Showing posts with label கவி பெரியதம்பி. Show all posts
Showing posts with label கவி பெரியதம்பி. Show all posts

'மல்லிகா...' பாட்டை நீங்கள் கேட்டீரா ?

நேற்று இரவு ஐவர் பட பாடலை கேட்ட நேரம் கிடைத்தது. முதல் முறை கேட்டும் போதே மனதில் பசக்கேற்று ஒட்டிக்கொண்டது. கவி பெரியதம்பி எழுதிய "மல்லிகா..." என்று ஒரு பாடலை திப்பு அவர்கள் மிக அழகாக பாடியிருக்கிறார். இப்படத்திற்கு இசை கவி பெரியதம்பி.

நீங்களும் கேட்டு மகிழுங்கள் கீழ் வரும் பாடல் வரிகளை படித்து ரசித்த படியே.

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

இவள் தான் அந்த மல்லிகா ....?!



மல்லிகா ....
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

தனிமையிலே தொட்டிருக்கேன்
அந்த மச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா - அங்கே
அழகு மிச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா

அந்த நினைப்பு மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா


உன் பேரின் முதல் எழுத்தும்
என் பேரின் ஓர் எழுத்தும்
ரெண்டு பேர சேர்த்துவச்சு மல்லிகா - நெஞ்சில்
பட்சக் குத்தி பார்த்து வச்சேன் மல்லிகா

அந்த பேரு மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

எனக்குள்ளே நீ என்று
உனக்குள்ளே நான் என்று
நீ தானே சொல்லி வச்சே மல்லிகா - நானும்
அதையெல்லாம் நம்பி வச்சேன் மல்லிகா

நான் இன்னும் மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

மல்லிகா ... மல்லிகா... மல்லிகா... ஓ... ஓ... ஓ... மல்லிகா

ஊரு உறங்கும் நேரத்தில்
என்னோட செல் போனில்
மிஸ்டு கால் கொடுத்து வச்சே மல்லிகா - நானும்
பில்லு கட்டி சொத்தை அழித்தேன் மல்லிகா

செல் போன் மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா ...

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஐவர் - படப்பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top