Showing posts with label நா.முத்துக்குமார். Show all posts
Showing posts with label நா.முத்துக்குமார். Show all posts

மெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்!!!

பசங்க, வம்சம் என இரண்டே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க, நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர் பாண்டிராஜ். இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.


ஆம்… மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்… என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.

படத்தின் நாயகனாக 'விஜய் டி.வி.' புகழ் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கும் ஜோடியாக 'களவாணி' புகழ் ஓவியா நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கிரிஷ்.ஜி இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

படத்தின் கதை என்ன...?

மெரினா கடற்கரையில், குழந்தைகளின் உலகம், காதலர்களின் உலகம், வயதானவர்களின் உலகம், இவற்றை யதார்த்தமாக, காமெடியாக, உணர்வுப்பூர்வமாகப் பேசும் படம் இது.

ப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் காலையிலிருந்து இரவு வரை சென்னை எப்படியிருக்கும் என்று சொல்லும் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 'வணக்கம், வாழவைக்கும் சென்னை...' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

முதல் முறை கேட்டபோதே மிகவும் பிடித்து விட்டது....வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதோ அந்த பாடலின் வீடியோ ...


பாடல் வரிகள் :-
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

வாங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும்
பர பர பரவென பரபரக்கும்
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் Cøncrete காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் Røad இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்
பச்சை மஞ்ச சிவபுலதான் Šignal இருக்கும்
அது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே..

சிங்கார சென்னை என்று சொல்லுவோம்
ஊர் எங்கும் Pøster ஒட்டி கொள்ளுவோம்
சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே
என்றாலும் விட்டு போக நினைகல..

இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா
இது இளைப்பாற இடம் தரும் தின்னையடா
நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா
இந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா
பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்
அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்

எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா
நம்ம ஒட்டு மொத்த தாயாக Chennai இருப்பா
இப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா
அவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

நொறுக்க்ஸ்:-

சில காட்சிகளை மட்டும் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி மெரினாவில் படமெடுத்த பாண்டிராஜ், மற்றி காட்சிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையை மெரினாவைப்போல் மாற்றி படம்பிடிக்கவுள்ளார்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ்.


அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்!!!

‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி.


கோலிவூடில் இப்பொழுதெல்லாம் புதிய முறையில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அதாவது முதலில் படத்தில் உள்ள ஒரு பாட்டை வெளியிட்டு புகழ் கொடி நாட்டப்படுகிறது. அதன்பின்னர் முழுப்பாடல்கள் வெளியீடும் இடம் பெறுகின்றன.

இந்த வரிசையில், கொல வெறி...." பாடல் வெளியிடப்பட்டு மிகப் பிரபலாமாகியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசைஅமைப்பில் இன்னுமொரு பாடல் வெளியிடப்படுகிறது.

நா.முத்துக்குமார் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கமர்சியல் பாடலுக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் ஒரு பாடல்..... பாடல் வரிகளை சிதைக்காத இசை கோர்வை மிக அருமை. பாடலின் இடை இடையே வரும் அந்த மிர்தங்கம் + கிளாசிக் டச் ..... அட அட.... மிக அருமை!!!

யுவன் ஷங்கர் ராஜா & சூப்பர் சிங்கர் 'ரேணு' இவர்களின் இனிமையான குரல்களில் பாடல் உருவான விதம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் என்பனவும் பாடலின் வீடியோ இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.



பாடலின் வரிகள் உங்களுக்காக....
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி...
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா...

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்


ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..


ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போ போ போடா..
வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top