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். விஜய்க்கு அடுத்தபடியான மிக முக்கிய கதாபாத்திரம் என்பது ஒரு ஊகமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில், ‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை சிலர் கவனித்திருக்கலாம்.

‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்விக்கு விடை அறியும் ஆவலும், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஒரு விதத்தில் சொன்னால், ரூ.150 கோடியை விட அதிக பட்ஜெட்டில் தயாராவதாக சொல்லப்படும் (பவர் ஸ்டாரின்) ‘ஐ’ படத்தைவிட, இன்னமும் பூஜையே போடப்படாத ‘ஜில்லா’வுக்கு மீடியா பப்ளிசிட்டி அதிகம்!

‘ஜில்லா’ படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : விறுவிறுப்பு சினிமா



காவலன் - விமர்சனம்

விஜய் பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பது தான் காவலன் படத்தின் பெரிய பலம்! இளமை துள்ளும் விஜய்யை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு. வழக்கமான மசாலாக்களை விட்டு விட்டு நல்ல கதையை தேர்வு செய்ததற்கு விஜய்க்கு ஒரு பாராட்டு..
படத்தோட கதை என்னானா...

பிளாஷ்பக் கதையாக ஆரம்பமாகிறது...

அந்த ஏரியாவிலேயே ‌பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாதலத்தில் அடிதடி வம்பு, வழக்கு என தாதாவாக வாழ்ந்த அவர், ஒரு நம்பி‌க்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்கு வரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காபந்து செய்கிறார். அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்‌கே காவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார்.

அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல், காதலால் எழும் விளைவுகளும் தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை!
ஓபனிங்க் பாக்சிங்க பைட்டுக்கு பாங்காங் போகிற மாதிரி காட்டிவிட்டு, விஜய் கை பட்ட 'பைட்டர்' எல்லாம் கீழே விழுந்து தோற்று போவது போல கட்டுவது கொஞ்சம்............. ஓவரா இல்ல ?
எனக்கு பிடித்த சில...

விஜய் நீண்ட நாட்களுக்கு பின்பு அற்புதமான காதல் கதையில் நடித்துள்ளார். முகமறியாத தன் காதலியை சந்திக்க இடத்தில் அசினுடன் பேசும் இடம் அட அட!!!. சூப்பர் ஆக்டிங் விஜய். விஜய் பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளார். கொஞ்சம் சதை போட்டு மேலும் அழகாக தெரிகிறார். அதும் கிளைமாக்ஸ் ஹேர் ஸ்டைல் அட்டகாசம்.
சண்டை காட்சிகள் ஒன்றும் சொல்லிகொல்லும்படி இல்லை.

வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் துள்ளல் டான்ஸ் இந்த படத்தில் மிஸ்ஸிங்க்...
ராஜ்கிரண் அசினின் அப்பா. மிரட்டலான நடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார்.

அசினுக்கு வெயிட்டான ரோல். ஒரு புறம் காதலியாய் விஜயிடம் உருகி மறுபுறம் தான் யாரென்று சொல்ல முடியாமல் விஜய் படும் கஷ்டங்களைப் பார்த்து கலங்கி அழகாய் செய்திருக்கிறார். பல காட்சிகளில் ஒடுங்கிய கன்னங்களோடு வருகிறார். Why ?

அசினின் தோழியாக 'சூர்யன் சட்டக் கல்லூரி' நாயகி மித்ரா. கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அசினை காட்டிலும் இவள் மிக இயல்பாக நடிதிருகிறாள். விஜயை கைபிடிக்கும் இடம் கொஞ்சம் லாஜிக் மீறல். பட் ஓகே.
அம்மாவாசையாக வடிவேலு. அதற்கலம் பண்ணுகிறார். லேடீஸ் ஹாஸ்டலில் தான் அடிவாங்கிய சம்பவத்தை சொல்லும் இடத்தில் தியேடரே ஒரே சிரிப்போலிதான்.

தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர் உடல் மொழியால் சிரிக்கவைக்கிறார்.

வித்யாசாகரின் இசை + மெலடி பாடல்கள் ஓகே ரகம். யாரது யாரது சூப்பர் மெலோடி. ஸ்டெப் ஸ்டெப் பாடலும் & விண்ணைக்காப்பான் ஒருவன் பாடலும் தேவையில்லாத திணிப்புகள்.

நல்ல கதையை தேர்வு செய்துவிட்டு மோசமான திரைக்கதையில் சருக்கிவிட்டார் டைரக்டர் சித்திக். படத்தின் முதல் பாதியை கடக்க ரொம்பவும் பொறுமை தேவைப்படுகிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் அந்த குறையை போக்கி ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய செய்திருக்கிறார் இயக்குநர் சித்திக்.

காவலன் - வித்தியாசமான விஜயை காண பார்க்கலாம்.

பொங்கல் கரிநாள் அன்று நான் பார்த்த தியடரில் காத்து வாங்கியது. என் அக்கா & அண்ணன் குழந்தைகளுடன் சென்று பார்த்தேன். நூறுபேர் தான் என்னுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள். பாடல் வரும்போதெல்லாம் ரசிகர்கள் வெளியே சென்றதை பார்க்க பார்க்க நானும் பாடலை ரசிக்க முடியவில்லை.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சுடச்சுட சுறா - திரை விமர்சனம்

.
நானும் 'சதம்' அடித்துவிட்டேன்.....!!!!

நானும் எழுத வந்து ஒன்பது மாதம் இன்றோடு முடிவடைகிறது. காலம் கடந்து செல்வது உணர முடியவில்லை. இதுவரை 99 பதிவுகள் எழுதிவிட்டேன். எனக்கே ரொம்ப ஆச்சரியம் + அதிர்ச்சி. என்னாளும் தொடந்து எழுத முடிகிறது என்று!

என்னோட பதிவையும் ரசித்து படித்து + கருத்து சொல்லி + வோட் போட்டு நல்ல பதிவை அங்கிகரித்த உங்களுக்கு என் சிரம் தாழ்த்த நன்றிகள். ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்க.

இதோ என்னோட 100வது பதிவு. உங்கள் ஊக்கமும் கருத்துகளும் வரவேற்கிறேன். மீண்டும் என் நன்றிகள்.

நட்புடன்
கோழிபையன்.



விஜயின் 50வது படம் சுறா. தமன்னாவுடன் விஜய் நடிக்கும் முதல் படம். சன் பிச்சர் வாங்கி வெளியிடும் விஜயின் 2-வது படம். ஏற்கனேவே சுறா பாடல்களை நிமிசத்திற்கு ரெண்டு தடவை ஒலிபரப்பு செய்து வெற்றி பெற வைத்த சன் நெட்வொர்க் வாழ்க. இன்று சுறா படம் பார்த்தேன். அதன் விமர்சனம் சுடச்சுட இதோ....


படத்தோட கதை என்னனா ...

மீனவ குப்பத்தை காலிசெய்து அதில் தீம் பார்க் ஒன்றை கட்ட நினைக்கும் 'ரவுடி' மந்திரி குப்பத்தை தீவைத்து கொளுத்த அதில் ஹீரோவை சிக்கவைத்து இறந்துவிட்டதாக நம்பவைத்து குப்பத்து மக்களை வேறிடம் சென்று தங்க ஏற்பாடு செய்யும் வேளையில் தீயிலிருந்து ஹீரோ வெளிவருகிறார்.

அதன் பிறகு வில்லனுடன் நேரடியாக நேரிடியாக ஹீரோ மொத ... வில்லன் செய்யும் சின்ன சின்ன சித்துவேலைகளை ஹீரோ எப்படி அதிரடியாய் முறியடித்து வெற்றிகொல்கிறார் என்பது தான் சுராவின் கதை.



படத்துல என்னை பதம் பார்த்தவைகளில் சில...

  • ஒளிபதிவு மிக அருமை. மனுசர் ரொம்ப மேனகேட்டிருக்கிறார்.

  • சண்டை காட்சிகள் அருமை. சபாஸ் கனல் கண்ணன். நீங்கள் தான் படத்தின் ஹீரோ.

  • ஹீரோ அறிமுகம் இதுவரை எந்த படத்திலும் வராத மாதிரி அமைத்திருகிறார்கள். எப்படி..?

    கடலுக்கு மீன் பிடிக்க சென்ற படகுகள் ஐந்து நாளாகியும் கரை திரும்பவில்லை. குப்பத்து மக்களும் போலீஸும் அதிகாரிகளும் ஒரே டெண்சினா இருக்க தூரத்தில் படகில் மீனவர்கள் வர மொத்த குப்பமும் சந்தோசத்தில். ஆனால், ஒருவன் மட்டும் வரவில்லை. அவன் தான் ஹீரோ 'சுறா'. அதிகாரிகள் செய்வதறியாமல் திகைக்க தூரத்தில் நடுகடலில் இருந்து டைவ் அடித்து ஹீரோ வெளிவந்து அறிமுகம் செய்கிறார்.

  • முதல் பாதியில் ஏழை குப்பத்து மீனவானா வரும் ஹீரோ இரண்டாம் பாதியில் வில்லனின் கடத்தல் சரக்கை ஹீரோ விற்று காரில் வந்து வில்லனுடன் மோதுகிறார். முதல் பாதியில் விறு விறுப்பு கொஞ்சம் குறைவு. இரண்டாம் பாதி ஓகே ரகம்.

  • பாடல்களில் ரசிகர்கள் வெளியே சென்ற வர இருந்தார்கள். பின்னணி இசை பரவாயில்லை. சில இடங்களில் ஒரே தலைவலி.

  • திரும்ப திரும்ப ஒரே மாதிரியான கதையை விஜயிடம் பார்த்து பார்த்து அலுத்து போச்சு. சன் பிச்சர் படம்னாவே இனி குவாலிட்டி இருக்காது என்பதற்கு இந்த சுறா படமும் ஒரு உதாரணம்.

  • பெருசா சொல்லிகிறமாதிரி திரைகதை இல்லை. இந்த உங்க லிஸ்டில் படம் படத்தோட பதினொன்னு அவளவு தான். சாரி டைரக்டர் சார். கதையை மட்டும் இனி நம்பி பெரிய திரைக்கு வாங்க. ஹீரோ + ஹீரோயினி நண்பி இனியும் தமிழ் சினிமா நகர ரெடியா இல்லை.

  • வழக்கமான விஜய், பாடல்களில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். டான்சில் பட்டையை கிளப்புகிறார். மற்றபடி ஓவர் பில்ட் அப் தான். அரசியலுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள ரெடியாகிவிட்டார். ஒரே செண்டிமெண்ட் டயலாக் பேசியே படுத்துகிறார். விஜய் புதுசா ஏதாவது செய்யுங்கள்.

  • தமன்னாவுக்கு இந்த படத்தில் ஒன்றுமே வேலை இல்லை. ஆனா இவள் தான் ஹீரோயினி. என்ன கொடுமை சார் இது. நாய் காணாத போனதால் தற்கொலை செய்ய கடலுக்கு வரும் பணக்கார பெண். ஹீரோ காப்பாத்துகிறார். காதலும் வந்துவிடுகிறது. பாடல்களில் குட்டை குட்டை டவுசரு போட்டு பாப்பா கொஞ்சம் ஆடியிருக்கு. வேறு சொல்லும் படி ஒண்ணுமில்லை.

  • வடிவேலு தான் முதல் பாதி ஹீரோ. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மற்ற இடங்களில் கடுப்பை கிளப்புகிறார். மனுசருக்கு உடம்பு போட்டு பார்க்கவே பயமா இருக்கார்.


சுறா - பார்க்க போறவங்க அதுக்கு இரை.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சுறா படத்தின் ரிங் டோன் + பாடல் விமர்சனம்

இந்திய தொலைகாட்சிகளில் வலைபதிவில் முதல் முறையாக மணிசர்மா இசையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன் வடிவில் உங்களுக்காக இங்கே... இது விஜய்-ன் 50 ஆவது படம் என்பது கூடுதல் சிறப்பு .

சுறா படத்தின் பாடல்கள் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களே... சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன்


1. சிறகடிக்கும் நிலவு (பாடியவர் : கார்த்திக் & ரீட்டா, பாடல் வரிகள் : சிநேஹன் )

மணிஷர்மாவின் இந்த பாடல் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும்.
சில நேரம் யாரைகேட்டு
என் நெஞ்சில் நீ நுழைந்தாய்
Download : சிறகடிக்கும் நிலவு ரிங் டோன்

2. வெற்றி கொடி ஏத்து (பாடியவர் : ரஞ்சித் & முகேஷ், பாடல் வரிகள் : வாசில், S.F & ராஜ்குமார்)

ஓப்பனிங் பாட்டு போலதான் தெரிகிறது...
வெற்றி என்ற சொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே எங்கள் உதயம்
Download : வெற்றி கொடி ஏத்து ரிங் டோன்

3. வங்க கடல் எல்லை (பாடியவர் : நவீன் & மாலதி, பாடல் வரிகள் : கபிலன்)

செம குத்து... குத்து... குத்து பாட்டு. மாலதியின் குரல் பளிச்
ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்
Download : வங்க கடல் எல்லை ரிங் டோன்

4. தஞ்சாவூர் ஜில்லாக்காரி (பாடியவர் : ஹேராசந்திரா & சைந்தவி, பாடல் வரிகள் : ந.முத்துக்குமார்)

சும்மா கலக்கலா இருக்கு பாடல். ரொம்ப குத்தும் இல்லை.... ரொம்ப மெலடியும் இல்லை.
சூ மந்திரகாளி...
பொம்மாயி பொம்மாயி

வார்த்தைகள் மனதில் ஈஸியா ஒட்டிக்கொள்ளும்படி இருக்கு.

Download : தஞ்சாவூர் ஜில்லாக்காரி ரிங் டோன்

5. தமிழன் வீரத் தமிழன் (பாடியவர் : ராகுல் நம்பியார், பாடல் வரிகள் : கபிலன்)

தீம் சாங். விஜயை கொஞ்சம் ஓவரா கட்டவேண்டி எழுதபட்டபாடல் போல இருக்கு.
தன் நிழலைகூட மிதித்தால்
நெற்றிக் கண் திறப்பான்
Download : தமிழன் வீரத் தமிழன் ரிங் டோன்

6. நான் நடந்தால் அதிரடி (பாடியவர் : நவீன் & ஷோபா, பாடல் வரிகள் : கபிலன்)

இது மணிஷர்மா ஸ்பெஷல் டூயட் பாடல். "வா செல்லம் வாவா செல்லம்" தோரணை பட பாடல் போல தோணியது முதலில் கேட்டும்போது ...
என் பேர கேட்ட வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டதே எனக்கு டாட்டா
Download : நான் நடந்தால் அதிரடி ரிங் டோன்



சுறா படத்தின் பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக

சுறா மொத்தத்தில் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும் பாடல்கள் கொண்ட இசையாக இருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Source : uyirvani & isai.in



நடிகர் விஜயும் தேவியும் இணைந்து ...

பதியுலக முன்னால் ஹீரோ விஜய.T.ராஜேந்திரன் அவர்களையே ரேட்டிங்-ல மிஞ்சிய நம்ப புதிய 'பதியுலக ஹீரோ' விஜய் அவர்களை பத்தி எழுதி ரொம்ப நாளாச்சு.

இளைமையான துள்ளல் இசை மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் விஜய் நடித்து வெளிவந்த மூன்று படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

1. 1995-ஆம் ஆண்டு 'புரட்சி புயல்' பேரரசு இயக்கி + (இளைய)தளபதி விஜய்யும், 'லேடி தளபதி' திரிசாவும் நடித்த சூப்பர் ஹிட் படம் திருப்பாச்சி. மாணிக்க விநாயகம் & சுமங்கலி இணைந்து பாடியிருக்கும் ஒரு கலக்கல் பாடல். இந்த படத்துல எனக்கு புடிச்ச ஒரு பாடல்

கட்டு கட்டு கீரைக்கட்டு
புட்டுப்புட்டு ஆஞ்சுப்புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பப்பையா......

2. 1995-ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கிய ஒரு மெல்லிய காதல் கதையில் வடிவேலு பட்டைய கிளப்பி நடித்திருக்கும் படம் தான் சச்சின். விஜய், 'லூசுபெண்' ஜெநெலியா, 'பாம்' பிபாஷா பாசு நடித்து சுமாரா ஓடின இந்த படத்துல அழகான கேமெரா வேலை + விஜய் டிரஸ் + ஸ்னோ எபெக்ட் + தேவி ஸ்ரீ பிரசாத் குரல் என ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.

கண்மூடி திறக்கும்போது
கடவுள் எதிரே வந்தது போலே
என் கண்முன்னாலே அவளே வந்து நின்னாலே

3. அதே சச்சின் படத்துல ஜெஸ்ஸி கிப்ட் , மாலதி இருவரும் பாடிய ஒரு 'பவர்புல் சாங்' இது. டான்ஸ் சும்மா பட்டைய கெளப்பி இருப்பார் நம்ப விஜய்.
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நெண்டு போலே வந்தாயே


4. 2009-ஆம் ஆண்டு 'செட்டப்பு புகழ்' பிரபுதேவா' இயக்கத்தில் விஜய்யும் 'சின்ன வீடு புகழ்' நயன்தாராவும் இருவரும் முதல் முறையாக இணைந்து கொடுத்த மண்ணை கவ்விய பிளாப் பாடல் தான் 'வில்லு'. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓன்று இருக்கு. அதனை பாடகர் சாகர் உருகி பாடியிருக்கும் இந்த பாடலில் மூன்று விஜய் சேர்ந்து நடித்தது போல கலையிருப்பார். பலவிதமான உடைகளில் தோன்றி விஜய் நடந்தே இந்த பாடலை சிறபித்திருப்பார்.

நீ கோபபட்டால்
நானும் போபபடுவேன்

5. அதே வில்லு படத்துல இன்னொரு பாடலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏன்னா அதில் இலக்கிய வரிகள் அதிகமா அமைந்த பாடல். விஜய் சும்மா ரெண்டு பேருடன் போடும் ஆட்டம் பார்க்கிறவங்க அவனைவரையும் ஆட்டம் போடா வைக்கும். இந்த பாடலை பாபா செஹ்கல் பாடியிருப்பார்.
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாரும் இல்லை

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



வேட்டைகாரனிடம் சில கேள்விகள்

தவமாய் தவம் இருக்கும் தமிழ் திரை துறையில் தங்களுகென்று ஒரு இடம் கிடைக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் எத்தனையோ பல நல்ல கலைநர்கள் தங்களுக்கு என்று ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று இருக்கும் நிலையில் கிடைத்த நல்ல வார்ப்பை கோட்டைவிட்ட வேட்டைக்காரன் டீமிடம் நான் கேட்ட விரும்பும் சில தகவல்கள்ல். கேள்வியில் குறை இருப்பின் மன்னிக்க.

நடிகர் விஜய்க்கு ஒரு சில கேள்விகள் :
  • ஏம்பா தம்பி, வில்லு படம் பிளாப் ஆனதும், அடுத்த படம் பத்தி கேட்ட போது சொன்னது நாபகம் இருக்கா?
    "குருவி, வில்லு படம் போல இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை செலக்ட் செய்து நடிக்க இருக்கேன். கதை விவாதம் நடக்குது. பல கதைகள் பல டைரக்டர் கிட்டே இருந்து கேட்டுள்ளேன். எனக்கு பிடிச்ச கதை கிடைக்கும் போது அதை செலக்ட் செய்து நடிப்பேன்னு சொல்லிட்டு வந்தே..".
    இதுவும் ஒரு கதை தானா ? இந்த கதைக்கு தான் நீங்க அவளவு பில்ட் அப்ப செய்தீரா?

  • அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து சாப்பிட உங்களுக்கு பிடிசிருக்குனா பேசாம நீங்க நடிச்ச பழைய (வில்லு, குருவி, thirupaatchi, sivagasi) படங்களையே போட்டு பாருங்க. அதையும் மீறி அதே மாதிதான் நடிப்பேனா உங்களை திருத்த தமிழ் மக்கள் ரெடியா இருகாங்க.

  • மனசாட்சி தொட்டு சொல்லுங்க... இந்த படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

சன் பிக்சருக்கு சில பல கேள்விகள் :
  • மணிக்கு நாலு விளம்பரம் போட்டு காட்டி, சும்மா இருந்த பாமர மக்களையும் உசுப்பேத்தி - தியேடர் வரவச்சு - ஒட்டு மொத்த மக்களையும் முடுட்சிலாம்னு நினைத்த உங்க பெருந்தன்மை யாருக்கு வரும்? ஏன்னா, இவங்க இருந்த தானே அடுத்த விஜய் படம் பார்க்க வருவாங்க அப்படின்னு நினைசீன்களா ?

  • ராகுல்காந்தி விஜயை சந்தித்து காங்கிரசில் சேர சொன்னதும் பயந்து பொய் - விஜயின் பெயரை டரியல் ஆக்க தான் ஓவர் பில்ட்அப் செய்து இவரை கவுத்த இப்படி ஒரு திரை மறைவு வேலையா?

  • விஜய்க்கு ப்ரிவிவு ஷோ காட்ட முடியாது சொன்னபோதே நீங்கள் அந்த படத்த பார்த்துட்டு எவளவு பீல் பண்ணிரிகீங்கனு எங்களால் யூகிக்க முடியாமல் போயிடுச்சு. தயவு செய்து சுராவை வேறுபக்கம் அனுப்பி தமிழ் நாடு & தமிழ் மக்களை பார்த்துக்குங்க. செய்வீர்களா?

  • குருவிதான் உங்களை விட்டு பறந்து போச்சே அப்பரம் ஏன் இந்த பேராசை? ஒ... விட்ட காசை விட்ட இடத்துலயே எடுக்க வந்தீங்களோ ? திறமையான பல டைரக்டர்கள் வெளியே கார்த்துகொண்டிருன்கினர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர கூடாதா?

பாபுசிவன் உங்ககிட்டே சில கேள்விகள் :
  • எம்.ஜி.ஆர் நடித்து பெரும் வெற்றிபெற்ற படத்தின் பெயரை இந்த படத்துக்கு வைத்து அவரையும் அசிங்கபடுத்திய உங்களை என்ன செய்யா?

  • முதல் படம் செய்யற உங்களுக்கு உங்கள் கதை மீது நம்பிக்கை இல்லாமல் போனது எங்களுக்கு மிக வருத்தமே. கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டீர்கள். தொடர்ந்து உங்கள் குருவுக்கு கூஜா தூக்குங்க.

  • ஒருமுறை கதாநாயகியை சந்தித்த ஹீரோ, அவரது வீட்டுக்குள் நுழைந்து அவளது பாட்டியுடன் நீண்ட நாள் பழகியது போல இருக்கும் காட்சிகள். நடைமுறையில் சாதியமா? இன்னும் பல ஓட்டைகள். வலை மக்கள் விளக்கமா சொல்லிட்டு தான் இருகாங்க.

  • கிட்டத்தட்ட 60-70 அடி உயரம் உள்ள அருவியில் இருந்து விழும் ஹீரோ, சிறு அடி கூட படாமல் எழுந்து வருவது - விஜய் ஒருவர் மட்டுமே செய்ய கூடிய செயல். என்னதான் பெரிய ஹீரோ ஆனாலும் இப்படியா? இது என்ன உங்க பாஸ் கிட்டே இருந்து திருடியாதா? (குருவி - ரயில் - பறந்துவருதல்) இல்லை

  • அருவியில் இருந்து விழுதல் - அப்போகளிப்டோ படத்து இருந்து திருடப்பட்டதா ?

  • ஒரே பாடலில் பெரிய தாத்தா ஆகிவிடும் சிறப்பு - விக்ரமன் படங்களில் மட்டுமே அதிகம் இருக்கும். அந்த காட்சிகளை இங்கும் வைத்தான் பொருள் என்னவோ?

  • இந்த படத்துல அனுஷ்கா ஹீரோவா இருந்தா எப்படி டான்ஸ் ஆடுவாள் அன்று பார்க்க தான் ஆண் வேடம் இட்டு பார்த்தீரோ?

  • அதேபோல, விஜய் ஹீரோவா நடிச்சா ஓட மாட்டேன்குதுன்னு அவரை பெண்வேடம் போட்டு நாயகியா நடிகவட்ச உங்களுக்கு ரொம்ப தில்லுதான்.

விஜய் அன்டனி உங்ககிட்டே ஒரு கேள்வி:
  • பாடல்கள் மட்டுமே ஹிட் ஆனா போது விஜய் படத்துக்கு பின்னி இசை எப்படிவேனாலும் போடலாம் னு நீங்களே நினச்கிடா எப்படி ராசா?

அனுஷ்கா உங்ககிட்டே ஒரு கேள்வி:
  • அருந்ததி படம் பார்த்த பின்னர் உங்கள் மீது ஒரு மரியாதை வந்தது உண்மை தான். இப்படி டான்ஸ் மட்டுமே ஆடி பேருவாங்கும் நடிகரிடம் எல்லாம் மாட்டி நீங்க ஏன் தான் உங்க பேரை அசிகபடுத்திகிறீங்கலோ. உங்களுக்காகவே பலரும் இந்த படத்தை பார்க்க வந்தார்கள். வருவார்கள். இந்த படத்துல உங்க பங்கு என்ன? முதல் பாதி கொஞ்சம் ஓகே. பிறகு ?

இது எல்லாம் என் ஆதங்கம். மற்றவரை குறைசொல்வது என் நோக்கமல்ல.

குறிப்பு :
சிட்னியில் இருந்து எனக்கு ஒரு வாசகர் முகுந்தன் என் பதிவில் பின்னுட்டம் இட்டிருந்தார்.
இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.

ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.

பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.

மறக்காமல் ஒரு வோட்டை போட்டுவிட்டு உங்கள் மேலான விமர்சனத்தையும் எழுதுங்க. நன்றி! மீண்டும் வருக!



வேட்டைக்காரன் - திரைப்பட விமர்சனம்

சும்மா சுட சுட வேட்டைக்காரன் படத்தோட திரை விமர்சனம் எழுதறேணுக.

படத்தோட கதை என்னனா :

12ஆவது பெயில் ஆகி படிக்கும் நம்ப ஹீரோ ரவி (விஜய் ) பெரிய போலீஸ் ஆபீசரா ஆகணும்னு ஆசை படறாரு. அவருக்கு ஒரு திறமையான போலீஸ்காரனை(ஸ்ரீஹரி) பார்த்து தன் திறமையை வளத்துகிறாரு.
நான் அடிச்சா தாங்கமட்டேநாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

அவரைப்போலவே தானும் ஒரு போலீஸ் ஆகணும்னு படித்து 12ஆவது பாஸ் ஆகி காலேஜ் படிக்க வராரு. வரும் வழியில் ரயில்வே ஸ்டேசனில் நம்ப கதா நாயகி சுசிலா (அனுஷ்கா) சந்திக்கிறார். கண்டதும் காதல்.
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு


ஆட்டோ ஒட்டி கிடைக்கும் பணத்துல தான் காலேஜ் படிப்பேன்னு சொல்லி, தன்னுடன் படிக்கும் ஒரு பெண் தோழி(சஞ்சிதா படுகோனே ) மூலம் ஆட்டோ ஒட்டி, அந்த பெண்- அந்த ஏரியா ரௌடியிடம் (செல்லா) முறைத்து கொள்ள, ஹீரோ தட்டி கேட்கிறார். ரௌடியை சும்மா தும்சம் செய்துவிடுகிறார். இதனால் ஆவேசம் அடையும் வில்லனும் அவனது அப்பாவும்மான (சலீம்) தன் போலீஸ் (சாயாஜி) செல்வாக்கை பயன் படுத்தி என்கவுன்ட்டர் மூலம் ஹீரோவை போட்டு தள்ள ஏற்பாடாகி - அதிலிருந்து ஹீரோ தப்புகிறார்.
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது


அவனை ஸ்ரீஹரி நண்பர்கள் காப்பாற்றி இனிமேல் வில்லனுடன் மோதவேண்டாம் என்று சொல்லி - தன் தலை மறைவு வாழ்க்கை பற்றி ஹீரோவிடம் சிறு பிளாஷ்பேக்கு. இருவரும் இணைகிறார்கள்.
ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே


வில்லனின் அராசகத்தை நேரடியாக ஹீரோ தாட்டி கேட்கிறார். இவனது நண்பனை போட்டு தள்ள... ஹீரோ ஆவேசம் அடைந்து ...
என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....


ஹீரோ எப்படி வில்லனை வென்றார்? என்று மீதி கதையை முடிஞ்சா பார்த்து தெரிந்துகொள்க.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல...
  • வழக்கம் போல சூப்பர் டான்சு + சண்டை என விஜய் அசத்தியிருகாறு. பிரெஷ் ஆ இருகாரு படத்துல. வில்லுக்கு இந்த படம் ஓகே.
  • அனுஷ்கா - முதல் பாதியில் பல காட்சிகளை முடிந்த அளவு நடித்து + பாடி இருக்கார். டான்சு தன் ஆட முடியாமல் நடந்தே வாராரு. பாடல்களில் எதோ மிஸ்ஸிங்.
  • திரைகதையில், முதல் பாதி- போர். இரண்டாம் பாதி - ஓகே தான்.
    பல இடங்களில் எனக்கு சலிப்பு தட்டியது.
  • செல்லாவாக நடித்தவரின் நடிப்பு மிக அருமை. என்ன வில்லத்தனம். கண்கள் பேசுது.
  • பாடல் கட்சிகள் மிக அருமை. பின்னணி இசை - சுமார். சில இடங்களில் ஸ்ரீசாத்தும் + சத்தியனும் சிரிக்க வைகிறார்கள்.

வேட்டைக்காரன் - ஒருமுறை பார்கலாம்

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



வேட்டைக்காரன் 'ஜுரம்' ஆரம்பம்


இன்று மாலை, காப்பி குடிக்க நண்பர்களுடன் காரபக்கம் அரவிந்த் தியேடர் அருகில் உள்ள உடுப்பி ஹோட்டல் வந்தேன். வரும் வழியில் ரோட்டின் ஓரத்தில் நிறைய பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஒரே கும்பல்.

என்னவென்று அருகில் சென்று பார்த்தா கட் அவுட் மற்றும் பேனர் கட்டும் வேளையில் விஜயின் ரசிகர்கள்.


நார்மலாவே, அந்த தியேடரில் காத்து(?) வாங்கும். எதாவது புது படம் ரிலீஸ் ஆனா கொஞ்சம் கூட்டம் இருக்கும். இன்று மாலை, ஒரே இளைனர் பட்டாளம் தான். எதோ தங்கள் வீட்டு கல்யாண வைபோகம் போலவும், கோவில் திருவிழா போல ஒரே அமர்களம் தான். எங்கும் ஒரே அலங்கார அமைப்பு. தியேடர் முன் பக்கம் முழுவது மூடு அளவு பேனரும் கட் அவுட்டும்.

ஒரு சிலர், தங்கள் உயிரை பணயம் வைத்து சரியான பாதுகாப்பு இல்லாமல் தியேடர் உச்சிவரை சென்று தோரணம் கட்டிகொண்டிருன்தனர்.

எதாவது அசம்பாவிதம் நடந்தால், யாரவது உதவிக்கு வருவார்களா..? இதற்கு அந்த தியேடர் நிர்வாகம் தான் பொறுப்பு எடுத்து கொள்ளுமா ? இல்லை அந்த விஜய் தான் உதவிக்கு வருவாரா? இல்லை உடன் இருந்து ஜால்டிரா போடும் கும்பல் தான் வருவார்களா? என் இந்த ஆர்பாட்டம்? இதனால் அவர்கள் அடையும் நன்மை தான் என்ன? யோசிப்பார்களா?


கிரிகெட் ஜுரம் அப்பபோ வருவது போல இப்போ சில நாட்களாக வேட்டைக்காரன் ஜுரம் ஆரம்பம் ஆகிவிட்டது. விஜயை ஒரு வழியாக பேசி, வறுத்து எடுத்தவர்கள் அடங்கும் முன்னரே இவரது படம் நாளை வெளியாகிறது. சொல்லவா வேணும் நான் வலையுலக நண்பர்களுக்கு. இனி அடுத்த சில வாரங்களுக்கு வேட்டைக்காரன் தான் ஊறுகாய்.

இதையெல்லாம் ஒரு பதிவா போட இவன் வந்துதானே என்று நீங்கள் நினைப்பது புரியுது. என்ன செய்ய?. கண்ணில் பட்ட இந்த அவலங்களை சகித்து கொள்ள முடியவில்லை. நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top