Showing posts with label இசை விமர்சனம். Show all posts
Showing posts with label இசை விமர்சனம். Show all posts

மெட்ராஸ் (2014) – இசை விமர்சனம்

வட சென்னை கதைக்களத்தினை தாங்கிவரும் ‘மெட்ராஸ்’ படத்தில் நாயகனாக கார்த்தி, நாயகியாக கத்ரினா தெரேசா நடிக்கின்றனர். இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்க ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்குகிறார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்துவந்த கார்த்திக்கு சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்கள் ஏறுமுகத்தில் அமையவில்லை. எனினும் 'பிரியாணி' ஓரளவுக்கு பரவாயில்லை ரகம். கார்த்தி இப்போது எதிர்பார்ப்பது ஒரு உடனடி வெற்றி அதனால் - ‘மெட்ராஸ்’!

சந்தோஷ் நாராயணன் ‘குக்கூ’ ஆல்பத்தில் பெருமான்மை மக்களை ஈர்த்த இசையமைப்பாளர். அவருடைய அடுத்த ஆல்பமாக, ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே வேகத்தில் சூப்பர் ஹிட் பட்டியலிலும் சேர்ந்துள்ளன.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

1. சென்னை வட சென்னை...

கபிலன் எழுதிய பாடல். ஹரிஹர சுதன், மீனாக்ஷி ஐயர் கூட்டணி எக்ஸ்ட்ரா எனர்ஜி சேர்க்க முதல் முறை கேட்கும் போதே மனதில் ஒட்டிக் கொள்ளும் ஒரிஜினல் ‘சென்னை ஆந்தம்’. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.

சென்னையில் வாழ்வோரும் சரி, அங்கே பிழைக்க வருவோரும் சரி, விரும்பி ரசிக்கக்கூடிய வரிகள். ‘எங்க ஊரு மெட்ராஸ், இதுக்கு நாங்க தான அட்ரஸ்’ துவக்கத்திலேயே சென்னை கெத்தாக தொடங்கும் பாடல் ‘முள்ளுத் தச்சக் கூட்டுக்குள்ள, காக்கா குஞ்சா வாழ்ந்தாக் கூட’ என சென்னை பூர்வ குடிகளின் சோகத்தை கூட ஜாலியாய் சொல்லி செல்கிறது.


2. ஆகாயம் தீப்பிடிச்சா...

கபிலன் எழுதிய பாடல். பிரதீப்குமார் இதனைப் பாடியுள்ளார். இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா’ என குறும்பு கற்பனையாய் தொடங்கும் பாடல் ‘வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும்’ என சீரியஸ் ஆகிறது. கபிலன் வரிகளுக்கு பிரதீப்குமாரின் குரல் மற்றும் கிட்டார் இனிமைக் கூட்ட ஆல்பத்தின் காதல் கீதமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

அழகான மெட்டுடன் நல்ல வரிகள் சேர்ந்துகொள்ள, வித்தியாசமான இசைக் கோப்பினால் தன்னுடைய பாணி தனியானது என்று நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சபாஸ்!!!


3. நான் நீ...

இந்தப் பாடலை உமா தேவி என்பவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த குரலுக்குச் சொந்தக்காரரான சக்திஸ்ரீயுடன் தீஷிதா இணைந்து பாடியுள்ளார்.

‘நான் பறவையின் வானம், பழகிட வா, வா நீயும்’ என்று பெண் மனதின் மென்மையை தூவுகிறது உமா தேவியின் வரிகள்.


4. காகித கப்பல்..

சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றால், கானா பாலா இல்லாமல் எப்படி? அவருடைய தனித்துவமான குரலில் அக்மார்க் சென்னை ஸ்லாங்கில் அமைந்த பாடல்.

எப்போதும் கேட்கும் கானா பாடல் போலத் தோன்றினாலும் ‘காசு கையில் வந்தாலும், கஷ்டத்துல வாழ்ந்தாலும், போக மாட்டோம் மண்ண விட்டு’ என உரிமைக் குரல் ஒலிக்கிறது. சென்னை வாழ்க்கையை விவரிக்கும் வித்தியாசமான வரிகள் மக்களைச் சட்டென்று கவர்ந்துகொள்ளும்வகையில் இந்தப் பாடலில் பதிவாகியுள்ளன.



5. இறந்திடவா நீ பிறந்தாய்...

இதுவும் கானா பாலா பாடல்தான். அவரது வழக்கமான பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு அமைந்துள்ள இந்தப் பாடல் தத்துவார்த்தமான பல விஷயங்களை எளிமையாகச் சொல்லிச் செல்கிறது. இதற்கும் சந்தோஷ் நாராயணனின் இசை இதமான சுகம் தரும்வகையில் அமைந்துள்ளது.

ஒப்பாரி பாடல் தொனியில் ஆரம்பமாகும் பாடல் இல்லாமையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. இடையில் ஒலிக்கும் ‘தப்பு சத்தம்’ எனர்ஜிக் கொடுத்தாலும் தினம் கடந்துப் போகும் பாடல் போல் இருப்பது சோர்வு தருகிறது.


5. தீம் மியூசிக்... - 2

‘காளி லவ்’ & ‘சுவர்’ என வரும் இரண்டு ‘தீம்’களும் ஆல்பத்துக்கு கூடுதல் பலம்.



பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'மெட்ராஸ்' பாடல்கள் ரசிக்கும்படி இருக்கு!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images, Vuin.com & Ottran.in



வணக்கம் சென்னை (2013) - பாடல் விமர்சனம்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் "எங்கடி பொறந்த..." என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.

1. ஹே... நேரம் மாறலாம் காலம் மாறலாம்
பாடியவர்கள் : பாபோன் & மரியா ரோ வின்சென்ட்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு ஸ்லொ மெலடி பாடல். கிடார், சாக்ஸ், வயலின் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாடல். பாடல் ஈசியா ஹம் பண்ணும்படி இருக்கு. பாடல் வரிகள் ஆங்காங்கே தூவி நிரப்பியிருக்கிறார் நா.முத்துக்குமார்.


2. ஒசாகா ஒசாகா
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு காதல் பீட் பாடல். பாடல் அமைப்பு A.R.ரகுமான் பாடலை நினைவுபடுத்துகிறது. தேங்கா நாராக நெஞ்ச உரிசாலே... உள்ளா என்னான்னு காட்டிப்புட்டா .. நல்ல கவிதை வரிகள். என் பேவரிட் பாடல்.


3. ஓ பெண்ணே பெண்ணே
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு மென்மையான மெலடி பாடல். பாடல் முழுக்க பியானோ இசை...


4. எங்கடி பொறந்த
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடலை எழுதியவர் : விக்னேஷ் சிவன்.

இது ஒரு சிம்பிள் பீட் பாடல். ரஜினி பாஷா ஸ்பீச் மியூசிக், எங்கடி... எங்கடி.... எல்லாம் மிக மிக கலக்கல். மீண்டும் ஒரு பேவரிட் பாடல் இந்த ஆல்பத்தில்...


5. ஐலசா ஐலசா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு பியுட்டிபுள் மெலடி பாடல். இந்த பாடலில் பியானோ, நாதஸ்வரம் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பாடல். சுசித்ரா வாய்ஸ் மிக அழகாக பொருந்தி இருக்கு.


6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
பாடலை எழுதியவர் : அர்ஜுன்
இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். அனிருத்தின் டிரேட்மார்க் பாடல். ஓக்கே ரகம்.


7. சென்னை சிட்டி
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
பாடலை எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழன் ஆதி & ஹர்த் கவுர்

இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். நான் ஒருதடவ .சொன்ன .... இந்த வரிகளை பயன்படுத்தியவிதம் மிக மிக அருமை. இது தாண்டா சென்னை கெத்து ... வரிகள் அருமை!! கோழி சவுண்ட் அங்காங்கே அருமை!!!

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் வணக்கம் சென்னை ரசிக்கும்படி இருக்கு!


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



மரியான் (2013) - பாடல் விமர்சனம்

மரியான் 2013 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


படத்துல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு...?

1. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.

2. A.R.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

3. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

4. சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

5. தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் நடித்துள்ளனர்.

6. ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவர் ரஹ்மான் தான்.

7. 'பூ' படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன்.


யார் இந்த பரத்பாலா ...?

காட்சி மொழியின் வழியாக கதை சொல்வதில் வல்லவரான பரத்பாலாவின் வருகை, தமிழ்சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரஹ்மானின் வந்தே மாதரம், ஜன கன மன, உள்ளிட்ட தனித்த இசை ஆல்பங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தற்கு அப்பால் கடந்த 2004 ஆண்டு பரத்பாலா இயக்கிய ‘ஹரிஓம்’ அவரை தனித்த, தரமான சினிமாவின் காதலராக அடையாளம் காட்டியது! இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்கார தேவதைக்கும், அவளுக்கு உண்மையான இந்தியாவின் ஆன்மாவை காட்டும் ஒரு ஆட்டோ டிரைவருக்குமான காதல் உணர்வை சித்தரித்த விதம் தரமான ரசிகர்களை உருகவைத்த ஒன்று!

பரத்பாலா தனது இரண்டாவது முயற்சியாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ், ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் இயக்க இருந்த ‘19த் ஸ்டெப்’ தற்காலிகாமாக நிறுத்தி வைக்க்பட்ட நிலையில்தான் தனுஷ் நடிக்கும் மரியானைத் தொடங்கினார்.

படத்தோட கதை என்னனா ...

மன உறுதி கொண்ட ஒர்எளிய தமிழ்மீனவன், தன் காதலியைப் பிரிந்து, வெளிநாட்டு மீன்பிடிக்கப்பல் ஒன்றில் வேலைக்குச் செல்கிறான். அவனும் அவனோடு வேலைசெய்யும் சில தமிழ் இளைஞர்களும், உள்நாட்டுபோரில் ஆள்கடத்தி பணம் பறிப்பதை ஒரு நிதிஆதாராமாக செய்துவரும் தென் ஆப்ரிக்க குட்டி நாடு ஒன்றின் போராளி(?) குழுவால் கடத்தப்பட்டு பிணையக் கைதிகளாக நிறுத்து வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் மரியான் வேலைசெய்யும் ஷிப்பிங் நிறுவனம் பிணையத் தொகை எதுவும் தராமல் காலம் தாழ்த்துவதால், பிணையக் கைதிகளில் ஒவ்வொருவராக சுட்டிக்கொள்கிறார்கள். மரியானையும் சாவு நெருக்கும் நேரத்தில் ஒரு நண்பனோடு தம்பிக்கிறான். ஆனால் பின் தொடர்ந்து வரும் போராளிக்குழு இளைஞன் மரியானின் நண்பனை சுட்டுக்கொள்ள மரியான் மட்டும் தப்பிச் செல்கிறான்.

மிகப்பரந்த பாலைவனம், திசைவழி தெரியாத சூன்யம். இவற்றுக்கு மத்தியில் தனது காதலி பனிமலரின் நினைவுகள் மட்டுமே மரியானை வழிநடத்த அவன் தம்பி வந்தானா இல்லையா என்ற ‘சர்வைவல்’ கதைதான் மரியான்.
ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்று பொருளாம். சத்‌ரியனுக்கு சாவில்லை என்பது மாதி‌ரி ம‌ரியானுக்கு மரணமில்லை.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா


பாடியவர்கள் : ஜாவிட் அலி, ஹரிசரண் & நகாஷ் அசிஸ்
பாடலை எழுதியவர் : வாலி

ஜாலியான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. 'சோனாபரியா' என்ற வார்த்தை இந்த பாடலில் எத்தனை முறை வருகிறது என்று ஒரு குவிஸ் போட்டியே வைக்கலாம். எனக்குப் படித்த பாடல்.


2. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே!


பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்
பாடலை எழுதியவர் : A.R .ரஹ்மான் & கபிலன்

இது ஒரு மென்மையான காதல் பாடல். பின்னணி இசை மனதை வருடுவது போல இருக்கு. அதுவும் அந்த கடம்....சூப்பர்! கடல் திரைப்படத்தில் வந்த "மூங்கில் தோட்டம்" பாடலை சற்றே நினைவுபடுத்துகிறது.


3. எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு...


பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலை எழுதியவர் : குட்டிரேவதி & A.R.ரஹ்மான்

சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் கடல் திரைப்படத்தில் வந்த "நெஞ்சுக்குள்ள..." பாடல் தான் நினைவுக்கு வருது. இந்த பாடல் அதற்கும் சற்றே குறைவு என்று தான் சொல்லணும். பாடல் வரிகள் மிக அருமை. பெண் பாடலாசிரியர் குட்டிரேவதி-க்கு என் வாழ்த்துக்கள்!!!


4. கடல் ராசா நான் ...
கொம்பன் சுறா வேட்டையாடும் ...


பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடலை எழுதியவர் : தனுஷ்

பெப்பி சாங். யுவன் குரலில் பாடல் ரசிக்கும்படி இருக்கு. நார்மலா யுவன் பாடலில் இருக்கும் ஒரு சோகம் இதில் இல்லை. ரொம்ப ரசித்து பாடியிருக்கார்.


5. நெஞ்சே எழு
நெஞ்சே எழு...


பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : குட்டி ரேவதி

எழுச்சி பாடல். இந்த பாடலை முதலில் கேட்கும் போது செம்மொழிக்காக ரகுமான் இசை அமைத்த பாடலை நினைவுபடுத்துகிறது.


6. நேற்று அவள் இருந்தாள் ...

பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & சின்மயி
பாடலை எழுதியவர் : வாலி

ஒரு மெலடி காதல் பாடல். குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. விஜய்பிரகாஷ் நல்லா பாடியிருக்கார். எனக்குப் படித்த பாடல்.


7. I Love my Africa ...

பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : Brian Kabwe & Blaaze

தமிழுக்கு இது போன்ற இசை புதிது. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆப்பிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. மேற்கு இந்திய தீவுகளில் கிரிகெட் போட்டி நடக்கும் போது இது போன்ற இசையை கேட்டதுண்டு. அந்த பிறகு பாடலில் அத்தகைய இசையை கேட்டது இந்த பாடலில் தான்.



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் மரியான் ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சொன்னா புரியாது (2013) - விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் புதிய படம் "சொன்னா புரியாது". இவர் தமிழ் பட(ம்)த்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தில் 'தமிழ்ப்படம்' சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப்-வும் நடிக்கின்றனர். மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

படத்தோட கதை என்னனா ...

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம். திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.

ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது. அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. கேளு மகனே கேளு
ஒரு கொடும கதைய கேளு - தினம்


பாடியவர்கள் : ஜெகதீஷ்
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

மெலடிக்கு மேலே குத்து பாட்டுக்கு கீழ் வரும் பாடல்.

கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலையை பாடலில் சொன்ன விதம் அற்புதம். பாடலின் இடை இடையே வரும் ரஜினியின் வரிகள் அருமை. பாடல் வரிகள் தெளிவாக கேட்பது கூடுதல் அழகு.
பாடல் ஹை லைட் வரிகள் :

அந்த தண்ணி அடிச்சவன் இந்த தண்ணி அடிச்சான்
அந்த மூனு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
அவன் : காதல் முதல் கண்ணீர் வரை - ஒரு சிறுகதை இந்த பாடல்!


2. காலியான சாலையில் நீயும் நானும்
போகிறோம் காதல் கார்காலம்!


பாடியவர்கள் : SP சரண் & சின்மயி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

இது ஒரு மெலடி ரொமான்ஸ் பாடல். காதுக்கு இனிமையான கவிதை தொகுப்போடு வரும் ஒரு பாடல். காதலன் காதலியின் மனத்திரையை பிரதிபலிக்கும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

மனதின் வாசல்களை
அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்!
இரண்டு பேர். இரண்டு காதல். ஒரே பயணம் இந்த பாடல்!


3. தேவதையோ ராட்சசியா
தேர்ந்தேத்த நிலவோ...


பாடியவர்கள் : ரஞ்சித்
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

பெப்பி சாங். கவுண்டமணியின் டியாலக்கோடு தொடக்கும் பாடல். இவரின் பிரபலமான டயலாக் ஆங்கங்கே பரப்பி, கேற்பது மிக அழகா இருக்கு. மேலும் பாரதிராஜா, கார்த்திக்கின் ஜித்தாத்தா ஜித்தா இசையும் அருமை. ஹீரோ பின்னணி பேசும் பல மொழி தெரிந்தவன் என்பதை சொல்லும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

கடைசிப்பக்கம் கிழிந்தேடுத்த கிரைம் நாவல் இவளோ
ஒரு நொடியில் கண் பறிக்கும் மின்னல் அதன் துகளோ
ஆணின் முதல் பார்வை - காதல் மொழி - சொல்லும் பாடல்!


4. உன் தொழில் சாய்த்து
உன்னோடு பேச ஓடோடி வந்தேன்..


பாடியவர்கள் : MK பாலாஜி
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

சோக பாடல். வயலின் & பியானோ கலந்த கலவை இனிமை.

காதல் - சோகம் - ஆணின் மனநிலை - சொல்லும் பாடல்!


5. ஐயையோ போச்சே...

பாடியவர்கள் : MK பாலாஜி & யதீஷ் மகேஷ்
பாடலை எழுதியவர் : யதீஷ் மகேஷ்

மக்களே காதலில் தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பாடலை பாடிகொண்டிருப்பவர் பா...ப்பா..... என தொடக்கும் பாடல்.

சிவாவின் டயலாக் அங்கங்கே இருப்பது ரசிக்ககூடியது. இசை + பாடல் இரண்டும் ஒரே இரைசல்.



கோழி இடும் முட்டைகள் :
மொத்தத்தில் சொன்னா புரியாது ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!




அவன் இவன் - இசை விமர்சனம்

"நந்தா"-வுக்குப் பிறகு பாலாவும் யுவன் சங்கர் ராஜா உடன் பாடலாசிரியர் முத்துக்குமார் இணைந்து பணிபுரிந்திருக்கும் நகைச்சுவை கலந்த படம் "அவன் இவன்". இதில் விஷால் திருநங்கையாகவும் விஷாலின் சகோதராக ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.

ஒரு அண்ணன் தனது தம்பி ஆரவாணி என தெரியும் பட்சத்தில் எப்படி தன் தம்பியுடன் சகோதரத்தன்மையை பேணுவான் என்பதைத்தான் பாலா தனது ஸ்டைலில் காண்பித்திருக்கிறாராம் இந்த "அவன் இவன்" திரைப்படத்தின் மூலமாக.
புதிய பரிமாணம் என்றதும் மேற்கத்தைய இசை இல்லாமல் நம்மவூர் கிராமிய இசை கருவிகளை கொண்டு சும்மா பட்டையை கிளபியிருகிறார் யுவன். இப்படி ஒரு வித்தியாசமான இசையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கிரேட்!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

1. அவனும் சரியில்ல இவனும் சரியில்ல
எவன்தான் நான் இப்போ பாடபோறான்...
என தொடங்கும் இந்த பாடலை

T.L. மகாராஜா & சத்யன் இருவரும் போட்டிப்போட்டு பாடும் பாடல் இது. மெதுவாக ஆரமித்து சும்மா பட்டையை கிளப்பும் நம் கிராமத்து மனம் வீசும் ஒரு கும்மக்குத்து பாடல். இந்த பாடலில் இடம் பெரும் இசைக்கருவிகள் பழம்பெரும் கிராமங்களில் மட்டும் கேட்டகூடியவைகள். பாடல் வரிகள் அனைவரையும் கவரும்.


2. ஹே அடி ஏ
டியா டியா டோலே...
என தொடங்கும் இந்த பாடலை

சுசித்ரா பாடியுள்ளார். பாடல் வரிகள் இல்லாமல் வெறும் ஒரு சில வார்த்தைகளை கொண்டு வடிவமைக்கப் பட்ட பாடல்.

தார, தப்பட்ட, நாதஸ்வரம், சலங்கை, சண்ட மேல இசையும் உடுக்கை ஓசையுடன் கலந்து வரும் இந்த பாடல் சும்மா மிரட்டியுள்ளது. பலரது செல்போன்களில் இந்த பாடல் ரிங்-டன்னாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



3. ஒரு மலை ஓரம் அங்கு கொஞ்ச மேகம்
அந்த அடிவாரம் ஒரு வீடு...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் யேசுதாஸ், பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீனிஷா & பேபி நித்யஸ்ரீ இணைந்து பாடிய ஒரு
சுகமான மெலடி பாடல் இது. கிட்டார் மெல்லிசையுடன் புல்லாங்குழலும் கரைவது கேட்க கேட்க சுகம்.


4. முதல் முறை என் வாழ்வில்
மரணத்தை பார்கிறேன்...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். ஒரு சிறு சோகப்பாடல். இந்த பாடலை காட்சிகளும் காணும் போது இதன் சிறப்பு இன்னும் கூடும் என்பதில் ஐயமில்லை.



5. காட்டு சிரிக்கியே காட்டு சிரிக்கியே
காத்து கெடக்கரன் வாடி...
என தொடங்கும் இந்த பாடலை

ஹரிசரண் பாடியுள்ளார். இது ஒரு ரொமாண்டிக் பாடல். இந்த பாடல் இரண்டு பாடல்களை நம் நினைவுக்கு கொண்டுவரும்.
1. காட்டுசிருக்கி பாடல்
2. கண்ணுக்குள் நூறு நிலவா பாடல்
எங்கள்வூர் திருவிழாவில் வாசிக்கப்படும் சில இசை கருவிகளின் இசையை இந்த பாடல்களில் கேட்டதும் என்னக்குள் ஒரு வித சிலிர்ப்புவந்ததை மறுக்கமுடியாது.

கோவா, பையா, நான் மகான் அல்ல, பாஸ்(எ)பாஸ்கரன் என்றவாறு தொடர்ந்து
வெற்றிப்பயணத்தில் சென்று கொண்டிருக்கும் யுவனின் அடுத்த படைப்பாக அமைய இருப்பது தான் "அவன் இவன்".

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் : அவனும் சரியில்ல இவனும் சரியில்ல

நல்ல இசையை நாம் ரசிப்பதுடன் நில்லாமல் பிறருக்கும் அறிமுகம் செய்வது நன்று.
கிராமியமணத்துடன் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது ஞாபகம் இருக்கலாம். அந்த வரிசையில் மேலும் ஒரு படம் இந்த
"அவன் இவன்" - கிராமத்து இசை திருவிழா!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top