Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

எதுவும் நடக்கும் - திரைபட விமர்சனம்

நண்பர் ஒருவர் ஒரு படத்தை எனக்கு தந்து அதை பார்த்துவிட்டு பதிவும் போடா சொன்னார் சில வாரங்களுக்கும் முன்னர். நேற்று இரவு வெகு நேரம் எனக்கு தூக்கம் வரவில்லை. சரி தூக்கம் வரும்வரை எதாவது படம் பார்க்கலாம் என்று நினைத்த போது நண்பர் தந்த எதுவும் நடக்கும் படம் நினைவுக்கு வந்தது. இந்த படம் எப்போ ரிலீஸ் ஆனதுனே தெரியல. அதை தான் இந்த பதிவில் எழுதுகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நிறைவேறாத கனவை கருவாக வைத்து, சமுதாயத்தில் நிராகரிக்கப்படும் ஒரு மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் போது என்ன நடக்கும் என்பதுதான் கதை.


படத்தோட கதை என்னனா ...

சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவு நம்ப ஹீரோ நாகாவுக்கு (கார்த்திக்குமாரு). ஆனால் நிஜத்தில் ஒரு பணக்காரரின் (ராமலிங்கம்) வீட்டு வேலையாள். அவருக்கு வாய்த்த சொர்ணா என்ற மனைவியோ அடிக்கடி சண்டைபோடும் ரகம். இதனால் அவரது கலையுலக கனவு கலைந்து போகிறது. அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் லோக்கல் டிராமா, கூத்து கச்சேரி தான்.

ஒவொரு பௌர்ணமி அன்றும் இவர் வேதகிரி மலையில் இருக்கும் கிருபாஜி சுவாமிகளை சந்தித்து அருள்பெருவது வழக்கம். அதன் போல அன்று வரும் வேளையில் சுவாமிஜிகள் உன்வீட்டில் மரணம் நிகழ இருக்கிறது. என் இங்கு வந்தாய் என்று கேட்கிறார். அங்கிருந்து காரில், தன வீட்டிற்கு விரைந்து வரும்போது ஒரு செல் போன் அழைப்பு...

அமெரிக்காவில் இருந்து நம்ப ஹீரோயினி பூஜா (அபர்ணா நாயர்) வருகிறார் தன் தாத்தா வீட்டிற்கு. வந்ததும் - தாத்தாவை அலைகிறார் - பிறகுதான் அவருக்கு புரிகிறது சுவாமிஜிகள் சொன்னது. ஒருவேளை தன் பேத்தியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் காரில் விரைந்து...

இந்நிலையில், நம்ப ஹீரோ நாகாவை சந்திக்கும் பூஜா அவனது நடிப்பு திறமையை கேலி செய்ய - பிறகு அவளது வருகை குறித்து நாகா கேட்ட - தன் காதலை தாத்தா மூலம் நிறைவேற்ற வேண்டியே இங்கு வந்ததாக சொல்கிறாள்.

அன்று இரவே, இவளுக்கு தனிமை வெறுக்க, நாகவிடம் ஏதேனும் நடிக்க சொல்லி கேட்க - அவனும் நாம் இருவரும் கணவன் - மனைவியாக நடித்து பார்க்கலாம் எனக் கூற, அப்படியே செய்யும் ஹீரோ, ஒரு கட்டத்ததில் பூஜாவை தன் நிஜ மனைவியாக கருதி, அடி - உதையில் இறங்கி, ஏளனம் செய்ததையெல்லாம் சுட்டிக் காட்டி போட்டுத் தள்ள பார்க்கிறார். அப்போது தான் பூஜாவுக்கு ஒரு உண்மை புரிகிறது... இந்த ஹீரோவிடம் மாட்டி ஏற்கெனவே அவன் உண்மையான மனைவி கொலையுண்டு இறந்து கிடக்கும் சமாச்சரம். இந்த ஆபத்தை உணரும் பூஜா, அதில் இருந்து தப்பித்தாரா, இல்லையா? என்பது தான் மீதி கதை.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

வித்தியாசமான கதை களத்தில் திகிலாக காட்சி + ஒரே ஒரு லொகேஷனில் பெரும்பாலான கதையையும், காட்சிகளையும் படம் பிடித்து பயமுறுத்தி இருக்கும் டைரக்டர்கள் கே.மகேஷ்வரன் + ரொஸாரியோ.

சில இடங்களில் டிவி சீரியல் மாதிரியான காட்சிகள். மொத்தமே 6 நபர்களே நடித்து இப்படியோரு படத்தை தருது மிக கடினமே. இருந்தாலும் டைரக்டர்கள் இருவரையும் பாராட்ட வேண்டும். கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும் திகில் படங்களில் இருக்கும் ஒரு வித திகில்தனம் இதில் மிஸ்ஸிங்.

பெர்னார்டு டேவிட்டின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலம்.

இசை சுமார் என்றாலும் அறிமுக படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றா பயன் படுத்திய ராஜ் -அய் பாராட்டலாம்.

யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும், வானம் வசப்படும், பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களில் நடித்த நம்ப ஹீரோ கார்த்திக்குமார் - அப்பாவியாக பழகி சைக்கோவாக மாறுவது எதிர்பாராத திடுக். நல்ல நடிப்பு. சில இடங்களில் நமக்கே சந்தேகம் வரவழைக்கும் நடிப்பு.

நம்ப ஹீரோயினி அபர்ணா, தனுசுடன் "புதுகோட்டையில் இருந்து சரவணன்" படத்தில் நடித்த அபர்ணாவை சில இடங்களில் - முகபாவனையில் நினைவு படுத்தினாலும் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அபர்ணாவின் இயலாமை, தவிப்பு, உயிருக்குப் போராடும் அவலம் எல்லாமே இயல்பாக, தத்ரூபமாக இருக்கு.


எதுவும் நடக்கும்- திகில் பட விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



குட்டி - திரைவிமர்சனம்

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் ஆரியா. அதன் தமிழாக்கம் தான் இந்த குட்டி. உண்மையான காதல் வெற்றிபெறும் என்ற ஒரு வரி கதை தான் படத்தின் கரு. அதன் திரைவிமர்சனம் பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருகிறோம்.



படத்தோட கதை என்னனா ...

ஸ்ரேயா ஒரு கல்லுரி மாணவி. அவளின் அழகில் மயங்கிய பலரும் காதலை சொல்லி தோற்றுவிட, அதே கல்லுரி மாணவன் சமீர். தான் காணும் அழகான பெண்களை விருப்பும் பணக்கார + அரசியல்வாதி ராதாரவியின் மகன். அவனும் அதே கல்லூரியில் படிக்கிறான். ஸ்ரேயாவை கண்டதும் பிடித்துவிடுகிறது. தன் காதலை சொல்ல - அவள் மறுக்க - கல்லுரிமீது ஏறி கீலேவிழுந்துவிடுவேன் என மிரட்டி ஒருவழியாக அவள் சம்மதம் சொல்லு நேரத்தில் -



நம்ப ஹீரோ தனுஷ் என்ட்ரி. தனுஷுக்கும் இவளை பார்த்ததும் பிடித்துவிடுகிறது. இவள் சமீர்-இன் காதலி என்று தெரிந்தும் விடாமல் அவளிடம் தன் காதலை வித்தியாசமான முறையில் தினமும் சொல்லிவர - ஒரு கட்டத்தில், இவனின் செயலை பார்த்து சமீர் கோபம் வந்து தன் தந்தையின் உதவியை நாட - வின்சென்ட் செல்வா மூலம் தனுசை அடித்து போட்டுவிட்டு செல்கிறான்.

பிழைத்து வந்து மீண்டும் தன் காதலை வெளிபடுத்த, சமீரிடம் "இருவரும் அவளை காதலிக்கிறோம். அவளுக்கு யார்மீதான காதல் உண்மையானதா இருக்கோ அவர்களுக்கு அவள் கிடைப்பாள்" என்று சொல்லிவிட்டு செல்கிறான். இருந்தும் பல நேரங்களின் சமீர் தோற்கிறான். அதனால் ஆவேசப்படும் அவன், ஒரு புகைபடம்மூலம் ஷிரேயா மனதில் தனுஷ் பற்றிய எண்ணம் மாறுகிறது.

ஒருநாள், அமீர் தன் தந்தையிடம் சிரேயாவை அறிமுகம் செய்துவைத்து தன் காதல் பற்றியும் அவரிடம் சொல்ல, அவர் மறுக்க - வீட்டு காவலில் சமீர். தனுஷ் சமீரை அங்கிருந்து வெளிக்கொண்டுவந்து - அவர்களை வின்சென்ட் ஆட்கள் தொரத்த - ஷிரேயாவுடன் மூவரும் ரயில் மூலம் தப்பித்து வந்து தனுஷின் சொந்த ஊருக்கு வர -

அடுத்தநாள், சமீர் இவளிடம் சொல்லாமல் சென்றுவிட - தனுஷின் நிலைமையை - அவனின் உதவியை - காதலை உணர ஆரம்பிக்கிறாள். அதனை சொல்லு நேரத்தில், சமீர் தன் தந்தை சம்மதத்துடன் அவளை திருமணம்செய்ய அழைக்க - குழம்பிய நிலையில் சிரேயா அவர்களுடன் செல்கிறாள். பிறகு ஷிரேயா சமீர் திருமணம் எப்படி நடக்குது ? தனுசின் நிலை என்ன ?மீதியை வெண்திரையில் காண்க.



படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

கேமெரா மிக அழகா படம் பிடித்திருக்கு. சபாஸ். பாலு சார்.

ஜவகர் - தன் முந்தைய 'யாரடி நீ மோகினி' படத்தில் வைத்த அதே போர்முலாவை தான் பயன்படுத்தி இயக்கிருக்கார். முதல் பாதி ஓகே ராகம் + டைமிங் காமெடி படத்துக்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதி இழுவை.

தனுசின் நடிப்பு அருமை. சில இடங்களின் தன்னையே தாழ்த்தி பேசி நடித்திருக்கிறார். வழக்கமான அறிமுக பாடலை தவிர்த்திருக்கலாம். படத்தில் ஒட்டவில்லை. இறுதி காட்சிகளால் இவரின் நடிப்பு அருமை.

சிரேயாவின் தோழியாக வரும் மேக்னா நாயுடு சும்மா கும்முன்னு இருங்காங்க. பேசாமல் இவளை ஹீரோயினா போட்டிருக்கலாம்.

இசை : தேவி ஸ்ரீ பிரசாத் - சச்சின் படத்தில் இடம்பெற்ற அதே பின்னணி இசை பட இடங்களில் ...+ ஏற்கனவே கேட்ட மேட்டில் பாடல் என்பதால் அவை சுமார் ராகம். "கண்ணு ரெண்டும் ரங்கா... " & "யாரோ என நெஞ்சை ..." என்ற இரு பாடல் முனுமுனுக்கும் ரகம்.



சிரேயா - டயலாக் கொஞ்சம் கம்மி தான். அவளின் முகபாவனை அருமை. கொஞ்சம் அழகாக தன் தெரியறாங்க. இவளின் டிரஸ் + மேகப் ஒரு பிளஸ் பாயிண்ட்.

மயில்சாமி + ஆர்த்தி பங்கு அருமை.

குட்டி - கல்லூரி காதல். ஒருமுறை பார்க்கலாம் முடிந்தால்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



பொங்கல் நன்னாளில் ...

நகரத்து இயந்திரங்களோடு ஒன்றிநாமும் இயந்திரமாகி விட்டாலும்
மஞ்சள் சரடு சுற்றிய மண்பாநையும்
சாணம் தெளித்து கோலமிட்ட
மண்தரையும் மங்கலம் நிறைந்த
மஞ்சள் குலையும் வீடும்
வீதியுமாய் அலங்கரித்த தோரணமும்
குமரிகளும் கிழவிகளும் போடும்
கும்மாளமும் வாசலில் வைத்த காய்
கனியும் "பொங்கலோ பொங்கல்"
என்ற மகிழ்ச்சிக்குரலும்
கேட்காமல் இருந்தாலும்
கேஸ் அடுப்பிலாவது
பொங்கல் வைத்து வாழும்
தமிழனாகி விட்டோம் என்றாலும்
இன்னும் கிராமங்களிலாவது பொங்கல்
பொங்கும் ஓசை கேட்கிறதே
அது வரையில் சந்தோஷம் தான்

நீ சூரியனுக்கு பொங்கல் வைத்தாய்
நிலவு ஏங்கிக் கொண்டிருக்கிறது!
கரும்பும்
சக்கரை பொங்கலும்
எதற்கு ?
கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டு
போதும்!
உன் பார்வைகாகத்தான்
வழுக்கு மரத்தில் ஏறினேன்.
நீ பார்த்த பார்வையில்
வழுக்கி விழுந்தேன்!
கோல போட்டியில்
உனக்குத்தான் முதல் பரிசா?
உன்னை வரைத்த
உன் அம்மாவுக்கே கொடுத்திருக்கலாம்?

கோலங்கள் இல்லாத தமிழர் இல்லமா?. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளில் விதவிதமான கோலமிட்டு,அறுவடைத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.
உங்களுக்காக என் அலுவலகத்தில் வரையப்பட்ட கோலம் ....


என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

படம், கவிதை தேடி தந்த நண்பர்களுக்கு நன்றிகள் !!!



நான் அவன் இல்லை 2 - திரை விமர்சனம்

நேற்று பார்க்க இருந்த 'நான் அவன் இல்லை 2' படத்த இன்னைக்கு தான் பார்த்தேன். இந்த படத்தையும் விட்டு வைக்க மாட்டியாடானு நீங்க கேக்கிறது புரியுது. என்ன செய்யா....? ஒரு டைம் பாஸ்சு தான் ஹி..ஹி...ஹீ.

படத்தோட கதை என்னனா ...

நான் அவன் இல்லை முதல் பாகத்தின் சில காட்சிகளோடு தொடங்குது படம். இரண்டாம் பாகம் படம் ஆரம்பிக்கும் போதே ஒரு பெண் சாமியார் (ரக்ஷனா) பேட்டி கொடுக்கிறாள். அவள் கையில் நம்ப ஹீரோ(ஜீவன்) படம்.

பத்திரிக்கையில் வெளியான பெண்சாமியாரின் பேட்டி + ஹீரோ போட்டோவை பார்த்த மூன்று பெண்கள் அவளை தேடிவரும் போது அவர்கள் வாழ்வில் நடந்தவைகளை பிளாஷ்பேக்கு கொண்டு விளக்குகிறார் டைரக்டர் செல்வா.

* ஹேமமாலினி - தனக்கு வரப்போகும் கணவன் நாய்க்குட்டி மாதிரி தன் காலைச் சுற்றிக் கிடக்க வேண்டும் என விரும்பும் பெண். அவளை ஈசியாக ஏமாற்றுகிறார் நம்ப ஹீரோ.

* ஸ்வேதா மேனன் - கல்யாணம் ஆன ஆண்களை மயக்கி கட்டிலுக்கு வரவழைத்து, அவனிடம் இருக்கும் பணம் மற்றும் வைரங்களை அபகரிக்கும் பெண். இவளையும் நம்ப ஹீரோ...அதே தான்.

* லட்சுமி ராய் - சினிமா நடிகை. இவளுக்கு உலகத்தின் அத்தனை நாடுகளிலும் தனக்கு சொத்து இருக்க வேண்டும் என்ற ஆசை. இவளை நம்ப ஹீரோ பெரிய பணக்கார் போன்று நடித்து ....

இவர்களது கதையை கேட்ட பெண் சாமியாரும் தன் பங்குக்கு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறாள்.

* ரக்ஷனா - திருட்டு கேஸ், வழிப்பறி, வைரங்களைக் கொள்ளையடிக்கும் பெண். இவளிடம் நம்ப ஹீரோ, பாடலாசிரியர் வாலி வேஷம் + 'மார்பாலஜி' செய்து .... (நம்ப ஹீரோவுக்கு மச்சம் தான்) அதே தான்.

இவர்களை ஏமாற்றும் ஹீரோ என்ன செய்கிறார் ? அதுக்குனே ஐந்தாவதாக ஒரு பெண் இருகாங்க. அவங்க தான் நம்ப சங்கீதா.

* சங்கீதா - கணவனை இழந்த இலங்கை வாழ் தமிழர். இவளுக்கு நம்ப ஹீரோவுக்கும் இடையில் நடப்பது தான் கதையின் உயிர் நாடி. அதனை படத்த பார்த்து தெரிஞ்சுக்குங்க.

படத்துல எனக்கு பிடித்த சில ..
  • நான்கு நாயகிகளும் குறைவில்லாமல் கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள். ஐந்தாவது நாயகியாக வரும் சங்கீதாவுக்கு பெரிதாக வேலையில்லை. சென்சார் பல இடங்களில் தூங்கி விட்டார்கள் போல தெரிகிறது. செம கவர்ச்சிடா சாமி.
  • மயில்சாமி - கிடைக்கிற 'கேப்'பிலெல்லாம் புகுந்து விளையாடுகிறார் மனிதர். குறிப்பாக ரக்ஷனாவை ஏமாற்ற ஜீவன் வாலியாகவும், மயில் அவருக்கு சிஷ்யராகவும் வரும் காட்சிகளில் தேயேடரே அதிர்கிறது. சபாஸ் மயில்!
  • படம் முழுவது ஜீவன் வந்தாலும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை. இவரின் கிளைமாக்ஸ் காட்சிகளில் பேராயர் உடையில் நம்மை பதம் பார்க்கிறார்.
  • செல்வாவின் திரைக்கதை சொதப்பல். இதில் பாடல் காட்சிள் + இயற்கை வெகு அருமை.
  • வெளிநாடுகளில் போலீஸ் + சட்டம் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதற்கான அறிகுறியே இந்தப் படத்தில் இல்லை.
  • இமானின் பின்னணி இசை பற்றி நான் என்ன சொல்ல? அட போங்கப்பா. மனுஷன் கையில கிடச்ச வாத்தியத்தை எல்லாம் வாசித்திருக்கார். ஒரே இரைசல்.
குறிப்பு: இந்த பாகமே கதை இல்லாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி எடுத்த இந்த டீம் அடுத்த பாகம் பற்றி ஒரு குறிப்பும் இந்த படத்துல காட்டுறாங்க. ஜாக்கிரதை!

நான் அவனில்லை 2 - 'கவர்ச்சி' டைம் பா(ம்)ஸ்.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



மாப்பு... மாப்பு... 5 ரூபாயில வட்சுடாண்டா... பெரிய ஆப்பு!!!

....வரும் செல்லும் அடுத்த மின்சார தொடர் வண்டி இன்னும் சில நிமிடங்களில் ஒன்னாவது நடைமேடையில் இருந்து புறப்படும்.
...
...
கொஞ்ச நேரத்தில்....
...
...
...
சார்... டீ... காபீ... காபீ... சாயி.... இந்த சத்தத்தை கேட்டாமல் ரயில் பயணம் இல்லை.
...
...

நீங்கள் இந்தியன் ரயில்வேயில் பயணம் செய்ய ரொம்ப விருபுவரா ? அப்படியானால் உங்ககிட்டே ஒரு கேள்வி. நீங்கள் பயணத்தின் போது வழியில் டீ, காபீ போன்றவற்றை வாங்கி குடிபவரானால், ஒரு நிமிஷம் கீழே வரும் தகவலை படிச்சுட்டு போங்க.

சுத்தம் சுகாதாரம் பத்தி நாம ரொம்ப வாதாடுவோம் நாம் சொன்றுள் சாப்பிடும் ஹோட்டல், விடுதி போன்ற இடங்களில். அதுவும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி சற்றே அதிக கவனம் செலுத்தி, நாம் உபயோக படுத்தும் பொருள்களின் சுத்தத்தை பாராமரிப்பார்கள். அங்கேயே, நாம டிஸ்ஸு பேப்பர் கொண்டு இன்னும் கொஞ்சம் சுத்தம் செய்வோம். கேட்டால் எனக்கு அப்பாவும் சுத்தமா இருந்தா தான் பிடிக்குனும் ஒரு பக்க வசனம் பேசுவோம்.

ஆனால், வெளியிடங்களுக்கு செல்லும் நேரத்தில் இத்தனை மூட்டைகட்டி பரணில் போட்டுவிடுவதும் உண்டு.
......
ரயில் பயணம் செய்யும் போது இந்த சத்தத்தை நாம் கேட்க முடியும். உடனே, எனக்கும் ஒரு டீ கொடுப்பா. இந்த ரூபாய்னு கொடுத்த நாட்கள் நாபகம் இருக்கு உங்களுக்கு?

பாத்ரூம் போற வரவங்களுக்குனு ஒரு தண்ணீர் குழாய் இருக்கு பார்த்து உண்டா? அந்த தண்ணியை கொஞ்சம் கையில் பிடித்து பாருங்க. அவளவு அசுத்தமா இருக்கும். நாம் பாத்ரூம் சென்றுவிட்டு வரும்போது பயன்படுத்து தண்ணீரும், ரயில்களில் தாயாரிக்க படும்
டீ, காப்பீ போன்ற உணவு பொருள்களுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் ஒன்றே.

டீ, காப்பீ போன்ற பொருள்கள் தயாரிக்க ரயிலில் இவர்களுக்கு என்று ஒதுக்க பட்ட இடம் பாத்ரூம்க்கு அருகில் இருக்கும் அறை. அதன் சுத்தம் சுதாதாரத்தை பத்தி சொல்லவே வேண்டாம்.

இதைவிட கொஞ்சம் ஓவரு... அடுத்த மேட்டர். நாம வீட்டில் தண்ணீர் காயவைக்க உபயோகபடுத்துவமே மின்சார ஹீட்டர், அதைக்கொண்டு தான் இவர்கள், டீ, காப்பி போன்றவைகளை தாயாரிக்க / சூடுசெய்ய செய்ய இவர்கள் உபயோக படுத்துகிறார்கள்.

இப்படி தரமில்லாத உங்களை சாபிடாமல் தவிப்பது நமக்கு நாமே நன்மை செய்ததுபோலகும்.

இதயெல்லாம் பார்க்கும்போது எனக்கு வடிவேலு சந்திரமுகியில் சொல்லும் ஒரு வசனம் நாபகம் வருது.
"மாப்பு... மாப்பு... 5 ரூபாயில வட்சுடாண்டா... பெரிய ஆப்பு....!!!"

நான் இங்கே குறிபிடுவது தரமாக தயாரிக்கப்படும் உணவு பொருகளை பற்றி அல்ல. புகார் பெட்டியில் வந்த தகவல் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.
நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



Related Posts with Thumbnails
 
back to top