Showing posts with label காஜல் அகர்வால். Show all posts
Showing posts with label காஜல் அகர்வால். Show all posts

ஜில்லா (2014) விமர்சனம்

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தில் மோகன்லால் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

சுரேஷ் சவுத்ரி, ஜீவன் ரமேஷ், ஜீவா. மகத், சூரி, தம்பிராமய்யா, சம்பத், சரண், ரவிமரியா, பிரதீப்ராவத், ஜோமல்லூரி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையில் கவிஞர் வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.டி.நேசன் டைரக்டு செய்கிறார். ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதை.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது.

தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் மோகன்லால் கட்டளையிடும் வேலைகளை செய்து முடிப்பவராக விளங்குகிறார் விஜய். மோகன்லாலுக்கு மஹத், நிவேதா தாமஸ் என இரண்டு பிள்ளைகள்.

மதுரை வீதியில் ஒருநாள் காஜல் அகர்வாலை பார்க்கும் விஜய் அவள்மீது காதல் கொள்கிறார். மஹத், நிவேதா தாமஸிடம் சென்று காஜலின் அழகை வர்ணிக்கிறார். இதனால் அவர்களுக்கு காஜலைப் பார்க்கும் ஆசை துளிர்விடவே, காஜலின் வீட்டுக்கு விஜய்யை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, அவளை போலீஸ் உடையில் பார்த்ததும், அவள் மீது வெறுப்பு கொள்கிறார் விஜய்.

மறுமுனையில் மதுரைக்கு போலீஸ் கமிஷனராக வரும் பிரதீப் ராவத், விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் வந்து மோகன்லாலை கைது செய்து அழைத்துப் போகிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகாமல் போலீஸ் வண்டியிலேயே 5 மணி நேரம் மதுரையை வலம் வருகிறார். அப்போது மோகன்லாலிடம் ரவுடித்தனத்தை விட்டுவிடுமாறு பிரதீப் ராவத் கூறுகிறார். ஆனால், மோகன்லால் ரவுடிசத்தை விடமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். இறுதியில், மோகன்லாலை எச்சரித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விடுகிறார்.


இதை அறியும் விஜய், தன் அப்பாவை கைது செய்த பிரதீப் ராவத்தின் கையை வெட்டி விடுகிறார். இருந்தும், தான் கைதான அவமானம் தாங்கமுடியாத மோகன்லால் தன்னுடைய ஆள் ஒருவர் போலீஸ் பணியில் இருந்தால் இதுபோன்று நடக்காது என முடிவெடுத்து, விஜய்யை போலீஸ் பணியில் அமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், போலீஸ் என்ற வார்த்தையே பிடிக்காத விஜய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

மோகன்லாலின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக போலீஸ் செலக்ஷனில் கலந்து கொள்கிறார். இருந்தாலும் மோகன்லால், மந்திரியான சம்பத்தின் உதவியால் விஜய்யை கமிஷனராக ஆக்குகிறார். கமிஷனராகும் விஜய், போலீஸ் உடை உடுத்தாமல், சாதாரண உடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவதாக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் மஹத் தனது அடியாட்களுடன் சென்று ஒரு இடத்தை வாங்குவதற்காக அடி-தடி நடத்தி அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார். இந்த கலவரத்தில் அந்த இடத்தில் இருக்கும் சிலிண்டர்களில் உள்ள வாயு கசிந்து சிலிண்டர்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம், பேருந்து, சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இந்த தீயிற்கு இரையாகின்றனர். அதில், பல குழந்தைகளும் பலியாகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் விஜய் இதற்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர்மீது கோபப்படுகிறார்.

எனவே, அதுவரை போலீஸ் உடையை போடாத விஜய், அந்த உடையை அணிந்துகொண்டு மோகன்லாலிடம் சென்று இனிமேல் இதுபோன்ற காரியங்களில் இறங்கவேண்டாம் என்று சொல்கிறார். தன்னால் வளர்ந்தவன் இன்று இப்படி தன்னை மிரட்டுகிறானே என்று விஜய் மீது கோபம் கொள்கிறார் மோகன்லால். இறுதியில், உன்னால் முடிந்ததை நீ செய்துகொள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று சவால் விட்டு இருவரும் பிரிகிறார்கள்.

இறுதியில், தன் அப்பாவை மாற்றினாரா? அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா? என்ற மீதிக்கதையை விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

விஜய் vs மோகன்லால்
விஜய் காமெடி, டான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் வெளுத்து வாங்குகிறார். போலீஸ் கெட்டப்பில் இவரை ஏற்கெனவே ரசித்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து படைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக மோகன்லாலும் நடிப்பில் களைகட்டுகிறார். இருவரும் சவால் விடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். மோகன்லால் வில்லனாக மிரட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் தனது அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். பாடல் காட்சிகளிலும், போலீஸ் உடையிலும் அழகோ அழகு.

இதர நட்சத்திரங்கள்
சூரி, வித்யூத் ஜம்வால் ஆகியோர் ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கிறார்கள். சம்பத் கதைக்கு ஒரு திருப்புமுனையாக வருகிறார். மந்திரி கெட்டப்பில் வில்லத்தனம் காட்டும் இவருடைய நடிப்பு அபாரம்.

பூர்ணிமா பாக்யராஜ் அம்மா கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். விஜய் தம்பி, தங்கையாக வரும் மஹத், நிவேதா தாமஸ் இருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் நேசன்
புதுமுக இயக்குனரான நேசன் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த மசாலாவாக படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.

இசை டி.இமான்
டி.இமான் இசையில் விஜய்-மோகன்லால் அறிமுகமாகும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அந்த பாடல் படமாக்கிய விதம் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ‘ஜில்லா’ களைகட்டுகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



சார் ஒச்சாரு (2013) தெலுங்கு பட விமர்சனம்

தெலுங்கில் சென்ற வருடம் இறுதியில் ரிலீசாகி ஹிட்டான படம் ‘சார் ஒச்சாரு’. ரவிதேஜா ஹீரோ, காஜல் அகர்வால், ரிச்சா கங்கோபாத்யாய இருவரும் அவருக்கு ஜோடி. பரசுராம் என்பர் டைரக்ட் செய்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக். ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த முக்கோண காதல் கதை.

இப்படம் ‘சார் வந்தாரா’ என்று பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது.

படத்தோட கதை என்னனா ...

வழக்கமான சினிமா பாணியில், காதல் ஜோடியை துரத்திக்கொண்டு ஒரு கும்பல் வருகிறது. ஆனால் சற்று வித்தியாசமாக இதில், நாயகனுக்குப் பதில், நாயகனின் நண்பனும் அவனது காதலியும் அந்த கும்பலிடம் சிக்குகிறார்கள். பெண்ணின் மாமா சில ரவுடிகள் மூலம் விரட்டி தாக்கும்போது, உள்ளே புகுந்து நாயகன் ரவிதேஜா பின்னி எடுக்கிறார். பின்னர் நண்பனின் காதலை சேர்த்து வைக்கும் ரவிதேஜா, அவர்களுக்கு திருமணமும் செய்து வைக்கிறார்.

பிறகு வெளிநாடு செல்லும் அவர் அங்குள்ள இன்னொரு நண்பனின் காதலையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். அப்போது நண்பன் காதலிக்கும் பெண்ணின் தோழியான காஜல் அகர்வால் அவரை பார்க்கிறார். கண்டதும் காதல் என்ற இலக்கணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காஜலுக்கு, ரவிதேஜாவை பார்த்ததும் ஏனோ மனதிற்குள் பட்டாம் பூச்சி பறக்கிறது. காதல் வயப்பட்ட காஜல், ரவிதேஜாவை தன் வசம் ஈர்க்க முயற்சிக்கிறார். ஆனால் ரவிதேஜாவோ அவரை கேலி, கிண்டல் செய்து அவருக்கு நோஸ் கட் செய்கிறார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ரவிதேஜாவும், காஜல் அகர்வாலும் இந்தியாவுக்கு வர நேரிடுகிறது. இருவரும் ஒன்றாகவே விமானத்தில் வருகிறார்கள். இந்தியாவுக்கு சென்றடைவதற்கு முன்னதாகவே ரவிதேஜாவை தன்னை காதலிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காஜல் பயணிக்கிறார்.

பல வழிகளில் காஜல் முயற்சி எடுத்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ரவிதேஜா அதை மறுத்து விடுகிறார். ஏன் என்று காஜல் கேட்கும் பொழுது ‘நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். என் மனைவி ரிச்சாவை விவாகரத்து செய்யத்தான் நான் இந்தியாவுக்கு வருகிறேன்’ என்று கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் காஜல், மிகவும் வருத்தமடைகிறார். இருப்பினும் அவரிடம் பேசிக் கொண்டு அவருடைய திருமணத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

இறுதியில் காஜலின் காதல் ஜெயித்ததா? ரிச்சாவை ரவிதேஜா விவாகரத்து செய்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ரவிதேஜா vs காஜல் அகர்வால்

நாயகன் ரவிதேஜா, ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என கலக்குகிறார். நாயகி காஜல் அகர்வால் அழகு பதுமை. நடிப்பதற்கு அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக ரவிதேஜாவிடம் தன் காதலை சொல்ல முயற்சிக்கும் போதும் நான் ரொம்ப அழகு என்று சீன் போடும் காட்சிகளிலும் காஜல் அருமையாக நடித்திருக்கிறார்.

ரிச்சா

வெகுளித்தனமாகவும் படு சுட்டியாகவும் காஜலின் கதாபாத்திரம் அமைந்து காட்சிகளுக்கு மெருகேற்ற... மற்றொரு கதாநாயகி ரிச்சாவோ கவர்ச்சியிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார். மீண்டும் இவரை தமிழ் படங்களில் பார்க்கலாம் என நம்புவோம்.


தேவிஸ்ரீ பிரசாத்

படத்தில் பாடல் வரிகளை விட தேவிஸ்ரீ பிரசாத்தின் இசைதான் மேலோங்கி இருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். படத்தின் பாடல் காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒளிப்பதிவு செய்த விதம் அருமை.

இயக்குனர் பரசுராம்

கல்யாணத்திற்கு முன் உள்ள காதலையும், கல்யாணத்திற்கு பின் உள்ள காதலையும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரசுராம். முன்பாதியில் தேவையற்ற சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். காதல் பெரியதா? கல்யாணம் பெரியதா? என்ற திரைக்கதையை ரசிக்கும்படியாக எடுத்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் "சார் ஒச்சாரு" - சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2013–ல் கலக்கிய நடிகைகள்

2013–ல் புதுமுக நடிகைகள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் அவர்கள் காணாமல் போயினர். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.

நயன்தாரா

நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் கதாநாயகியாகவே இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் ரசிகர்கள் அவரை ஒதுக்கவில்லை.

ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.


காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான ‘துப்பாக்கி’ படம் முன்னணி நடிகையாக்கியது. ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.


அனுஷ்கா

அனுஷ்கா நடித்து இந்த வருடம் ‘அலெக்ஸ் பாண்டியன்‘, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ படங்கள் வந்தன. இதில் ‘சிங்கம் 2’ அதிக வசூல் குவித்தது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.

ஹன்சிகா

ஹன்சிகாவுக்கு இந்த வருடம் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘சிங்கம் 2’ படங்கள் கைகொடுத்தன.
கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படமும் இந்த மாதத்திலேயே ரிலீசாக உள்ளது. வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான் கராத்தே, உயிரே உயிரே என நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அமலாபால்

அமலாபாலுக்கு தலைவாவில் விஜய் ஜோடியாகும் வாய்ப்பு கிட்டியது. ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கிறார்.

திரிஷா

திரிஷாவுக்கு ‘சமர்’ படமும் டாப்சிக்கு ஆரம்பம் படமும் இவ்வருடம் வந்தன. ஜீவாவுடன் திரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படம் இந்த மாதத்திலேயே வருகிறது. ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்திலும் நடித்து வருகிறார்.

தமன்னா, பிரியாமணி, சமந்தா போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



விஜய் புதிய படத்தோட பேரு பில்லா ஸாரி… ‘ஜில்லா’!


விஜய் நடிக்கும் புதிய படம் 'ஜில்லா'. இதென்ன அஜித்தின் பில்லாவுக்கு போட்டி படமா என்று கேட்டால் அதைப்பத்தியெல்லாம் எதுவும் சொல்லல. ஆனா ஏதோ ஒரு தெலுங்கு படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணினா எப்படி டைட்டில் வைப்பாங்களோ? அப்படி ஒரு டைட்டிலை ஜில்லான்னு வெச்சிருக்காங்க விஜய் நடிக்கப்போற புதுப்படத்துக்கு.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். ஆர்.பி.சௌத்ரி பேசும்போது சூப்பர் குட் பிலிம்சின் 25-வது படமாக ‘ஜில்லா’ தயாராகிறது. ‘திருப்பாச்சி’ படத்துக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளோம் என்றார்.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்துல துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்- காஜல் அகர்வால் மறுபடியும் ஜோடி சேர்றார்.



கூடுதல் ஸ்பெஷலா இந்தப்படத்துல மலையாள நடிகர் மோகன்லால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.

பூர்ணிமா பாக்யராஜ், தம்பி ராமையா, பரோட்டா சூரி, மகத், ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை நேசன் இயக்குகிறார். ரீமேக் படங்களை டைரக்ட் பண்ணி பாப்புலரான ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல்.

இமான் இசையமைக்கிறார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருது.

ஜில்லா பட பூஜை இன்று காலை தியாகராயநகரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜய் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘லவ்டுடே’, ‘திருப்பாச்சி’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் ஹிட்டாயின. அந்த படங்களின் சாதனையை ‘ஜில்லா’ படம் முறியடிக்கும். காஜல் அகர்வால் நாயகியாக வருகிறார்.

இவ்வாறு விஜய் கூறினார்.

விஜய் - அதிரடி ஆட்டம்

நடிகர் விஜய் மிக வேகமாகத்தான் இயங்குகிறார், அடுத்து வெளிவரப்போகும் தலைவா இன்னும் திரைக்கு வராத நிலையில், அதற்கு அடுத்த படமான ‘ஜில்லா’ வரும் 11-ம் தேதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.

வழமையாக ஒரு படத்திற்கும் அடுத்தப் படத்திற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது இடைவெளிவிடும் விஜய், இப்போது அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதுவும், அடுத்த படம் வெளியாவதற்குமுன், அதற்கு அடுத்த படம்!

தமிழ் சினிமா மார்க்கெட் வேல்யூவில் கிட்டத்தட்ட இவரது இடத்துக்கு அருகில் உள்ள மற்றைய ஹீரோக்கள், தமது அடுத்த படமே எது என்று அறிவிக்காத நிலையில், விஜய்யின் இந்த வேக நடவடிக்கை, அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பது நிஜம்தான்.

துப்பாக்கி வெற்றியைப் பற்றி திரையுலகம் பேசிக்கொண்டிருந்த போதே, அந்த சூடு ஆறுவதற்குள் அதிரடியாக தனது 'தலைவா' பட அறிவிப்பை வெளியிட்டு, மீண்டும் செய்திகளில் பரபரப்பாக அடிப்பட்ட விஜய், 'ஜில்லா' அறிவிப்பின் மூலம், மீடியாக்களில் அடுத்த ரவுண்ட் வருகிறார்.

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'தலைவா' படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுகின்றன. அது ஏன் தெரியுமா?



தலைவா படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுவதற்கு இரண்டு காரணங்கள்.

1. புதுமுக இயக்குநர் நேசன்.

நடிகர் விஜய், ஜில்லா படத்தின் கதையைப் பற்றி ஆஹா... ஒஹோ என்றும், இயக்குநர் நேசன் இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார் என்றும் புகழ்ந்தார். அதையடுத்து அவர்மீது பலரது கவனமும் சென்றது.

தவிர, தற்போது மார்க்கெட்டின் உச்சியில் உள்ள விஜய், நடிக்க சம்மதித்தால் உடனே கதை பண்ண தயாராக பிரபல இயக்குனர்கள் காத்திருக்க, புதுமுக இயக்குநர் ஒருவர்மீது நம்பிக்கை வைத்து தமது அடுத்த படத்தை கொடுத்திருக்கிறார்.



2. மோகன்லால்

'ஜில்லா' படத்தின் கதையும், தமது கதாபாத்திரமும் மோகன்லாலுக்கு மிகவும் பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். விஜய்க்கு அடுத்தபடியான மிக முக்கிய கதாபாத்திரம் என்பது ஒரு ஊகமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில், ‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை சிலர் கவனித்திருக்கலாம்.

‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்விக்கு விடை அறியும் ஆவலும், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஒரு விதத்தில் சொன்னால், ரூ.150 கோடியை விட அதிக பட்ஜெட்டில் தயாராவதாக சொல்லப்படும் (பவர் ஸ்டாரின்) ‘ஐ’ படத்தைவிட, இன்னமும் பூஜையே போடப்படாத ‘ஜில்லா’வுக்கு மீடியா பப்ளிசிட்டி அதிகம்!

‘ஜில்லா’ படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : விறுவிறுப்பு சினிமா



Related Posts with Thumbnails
 
back to top