Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

உன் சமையல் அறையில் (2014) - விமர்சனம்

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்ற பொதுக்கருத்துக்கு மீண்டும் வலு சேர்த்திருக்கிறது "உன் சமையல் அறையில்'.

லால், ஸ்வேதா மேனன் நடிப்பில் மலையாளத்தில் மெஹா ஹிட்டான "சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். தமிழுக்கு ஏற்ப மசாலா சேர்த்துள்ளதால் "தலப்பாகட்டு பிரியாணி' போல வாசம் கமகமக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வாழ்க்கை என்பதே சாப்பிடுவதற்காகத்தான் என நம்பும் பிரகாஷ் ராஜ். 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காமல், பிரம்மச்சாரியாக நண்பர் குமாரவேலுவைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாழ்கிறார்.

நண்பரின் பலவித வற்புறுத்தலுக்குப் பின்பு, பெண் பார்க்கப்போகும் இடத்தில் சாப்பிட்ட வடையில் மனதைப் பறிகொடுத்து, பெண்ணுக்குப் பதிலாக சமையல்காரரை (தம்பி ராமையா) கையோடு வீட்டுக்கு அழைத்து வருமளவுக்கு, சாப்பாடுதான் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பிரகாஷ் ராஜுக்கு.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகா, தகுந்த வரன் கிடைக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாக இருக்கிறார். பிரகாஷ் ராஜ், சிநேகாவுக்கு இடையே, ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல் நட்பாகி, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகிறது. இருவரும் சந்தித்துப் பேச நினைக்கும்போது, வயதானவன் என சிநேகா நினைத்து விடுவாரோ எனத் தயங்கி, தனக்குப் பதிலாக தனது மருமகனை (நவீன்) அனுப்புகிறார் பிரகாஷ் ராஜ்.

அதே போல சிநேகாவும் தனக்குப் பதிலாக தனது அறை நண்பியை (மேக்னா) அனுப்புகிறார். இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொள்ள, பிரகாஷ் ராஜ் - சிநேகா காதல் என்னவானது என்பதை காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து தாளித்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரகாஷ் ராஜ்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரகாஷ் ராஜ்
வடையை ரசித்து ஆழமாக ருசிக்கும் ஒரு காட்சிபோதும் பிரகாஷ் ராஜின் அபரிமிதமான நடிப்பை விவரிக்க. 45 வயதான ஒருவரின் உளவியலை அப்படியே மனக்கண் முன்பாக நிறுத்துகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் - சிநேகா இடையேயான காதல் காட்சிகளில் இருக்கும் உயிர்ப்பு, நவீன் - மேக்னா காதல் காட்சிகளில் இல்லை.

சிநேகா
படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைவது இவர்களின் காதல் காட்சிகளால்தான். பெண்களுக்குத் திருமணம் தாமதமானாலோ, தடைபட்டாலோ சமூகம் என்ன சொல்லும் என்பதை சிநேகாவின் விம்மி வெடிக்கும் அழுகை உணர்த்துகிறது. வெல்டன் சிநேகா!


இசை இளையராஜா
படத்தில் இன்னொரு ஹீரோ இளையராஜாவின் இசை. இசையில் ராஜாங்கமே நடத்தி இருக்கிறார். நான்கு பாடல்களும் காதுக்கு இனிமையாக அமைந்து "ராஜா ஆல்வேஸ் ராஜா' என்று நிரூபிக்கின்றன. "இந்தப் பொறப்பு தான்' பாடல், உணவு வகைகளின் ருசிகளைச் சொல்லி ரசிக்க வைக்கிறது. "ஈரமாய்' பாடலில் காதல் வழிந்தோடி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. "காற்று வெளியில்' பாடலில் இளையராஜாவின் குரல், கேட்பவர்களை உருக வைக்கிறது.

படத்திற்குப் பெரிய பலம் ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. நம் வீட்டு சமையல் அறைக்குள் வழிமாறி நுழைந்து விட்டோமோ என தடுமாற வைக்கிறது இவரது ஒளிப்பதிவு.

படத்தில் வரும் காட்டுவாசி பாத்திரம்தான் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் அழகாக இருந்து இருக்குமே...

எப்போதாவது ஒரு தடவைதான் இதுபோன்ற "ஃபீல் குட்' படங்கள் தமிழில் வரும். அந்த வகையில் ஆபாசம், வன்முறை இல்லாமல் வெளிவந்துள்ள "உன் சமையல் அறையில்' நாம் அனைவருமே ஒருமுறை வலம் வரலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'உன் சமையல் அறையில்' - ஃபீல் குட் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



நண்டு (1981) விமர்சனம்

'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது...!

சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொன்ன படம். எழுத்தாளர் சிவசங்கரியில் நாவலை படமாக எடுத்திருக்கிறார் நம் இயக்குனர் மகேந்திரன்.

வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று!

இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படத்தோட கதை என்னனா ...

கதை லக்னோவில் தொடங்குகிறது. பெரிய இடத்து பையன் ராம். பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல், அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்.

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரிமுத்து சேர்த்து விடுகிறார். சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம்.

ராமை விரும்பும் வீட்டு ஓனர் மகள் மற்றும் சீதா இடையே சீதா ஜெயிகிறாள். கல்யாணம் செய்யபோகும் போது... சீதாவின் அக்கா வீட்டுகாரர் வில்லனாக வர, அதையும் மீறி திருமணம் நடந்து, குழந்தை பிறந்து, மாமனார்-மாமியாரை காணும் கனவுடன் ராமுடன் லக்னோ வருகிறாள் சீதா. வந்த இடத்தில் மாமனாரை தவிர மற்றவர் அன்பாக பழக... அங்கிருந்து புறப்பட்டு சென்னை வரும் வழியில் ஆஸ்துமா தொல்லையால் மிகவும் அவதிபடுகிறான் ராம்.

அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன..? சீதா தனது கணவர் குடுப்பத்தோடு இணைந்தாளா என்பது தான் மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இயக்குனர் மகேந்திரன்

சிதாவின் அம்மா, சீதா அக்கா, அவள் கணவன், வீட்டு ஓனர், LIC ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி, வீட்டு ஓனர் மகள், அங்கு இருக்கும் மற்ற பெண்கள், சீதாவின் தோழி, அவள் தகப்பன், என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ), வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்... ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்... அந்த நேரத்தில் அது பேருதவி...

ஓர் ஆணுடன் பேசினால், புரணி பேசுபவர்கள் இருந்தால், ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்... திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்... அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்...

வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும், துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்... இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..


கதைக்கு உயிர்கொடுத்தவர்கள்

செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர், ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது... தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை

கதானாயகன் சுரேஷ்.... நாயகி அஸ்வினி... இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்.

இளையராஜா

ராஜா சார் சும்மா இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் இந்த படத்தில். பின்னணி இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். இளையராஜாவின் இசை பல இடங்களில் மனதை வருடுகிறது. எனக்கு பிடித்த பாடல்கள் இதோ ....

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா....

பிறகு,

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள். ஒரு புதிய முயற்சியை அப்போதே செய்து அசத்தியிருக்கார் இயக்குனர்.


பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை... ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்!

கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மொத்தத்தில் 'நண்டு' - இனிய பாடல்கள் + நகைச்சுவை என அருமையான பொழுதுபோக்கு படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Pichaikaaran.



மாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி?-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா! 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' என்னும் மனம் மயக்கும் பாட்டில்!

ரொம்ப ரொமான்டிக் ராகம்! ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது! ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது!


'கண்ணன் - ராதை’ பாடல் என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் மயக்கும் பிரவாகம்!! இசை மேதைகள், அறிஞர்கள், கர்னாடக இசை ஜாம்பவான்கள், விமர்சகர்கள் அனைவரும் வியந்து கொண்டாடும் பாடல் இது என்பதாலும், இந்தப் பாடலில் உள்ள நுணுக்கங்களை அலசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், விளங்கிக் கொள்வது என்பது கூட என் புத்திக்கு எட்டாத விஷயம் என்பதாலும், ஒரு மேதை Compose செய்த பாடலைப் பாடியிருப்பது இன்னொரு மாமேதை என்பதாலும், பாடலைப் பற்றிய செய்திகளை மட்டும் கீழே காண்க!!

இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-

“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார். நாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே?"

ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

‘என்ன டியூன்’? என்றார். பாடிக் காட்டினேன்.

ஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.


பாடலைப் பாடியவர், 'இதுதான் புதிது! சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே? அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே!’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது!’ என்கிறார்.
ஜெயா டி.வியின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைஞானியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எந்நூற்று சொச்சம் படங்கள்.. இனி மனித வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை!

என்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட்டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே?’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம்.

அவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான்! அவர் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
‘Cheeni Kum’ ஹிந்தி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னர், ‘Headlines Today’ தொலைக்காட்சியில் இசைஞானியைக் குறித்தும், அவர் அந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது பற்றியும் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதில் ஒரு இசை விமர்சகர் (பெயர் மறந்து விட்டது) இவ்வாறு கூறியது நினைவில் உள்ளது.

“உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத ஒரு பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. 1980-களில் இசைஞானி இசையமைத்த படத்தை விளம்பரப்படுத்தும் பொழுது ‘ராகதேவன் இளையராஜா இன்னிசையில் ________ (படத்தின் பெயர்)’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.

ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் படத்தின் பெயரின் முன்னால், ஒரு இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தப்பட்ட பெருமை உலகிலேயே இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “Only a Maestro like Ilayaraja can compose a master piece like “சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்றார்.


கண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும். இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி கிருஷ்ணா பாடியது தான் ஹிட்டோ ஹிட்!

இந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்; ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது! பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா?

எல்லாம் சரி! பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்! வாங்க!


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!

கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை

கண்ணதாசனின் காதல் பாடல் வரிகள் ....
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

சின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:



Thanks : தினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்'
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



திரும்பிபார்கிறேன் : நான் பாடும் பாடல் - விமர்சனம்

விடியற்காலை, திடீரெண்டு முழிப்பு வர, மேற்கொண்டு என்னால் படுக்க தூங்கமுடியவில்லை. அப்போது தான் நாபகம் வந்தது கடந்த சனி அன்று வாங்கி வந்த DVD. அது, ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் பாடும் பாடல். தூக்கம் வரும்வரை இந்த படத்தை பார்கலாமுனு பார்க்க ஆரமிச்சேன். படம் முடியும் வரை அதனை நிறுத்த மனம் வரவில்லை.

விதவைத் திருமணத்துக்கு ஆதரவான கருத்து வேகமாகப் பரவத் தொடங்கிய காலத்தில், அதற்கு எதிராக இப்படி ஒரு படமா என விமர்சனம் கிளம்பினாலும், படம் பெரிய வெற்றியைப் பெற்றது. காரணம், இளையராஜாவின் அற்புதமான இசை மற்றும் கவுண்டரின் அதிர்வேட்டு நகைச்சுவை.

படத்தோட கதை என்னனா ...
கன்னியாகுமாரி. பத்து குடித்தனம் இருக்கும் ஒரு காம்பவுண்டு. அங்கே நடக்கும் ஒரு கதை தான் இந்த படம். அம்பிகா, பாண்டியன், கவுண்டமணி இன்னும் சிலர் அந்த பத்து குடும்பத்தில் அடங்குவர்.

மூன்று நாளில் கணவனை இழந்த பெண் அம்பிகா. இவள் அவளது கணவர் குடுபத்துடன் வசிப்பவர், ஆசிரியர் பணியில் இருந்தவாறு. புத்தகம் இவளது நண்பர். அதுவும் அழுத்திய புக் என்றால் 'சால இஸ்டம்' படிப்பதற்கு. இவளது கணவர் தங்கையை காதலிப்பவர் பாண்டியன். இவனது உறவுகார மாமா சிவக்குமார், ஒரு கதை ஆசிரியர். தனது அடுத்த கதையை எழுத தன்னை தாயார் செய்துகொள்ள அங்கே வருகிறார். வரும்போதே அம்பிகாவால் அடி உதை வாங்கி - இவர் மீது அனுதாபம் வருகிறது அம்பிகாவுக்கு.

இந்நிலையில், இவளை காதலிக்கும் இரண்டு ஜீவன்கள்: ஒருவர் பணக்காரர், சரத்பாபு. மற்றொருவர் பஸ் கண்டக்டர் சுரேஷ். இருவரும் மாறி மாறி அன்பை வெளிபடுத்த இவள் அவர்களை ஒதுக்க - ஒரு நாள் பஸ்சில் "பாடவா உன் பாடலை என் வாழ்விலோ ஓர் பொன்வீணை ..." ஒலிக்க இவளது முகம் வியத்து பஸ்ஸை விட்டு இரங்கி நடந்து வருகிறாள் வீட்டிருக்கு.
வை கறையில் வைகை கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்....
காய்சல். படுக்கையில் அம்பிகா. வெளியே, எழுத்தாளர் சிவக்குமார் வானொலில் நேயர் பாடலை கேட்டுகொண்டிருக்கும் போது, மீண்டும் ஒலிக்கிறது அதே பாடல்."பாடவா உன் பாடலை என் வாழ்விலோ ஓர் பொன்வீணை ...". மெல்ல வெளியே வந்து முடியாமல் பாடலை நிறுத்துகிறாள். புரியாமல் நிற்கிறார் சிவகுமார்.
மறுநாள், மாலை நேரம்,
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என் வாழ்விலோ ஓர் பொன்வீணை....
அதே பாடலை அம்பிகா - தனிமையான இடத்தில் பாடிகொண்டிருபதை சிவகுமார் பார்த்துவிட - கவுண்டமானியின் மனைவியிடம் விசாரிக்கையில்.... ஒரு பிளாஷ்பேக்.
*****
சென்னை. டாக்டர் மோகனை ஒரு கல்யாண நிகழ்ச்சியில் சந்திக்கிறார், அம்பிகா. கண்டதும் காதல் மோகனுக்கு. ஒரு பாடல் வேற பாடிவிடுகிறார் அந்த கல்யாண மேடையில்...
தேவன் கோவில் தீபம் ஓன்று
ராகம் பாடும் நேரம் இன்று.......
பிறகு இருவரும் சில இடங்களில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, மனம் இடம் மாற - பெரியவர்கள் முநிலையில் - திருமணம் நடக்கிறது.
மூன்றாவது நாள், இவளுக்கு ஒரு படத்தில் பாட வாய்ப்பு கிடைக்க, அம்பிகாவும் மோகனும் ரெகார்டிங் தியேடர் செல்லும் முன்பு ஒரு அழைப்பு மணி(போன்). நளினி தனது கணவருக்கு ஆபரேஷன் செய்ய வருமாறு மோகனை அழைக்க, ஒருவழியாக மருத்துவமனை வருகிறார். ஆபரேஷன் முடித்து காரில் கிளம்பி வரும்போது, அங்கே...ரெகார்டிங் தியேடர் -ல்...
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என் வாழ்விலோ ஓர் பொன்வீணை....
பாடல் முடிவில்... விபத்து.
******
அம்பிகாவுக்கு, தன் கைப்பட ஒரு கடிதம் எழுதுகிறார் கதை ஆசிரியர் சிவக்குமார். அவளை ஒரு கோவிலில் சந்திப்பதாக சொல்லி. இவளும் செல்கிறாள்..
"பாடும் வானம்பாடி ஹா... பாடும் வானம்பாடி
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ..."
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, சிவகுமார் தான் இவள் நேசிக்கும் எழுத்தாளர் என்று. இவள் எழுதிய கடிதம் ஓன்று அம்பிகா குடும்பத்தில் கிடைக்க பெற, இவள் மீது சந்தேகம் வர - ஒரு கட்டத்தில் சிவகுமார் தான் CRS என தெரிந்ததும் - சிவகுமாருக்கு அம்பிகாவை மறுமணம் தயாராகிறார். இந்நிலையில், பாண்டியனின் காதலும் வளர்கிறது...
"மட்சானே வட்சுகடி முந்தானை முடிசுலதான்
உன்மேலே ஆசைவட்சேன் ....."
அம்பிகாவின் மாற்றத்தை உணர்ந்த மாமனார் - மாமியாரும் சேர்ந்து சிவகுமாருக்கு அம்பிகாவை திருமணம் முடிவெடுக்கிறார்கள்.
"சீர் கொண்டு வா வெண்மேகமே
இது இனிய வசந்த காலம் ...."

பிறகு என்ன நடந்தது...?
அம்பிகா - சிவகுமார் திருமணம் நடந்ததா ?
சுரேஷ், சரத்து பாபுவின் நிலை என்ன?
பாண்டியன் காதல் என்ன ஆச்சு?
... மீதியை வெள்ளித்திரையில் காண்க அல்லது நாலா DVD வாங்கி பாருங்க.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...
  • விதவை திருமணம் பற்றி மிக அழகாக பதிவு செய்த டைரக்டர் சுந்தரராஜனை மனதார பாராட்டலாம்.
  • தெளிவான திரைக்கதையும் கதாபாத்திர படைப்புகளும்.
  • அருமையான எழு பாடல்கள் + மிரட்டும் பின்னணி இசை சேர்ப்பும். இளைய ராஜா... ராஜா தான் பின்னணியில். அதுவும் கடைசி அந்து நிமிஷம் ... இசையால் பல உணர்வுகளை வெளிகொனர்வார் பாருங்க... அட அட... சபாஸ் சார்.
  • நட்சத்திர பட்டாளமே இதன் ஒரு பெரிய + பாயிண்ட். ஒவொருவரும் சிறப்பாக தங்கள் கடிப்பை காட்டியிருபத் கூடுதல் சிறப்பு.
  • கவுண்டமையின் டைமிங் காமெடி. ஆஹா.
பாடும் வானம் பாடி - இன்னும் ஒலித்துகொண்டே இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



கோபுரங்கள் சாய்வதில்லை - விமர்சனம்

மணிவன்னனில் முதல் படம். கோபுரங்கள் சாய்வதில்லை. பெண்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து படம் எடுத்ததற்காகவே அவரை பாராட்டலாம்.

படத்தோட கதை என்னனா ...

வெற்றியம்பதி கிராமம். வெள்ளந்தி மனிதர்களும் வெகுளிபெண்னும் நிரந்த கிராமம். அங்கே...
"புவனேஷ்வரியக்கா எதுக்கு போடலகாய்க்கு கல் கட்டிவிடறாங்க..?"
"வளையாம நெளியாம நீட்டமா வளரதாண்டி"
"அப்ப நானும் என் சடைக்கு கல் கட்டிவிட்ட அது வளையமா இருக்கும் தானே ..?".

கதாநாயகி அருக்காணி அறிமுகம்.
மஞ்சக்குளி மஞ்சக்குளி மாரியம்மா - அட
பொங்கவெக்க கோவிலுக்கு வாடியம்மா...
அருக்காணி. அந்த கிராமத்தில் உள்ள பொண்டுகளுக்கு ஒரு எடுபிடி. வெகுளி பெண். நிறமோ கருப்பு. வானத்தை பார்க்கும் அவளது சடை. அதில் கலர் கலராய் ரிப்பன். ஊரில் உள்ள சில பெண்கள் இவளுக்கு அமையும் கணவன் அழகாக சும்மா ராஜா போல இருப்பான்னு சொல்ல சொல்ல மனதில் ஒரு வித கற்பனை.

நாயகியின் சடையை, நிலையை பார்த்து அவளது தோழிகள் கிண்டலும் கேலியும் செய்தபடி அருகாணியை ஓட்ட... ராஜா சார் ஒரு பாட்டு போடுங்க...
வாடியம்மா வெளஞ்ச பொண்ணு - அட
வெளஞ்ச கரும்பு கொள்ல
எலி போல எம்புதடி மேல உன்னை எந்த பையன் கட்டிகுவாண்டி..?
பெண் பார்க்க வந்தவர்கள் இவளின் நிலைகண்டு ஓட, தந்தையோ இவளின் நிலைகுலைந்து போகிறார்.

தனது உடைகளை கரையில் வைத்து விட்டு கடலில் வினுசக்ரவர்த்தி குளிக்கும் போது ஒரு திருடன் அதை எடுத்து சொலும்போது ஒருவர் தடுக்கிறார். பிறகு தான் தெரிகிறது அவர் இவரது நண்பர் என்று. நலம் விசாரித்து, பேசி, இருவரும் சம்பந்தியாக முடிவெடுகிறார்கள். அது தெரியாமல்...

ஆபீஸ் நண்பர்களுடன் ரோமியோ போல சுற்றும் நம்ப ஹீரோ முரளி, தனக்கு வரபோகும் மனைவி பற்றி சக நண்பர்களுடன் கூறிவிட்டு வீட்டு வருகிறார். தந்தை திருமண நாளை சொல்ல, ஹீரோ பெண் பற்றி கேட்க, தந்தைக்கு கட்டுப்பட்ட ஹீரோ வேறு வழியில்லாமல் நடக்கிறது அருகானியுடன் திருமணம்.
முதலிரவு. கட்டிலில் முரளி. மனதில் நினைத்த மனைவி கிடைக்காத சோகத்தில். எதிபார்க்காத கணவன் அருகானிக்கு.

அருக்காணியின் செயல்களால் ஹீரோ ரொம்ப நொந்து போக, அந்த நேரத்தில் அவனுக்கு டெல்லியில் சிறந்த விற்பனையாளர் விருது கிடைக்க, வாங்க சொன்ற இடத்தில் ஜூலியை சந்திக்கிறார். பார்த்தும் மனது அவளிடம் பறிபோகிறது (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடிச்சு ....). சென்னை வருகிறார்.

பெங்களுரு ஆபீஸ் சென்ற ஹீரோவுக்கு ஜுலியின் நட்பு அதிகரித்து. தனது வீட்டிலேயே தங்கி - நட்பு வருகிறது.
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன்
இதற்காக தானே நான் புடிச்சேன்....
உயர் பதவி கிடைக்கிறது ஹீரோவுக்கு. போக மறுக்கிறார். பிறகு நட்பு - லவ்வாகி - கல்யாணம் செய்துவிடுகிறார். எதுவும் ஜூலிக்கு தெரியாமல் மறைத்து. ஒரு லவ் சாங் வருது இங்கே....
பூ வாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே...
தந்தையின் வற்புறுத்தலால் அருக்காணியை பெங்களுரு அழைத்து வரும்போது - ரயில்வே ஸ்டேஷன் இல் ஜுலி. ஹீரோ, அருக்காணியை விட்டு விட்டு - ஜுலி உடன் வீடு வந்து - மீண்டும் அருக்காணியை தேடி ரயில்வே ஸ்டேஷன் வந்து கிடைக்காமல் - வீடு வந்து பார்த்தல் - அங்கே அருக்காணி.

அருக்காணிக்கு அப்புறம் தான் தெரிகிறது, தனது கணவர் ஜூலியை திருமணம் செய்த்கொண்டுள்ளார் என்று. என்ன செய்ய..? இடிந்து போகிறாள். இந்த விஷயம் தனது தந்தைக்கோ அல்லது மாமனாருக்கு தெரியக்கூடாது என்று முடிவெடுத்து அங்கேயே வேலைகாரியாக....

தன் கண் முன் தனது கணவனை இன்னொரு பெண் சொந்தம் கொண்டாடுவது நினைத்து நினைத்து ...
எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
சொந்தம் தான் என்று தான் நினைத்தேன்
இந்நிலையில் அருக்காணியின் தந்தையும் ஹீரோவின் தந்தையும் இவர்களுது வாழ்க்கையை காண பெங்களூர் வர - படம் விறுவிறுபாகிறது.

ஜூலிக்கு அருகாணியின் கணவன் யாரெண்டு தெரிந்ததா? ஹீரோவின் இரட்டை வேஷம் கலைந்ததா? இப்படி பல கேள்விகள் கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நல்ல DVD-ஆ வாங்கி பாருங்க / TV-ல் இந்த படத்த மறக்காம பாருங்க..

படத்துல எனக்கு பிடித்த சில ..
  • ஜுலியாக ராதா. ரொம்ப அழகா + சிறப்ப நடித்து இரண்டாம் பாதிபடத்த இவர்தான் சுமக்கிறார்.
  • முரளியாக 'மைக்' மோகன். மனுஷன் நவரசத்தையும் காட்டி நடித்துள்ள மிக சிறப்பான படம் இது. அதுவும் அருக்கானியுடன் திருமணம் நடக்கும் இடம். சபாஸ்.
  • அருக்கானியாக சுகாசினி. முதல் பாதியில் கறுத்த தேகத்துடன் வளைந்த சடையுடன் + இரண்டாம் பாதியில் பிரெஷா வந்து ஹீரோ மனசுல இவள்மீது லவ் வரவைக்கும் நடிப்பு.
  • கடைசி நிமிட வசனம். மணிவண்ணன் நிற்கிறார் அங்கே. நல்ல திரைக்கதை. மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமான படம்.
  • வினுசக்ரவர்த்தியின் கம்பீரமான நடிப்பு கூடுதல் சிறப்பு.
  • இசை. வேறு யாரு நம்ப இளையராஜா தான். பாடல்களை விட பின்னணி இசையில் கலக்கியிருப்பார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் எனக்கு போட்ட போதும்.



திரும்பிபார்கிறேன் : குங்கும சிமிழ் - விமர்சனம்

நேற்று இரவு, ஆபீஸ் வேலை முடித்து வீட்டு சொல்ல 10:40 ஆச்சு. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு டிக்கெட் வாங்கி போகமுடியலையே என்ற வருத்தத்துடன் பழைய படம் ஏதாவது பார்கலாமே என்று ஒரு DVD போட்டேன். அட நம்ப மைக் மோகன் படம் குங்கும சிமிழ். 175 நாட்கள் ஓடி சாதனை செய்த படம்.

படத்தோட கதை என்னனா ...

கோவை டு சென்னை பஸ்ஸில் நம்ப ஹீரோ ரவி (மோகன்) வேகமாக வந்து ஏறியாவுடன் பஸ் புறப்படுகிறது.அதே பஸ்ஸில் நம்ப கதாநாயகி பிலோமீனா(இளவரசி) - சில ரவுடி பயகளிடமிருந்து தப்பித்து வந்து ஏறுகிறாள். டிக்கெட் எடுக்க காசு இல்லை - ஹீரோ உதவ - பயணத்தின் பாதி வாயில் 'டீ பிரேக்' விட்டு பஸ் நிற்க - ஹீரோவின் பணம் தவறி பஸ்ஸில் விழ - அதை கதாநாயகி தான் திருடிவிட்டார் என சொல்ல - ஒருவழியாக சென்னை லைட் ஹவுஸ் வந்து இருவரையும் இறக்கி விடு செல்லகிறது.

ஹீரோ மீண்டும் பணத்தை கேட்க - நாயகி பணத்தை திருப்பி தருவதாக சொல்லி மாலை பீச் வரசொல்லி செல்கிறார். ஹீரோ கார்த்திருக்க - நாயகி பணத்தை திருப்பி தரும்போது போலீஸ் இருவரையும் கைது செய்து - கோர்ட்டில் நிறுத்த - சாமர்த்தியமாக பேசி இருவரும் விடுதலை ஆகிறார்கள். நாயகி நிலை கண்டு ஹீரோ தங்க இடம் தருகிறார். இந்த இடத்துல ஒரு பாட்டு இருந்தா எப்படி இருக்கும்.

"கூட்சு வண்டியிலே ஒரு காதல் வந்திருக்கு
காதல் செய்வதற்கு இடம் காலியா இருக்கு ...."

இருவரும் வேலைக்கு முயற்சிசெய்ய - LIC-இல் வேலை கிடைத்துவிட்டதாக பொய் சொல்லி ரிக்ஸா ஓட்டும் போது ... ஒரு கனவு பாட்டு இருந்தா எப்படி இருக்கும்.

"கை வலிக்குது கை வலிக்குது மாமா
ஒரு கை பிடிக்கும் அம்மி அரைக்கணும் மாமா ..."

ஒரு நாள் உண்மை தெரியவர, இனி ரிக்சா ஊட்டக்கூடாது என ஹீரோவிடம் பேசி - பசியால் வாடும் இருவரது களைப்பை போக்க ஒரு பாட்டு போடுங்க ராஜா சார்.

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது...."

நிலவு - பசி முகங்கள் - பீச் - காற்று என்ன கேமிரா இரவில் விளையாட .... ராஜா சார் இசையால் நம்மை தூங்க செய்வர் இந்த இடத்தில், பசியை மறந்து.

தன்னால் ஹீரோவும் கஷ்டபடுவதை நினைத்த பிலோமீனா, ஹீரோவிடம் இனி இருவரும் வேலை கிடைத்தால்தான் சந்தித்து பேசணும். அதுவரை நோ ரோமன்சு என்று சொல்லி வேலை தேடி செல்ல - பழைய உறவினரை சந்திக்கிறாள் இவள்.

முன்பணம் கட்டினால் வேலை என்று ஹீரோவுக்கு தெரியவர - பஸ்ஸில் பயணிக்கும் ஒருவர் பணத்தை தவறவிட - அது ஹீரோவிடம் கிடைக்க - அதைக்கொண்டு ஹீரோ வேலைக்கு சேருகிறார். சென்னையை விட்டு ஹீரோ மேட்டுபாளையம் வருகிறார்.

ஹீரோ வந்த இடத்தில் நம்ப ரேவதி வீட்டு வேலைகளை கவனிக்க, ஹீரோ மீது ஒரு வித அன்பு பிறக்க - திருவிழா வர .... ஒரு குத்து பட்டு போடுங்க ராசா சார் இந்த இடத்துல...

"வட்சலாம் நெத்தி போட்டு தன் கையால
மச்சானின் நெஞ்சை தொட்டு ...."

காரு ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாமல் நின்று விட - நம்ப அடுத்த ஹீரோ சந்திரசேகர் என்ட்ரி. தண்ணீர் தேடி போற இடத்துல ருக்குவை (ரேவதி) பார்க்க - பல்பு எரிகிறது - மணி சப்தம் கேட்கிறது. (நம்புங்க ... அது லவ் தாங்க...)

ஹீரோ பிலோமீனாவின் நினைவில் இருக்க... ஒரு சோகப்பாடல் போட்டு ராசா சார் பின்னியிருபார் பாருங்க .... அட அட நீங்கள் அதை கேளுங்களேன்....

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது ...."

சந்திரசேகர், பெண் கேட்டு வரும்போது - ருக்குவின் தந்தை டெல்லி கணேஷ் பெண் தர மறுக்க - ஒரு பிளாஷ் பேக்கு.

பண பிரச்சனை தான் ருக்கு திருமணம் நிக்கிறது என்ற உண்மை அறிய ஒரு பிளாஷ் பேக்கு. ஹீரோ, ருக்குவை கல்யாணம் செய்ய முன்வர... ஒரு பாட்டு போடுங்க ராஜா சார்...

"பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவள் ...."

பிலோமீனா கதி என்ன ? ருக்குவுக்கும் ரவிக்கும் திருமணம் நடந்துதா ? சந்திரசேகர் காதல் என்னவானது ? இப்படி பல கேள்விகள் கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நல்ல DVD-ஆ வாங்கி பாருங்க / TV-ல் இந்த படத்த போட்ட மறக்காம பாருங்க.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...
  • ரேவதியும் அவரை சுற்றிவரும் இரண்டாம் பாதி கதையும்.
  • தெளிவான திரைகதை -சுந்தரராஜன். இப்படியெல்லாம் படத்த பார்த்துட்டு இப்ப வர படத்துல கதையை தேட CBI வைக்க வேண்டியுள்ளது.
  • அருமையான 5 பாடல்கள் + பின்னணி இசையும். அதுல பார்ருங்க ... இந்த ராஜா சாரு, மௌத் ஆர்கனை வைத்து ... அட போங்க எல்லாத்தையும் நானே சொல்லிடா...? படத்துல பாருங்க. நீங்களும் என்னைப்போல ரொம்ப என்ஜாய் பண்ணுவீங்க.
  • மோகன் - மிக எதார்த்தமாக நடித்து அனைவரையும் கவர்திருப்பார் இந்த படத்துல.

ஒரு பகவத் கீதையிலோ ...!
ஒரு குர்ரான்லையோ ...!
ஒரு பைபிளிலோ ...!
இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கனும்னும்னா
அதை மாத்த யாராலும் முடியாது!


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



Related Posts with Thumbnails
 
back to top