Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

அட அப்படியா....? !!! (Must read)

அசர வைக்கும் டோயோர நிறுவனம்:

முதலில் இந்த விடியோவை பாருங்கள். இது என்ன காரா? அல்லது சுமார்ட்போனா? அல்லது கேம் மெசின்?


உங்கள் விடையை சரியானதா...?!

டோயோர நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் நவீன கார் 'Fun-Vii'. குழந்தைகள் விளையாடும் கேம்ஸ்-களில் வரும் காரைபோல உருவாக்கியிருக்கிறார்கள். இந்தனை ஜப்பானில் நடக்க இருக்கும் 42-ஆவது டோக்யோ மோட்டார் ஷோவில் 'Fun-Vii' கார் கலந்துகொள்ள இருக்கிறது.


காரின் விலை, வேகம், இதர சிறப்பு அம்சங்கள் பற்றிய செய்திகளை இன்னும் டோயோர நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.

மேலும் இந்த காரைப்பற்றிய தகவல்கள் பெற இங்கே தொடுக.
Thanks : 3.bp.blogspot.com


தேன் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் இருக்கிறதே.... எப்படி?

இதற்குக் காரணம் தேனீக்கள், தேன் செய்யும் முறையில் இருக்கிறது. தேனீக்கள் பூக்களிடம் விஜயம் செய்து சேகரிக்கும் பூந்தேனை அப்படியே சேர்த்து வைப்பதில்லை. வயிற்றில் உபரியாகா இருக்கும் சிறிய பையில் அதை வைத்து தேன்கூட்டுக்குக் கொண்டுவருகிறது. வயிற்றுக்கும் இந்தப் பைக்கும் ஒரு வால்வு இருக்கிறது. முதலில் இந்த தேனில் இரசாயன மாற்றங்கள் செய்கின்றது, குறிப்பாக தேனில் இருக்கும் சக்கரையில், அதன் பின் தேனில் இருக்கும் தண்ணீரை நீக்கிவிடுகிறது. அது தேன் கூட்டில் இருக்கும் உஷ்ணத்தால் ஏற்படுகிறது.

தேன் கூட்டில் சேகரித்து வைக்கப்பட்ட தண்ணீரற்ற தேன், சரம் கெடவே கெடாது. லட்சம் வருடம் ஆனாலும் கெடாது என்கிறார்கள். நாலாயிரம் வருடத்திற்கு முன் இறந்து போன எகிப்திய ஃபாரோ மன்னனோடு பிரமிட்டுக்குள் வைக்கப் பட்ட தேன் இதுவரை கெட்டுப் போகவில்லை!.
தேனீகள் மலர்களில் மட்டும் தேன் சேகரிப்பதில்லை. சில சமயம் மற்ற பூச்சிகளிலிருந்தும் அல்லது செடிகளின் மற்ற பாகங்களிலிருந்தும் சேகரிக்கிறது! சாதாரணமாக ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டுவர ஒரு தேனீ சுமார் "45,000 மைல்" துரம் அலைந்து உழைக்க வேண்டும்.

உழைப்புக்கு மறுபெயர் தேனீக்கள்!!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தலை முடிஉதிர்வை & வழுக்கையை தவிர்க்கும் முறைகள்

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு.

வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:
  • இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உப யோகித்து வந்தால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

  • வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

  • அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

  • சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும்.

  • அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

  • பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும்.
கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.

தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.

இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.
நன்றி :தினகரன்



ஏழாம் அறிவு - 01 அப்படியா!?

ரொம்ப சந்தோகம். நன்றி மக்கா!!!

இந்த கோழி பிறந்து ஒரு வருஷம் முடிந்தது. போதும்னு நினைத்து என்னை சூப்பு வைத்துவிடாதீர்கள்! ஆதரவு தாருங்கள். இன்னும் சிறப்பாக நல்ல விசயங்களை எழுத்து முற்படுகிறேன்.

என் எழுத்தையும் ரசிக்கும் நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நல்லதை படியுங்கள். ஆதரவு தாருங்கள். உங்கள் ஆசியுடன் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்.

இன்று ஏழு டைம் பாஸ் செய்திகள் பற்றி பார்ப்போம்.

1. படம் சொல்லும் பாடம்

வாத்தியார் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கேள்வி ஒன்றை கேட்டா அதற்கு உரிய பதிலை தெரியாத மாணவன் இப்படி சாமர்த்தியமா பதில் எழுத அதற்கு அந்த வாத்தியாரும் சாமர்த்தியமா எப்படி மார்க் போட்டதை நீங்களும் நன்கு போட்டோவை பெரிது படுத்தி பாருங்கள்.


2. தீப்புண் விரைவில் குணமாக...

தீப்பட்ட இடத்தில் பீட்ருட் சாற்றைத் தடவ தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும்.

தேங்காய் எண்ணையுடன் பீட்ருட் சாரை கலந்து தடவி வர விரைவில் தீப்புண் குணமாகும்.

3. சர்க்கரை நோயைக் குணப்படுத்த...

தினமும் காலையில் வெருவயிருடன் தண்ணீரை குடித்துவந்தால் சர்க்கரை நோயைக் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

4. முதல் நாணயம்

தற்போதுள்ள துருக்கி நாட்டை 600-610 ஆம் ஆண்டு ஆண்டுவந்த Alyattes என்ற அரசனால் முதல் முறையாக நாணயம் முறை உருவாக்கப்படாது. 13x10x4 மி.மீ உருவம் & 4.71 கிராம் எடை கொண்டது. தங்கம் + வெள்ளியால் வேலைபாடு செய்யப்பட்டது இந்த நாணயம்.

5. முகம் அழகாக...

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப்பருக்கள் நீங்கி, முகம் பளப்பளப்பாக தொளிக்கும்.


6.இன்றைய கண்டுபிடிப்பு

உலகின் முதல் நிலத்திலும் நீரிலும் நீந்தும் கார் (sQuba, world's first swimming CAR).




7. காதல் தத்துவம்

காதல் என்பது கார் மாதிரி
சிலருக்கு கிஃப்டா கிடைக்கும்
சிலருக்கு லிஃப்டா கிடைக்கும்!


என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சுடச்சுட நான்கு தகவல்கள்

சுட சுட இன்றைய செய்திகள் நான்கு.

1. இந்திய நாணயம் இப்போது புதிய வடிவில் வெளிவர இருக்கிறது. அதன் மாதிரி வடிவம் இதோ.


2. மனோதத்துவ புத்தம் ஒன்றில் "மனதை தொட்ட ஆறு மூக்கியமான பாயிண்ட்" இதோ.
  1. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோமீட்டர் ஓடுங்கள்.

  2. பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்.

  3. பகலில் இரண்டுமணி நேரம் தூங்குங்கள்

  4. தினசரி பேபரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.

  5. தினமும் நண்பர்களுடன், காலையில் மூன்று மணி நேரமும் , மாலையும் மூன்று மணி நிறமும் மனம் விட்டு பேசுங்கள்

  6. ஒரு நாள் விட்டு ஒரு நாள், சினிமாவுக்கு போங்கள்.

இந்தனையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால், நீங்கள் வேலை வேட்டியில்லாதவர், உபயோகமான வேலை ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.

3. இன்றைய தத்துவம் - வில்லியம் மார்டின்
மனோவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காக கார்திருக்கின்றனர்.

4. ஒரு நகைச்சுவை - இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமோ ....?!
எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதைவிட ரெண்டு மடங்கா சொல்லன்னும்கிரத்துக்காக தலைவர் இப்படியா உளர்றது ?

அப்படி என்ன சொன்னாரு ?

எதிர்க்கட்சிக்காரங்க 2011-ல் ஆட்சியைப் பிடிப்போம்னு சொன்னதுக்கு, நாங்க ஆட்சியைப் 4022-ல் பிடிப்போம்னு தலைவர் பதிலடி கொடுத்திருக்காரே!?
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சுனிதா கிருஷ்ணன் - இவரல்லவா பெண்!

விஜி அக்காவிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் Dr.சுனிதா கிருஷ்ணன் பற்றி வந்த செய்தியை படித்த போது மனது ரொம்ப வலித்தது. எவளவு கொடுமையடா சாமீ!


ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌ வேண்டாம்.



சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது,
"சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? சுனிதா உங்களை வணங்குகிறேன்.

மேலும் நீங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ள இங்கே தொடுக

உதவ நினைப்பவர்கள் தொடர்புகொள்ள
Prajwala,
20-4-34,III Floor,
Behind Charminar Bus Stand,
Charminar,
Hyderabad.

நன்றி - விஜிஅக்கா



வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்கள்!

குறைந்த செலவில் ஒரு மருத்துவ குறிப்பு ஒன்றை இன்று பார்ப்போம்.

வெங்காயம் பற்றி நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இது இருக்கும். இந்த வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், பச்சையாக உட்கொள்ளும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப் படுத்துவதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.

நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணம் செய்வதுடன் தேவையான சத்துப் பொருட்களை உடலுக்கு பிரிந்து கொடுகிறது.

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், நோய் கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகபடுத்திறது.

மாரடைப்பில் இருந்து மனிதர்களை காக்கும் மிகப்பெரிய மருத்துவ குணம் இதற்கு உண்டு என்பது கூடுதல் செய்தி.

இனிமேல் வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கள். பயன் பெறுங்கள்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

வாய்ப்புகள் இரண்டுவகை.
1. மீண்டும் வாக்கும் வாய்ப்பு.
2. ஒரே ஒரு முறை மட்டும் வாய்க்கும் வாய்ப்பு.

வாய்ப்புகளை இப்படி பிரித்து அறிந்து இனம் காணத் தெரியாதவர்கள் எல்லாவற்றையும் ஓன்று போல எண்ணி, அரிய வாய்ப்பினை நழுவவிட்டுப் பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

விடியற்காலை எழவேண்டிய அவசியம் சில தினங்களில் நமக்கு ஏற்படுவது உண்டு. ரயில் பிடிக்க, முதல் முகூர்த்ததில் கலந்து கொள்ள, தேர்வுக்கு படிக்க என்று பலருக்கும் அவசியங்கள் பல விதம்.

இவற்றுள் பெருபாலானவை மறுபடி வைக்காத வாய்ப்புகள். விட்டால் கை விட்டது தான் என்ற ரகங்கள்.

அலாரம் வைத்து எழ நினைக்கிறவர்கள், அலாரம் அடித்ததும் அதன் தலைமேல் ஏதோ நம்மீது உட்கார்ந்த கொசுவைத் தூக்கத்தில் அடிப்பது போல பட்டெண்டு அடித்துவிட்டு மறுபடி தூங்க ஆரமித்து விடுகிறார்கள்.


அலாரத்தை படுக்கை அறையின் வெகுமூலை வையுங்கள். அலாரம் அடிப்பதை உணர்த்து சோம்பல் முறித்து, தட்டுத் தடுமாறி எழுந்து, நடந்து பொய் அதை அணைக்க ஆகும் கால இடைவெளி சுமார் ஓர் நிமிடம். இந்த ஒரு நிமிடம் மிக முக்கியமானது. மனதை உடல் கெஞ்சும். படிப்பாவது கிடிப்பாவது ? கடைமையாவது மண்ணாவது ? எல்லாமே தூக்க அரக்கனின் அடிமைகள்.

மறுபடி வந்து படுத்து, "இதோ! ஒரு நிமிடத்தில் எழுதுடறேன்!" என்று உடல் + மனமும் இதற்கு உடன்படும். ஒரு நிமிடமாவது.. ? கண் திறந்தால், வழக்கமான நேரத்தை விடத் தாமதமான கண் விழிப்பு. "ஐயோ!, பல மணி நேரம் போச்சே! போச்சே!" என்று மனம் பதிக்க வேண்டியது தான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓன்று தான். இரவில் என்ன நோக்கத்திற்காக அலாரம் வைக்கிறோமோ அதனால் ஏற்படும் பலன்களை பற்றி கற்பனை செய்துவிட்டு, அலாரம் நேரம் எழுந்தே தீருவேன் என்று மனதில் பதிக்கவேண்டும்.

இரவு நேர வைராக்கியத்தால் உடலை முறுக்கேற்ற வேண்டும். உலகை வெல்லும் முனைப்பில் இருப்பதால்ம் தூக்க அரக்கனே! உனக்கு நான் மசிய மாட்டேன். கண்ணில் கண்ட காட்சிகளை கையகப் படுத்துவேன் என்று மனத்திற்குள் உறுதி பூண வேண்டும். இந்த ஒரு நிமிட உறுதி தான் உங்கள் வெற்றியின் விலாசங்களை அடியாளம் காட்டப் போகிறது.

இனி நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

நன்றி :லேனா

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



'பனிக்குழையம்' பற்றி கேள்விப் பட்டதுண்டா?

கொஞ்சம் சிரிக்க

'குளு குளு கூழ்'-னு சொல்லி நம்ப கவுண்டமணி சார் லக்கிமேன் படத்துல சில்க் சுமிதா + செந்திலுடன் அடித்த அந்த நகைசுவை காட்சி யாராலும் மறக்கமுடியாதவை. அதனை நீங்களும் ரசிக்க சில நிமிடம் ஒதுக்குங்கள் இப்போதே. பிறகு 'பனிக்குழையம்' என்றால் என்னவென்று பார்ப்போம்.



தகவல் நேரம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சென்னையில் வணிக நிறுவனம் பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற உத்திரவிட்ட மேயரை பாராட்டலாம்.

மைலாப்பூர் தெற்குமாட வீதில் இருக்கும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு வைத்துள்ள தமிழ் பெயர் பலகை தான் இது. கோன் ஐஸ் கிரீம் ஆங்கில வார்த்தைக்கு சமமான தமிழ் வார்த்தை தான் இந்த 'பனிக்குழையம்'.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



மருதாணியின் மகிமை


பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்துக்வருகிறார்கள். இதுவே பவுடராக இன்று நகரத்து பெண்களிடம்...

இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணக்கள் நிறைத்துள்ளது. அதை பற்றி ஒரு பார்வை.


மருத்துவப் பயன்கள்:

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.


உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி : இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

முடிவளர : இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

புண்கள் : ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.


இங்கே சுட்டி காட்டியுள்ளது சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.

பவுடராக வரும் இந்த மருதாணியில், எந்த அளவு அதன் மருத்துவ குணக்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த பாருங்கள்.

Source : மூலிகைவளம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



அறியவகை இரட்டை தலை பாம்புகள்


பாம்பை கண்டாலே படையும் நடுக்கும் என்பது பழமொழி. சில வாரங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஐந்து தலை நாகம் கர்நாடகா மாநிலத்தில் இருப்பதாகவும் அதன் போடோ சிலவும் இருந்தன. அது உண்மையோ பொய்யோ ... தெரியாது. இப்போது இரண்டு தலை நாகம் சில கண்டுபித்துள்ளர்னர் அறிவியல் அறினர்கள்.

அறியவகை இரண்டு தலைகள் கொண்ட பாம்பை ஸ்பெயின் நாட்டில் அலிகான்ட்(Alicante) என்ற கிராமத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.

மேலும் இது போற்ற பாம்புகள் போன்ற அமெரிக்கா, ஸ்ரீலங்கா மற்றும் அர்ஜென்டினா நாடுகளிலும் கண்டுபிக்கபட்டுளது குறிப்பிட தக்கது.

சான் டீகோ ஜூவில் (San Diego Zoo) இந்த பாம்பு பார்வையாளர்கள் கண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கே எடுக்கப்பட்ட சில படங்கள்.










இதே போல இன்னும் சில பாம்புகள் ஏற்கனவே பிடிபட்டுள்ளது. சில வீடியோ காட்சிகள் உங்களுக்காக...



Source : www.wackyarchives.com

என்ன.. தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சரக்கு + பஸ் = எங்கே போகிறோம் ?

பதிவர்கள்/ வாசர்கர்களே, கீழ்வரும் நான்கு சம்பவங்களை பாருங்கள். அது போல நீங்கள்/உங்களால் மற்றவர் செய்யாமல் இருக்க வேண்டுகிறேன்.

சம்பவம் 1 :

ஞாயிறுகிழமை, ஒரு ஸ்கூல் படிக்கும் பையன், காக்கி டவுசரும் வெளிர் மஞ்சள் டிசைன் ஷர்ட் என் பார்க்க நன்றாக இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் நைசாக அரசாங்க மதுபான கடைக்கு வந்து, எதோ ஒரு சரக்கு ( பிராண்ட் ) பெயரை சொல்லி வாங்கியவன் திடீரென தன் கால்சட்டையில் ... அட போங்க சொல்லவே வெட்கமா இருக்கு...!



ஏன்பா தம்பி சரக்கு வைக்கிற இடமா அது...? சரக்கு உனக்கா? இல்லை உன்னை அனுப்பிய ஐந்தறிவு ஜீவனுக்கா? இது தான் பிஞ்சிலேயே பழுத்ததுன்னு சொல்றதோ?



சம்பவம் 2

ஒரு உயிரை படைத்து கண்ணும் கருத்துமாய் வளர்த்து பெரிய ஆளாக்கி பார்க்க நினைத்துகொண்டிருக்கும் இதயங்கள் இந்த நாட்டில் எத்தனை எத்தனை...! அவர்களின் நினைவுகளை சில நொடிகளில் தவிடு பொடியாக்க நினைக்கும் பள்ளி மாணவர்களை என்ன சொல்லவது ? அவர்களுக்கு தெரிந்தே அந்த விபரீத முயற்சிகளில் இறங்குவது ஏனோ? ஒரு சிலர் புகழ்ந்து பேசுவார்கள் என்ற நினைப்பில் இப்படி பஸ்ஸில் பயணிப்பது ஏனோ? நீங்களே படத்தை பாருங்க....


உங்க கூட பிறந்தவர்கள் தெரிந்தவர்கள் எவரேனும் இப்படி பயணித்தால் கண்டுயுங்கள். மனித உயிர் விலை பதிக்க முடியாதவைகள். இங்கே பாருங்கள், ஒரு சிறுவன், நம்பர் பிளாட் இருக்கும் இடத்தில் காலைவைத்து பயணிக்கிறான். என்ன நேரத்திலும் அது கீழே விழலாம். அப்படி சென்று அவன் சாதிப்பது சாதித்தது தான் என்ன? இப்படி ஒரு பயணம் தேவைதானா? சிந்தியுங்கள்.



சம்பவம் 3

தெரிந்தே மரணத்தை நோக்கி ஒரு பயணம். சின்னவர்கள் தான் அப்படி என்றால் இங்கே ஒரு வளர்ந்த சிறுவனின் செயலை பாருங்கள்.



ரயில் ட்ராக்கில் சைக்கிள் தள்ளிக்கிட்டு போறதற்கு... நடந்தே போலாமே? திடீரெண்டு அந்த ட்ராக்கில் ரயில் வந்தால் என்னசெய்ய முடியும்? யோசிக்க மாட்டார்களா இவர்கள்?



சம்பவம் 4

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சுன்னு சொல்வார்கள். இங்கே ஒரு ஆட்டோகாரர் படும் பாட்டை பாருங்கள்.



உதவிக்கு ஆள் இருக்கவும் ஏதோ அந்த ஆடோக்கார் சமாளித்தார். இல்லை எனில் அவரது நிலைமை என்னவாகியிருக்கும் ?

ஏதோ என் மனசுக்கு பட்டதை எழுதிவிட்டேன். யார் மனதையும் புண்படுத்த அல்ல. அவரவர் திருந்தினால் தான் உண்டு. No Advice.

நம் பதிவர்களும் வாககர்களும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இது போல எந்த ஒரு தவறையும் செய்ய மாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் உங்களிடம் இருந்து விடைவெறுகிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

இந்த புகைப்படங்களை தந்த தினமலருக்கு நன்றி.



'திருச்சியின் அழகிய கிழவர்' + லிங்கன்

உழைக்கத் தயாராக இருப்பவரிடம் ஒருபோதும் தோல்வி கிட்டே நெருக்குவதில்லை. முதுமை அவர்கள் உடலில் இடம் கேட்பதில்லை. 'திருச்சியின் அழகிய கிழவர்' பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ?

அவர்தான் முத்தமிழ்க் காவலர் அமரர் கி.ஆ.பெ. விசுவநாதன். நெடிய உருவம். அழகிய உருவம். 80 வயதிலும் மிடுக்கான நடை. கம்பீரமான பிசிறில்லாத குரல். தடுமாற்றம் இல்லாத பேச்சு.

ஒரு விழாவுக்கு சென்னை வந்த அவரை, ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துபோக வந்திருந்தார் ஒரு நண்பர். பயணக்களைப்பே இல்லாமல் ரயிலில் இருந்து வந்து இறங்கினார். கையில் ஒரு சிறிய பெட்டி. மரியாதை நிமிர்த்தமாக அதனை வாங்க நண்பர் கை நீட்டிய போது, " விடு ...பெட்டியை பிறரிடம் கொடுத்துத் தூக்க சொல்லுமளவு எனக்கு வயதாகவில்லை." என்று கூறிவிட்டு விடுவிடுவென நடந்தார். அப்போது அவருக்கு வயது 80.

80 வயதிலும் பிறர் உழைப்பை, உதவியை எதிர்பாக்காத பெருட்செல்வம் அவர் மனதில் இருந்தது. அதனால் தான் அவர் 'திருச்சியின் அழகிய கிழவர்' எனப் பெயர்பெற்றார்.
"பிறர் உழைப்பை எதிர்பாக்காதே" இது அவரது இளமையின் ரகசியம்.

அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஒரு நாள் நிதானமாக தமது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அதன் அழகை ரசித்துகொண்டிருந்தார். அவர்தான் வெளியில் போக இருந்த புகழ் பெற்ற பதவியாளர் ஒருவர் அங்கு வந்தார்.

லிங்களின் செயலை கண்டவர் அதிர்ச்சியானார். "என்ன மிஸ்டர் லிங்கன்...உங்கள் ஷூவுக்கு நீங்களே பாலிஷ் போடுறீங்க..? " என்று கேட்டார்.

"ஏன்... நீங்கள் வேறு யார் ஷூவுகாவது பாலிஷ் போடுவீங்களா ?" என்று கேலியாகக் கேட்டார் லிங்கன். வந்தவர் ஒருநிமிஷம் ஆடிபோனார்.

அப்போ உங்க இளமையின் ரகசியம் என்ன? இவரை போலவா? இல்லை ...

உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள் சோம்பேறிகள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள் ஒருவகையில் பிட்சைகாரர்களே!

நன்றி : வெற்றி நிச்சயம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் என்றாலே நம் எல்றோரோட நினைவுக்கும் வருவது "பட்டு சேலை" தான்.

அதை தவிர, நிறைய புராதான கோவில்களும் நிறைந்த இடம். அந்த ஊரின் பெருமையை மேலும் பறைட்சாற்றும் வகையில் வெகு பிரிசித்தம் அந்த ஊரு இட்லி.

அதனை செய்யத்தான் கொஞ்சம் கை பக்குவமும் பொறுமையும் தேவை. இந்த இடுக்கையில், "காஞ்சிபுரம் இட்லி" செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை


தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
  1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசி + பருப்பு கலவையை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.

  3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.

  4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.

  5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.

  6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.

  7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.

  8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.

  9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



இலவச பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

உங்களுக்கு தெரிந்தவர்கள் பலருக்கும் பிறந்த போதே சில உடல் குறைபாடுகள் இருக்கலாம். அவர்களால் போதிய பண வசதியிமையால் மேல்கொண்டு சிகிச்சை செய்யமுடியாமல் இருக்கலாம்.

அதே போல 'தீ' விபத்தில் தங்கள் உடலில் ஏற்பட்ட காயங்களை குணபடுத்தவும் + 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொள்ள வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாத 4-ம் தேதி வரை அனைத்து வசதிகளும் கூடிய இலவச கிச்சை தர இருகிறார்கள். பயன்படித்தி கொள்ளுங்கள்.



இதற்காக நீங்கள் அணுகவேண்டிய முகவரி :
பாசம் ஹாஸ்பிடல்,
கொடைக்கானல்.
தொலைபேசி எண்கள்: 04542 – 240668, 245732
மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாத 4-ம் தேதி வரை

Pasam Hospital,
KODAIKANAL
Contact: 04542 – 240668, 245732

நீங்கள் மனது வைத்தால் இந்த தகவலை பலருக்கும் பயனுள்ளதாக தெரிவிக்க முடியும். நம்பால் பண வசதி செய்துகொடுக்க முடியவில்லை என்றாலும் இந்த தவகளை உங்களுக்கு தெரிந்த / நண்பர்களுடன் தெரிவிக்க இது பலருக்கும் பயன்படும்.

தொடர்க உங்கள் சேவை.

இந்த தகவலை என்னுடம் பகிர்ந்துகொண்ட கவிதா அவர்களுக்கு என் நன்றிகள்.



எங்கேடா அந்த 'துளசி'...?!

ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களுக்கு சென்றால் துளசித் தீர்த்தம் கொடுப்பார்கள். நம்பில் பலரும் அதனை ஏதோ ஒரு பக்தி பொருளாய் தான் பார்க்கிறோம். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்.



எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக.

1. துளசிச் செடியை ஆராக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

2. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

3. நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

4. துளசி இலையை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

5. கோடை காலம் வரப்போகிறது. வியரவை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா...? உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க.

6. தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரி இரண்டையும் துளசி இலையால் குணமைடயச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா ? துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

7. சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனால் சர்க்கரைஅளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாதை இந்த அருமருந்தான துளசி செய்து விடும்.

8. சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடேவ உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்னை சரியாகும்.


துளசியில் கிருஷ்ண துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, காட்டுத்துளசி, இராம துளசி எனப் பல வகைகள் இருக்கின்றன.

நம் நாட்டில் 22 வகை துளசி இருக்கிறது. துளசி 22 விதம் இருப்பினும் நாம் அதிகமாக பயன்படுத்துவது 'இராம துளசி என்ற வெண்துளசியும், 'கிருஷ்ணதுளசி' என்ற நீலத்துளசியுமாகும்.


நம்ப வேதிகாவும் கூட இந்த துளசியின் பயன் தெரிந்து என்னமா பூஜை பண்றங்கோ...

இனி துளசியை கண்டால், விடாதீங்க...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



யோகா - பத்மாசனம்

பெரும்பான்மையோருக்கு அலுவலகங்களில் நாற்காலி மேஜையில் அமர்ந்து செய்யும் வேலையின் காரணமாக கால் முட்டிகளை மடக்கி அமர வாய்ப்பே இல்லை. கால்களுக்கு வலிமை தர கூடிய ஒரு ஆசனம் நமக்கு தேவைபடுகிறது. அதற்காகவே இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது பத்மாசனம் பற்றி தான்.


2. பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை என்று பொருள். ஆசனம் என்றால் இருக்கை என்று அர்த்தம் அதாவது ஒருநிலையில் அசையாமல் இருப்பது. ஆசனத்தை சுகமான இருக்கை என்கிறார் பதஞ்சலி முனிவர்.

இந்த பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

செய்முறை விளக்கம் :-

தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும்.

வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து இடது காலின் தொடை மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு வைக்கவும்.

இதேபோல, இடது காலையும் மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து வலது காலின் தொடையின் மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.

இரண்டு முழங்கால்களும் தரையில் படுமாறும், கால் பாதங்கள் மேற்புறமாக இருக்கும் வண்ணம் அமர வேண்டும். அப்பொழுது முதுகுத் தண்டு நேராக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு அமர்வது சிரம்மாக இருந்தால், சிறிது நேரத்திற்குப் பின்பு, கால்களை மாற்றி மீண்டும் அதே நிலையில் அமரலாம்.

முதுகுத் தண்டு நேராகவும், கைகள் இரண்டும் வணங்கிடும் நிலையிலோ அல்லது முழங்கால்களின் மீது ஒன்றன் மீது ஒன்றாக - உள்ளங்கை மேற்புறமாக இருக்கும் வண்ணம், இரண்டு கைகளும் கால்களின் மீது அமையும் வண்ணமும், காலின் மீது கைகளை வைத்து கட்டை விரலோடு ஆட்காட்டி விரலை தொட்டுக் கொண்டும், மற்ற விரல்களை மேல் நோக்கிய வண்ணமுமாக அமரலாம்.

எச்சரிக்கை :-

சிலர் இந்த ஆசனத்தை செய்யும் போது குனிவார்கள். இது தவறு.

செயல்முறை கண்ணொளி இங்கே (Watch this video) :-



பயன்கள் :-
  • மூளையை அமைதிப்படுத்தும்

  • நன்றாக பசி எடுக்கும்.

  • உடல் முழுவதும் தளர்ந்த நிலைக்கு வரும்

  • முழங்கால்களையும், முட்டிகளையும் நன்கு விரிக்கும்

  • அடி வயிறு, முதுகுத் தண்டு, சிறுநீரகப் பை ஆகியவற்றிற்கு புத்துணர்வு கொடுக்கும்.

  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

கொசுறு செய்தி :-
நம்ப ஷிரேயா அக்கா கூட யோகா செய்யறாங்க. ஆனா சரியா செய்யறாங்களா இல்லையானு நீங்களே சொல்லுங்க. மற்றபடி இந்த படத்துக்கும் யோகாவுக்கும் இருக்கும் 'லிங்கை' நீங்களே பின்னூட்டத்தில் தெளிவா சொல்லுங்க.
இப்படியெல்லாம் யோகா செய்ய வந்தா ... யோகாவையா கத்துக்க முடியும் ...?! அதையும் மீறி அக்காவுக்கு பின்னாடி இருக்கும் அந்த அங்கிள் என்ன செய்யறாரு ?

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி : யோகாலயம்



பொங்கல் நன்னாளில் ...

நகரத்து இயந்திரங்களோடு ஒன்றிநாமும் இயந்திரமாகி விட்டாலும்
மஞ்சள் சரடு சுற்றிய மண்பாநையும்
சாணம் தெளித்து கோலமிட்ட
மண்தரையும் மங்கலம் நிறைந்த
மஞ்சள் குலையும் வீடும்
வீதியுமாய் அலங்கரித்த தோரணமும்
குமரிகளும் கிழவிகளும் போடும்
கும்மாளமும் வாசலில் வைத்த காய்
கனியும் "பொங்கலோ பொங்கல்"
என்ற மகிழ்ச்சிக்குரலும்
கேட்காமல் இருந்தாலும்
கேஸ் அடுப்பிலாவது
பொங்கல் வைத்து வாழும்
தமிழனாகி விட்டோம் என்றாலும்
இன்னும் கிராமங்களிலாவது பொங்கல்
பொங்கும் ஓசை கேட்கிறதே
அது வரையில் சந்தோஷம் தான்

நீ சூரியனுக்கு பொங்கல் வைத்தாய்
நிலவு ஏங்கிக் கொண்டிருக்கிறது!
கரும்பும்
சக்கரை பொங்கலும்
எதற்கு ?
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டு
போதும்!
உன் பார்வைகாகத்தான்
வழுக்கு மரத்தில் ஏறினேன்.
நீ பார்த்த பார்வையில்
வழுக்கி விழுந்தேன்!
கோல போட்டியில்
உனக்குத்தான் முதல் பரிசா?
உன்னை வரைத்த
உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்?

கோலங்கள் இல்லாத தமிழர் இல்லமா?. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளில் விதவிதமான கோலமிட்டு,அறுவடைத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.
உங்களுக்காக என் அலுவலகத்தில் வரையப்பட்ட கோலம் ....


என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

படம், கவிதை தேடி தந்த நண்பர்களுக்கு நன்றிகள் !!!



கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன்

செல் போன் புரட்சி செய்துகொண்டிருக்கும் இந்நாளில் தினமும் புதிய புதிய செல் போன் மடல்கள் + அதன் வசதிகள் என நாளொரு மடல் வெளிவந்துகொண்டிருகிறது. அந்த வகையில் இன்று கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன் பற்றி ஒரு அறிமுகம்.
ஏ தோழா
அடி கோக்க கோலா ....
இது விஜய் நடித்து வெளிவந்த கோக்க கோலா விளம்பரம்.

நம்ப ஊரு பயலுங்க ஸ்டைலா அத வங்கி குடித்துகொண்டிருகோம். ஆனா, சீனாவில் அதனை கொண்டு செல் போன் இயக்கம் வகையில் ஒரு செல் போன் கண்டுபிடுத்திருபது வியப்பான செய்தி தான்.

லித்தியம் பேட்டரிகள் மூலம் இயங்கும் செல் போன் னுக்கு பதிலாக இந்த கோக்க கோலாவை கொண்டு இயங்கும் படி வடிவமைத்தது இப்போதிய புதிய கண்டுபிடிப்பு. லித்தியம் பேட்டரிகள் அதிக விலை என்பதால் இந்த கோக் வகை மாடல் அதிக வரவேற்ப்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன் பற்றிய செய்திகளை அறிய இங்கே தொடுக்க.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



After enter the car ... - a shock report

Open the windows after you enter your car.


In brief, the above article says: According to research done by a U.C., the car dashboard, sofa, air freshener will emit Benzene, a cancer causing toxin (carcinogen). In addition to causing cancer, it poisons your bones, causes anemia, and reduces white blood cells. Prolonged exposure will cause Leukemia, increasing the risk of cancer. May also cause miscarriage.

Acceptable Benezene level indoors is 50 mg per sq. ft. A car parked indoors with the windows closed will contain 400-800 mg of Benezene. If parked outdoors under the sun at a temperature above 60 degrees F, the Benezene level goes up to 2000-4000 mg, 40 times the acceptable level. The people inside the car will inevitably inhale an excess amount of the toxin.


It is recommended that you open the windows and door to give time for the interior to air out before you enter. Benzene is a toxin that affects your kidney and liver, and is difficult for your body to expel.

No wonder more folks are dying from cancer than ever before. We wonder where this stuff comes from but here is an example that explains a lot of the cancer causing incidents. Hmmm. Many people are in their cars first thing in the morning and the last thing at night, 7 days a week. As I read this, it makes me feel guilty and ill.

Please pass this on to as many people as possible. Guess its not too late to make some changes

For more information, touch here."

Thought:
"When someone shares something of value with you and you benefit from it, you have a moral obligation to share it with others." - Chinese Proverb.

Note : No relaship between Nayarathara and this topic.

Special Thanks : Kavi, ML who shared this via mail.

If you like this post, 'A thanks' would be nice!



யோகா என்றால் என்ன?

இன்றைய நவீன கணினி (Computer) யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் 8-லிருந்து 10-மணி வரை ஆபீசில் பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக 10 - 14 மணிநேரம் செலவு செய்கிறோம். இந்த நேரத்தில் மூளைக்கு அதிக வேலை கொடுக்கவேண்டியுள்ளது.

ஒரு வழியாக ஆபீஸ் வேலைகளை முடித்து வீடு திருப்பும் போது வீட்டு பிரச்சனைகள் தொடர்கிறது. ஆபீஸ் + வீட்டு பிரச்சனைகள் எல்லாம் சேரும்போது மனது படும் பாடு இருக்கே அது சொல்லி தீராது.



இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு 10 - 15 நிமிடங்கள் ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது. எனக்கு அடிக்கடி முதுகு வலி வருவது உண்டு. மாத்திரை மருந்துகளுக்கு கட்டுபடாத இந்த வலி, சிறிய யோகா மூலம் நிவர்த்தியானது, உண்மை.

இதன் மீது ஈர்ப்பு வந்து தொடர்ந்து யோகா பற்றி - புத்தகம், செய்திதாள்களில் படித்தும், அறிந்து வருகிறேன். 'நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்ற கூற்றுப்படி யோகா பற்றி அதன் பயிற்சி பற்றி வார வாரம் இனி பார்ப்போம்.

யோகா எ‌ன்றா‌ல் ஏதோ நம‌க்கெ‌ல்லா‌ம் வராது, அத‌‌ற்கெ‌ல்லா‌ம் நேரம் என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும் தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் ஒரு செயல் அல்ல. நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.


யோகா என்றால் என்ன?

"யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது. யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள்.

யோகா (Yoga) என்பது உடலின் அனைத்து பாகங்களையும் ஓவர் ஆயிலிங் (over oil) செய்வதுதான். ஜீரணமண்டலம், ரத்த ஓட்ட மண்டலாம், சுவாச மண்டலம், தசை மண்டலம், கழிவு மண்டலம், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இன்னும் பல.., மண்டலங்களையும் + சுரப்பிகளையும் + 72000 நாடி நரம்புகளையும் உடலின் அனைத்து உறுப்புகளையும் இயங்க செய்வது தான் யோகா.

அழகான உடலும் அமைதியான உள்ளமும் அளித்திடும் யோகாசனம்

யோகாசனப் பயிற்சிகளும், 'மெடிட்டேஷன்' (Meditation) எனப்படும் ஆழ்நிலை தியானமும் மனத்தை மட்டும் அமைதிப்படுத்துவதோடல்லாமல் உடலழகையும் பாதுகாக்கின்றன. அவை உடலின் உள்ளுறுப்புகளையும் பலப்படுத்திச் சரிவர இயக்குகின்றன. உடலும் மனமும் என்றும் இளமையோடும் இருக்கவும் முடிகிறது.

கொசுறு செய்தி:
சில வருஷங்களுக்கு முன்னால், தெலுகு நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் வயதான, சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். அவரது அழகில் மயக்கிய நடிகர், அவர் நடித்த 'சூப்பர்'(Super) படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நம்ப அழகிய வேட்டைகாரி 'அனுஷ்கா'.


இனி அடுத்த வாரம்...

யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா ?

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top